“ஸோ வாட்? வா வா…” என படியில் அவளுடன் நிற்க மழையின் வேகத்தில் ஆற்று நீரின் வேகமும் சேர்ந்துகொள்ள விழுந்த மழை துளிகளும் அதனோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.
படித்துறையை ஒட்டியிருந்த மரங்களின் கிளைகள் ஓடும் நீரை தொடுவதும் காற்றில் விலகுவதுமாய் இருக்க அர்னவ்வின் கைகள் முல்லையின் கழுத்தை சுற்றிக்கொண்டு அவளை அவனின் நெஞ்சோடு அணைத்து பிடித்தது.
உச்சந்தலையில் பட்டு தெறித்து உள்ளங்கால்கள் வரை மெய்யை நனைத்து பாதம் கடந்து கீழே செல்லும் மழைமகளின் சில்லிடல் உள்ளுக்குள் தகிக்க வைத்தது.
“ப்யூட்டிஃபுல்…” என்றவன் மூச்சுக்காற்றின் வெப்பம் அவளின் குளிர்ந்த கன்னத்தை பதம் பார்க்க,
“விடுங்க, எனக்கு குளிருது…” என்று அவனின் கையை விலக்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் முல்லை.
அவனின் செயலினால் உண்டான நடுக்கமா? குளிரின் நடுக்கமா? பிரித்தறிய முடியாமல் அவர்கள் அறைக்குள் சென்றுவிட்டாள்.
வழமை போல கதவை பூட்டிவிட்டு குளித்து வேறு உடைக்கு மாற்றிவிட்டு வந்து கதவை திறக்க அர்னவ் வெளியே மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
நன்றாக இருட்டிவிட்டிருந்தது. வீட்டின் அனைத்து இடத்திலும் வெளிச்சம் பரவியிருக்க,
“லேட் பண்ணிட்டேனா? நீங்க போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. நான் கீழே சமைக்கறேன்…” என்றவள் நிமிர்ந்தும் பாராமல் இறங்கி சென்றுவிட அர்னவ்வின் முகத்தில் கள்ளப்புன்னகை.
“எவ்வளோ நேரம் ஓடுவ நீ?…” என்றபடி தானும் தயாராகி கீழே வர மொபைலில் யாருக்கோ அழைத்துக்கொண்டிருந்தாள் முல்லை.
“என்ன பன்ற முல்லை?…” என அவள் எதிரே வந்து நின்றான்.
“அத்தைக்கு தான் கூப்பிடறேன். நைட் என்ன செய்யலாம்ன்னு கேட்க. அவங்களுக்கு ரீச்சாகலை. இங்க மழைக்கு சிக்னல் சரியா கிடைக்கலை…” என சொல்லிகொண்டே கலைவாணனுக்கும் அழைத்தாள்.
“ஏன் சொல்லிட்டு தானே போயிருப்பாங்க அம்மா?…” என கிட்சனுக்குள் அர்னவ் நுழைய சட்டென வீடு மொத்தமும் இருளில் மூழ்கியது.
“கரண்ட் போயிருச்சே…” என அவனோடு வந்தவள் மெழுகுவர்த்தியை தேடினாள்.
“ஏன் சார்ஜ் லைட் இருக்குமே முல்லை?…”
“கீதா நேத்து தான் வாங்கிட்டு போனா. கொண்டு வரேன்னா. இன்னைக்கு மறந்திருப்பா போல?…” என்று இரண்டு பெரிய மெழுகுவர்த்திகளை ஏற்றினாள்.
“உங்களுக்கு நைட்க்கு என்ன செய்யட்டும்?…” என்றவாறு பாத்திரங்களை உருட்ட,
“ஏன் படபடன்னு நிக்கிற முல்லை? என்ன இருக்கோ அது போதும்…”
“ஹ்ம்ம், அத்தை மதியம் போறப்போ சமையல் எல்லாம் முடிச்சிருந்தாங்க. நைட்க்கு ரைஸ் மட்டும் வச்சுக்க சொன்னாங்க. மாவும் இருக்கு. தோசை செய்யட்டுமா?…” என கேட்டு கேட்டு இங்குமங்குமாய் நடந்தவளை அதற்கு மேல் முடியாமல் இழுத்து அணைத்தான் அர்னவ்.
