“ப்ரனிக்கா, போர் அடிக்குது”. என்றாள் அபி, பிரபுவின் அறையில் இருந்து வந்தததில்
இருந்து, அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
ப்ரநிதாவிடம் பேசிக் கொண்டு இருந்தாலாவது கொஞ்சம் நல்லா இருக்கும்.
ஆனால், அவளோ, தன் லேப்டாப்பில் web designing வொர்க்கில் பிஸியாக இருந்தாள்.
அதுதான் அவளது passion. எதிர்காலத்தில் profession ஆகவும் எடுக்கவும் இருக்கிறாள்.
எனவே, லாப்டோப்பை விட்டு திரும்பாமல்,
“போரடித்தால். போன் பாரு இல்ல கொஞ்ச நேரம் போய் படுத்து தூங்கு.” என்றாள்.
“போன் battery காலி. சார்ஜ் போடணும். கீழே ஹால்ல இருக்கு என் சார்ஜர். அப்புறம் எனக்கு தான் மதிய நேரத்தில் தூக்கம் வராதே.” என்றாள் அலுப்பாக.
“அப்ப கீழப் போய் போனை சார்ஜ் ல போட்டுட்டு, ராணிம்மாவை பார். அவங்களும் மதியம் தூங்க
மாட்டாங்க. போய் ஏதாவது பேசிட்டு இரு.”
“சரி போறேன் “ என்றவாறு ராணிம்மா அறையை நோக்கி சென்றாள்.
கீழே ராணிம்மா, பிரநிதா சொன்னது போல் தூங்காமல், போனில் face bookஇல் ஆன்மீக
போஸ்ட்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
அபியை பார்த்தவுடன், “வா வா. அபி என்ன உனக்கும் போர் அடிக்குதா” என்றார்.
“ஆமா, ராணிம்மா. நீங்க face bookஇல் இருக்கீங்களா?”
“ம்ம். நானும் அம்மாவும், face book, WhatsApp ல எல்லாத்துலயும் ஆன்மீக community களில்
வரும் போஸ்ட்களை பார்ப்போம். அப்பப்ப எதாச்சும் டூர் போவோம்”.
எளிமையான அந்த அறையில் நிறைய குட்டி குட்டி சுவாமி படங்கள், அதில் ஒரு 108 திவ்யதேசங்கள்
படங்கள் மற்றும் பெயர்கள் உள்ள போஸ்டர்.
அதில் சில ஊர்ப் பெயர்கள் டிக் செய்யப்பட்டிருந்தன! கூடவே ஒரு book shelf நிறைய
புத்தகங்கள்!
அபி அதைக் காட்டி என்னவென்று கேட்க,
“அதுவா, நானும் அம்மாவும், நிறைய சிவன் மற்றும் திவ்யதேச கோவில்களுக்கு போவோம். அப்படி பார்த்து விட்டு வந்த பிறகு அந்த திவ்ய தேசங்கள் பெயரை இந்த 108 திவ்யதேசங்கள் லிஸ்டில் டிக் செய்து விடுவேன்” என்று சின்ன வெட்கத்துடன் சொன்னார்.
“அப்புறம் இந்த புக் collection உங்களோடதா?”
“இல்ல அதெல்லாம் சதீஷோடது. அவன் நிறைய புக்ஸ் படிப்பான்.
அவன் பர்த்டேக்கு விஷ்ணு, விஜய், பிரபு தம்பிங்க எல்லாம் மறக்காம புக்ஸ் வாங்கி ப்ரெசென்ட் பண்ணுவாங்க.
அப்படி சேர்ந்ததே இங்க நிறைய.”
“சூப்பர் ராணிம்மா, ஆனா கொஞ்சம் organized ஆக அடுக்கி வைக்கல. அப்படி வச்சா இன்னும் எடுத்துப்
படிக்க ஈசியா இருக்கும்.”
“ அவன் அப்படிதான் வச்சுட்டு போனான். நான் தான் பொங்கலுக்கு சுத்தம் பண்ணும் போது
கலைத்து விட்டுட்டேன்”.
