நல்ல நெய் மற்றும் ஏலக்காய் மணத்துடன், கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் துருவலுடன் அங்கங்கே முந்திரிபருப்பும் எட்டிப்பார்த்த புட்டு!
அதை ஒரு செர்விங் bowlஇல் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் காஞ்சனா.
புட்டு என்றால், கேரளா தேசத்து குழாப்புட்டு அல்ல! நம்ம ஊர் நெய்ப்புட்டு!
அதை வைத்தவாறே, “தக்காளி கொத்ஸு கொதித்தது போதும் ராணி, stove off பண்ணி, ஹாட்boxக்கு மாத்தி வச்சுடு” என்றார்.
ராணி அவர்களது வீட்டோடு இருக்கும் சமையல்காரர். அப்படிதான் வேலைக்கு சேர்ந்தார்.
காஞ்சனா பிறந்த ஊர் குளித்தலை. அந்த ஊரைச் சேர்ந்த ஜானகி மாமிதான் இவரை இங்கு வேலைக்கு சேர்த்து விட்டார். மாமி வீட்டில் தான் ரொம்ப வருஷம் வேலைப் பார்த்தார் ராணி.
அவர் கணவர் கிருஷ்ணன் இருந்தவரை ரொம்ப நன்றாகவே அவரையும் அவர்கள் மகன் சதீஷையும் பார்த்துக்கொண்டார். அவருக்கிருந்த குடிப்பழக்கம், அவரின் உயிரை கொஞ்சம் சீக்கிரமாகவே வாங்கி விட்டது!.
சொந்த பந்தங்கள் கை விட்ட நிலையில், மாமியின் வீட்டில் வேலைப் பார்த்தார். பையனை திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் சேர்த்துவிட்டு மாமி வீட்டோடு தங்கி வேலைப் பார்த்தார்.
பின் மாமியின் கணவர் இறந்துவிட, அவர் மகள் பெங்களூர்இல் இருக்கும் தன் வீட்டுக்கு அழைத்துப் போக இருப்பதால், போகுமுன் ராணியை ஒரு நல்ல இடத்தில் சேர்த்து விட்டு போக மாமிக்கு விருப்பம். அந்த அளவுக்கு மாமியின் அன்பை பெற்று இருந்தார் ராணி.
அப்போது காஞ்சனாவும் தன் அம்மா அப்பாவை தன்னுடன் வைத்தே கவனித்துக்கொண்டு இருந்தார். அவருக்கும் உதவிக்கு நம்பிக்கையான ஆள் தேவைப்படவே ராணியையும் எட்டாவது படித்துக் கொண்டு இருந்த சதீஷையும் இங்கே அழைத்து வந்தார் காஞ்சனா.
சதீஷை திருச்சியிலேயே ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு, தன் வீட்டில் ஒரு அறையையும் கொடுத்தார்.
ஆனால், இந்த 1௦வருடத்தில் இப்போது அவரும் வீட்டில் ஒருவர் போல ஆகி விட்டார். மிகுந்த விஸ்வாசம் மிக்கவர். காஞ்சனாவின் நம்பிக்கைக்கு உரியவர். அவர் அறியாத ரகசியம் இந்த வீட்டில் எதுவும் இல்லை.
காஞ்சனாவை போலவே அவரும் மிகுந்த பக்தி மிக்கவர். இருவரும் ஒன்றாக கோயில் குளம் என்று போய் வருவர். விரதம் இருப்பர்.
அவர் அந்தஸ்தை ஒத்த பெண்களோடு கோவிலுக்கு போகும் போதெல்லாம் பெரும்பாலும் அவர்கள் பேச்சு புடவை, நகைப்பற்றியே இருக்கும். இது அவருக்கு பிடிக்காது. மனம் ஒன்றி சாமி கும்பிட முடிவதில்லை.
எனவே அத்தகைய பெண்களோடு கோவில் செல்வதை தவிர்த்து ராணியை அழைத்து செல்ல தொடங்கினார். அவரும் ராணியும் ஒரு மாதிரி லைக் minded பெண்கள். ஒரே அலை வரிசையில் யோசிப்பவர்கள்.
ஆதலால், முதலாளி அம்மா, வேலைகாரி எனபது போல இல்லாமல், கொஞ்சம் நட்புடன் இருப்பர்.
ஆனால், இந்த இடத்தில், ஒரு விஷயம் முக்கியமாக சொல்ல வேண்டும். ராணி, ஒருபோதும், இந்த நட்பை தனக்கு advantage ஆக எடுத்துக் கொள்ளவே மாட்டார். தன் எல்லையில் கவனமாக இருப்பார்!
