நல்லபடியாகவே கருவளர்சேரி கோவிலில் அந்த படி பூஜையை முடித்தனர் விஷ்ணு அர்ச்சனா, விஜய் காவ்யா தம்பதிகள்.
பூஜை முடிந்து பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, இதை ஏற்பாடு செய்தவருக்கு நன்றி சொல்லி செட்டில் செய்து விட்டு, இவர்கள் கிளம்பவும், விஸ்வநாதனிடம் இருந்து போன் வரவும் சரியாக இருந்தது. அவர் இவர்களை கும்பகோணம் வர சொல்லிவிட்டார்.
பிறகு, கும்பகோணத்தில்அவர்கள் அனைவரும் லஞ்ச் சாப்பிட்டார்கள். அபியும் பிரனிதாவும் க்ளோஸ் ஆக இருப்பதைக் கண்ட மீனாட்சிக்கு கடுப்பாக இருந்தது.
கூடவே இந்த விஸ்வநாதன் அம்முகுட்டி அம்முகுட்டி என்று அழைப்பதைப் பார்த்ததும். அவர் தன் பெண் வினிதாவிடம் ஒரு நாள் கூட இப்படி பேசியதில்லை!
இந்த விஷ்ணு விஜயைக் கூட இந்த அபி நிக் நேம் வைத்து உரிமையாக கிண்டல் செய்வதும், அதை அவர்கள் ரசிப்பதும், மீனாட்சிக்கு எரிச்சலாக இருந்தது.
அவர் பெண் வினிதாவோ, இங்கு வந்தும் போன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்!
மகன் செந்திலோ, வெளிப்படையாக தெரியும்படியே அந்த அபியிடம் ஜொள் விட்டுக் கொண்டிருந்தான்.
ஊரில் தான் அப்படி செய்வான் என்றால், வந்த இடத்திலும் இப்படி மானத்தை வாங்குகிறான்! அதுவும் இந்த காஞ்சனா முன்னர்!.
சாப்பிட்டுவிட்டு காரில் வெயிட் செய்துக் கொண்டிருந்தான் பிரபு. ப்ரனிதா வந்து விட்டாள், இந்த அபியை இன்னும் காணோம் என்று பார்த்தால், அவள் தூரத்தில் காவ்யாவுடன் பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.
காவ்யா அண்ணி ரொம்ப பேசவே மாட்டாள், அவளே இப்போது அபியோடு கையை ஆட்டி, ரொம்ப expressionகளோடு பேசிக் கொண்டு வந்ததை பார்த்து ஆச்சரியமாக இருந்தது பிரபுவுக்கு. கூட நின்றுக்கொண்டிருந்த பிரனிதாவும், இந்த அபி இருக்காளே, பேசாத ரிசர்வ் டைப் ஆளைக் கூட பேச வைத்து விடுவாள் என்றாள் சிரித்தபடியே!
முன் மாலை நேரம் வீடு வந்து சேர்ந்தார்கள்.
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு, விஷ்ணு, விஜய், பிரபு அனைவரும் மாலை விருந்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க கீழே வந்து விட்டனர்.
கூடவே பிரனிதாவும், அபியும் கூட. இவர்களோடு ஸ்ரீயும் இப்போது வந்து சேர்ந்துக் கொண்டான். அவனால் காலை பங்க்சனுக்கு வர முடியவில்லை.
பிரனிதாவும், அபியும் இருப்பதை கண்டவுடன் அந்த செந்திலும் வந்து விட்டான் ஹெல்ப் செய்கிறேன் பேர்வழி என்று. வந்து அபியிடம் வழிந்துகொண்டு இருந்தான். ப்ரநிதாவைக் கண்டால் கொஞ்சம் பயம் அவனுக்கு. அதனால் அபியிடம் வந்து வந்து நின்றான்.
பிரபு இதைக் கவனித்து, அவனிடம் இருந்து அபியை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தான். இந்த அபி ஏன் அவனை ப்ரனிதா மாதிரி அவனை இக்னோர் செய்ய மாட்டேங்கிறா? அவனை மதித்து பதில் சொல்ல தான் வேண்டுமா?
