அவர்கள் சென்றதும் அர்னவ்வும் ரவுண்ட்ஸ் கிளம்பியிருந்தான். மாலை வீடு செல்லும் நேரம் ரிப்போர்ட்ஸ் பைலை எடுத்துக்கொண்டு கிளம்பியவன் வழியில் இனிப்பை வாங்கிக்கொண்டு சென்றான்.
“ம்மா….” என்றவன் கிட்சனுக்குள் எட்டி பார்க்க அவர் அல்வாவை கிளறிக்கொண்டு இருந்தார்.
“நானும் ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கேன்….” என்று சொல்ல,
“அதை அப்படியே வை. நான் ஊருக்கு கொண்டு போறேன். இதை சாப்பிடுங்க….” என்றவர்,
“முல்லைக்கு செக்கப் பண்ணின டாக்டர் ஹெல்தியான சாப்பாடா குடுக்க சொல்லியிருக்கார். அதான் வீட்டுலையே பன்றேன்…” என கிண்டலாக சொல்ல காதை நீவியபடி சிரிப்போடு பார்த்தான் அவரை.
“ஆனாலும் அங்க ரொம்பத்தான் நீ பண்ணின சபரி. முல்லை ரொம்ப கஷ்டமாகிட்டா. உனக்கு தான் தெரியுமே உறுதியா. அப்பறம் ஏன் அவங்க வீட்டுக்கு இன்னும் சொல்லவிடலை?…”
“ம்மா, புரிஞ்சு தான் பேசறீங்களா? எனக்கு தெரியும் தான். இருந்தாலும் ப்ராப்பர் செக்கப் பண்ணி தெரிஞ்சிட்டு சொல்லலாம்ன்னு சொன்னது தப்பா?…” என்றவன் கையிலிருந்த கோட்டை மிஷினில் போட்டவன்,
“குளிச்சிட்டு வரேன்…” என்று நகர்ந்தான்.
“முல்லை தூங்கறாடா. எழுப்பிடாத. கொஞ்சம் முன்ன தான் போய் படுத்தா…” என சொல்லிவிட்டு வேலையை பார்க்க திரும்பிக்கொண்டார்.
அறைக்குள் நுழைந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு குளிக்க சென்றுவிட்டான்.
திரும்பி வரும் பொழுதும் அவள் உறக்கத்தில் இருக்க தொந்தரவு செய்யாமல் வெளியே வந்துவிட்டான்.
“ம்மா, வாங்க அவங்களுக்கு சொல்லலாம்….” என்று தாயை அழைத்தவன் போனை எடுக்க,
“அட இரேன் சபரி. முல்லையும் வரட்டும்…” என அவனை அடக்கி வைத்தார்.
முல்லை எழ எட்டு மணியானது. அதற்குள் இரவு உணவை செய்துவைத்துவிட்டு அன்னக்கிளி கிளம்பியிருந்தார் ஊர் செல்வதற்கு.
இருக்க சொல்லியதற்கும் அந்த வாரத்தின் இறுதி நாள் வருவதாக சொல்லி கிளம்பிவிட்டார்.
அவர் இருக்கையிலேயே முல்லையின் வீடு, அருந்ததி என்றழைத்து சொல்லியிருந்தனர் குழந்தை விஷயத்தை.
அத்தனை சந்தோஷம் அவர்களுக்கு. ஞானத்திற்கு மகளை தன்னுடன் வைத்து பார்த்து தன் கையால் செய்து போடவேண்டும் என்று அத்தனை ஆசை.
மறுநாளே கிளம்பலாம் என்று ஞானம் கேட்க உஷா முடியாதென மறுத்துவிட்டாள்.
“அவங்களே இப்பத்தான் ஒண்ணா இருக்காங்க. கொஞ்ச நாள் போகட்டும். வேணும்னா உங்க பையனுக்கு ரெண்டுநாள் லீவ்ல போய் பார்த்துட்டு வருவோம். எப்படியும் வளைகாப்பு போட்டு இங்க தானே வருவா. அப்ப வச்சு சீராட்டலாம்….” என்று சொல்லிவிட்டாள்.
இங்கே பேசி முடித்ததும் அன்னக்கிளி கிளம்ப அவரை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வருவதாய் சொல்லி அர்னவ்வும் கிளம்பினான்.
