வீட்டின் கீழே ஹாலில் ஏதோ பரபரப்பைக் காணவும்,
பிரனிதாவும்,அபியும் கீழே வந்தனர். அங்கே நுழைந்துக் கொண்டிருந்த விஷ்ணுபிரசாத்தை கண்டவுடன்
“ஹாய் அண்ணா! என்று கத்தியபடியே, உற்சாகமாய் அவனருகே ஓடினாள் ப்ரனிதா!
பின்னால் சிரித்துக்கொண்டே வந்த அர்ச்சனாவைப் பார்த்து, “வாங்க அண்ணி” என்றழைத்தாள்!
“ஹாய் பப்பிமா!” என்று அவனும் வந்து அவளைத் தோளோடு அணைத்துகொண்டான்.
“அதற்குள் வாடா விஷ்ணு” என்றழைத்தபடியே வந்தார் காஞ்சனா. பின்னால் அப்பா வந்த விஸ்வநாதனும்
“வாடா விஷ்ணு வாம்மா அர்ச்சனா” என்ற படியே வந்தார்.
இருவர் காலிலும் விழுந்து நமஸ்கரித்தாள் அர்ச்சனா!
ஆறுமுகம் இருவர் luggageகளையும் மாடியில் அவர்கள் அறைக்குக் கொண்டு போனார்.
“ஹாய் அண்ணா, ஹாய் அண்ணி” என்றபடியே பிரபுவும் கீழே வந்தான்.
“வாங்க பெரிய தம்பி, வாங்க அர்ச்சனாம்மா” என்று அழைத்தப்படியே கையில் தண்ணீர் டம்ளர்களோடு கிச்சனில் இருந்து வந்தார் ராணிம்மா.
விஷ்ணு ப்ரநிதாவின் அருகே நின்றுக்கொண்டிருந்த அபியை பார்த்து
“You must be Abi! Right!” என்றான்
ஆமாம் என்று தலையசைத்துவிட்டு,”ஹாய் அண்ணா ஹாய் அக்கா!” என்றாள் அபி!
அபி விஷ்ணுவையே பார்த்துக்கொண்டு இருந்தாள்! நல்ல சிவந்த நிறம், clean shave பண்ணப்பட்டிருந்த கொஞ்சம் செழுமையான கன்னங்கள்! அவளுக்கு அவனை அமுல் பேபி என்று அழைக்கத் தோன்றியது!
அவன் அணிந்திருந்த ஷர்ட், கையில் கட்டியிருந்த Tissot வாட்ச், ஹேர் ஸ்டைல் எல்லாமே அவள் தந்தை கவுசிக்கை நினைவுப்படுத்தியது!
அர்ச்சனாவோ, நல்ல நிறம், படிப்புக்களையுடன் கூடிய குடும்பபாங்கான முகம்,அதில் தெரிந்த ஒருவித தாய்மை கலந்த ஒரு கனிவு! பார்த்தவுடனே அவர்கள் இருவரையும் ரொம்ப பிடித்துப்போய் விட்டது அபிக்கு!
விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் கூட அபியைப் பார்த்தவுடனே பிடித்துப்போய் விட்டது!
அவளின் அந்த குழந்தைமுகம் தான் எல்லோரையுமே வசப்படுத்தி விடுமே!
“ப்ரனிதா உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கா” என்றாள் அர்ச்சனா சிரித்தபடியே!
“விஜய்யும் காவ்யாவும் எப்போ வராங்க அப்பா?” கேட்டான் விஷ்ணு.
“நாளை காலை வந்து விடுவார்கள்” என்றார் விஸ்வநாதன்
மேலும் கொஞ்ச நேரம் எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்து விட்டு தம் அறைக்குச் சென்றனர் இருவரும்.
காஞ்சனாவும் ராணியும் லஞ்ச் என்ன செய்யலாம் என்று பேசி கொண்டே கிச்சனுக்குள் நுழைய, அவர்களுடன் அபியும் சேர்ந்துக் கொண்டாள்.
*****************
மதியம். எல்லோரும் டைனிங் டேபிள் முன்னர் அமர்ந்து இருந்தனர்.
