“இல்லைண்ணா, ஊருக்கு போயிருக்காங்க. திருநெல்வேலி வரை…” என்ற கீதா,
“உங்களுக்கு தெரியாதா? மாலதி அத்தை மாடில இருந்து விழுந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க…” என்றாள்.
“எப்போ?…” என கேட்டதும்,
“இன்னைக்கு மார்னிங் போல. கால்ல நல்ல பிராக்சராம். மாமா கால் பண்ணி லேடீஸ் ஹெல்ப்க்கு இருந்தா நல்லாருக்கும்ன்னு சொல்லிருப்பார் போல? அதான் பார்க்க அம்மாவும், பெரியம்மாவும் போயிருக்காங்க…”
“ஹ்ம்ம் ஓகே நான் பேசிக்கறேன்…”
“சரிங்கண்ணா நானும் கிளம்பறேன். பெரியம்மா தான் அவங்க வரவரைக்கும் என்னை அண்ணிக்கு துணைக்கு இருக்க சொன்னாங்க. அதான் நீங்க வந்துட்டீங்களே?…” என்று சொல்லி கிளம்பிவிட்டாள் கீதா.
அனைவருமே கிளம்பவும் எழுந்து நின்றவன் கைகளை மேல்நோக்கி முறித்துக்கொண்டே கிட்சனுக்குள் நுழைந்தான்.
“என்ன தேடற முல்லை?…” என்றவன் குரலில் திரும்பி பார்த்தவள்,
“டீ வடிக்கற ஜல்லடையை அத்தை எங்க வச்சாங்கன்னு தெரியலை. அதான் தேடிட்டிருக்கேன்…” என அதில் மும்மரமாக இருந்தாள்.
“ஹ்ம்ம், தேடு…” என்றவன் குரலில் மாறுபாட்டையும் அருகாமையையும் கூட கவனிக்கவில்லை.
விளக்கி இருந்த பாத்திர கூடையில் தேடிவிட்டு வேறு எங்கே என பார்த்து எடுத்துவிட்டாள்.
“இங்க இருக்கு…” என எடுத்து இரு தம்ளர்களில் டீயை ஊற்ற ஒவ்வொரு செயல்களையும் விழியகற்றாமல் பார்த்தபடி நின்றான் அர்னவ்.
“நீங்க உட்காரலாமே? ஏன் இங்க வந்து நின்னுட்டு?…” என அவனுக்கு ஒன்றை எடுத்து தந்தவள் தனக்கானதை எடுத்து வெளியே செல்ல அங்கே ஒருவரும் இல்லை.
“எல்லாரும் போயாச்சா?…”
“இப்ப தான். ஏன்? நான் இருக்கேன் தானே?…” என அர்னவ் மெல்லிய சிரிப்பை உதிர்க்க,
“ஆமா…” என்றபடி டீயை குடித்தவள்,
“நல்லாயிருக்கா?…” என்றாள்.
“ஹ்ம்ம், குட்…” என தானும் பருகினான்.
“எப்போ கிளம்பினீங்க? சொல்லியிருக்கலாமில்லையா? நீங்க வருவீங்கன்னு நினைக்கவே இல்லை…” என அவன் கிளம்பிய விவரங்களை கேட்க ஒவ்வொன்றாய் பேசியபடி எழுந்தவன் முல்லையின் அருகிருக்கும் இருக்கையில் வந்தமர்ந்தான்.
அதுவரை இலகுவான மனநிலையில் இருந்தவளின் இயல்பு அவன் அருகாமையில் மாற துவங்கியது.
“அத்தை திருநெல்வேலி போயிருக்காங்க…” அவன் முகம் பார்க்காமல் கையிலிருக்கும் தம்ளரில் கவனம் வைத்து சொல்ல,
இத்தனை தனிமை இதுவரை இருவருக்கும் அமைந்ததில்லை. முதன்முதலில் முழு வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே.
அதிலும் அரனவ்வின் அருகாமையும், பேச்சும், பார்வையும், அவன் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த நெருக்கமும் முல்லையை வசமிழக்க செய்பவையாக இருந்தது.
“கேட்கனும்னு நினைச்சேன். இந்நேரம் அப்பா வந்திருக்கனுமே?…” என்றவன் தனது இடது கையை அவளின் தோளின் பின்பக்கம் வைத்தான்.
சோபாவின் மேல் இருந்தாலும் கைகள் அவளின் பின்னங்கழுத்தை ஸ்பரிசித்தபடி தான் இருந்தது.
அசைந்தால் இழுத்துக்கொள்வானோ என அஞ்சியபடி அந்த நொடிகளை, அவனின் கை கொடுக்கும் உராய்வை உணர்ந்தபடி எச்சிலை கூட்டி விழுங்கினாள்.