தனியே யாருமற்று அந்த வீடு. தனது நோட்பேடை எடுத்துக்கொண்டு அவர்கள் அறையில் சென்று அமர்ந்துகொண்டாள் முல்லை.
மனம் போன போக்கில் அவளுக்கு தோன்றியவை எல்லாம் வரைய ஆரம்பித்தாள் அடுத்த நோட்பேட் பிரிண்ட் செய்ய கொடுப்பதற்கான வரைபடத்தை.
நேரம் கடந்திருக்க அருந்ததியிடமிருந்து அழைப்பு. வீடியோ காலில் அழைத்திருந்தாள்.
எடுத்ததும் அருந்ததியின் பிள்ளைகள் மாற்றி மாற்றி பேச, இடையில் அருந்ததியின் கணவன் சுதாகரனும் வந்து வாழ்த்திவிட்டு செல்ல நேரம் சென்றது.
நேரம் சென்று தான் மீண்டும் போன் அருந்ததியின் கையில் வர வாங்கிகொண்டவள்,
“இவங்களை வச்சிக்கிட்டு முடியுதா பாரு?…” என அலுத்துக்கொண்டே,
“அம்மா கிளம்பிட்டாங்களா முல்லை?…” என்று ஆரம்பித்தாள்.
“ஆமா ண்ணி, எதுவும் சொல்லனுமா?…”
“அதெல்லாம் இல்லை முல்லை. அம்மா தான் நீ தனியா இருப்ப. வெறுக்குன்னு இருக்கும் உனக்குன்னு கால் பண்ணி என்னை பேசிட்டிருக்க சொன்னாங்க…” என்றதும் முல்லையின் முகத்தில் நிறைவு.
“தனியா இருக்க என்னவோ போல இருக்கா முல்லை?…” என அருந்ததி கேட்க,
“ஹ்ம்ம், ஆமாண்ணி. கொஞ்சம் கஷடம் தான். ஆனா பழகிடும்…” என்றாள் சோர்வுடன்.
“குட்…” என அருந்ததி சொல்லும் பொழுதே அவ்வப்போது முல்லை பேசுகையில் அவள் கையில் வைத்திருந்ததில் தான் அருந்ததி கவனம் சென்றது.
‘இது எப்படி முல்லையிடம்?’ என யோசித்துக்கொண்டே பார்த்தவள் ‘அந்த பேனா இல்லையோ?’ என்றும் நினைத்து,
“முல்லை அந்த பென்னை காமி….” என்றதும் முல்லைக்கு சாதாரணமாக தான் தோன்றியது.
“அவங்க பென் தான் அண்ணி…” என சொல்லியும்விட்டு அதனை நன்றாக காண்பிக்க அதுவே தான்.
AS என்ற குறியீட்டுடன் அந்த பேனா மின்ன பார்த்ததுமே தெரிந்துபோனது அருந்ததிக்கு அது அர்னவ்விற்கு தன் தந்தை பரிசளித்த பென் என்று.
“இந்த பேனா உன்கிட்ட எப்படி முல்லை?…” என்றாள் அருந்ததி.
“அவங்களோடது தான் அண்ணி…” என முல்லை அருந்ததியின் யோசனையான கேள்வியில் தடுமாறி பதில் சொல்ல,
“அவனோடது தான். ஆனா உன்கிட்ட எப்படின்னு கேட்டேன்…” என்றவள்,
“இந்த பென்னை எப்பவோ அர்னவ் தொலைச்சிட்டான்னு தெரியும். இத்தனை வருஷம் கழிச்சு இப்ப உன்கிட்ட? அதான் கேட்டேன்…” என்று கேட்க முல்லை தான் சொன்னால் என்ன நினைப்பாரோ என்று பார்த்தாள்.
“முல்லை உன்கிட்ட தான் கேட்டேன்…” என்ற அருந்ததி தனியறைக்கு வந்துவிட்டு,
“நான் தனியா வந்துட்டேன். சொல்லு. ஏன் நான் கேட்டதும் உன் முகமே மாறிடுச்சு?…” என்றாள்.
“அறிமுகம் தான். பழக்கம்ன்னு பெருசா இல்லை. சொல்ல போனா ரெண்டு நாள் தான் பார்த்திருப்போம்…”
“புரியலை முல்லை….”