காலையில் கூட இப்படிதான் அவன் கேட்டான் என்று அவனோடு செல்பி எடுத்துக் கொண்டாள்.
அர்ச்சனா அண்ணி கூட பிரபுவிடம் வந்து சொன்னாள், “ஏய் பிரபு, உன் கசின் செந்தில் என்னப்பா, இப்படி இருக்கான்? நானெல்லாம் அவனுக்கு அக்கா முறை, இந்த வயதில் என்னைப் போய் இப்படி பார்க்கிறான், காவ்யாவை உரித்து விடுவது போல பார்க்கிறான் அவள் கலரைப் பார்த்து! ப்ரநியிடம் கொஞ்சம் பயம் இருக்கு அவனுக்கு. ஆனால் இந்த அபியை அவன் ரொம்ப தொந்தரவு செய்கிறான். கொஞ்சம் அவனை வேறு பக்கம் கூட்டிக்கொண்டு போ” என்றாள்.
அவன் வந்தால் தானே, எப்ப பார்த்தாலும் பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேங்கிறானே!
இப்போது அபியை தனியே கூப்பிட்டு பல்லைக் கடித்துக் கொண்டே கோபமாக சொன்னான்.
பதிலுக்கு அவளும் கோபமாக “நான் ஒண்ணும் சின்ன பிள்ளையில்ல. எனக்கும் புரியுது. function நல்ல படியா போகணும்தான் பொறுமையா அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கேன்” என்று சொன்னாள்.
பிரபு அவளை முறைத்துக் கொண்டே மற்ற வேலைகளை கவனித்தான். வேறொன்றும் செய்ய முடியாததால், அவன் அபியிடம் தான் அவள் ஏதாவது சாதாரணமாக பேச வந்த போது கூட எரிந்து விழுந்தான்!.
பத்தாததுக்கு, அந்த செந்தில் அவனிடமே வந்து, “பரவாயில்ல மச்சான், உனக்கு ரொம்ப லக்கு தான். வீட்டுகுள்ளேயே ஒரு சூப்பர் பிகர் இருக்கு!. ம்ம் இந்த வினிதாவும் தான் இருக்காளே, அவள் பிரண்ட்ஸ் யாரையும் இப்படி வீட்டுக்கு கூட்டி வர மாட்டா! நீ பரவாயில்ல மச்சான் குடுத்து வச்சிருக்க! “என்று வேறு சொல்லிவிட்டு போனான்!
இது அவன் எரிச்சலை அதிகபடுத்தியிருந்தது. அவர்கள் நம் விருந்தினர், கொஞ்சம் பொறுத்து தான் போக வேண்டும் என்று கோபத்தை அடக்கிக்கொண்டு இருந்தான்.
ஹாலை ஒட்டியிருந்த அவர்களது அறையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த காஞ்சனா, சற்று திறந்திருந்த கதவு வழியாக ஹாலைப் பார்த்தார். யாரும் இல்லாத இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ACயைக் கண்டவர் அதை நிறுத்த வேண்டி எழ முயல அவரால் முடியவில்லை.
யாராவது நிறுத்துவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்து இருந்த மீனாட்சியும் போகுமுன் நிறுத்த வில்லை, பின்னாலே சென்ற வினிதாவும் நிறுத்த வில்லை.
கொஞ்ச நேரம் அவ்வழியே போன அபி தான், ஆளில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் AC யை பார்த்து ஆப் செய்து விட்டு போனாள். இதையெல்லாம் காஞ்சனா பார்த்தபடியே இருந்தார்.
வினிதா ஏன் இப்படி அபி மாதிரி இருக்க மாட்டேங்கிறா? இன்று கூட கோவிலுக்கு ஒரு நல்லா புடவை அல்லது சுடிதாராவது அணிந்து வந்திருக்கலாம். ஆனா, அவளோ, ஏதோ ஷாப்பிங் போவது போல ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தாள்!