இருவரும் சேர்ந்து, காலை டிபனுக்கு செய்திருந்த, சூடான இட்லி மற்றும் தக்காளி கொத்ஸு, புட்டு மற்றும் சட்னிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது, பிரபு வந்தான்.
“ அம்மா டிபன் ரெடியா?” என்றவாறே.
“ம்ம் ஆச்சுப்பா, உட்கார்.”
அப்போது ப்ரனியும் வர, “வாடி, எங்கே அபி? அவ வரல?” என்றார்.
“ச்.. வர மாட்டேன்கிறா, என்னமோ மனசே சரியில்லையாம்” எனவும், குபுக்கென்று சிரித்தே விட்டார்கள் ராணியும், காஞ்சனாவும்!
“அப்படி என்னடி அவளுக்கு கவலை? மனசு சரியில்லாம போறதுக்கு? அந்த பெரிய மனுஷிக்கு?”
“குடும்பம், குழந்தை குட்டி பிரச்சினையா அல்லது மாமியார் ஏதாவது சொல்லிவிட்டாரா?” என்று ராணி சொல்லி கொண்டு இருக்கும்போதே காஞ்சனாவுக்கு, வெறும் வாயிலேயே புரைக்கேறியது!
பின் தண்ணீர் குடித்து சரி செய்து கொண்டவர் கேட்டார், “ இந்த நூத்துக் கிழவி சொல்லித்தான், இன்று நம் வீட்டு தென்னை மரம் பாளை விட்டதற்கு “புட்டு சுற்றி” சடங்கு எல்லாம் செய்தோம், அவள் சாப்பிட வர மாட்டாளாமா?”
“என்னது தென்னை மரத்துக்கு சடங்கா?” என்றாள் ப்ரனிதா
“நம் வீட்டுல இருந்த ஒரு தென்னை மரம், ரொம்ப வருஷம் ஆகியும் பாளைவிடாம இருந்தது!, watchman கூட வெட்டி விட்டு வேற கன்று வைக்கலாம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
நான் தான் மனசு கேட்காம வெட்ட வேண்டாம், அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும் என்றிருந்தேன்.
நேற்று தான் அந்த மரம் பாளை விட்டது. இது ஒரு பெண் குழந்தை பூப்பெய்ததும் நிகழ்வு போல.
அதனால், அவர்களுக்கு செய்வது போல புட்டு செய்து, சில சடங்கு பூஜை செய்வார்கள்.”
“அம்மா.. அவளுக்கு புட்டு சாப்பிட வேண்டும் என்று ஏதோ கதை சொல்லி உங்களை prank பண்ணியிருக்கா. அதைப் போய் நீங்க சீரியஸ் ஆக எடுத்துக்கிட்டீங்க” என்று சிரித்தான் பிரபு!
“அப்படி இல்ல, இன்னும் கூட அந்த முறை, சில வீடுகளில் சில கிராமங்களில் செய்றாங்க. நம் watchman கூட சொன்னார். அவரே எல்லா ஏற்பாடும் செய்து, இன்று காலையிலேயே பூஜை செய்தும் விட்டார்.”
“அம்மா, நான் போய் அபிய சாப்பிட கூட்டிக்கொண்டு வரேன்” என்று பிரனிதா வின் அறைக்குச் சென்றார் ராணி.
போகும் நேரம், அவருக்கு அபியை பற்றிய சிந்தனை. அவர பொறுத்த வரை அவள் ஒரு அதிர்ஷ்ட குழந்தை, அவள் வரும் போதெல்லாம் இந்த வீட்டில் ஒரு சுப நிகழ்வு நடக்கிறது! போனமுறை வந்தபோது,
காஞ்சனாவும் அவரும் ஆசைப்பட்டு வளர்த்துக்கொண்டு இருக்கும் ஒரே ஒரு பசு மாடு, சினையாக இருந்தது, பிரசிவிக்க கஷ்டப்பட்டு கொண்டு இருந்தது.
சிட்டியில் இருந்து கொண்டு எவ்வளவோ கஷ்டப் பட்டு அந்த மாட்டை அவர்கள் வளர்த்து வந்தார்கள்.
அதன் நிலைய பார்த்து வருத்தத்தில்இருந்த போது தான், ப்ரனியும் அபியும் காலேஜ் டூர் ஆக கேரளா சென்று இருந்தவர்கள், இங்க வந்துட்டு, பின் சென்னை சென்றார்கள்.