சிறிதுநேரம் தூங்கி எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு வந்திருந்தனர் விஷ்ணுவும் அர்ச்சனாவும்.
“அர்ச்சனா உனக்கு கொஞ்சம் தனியே சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு செய்து இருக்கோம். அப்பளம் பொரிக்கவா?” என்றார் காஞ்சனா.
“போதும் அத்தை அதுவே தாராளம்! எனக்கு பசியே இல்ல. சும்மா உட்கார்ந்து எழலாம், எல்லோரிடமும் பேச வேண்டும் என்றே வந்தேன்!” என்ற அர்ச்சனா ஒரு vegetarian, ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள்.
விஷ்ணுவை காதல்மணம் புரிந்தப்பின், அவனுக்காக Non-Veg சமைக்க கற்றுக்கொள்ள முயன்றபோது அவன் தடுத்து விட்டான்.
இப்போதெல்லாம் அவனுமே பெரும்பாலும் அசைவம் சாப்பிடுவதில்லை.
அர்ச்சனாவுக்கு சாதம் சாம்பார் பரிமாறிய ராணிம்மா, மற்றவர்கள் பிளேட்டில் சிக்கன் பிரியாணியை வைத்தார்.
அதை சாப்பிட்ட பிரபுவோ, “சூப்பர்ம்மா, நிஷா ஆண்டி கொடுத்து விட்டார்களா?” என்று கேட்டான்.
நிஷா, விஸ்வநாதனின் முஸ்லீம் நண்பர் ஜமாலின் மனைவி. அவர் அவ்வபோது இந்த மாதிரி கொடுத்து விடுவார்!.
“இல்ல பிரபு, இது நம் வீட்டில் செய்தது!” என்றார் காஞ்சனா
“சூப்பர்ம்மா அப்படியே பாய் வீட்டு taste கொண்டு வந்துட்டீங்க” என்றான் பிரபு.
“அட நான் செய்யலப்பா நம் அபி தான் செய்தாள். பின் பக்கம் கொண்டு போய் “தம்” எல்லாம் வைத்து!”
“அட பரவாயில்ல அபி, நீ எங்க கத்துகிட்ட?” என்றான் விஷ்ணு!
“அது வந்து…” என்று அபி ஏதோ சொல்ல ஆரம்பிக்க..
“ஸ்டாப் ஸ்டாப் நான் சொல்றேன். உன் வீட்டருகே ஒரு முஸ்லீம் family இருக்காங்க. அந்த அத்தைகிட்ட கத்துகிட்ட. இத தானே சொல்லப் போறே!” என்றான் பிரபு கிண்டலாக.
“அது எப்படி. EB மாமாவைப் பற்றி, அவங்க குடும்பத்தைப்பற்றி நான் சொன்னதேயில்லையே” என்றாள் அபி ஆச்சரியமாக.
“இத கண்டுபிடிக்க இஸ்ரோவின் scientistகள் ஒண்ணும் தேவையில்லை. இது மாதிரி தான் ஏதோ ஒரு பிளாஷ்பேக் சொல்லப் போறே” என்று அவளை வாரினான் பிரபு!
(ஆமா அபி ! factu factu ரெண்டு நாளா உன்னைப் பார்த்துகொண்டு இருக்கிற நம்ம readers ஏ கண்டுப்பிடித்து இருப்பார்கள் )
“பாருங்க ஆன்டி..” என்று சிணுங்கினாள் அபி.
“டேய் சும்மாயிருடா , அவ எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருக்கா, அதப் போய் கிண்டல் பண்ணிட்டு..” என்றார் காஞ்சனா
“அவன் கிடக்கான்! சூப்பர் ஆ செய்திருக்க!” என்று பாராட்டினான். விஷ்ணுவும்.
“உனக்கு பன்னீர் பிரியாணி செய்யத் தெரியுமா, எனக்கு அது தான் ரொம்ப பிடிக்கும்.”
“ஆமா விஷ்ணு அண்ணாவுக்கு, எல்லா dairy products ம் ரொம்ப புடிக்கும்” என்றாள் ப்ரனியும்!