இப்படி எண்ணிக்கொண்டே மெல்ல எழுந்து, தன் அண்ணன் குடும்பம் இருக்கும் அறையை நோக்கி சென்றார். கதவை தட்டுமுன் பேச்சு சத்தம் காதில் விழுந்தது.
“ஏம்மா வினி! இப்படி இங்கு உட்கார்ந்து போன் பார்ப்பதற்கு, ஹாலில் போய் அவர்களோடு போய் பேசிக்கொண்டு இருக்கலாம் தானே. உன் வயது பிள்ளைகள் தானே அவர்கள். பாரு உன் அண்ணன் கூட போய் விட்டான்.”
என்றார் பரமேஸ்வரன்.
“போங்கப்பா, அங்கே போனா, இந்த அத்தை ஏதாவது வேலை சொல்லுவாங்க. என்றாள் வினிதா! திருக்கடையூர் கோவில்ல கூட அத எடுத்து வை, இதை எடுத்து வைன்னு ஒரே வேலையா சொல்லிட்டு இருந்தாங்க.”
“நம்ம வீட்டு functionடா நாம தான் செய்யணும்” என்றார் பரமேஸ்வரன்.
“இது ஒண்ணும் நம்ம வீட்டு function இல்ல, உங்க தங்கச்சி வீட்டு function, அதுக்கு ஏன் என் பொண்ணு வேலை செய்யணும்?” என்றாள் மீனாட்சி.
“அப்படி சொல்லுங்கம்மா, இந்த செந்தில் ஏன் அங்கே சுற்றி வருகிறான்னு உங்களுக்கு தெரியாதா?” என்றாள் வினிதா தன் அம்மாவுக்கு ஒத்து ஊதிய படி!
இதெல்லாம் கேட்டுக்கொண்டு வெளியில் நின்ற காஞ்சனா, ரொம்பவே மனம் நொந்தார்.
ஒருவர் சாப்பிடுவதைக் கூட பார்த்துக் கொண்டிருக்கலாம், தனியே வேலை செய்துக் கொண்டிருக்கும் போது சும்மா வேடிக்கை பார்க்க கூடாது அவர்களோடு சேர்ந்து வேலை செய்யனும்னு சொல்ற அபி எங்கே இந்த வினிதா எங்கே!
தான் தவறாக இந்த கல்யாணப் பேச்சை தொடங்கி விட்டோமோ. இந்த வினிதா அவள் அம்மா போல தான் போல, நம் குடும்பத்திற்கு சரியா வர மாட்டாளோ! என்று அவர் மனம் யோசிக்க தொடங்கியது!.
அதிசயமாக, இந்த விசயத்தில் மட்டும் மீனாட்சிக்கும் இதே எண்ணம் தான்!
அவளுக்கும் வினிதாவை பிரபுவுக்கு மணமுடிக்க விருப்பம் இல்லை! எப்படியும் இந்த காஞ்சனா, பிரபுவை வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்ப மாட்டாள். தான் இந்த வீட்டில் பெண் கொடுத்தால், நாம் தான் காஞ்சானவுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும்.
வேண்டுமென்றால், பெண் எடுக்கலாம். ப்ரநிதாவை செந்திலுக்கு பேசி முடிக்கலாம்! அவனுக்கு தான் வெளியில் யாரும் பெண் தர மாட்டார்கள்!
தன் அண்ணன் உறவைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் ப்ரநிதாவை செந்திலுக்கு மணம் முடிப்பதன் மூலம் நடத்திக் கொள்ளட்டும்! இப்படியாக மீனாட்சியின் கால்குலேசன்கள் இருந்தன!.
