“கால கொடுமை. எதை சொல்லி எப்படியெல்லாம் அனுப்ப வேண்டியதிருக்கு. இது கிரேட்டா?…” என தலையிலடித்துக்கொண்டாள்.
இருவருமாக சிரித்தபடி திரும்பி பார்க்க அங்கே பேயறைந்த முகத்துடன் முல்லை இவர்களை பார்த்து எழுந்து அமர்ந்திருந்தாள்.
“இவளுக்கு மந்திரிச்சே ஆகனும் போல?…” என உஷா லேசாய் தலையில் தட்டிவிட்டு,
“அம்புட்டுக்கு எல்லாம் வொர்த்தே இல்ல. இவ்வளோ ஷாக்காகாத த்தா. ஏற்கனவே பாதி ஜீவன் போயிருச்சு…” உஷா தளர்ந்து அமர முல்லையின் கண்களில் கண்ணீர்.
“இப்ப எதுக்கும்மா அழற?…” என கனிவாக அருந்ததி கேட்கவும் அவளை பார்த்தாள் முல்லை.
“என் பேர் அருந்ததி. அர்னவ்க்கு அக்கா. அர்னவ் தெரியும் தானே? உன்னோட ஹஸ்பன்ட்…” என மெல்லிய புன்னகையுடன் சொல்ல முல்லை இன்னும் அப்படியே தான் இருந்தாள்.
பின் அருந்ததியும், உஷாவும் மாற்றி மாற்றி பேச முல்லையின் முகம் ஓரளவு தெளிவானது.
“உனக்கும் இது எவ்வளோ ஷாக்ன்னு தெரியும். ஆனா தப்பா எதுவும் நடக்கலை. உன்னை மனசார பிடிச்சு தான் நாங்க இங்க இருக்கோம். நேத்திக்கு ஒரு பொண்ணை சம்பந்தம் பேசிட்டு இன்னைக்கு இப்படி பேசறோம்ன்னு நினைக்காத முல்லை….” என்ற அருந்ததி,
“ஓரளவு உன்னை பார்க்காம, பழகாமலே எனக்கு தெரியும். சௌமியா சொல்லியிருக்கா…” என்றதும் முல்லை முகம் கசங்கியது.
“அடடா, நடந்துருச்சு. நினைச்சு கண்ணீர் விட்டு அழுது கரைஞ்சு எதுவும் மாற போறதில்லை முல்லை. நீ தான் எங்க வீட்டுக்குன்னு இருக்கு. அதான் நாங்க தேடாமலே எங்களுக்கு கிடைச்சிருக்க. ஐஸ் வைக்கறேன்னு நினைக்காத…”
அருந்ததி இலகுவாய் சூழ்நிலையை கையாள உஷாவுக்கு அத்தனை பிடித்தது இந்த அருந்ததியை.
ஒருவழியாய் முல்லையை தேற்றி முடித்து வெளியே கிளம்பும் முன் இன்னும் தெளிவாக சொல்லியே வந்தனர்.
“உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை பேசு. உன்னோட அவன் தனியா பேசனும்னு நினைச்சது அவனுக்காக மட்டுமில்லை. உனக்காகவும் தான். பார்த்துக்கோ…” என சொல்லிவிட்டு வெளியேறிவிட்டனர்.
உள்ளுக்குள் எண்ணங்கள் அலைமோதி அடித்து செல்ல முல்லையின் தயக்கங்கள், குழப்பங்கள் எல்லாம் கரை ஒதுங்க அர்னவ் வர காத்திருந்தாள்.
அவனை தானும் நேரில் பார்த்திருக்க இத்தனை நாட்கள் சௌமியா மூலமும் அறிந்திருக்க மனது தெளிவானதை போலிருந்தது.
இத்தனை கலவரத்திலும், அதிர்ச்சியிலும் இருந்தாலும் தன் மனது சரியான பாதையில் செல்வதாகவே நினைத்தாள்.
கதவு லேசாய் தட்டப்பட்டதும் அதனை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவனை கண்டு எழுந்து நின்றாள் முல்லை.
பேசவேண்டும் என்று வந்தவனின் பார்வையோ அவளை ஆராய்ந்தது. இருவருமே இன்னுமே அதே உடையில் தான் இருந்தனர்.
“உட்காரலாமா…” என கேட்டு அமர்ந்தவன் அவளிடம் பேசவே நேரம் எடுத்துக்கொண்டான்.
