அத்தியாயம் 13:
கனவுலகில் இருந்தவர்களை மதுவின் செல்போன் அழைத்து கலைத்தது. மீனாட்சி அழைத்ததால் பரபரப்பாக மொபைலை தேடினாள் மது.
ஹேரி எழுந்து அவளின் ஹேண்ட் பேகை எடுத்து வந்து கொடுத்தான். அதை வாங்கி மொபைலை எடுத்தவள் அட்டென்ட் செய்யாமல் பார்த்து கொண்டிருந்தாள். மீனாட்சி வீடியோ கால் செய்திருந்தார்.
முழுவதும் அடித்து முடித்ததும் திரும்பவும் மது ஆடியோ கால் செய்தாள்.
“ஹலோ மது”
தாயின் குரலை கேட்டதும் ஒரே அழுகையாக வந்தது மதுவிற்கு. அடக்கி கொண்டே “அம்மா” என்றாள்.
“என்னடா மது. குரல் ஒரு மாதிரி இருக்கு. அழுதியா”
“தலைவலிம்மா. தூங்கிட்ருந்தேன்”
“சரிடா. வெறும் வயிறோட படுக்காத. ஏதாவது சாப்டுட்டு தூங்கு. அம்மா நாளைக்கு காலைல பேசறேன்”
“சரிம்மா. பை”
மொபைலை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் ஹேரி எதோ யோசித்து கொண்டிருந்தான்.
பிறகு மதுவை பார்த்து “ஏன் ஹனி, நீ பேசற லாங்க்வேஜ்ல தான அந்த பசங்க பேசினாங்க. உங்க ஊர் பசங்களா”
ஆம் என்று தலையாட்டினாள் மது.
“உனக்கு ஏற்கனவே அவங்கள தெரியுமா”
இல்லை என்று தலையாட்டினாள்.
“என்ன நடந்தது. நீ அவங்கட்ட ஏதும் சேட்டை பண்ணினியா”
“நா நடந்து வரும்போது ரோட் சைட்ல நின்னுட்டுருந்தவங்க என் வழிய மறைச்சு அந்த சந்துக்கு இழுத்துட்டு போய்ட்டாங்க.நா அவங்கள இடிச்சு தள்ளிட்டு ஓடி வரலாம்னு பாக்கும் போது ஒருத்தன் பிடிச்சு இழுத்ததுல தான் டிரஸ் கிழிஞ்சுடுச்சி. நா அந்த அதிர்ச்சில நிக்கும்போதுதான் அவனுங்க என்ன பிடிச்சி அப்டி பண்ண பாத்தாங்க. அந்த டைம்தான் நீ வந்த. எப்படி காயம் வந்துச்சுன்னு தெரியல” என்று மெதுவாக கூறினாள் மது.
உடம்பெல்லாம் வலித்தது மதுவிற்கு. கையை பிடித்து முறுக்கியதால் இரண்டு தோள்களும் , கைகளும் வலித்தது. பெயின் கில்லர் ஏதும் இருக்கிறதா என்று மெடிக்கல் பாக்ஸை ஆராய்ந்தவள் பெனடால் இருந்ததால் போட்டு கொள்ளலாம் என்று எடுத்தாள்
அதுவரை அவள் யோசனையில் இருந்த ஹேரி அவள் மாத்திரையை எடுத்ததும் ” இரு மது. எதாவது சாப்டுட்டு டேப்லெட் போடலாம் ” என்றான்.
உச் கொட்டிய மது எழுந்திரிக்க போனாள்.
“இரு எங்க எழுந்திரிக்கிற. சாப்பாடுதான. பிரட் டோஸ்ட் ஓகேவா. நா ரெடி பண்றேன்” என்றான்.
தலையாட்டிவிட்டு அமைதியாக சோபாவிலேயே படுத்து விட்டாள் மது.
