அந்த மருத்துவமனையில் அன்னக்கிளியுடன் அமர்ந்திருந்தவள் தன் கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்தாள்.
“நமக்கு முன்னாடி இன்னும் மூணு பேர் தான் இருக்காங்க முல்லை. டயர்டா இருக்கா?…” என்றார் அன்னக்கிளி.
“அதெல்லாம் இல்லைத்தை. நாம வந்து எவ்வளோ நேரமாகிருக்குன்னு தான் பார்த்தேன்….” என்று சொல்ல,
“ஒரு முக்கால்மணி நேரமிருக்கும். சபரி அப்பவே சொன்னான் சீக்கிரம் கிளம்பி வாங்கன்னு. நான் தான் லேட் பண்ணிட்டேன்….” என்றார்.
“ப்ச், ஓகே அத்தை. அதனால என்ன? வீட்டுல சும்மா இருந்து போரடிக்கிறதுக்கு இங்க பரவாயில்லை. வேடிக்கையாச்சும் பார்க்கலாம்….” என சிரித்தாள்.
“சேட்டை தானே உனக்கு? நேத்து தான் எக்ஸாம் முடிச்சு ஊர் வந்து சேர்ந்திருக்க? அதுக்குள்ளே உனக்கு இங்க போரடிக்குதாமா?…” என்றவர்,
“வீட்டுக்கு எப்ப சொல்லலாம்ன்னு சொன்னான் உன் புருஷன்?…” என்று கேட்கவும் முல்லையின் முகம் சுருங்கியது.
“அவங்களா எப்ப சொல்ல சொல்றாங்களோ அப்ப…”
“கோவமா இருக்க போல? நல்லது தான். இல்லன்னா இந்த பையன் ரொம்ப ஆடுவான்…” என்னும் பொழுதே லேசாய் முல்லையின் விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.
“என்ன முல்லை? சந்தோஷமா இருக்கவேண்டிய நேரம். கண்ணை கசக்கிக்கிட்டு? அதுவும் பொது இடத்துல வச்சு. ப்ச், சும்மாயிரு…” என அதட்டினார் அன்னக்கிளி.
“பின்ன என்னத்தை, ரெண்டுநாள் அம்மா வீட்டுல இருந்துட்டு வரேன்னு சொன்னா கேட்கவே இல்லை. கிளம்பு இன்னொருதடவை வரலாம்ன்னு கூட்டிட்டு வந்துட்டார்…” கணவன் மீது புகார் கூற,
“அவன் உன்னை விட்டு இருக்கமாட்டாம தான கூட்டிட்டு வந்தான். அதுவும் உன் அம்மாவும், அண்ணனும் சொல்லி தானே அனுப்பியிருக்காங்க….” அன்னக்கிளி மகனுக்காக பேச அவரை பாவமாய் பார்த்தாள் முல்லை.
“அதெல்லாம் இல்லை. உங்க மகன் ரொம்ப விவரம், எங்க என்கிட்ட சொல்லி நான் கேட்கமாட்டேனோன்னு தான் இப்படி முன்னாடியே அம்மாக்கிட்ட அண்ணன்கிட்ட பேசி அவங்களையே என்னை போன்னு சொல்ல வச்சிட்டாங்க….”
“தப்பு தான். அதான் உன்னை இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கான் தானே? போய்ட்டு வரலாம்டா. இப்ப நீ சந்தோஷமா இரு…” என்றார் அவளின் கையை பிடித்துக்கொண்டு.
“இந்த மாதிரி நேரத்துல ரொம்ப ட்ராவல் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க பாருங்க…” என்றாள்.
“அதெல்லாம் சொல்லமாட்டான். அவன் சொன்னா செய்வான்…” அன்னக்கிளியும் விட்டுத்தரவில்லை மகனை.
‘ம்க்கும், இவங்க பிள்ளை நினைச்சதை எல்லாம் சத்தமில்லாம சாதிக்கிறார். இதுல நான் சந்தோஷமா வேற இருக்கனுமா?’ என உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருந்தாள்.
இறுதி பரீட்சைக்கு முதல் நாள் பார்க்க வந்தவன் வெளியில் அழைத்து சென்று என்று சிறுபிள்ளைக்கு மிட்டாய் காண்பித்து ஏமாற்றுவதை போல ஏமாற்றி மறுநாள் வீட்டினரை வரவழைத்து அங்கிருந்தே தன்னை அழைத்து வந்ததை ஏற்கவே முடியவில்லை.
இரண்டு நாள் மட்டும் தன் வீட்டில் இருந்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்ற வழியில் கேட்டும் விட எல்லாவற்றிற்கும் புன்னகை மட்டுமே அவனிடத்தில்.
