“மெல்ல பேசுப்பா…” என குரலை தழைத்துக்கொண்டவர் அவனின் சிவந்து வீங்கியிருந்த கண்களை பார்த்தார்.
“ஆமா, கண்ணெல்லாம் இப்படி சிவந்து போயிருக்கே…” என்றதும் கண்ணை கசக்கியவன்,
“டஸ்ட் அலர்ஜியாகிருச்சும்மா. ஐ இரிட்டேஷனா இருக்கு…”
“என்னடா இது வரிசையா சொல்ற?…” என புலம்பியவர்,
“சரி, நீ எப்பவும் அதுக்கு ஐ ட்ராப்ஸ் வச்சிருப்பியே. இருக்கா?…”
“ஹ்ம்ம், வச்சிருக்கேன்…” என்றவன் சிவந்த விழிகள் அவ்விடத்தை சுற்றி பார்வையிட்டது.
“என்ன சபரி?…”
“ஹ்ம்ம், நத்திங் ம்மா…” என்றான் ஒன்றும் சொல்லாமல்.
படிப்பு, வேலை என்று ஓடிக்கொண்டிருந்தவன் பெரிதாய் திருமணத்தில் நாட்டமின்றியும், பெண் பார்ப்பதாக தாங்கள் சொன்னாலும் எனக்கென்ன என்பதை போலிருப்பதாகவும் தெரிந்தான் அர்னவ்.
அதிலேயே அன்னக்கிளிக்கு இப்படியே விடகூடாது என்று தோன்ற பெண்ணையும் பார்த்து முடிவு செய்தால் அவளிடமும் சரியாக பேசுவதாக தெரியவில்லை.
“பொண்ணுட்ட பேசினியா?…” என்று கேட்டாலும்,
“என்ன பேச? பேச விஷயம் இருந்தா பேச போறேன்…” என்று மகன் சொல்ல திக்கென்றிருந்தது.
அதன் பின்னர் சௌமியாவாக அவனிடம் பேச முற்பட்டால் அதிலும் அவளின் மேல்படிப்பு சம்பந்தமாக தான் இருக்கும் அவனின் பேச்சுக்கள்.
“இவன் தேறமாட்டான் போல?…” என அன்னக்கிளி கலைவாணனிடம் புலம்பாத நாளில்லை திருமணம் என்று கிளம்பும் வரை.
இங்கு வந்தும் இப்படியே இருக்க பயம் தான் பிடித்தது அன்னக்கிளிக்கு. மகனை இன்னுமே தள்ளி யாருமற்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தார்.
அனைத்து இடத்திலும் ஆட்கள் இருக்க இதனை பற்றி பேசவே அச்சமாக இருந்தது.
“என்னம்மா? எதாச்சும் முக்கியமான விஷயமா?…” என அர்னவ் சாதாரணமாக கேட்க,
“அடிவயிறே கலங்குது. கேட்கிறதுக்கு உண்மையான பதிலை சொல்லு. எனக்காகன்னு இல்லாம நிஜமாவே உனக்கு பிடிச்சு தானே நீ சௌமியாவுக்கு சரின்னு சொன்ன?…” என கேட்டார் அன்னக்கிளி.
அதுவரை தலையை பிடித்தபடி இருந்தவன் முகத்தில் மெல்லிய கீற்றாய் புன்னகை எட்டி பார்க்க அவரின் பயத்தை கண்டு இன்னும் சிரித்தான்.
“சொல்லு சபரி?…”
“ம்மா எப்ப வந்து என்ன கேட்கறீங்க?…”
“எப்பவாவும் இருக்கட்டும். எனக்கு தோணுது. கேட்டேன். நீ நிஜத்தை சொல்லு…”
“சரி இப்ப நான் இஷ்டமில்லைன்னு சொன்னா என்ன பன்றதா இருக்கீங்க?…” என்று அவன் விளையாட்டாய் கேட்க நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார்.