வெளியே கேட்டரிங் ஆட்கள் வந்து விட்டனர். தன் ஊழியர்கள் கூச்சப் படுவார்கள் என்று, பபே சிஸ்டம் வேண்டாமென்று எல்லோருக்கும் டேபிள் சேர்கள் போட சொல்லிவிட்டார் விஸ்வநாதன்!. அதை கவனித்துக் கொண்டிருந்தான் பிரபு. கூடவே ஸ்ரீயும். விஷ்ணு கேட்டரிங் ஆட்களை கவனிக்க, விஜயும் காவ்யாவும் ரிசப்ஷனை செட் செய்தார்கள். அர்ச்சனா, ப்ரனிதா, அபி மூவரும் ரிட்டர்ன் கிப்ட்களை எடுத்து சரியாக வைத்துக்கொண்டிருந்தனர்.
சரியாக 7 மணி வாக்கில் விருந்தினர் வர தொடங்கி விட்டார்கள்.
விழா அவர்கள் வீட்டு ஹாலிலேயே ஏற்பாடு செய்திருந்தனர். டின்னர் மட்டும் கார்டனில்!
விஸ்வநாதனும் காஞ்சனாவும் பட்டுபுடவை பட்டு வேஷ்டியில் படு அம்சமாக வந்தார்கள்.
வந்தவர்களுக்கு முதலில் கூல்டிரிங்ஸ் கொடுத்தார்கள், அர்ச்சனா, காவ்யா,ப்ரனிதா மற்றும் அபி.
எல்லோர் பார்வையும் அபியின் மேல்!. இவள் தான் பிரபுவுக்குப் பார்த்திருக்கும் பெண்ணா என்பது போல! விஸ்வநாதனின் ஊழியர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்!
விழா தொடங்கியது!
முதலில் கேக் வெட்டி அனைவரும் வாழ்த்து சொன்னார்கள்.
பின் விருப்பபடுவர்கள், ஏதாவது டான்ஸ் அல்லது பாட்டு பாடுங்கள் என்று விஸ்வநாதன் தன் ஊழியர்களை அழைத்தார்!.
பின், அவரே தன் பஸ் கம்பெனியை சேர்ந்த, இரு இளம் வயது டிரைவர் கண்டக்டர் இருவரை அழைத்து ஆட சொன்னார்.
அவர்களும் மகிழ்ச்சியாக முன் வந்து “மாமதுர அன்னக் கொடி” பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்கள். எல்லாரும் கை தட்டி ஆரவாரித்தார்கள்!
பின் watchman தாத்தா கூட நடுங்கும் குரலில் “நூறாண்டு காலம் வாழ்க “ பாட்டுப் பாடினார்!
அபியும் பிரனிதாவும் ஒரே மாதிரி பாவாடை தாவணி அணிந்து, தங்கள் கல்லூரியி விழாவில் ஏற்கனவே ஆடியிருந்த “மல்லிகையே மல்லிகையே” பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள்!
“மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு” என்ற வரிகள் வரும்போது, தன்னை அறியாமல் ப்ரனிதா ஸ்ரீயை பார்த்தாள்! அவன் முகத்தில் குறும்பு புன்னகை!
அடுத்து
“தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு” எனும் போது சரியாக அபியும் பிரபுவைப் பார்த்தாள்!
அவனுக்கு அதுவரை இருந்த இறுக்கம் போய் ஜாலி மூடிற்கு இப்போது தான் வந்தான்!
பாடல் மேலும் தொடர்ந்தது!. உள்ளங்கவர் கள்வனா? குறும்புகளில் மன்னனா? வரிகள் வரும்போது அபி ப்ரபுவையே பார்த்தாள்!
“மன்மதனின் தோழனா? ஸ்ரீ ராமனா? அவன் முகவரி சொல்லு” எனும் போது, பிரபு, ஸ்ரீயின் காதில் “குமரன் நகர், திருச்சி” முகவரி சரியாடா? சொல்லட்டுமா? “என்று சொல்லி கலாய்த்தான்!
“அது சரிடா, இந்த அபி பொண்ணு ஏன் உன்னை ஒரு மாதிரி பார்க்குது! ஏய் எனக்கு தெரியாம இங்க என்னடா நடக்குது!” என்றான் ஸ்ரீயும்.