அவர்கள் நுழையவும், மாடு கன்று ஈனவும் சரியாக இருந்தது. அதுவும் கேடேரி (பசுங்கன்று) கன்று!.
அதே நாள் தான், Vaisag இல் வேலை பார்த்து வந்த அவளின் மகன் சதீஷின் போன் வந்தது.
அவனுக்கு அவன் வேலை பார்த்த கம்பனியில் job பெர்மனென்ட் ஆகி விட்டது!. அது கிட்ட தட்ட லைப் பில் செட்டில் ஆகி விடும் அளவிற்கு நல்ல job!
மேலும் அபியின் சொந்த ஊர் மாயவரம் பக்கம், ஒரு கிராமம், இப்போது இருப்பது தான் தஞ்சையில்.
ராணியின் சொந்த ஊரும் அவள் கிராமம் அருகே உள்ளதுதான். அபி இன்னாருடைய பேத்தி என்று அவள் பாட்டியை சொன்னவுடன் , மிகவும் ஆச்சரியப்பட்டார் அவர்.
அவளது குடும்பம் பற்றி அவருக்கு எல்லாம் தெரியும். அவள் அப்பா அம்மா பற்றி கூட! அவர்கள் திருமணம் நடந்த விதம் பற்றி கூட!
இதற்குள் ப்ரனிதாவின் அறையை அடைந்த அவர், அபியை பார்த்து ‘அம்மா, உடனே உன்னை கூட்டி வர சொன்னாங்க.
“இது என்ன பழக்கம் பாப்பா, சாப்பிடாம இருப்பது. நீ அவர்கள் மேல் போன முறை மாதிரி கோபித்துக்கொண்டு இருக்க என்று நினைக்கப் போறாங்க சீக்கிரம் வா மா.”
“அச்சோ அப்படியெல்லாம் இல்ல, நான் வரேன்“ என்று அவசரமாக அவருடன் சாப்பிட சென்றாள் அபி.
“நீ சாப்பிடேன் பப்பி, ஏன் உட்கார்ந்து இருக்க?” என்றான் பிரபு.
“இல்லண்ணா அவளும் வந்து விடட்டும். இல்லனா 2 இட்லி யோட எழுந்து ஓடிவிடும்.”
“ஷ் ப்பா தாங்க முடியல… “
“அய் புட்டு! “ என்ற குதூகல குரல்! அபி தான்!.
“ ஆன்டி தென்னை மரத்துக்கு பூஜை போட்டாச்சா” என்றாள்.
“ ம்ம் ஆச்சு காலையிலேயே”
“என்னையும் கூப்பிட்டு இருக்கலாம்ல, நான் தான் 5 மணிக்கே எழுந்து விடுவேனே.. நான் முழிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம, ஹெட் போன் போட்டுட்டு YouTube இல் விவேக் காமெடி பார்த்துக்கொண்டு இருந்தேன். விவேக் என்றால்,எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றாள் கூடுதலாக, ஆனால் யதார்த்தமாக தான்.
ஆனால், இங்க நம் ஹீரோவுக்குதான் ஒரு சின்ன சந்தோஷ ஜெர்க்!
அவள் காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவாள் என்பது தான் காஞ்சனாவுக்கும் தெரியுமே.
போனமுறை வந்தபோது அபி சீக்கிரம் எழுந்து, ராணியுடன் சேர்ந்து, பால்காரர் பால் கறந்து தருவதை கூடவே இருந்து வாங்கி, காபி போட உதவ என்று இருக்க, அங்க வந்த காஞ்சனா,
“உடன் ஒத்தபுள்ள எப்படி இப்படி காலையிலேயே எழுந்து kitchenக்கு வருது, இந்த ப்ரனிதா பார். ஒரு நாளும் இப்படி எழுந்ததே இல்ல.” என்று எல்லா அம்மாக்களைப் போல கொஞ்ச திட்ட, கோபம் வந்து விட்டது அபிக்கு.
குடித்துக் கொண்டிருந்த காபியை அப்படியே வைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள். இவர்கள் என்ன என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருக்க, சற்றுநேரம் கழித்து ப்ரனிதா வந்தாள்.
“ அம்மா என்னம்மா சொன்னீங்க?”
“அவளை ஒன்றும் சொல்லவில்லடி”
“அப்ப என்னை ஏதும் திட்டினீங்களா?”
“ஆமாம்.”