“என்ன பண்ணிட்டிருக்க நீ? ஏன் இவ்வளோ டென்ஷன்?…” என தன் கைவளைவில் நிறுத்தி அர்னவ் கேட்கவும் என்ன பதில் சொல்ல முல்லை?
மொழியற்று அவள் விழித்ததில் அதுவரை இருந்த நிதனமெல்லாம் எங்கே என தேடும் நிலைக்கு தள்ளப்பட்டான் அர்னவ்.
“முல்லைமலர்…” என்றவன் அவளின் கன்னத்திலிருந்து காதோரம் வாசம் பிடிக்க உள்ளங்கால்களை தரையில் ஊன்றி நின்றாள் முல்லை.
“அட்ராக்ட்டிவ் முல்லைமலர்…” என்றவன் முத்தம் கண்களில் வெம்மை கூட்ட அதன் அழுத்தத்தில் அவன் மடியில் தலைகவிழ்ந்தாள்.
“அத்தை, மாமா எல்லாம் வந்திருவாங்க, ப்ளீஸ்…” என்று கெஞ்சல் குரலில்.
“வரமாட்டாங்க. கால் பண்ணி நீங்க உங்க நாத்தனாரை பார்த்துக்கோங்க. நான் என் பொண்டாட்டியை பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். அப்பாவையும் வர விடவேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அதனால அந்த கவலை எல்லாம் வேண்டாம் உனக்கு?…”
“அட கடவுளே?…” என திகைத்து அவனை நிமிர்ந்து பார்க்க,
“உன் அத்தையும் மாமாவும் வந்தாலும் எனக்கு நோ அப்ஜெக்ஷன். வந்துட்டு போகட்டும். அவங்க அவங்க ரூம்ல இருப்பாங்க. நாம இங்க…” என்றவன் விரல்கள் அவள் இடையை வளைக்க,
“இன்னும் நான் எதுவும் உங்களுக்கு பென், போட்டோ பத்தி சொல்லலையே. அதை தெரிஞ்சுக்கனும்…”
“முதல்ல உன்னை தெரிஞ்சுக்கறேன். அப்பறம் அது. எனக்கு தெரியாமே கூட இருக்கட்டும்…” அழுத்தம் குரலில் மட்டுமல்ல அவனின் பிடியிலும் கூட.
“கையை எடுங்க….” என்றாள் முல்லை.
“அதுக்கு நான் மலேஷியால இருந்து வரலையே முல்லை….” என உல்லாச குரலில் அவளோடு இழைந்தவனின் மொத்த ஆளுகைக்குள் முல்லை அக்கணம் நெகிழ்ந்திருந்தாள்.
“எக்ஸாம், கொஷின் பேப்பர், காலேஜ் எல்லாம் மறந்திரு. இப்ப இந்த நிமிஷம் நாம ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப். நமக்கான ப்ரீஷியஸ் மொமென்ட். பர்ஸ்ட் அன்ட் பர்ஸ்ட்…” என்றவன் பேச்சுக்கள் அவளை வசீகரிக்க மெல்ல கண் மூடினாள்.
“நல்ல நேரம் இதெல்லாம் பார்க்க வேண்டாமா?…”
“முல்லை எப்பவேணா மலரலாம். வாசம் தான் முக்கியம்?…” என்றவன்,
“இனி மடல் காகிதத்துல தான் எழுதனும்னு இல்லை முல்லை…” என்றவன் அவளில் எழுதி சிவக்க செய்து மொத்தமாய் அவளை தனக்குள் சுருட்டிக்கொண்டான் அர்னவ்.
பார்த்து, காத்திருந்து, தவித்து, தள்ளி நின்று கலைந்து சென்ற பொழுதுகள் எல்லாம் மோட்சமடைந்திருந்தது.
காதலின் இங்கித பார்வைகளையும் களைந்து கடந்துவிட்ட களவு நிலை அவர்களது.
களவாடலின் தாத்பரியம் கற்றுவித்தவனால் நாணத்தில் தீ பிடிக்க வியர்வை ஊற்றுகள் வெந்து தணியும் கனலை குளிர்விக்க முயன்று துளிகளும் கொதிக்க துவங்கியது.