இரவு உணவை முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் அம்மா அப்பாவிடமும் ப்ரபுவிடமும் பேசிக் கொண்டிருந்து விட்டு, தன் அறைக்குத் திரும்பிய ப்ரனிதா, அங்கே ஒரு குழந்தை மாதிரி தூங்கி கொண்டிருந்த அபியைப் பார்த்தாள்.
அபி, தன் இடது கையை, தன் உடம்பின் அடியின் வைத்துக் கொண்டு இடது புறமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள். ப்ரனிதா அந்த கையை எடுத்து விட்டாள்!.
இப்படி கையின் மேலேயே படுத்திருந்து விட்டு, காலையில் தன் கைக்கு ஏதோ ஆகி விட்டது அசைக்கக் கூட முடியவில்ல என்று நாள் பூரா புலம்பிக்கொண்டே இருப்பாள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டே!
இன்று தன் அண்ணன் பிரபு, சிஜூவைப் பற்றிக் கேட்டது நினைவு வந்தது.
சிஜூ எப்படி தங்களுக்கு இவ்வளவு close ஆனான் என்று அவள் மனம் அசைப் போட்டது.
அன்று.. கல்லூரியில் சேர்ந்த முதல் நாள். அப்பா, மற்றும் பாட்டியிடம் விடைப்பெற்றுக் கொண்டு, தன் department நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள் அபி.
அங்கே ஒரு மரத்தடியின் அருகே சீனியர் கூட்டம் தங்களது பைக்குக் களை நிறுத்தி விட்டு நின்றுக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும், அழைத்தனர்.
அவளைப் பார்த்த சிஜூ தன் நண்பனிடம், “அவளை மொதல்ல யாருன்னு கேளுடா, ரொம்ப சின்னப் பொண்ணா தெரியுது, ஏதாவது visitor ஆ இருக்கப் போவுது.” என்றான்.
“visitor அக இருந்தால், இவவளவு தூரம் department குள்ள வர முடியாது. இரு கேட்கிறேன்.” என்று அபியை நிறுத்தி விசாரித்தான்.
அபியோ கொஞ்சம் பயந்தவாறே, “first இயர் CS department” என்றாள்.
“அப்ப இவளையே அனுப்புவோம்” என்றான் நிவின்.
“அந்த ப்ரனிதா விஸ்வநாதன் இவள் department தான்.”
“யாருடா அவ?” கேட்டான் சிஜூ.
“இந்த batch யிலேயே ரொம்ப அழகு அவள் தாண்டா. slim beauty.
சும்மா பெங்களூர் மாடல் கணக்கா இருக்கா! உங்க ஊர் தாண்டா!” என்றான்.
“மலையாளியா” என்றுக் கேட்டான் சிஜூ.
“இல்ல இல்ல. திருச்சி பொண்ணு.”
“ஏய் இங்க பாரு அஞ்சலி பாப்பா…”
(இவனுமா .. அபி உள்ளுக்குள் சலித்துக் கொண்டாள். இன்னும் என்னை ஸ்கூல் பொண்ணாவே பாக்குரீங்கலேடா. நானும் காலேஜ் கேர்ள் தான். “நானும் ரவுடி தான்” எனபது போல் கத்த வேண்டும் போல் இருந்தது அபிக்கு)
“உன் பேர் என்ன?”
“அபி அமிர்தா.”
“அபி பாப்பா . நீ என்ன பண்றே, உன் department க்கு போய் அந்த ப்ரனிதா யாருன்னு பார்த்து, அவகிட்ட பேசி, இந்த மாதிரி சீனியர்கள் வந்து பார்க்க சொன்னார்கள் என்று சொல்லி அழைத்து வா. evening நாங்க இங்க தான் இருப்போம்” என்றான் நிவின்.
கூட இருந்த சிஜூவும் “ம்ம் அவன் சொன்னத செய்” என்பதோடு நிறுத்தி விட்டான்.
கிளாஸ்க்குள் நுழைந்த அபிக்கு உற்சாகம் பீறிட்டது.
ஒரு ஒருவராக self introduce செய்துக் கொண்டு இருக்கும்போது, தன் பின்னால் கேட்ட “ I am Pranitha from trichy” என்ற இனியக் குரலைக்கேட்டு திரும்பினாள் அபி.