ஹேரி பிரிட்ஜில் ஆல்ரெடி பிரெட்டை பார்த்திருந்தான். இப்பொழுது போய் முட்டை இருக்கா என்று பார்த்து இருந்ததால் பிரெட் ஆம்ப்லட்டாக போடலாம் என்று முடிவு செய்து வேலையில் இறங்கினான்.
தேவையான பொருட்களை மதுவை தொந்திரவு செய்யாமல் அவனே தேடி எடுத்து பிரெட்டை ரெடி பண்ணி எடுத்து வந்து மதுவை எழுப்பினான்.
அவளும் எழுந்து எதுவும் சொல்லாமல் சாப்பிட போனாள். உதட்டில் சாப்பாடு பட்டதால் வலியில் ஸ்ஸ் என்றாள்.
அவள் கைகளில் இருந்து பிரெட்டை வாங்கிய ஹேரி அவனே ஊட்ட போனான். அவனை வினோதமாக பார்த்த மது”எனக்கு உதட்ல தான் அடிப்பட்டுருக்கு. கைல இல்ல” என்றாள் நக்கலாக.
“ஸ் அமைதியாயிரு. இவ்வளவு வலியிலையும் பேச்சு குறையுதான்னு பாரு. வாயை மெதுவா திற ” என்று சொல்லிக்கொண்டே உதட்டில் படாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து கொடுத்தான்.
அவள் சாப்பிட்டதும் எழுந்திரிக்க போனவனை பார்த்து ” உனக்கு பிரெட்” என்று கேட்டாள்.
“இல்ல பேபி எனக்கு பசிக்கல. நீ டேப்லெட் போட்டுக்கோ” என்றான்.
“நீ உன் வீட்டுக்கு கிளம்பலையா”
“உன்ன இப்படியே எப்படி விட்டுட்டு போறது. நீ வேணுனா உன் பார்ட்டிபன்னுக்கு கால் பண்ணு . அவன் வந்தவுடனே நா கிளம்பறேன்” என்றான் மனதே இல்லாமல்.
“அண்ணா இங்க இல்ல. சிட்னிக்கு போயிருக்காரு”
“அப்ப நா இங்கவே இருக்கேன் ஹனி. என்ன போக சொல்லாத. உன்ன இந்த நிலைமையில விட்டுட்டு என்னால போக முடியாது”
மதுவாலும் அதற்கு மேல் முடியவில்லை. டேப்லெட் போட்டு கொண்டவள் ரூமிற்குள் படுக்க சென்றாள்.
சிறிது நேரம் சென்று மதுவின் ரூமிற்குள் சென்று அவளை பார்த்தான் ஹேரி. நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். குனிந்து அவள் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி விட்டு, வெளியில் வந்து ரூமின் கதவை சாற்றி விட்டு ஜானிற்கு அழைத்தான்.
அவனிடம் செய்ய வேண்டிய வேலையை கூறி அவன் செய்து முடித்து ஹேரியிடம் கூறிவிட்டு போனை வைக்கும் போது மணி இரண்டு.
அதற்கு பிறகு தான் அங்கிருந்த சோபாவில் படுத்தான்.
காலையில் மது எழுந்திருக்கும் போது 6 மணி. விழிப்பு வந்ததும் மெதுவாக நேற்று நடந்ததெல்லாம் நியாபகம் வந்தது. ஹேரியின் நினைவும் வந்து முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது.
மெதுவாக ஹாலிற்கு எழுந்து வந்தவள் ஹேரி சோபாவில் படுத்திருப்பதை பார்த்து அவன் அருகில் சென்றாள்.
காலை மடித்து ஒருக்களித்து படுத்திருந்தான். சோபா பற்றாமல் அவன் கால்கள் வெளியில் தொங்கியது. அதை பார்த்து சிரித்து கொண்டே நடுவில் இருந்த டீபாயை இழுத்து அவன் கால்களுக்கு அருகில் போட்டு அவன் கால்களை மேலே தூக்கி வைத்தாள்.