“தப்பு என்னோடது. ஸோ முடிவு உங்களோடதா இருக்கனும். அது எதுவானாலும் நோ அப்ஜெக்ஷன்…”
“எதுவானாலும்ன்னா?…” முல்லையின் விரல்கள் தனது மோதிரத்தை சுழற்ற ஆரம்பிக்க அர்னவ்வின் விழிகள் அதில் பதிந்து மீண்டது.
“ஐ மீன் இட்…” என்றவன்,
“எல்லாரும் பார்க்க மேரேஜ் நடந்திருச்சு. அதனால ம்யூச்சுவல் டிவோர்ஸ் கூட எனக்கு ஓகே. இதுல உங்க ஒப்பீனியன் ரொம்ப இம்பார்ட்டன்ட்…” என்றதும் அவனை அழுத்தமாய் பார்த்தாள்.
“இந்த டிவோர்ஸ் எனக்காகவா? இது நீங்க எதிர்பார்க்கிற மாதிரியே இருக்கு…”
“எதிர்பார்ப்புன்னு ஒன்னு இந்த நிமிஷம் கூட இல்லை. உங்க முடிவு எனக்கு பாஸிட்டிவ்வா தான் இருக்கனும்னு நான் சொல்லலை. நெகட்டிவா இருந்தாலும் ஓகேன்னு சொல்றேன். உங்களுக்கு சங்கடம் வேண்டாம் பாருங்க…”
அர்னவ் தெள்ள தெளிவாய் அவளை பன்மையில் விளித்து தன் மனதை தெளிவுபடுத்த இப்போது முல்லைக்கு அவனை இன்னுமே பிடித்தது.
இவை தானே அவனின் இந்த விதமான பண்புகள் தானே இத்தனை நாட்கள் அர்னவ்வை தன் ஞாபகத்தில் நிற்க வைத்திருந்தது என நினைத்தாள்.
“புரியுது…”
“உங்களுக்கும் உங்க ப்யூச்சர் பத்தி எதாச்சும் எக்ஸ்படேஷன் இருக்கலாம். இதனால நீங்க டிஸ்ப்பாயின்ட்டாகிட வேண்டாம். நான் எந்தவிதத்துலையும் பிரச்சனை பண்ண போறதில்லை…”
“நான் சரின்னு சொன்னா?…”
“புரியலைம்மா, என்ன சொல்றீங்கன்னு தெளிவா சொல்லலாம்…”
“நீங்க என்னை முல்லைன்னே கூப்பிடலாம். இப்படி வாங்க போங்கன்னு கூப்பிட்டு தள்ளி நிப்பாட்ட மெனக்கெட்டு முயற்சி பண்ண வேண்டாம்…” என்றாள் வெளிப்படையாக.
அத்தனை மிரண்டு கலங்கி போயிருந்தவள் முகத்தில் இவ்வளவு தீர்க்கமான பதிலா என திகைத்தவன் முகம் தான் இன்னுமே கசங்கியது.
“இந்த லைப் திணிக்கப்பட்டதா இருக்கும். கொஞ்சம் யோசிச்சு புரிஞ்சு…” அர்னவ் மீண்டும் பேச வர,
“இப்பவே ஏன் அப்படி நினைக்கனும்? ஓகே நீங்க சொல்ற மாதிரி இது எதிர்பாராம இருந்தாலும் உடனே இந்த முடிவுக்கு வர வேண்டியதிருக்குதா? அதுவும் வெளில பெரியவங்க பேசறதெல்லாம்…”
“அவங்களை பத்தி பேச வேண்டாம். வாழ போறது நாம…” என்றதும் அவனை இன்னும் அழுத்தமாகவே பார்த்தாள் முல்லை.
“இப்ப இதை உடனே முடிவு பண்ண வேண்டாம்ன்னு சொல்றேன். எனக்கும் இன்னும் ஒரு வருஷம் படிப்பிருக்கு….” அவனின் பேச்சிற்கு மறுப்பாய் சொல்லிய விதமே அவளின் முடிவை எடுத்துரைத்தது.
ஆயாசமாய் தளர்ந்து அமர்ந்தான் அர்னவ். இந்த வாழ்க்கையை தொடர்ந்தால் இதே கேலி, கிண்டல், அவமானம் எல்லாமே இறுதி வரை தொடரும் என அவனின் யோசனைகள் எல்லாமே அந்த வகையில் தான் இருந்தது.