அவ்வப்போது தன்னை பார்ப்பதும், சிரிப்பதும், கன்னத்தை கிள்ளுவதும் என்று புதிதாய் இருந்தது அவனின் செயல்கள்.
நள்ளிரவில் பெங்களூர் வந்து சேர்ந்திருக்க தனக்கு முன்பே அங்கே அன்னக்கிளி வந்திருந்தார்.
அந்த நேரம் பெரிதாய் பேசாமல் அறைக்குள் சென்று பயண அலுப்பில் உறங்கிவிட காலையில் அவன் சொல்லியதை கேட்டு மயக்கம் வராத குறை தான் முல்லைக்கு.
“இப்படி வேலைக்கு போகத்தான் என்னை இவ்வளோ அவசரமா கூட்டிட்டு வந்தீங்களா?…” என அதுவரை பேசாமல் இருந்ததை விடுத்து அவன் கிளம்பியதை கண்டு கோபமாய் கேட்கவும்,
“நான் நல்லா தான் இருக்கேன். எக்ஸாம் டைம் சரியா தூங்கலை. நேத்தும் ஃபுல்லா ட்ரைவிங்ல டயர்ட். அவ்வளோ தான். இதுக்கேன் செக்கப்?…”
“கங்க்ராட்ஸ் முல்லை. பேரன்டிங் போஸ்ட்டிங்க்கு ரெடியாகிட்டோம் நாம. ஸோ…” என்றவன் அவள் விழிகள் விரிந்ததை கண்டு சின்ன சிரிப்போடு,
“ஓகே டைமாகிருச்சு. நான் முன்னாடி போறேன். நான் சொன்ன டைம்க்கு ஹாஸ்பிட்டல் வந்திரு. அம்மாட்ட சொல்லிட்டு போறேன். அப்பறம் பேசலாம்…” என்று சொல்லியவன் தந்த முத்தத்தை கூட உணர முடியவில்லை.
சில நொடிகளில் அன்னக்கிளி வந்து முகத்தை வழித்து நெட்டிமுறித்து கொஞ்சி சிரிக்க அப்போதும் திகைத்த நிலையில் தான் முல்லை.
‘இதென்ன சப்புன்னு சொல்றாங்க? எனக்கே தெரியலையே?’ என தன் வயிற்றை தொட்டு பார்த்தவள் ஹாலிலிருந்து தன்னை பார்த்துக்கொண்டிருந்த அர்னவ்வின் பாவனையில் இன்னும் திகைத்தாள்.
இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை அன்னக்கிளி காணாமல் அனுப்பியவன் கையசைத்துவிட்டு சின்ன வெள்ளை துணியால் கண்ணாடியை துடைத்து கண்களில் போட்டுக்கொண்டே கிளம்பிவிட்டான்.
முல்லை வாய்விட்டே மெல்லிய குரலில் புலம்ப அன்னக்கிளி காதில் விழுந்தாலும் கேளாதவர் போல அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.
“அத்தை நாம வேற லேடி டாக்டர்கிட்ட பார்ப்போமா? இங்கயே பார்ப்போமே?…” அர்னவ் மீதான கோபத்தில் அவள் சொல்ல அன்னக்கிளிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“என்னடாம்மா பேசற நீ? நாம அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கறதே சபரிக்கிட்ட தான். எப்படி வேற பார்க்க முடியும்?…”
“அது தான உங்க புள்ளையோட ப்ளான். நாம ஒன்னும் வாங்கலை. அவர் தான் வாங்கிருக்கார். சட்டையும் என்னிது, மாப்பிள்ளையும் நான்னு…” என சொல்லி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
“உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையில என்னை இழுக்காத. என்னவும் பண்ணு. ஆனா இப்ப டென்ஷனாகாத முல்லை. செக்கப் முடியட்டும். வீட்டுக்கு போய்ட்டு அந்த படவா வரவும் நான் கேட்கறேன்…” என்றார் மருமகளுக்கு ஆதரவாக.
“ஸாரி அத்தை….” என அவர் என்ன நினைப்பாரோ என்று சங்கடத்துடன் பார்க்க,
“விடு விடு. அவன் பிள்ளையாவும் அராஜகம் தான் பன்றான். நினைச்சா வான்றான். நினைச்சா போன்றான்….” என்றவர்,
“ஆனா இப்ப தான் இவ்வளோ பன்றான். முன்னை எல்லாம் சமத்து தான்…”
“அப்ப என்னை கல்யாணம் செஞ்ச பின்னாடி தான் இப்படி மாறிட்டாரா?…” சுண்டிப்போன முகத்துடன் முல்லை கேட்டதும் கஷ்டமாகி போனது அன்னக்கிளிக்கு.