“அதெல்லாம் சாப்பிட்டு தான் விஷ்ணு அண்ணா, நல்லா கலரா அமுல் பேபி மாதிரி இருக்காங்களா? எனக்கு அவங்கள AB-Amul Baby அண்ணான்னு கூப்பிட தோணுது! ” என்று சொல்லிக்கொண்டே போனவள் தன் தவறை உணர்ந்து, நாக்கை கடித்துக் கொண்டாள்!
“பரவாயில்லடா, நீ அப்படியே கூப்பிடு” என்றான் விஷ்ணுவும், அர்ச்சனாவைப் பார்த்தபடியே, அவளும் சிரிப்பை அடக்கியபடி சரி என்பது போல் தலையாட்டினாள்!
ஏனென்றால், அர்ச்சனாவும், காதலிக்கும் போது அவனை அவ்வாறு தான் கிண்டல் அடிப்பாள்!
“அப்ப.. ஒகே. ஏபி அண்ணா, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும், evening நானும் ப்ரநிக்காவும் உங்க ரூம்க்கு வரோம்!”
“அப்படி என்ன discussion?” என்று கேட்டார் விஸ்வநாதன்.
“சஸ்பென்ஸ்!” என்று சிரித்தாள் அபி!
*********************
மாலை நான்கு மணி.
பொழுது போகாத அபி, YouTube இல் DIY வீடியோ பார்த்து பழைய வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பிளேட்டைக் கொண்டு ஒரு bird feeder தயார் செய்து இருந்தாள்!
ப்ரநிதாவோ, ஸ்ரீ யுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள். இப்போதைக்கு வைக்க மாட்டாள் என்பதால், அபி கீழே வந்து விட்டாள்.
எல்லோரும் தத்தமது அறைகளில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.
ராணிம்மா சாம்பார் தூள் அரைக்க, மாவு அரைக்க என்று அருகில் உள்ள மாவு மில்லுக்கு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போய் விட்டார்!
இந்த bird feeder எப்படியாவது இந்த balcony சைடு சுவற்றில் மாடி விட்டால், போதும். அபி கடந்த இரண்டு நாட்களாக, இந்த இடத்திற்கு நாலைந்து தவிட்டுக் குருவிகள் வந்து போவதைப் பார்த்து விட்டுதான் இதை செய்திருக்கிறாள்!
எங்கேர்ந்து எப்படி மாட்டுவது என்று மேலே பார்த்துக் கொண்டிருந்தவள் பின்னால், வெகுஅருகே
“அங்கே என்ன தெரிகிறது?” என்று புலிகேசி வடிவேலு பாணியில் கேட்ட பிரபுவின் குரல் மிக நெருக்கத்தில் கேட்க திடுக்கிட்டு சட்டென திரும்பிவள், தடுமாற, அவளை கைகளைப் பிடித்து நிறுத்தினான் பிரபு!
“ஏன் இப்படி பின்னாடி வந்து நின்னு பயமுறுத்துறீங்க?” என்றாள் அபி கோபமாக!
“கூல் கூல்! . இங்க என்ன பண்ணிட்டு இருக்க தனியா?”
“இங்க நிறைய தவிட்டுக் குருவிங்க வருது தெரியுமா? இவ்வளவு டிராபிக் சத்தத்தில் இங்கே வருவது ஆச்சரியமாக இருக்கு. குருவிங்க வீட்டுக்குள்ள வர்றது ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க. நல்ல vibes கிடைக்கும் வீட்டுக்கு!”
“ஒரு ஹெல்ப், இத கொஞ்சம் மாட்டி விடறீங்களா? எனக்கு எட்ட மாட்டேங்குது.”
“ஹெல்பா அதுவும் உனக்கா? ஒருபோதும் அந்த தப்ப நான் செய்யவே மாட்டேன். ஒரு தடவ செய்ததுக்கே என்னை அங்கிள்னு சொன்ன. இப்ப தாத்தான்னு சொல்றதுக்கா? அதுவும் இல்லாம, எனக்குமே அது எட்டாது.” என்றான் பிரபு.
“ப்ளீஸ் ப்ளீஸ் என்னை மன்னிச்சு.” இனி அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்!” தன் தாடையையே பற்றிக்கொண்டு கொண்டு அவனிடம் கெஞ்சினாள் அபி!