இனி இது தன் கையில் இல்லை என புரிந்து போக நெற்றியில் முகம் தாங்கி அவன் அமர்ந்துகொண்டதும் அங்கே இருக்கவா வேண்டாமா என யோசித்தாள்.
“முல்லை இங்க வா…” என வெளியே யாரோ கதவை தட்டி அழைக்கவும் அர்னவ்வை பார்க்க அவன் அப்படியே தான் இருந்தான்.
இப்போது அவனின் நிலை தான் அவளை அச்சப்படுத்தியது. இது சரியாகிவிடுமா என்னும் எதிர்காலத்தின் மீது சற்று பயத்தையும் தந்தது.
அதன் பின் அர்னவ் அங்கிருந்து வெளியே வரவே இல்லை. உண்ணவில்லை, உறங்கவில்லை. எதற்கும் வெளிவரவில்லை.
அவனுடன் அவ்வப்போது சுதகாரன் தான் உடனிருந்தான். அன்றே வேறு எந்த சம்பிரதாய சடங்கும் வேண்டாம் என்றுவிட்டனர் வீட்டினர்.
அதற்காகவே தன் பக்க சொந்தங்களை எல்லாம் ஊருக்கு கிளப்பிவிட்டிருந்தார் கலைவாணன்.
இருந்தால் இதை வைத்து ஏதேனும் பிரச்சனை ஆக கூடும். கூட்டமாய் இருக்க இருக்க இன்னும் எதற்கு சச்சரவு என்று அனுப்பி வைத்துவிட்டார்.
மறுநாள் பாபநாசம் சென்று அங்கொரு நாள். அங்கேயும் தனி தனியே தான் இருவரின் அறையும்.
முல்லை வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாபநாசம் மட்டுமல்ல தன் ஊரிலுமே அவ்வளவு பேச்சுக்கள்.
கேட்க கேட்க கலங்கி உடைந்து போனது அவள் உள்ளம். அதிலும் அர்னவ் வேறு தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதை போல இறுக்கத்துடன் இருக்க,
“அதெல்லாம் ரெண்டுமூணு நாள் போனா சரியாகிருவான்…” என்றனர் அருந்ததியும், அன்னக்கிளியும்.
இன்றுவரை முல்லைக்கு ஆதரவும், துணையுமாக இத்தனை மாதங்கள் அவர்கள் இருக்க திடீரென இந்த திருப்பத்தை, அதிலும் தான் சொல்லாமல் அவனாக தெரிந்துகொண்டதில் உண்டான கோபத்தை எப்படி தீர்ப்பது என புரியாமல் தவித்தாள் முல்லை.
இரவும் கடந்து விடியல் வெளிச்சத்தை தர மீண்டும் தனது மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
எடுக்கவில்லை அர்னவ். இன்னும் கோபத்தில் இருக்கிறானோ என யோசித்தபடி இருந்தவளுக்கு தன்னை தவறாக நினைக்கிறானே என்னும் எண்ணமே மனதை அறுத்தது.
நிச்சயம் அவன் வேறு எப்படி யோசிப்பான்? மணிமாறன் வேறு நெருப்பை பற்ற வைப்பதை போல பேசியிருக்க அந்த நினைவில் தானே பயந்தது.
அப்போது அர்னவ்வும் இதனை பார்த்தால் வேறு எப்படி யோசிக்க கூடும் என்று அவனுக்காகவே சிந்திக்க குறுஞ்செய்தி வந்ததாய் சப்தம்.
“ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்…” என அனுப்பியிருந்தான் அர்னவ்.
இந்தமட்டும் பேசுகிறானே என்றவளுக்கு அதுவே நிம்மதியை தர அடுத்ததாய் வீட்டினரின் பேச்சுக்கள், அன்னக்கிளி என மாற்றி மாற்றி போன் வந்துகொண்டே இருக்க சாமாளிக்கும் முன் திணறி போனாள்.
அன்னக்கிளி தான் அத்தனை முறை குடைந்தெடுத்துவிட்டார் ஏன் திடீரென இந்த பயணம் என்று.
அவரிடம் பொய்யும் சொல்லமுடியாமல் மெய்யும் சொல்லமுடியாமல் முல்லை தள்ளாடி போனாள்.
அதே நேரம் பெங்களூரில் மருத்துவமனையில் இருந்த அர்னவ் தங்களுக்கென்று கொடைக்கானலில் புக் செய்திருந்த ஹோட்டல் ரூமை கேன்ஸல் செய்துகொண்டிருந்தான்.