“சபரி…” என அதிர்ந்து பார்க்க,
“ம்மா, ம்மா. அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் என்ன சின்ன பையனா நீங்க சொல்றதுக்காக எல்லாம் தலையாட்ட?…” என கேட்டவன்,
“பிரபஷனலா கூட எனக்கு இதுல முழு சம்மதம் தானே?…” என்றதற்கு தலையில் அடித்துக்கொண்டார் அன்னக்கிளி.
“உன்னை பெத்து வளர்த்தேன் பாரு…” என சொல்லியவர்,
“வேலையை விடு. கல்யாணமும் வேலையும் ஒண்ணா சபரி? இது வாழ்க்கை…”
“எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான். போதுமா? நீங்க ரிலாக்ஸா இருங்க. கல்யாணம் முடிஞ்சதும் நாங்க மட்டும் தானே பேசிட்டு இருக்க போறோம் வாழ்க்கை முழுக்க? அப்பறம் என்ன?…”
“புது இடம்ல. அதுவும் நேத்து பகல்ல நல்ல தூக்கம். அதான் நைட் தூக்கமே வரலை…” சுதாகரன் கூறவும்,
“சரி வாங்க, சும்மா அப்படி போய்ட்டு வருவோம்…” என அர்னவ் கூப்பிட,
“டேய் நில்லு. இப்ப எங்க போற? அதுவும் இந்த இருட்டுல மாப்பிள்ளை நீ போறது சரிவராது…” என்றாள் அருந்ததி.
“முதல்ல நீ அம்மாவை கூல் பண்ணுக்கா. நாங்க வந்திருவோம். இந்த ஸ்ட்ரீட் என்ட் வரைக்கு மட்டும் போய்ட்டு வரோமே?…” என்றான் தன்மையாய் ஆரம்பித்து இறுதியாய் கெஞ்சலுடன்.
“என்னவோ பண்ணு, ஆனா வேற எங்கயும் போக வேண்டாம்…” என்று சொல்லிய அருந்ததி அன்னக்கிளியுடன் உள்ளே சென்றாள்.
“என்னம்மா? ஏன் முகமே சரியில்லை?…” என தாயிடம் கேட்க அன்னக்கிளியின் தங்கை வனிதாவும் வந்துவிட்டார்.
“பாரு எப்படி பேசறான்னு. அந்த புள்ளைட்ட சரியா கூட பேசலை. என்னடா உன் விருப்பத்தோட தானே சரின்னு சொன்னன்னு கேட்டதுக்கு இப்ப இஷ்டமில்லைன்னா என்ன பண்ண போறீங்கன்னு கேட்கறான்?…”
அன்னக்கிளி மனதிலும் சஞ்சலத்திற்கு மேல் சஞ்சலம். முதலில் எல்லாம் எதுவும் தெரியவில்லை.
ஆனால் திருமணம் திண்டுக்கலுக்கு என்று கிளம்பியதிலிருந்து சிறு சிறு இடையூறுகள்.
முதலில் ஏற்பாடு செய்திருந்த பஸ் சொந்தங்களை அழைத்து வருவதாய் இருந்து வரும் வழியில் சின்ன விபத்தாகி போக, வேறு ஒரு பஸ்ஸை அமர்த்தி கிளம்பினார்கள்.
அதுவும் வழியில் பஞ்சர், உடன் வருபவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என அத்தனை இழுபறிகள்.
இப்போது மகனும் திருமணம் என்னும் பூரிப்பும், எதிர்பார்ப்பும் கொஞ்சமும் இன்றி இருக்க நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமே என்றிருந்தது.
“நீங்க பேசறதை வச்சு அவன் விளையாடிருப்பான். இது ஒரு விஷயமா? கல்யாணம் பிடிக்காம தான் சௌமிக்கு பெங்களூர்ல மேல படிக்க காலேஜ்க்கு எல்லாம் விசாரிச்சிருப்பானா? என்னம்மா நீங்க?…” என்றவள்,