“நாங்க ஸ்கூல் ப்ரோக்ராம்க்காக வேளாங்கண்ணி போய்ட்டு ஸ்கூல் பஸ்ல ரிட்டர்ன் வந்திட்டிருந்தோம். வந்திட்டிருந்த வழில ஏதோ ப்ராப்ளம். ரூட் மாத்திவிட்டாங்கன்னு ஒரு ஊருப்பக்கம் போனா அங்க வரைக்கும் கலவரம்…”
“அப்பறம்?…” அருந்ததி சீரியஸாக,
“பிரச்சனை பெருசுன்னு அங்க உள்ள ஸ்கூல்ல தான் நாங்க தங்கினோம். அந்த ஸ்கூல்ல அந்த ஊருக்கு மெடிக்கல் கேம்ப் போட வந்திருந்த ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ்ல உங்க தம்பியும் ஒருத்தர். அங்க வச்சு தான் அவங்களை பார்த்தேன்…”
“ஹ்ம்ம்…” அருந்ததியின் துளைக்கும் பார்வை அவளை இன்னுமே சங்கடப்படுத்தியது.
“பார்த்தேன்னா நீங்க நினைக்கிற மாதிரி இல்லைண்ணி. ஜஸ்ட் அவரோட ஹெல்ப்பிங் மைண்ட், சாஃப்ட் டைப். வர பேஷண்டை எவ்வளோ நல்ல பொறுமையா பார்க்காங்கன்னு ஒரு இன்ஸ்பரேஷன். அவ்வளோ தான். ஊரை விட்டு வெளில போக முடியாத சூழ்நிலை. சுத்திலும் போலீஸ்ன்னு அங்கயே இருக்க வேண்டிய கட்டாயம்…” என்றவள்,
“அப்போ எங்க ஸ்கூல் டீச்சர்ஸ், ஸ்டூடன்ட்ஸ் கூட கேம்ப்க்கு எங்களால முடிஞ்ச ஹெல்ப்பை பண்ணினோம். அப்படித்தான் தெரியும். அன்னைக்கு எங்க மேம் அங்க பழக்கமான ஒரு டாக்டர் நம்பரை எழுத சொல்லி சொல்லவும் பேனா இல்லாம இருக்குன்னு உங்க தம்பி தான் தந்தாங்க…”
“ஓஹ்…” அருந்ததி சுவாரசியமாக கதை கேட்க,
“எழுத வாங்கினவ அப்படியே மறந்து போய் என் பேக்ல போட்டுட்டேன். உங்க தம்பியும் கேட்கலை. அவங்களும் கிளம்பறதா இருந்தாங்க. அங்க வச்சு எல்லாரோடையும் போட்டோ கூட எடுத்துக்கிட்டோம். அவங்க கிளம்பிட்டாங்க…”
“எங்க அந்த போட்டோ?…” என அருந்ததி கேட்க,
“அண்ணி நிஜமா இதுதான் கதை. எனக்கு கூட அந்த கேம்ப்ல கலந்துட்டு மெடிக்கல் படிக்கனும்னு ஆசை. ஆனா வீட்டு சூழ்நிலை, என்னோட மார்க்ஸ் எல்லாம் அதுக்கு ஒத்து வரலை….” என்றாள் மெதுவாய்.
“போட்டோ எங்கன்னு கேட்டேன் முல்லை…” என்றதும் அதனை எடுத்து வந்து முல்லை காண்பிக்க,
“ஹ்ம்ம், அப்பவே உங்க ரெண்டுபேருக்குன்னு தான் இருந்திருக்கு பார். ஆனாலும் இத்தனை வருஷம் நீ பத்திரமா வச்சிருக்கறது எங்கையோ இடிக்குதே?…” என கிண்டல் வேறு செய்ய,
“அண்ணி ப்ளீஸ்…” என்றாள் முல்லை கெஞ்சலுடன்.
“விட்டா அழுதுடுவ போல? பொழைச்சு போ. என்னவோ என் தம்பி குடுத்ததை இவ்வளோ நாள் பத்திரமா வச்சிருக்கறதால விடறேன்…” என்ற அருந்ததி,
“ஆமா அவனுக்கு இது தெரியுமா? ஒருவார்த்தை என்கிட்ட சொல்லலையே. எங்கப்பா அவ்வளோ ஆசையா அவன் டென்த்ல ஸ்டேட் பர்ஸ்ட் வந்ததுக்கு வாங்கி தந்த பேனா அது. அவ்வளோ ஸ்பெஷல். யாரையும் அதுல எழுதவிடவே மாட்டான்….” என்றாள்.