பிறகு முகத்திற்கு அருகில் வந்து பார்த்தாள். பாவம் தலையணை போர்வை எதுவும் இல்லாமல் கைகளை நெஞ்சில் சுருட்டி வைத்து கொண்டு உடம்பை குறுக்கி படுத்திருந்தான்.நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
மது ரூமிற்குள் சென்று அவளின் பெட் ஷீட்டை எடுத்து வந்து அவனுக்கு போர்த்தி விட்டாள்.
பிறகு அவன் முகத்தையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தாள்.
இவனுக்கும் எனக்கும் என்ன உறவு. இவனுக்கு நாம் என்ன செய்தோம். இவன் ஏன் என் மீது இவ்வளவு பிரியமாக இருக்கிறான் என்று யோசித்து கொண்டே அவனின் தலைமுடியை கலைக்க போனாள். தலைக்கு அருகில் கைகளை கொண்டு போனவள் சட்டென்று கைகளை பின்னுக்கு இழுத்து கொண்டு தன் தலையிலேயே கொட்டி கொண்டாள் .
பிறகு ரெஸ்ட் ரூம் சென்று குளித்து விட்டு வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை. தலைக்கு குளித்து விட்டு ஒரு ரெட் கலர் ஸ்ட்ரெயிட் கட் சல்வார் அணிந்தவள், அவள் சிறிதாக ரெடி பண்ணி வைத்திருந்த சாமி டேபிளின் முன் நின்றாள்.
ஹாலின் ஒரு ஓரத்தில் சுவரை ஒட்டி ஒரு டேபிள் போட்டு, அதில் பிள்ளையார், முருகர்,திருப்பதி வெங்கடாஜலபதி உடன் பத்மாவதி தாயார் போட்டோஸ்,பிறகு ஒரு குட்டி சாய் பாபா சிலை, ஒரு குட்டி வெள்ளி விளக்கு. இதுதான் அவள் பூஜை அறை.
இவள் இங்கு வந்ததும் ஜனனியிடம் கேட்டு இந்த சாமி டேபிளை ரெடி பண்ணி கொண்டாள். விளக்கு ஏற்றலாம். பத்தி, சூடம், சம்பிராணியெல்லாம் ஏற்றினால் புகை வந்து ஃபயர் அலார்ம் அடித்து விடும். ஆகையால் விளக்கு மட்டும் ஏற்றி திருநீறு, குங்குமம் இட்டு கொண்டு கிட்சனிற்கு சென்றாள்.
மதுவிற்கு டி காபியை பழக்க படுத்தவே இல்லை மீனாட்சி. இங்கு வந்துதான் இந்த குளிருக்கு பிரண்ட்ஸோடு கேப்புச்சினோ குடித்து பழகினாள். ஊரில் காலையில் ராகி , கம்பு கஞ்சிதான் வைத்து தருவார் மீனாட்சி.
அங்கு வீட்டில் வாங்கி அரைத்து வைத்திருப்பார். இங்கு வந்ததும் இந்தியன் கிராசரியில் கேழ்வரகு, கம்பு எல்லாம் மாவாகவே கிடைத்ததால் வாங்கி வைத்து கொண்டாள் மது.
தேவைப்படும்போது கஞ்சி வைத்து கொள்வாள். இன்று அதெல்லாம் வைக்காமல் நேரடியாகவே டிஃபன் செய்து கொள்ளலாம் என்று யோசித்தவள், மாவு இருந்ததால் இட்லியும், காரம் கம்மியாக போட்டு சாம்பாரும் ரெடி பண்ணினாள்.