திரும்பி அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தவள், “ஹாய் I am Abi Amirthaa from Tanjore . நீங்க தான் ப்ரநிதாவா. நான் உங்க கிட்ட பேசணும். பிரேக் அப்ப கொஞ்சம் நில்லுங்க.” என்றாள்.
“sure” என்றாள் பிரனிதாவும்
பிரேக்கில், “எனக்கு சீனியர்கள் ஒரு டாஸ்க் கொடுத்து இருக்காங்க.”
“என்ன ராகிங்கா?”
“ராகிங்ன்னு சொல்ல முடியாது. ஆனா ஒரு டாஸ்க்.” சிரித்தாள் அபி.
“நீங்க தான் இந்த batch யிலேயே சூப்பர் அழகி யாம். அதனால் உங்கள மீட் பண்ணனுமாம். உங்கள evening பாக்கனும்னு சொன்னாங்க. பயப்படாதீங்க அவங்கள பார்த்தா அப்படி ஒண்ணும் bad guys மாதிரி தெரியல.”
“ஆனா அவங்க சொன்னது ஒன்னு 1௦௦% கரெக்ட்!”
“என்னது?”
“உண்மையிலேயே நீங்க slim ஆ tall ஆ ரொம்ப சூப்பர் ஆ இருக்கீங்க” என்றாள் அபி.
அதைக் கேட்டு சிரித்த ப்ரனிதா, “நீங்க கொஞ்சம் வித்தியாசமான பொண்ணா இருக்கீங்க அபி! எனக்குத் தெரிந்து எந்த பொண்ணும் இன்னொரு பொண்ண அழகின்னு அவ்வளவு சீக்கிரம் அக்செப்ட் பண்ண மாட்டாங்க.”
“நான் அப்படியெல்லாம் இல்ல. நான் கொஞ்சம் short ஆக இருப்பதால், எனக்கு நல்ல உயரமான பொண்ணுங்கள பார்த்தா கொஞ்சம் பிடிக்கும். ஹீரோயின்களில் கூட எனக்கு அனுஷ்கா மாதிரி இருக்கவங்கள தான் பிடிக்கும்!”
“அபி நீங்களும் ரொம்ப cute ஆ charming ஆ இருக்கீங்க! உங்க face ரொம்ப childish ஆக இருக்கு. எங்க அம்மா ஒரு example சொல்லுவாங்க “பால் வடியும் முகம்” என்று. நீங்க அப்படிதான் இருக்கீங்க.” என்று சிரித்தாள் ப்ரனிதா.
“அப்ப evening ஒரு attendance போட்டுடுங்க அக்கா ப்ளீஸ் “ என்ற அபி “ஸ்ஸ்… என்று நாக்கை கடித்துக் கொண்டு, “சாரி ப்ரனிதா” என்றாள்.
“நோ problem நீங்க அப்படியே கூப்பிடுங்க i have no issues”
“என்னையெல்லாம் அக்கான்னு கூப்பிட யாரும் இல்ல என் வீட்டில். நான் தான் கடைக்குட்டி! எனக்கு 3 எல்டர் பிரதர்ஸ்.” என்றாள் ப்ரனிதா
“எனக்கு அம்மா கிடையாது, ஆனா எனக்கு 2 குட்டி step brothers இருக்காங்க. twins!.” என்றாள் அபி!
“என்னை அக்கான்னு கூப்பிட சொல்லிட்டு, நீங்க இன்னும் என்னை வாங்க போங்கன்னு பேசுறீங்களே?”
“சரி இனிமே சொல்லல போதுமா?” என்றாள் ப்ரனிதா!
அபி, ப்ரநிதாவை அக்காவென்று கூப்பிட்டால், அவள ரொம்ப வயது பெரியவளாக நினைத்துக்கொண்டு விடுவார்கள் என்று நினைத்து, ப்ரநிதாவை ப்ரநிக்கா என்று அழைக்கத் தொடங்கினாள். கேட்பவர்க்கு சட்டென தெரியாது. அவள் ப்ரனிதா என்றே அழைக்கிறாள் என்றே நினைத்துக் கொள்வார்கள்!
தனியா வீடு எடுத்துத் தங்க வைக்க வசதி இருந்தும், ப்ரநிதாவை அவள் பெற்றோர் காலேஜ் hostelலியே தங்க வைத்தார்கள். ஒரு exposure க்காக.
hostel லிலும் இருவரும் ஒரே ரூம்.