சொல்றேன் சொல்றேன் என்று மழுப்பினான் பிரபு!
இவர்கள் ஆடவும் வினிதாவும் நானும் ஆடுகிறேன் என்று சொல்லிவிட்டாள். மீனாட்சியோ,” என் மகள் கிளாசிகல் டான்ஸ் கத்துட்டு இருக்கா! போன வாரம் தான் சலங்கை பூஜை முடித்தோம்” என்றாள் பெருமையாய்.
ஏனென்றால். ப்ரநிதாவோ அபியோ டான்சர்கள் இல்லை. அவர்களுக்கு தெரிந்த விததத்தில் சும்மா ஒரு funக்காக ஆடினார்கள் அவ்வளவு தான்!
வினிதா மின்சார கண்ணா பாட்டுக்கு ஆடினாள்.
பின் அபி காஞ்சனா விஸ்வநாதனிடம் வந்து fun activities தொடங்கினாள்.
அங்கிள் சும்மா ஜாலிக்கு! இப்பவே நேரம் ஆகிவிட்டதுனாலே, ஒரே ஒரு கேள்வி மட்டும்உங்கள் இருவரிடமும்!
“கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல ஆன்டி, நீங்க இது வரைக்கும் அங்கிள் கிட்ட சொன்ன பொய் எது?” என்று கேட்க,
அவரோ “அவருக்குத் தெரியாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். அப்படி ஏதும் பொய் சொல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டதில்லை” என்றார்.
“அப்ப அங்கிள் நீங்க?”
“நான் ஒரே ஒரு முறை பொய் சொல்லி அவளை ஏமாற்றி இருக்கேன். நம்ம விஜய் கல்யாணத்தின் போது!” என்றார் சிரித்துக்கொண்டே
“என்ன.. ராணி சொல்லட்டுமா?” என்று ராணியை கேட்க! அவரோ “சார் என்ன சார் என்னை வம்பில் மாட்டி விடறீங்களே“ என்றார்!
“அது ஒண்ணும் இல்ல, விஜய் கல்யாணத்திற்கு நீ எப்படி சம்மதிச்சே?”
“அது வந்து ஒரு அம்மா அருள் வாக்கு சொன்னது, இது நான் எடுத்துக் கொடுக்கிற மாலை ,அதை நீ மறுப்பியா என்று!”
“நான் தான் அப்படி அந்த அம்மாவை சொல்ல சொன்னேன்”
“இதில் ராணி என்ன பண்ணினா?”
“அது எந்த கோவிலில் கேட்ட?”
“அது வந்து சமயபுரம் அருகில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில்.”
“கரெக்டா அன்னிக்கு உன்ன அந்த கோவிலுக்கு கூட்டிட்டு வந்தது தான் ராணியோட பங்கு!”
உஜ்ஜைனி காளியை, வடக்கேயிருந்து விக்ரம்மாதித்யன் இங்கு கொண்டு வந்து இங்கே வழிப்பட்டதாக ஒரு வரலாறு!
அதை தான் விஸ்வநாதன் இதற்கு பயன்படுத்திக் கொண்டார்!
“வடக்கே இருந்து வந்த என்னை கும்பிடுவ.. ஆனா, வடக்கே இருந்து வந்த எம் பொண்ண உன் பையனுக்கு கட்ட மாட்டே? இல்லே…?” என்று “சாமியாடிய அந்த பெண் காஞ்சனாவைப் பார்த்துக் கோபமாக கேட்டாள்!
“இது நான் எடுத்துக் கொடுக்கும் மாலை. அத வேண்டாம்னு சொல்லிவியா? ம்ம் ..” என்று மிரட்டினாள் அந்த பெண்!
“ இல்ல.இல்ல தெய்வ சங்கல்பம் இதுவா இருந்தா நான் ஏன் மறுக்க போகிறேன்!” என்றார் காஞ்சனாவும் அப்போது. பின் அவரே விஜய் காவ்யா திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்!