அதைப் பார்த்த பிரபுவுக்கு சிரிப்பு வந்தது. என்றாலும், பிகு பண்ணிக் கொண்டு அங்கிருந்து திரும்பி சென்றான்.
அபி சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே அந்த ஏணி இருந்தது!
அதே ஏணி!
(மறுபடியும் முதல்ல இருந்தா…. உங்க mind வாய்ஸ் கேட்கிறது!).
அதை எடுக்கலாம்னு என்று அபி நினைத்த அபிக்கு, திடீர் என்று தான் மேலே எழும்புவது போல் தோன்ற, அதிர்ச்சியுடன் பார்த்தால், பிரபு அவளைத் தூக்கி விட்டிருந்தான்.
“இப்ப அந்த bird feederஐ மாட்டு” என்றபடியே.
அவளும் மாட்டிவிட்டாள் அது கரெக்ட் ஆக செட் ஆகியிருக்க திருப்தியுடன், திரும்பி அவனைப் பார்த்தாள்.
“இப்பவாவது தேங்க்ஸ் மாமான்னு சொல்லுவியா?” குறும்புடன் கேட்டான் பிரபு!
அவள் கண்களிலும் பொங்கி வழிந்த காதல் அவனை ஆனந்த கூத்தாட வைத்தது!
அவளோ, வெட்கத்தோடு சிரித்தபடி, இப்போதும் “தேங்க்ஸ்” என்று மட்டும் சொல்லி அவன் நெற்றியில் ஒரு செல்ல முட்டு முட்டிவிட்டு, “அய்யோ ஆண்டி” என்று சொல்லி, வேகமாக அவனிடமிருந்து விடுபட்டு இறங்கி ஓடி விட்டாள்!
பிரபு, திரும்பிப் பார்த்தால் அங்கே ஒருவரும் இல்லை.
“ஏய் நில்லு, ஒரு வாட்டி மட்டும் முட்டிவிட்டு விட்டுவிட்டால் கொம்பு முளைக்கும் என்று ஜெனிலியா அக்கா சொல்லியிருக்காங்க போகாதே!” என்றான் பிரபு சிரித்த படியே.
*************
மாலை வேளை.
முன்பே சொல்லியிருந்த படி, பிரனிதாவும்அபியும், ஒரு ஏழு மணி வாக்கில், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனா மற்றும் விஷ்ணுவிடம் வந்தார்கள்.
காஞ்சனாவும் ராணியும் காய்கறி வாங்க வெளியே சென்றிருந்தார்கள்.
விஸ்வநாதனும் வெளியே சென்றிருந்தார்.
“விஷ்ணு அண்ணா, அபி ஒரு விஷயம் சொல்றா, அது possibleஆன்னு பாருங்க” என்றாள் ப்ரனிதா.
“என்னம்மா விஷயம்?: என்று கேட்ட விஷ்ணுவிடம்,
“அங்கிள்க்கு இப்ப 7௦th birthday வருதுல்ல, அதுக்கு வெறும் cake வெட்டி மட்டும் கொண்டாடுனா பத்தாது. இன்னும் ஒண்ணு செய்யணும்”
“என்ன ஏதாவது orphanageக்கு donation கொடுக்கலாம்னு சொல்றியா?
“அதுவும் செய்யணும் தான். அதோடு கூட பிள்ளைகள் எடுத்து செய்யுற ஒரு கடமை இருக்கு.
ஆக்சுவலா அது 6௦th irthdayக்கே செய்திருக்கணும். மிஸ் ஆகிடுச்சு!”.
“இந்த சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருக்கீங்களா?” கேட்டாள் அபி.
“ம்ம். அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம்”
yes! அது போல 7௦வயது ஆரம்பிக்கும் போதும் ஒன்று உண்டு. என்று என் பாட்டி சொல்வார்கள். திருக்கடையூரில் வைத்து செய்வார்களாம். எனக்கும் முழுசா அதுப்பற்றி தெரியாது. என் பாட்டிகிட்ட தான் கேட்கணும்.