“என்ன முல்லை? நான் கேட்டுட்டே இருக்கேன். ஒன்னும் பதில் சொல்லலை?…” அர்னவ் கேட்க,
“ஹாங்…” என விழிக்க,
“ஹேய் என்னாச்சு முல்லை?…” என்றவன் தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டு லேசாய் அணைக்க,
“மாமாவும் அங்க தான் போயிருக்காங்க. அப்படியே வரப்போ நைட் அத்தையை கூட்டிட்டு வந்திருவாங்களாம்…” என்றவள் தம்ளரை கீழே வைத்தாள்.
“என்ன முல்லை, டீ குடிக்கலை?…”
“ம்ஹூம், எனக்கு போதும். குடிக்க முடியலை…” என தடுமாற்றத்தை அவனுக்கு காட்டா வண்ணம் பேச,
“அப்படியா?…” என்றவன் குரலில் வெகுவாய் சீண்டல்.
“நிறைய ஊத்திட்டேன். அதான் குடிக்க முடியலை. நிஜமா தான்…” என சொல்லி லேசாய் நகர்ந்தமர முயன்றாள்.
“ஓகே, வேஸ்ட் பண்ண வேண்டாம் பாரு…” என்று அதனை எடுத்துக்கொண்டவன் மனைவியை கண்களுக்குள் நிறைத்தபடி சொட்டுகளாய் பருக இங்கே முல்லைக்கு நா வறண்டது.
சொல்லியிருக்கிறான் தான். அத்தனை உறுதியாய் அவன் அன்றே விளக்கி இருந்தானே? படிப்பு முடியட்டும், வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று.
அவ்வளவு நம்பிக்கை இருந்தது முல்லைக்கு. இப்போது திடுதிப்பென்று அவன் வந்து நின்றதும், அருகிலிருப்பதும் என அவளை நிலைதடுமாற செய்தது.
“சரி நீங்க போய் குளிச்சிட்டு வாங்க. அவ்வளோ நேரம் ட்ராவல் பண்ணிட்டு வந்திருக்கீங்க…” என படக்கென்று எழுந்துவிட்டாள்.
“இரு தம்ளர் தரேன்…” என சொல்ல,
“குடிச்சிட்டு கிட்சன்ல வச்சிருங்க. பின்னாடி ட்ரெஸ் காயுது. போய் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி ஓடிவிட்டாள்.
அவனின் சிரிப்பு சத்தம் பின்பக்கம் வரை அவளை துரத்தியது. வந்தவள் படித்துறையில் மூச்சுவாங்க அமர்ந்துவிட்டாள்.
அவனோடு தீபாவளியை ஒட்டி பாபநாசம் வந்த அன்று பேசியவை இப்போதும் அலைமோதி எழும்பியது.
‘ஏன் அன்னைக்கு உடனே சரின்னு தானே சொன்ன? அப்ப சம்மதம் சொன்னவளுக்கு இன்னைக்கு என்னவாம்?’ உள் மனது இடித்துரைக்க அச்சோ என்று முகத்தை மடியில் புதைத்துக்கொண்டாள் முல்லை.
எவ்வளவு நேரம் அமர்வது? இருட்ட ஆரம்பித்திருக்க மழையும் வேகமாய் தூற ஆரம்பித்தது.
துளிகள் விழாவும் காய்ந்திருந்த உடைகளை எடுக்கும் முன் பாதி நனைந்திருந்தாள் முல்லை.
கையிலிருந்த உடைகளும் லேசாய் நனைந்துவிட்டிருக்க அதனை மழை விழாத இடத்தில் கட்டியிருந்த கொடியில் உலர்த்த போட்டாள்.
“அப்பவே எடுத்திருந்தா உள்ள கொண்டு போய் மடிச்சிருக்கலாம். ப்ச்…” என நொந்துகொண்டே காற்றில் பறந்துவிடாமல் கிளிப்களை மாட்டிவிட்டாள்.
“என்னை குளிக்க சொல்லிட்டு இங்க நீ தனியா குளிச்சிருக்க போல?…” என்றவன் சத்தத்தில் முல்லை திரும்பவே இல்லை.
“நான் எடுக்கமுன்ன மழை வந்துருச்சு. அதான் இந்த ஷெட்க்குள்ள உள்ள காய போடறேன். காலையில் காத்துக்கே உலர்ந்துடும்…”
“ஹ்ம்ம், ஓகே நான் ஹெல்ப் பன்றேன்…” என அவளை ஒட்டிக்கொண்டு வந்து நின்றவன்,
“கிளிப் தா…” என்றான் அவளின் கை பிடித்து.
அவஸ்தை தீயை அவளுக்கு பற்ற வைக்க எண்ணி தீண்டியவனை மொத்தமாய் சுருட்டிக்கொண்டது அந்த ஜுவாலை.