“நான் பண்ணி தரேன் ராணிம்மா. “ என்றால் அபி ஆர்வமாக!
“இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். சில லேடீஸ் எல்லாம் போர் அடித்தால், பீரோவில்
இருக்கும் புடவைகளை எடுத்து கலைத்துப் போட்டு மீண்டும் அடுக்குவார்களே அது போல,”
என்று சிரித்தாள் அபி.
“சரி பாப்பா, இப்ப நாம வேணா பல்லாங்குழி விளையாடலாமா? ஏன்னா புக் அடுக்கறது அப்புறம் கூட செய்யலாம். விளக்கு வைத்தபின் இது விளையாட முடியாது.”
“ம்ம் டபுள் ஒகே” என்றாள் அபி.
விளையாடும் போது அபி சொன்னாள்.
“என் பாட்டிய இந்த விளையாட்டுல, அப்புறம் இந்த தாயம் விளையாட்டுல எல்லாம் ஜெயிக்கவே முடியாது தெரியுமா, நமக்கு போர் அடிக்க கூடாதுன்னு அவங்களா விட்டு கொடுப்பாங்க அப்பப்ப.” திடீரென்று ஞாபகம் வந்தவளாய் கேட்டாள்
“ஆமா.. ராணிம்மா , நான் போன முறை வந்த போது என் பாட்டிய உங்களுக்கு நல்லா
தெரியுமுன்னு சொன்னீங்கள்ள.. எப்படி தெரியும்?”
“வேம்பு டீச்சர தெரியாதவங்க, அந்த ஊரில் யாரு பாப்பா, ரொம்ப நல்ல மாதிரி. அவங்க HM
ஆக இருந்த வரை அந்த ஸ்கூல் பசங்கள எல்லாம் அவ்வளவு டிசிப்ளினோட வச்சு
இருந்தாங்க.”
“சதீஸ் அப்பா கூட அவங்க ஸ்டுடென்ட் தான். அவரெல்லாம் கல்யாணம் ஆன பிறகு கூட அவங்கள எங்கயாவது பார்த்தா கொஞ்சம் பம்முவார்” என்று சிரித்தார். “நீங்க கல்யாணம் ஆகி அங்கேயா இருந்தீங்க.” “ஆமாம். எனக்கு உன் அம்மா பவித்ராவ கூட நல்லா தெரியும். அவங்க வீட்டுல தான் சதீஷ் அப்பா கொஞ்ச நாள் கார் ஓட்டினார்.”
“அவங்க எல்லாம் உன்ன பார்க்க வருவாங்களா? அதான் உன் அம்மாச்சி வீட்டுல இருந்து.”
“ம்ஹும் அவங்க யாரையும் நான் பார்த்து கூட தெரியாது. என் டாடிக்கு அவங்கள
பிடிக்காது.”
“உனக்கு அம்மாச்சி என்றால் அது சரசு அம்மாச்சி ( சித்தியின் அம்மா) மட்டும் தான்! வேறு யாரும் அம்மாச்சி கிடையாது.”என்று சொல்லி இருக்கார்.
“அவங்க வீட்டுல டாடிய ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்காங்க, அவங்கெல்லாம் ரொம்ப பணத்திமிர்
பிடிச்சவங்களாம்”.
“அவங்க கிட்ட பணம் இருந்தா அது அவங்களோட." என்றாள் மிகுந்த வெறுப்புடன். “என் டாடிய ஹர்ட் பண்ணவங்க யாராக இருந்தாலும் எனக்கும் புடிக்காது.”
“ஆமா அபி உங்க அம்மாச்சி குடும்பம் கொஞ்சம் பணத்திமிர்பிடிச்சவங்க தான். பரம்பரை
பணக்கார குடும்பம். பேசுவது கூட status பார்த்து தான் பேசுவார்கள்.”