நான் என்ன சொல்ல வரேன்னா, நாம் ஏன் அங்கிள் ஆன்ட்டிக்கு 7௦ ஆம் கல்யாணம் செய்ய கூடாது?” என்று விஷயத்திற்கு வந்தாள் அபி!
“இது பிள்ளைகள் தான் பெற்றோருக்கு செய்யணும். இப்ப எல்லோரும் வந்து இருக்கீங்க, இந்த சான்சை மிஸ் பண்ணாம, செய்யலாமே!”
விஷ்ணுவுக்குள் யோசனை படர்ந்தது.
“இவள் சொல்லுவதும் சரி தான் விஷ்ணு, நாம தான் இத எடுத்து செய்யணும்” என்று அர்ச்சனாவும் சொன்னாள்!
“ஆனா மாமாவுக்கு ஸ்டார் birthday அன்னிக்கு தான் செய்யணும்.”
“ஆமா அர்ச்சனாக்கா, அதையும் நான் ஆன்ட்டிகிட்ட விசாரித்தேன், வர்ற Thursday வருது.”
“இன்னிக்கு சண்டே. ரொம்ப short period இல் இதெல்லாம் பண்ண முடியுமான்னு தெரியலையே” என்று கவலைப் பட்டான் விஷ்ணு.
“ட்ரை பண்ணுவோமே, பின்னால , எல்லோரும் ஒண்ணா வந்தும் செய்யாம விட்டுட்டோம்னு கில்டி பீலிங்க்ஸ் வந்துடக் கூடாது” என்ற அபி, நான் முதல்ல என் பாட்டியிடம் கேட்கிறேன், என்ன procedure எப்படி செய்யனும்னு. என்று சொன்னாள்.
“சரி அபி போன் பண்ணிக் கேள்” என்றார்கள் மூவரும்.
அபி தன் பாட்டி வேம்புவிடம் போன் பண்ணி விபரம் கேட்டாள்.
பின் அவர் சொன்னபடி வேறு சிலருக்கும் போன் பண்ணி பேசினாள்.
அதற்குள் வெளியே சென்றிருந்த பிரபுவும் வர, விஷ்ணு அவனிடமும் பிளான் பற்றி சொன்னான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கே வந்தார் பக்கத்து வீட்டு பெண்மணி.
அவர் வெள்ளந்தியாக பேசுகிறேன் பேர்வழி என்று, அடுத்தவர் மனம் புண்படும்படி ஏதாவது பேசி வைக்கும் சுபாவம் உள்ளவர்.
அவர் வந்ததும் வராதுமாக,”ஹேய் விஷ்ணு எப்ப வந்தே நல்லா இருக்கியா” என்றவாறு உள்ளே வந்து கொண்டிருக்க,
சட்டென அங்கு வந்த அபி “அர்ச்சனா அக்கா, ஆன்டி kitchen ல ஓடிக்கொண்டிருக்கும் grinder ஐ பார்த்து off பண்ண சொன்னாங்க. சீக்கிரம் போங்க” அது சூடாகி விட போகிறது” என்று அவளை உள்ளே அனுப்பினாள்.
உள்ளே வந்த அந்த பெண்மணி, என்னப்பா விஷ்ணு இன்னும் அர்ச்சனாவுக்கு ஒண்ணும் விசே.. “ என்று ஆரம்பிக்குமுன் விஷ்ணுவின் போன் அடித்தது.
“ஒரு நிமிஷம்” என்றவாறே போனை எடுத்துக்கொண்டே நம்பரைப் பார்த்தான். ப்ரனிதா நம்பர். அவள் இங்கே அவனருகே சும்மா தான் உட்கார்ந்து இருந்தாள். பின் யாரது அவளின் நம்பரில் இருந்து அழைப்பது?
பார்த்தால், அபி கையில் ப்ரனிதா போன்! மாடிப்படியில்நின்றுக் கொண்டு சைகை காட்டி அவனை பக்கத்தில் இருந்த ரூமுக்குள் போக சொன்னாள்!