அபிக்கு, தன் மேல் ரொம்ப கேர் எடுத்துக்கிற ப்ரனிதா மேல் கொள்ளை பாசம் ஏற்பட்டுவிட்டது!
அம்மா இல்லாத அபியின் மேல், ப்ரநிதாவிற்கு ஒரு soft corner இருந்தது. அவளோடு மேலும் பழகியவுடன் அவளின் அந்த யதார்த்தமான சுபாவம், அன்பு ரொம்பவும் பிடித்து விட்டது ப்ரநிதாவுக்கு!
அதுவும், அபியின் இந்த மனப்பாங்கு,
“நான் இப்படிதான், என்னை பட்டிக்காடு என்றோ அஞ்சலி பாப்பா என்றோ comment அடித்தாலும் பரவாயில்ல, நான் என் பாட்டி அனுமதியில்லாம எதையும் செய்ய மாட்டேன்” என்ற அபியின் உறுதியான நிலைப்பாடும் அவளை ரொம்ப ஈர்த்தது.
ஒரு முறை friends எல்லாம் நைட் பார்ட்டிக்கு சேர்ந்து செல்ல அழைத்த போது,
“பாருங்க friends, நான் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு. இந்த பார்ட்டி culture எல்லாம் என் familyக்கு செட்டாகாது. என் பாட்டி allow பண்ண மாட்டங்க. அவங்களுக்கு தெரியாம நானும் எதையும் செய்ய மாட்டேன்!”
“அடுத்த முறை day timeல சினிமாக்கு போனா சொல்லுங்க நானும் வரேன். அதான் என் லிமிட். பாட்டி allow பண்ணுவாங்க. அப்ப கூட பாட்டி கிட்ட சொல்லிவிட்டு தான் வருவேன்! என்று தீர்மானமாக தவிர்த்து விட்டாள்
“கூடவே ப்ரநிக்கா நீயும் போய் விடாதே, எனக்கு தனியா தூங்க பயம். ப்ளீஸ்” என்று அவளையும் நிறுத்திக் கொண்டு விட்டாள்!
உண்மையில் ப்ரநிதாவுக்கும் இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காது. எப்படி avoid பண்ணுவது என்று எண்ணி கொண்டிருக்கையில், கை கொடுத்தாள் அபி!
அபி மாதிரி அவளால் காரணம் சொல்ல முடியாது. தன்னை எப்படியும் கம்பல் பண்ணி அழைத்துப் போய் விடுவார்கள் என்றே பயந்து இருக்க, அபி இப்படி சொன்னதும் அது தான் சாக்கு என்று பிடித்துக் கொண்டாள்.
“என்னமோ பண்ணுங்க. இந்த அபி ஒரு teddy bear, நீ இந்த teddy bear ஐ வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிரு. நாங்க வரும் போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வர்றோம்” கலாய்த்து விட்டு சென்றனர்.
ஒரு நாள், காலையில் இருந்தே சிஜூ வுக்கு உடம்பு ஏதோ செய்தது. தலை கொஞ்சம் பாரமாக இருந்தது. காலை உணவே சாப்பிட பிடிக்கவில்லை. சாப்பிடாமலேயே தன் பைக்கை எடுத்துக் கொண்டு கல்லூரி வந்தான். மதியமும் நண்பர்களோடு சேர்ந்து, டீ மட்டுமே குடித்தான். உடம்பு சரியில்லை என்று சொல்லி ரெஸ்ட் எடுக்க அவன் ஈகோ இடம் தரவில்லை. நாமெல்லாம், இதுக்கே அலட்டிகிட்டா எப்படி என்று சமாளித்துக் கொண்டிருந்தான்.
பின்னே சிஜூ என்றால் இந்த கல்லூரியில் ஒரு டான் மாதிரி. கல்லூரி chairman வேறு அவன் ஒன்று விட்ட தாத்தா!
chairman ன் அண்ணன் பேரன் தான் அவன்!. அதனால், எல்லோரிடமும் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது.
HOD உள்பட எல்லா பேராசிரியர்களும் அவனிடம் கொஞ்சம் மரியாதையுடன் தான் நடத்துவார்கள்.
அவன் 3 ஆம் ஆண்டு தான் படித்தாலும் நான்காம் ஆண்டு மாணவர்களும் கூட அவனுடன் நட்புடன் தான் இருந்தார்கள் என்றார்கள் என்றால், ஜூனியர்களை கேட்கவே வேண்டாம்!.