“சின்ன பிள்ளையாட்டம் இன்னும் பழசையே நினைக்காத முல்லை. கல்யாணம் எப்படியும் நடந்திருக்கட்டும். அதையே நினைச்சு நம்மளை இப்படித்தான் இதுக்கு தான் சொல்றாங்களோன்னு நீயா உன்னை வருத்திக்காத. அவ்வளோ தான் சொல்லுவேன்…” என்றதும் மௌனமாகிவிட்டாள் முல்லை.
“சரி புரியுது. அதுவும் இந்தமாதிரி நேரம் எல்லா டென்ஷனும் இருக்கும் தான். உன்னோட இருக்கனும்னு ஆசைப்பட்டு தானே கூட்டிட்டு வந்திருக்கான். இல்லைன்னு சொல்ல முடியுமா உனக்கு?…” என்றதும்,
“அப்படியெல்லாம் சொல்லலை த்தை…” என வேகமாய் மறுத்தாள்.
“ஹ்ம்ம், அப்பறமென்ன? சரி உனக்கு அவனோட சேர்ந்து இருக்கறது கஷ்டமா இருக்கா?…”
“அச்சோ என்ன நீங்க? அப்படி சொல்லவே இல்லை நான். அவசரமா உடனே இங்க வரனுமான்னு தான். வேறொண்ணுமில்லை…” என்றாள்.
“ஒருவேளை உங்க கல்யாணம் நாங்க பேசி வச்சு நடந்திருந்தா நடந்தப்பவே நீ அவனோட தான் இருந்திருப்ப? அப்படி நினைச்சுக்கோ…” என்றதும் தன்னுடைய எண்ணம் அதிகப்படி என்று தோன்றினாலும் சிறு சுணக்கம் மனதில் இருக்கத்தான் செய்தது.
தான் தான் அதிகமாய் வேறு விதமாய் நினைக்கிறோமோ என தன்னையே நிந்தித்து கொண்டாலும் மனது குரங்காய் தாவியது பிறந்த வீட்டின் பக்கம்.
எத்தனை ஆசையாய் இருந்தார் ஞானம். பரீட்சை முடிந்து அவர்கள் வீட்டில் வைத்து இருவரையும் இரண்டு, மூன்று நாட்கள் இருக்க வைத்து விருந்து வைத்து அனுப்பவேண்டும் என்று நினைத்திருக்க அர்னவ்வின் முடிவில் எல்லாம் மாறியது.
ஒவ்வொருமுறையும் அர்னவ் மாமியார் வீடு என்று பெரிதாய் அங்கே தங்கியது இல்லை.
அதனை நினைத்து வீட்டினர் வருந்தியிருப்பார்களோ என்றொருபக்கம் யோசித்துக்கொண்டிருக்க,
“முல்லைமலர்…” என்று அவளின் பெயர் அழைக்கப்பட்டது.
“இதோ கூப்பிட்டுட்டாங்க. வா. முகத்தை நல்லா சிரிச்ச மாதிரி வச்சுக்க…” என்று அன்னக்கிளி சொல்லிக்கொண்டே அவளை அழைத்து செல்ல அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.
முதலில் ஒரு தடுப்பும் அதனை தாண்டி டேபிள் இருக்க அர்னவ் அவனிருக்கையில் அமர்ந்திருந்தான் வெள்ளைநிற கோட்டில்.
“உட்காருங்க…” என இருவரையும் நிமிர்ந்து பார்த்து சொல்லிவிட்டு மேஜையில் எழுதிகொண்டிருந்தான்.
அருகிலேயே ப்ரிஸ்க்ரிப்ஷன் பேட் இருக்க முல்லை அதையும், அவனையுமே மாறி மாறி பார்த்தாள்.
சட்டென இமை உயர்த்தி மனைவியை ஏறிட்டவன் பார்வையில் விழிகளை வேறு திக்கில் அவள் செலுத்த,
“புனிதா இந்த பைலை அந்த பேஷன்ட் கிட்ட குடுத்திருங்க. ஸ்கேனிங் ரிப்போர்ட் வரவும் பைலோட சேர்த்திடுங்க…” என்று சொல்ல,
“ஓகே டாக்டர்…” என்று வாங்கிக்கொண்டாள் புனிதா.
கையிலிருந்த பேனாவை மூடி வைத்துவிட்டு எதிரிருந்தவர்களை பார்த்தவன் புனிதா அங்கேயே நிற்க கண்டு,