“எனக்கு தெரியாது அண்ணி. அன்னைக்கு ஏதோ அவசரத்துல அப்படி கொண்டு போய்ட்டேன். இப்படியெல்லாம் ஆகும்ன்னு தெரியாது. அவங்களுக்கும் இந்த விஷயம் தெரியாது…”
“ஏன் இன்னுமா சொல்லலை நீ?…” அருந்ததி கேட்க,
“நான் சொல்ல வந்தா கேட்கவே மாட்டேன்றாங்க. இது என்கிட்ட இருக்கறது மட்டும் தெரியும். ஏன் எதுக்குன்னு கேட்கலை அண்ணி…”
“ஹ்ம்ம், தெரியுமே. நான் தான் அப்பப்ப போட்டோவை எடுத்து பார்த்திருக்கறேனே. போட்டோல இருந்ததுக்கும், நேர்ல பார்த்ததுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்…” என்று வேறு உளற,
“டவுட் இல்லைன்னாலும் உன் பேச்சுல டவுட் வருதே முல்லை. என்ன பண்ண சொல்ற?…” அருந்ததி சிரித்துவிட்டாள்.
“சத்தியமா முன்னாடி லவ் எல்லாம் அண்ணி. ப்ராமிஸ், நம்புங்க. அப்ப அப்படி நினைக்கவே இல்லை. நிஜமா…” என முல்லை வேகமாய் சொல்ல,
“அப்ப இல்லை. அப்ப இப்ப இருக்கா?…”
“இப்ப இருக்கு தான். அப்ப இல்லவே இல்லை. ஜஸ்ட் ஒரு நல்ல அபிப்ராயம் இவங்க எவ்வளோ நல்லவங்கன்னு…”
“நம்பிட்டேன்…” என்று அருந்ததி முல்லையை கிண்டல் பேச,
“நீங்களே இப்படி நினைக்கறீங்க. உங்க தம்பிக்கு தெரிஞ்சா…” என லேசாய் விசும்ப ஆரம்பிக்க,
“முல்லை என்னடா இது? ப்ச், இதுக்கு போய் பயப்படலாமா? அவன் கேட்டா சும்மா தைரியமா ஆமான்னு சொல்லு. என்ன செஞ்சிருவான்னு பார்ப்போம். நான் இருக்கேன்ல?…” என்று சொல்ல,
“இப்படித்தான் அத்தையும் சொன்னாங்க. அப்பறம் ஹாஸ்பிட்டல்ல மாட்டி விட்டுட்டாங்க…” என்றவள் அருந்ததி என்னவென கேட்டதும் எல்லாம் சொல்ல அப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு.
“சரி அதுக்கேன் இவ்வளோ பயப்படற? என் தம்பி அவ்வளோ படுத்தறானா என்ன?…”
“பயம்ன்னு இல்லை. ஆனாலும் லைட்டா…” என்று சொல்ல,
“ஆமா, ரொம்ப பயந்தவ தான் நீ…” என்ற குரலில் முல்லை திடுக்கிட்டு பார்க்க அங்கே அர்னவ் மேஜையின் மேல் அமர்ந்திருந்தான்.
ஒற்றை காலை தொங்கப்போட்டு இன்னொரு காலை தரையில் ஊன்றியபடி அமர்ந்திருந்தவன் முல்லையின் பார்வையில் தன் கண்ணாடியை கழட்டிவிட்டு போனுக்கு கை நீட்டினான்.
“எப்போ வந்தீங்க?…” என்றபடி மொபைலை தர,
“என்னக்கா உனக்கு தூக்கம் வரலையா? போய் பிள்ளைங்களை பாரு. நாளைக்கு பேசு. குட்நைட்…” என்று சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டு முல்லையின் பக்கம் திரும்பினான்.
“ஹ்ம்ம், இப்ப நாம பேசலாமா?…” என்று அவன் கேட்ட விதமே ஏடாகூடமாய் இருக்க,
“எனக்கு தூக்கம் வருது…” என்று நகர போனவளை இழுத்து அணைத்திருந்தான் அர்னவ் சபரிவாசன்.