அதனால் தான், first இயர் படிக்கும் அபியும் பிரனிதாவும் அவன் gang சொன்னபடி daily evening அவர்களைப் பார்த்து விஷ் செய்து விட்டு போவார்கள்.
அன்றும் அப்படியே.
முதல் மாடியில் இருந்த கான்டீன் அருகே இருந்த வராண்டா கட்டை சுவற்றில் அமர்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள் சிஜூ gang!
தூரத்திலேயே அவர்களைப் பார்த்து விட்டார்கள் அபியும் பிரனிதாவும்.
உடனே அபி, “ப்ரநிக்கா, நீ இப்படியே இந்த ஸ்டெப்ஸ் வழியா ரூம்க்கு போய்டு. நான் அவங்கள பார்த்துட்டு வரேன். உன்னைத்தான் அவர்கள் ரொம்ப டீஸ் செய்வார்கள். என்னை விட்டு விடுவார்கள்.”
“நீ போக்கா’ என்று அனுப்பி வைத்து விட்டாள்.
“அபி ரொம்ப லேட் பண்ணாதே. சீக்கிரம் வந்துடு” என்றவாறு சென்றாள் ப்ரனிதா.
அதற்குள், சிஜுவின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டார்கள். சிஜூவால் மட்டும் உடனே எழ முடியவில்லை!
தலை கொஞ்சம் சுற்றியது!. சமாளித்து எழ முயன்றுக் கொண்டுருந்தான்! அதற்குள் அவன் நண்பர்கள் அவனை பின்னால் வருகிறான் என்று நினைத்துக்கொண்டு போய் விட்டார்கள்!.
சிஜூவுக்கு எழவே முடியவில்லை!. அப்படியே பின்னால் சரிந்து கீழே விழப் போனான்!
அதற்குள் அங்க ஓடி வந்து விட்ட அபி, “ஹேய்” என்று கத்திய படி அவனை விழாமல் பிடித்து நிறுத்தி, உள் பக்கம் இழுத்து விட்டாள்.
அப்படியே தரையில் சரிந்து உட்கார்ந்து விட்டான். அபி அருகே பார்த்தாள். யாரும் இல்லை. கல்லூரி முடிந்து ரொம்ப நேரம் ஆகி விட்டதால். கான்டீன் கூட பூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். இவள் தான் கடைசி ஆர்டர் தோசை வாங்கினாள்.
கீழே சரிந்து உட்கார்ந்து இருந்த அவனை, அழைத்தாள்.
“சிஜூ அண்ணா ஏந்திரிங்க”
அவனோ அரை மயக்கத்தில் இருந்தான். ஒன்றும் சாப்பிடாததால், அவனுக்கு low pressure ஆகி இருந்தது!
அபி, வாட்டர் பாட்டில் திறந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவன் மேல் தெளித்தாள்! நேராக உட்கார வைத்து, குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.
கொஞ்சமாக கண்களைத் திறந்தான் சிஜூ!
அபி அவன் நெற்றியை, கழுத்தைத் தன் புறங்கையால் தொட்டுப்பார்த்து “அண்ணா ரொம்ப fever அடிக்குது!” என்றாள்
அவனை. மெல்ல எழுப்பி, நடத்தி சென்று அருகே இருந்த கிளாஸ் ரூம் ஒன்றில் உட்கார வைத்து fan போட்டு விட்டு, பின் கேட்டாள்.
“அண்ணா என்கிட்ட பாராசிடமால் டேப்லட் இருக்கு போட்டுகிறீங்களா?’ என்றாள்.
பின் சற்று யோசித்து விட்டு, “ஏதாவது சாப்பிடீங்களா மொதல்ல” என்று கேட்க,
அவன் “இல்ல” எனவும், தன் கையில் இருந்த தோசையை பிரித்து வைத்து அவனை சாப்பிட சொன்னாள்!
அபி தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடன் சாப்பிட்டு விடுவாள். காலையில் அவசர கதியில் அரைகுறை உணவு, மதியம் டப்பா சாப்பாடு. அதில் கீழே மேலே கொட்டியது போக என்று, சரியாக சாப்பிட்டிருக்க மாட்டாள் என அவள் பாட்டி இப்படி பழக்கியிருக்க, கல்லூரியில் சேர்ந்தும் அதே பழக்கம்!.
hostel லில் சாப்பாடு இரவுதான் ரெடி ஆகும் என்பதால், காண்டீனில் தோசை வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.
