காரில் அவன் சேகரித்திருந்த தொகுப்பிலிருந்து பாடலை ஒலிக்கவிட்டவன் மெல்லிய விசிலுடன் பாடலுடன் இணைந்தான்.
காருக்குள் எஸ்பிபி தன் மாய குரலில் குழைந்துகொண்டிருக்க லாவகமாய் வாகனத்தை செலுத்தினாலும் அதில் வேகமே மிதமிஞ்சியது.
அவனின் ரசனையும் அவ்வப்போது தன் மீது படிந்து மீளும் பார்வையும் என முல்லையை அவன் வசம் இழுத்து கட்டியது.
எப்போதும் அவன் உதட்டில் உறைந்திருக்கும் அந்த புன்னகையும், அமைதியும் இன்னுமே அவளை கவர உள்ளுக்குள் துள்ளும் மனதுடன் பாபநாசம் நோக்கி ஜில்லென்று ஒரு பயணம்.