“ ஏம்மா போங்கம்மா.. அவளை திட்டினா கூட சும்மா இருந்து இருப்பா. என்னை திட்டியது, அவளுக்கு பிடிக்க வில்ல”
“அவளை பொறுத்தவரை நான் தான் பெஸ்ட் எல்லாத்துலேயும். நான் தான் benchmark. அழகு, உயரம், கலர், அறிவு முக்கியமா அன்பு. இப்படி..
அதனால அவள் முன்னாடி என்னை திட்டி விடாதீர்கள்”
அப்புறம் காஞ்சனா வந்து சாரி கேட்டு, “ இனிமே உன் ப்ரனிக்காவை ஏதும்சொல்ல மாட்டேன்” என்று assurance கொடுத்தபின் தான் சமாதானமானாள்!
இது ராணி காஞ்சனா இருவருக்குமே ஒரு சேர நினைவு வந்து புன்னகையை வர வைத்தது!
“சரி விடு, இப்ப சாப்பிடு, இட்லி வச்சுக்கோ தக்காளி கொத்ஸு பிடிக்குமா?” என்றார்.
“பிடிக்குமாவா? நான் ஒரு கட்டு கட்ட போறேன் பாருங்க.”
“என் பாட்டி, நிறைய மினி இட்லி செய்து, ஒரு bowl இல் போட்டுஅதில் தக்காளி கொத்ஸு ஊற்றி ஒரு fork கொடுத்து விடுவார், நான் அப்படியே குத்தி குத்தி சாப்பிடுவேன்! “
“இப்ப அது மாதிரி வேணுமா பாப்பா, நான் வேணா இத கட் பண்ணி bowl இல் போட்டு தரட்டுமா?” என்றார் ராணி
“ அய்யோ ராணிம்மா அது நான் சின்ன பிள்ளையாக இருந்தப்போ இப்ப இல்ல..
நீங்க, ஆன்டி அப்புறம் பாட்டி எல்லாம் வேற இன்னும் என்னை சின்ன பிள்ளையாவே நடத்துறீங்க.
நானும் அதை நம்பி சின்ன பிள்ளை மாதிரி பேசி விடுறேன்.
எல்லோரையும் அங்கிள் ஆன்டி என்று கூப்பிட்டு விடுகிறேன். அன்று அப்படிதான் ஒரு புதுசா join பண்ணுன Jr Lady lecturer ஐ ஆன்டி என்று தெரியாமல் கூப்பிட்டு விட்டு நல்லா திட்டு வாங்கினேன்.
அப்புறம் இன்று கூட.. “ என்று ஆரம்பித்து
ப்ரனிதா முறைக்கவும், அப்படியே முழுங்கி விட்டாள்!
அடிப்பாவி, அவனே மறந்தாலும், இவ நினைவு படுத்தி விட்டாளே!
சட்டென அவள பார்த்த பிரபு, தானும் ஒரு முறை முறைத்து விட்டு,
“எனக்கு ஒரு call இருக்கு. நான் ரூம்க்கு போறேன் “ என்று எழுந்தான் “அப்புறம் வந்து காபி குடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன் ரூமுக்கு சென்றான்.
அபியும் ப்ரனியும் கூட சாப்பிட்டு முடித்துவிட்டு, தங்கள் அறைக்கு சென்றார்கள். ப்ரனிதா, “ நான் face pack போடப்போறேன். face கொஞ்சம் dull ஆக இருப்பது போல் இருக்கு.”
“ப்ரநிக்கா , நான் நேத்து நைட்டே போடலாம்னு சொன்னேன்! நீ தான் இன்னொரு நாள் போடலாம்னு சொன்ன.. இப்ப, ஸ்ரீ அண்ணா வர்றாங்கன்னு, இப்ப போடப் போற ?” இன்று கிண்டல் செய்தாள்.
“ ஆமா…. அப்ப வேணான்னு தோன்றியது .. இப்ப போடலாம்னு தோணுது”.
நீ face pack போட்டு உட்கார்ந்து இருந்தா , எனக்கு போர் அடிக்குமே! , நான் என்ன பண்றது?”
உண்மை தான், அபியால் கொஞ்ச நேரம் கூட ஒரு இடத்தில் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது! ஏதாவது ஒன்னு செய்துக் கொண்டே இருக்கணும்!
அக்கா, நாம் போனமுறை வந்த போது இங்க ஒரு பல்லாங்குழி இருந்ததே, அது இங்க இன்னும் இருக்கா? நான் அதையாவது விளையாடிக் கொண்டு இருக்கேன்.