அதை தான் அவனுக்கு கொடுத்தாள் இப்போது!
அதை சாப்பிட்டு முடிக்க, தன் bag இல் இருந்து மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்த அபி, அவனுக்கு vomit வருவது போல் இருப்பதை கண்டு, டக்கென்று தோசை pack பண்ணியிருந்த carry bag அவன் வாயருகே காட்டி அதில் vomit செய்ய வைத்து பின் அதனை வாஷ் ரூமில் dispose செய்து விட்டு வந்தாள்.
தன் bag இல் இருந்து wet wipes கொடுத்து அவனைத் துடைத்துக் கொள்ள செய்தாள்!
பின் மாத்திரையைக் கொடுத்து போட செய்தாள்.
அதற்குள் அபியை காணாமல் ப்ரனிதா போன் செய்ய, அவளிடம் நடந்ததை சொல்ல, அவளும் உடனே அங்கே வந்துவிட்டாள்.
பின் இருவரும் அவனை எழுப்பி, மெல்ல நடக்க வைத்து, வெளியே வந்தார்கள்.
அதற்குள் சிஜூவின் நண்பர்களும் அவனை பின்னால் காணாது தேடிக்கொண்டு வந்து விட்டார்கள்.!
இருபுறமும் அபி மற்றும் ப்ரநிதாவின் கைகளைப் பிடித்தவாறே படி இறங்கிக் கொண்டிருந்த சிஜூ வைப் பார்த்த நண்பன் ஒருவன்,
“இங்க பாருடா காத்து வாக்குல ரெண்டு காதல் விஜய் சேதுபதி! என்று comment அடிக்க,
அவர்களிடமிருந்து கைகளை உருவிக்கொண்ட சிஜூ சுள்ளென்று ஒரு அறை விட்டான் அவனை! அவன் அதிர்ந்து பார்க்க,
“பின்னாடி ஒருத்தன் வர்றான்னா இல்லையான்னுக்கூட பாக்காம போயிட்டு, இந்த பொண்ணுங்கள கிண்டல் பண்றீங்களா?’
“இந்த அபி மட்டும் இல்லனா, நான் இந்நேரம் கீழே விழுந்து மண்டை உடைந்து கிடந்திருப்பேன்!. அவங்கள யாராவது தப்பா பேசினா தொலைத்து விடுவேன்! be careful!” என்று கத்தினான்.
மறுநாள், அவனைத் தேடி வந்த அபி, “அண்ணா இப்ப fever சரியாகிவிட்டதா!” என்று கேட்டுவிட்டு, தன் பாட்டிக்கு போன் போட்டு, “அண்ணா என் பாட்டி உங்களிடம் பேசணும்னு சொன்னாங்க” என்று போனை கொடுத்தாள்.
வேம்பு அவனிடம், நலம் விசாரித்து விட்டு, கவனமாக இருக்க அறிவுரை சொன்னார்.
பின் அவனிடம், “அபி கொஞ்சம் குழந்தைத்தனமான பொண்ணுப்பா, அதனால் நான் கொஞ்சம் அதிகப்படியான கேர் எடுத்துப்பேன். இப்ப தான் முதன் முதல்ல family ஐ விட்டு தனியாக இருக்கா. நீ கொஞ்சம் பார்த்துக்கப்பா” என்றார்.
“அதுக்கென்ன பாட்டி, I will take care, நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க” என்றான்.
அபியிடம் வந்து, “அபி நேற்று நீ என்கிட்ட கேர் எடுத்துக் கிட்டது ஒரு மனிதாபிமான வேலை தான். நீ எனக்கு fever இருக்கான்னு தொட்டுப்பார்த்த போது அப்படியே என் அம்மாவை நினைவு படுத்தின!
ஆனா, எல்லோரும் அப்படி நினைப்பாங்கன்னு சொல்ல முடியாது. நீ இன்னும் சின்ன பெண் இல்ல. அதனால் பாய்ஸ் கிட்ட பேசுறப்போ, பழகுறப்போ கொஞ்சம் கவனமா இருக்கணும்!” என்று ஒரு அண்ணனாக அட்வைஸ் செய்தான்.
அது முதல் வேம்புவின் இன்னொரு க்ளோனிங் போல ஆகி விட்டான் சிஜூ!