“அது ஒன்னு தான்மா நான் இவளிடம் சொன்ன ஒரே ஒரு பொய்! அதுவும் என் பிள்ளையின் சந்தோசத்திற்காக!”
“பொய்மையும் வாய்மை இடத்து போல இல்ல அங்கிள்” என்றாள் அபி சிரித்துக்கொண்டே!
அனைவரும் சிரித்தார்கள். காஞ்சனாவும் கூட.
ராணியோ, “என்னை மன்னித்து விடுங்கம்மா, நான் உங்களிடம் சொன்ன ஒரே ஒரு பொய்யும் அது மட்டும்தான்!”
“போடி”என்று அவர் கையைத் தட்டி விட்டார் காஞ்சனா பொய் கோபத்துடன்!
காவ்யா ஒண்ணும் புரியாமல் கேள்வியுடன் விஜயை பார்க்க, அவன் அவளுக்கு ஆங்கிலத்தில் சொன்னான்!
உடனே அவள் விஜயையும் அழைத்துக்கொண்டு நேரே தன் மாமனார் காலில் விழுந்து வணங்கி, தேங்க்ஸ் சொன்னாள்.
பின் ராணியை அணைத்துக் கொண்டு தேங்க்ஸ் சொன்னாள்!
பின் சிறு வயதினர் எல்லோரும் காஞ்சனா விஸ்வநாதன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அவர்களுக்கு எல்லாம் கிப்ட் கொடுத்தார் விஸ்வநாதன்!
அவர் அருகே வந்த அவர் நண்பர் ஜமால், அபியைக் காட்டி, “இவள் தான் பிரபுவுக்கு பார்த்திருக்கும் பெண்ணா? நிஷா வேற வந்ததுல இருந்து கேட்டுட்டே இருக்கா? நிஷாவுக்கு அவளை ஏனோ ரொம்ப பிடிச்சிருக்கு!” என்று கேட்டே விட்டார்!
“அவள் என் பிரென்ட் அபி அங்கிள்” என்றாள் அருகிலிருந்த ப்ரனிதா! கூடவே பிரியாணிக்கு ஆன்டிக்கே டப் கொடுப்பா தெரியுமா? “என்றாள் சிரித்தபடியே.
பின் அனைவரையும் சாப்பிட அழைப்பு வர, டின்னர் தொடங்கியது.
மருமகள்கள் இருவரும், ப்ரனிதா, மற்றும் அபி எல்லோரையும் நன்கு உபசரித்தார்கள். மீனாட்சி குடும்பமோ, முதல் பந்தியிலேயே சாப்பிட்டுவிட்டு படுக்க சென்று விட்டனர்.
அபிக்கு கொஞ்சம் காய்ச்சல் வரும்போல இருந்தது. அதிகாலையில் எழுந்து, ஈரத்தலையைப் பின்னி பூ வைத்துக்கொண்டிருந்தது, மற்றும் அலைச்சல் காரணமாக அவளுக்கு கொஞ்சம் “கன கன” என்று இருந்தது. கூடவே ரன்னிங் நோசும் இருக்கவே, அவள் காவ்யாவிடம் கேட்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டாள்!
அவள் பாட்டியிடம் இருந்து போன் வந்தது!.
கீழே ஒரே சத்தமாக இருப்பதால், மேலே சென்று பேசலாம் என்றால், அங்கே அவர்கள் ரூமில் ஸ்ரீயின் அம்மா அப்பா மற்றும் சில உறவினர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
மற்ற ரூம்களிலும் யாராவது இருக்கவே, ஒரு ரூமில் மட்டும் யாரும் இல்லை.
அது பிரபுவின் ரூம். சும்மா சாத்தியிருந்தது. திறந்து உள்ளே போய், பிரபு வழக்கமாக அமர்ந்து வேலைப் பார்க்கும் மறைவான அந்த சோபாவில் அமர்ந்து பாட்டியிடம் பேசினாள்.
பின் அவள் அப்பா கவ்சிக்கிடமிருந்தும் போன் வந்தது. பேசி கொண்டு இருக்கும்போதே கட் ஆகி விட்டது. அபி, அந்த fish டாங்கில் இருக்கும் fishஐ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தன் தந்தையின் போனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்!