அது இங்க தான் மேல் ஷெல்ப்ல இருந்தது. இருக்கா பார்?
எனக்கு எட்டாது, ப்ளீஸ் நீ எடுத்து தாயேன்
கொஞ்சம் இரு, இன்னும் கொஞ்சம் தான் இருக்கு apply பண்ணிட்டு, hand வாஷ் பண்ணிட்டு வரேன். வெயிட் பண்ணு..
ஆனால் அபிக்கு தான் வழக்கம் போல் பொறுமை இல்லை. அங்கிருந்த dressing டேபிள் மோடாவை எடுத்துப் போட்டு அதில் ஏறி நின்று, பல்லாங்குழியைத் தேட ஆரம்பித்தாள்!
தன் ரூமில், ஆன்லைன் மீட்டிங்கை முடித்த, பிரபுவுக்கு, ஒரே ஆவல். அபியை மீண்டும் பார்க்க!
தன்னை நினைத்தால், அவனுக்கே கொஞ்சம் ஆச்சர்யம் தான். எந்த பெண் பின்னாலும் அவன் மனம் இப்படி சென்றதே இல்லை!
அவன் மாமா பரமேஸ்வரன் மகள் வினிதாவை தான் அவனுக்கு கல்யாணம் செய்யனும் என்று அவன் அம்மா கொஞ்சம் ஆசைப்படுவது அவனுக்கும் தெரியும்.
அம்மா சொன்னா செய்ய வேண்டியதுதான் என்று இருந்தவனுக்கு ஒருபோதும் அந்த வினிதாவின் மேல் எந்தவொரு ஈர்ப்பும் ஏற்பட்டதே இல்லை!
மறுமுறை பார்க்க வேண்டும் எனவோ, பேச வேண்டும் எனவோ கொஞ்சம் கூட தோன்றியதே இல்லை!.
ஆனால், இந்த அபி!. அப்படி என்ன தான் இருக்கு அந்த teddy bear பொம்மையிடம்!
இப்போ, அவனுக்கு அவளை உடனே பார்க்க வேண்டும், அவள் என்ன செய்துக் கொண்டிருப்பாள் என அறிய வேண்டும் என தோன்ற, அவன் ப்ரநிதாவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டி,
“பப்பிமா.” என்றான்.
“உள்ளே வாண்ணா” என்றாள் ப்ரனிதா.
“WIFI password மாத்தி விட்டியா?” கெத்துக் குறையாமல் அறைக்கு வருவதற்கு சாக்கு தேடியிருந்தான்!
“ஆமாண்ணா, நேத்து இங்க சிக்னலே வரல. கட் ஆகியிருந்ததது!
ஏதோ ரோடு renovation work நடப்பதால், நிறைய இது மாதிரி கம்ப்ளைன்ட் என்று, service provider வந்து சரி பண்ணி கொடுத்தார்கள். அப்ப, நான் password reset பண்ணிவிட்டேன்.
இது தான் நியூ password “ xxxxxxxxxxx “ என்று சொன்னாள்!
(அடுத்தவர் வீட்டு WIFI password நமக்கு எதுக்கு? அதான் mask பண்ணிவிட்டேன் friends!)
“சரிம்மா என்றவன் அபியைப் பார்க்க, அவளோ “இங்க இல்லையே அக்கா” என்று இன்னும் ஸ்டூலில் நின்றவாறே சொன்னாள்.
“என்ன பப்பிமா, உன் friend தரையிலே நிக்க மாட்டாளா? எப்போ பார்த்தாலும் எதில் மேலாவது ஏறி நின்றுக் கொண்டே இருக்கா!: என்று கிண்டல் அடித்தான்.
அவளுக்கு பொறுமையே இல்ல. நான் வந்து எடுத்து தரேன்னு சொன்னேன்.”
“என்ன வேணும் சொல்லு நான் எடுத்து தரேன்”
நான் தேடிட்டேன். அது இங்க இல்ல. என்றவாறே இறங்கி விட்டாள் அபி.
அப்ப கீழே போய் ராணிம்மாவ கேளு
சரி என்றவாறே, பிரபுவைத்தாண்டி கீழே ஓடிவிட்டாள்
அப்புறம் பிரபுவுக்கு அங்கு என்ன வேலை? அவனும்
சரி பப்பிமா, நான் என் ரூமுக்கு போறேன் என்று கதவை லேசாக சாத்திவிட்டு சென்றான்.