“ஆனா உன் அம்மா பவித்ரா அப்படியில்ல. அப்படியே உன்ன மாதிரி! எல்லார்கிட்டயும் ரொம்ப பாசமா பேசும்,பழகும்.” “அக்கா, அக்கா என்று என்கிட்ட ரொம்ப பிரியமா இருக்கும். என்கிட்ட வந்து விதவிதமா ஜடை பின்னிக்கும். மருதாணி வச்சு விட சொல்லி வச்சுக்கும்.” “நானும் அதுவும் சில போட்டோ கூட எடுத்து இருக்கோம்.ஒரு வாட்டி பூ தைத்து பட்டு பாவாடை அணிந்து போட்டோ எடுத்தோம். அப்ப நானும் அது கூட ஒரு போட்டோ எடுத்தேன். பவி பாப்பா அவ்வளவு அழகா இருக்கும். எனக்கு இந்த பாலா திரிபுரசுந்தரி அம்மன் படம் பார்க்கும் போதெல்லாம் உன் அம்மா பவித்ரா நினைவு தான் வரும்!”
“கொஞ்ச வருஷம் கழித்து, சதீஸ் அப்பா அங்க வேலைய விட்டு விட்டார். நாங்களும் வேற
ஊர்க்கு போய் விட்டோம்.
பின்னாடி, ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு போன போது தான் உன் அம்மா அப்பா கல்யாணம் நடந்ததது, கொஞ்சம் ஊர்க்காரர்கள் பிரச்சினை செய்ததது, பின் நீ பிறந்தவுடன் சில மாதம் கழித்து..”
சற்று தயங்கி விட்டு ராணி தொடர்ந்தார்.
“ உன் அம்மா இறந்தவுடன், வேம்பு டீச்சர் வீட்டையே காலி செய்துவிட்டு, தஞ்சாவூரில் குடி
போய் விட்டதாக சொன்னார்கள்.”
வழக்கத்துக்கு மாறாக ,அமைதியாக கேட்டுக் கொண்டுருந்த அபி,
“என் அம்மா போட்டோ இருக்கா , நான் பாக்கணும். என் வீட்டில் யாரும் காட்டவே மாட்டார்கள்.அழுவேன் என்று நினைத்து. நான் தான் இப்ப வளர்ந்து விட்டேனே, அழ மாட்டேன். “
“அப்புறம் எடுத்து காட்டட்டா?”
“அப்புறம்” தான் அபிக்கு பிடிக்காதே!.
“இப்பவே காட்டுங்க ராணிம்மா ப்ளீஸ்”
“சரி” என்று தேடி எடுத்து வந்தார். ஒரு பழைய ஆல்பம்
அதில் பவித்ராவின் பாவாடை சட்டை அணிந்து, இரட்டை பின்னல் போட்டருந்த போட்டோ,
பூ தைத்து எடுத்து இருந்த போட்டோ என சில போட்டோக்கள்.
அந்த பாவாடை சட்டை போட்டோவை பார்த்த அபி “அப்படியே என்னை மாதிரி இருக்காங்க” என்றாள்.
“அவளை மாதிரி தான், நீ இருக்க” என்று சிரித்தார் ராணி.
“ராணிம்மா, எனக்கும் இந்த மாதிரி ரெட்டை ஜடை போட்டு விடறீங்களா?”
“நான் இப்படி பின்னியதே இல்ல. ஏன் ஜடையே ரொம்ப பின்னியதில்ல.”
“ஸ்கூல் படிக்கும் போது, ஸ்கூல் van வருவதற்குள் என் பாட்டியால் எனக்கு பின்னல்
போட்டுவிட்டு கிளப்பி விட முடியாது என்பதால் , நான் “பாப்” கட்டிங் தான் பண்ணி
இருப்பேன்.”
“ பெரிய கிளாஸ் போன வுடனும் போனி tail தான். சில பெண்கள் ரெட்டை ஜடை போட்டு
இருப்பது பார்த்தால் எனக்கும் ஆசையாக இருக்கும்”.
“அதுக்கென்னம்மா போட்டு விடறேன்”.
பெண் பிள்ளை இல்லாத ராணிக்கும் அபிக்கு இப்படி ஜடை பின்னி விட சந்தோசமாகவே
இருந்தது.