விஷ்ணுவிடம் பேச முடியாது போன அப்பெண், தன் அருகே வந்த அபியிடம்,
“நல்லா இருக்கியாம்மா? இத உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ, காஞ்சனா ரொம்ப நல்லவ. தாயில்லா குழந்தை நீ, உன்ன ரொம்ப அன்பா பார்த்துப்பா. எங்கே அவள்?” என்றவாறு உள்ளே பார்க்க,
“அம்மா கடைக்கு போயிருக்காங்க, வர லேட்டாகும்.” என்றாள் ப்ரனிதா கடுப்பை மறைத்துக்கொண்டு!
“சரிடிம்மா, நான் அப்புறமா வந்து பாக்குறேன்!” என்றவாறு அவள் கிளம்பி விட்டார்.
கிச்சனுக்குள் சென்ற அர்ச்சனா, அங்கே grinder ஓடாதது கண்டு, இந்த அபி ஏன் என்னிடம் அப்படி சொன்னாள் என்று யோசித்தவாறே, வெளியில் வந்து நடந்ததைக் கண்டு,
”Nice அபி! அழகா சமாளிச்சே” என்று நினைத்துக்கொண்டாள்.
ரூமில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, நாம் எல்லோரும் என் ரூமில் போய் பேசலாம் என்று அனைவரையும் அங்கே அழைத்துச் சென்றான்.
பரவாயில்லையே , நம்ம teddy bear, சமயத்துல இப்படி பெரிய மனுஷி மாதிரியும் நடந்துக்குறா!
உள்ளுக்குள் பெருமிதப்பட்டான் பிரபு!
அதற்குள் அவனுக்கு office urgent call ஒன்று வந்து விட தன் ரூமுக்கு சென்று விட்டான்.
“ஏபியண்ணா, கொஞ்சம் பக்காவா பிளான் பண்ணி எல்லோரும் ஆளுக்கு ஒரு responsibilityஎடுத்துக் கொண்டு விட்டால், நாம் இந்த function ஐ ஈசியா நடத்திடலாம்!” என்றாள் அபி.
“நான் பாட்டிகிட்ட கேட்டு, ஒரு ப்ரோகிதர் காண்டாக்ட் வாங்கிட்டேன்.
பூஜைக்கு உள்ள எல்லா ஏற்பாடும் அவரே பார்த்துப்பார்.
நாம் கொண்டு போக வேண்டிய திங்க்ஸ் லிஸ்ட் இப்போ WhatsApp பில் அனுப்பிவிடுவார்.
நாம பண்ண வேண்டியது, purchase, அப்புறம் invitation ரெடி பண்ணனும். பிரிண்ட் போடணும்னு கூட அவசியம் இல்ல, எல்லோருக்கும் WhatsApp பில்அனுப்பி விடலாம்.
invitees லிஸ்ட் ரெடி பண்ணனும்.
cab arrange பண்ணனும்.
எல்லாத்துக்கும் ஒரு checklist ரெடி பண்ணிட்டு சரி பார்த்துக்கலாம்.
அப்புறம் முக்கியமான விஷயம் பாட்டி சொல்ல சொன்னாங்க.
இந்த 7௦ ஆம் கல்யாணத்துக்கு தாலி உங்க மாமா தான் செய்யணுமாம்.
அதாவது, ஆன்ட்டியோட brother தான் செய்யணுமாம்.”
“இது தான் கொஞ்சம் கஷ்டம். அம்மா விட்டே பேச சொல்லணும் வேற வழியில்ல. ம்ம் ..இல்ல.. நானே பேசுறேன்” என்றான் விஷ்ணு.
அதற்குள் விஜயிடமிருந்து போன். அவன் மும்பையில் இருந்து கிளம்பிவிட்டான். அமெரிக்காவிலிருந்து நேரே அவர்கள், காவ்யா வீட்டிற்கு சென்று அங்கே ஒரு attendance போட்டுவிட்டு இங்கே வருகிறார்கள்!
ப்ரனிதா, அவர்களிடம் போனில் பேசி கொண்டிருந்தாள். இந்த ஏற்பாடு பற்றியும் விளக்கி கொண்டிருந்தாள்!.
அபியும் விஷ்ணுவும் உட்கார்ந்து ஒரு இவன்ட் பிளானிங் PPTஏ தயாரித்து கொண்டிருந்தார்கள்!