கீழே சென்ற அபி, ராணிம்மாவை பார்த்து,
பல்லாங்குழிய தேடி தாங்க ராணிம்மா, எனக்கு போர் அடிக்குது.
அது இங்க தான் பாப்பா இருக்கு. dining ரூமில் இருந்த கப் போர்டை காட்டினார்.
மேல் ஷெல்பில் இருக்கு பார். கொஞ்ச நாள் முன்ன ஒருத்தவங்க கல்யாண நலுங்குக்காக வாங்கி போனாங்க, திரும்ப கொடுத்த போது நான் தான், இங்க மேல தூக்கி வச்சுட்டேன்” என்றார், freezer இல் இருந்து வெண்ணை பாக்கெட்டுகளை எடுத்தவாறே.
“நானே எடுத்துக்கிறேன்” என்று மறுபடியும் அங்கிருந்த dining டேபிள் chair ஐ எடுத்துப் போட்டு ஏறிவிட்டாள்!
இப்பவும் அங்க வந்தான் பிரபு!
“ராணிம்மா எனக்கு கொஞ்சம் காபி வேணும்”
உட்கார் தம்பி, இதோ வந்துட்டேன் ராணி kitchenஉள்ளே போக, அவன் அபியைப் பார்த்தான்.
இப்பவும் அவள் chair மேல் ஏறி நின்றுக்கொண்டு இருப்பதை சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்களை, கொஞ்சம் கைகளை தூக்கி எக்கி, மேல் ஷெல்பில் தேடிக்கொண்டு இருந்த அபி அணிந்திருந்த black T-shirt சற்று மேலே தூக்கி கொள்ள அவளின் வெண்மையான இடுப்பு அவன் கண்களில் பட்டு அவனை disturb செய்தது!
சட்டென பார்வையை விலக்கி, “ராணிம்மா காபி..” என்றான்.
அப்புறம் ராணிம்மா, இன்று என் friend ஸ்ரீ நம் வீட்டுக்கு லஞ்ச்க்கு வரான். அவன் vegetarian. அதனால் இன்று nonveg செய்து விடாதீர்கள்
இல்ல தம்பி இன்று சனிக்கிழமை, அம்மா எப்போதுமே சனிக்கிழமைகளில் veg தான் சமைப்பார்கள்.
“ராணிம்மா வெண்ணை காய்ச்சப்போறீங்களா” என்றாள் அபி கீழே இறங்கிவாறு.
ஒரு வழியாய் அந்த பல்லாங்குழியையும் கூடவே சோழி பாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு!
ஆமா அபி.
அதில் முருங்கை கீரை போடுவீங்க தானே? என் பாட்டி போடுவார், எனக்கு ரொம்ப பிடிக்கும்
போடுவேன், ஆனா அப்பப்ப mood அ பொறுத்தது.
இங்க முருங்க மரம் இருப்பதைப் பார்த்தேன், நான் போய் பறித்து வர்றேன் போடுறீங்களா?
பிரபுவுக்கு லேசாக புரைக்கேறியது. என்ன.. இப்ப முருங்கை மரத்தில் ஏறப் போறாளா?
என்ன பெண் இவள்!
“ராணிம்மா முருங்கை கீரை வேணும்னா watchmanகிட்ட சொல்லி பறித்து தர சொல்லுங்க,
எப்ப பார்த்தாலும் எதில் மேலாவது,ஏறிக் கொண்டே இருப்பது! குரங்கு குசாலா மாதிரி” என்று ஒரு flowவில் சொல்லி விட்டான்!
“கீழே ஏதும் விழுந்து கை கால் உடைந்தால் என்ன ஆவது? பெண் பிள்ளையா லட்சணமா கொஞ்சம் அடக்க ஒடுக்கமா, தரையில் நடந்து செல்ல சொல்லுங்க “என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அபிக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தது! யாருமே அவளை இப்படியெல்லாம் திட்டியதே இல்ல குரங்கு என்றெல்லாம்.
அடக்க ஒடுக்கமாய் இரு என்று கூட. பொத்துக்கொண்டு கோபம் வந்தது.
உன்னை அங்கிள் என்று தெரியாம சொல்லிட்டேன்னு சாரி கேட்கணும்னு நினைச்சேன். நீ அங்கிள் மட்டும் இல்ல சரியான boomer!
boomer அங்கிள் !
அங்கிள் லிருந்து boomer அங்கிள் ஆக promote ஆனது தெரியாமல், தன் பைக்கை எடுத்துக் கொண்டு இருந்தான் பிரபு!