ஜடை பின்னி கொண்டு இருக்கும் போது அபி கேட்டாள்.
“ஆமா ராணிம்மா, காஞ்சனா ஆன்டி கும்பகோணம் மாயவரம் எல்லாம் வந்து இருக்காங்களா?”
“ம்ம் நாங்க அடிக்கடி அந்த பக்கம் கோவில் டூர் அடிப்போம்.”
“திருக்கடையூர் வந்து இருக்காங்களா?”
“என் பாட்டி அந்த ஊர் சாமி அம்பாள் பேர தான் எனக்கு சேர்த்து வச்சுருக்காங்க. தெரியமா?
அபிராமி – அமிர்தகடேஸ்வரர் தான் அபி அமிர்தா!”
“அங்க அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் எல்லாம் செய்வார்கள். நாம அங்கிள்க்கு
இப்ப 7௦th birthday வருது.”
“அப்படீன்னா அவங்களுக்கு 6௦ ம் கல்யாணம் செய்தார்களா?”
“இல்ல பாப்பா, அப்ப தான் விஷ்ணு தம்பி வீட்டுல காதல் பற்றி சொல்லி, ஒரே
பிரச்சினையாக இருந்த சமயம். அதனால் இதைப்பற்றி யாரும் யோசிக்க கூட இல்ல.”
“ஆனா காஞ்சனா அம்மாக்கு உள்ளூர கொஞ்சம் வருத்தம் உண்டு தான்”. என்றார்.
ஜடைப் போட்டு முடிந்தவுடன் கண்ணாடியில் தன்னைப் பார்த்த அபிக்கே கொஞ்சம்
சிரிப்பாகவும் வெட்கமாகவும் இருந்தது.
ஏற்கனவே தன்னை teddy bear, அஞ்சலி பாப்பா என்று comment அடிப்பார்கள். இப்ப என்னென்ன சொல்வார்களோ என்று நினைத்துக் கொண்டாள்.
மாலை நேரம்.
ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டு தன் லேப்டாப்பில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தான் பிரபு. அருகே உட்கார்ந்து பால்க்கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள் ப்ரனிதா.
அப்போது , ரெண்டாவது ரவுண்டு பால்க்கொழுக்கட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்ட படியே
அருகில் வந்தாள் அபி!
ரெட்டை ஜடை மற்றும் skirt and டாப்ஸ் அணிந்து இருந்த அவளை பார்க்கும் போது, ஸ்கூல்
பொண்ணு மாதிரி இருந்தது பிரபுவுக்கு.
அவளைப் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தபடியே இருந்த போது, சார்ஜ் போட்டிருந்த அவள் போன் அடித்தது.
போன் இருந்த சைடு டேபிள் பிரபுவின் பக்கம் இருக்க, இயல்பாய் அதன் டிஸ்ப்ளே யில் தெரிந்த பெயரைப் பார்த்தான். “ Siju My Lov..” என்றுகொஞ்சம் தெரிந்து இன்னும் ஸ்க்ரோல் ஆகி கொண்டு இருந்தது அந்த பெரிய பெயர். அதைக் கண்டு ரொம்ப டென்சன் ஆனான் பிரபு.
சிஜூ ஆ. யாரது? my love என்றெல்லாம் சேவ் செய்து இருக்கா!
யாராக இருக்கும் என்று யோசிக்கும் முன், அபி ஓடி வந்து போனை எடுத்து விட்டு, முகம் மலர எடுத்துக் கொண்டு வெளியே ஓடி விட்டாள்!
இங்கே பிரபுவுக்கோ காதில் புகை வராத குறை தான்.
அபியோ, போனில் கையை ஆட்டி பல expressionகள் கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள்.
அப்ப பார்த்து , ப்ரனிதா வேற “அண்ணா, ஏதோ கருகிற வாடை வருதுல்ல” என்றாள்.
“என்ன வாடை வெளியே வர ஆரம்பித்து விட்டதா?” என்று வடிவேலு மாதிரி அதிர்ந்தவன்,
“பப்பிமா, கொஞ்சம் அந்த சாமி விளக்கை ஒரு பூவை கொண்டு மலையேற்றி விடும்மா.