யார் யாருக்கு என்ன பொறுப்பு. எத்தனை மணிக்கு இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பதெல்லாம் மிகவும் நுட்பமாக யோசித்து mention பண்ணியிருந்தாள் அபி!
இடையிடையே போன் பண்ணி confirm பண்ணிக் கொண்டாள்.
அதன்படி invitation ரெடி பண்ணுவது ப்ரனிதா, பூஜை சாமான்கள் வாங்குவது, ரெடி ஆக வைப்பது ராணிம்மா ஹெல்புக்கு ஆறுமுகம் அண்ணா.
invitation லிஸ்ட் தயாரிப்பது மற்றும் அனுப்புவது விஷ்ணு மற்றும் விஜய்.
டிரஸ்,தாலி மற்றும் return gifts வாங்குவது அடுத்த நாள் எல்லோரும் சேர்ந்து.
எல்லோருக்கும் blouse தைத்து வாங்கி வைப்பது மற்றும் அலங்காரம் செய்வது அபி.
யார் எப்போது கூப்ட்டாலும் டிரைவர் வேலை பார்ப்பது நம்ம பிரபுவுக்கு assign பண்ணப்பட்ட டாஸ்க்!
வண்டி arrange பண்ற வேலை, வேற வழியில்லாம “மாப்பிள்ளை” விஸ்வநாதனுக்கே!
எல்லாவற்றையும் மேற்பார்வை பார்க்க வேண்டியது காஞ்சனாவின் வேலை!
இப்படி ரொம்ப நேரமாக அதையும் இதையும் யோசித்து யோசித்து பக்காவாக பிளான் செய்து கொண்டிருந்தார்கள் அபியும் விஷ்ணுவும்.
அதற்குள் அவனுக்கும், அர்ச்சனாவுக்கும் ஒரு கம்பனியின் நிர்வாக சம்பந்தப்பட்ட முக்கியமான ஒரு call வந்து விட, லேப்டாப்பில் call அட்டென்ட் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த காலில் பிரபுவும் இருந்தான், அவன் ரூமில் இருந்தவாறே!
தன் லேப்டாப்பில் இந்த functionக்காக செட்யூல் போட்டுக் கொண்டிருந்த அபி, இவர்களுக்காக வெயிட் பண்ணி பண்ணி, அவளுக்குத் தூக்கமே வந்துவிட்டது!
கம்பெனி மீட்டிங் முடிந்து வந்த விஷ்ணுவும் அர்ச்சனாவும், லாப்டாப்பைக் கூட அணைக்காமல் அப்படியே சோபாவில் தூங்கிவிட்ட அபியைப் பார்த்து திகைத்தார்கள்!
என்ன அதற்குள் தூங்கி விட்டாள்!
விஜயிடம் போன் பேசி முடித்துவிட்டு வந்த ப்ரனிதா, அங்கேயே தூங்கி விட்ட அபியை எழுப்ப முயன்றாள்.
அவளைத் தடுத்தான் விஷ்ணு.
“தூங்கட்டும் விடு பப்பி! நான் அம்மாவிடம் கொஞ்சம் பேசணும், நான் இன்று அங்கேயே தூங்க போறேன். அர்ச்சனா நீ அபி கூட படுத்துக்கோ” என்று சொல்ல,
“அவளை இங்கே படுக்க வையுங்க. சோபாவில் எப்படி தூங்குவாள்” என்றாள் அர்ச்சனா!.
விஷ்ணு அவளை அப்படியே ஒரு குழந்தையை தூக்குவது போல தூக்கி, பெட்டில் படுக்க வைத்தான். அர்ச்சனா அவளுக்கு போர்த்தி விட்டுவிட்டாள்.
அனைவரும் கீழே சென்று விஸ்வநாதன் காஞ்சனாவிடம் இந்த 7௦ஆம் கல்யாண ஏற்பாடு பற்றி பேச சென்றனர்.
அபியோ, நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
இன்று ஒரு சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்ட அபியின் இது மாதிரி பழக்கமே இன்னொருநாள் மிகுந்த பிரச்சினையை, குடும்ப பிரச்சினையை ,பெரும் முடிவுகளை எடுக்க வைக்கப் போகிறது என்றறியாமல்!