இரவு மணி பத்தரை.
விருந்திற்கு வந்த எல்லோரையும் ரிட்டர்ன் கிப்ட் கொடுத்து வழியனுப்பி, கேட்டரிங் ஆட்களை செட்டில் பண்ணி, விஷ்ணு, விஜய் ஜோடிகள், ராணிம்மாவும் உறங்க சென்று விட்டனர். விஸ்வநாதனும் காஞ்சனாவும் முதலில் போய் விட, ராணிம்மாவையும் போய் தூங்க சொல்லிவிட்டான் பிரபு. அவர்தான் எல்லோரையும் விட சீக்கிரம் எழுந்தார் இட்லி pack பண்ணவென்று. ஆறுமுகத்தையும் வீட்டிற்கு போக சொல்லிவிட்டான்.
கடைசியாக ஸ்ரீ குடும்பத்தை காரில் ட்ரோப் செய்துவிட்டு வீடு திரும்பியிருந்தான் பிரபு. ஸ்ரீ வேண்டாம் cab arrange பண்ணிக்கிறோம் என்று சொன்னதையும் மறுத்து!.
ரொம்பவே களைத்துவிட்டிருந்தான். மிகுந்த களைப்புடன், காரைக் கூட சரியான இடத்தில் பார்க் செய்யாமல், வழியிலேயே பார்க் செய்துவிட்டு, சாவியை தன் பான்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, தன் அறைக்கு சென்றவன் உடை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்து உறங்கி விட்டான்!
மறுநாள் காலை!
அதிசயமாக குளித்தலை வீட்டுக்கு போக எண்ணி கிளம்பிய பரமேஸ்வரன், தன் காருக்கு முன் நிற்கும் பிரபுவின் காரை எடுத்தால்தான் தன் காரை வெளியே எடுக்க முடியும் என்பதை அறிந்து, காஞ்சனாவிடம் செல்ல, அவர் சாவியைத் தேடிவிட்டு பிரபுவிடம் கேட்க எண்ணி, அவனின் அறைக் கதவை தட்டினார்.
கூடவே வந்தனர் பரமேஸ்வரனும் மீனாட்சியும்.
தன் அறைக் கதவு தட்டப்படுவதை கேட்டு கொஞ்சம் கஷ்டப்பட்டு கண் திறந்தான் பிரபு, அவன் எழுந்து கதவை திறக்குமுன், கண்ணை கசக்கிக் கொண்டே கதவை திறந்து விட்டிருந்தாள் அபி!
கடும் அதிர்ச்சிகுள்ளானான் பிரபு! இவள் இங்கேயா தூங்கிக் கொண்டிருந்தாள்?
ஆம்!
தன் அப்பாவின் போனுக்காக அவன் ரூமில் மீனோடு விளையாடிக்கொண்டு காத்திருந்த அபி, அசதியினாலும், எடுத்துக்கொண்டிருந்த மாத்திரையின் எபக்டினாலும் அங்கேயே அந்த சோபாவிலேயே தூங்கி விட்டிருந்தாள்.
அந்த சோபா வேறு உள் பக்கமாய் போட்டுருப்பதால், அவள் இருப்பதை பிரபுவும் கவனிக்காமல் கதவை lock செய்து தூங்கிவிட்டிருக்கான்!
இந்த அதிர்ச்சியில் இருந்து அவன் மீள்வதற்குள், அபி, இன்னும் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கதவை திறந்து விட்டு போய் அவன் கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டாள்!
இவை அனைத்தையும் வெளியில் நின்று பார்த்துகொண்டிருந்த காஞ்சனா கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்!
பக்கத்தில் இருந்த மீனட்சிக்கோ, அவரை மட்டம் தட்ட இப்படி ஒரு சான்ஸா!
என்னடா இது என்பது போல அவர் பிரபுவை பார்த்தார், அழுதுவிடுவார் போல!