பார் எண்ணை தீர்ந்து த்ரி எரிகிறது போல.” என்று கேட்ட காஞ்சனாவின் குரலில்
அமைதியானான்!.
அபி இன்னமும் பேசி முடிக்க வில்லை. அங்கிருந்த படியே ப்ரநிதாவை வேறு அழைத்தாள்,
போனில் பேச.
“யாரு பப்பி போன்ல” அடக்க முடியாமல் கேட்டே விட்டான் பிரபு.
“அதுவா, சிஜூ .எங்க சீனியர். ” என்றபடியே போன் பேச சென்று விட்டாள்.
அதற்கு மேல் பிரபுவால் அங்கே உட்கார முடிய வில்லை. லாப் டாப்பை அணைத்து விட்டு,
பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். மனதிற்குள் கோபமாக
வந்தது.
நேரே காவேரி பாலத்துக்கு வண்டியை விட்டான். அங்கு ஓரமாக வண்டியை பார்க் செய்து
விட்டு, காற்று வாங்கிய படி யோசித்தான்.
நீ ஏன் இவ்வளவு possessive ஆக இருக்க.. அவ உன்ன love பண்றாளா என்று தெரிய வில்லை.
மொதல்ல நீ அவளை love பண்றயான்னே தெரியல.
பின் ஏன் உனக்கு இவ்வளவு கோவம் வருது?.
நீ மொதல்ல திடமா யோசி. அம்மா சொன்னங்கானு வினிதாவை கல்யாணம்
செய்துக்கறேன்னு சொல்லிட்டு, இப்ப இந்த பெண் மேல ஆசை படுற.
நீ ஒண்ணும் காலேஜ் படிக்கிற சின்ன பையன் கிடையாது. பொறுப்பான பதவில இருக்கிற, வீணா ஒரு சின்ன
பொண்ணு மனச கெடுத்து விடாதே.
ஒரு நிமிடம் கண் மூடி யோசித்தான். அபியை தவிர வேறு பெண்ணை நினைக்க
முடியவில்லை. பார்த்து ரெண்டு நாள் கூட ஆகாத பெண்ணை இப்படி பிடித்து போய்
விட்டதா? அவன் அறிவு லாஜிக் பேசியது. காதல் என்று வரும் போது லாஜிக் ஆவது
ஒன்றாவது? அவன் மனம் கிண்டல் செய்தது. எனக்கு அபி தான் வேண்டும். அபி மட்டுமே என்
வாழ்க்கை.
கொஞ்ச நேரம் அங்கேயே நின்று காற்று வாங்கி விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் மனம் மீண்டும் முதலில் அந்த சிஜூ யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். என்று அதிலேயே வந்து நிற்க, வண்டியை கிளப்பிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டிற்கு வந்தால், வீடே அமைதியாக இருந்தது.
ப்ரனிதா, இன்னமும் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்பா வெளிப்புறம் இருந்த office ரூமில், collection அமௌன்ட் கொடுக்க வந்த டிரைவர் கண்டக்டர்களோடு பேசி கொண்டு இருந்தார்.
அம்மாவும் ராணியும் kitchen இல் வேலையாக இருந்தார்கள்.
அபியை காண வில்லை.
“என்ன பப்பி வீடே அமைதியா இருக்கு உன் friend அ வேற காணோம்” என்று கேட்டான் பிரபு.
“அவள் தூங்க போய் விட்டாள்” என்றாள் ப்ரனிதா.
“என்ன மணி எட்டே முக்கால் தான் ஆகுது அதுக்குள்ளே தூங்கி விட்டாளா?”
“அவள் அப்படி தான் எட்டு எட்டரைக்கு எல்லாம் தூங்கி விடுவாள். ஆனால் காலையில்
சீக்கிரம் எழுந்து விடுவாள்.”
“ ஆமா தம்பி அது சாப்பிட கூட இல்ல. என் ரூமில் புக்ஸ் அடுக்கி கொண்டு இருந்துச்சு.
