அவள் பார்வையையும், திடுக்கிடலையும் கவனித்தாலும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை அர்னவ்.
உள்ளே சென்று இலகுவாய் ஒரு சாதாரண வேஷ்டி, டிஷர்ட்டில் வர வித்தியாசமாய் இருந்தது.
“பார்த்தாச்சா?…” என அவளுக்கெதிரிருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டான் அர்னவ்.
மார்போடு அனைத்து பிடித்திருந்த புகைப்படத்தை இன்னுமே அவள் பார்க்கவில்லையே. ஆனால் அவன் கேட்டதும்,
“ஹ்ம்ம், பார்த்துட்டேன்…” என்றாள்.
“இனிப்பான பொய்க்கு கசப்பான உண்மை எவ்வளவோ பெட்டர்…” அர்னவ் சொல்லவும் எதற்கென்று புரியாமல் அவள் திகைக்க,
“சின்ன சின்ன விஷயத்துக்கும் மாத்தி பேசாம நிஜத்தை சொன்னா தான் நம்மோட லைஃப்க்கு சரின்னு தோணுது. நான் பாத்ரூம் போனப்ப இருந்த நீ இன்னுமே அதே மாதிரி தான் இருக்க. போட்டோவை பார்க்கவே இல்லையே…”
“நீங்க மாட்டறதுக்கு கேட்டீங்கன்னு நினைச்சேன்…” என்றவள் மீண்டும் அதனை குனிந்து பார்த்தாள்.
எத்தனை நேரம் அதையே பார்த்திருந்தாளோ? கீழே பேச்சுக்குரல் மாடிக்கு வருவதை போலிருக்க இருவருமே வாசலை பார்த்தனர்.
“சபரி…” அன்னக்கிளி அழைத்ததும்,
“வாங்கம்மா…” என்று எழுந்தான்.
உடன் முல்லையும் எழுந்து நிற்க அன்னக்கிளியும், அவருடன் இன்னும் நான்குபேரும் இருந்தனர்.
“சபரி வெளில வாப்பா…” அன்னக்கிளி உள்ளே வரவில்லை.
“உள்ள வரவேண்டியது தானே?…” என அறையின் வாசலில் சென்று நிற்க வனிதா, மாலதி உடன் இன்னும் நெருங்கிய உறவினர் இருவர் என்று வந்திருந்தனர்.
“முல்லையை கூப்பிடு…” என்னும் பொழுதே அவளும் வந்துவிட்டாள்.
“கையில என்னது? போட்டோவா?…” மாலதி கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” முல்லை தலையசைத்து பதில் கூறினாள்.
“கொண்டா பார்ப்போம்…” முல்லை தரும் முன்பே மாலதி பிடுங்குவதை போல வாங்கிக்கொள்ள அன்னக்கிளியும், அர்னவ்வும் எரிச்சலுடன் பார்த்தனர்.
அவன் கேட்டதுமே மாலதி சட்டென நீட்டிவிட அதை கொண்டுசென்று அதனிடத்தில் மாட்டிவிட்டு வந்தவன்,
“சொல்லுங்கம்மா உள்ள வந்து பேச வேண்டியது தானே?…” என்றான்.
“இல்லப்பா அப்பா உன்கிட்ட பேசனும்னு சொன்னார். அதான்….” அன்னக்கிளி சொல்லி முடிக்கும் முன்,
“நைட்டுக்கு விசேஷம் வச்சிருக்கு சபரி. அதை சொல்லத்தான் கூப்பிடறாங்க…” என போட்டுடைத்த மாலதி,
“ஆமா கல்யாண சேலை கூட இல்லையே. என்ன பண்ணுவீங்க?…” என்றார் இளக்காரம் ததும்பும் குரலில்.
“மாலதி…” அன்னக்கிளி அதட்டினார்.
“உள்ளத தான சொன்னேன்? இவளுக்கு தான் அப்படி எதுவும் இல்லையே. இன்னிக்கு என்ன செய்வீங்கன்னு கேட்டேன். வேற மாத்து சேலை பட்டு எதுவும் புதுசு இருக்கான்னு யோசிக்கனும்ல…” என்ற மாலதி,
“நான் வேற இன்னும் இவங்களுக்கு சம்மதமான்னே கேட்காம…” என்று எள்ளலுடன் சொல்ல,
“புதுசு வேணும்னா நான் போய் எடுத்துட்டு வரேன். இது ஒரு விஷயமா?…” அர்னவ் பட்டென்று கேட்கவும் மாலதி முகத்தில் ஈயாடவில்லை.
“உனக்கு என்ன கலர் வேணும் முல்லை? பக்கம் தான் பட்டுப்புடவை கடை. போய்ட்டு வந்திடலாம். நீயும் வேணா வா…” என்றான் மனைவியை.
சுத்தமாய் அவனை கணிப்பிற்குள் கொண்டுவரவே முடியவில்லை முல்லைமலரால்.