அப்படியே என் ரூமிலேயே தூங்கி விட்டது.
பின் பப்பி தான் எழுப்பி, கூட்டி கொண்டு போய் அது ரூம்ல படுக்க வச்சது.” என்றார் ராணி.
“அவள் அப்படிதான் ராணிம்மா, எட்டரைக்கு எல்லாம் தூங்கி விடுவாள்.”
“ அங்கே hostel கூட பக்கத்து ரூம் friends கூட பேசிட்டு இருக்கும் போதே, இல்லனா சில
சமயம் mess ல் கூட சாப்பாடு லேட் ஆகும் போது அங்கேயே தூங்கியே விடுவாள்.”
“இன்று மாலை பால் கொழுக்கட்டை நிறைய கட்டு கட்டிட்டாள். அதனால் சாப்பிட வில்லை என்றால்
பரவாயில்ல.” என்றாள் ப்ரனிதா.
பிரபுவுக்கு அந்த சிஜூ யார் என்று தெரிந்துகொள்ள துடித்தது மனம்.
மெல்ல ப்ரநிதாவிடம் கேட்டான்.
“யார் பப்பி அந்த சிஜூ? பேரைப் பார்த்தால் Keralite மாதிரி இருக்கு? எனக்கு தெரிந்து
உனக்கு அப்படி யாரும் friend இல்லையே”. என்றான்
“ஆமாண்ணா மலையாளிதான்.”
"ஆனா இங்க திருச்சியில் செட்டில் ஆகி விட்டவர்கள்."
“அவங்க அப்பா BHEL இல் ஆபீசர் cadre இல் உள்ளவர். சிஜூ எங்க சீனியர். அவனுக்கு
அபியை ரொம்ப பிடிக்கும்.”
அவன் வயிற்றில் புளியைக் கரைத்தாள்.
“அபிக்கும் தான். போனில் கூட siju my lovable brother என்றே store செய்து இருப்பாள். “
“என்னது.. brother ன்னா? ”
மண்டை மேல இருந்த கொண்டைய பார்க்காம வீணா டென்சன் ஆகியிருக்க!” என்று அவன் மனம் கிண்டலடித்தது.
“என்ன சொன்ன brother ஆ?”
உள்ளுக்குள் மனம் “ ஒத்த சொல்லால “ பாட்டுக்கு தனுஷ் மாதிரி குத்து டான்ஸ் ஆடியது!
“ஆமா. அபி அவனோட “அனியத்தி புறாவ்”
(காதலுக்கு மரியாதை படத்தின் மலையாள
version).
“அவள் மட்டுமல்ல நானும் தான். அவனுக்கு தத்து தங்கச்சிங்க!!”
“எங்க ரெண்டு பேரையும் அவனது friends இப்படிதான் கிண்டல் பண்ணுவாங்க.”
“வந்தல்லோ நிண்ட அனியத்தி புறாவ்” ரண்டு பேர்!”
"என்ன பப்பி சொல்ற.. இந்த 2K கிட்ஸ் எல்லாம், crush அப்புறம் boy bestie என்றெல்லாம் ஏதேதோ relationshipகள் என்று சொல்வார்கள் நீ என்ன இப்படி சொல்ற "என்று ஆச்சர்யப்பட்டான்! ஆனா, அபி அந்த மாதிரி டிபிகல் 2K கிட்ஸ் கிடையாது. ஒரு மாதிரி antique piece அவள்! என்று சிரித்தாள். அவள் பாட்டி அப்படி தான் வளர்க்கிறார்கள். சிஜூ தத்து அண்ணன் மட்டுமல்ல. வேம்பு பாட்டியின் க்ளோனிங் கூட. அவர் மாதிரியே இவனும் கேர் எடுத்துப்பான் அவளிடம்!
அப்ப.. அந்த சிஜூ நமக்கு மச்சான். “ சிஜூ மச்சான் சாரி, உன்ன தெரியாம திட்டிட்டேன்”
தனக்குள் சொல்லிக் கொண்டான் சந்தோசமாக!