எத்தனை இலகுவாய் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்கிறான் என்று அவனை பார்க்க,
“சபரி நீ போய் அப்பாவை பாரு. நாங்க பேசிக்கறோம்…” என்ற அன்னக்கிளி,
“முல்லையை நான் பார்த்துக்கறேன்…” என்று மகனை அனுப்பினார்.
“நீ வாம்மா…” என வனிதா முல்லையின் கையை பிடித்து மாடிப்படி அருகிருந்த காலி இடத்தில் புது போர்வையை விரித்து அமர சொன்னார்.
“கீதா…” என்ற சத்தத்தில் வனிதாவின் பெண் வர,
“என் பொண்ணு கீதா. இப்பதான் காலேஜ் முடிஞ்சு வந்தா. வந்ததும் உன்னை தான் தேடினா…” என மகளை அறிமுகப்படுத்தியவர்,
“பார்த்தாச்சுல. உங்க அண்ணி இங்க தான் இருப்பா. நீ போய் சாப்பிட்டு வா…” என அனுப்பி வைத்தார்.
அதற்குள் இங்கே அன்னக்கிளி மாலதியின் வாய்க்கு பெரிதாய் பூட்டுபோட்டிருந்தார்.
“வாயை திறந்தன்னா என் புருஷனுக்கு தான் நீ பதில் சொல்லனும்…” என அதட்டியே சொல்லியிருந்தார் அன்னக்கிளி.
“தப்பு தான்…” என அன்னக்கிளி அதட்டிவிட்டு மருமகளின் பக்கம் திரும்பினார்.
“நீ எதுவும் நினைச்சுக்காதம்மா. இவ உனக்கு சித்தி முறை தான். என்னவோ பேசிட்டா…” என்று முல்லையிடம் சொல்ல,
“அவங்க ஒன்னும் தப்பா சொல்லலையே அத்தை. என்கிட்டே இல்லைன்றதை அவங்க ஞாபகப்படுத்தினாங்க. உண்மை அது தானே?…” என்ற முல்லை,
“வேற ஏதாவது இருக்கா சித்தி? புடவை இல்லாம நகை இப்படி ஏதாவது?…” என்று முல்லை கேட்க மாலதி புருவங்கள் உயர்ந்தது.
முல்லையின் வேதனை, வருத்தம் எல்லாம் அந்த நிமிடம் மட்டுமே. அடுத்து சுதாரித்துவிட்டாள்.
இவர்கள் கேட்டது உண்மை தானே? கசப்பானதாக இருந்தாலும் அது உண்மை என மனதும் ஒப்புக்கொண்டது.
“என்ன நக்கலா? ஒண்ணுமே பேச தெரியாத மாதிரி இருந்த. இப்ப இப்படி பேசற?…” மாலதி பொரிய,
“சாப்பிடற இடத்துல வாயே திறக்கலைன்னு சொன்னீங்களே சித்தி. அதான். நான் ஒன்னும் உங்களை கோபமா எதுவும் பேசலையே?…” முல்லை முகம் மாறாமல் கேட்க இன்னும் மாலதி தான் திகைத்து போனார்.
“பதில் சொல்லு மாலதி. என் மருமக கேட்கறா இல்ல…” என அன்னக்கிளி கிண்டலாக.
“என்னத்த சொல்ல? இப்ப இது முக்கியமா? வந்ததை பேசுங்க…” என்று நொடித்துக்கொண்டார் மாலதி.
அதன் பின்பே இது ஞாபகம் வர சங்கடத்துடன் அன்னக்கிளி முல்லையை பார்த்தார்.
“அக்கா நீங்க எல்லாரும் போங்க. நான் பேசிக்கறேன். இத்தனை பேர் எதுக்கு?…” வனிதா தான் பார்த்துக்கொள்வதாக சொல்ல முல்லை அமைதியானாள்.
“இந்த வீட்டுக்கு பெரியவங்க பேசறது தானே? சொல்ல போனா…” மாலதி முடிக்கும் முன்,
“நீ வா நாம போய் எல்லாருக்கும் சாயங்காலம் என்ன வேணும்னு கேட்டுட்டு ரெடி பண்ணுவோம். அப்பறம் உன் வீட்டுக்காரர் வந்து இன்னுமா டீ கூட போடலைன்னு சொல்லுவார்…” மாலதியின் கணவனை ஞாபகப்படுத்த உடனே எழுந்துகொண்டார் மாலதி.
“ஆமாமா, வந்ததும் கொதிக்க கொதிக்க வாய்ல ஊதிக்கனும்னு நிப்பாரு…” இவ்விடத்தை மறந்தவராக மாலதி கீழே இறங்க மற்றவர்களும் சேர்ந்தே சென்றனர்.
அவர்கள் கிளம்பவும் முல்லை இன்னும் கொஞ்சம் இலகுவானாள். வனிதாவை பார்த்து புன்னகைக்கவும்,