பிறகு பிரட் டோஸ்ட், ஆம்ப்லெட் ,வீட்டில் இருந்த பழங்களை வைத்து ஃபுரூட் சாலட் எல்லாம் ரெடி செய்தாள். ஹேரி பிரேக்பாஸ்ட் என்ன சாப்பிடுவான் என்று தெரியாததால் அவளுக்கு தோன்றியதை செய்து வைத்தாள். இவ்வளவிற்கும் ஹேரி எழுந்து கொள்ளவே இல்லை.
மணியை பார்த்தாள். ஏழேமுக்கால். ஹாலில் உள்ள பால்கனி கதவை திறந்தவள் வெளியில் போய் நின்று டவலை எடுத்து விட்டு முடியை உதறி விட்டாள் .
சிறிதாக குளிர் காற்று வீசியது. டவலை அங்கிருந்த துணி காய வைக்கும் ஸ்டாண்டில் போட்டவள் , கையை நெஞ்சில் கட்டிக்கொண்டு கீழே தெரிந்த வீதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். பெரிதாக யாரும் இல்லை. ஓரிருவர் மட்டும் சென்று கொண்டிருந்தனர்.
ஹேரிக்கு இப்பொழுதுதான் விழிப்பு வந்தது. எழும்போதே வித்தியாசமான மணம். சமையல் வாசனையும் தாண்டி ஓர் மணம் . அப்போதுதான் தன் மேலே போத்தியிருந்த பிங்க் கலர் வெல்வெட் கில்ட்டை பார்த்தான். அதை முகர்ந்து பார்த்தான். அதிலிருந்துதான் அந்த வாசம் வந்தது. சிறிது நேரம் அதை சுவாசித்து கொண்டே உட்காந்திருந்தான்.
பிறகு திரும்பி வலது புறம் பார்த்தால் கிட்சன் தெரிந்தது. நேராக பார்த்தால் பெட்ரூம் கதவின் பக்கத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவனுக்கு அது என்னவென்று தெரியவில்லை. இடதுபுறம் பார்த்தான் அவன் ஏஞ்சல் நின்று கொண்டிருந்தாள். பெரிதாக புன்னகை மலர்ந்தது.
ஹேரிக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இப்படி ஒரு அருமையான காலை பொழுதை பார்த்ததில்லை. நேராக எழுந்து போய் அவன் பேபியை பின்னிருந்து கட்டியணைத்து , அலையலையாக அவளின் பின் தொடை வரை பறந்து விரிந்திருக்கும் தலை முடியில் முகம் புதைக்கும் வேட்கை எழுந்தது. ஆனால் அந்த வேட்கையை தலையை தட்டி அடக்கியவன், அவன் பேபியின் உடல் மற்றும் மனநிலையை அறிய வேண்டி “குட் மார்னிங் ஹனி” என்றான்.
வேகமாக திரும்பி பார்த்தாள் மது. அதற்குள் அவளை நோக்கி நடந்து கொண்டே “எப்படி இருக்கே ஹனி” என்று விசாரித்தான்.
தன் பக்கத்தில் வந்து நின்றவனை பார்த்து பெரிய புன்னகை ஒன்றை கொடுத்த மது ” நல்லாருக்கேன் ஹேரி , நீ நல்லா தூங்கினியா” என்று விசாரித்தாள்.
அவள் புன்னகையை பார்த்ததும் தான் நிம்மதியானது அவனுக்கு. அவளின் பக்கத்தில் வந்து ஆழ்ந்து மூச்சை இழுத்து கொண்டே ” இது என்ன வாசம் ஹனி” என்றான்.
மதுவிற்கு புரியவில்லை
ஹேரி திரும்பவும் ” நீ என்ன பெர்ஃபியும் யூஸ் பண்ற பேபி” என்றான்.
“நா பெர்ஃபியும்லாம் யூஸ் பண்றதில்ல ஹேரி “
அப்ப என்ன வாசம் இது என்று யோசித்தவன் ” என்ன ஷாம்பு அண்ட் சோப் யூஸ் பண்ற ” என்றான்.
மது சிரித்து கொண்டே ” ஷாம்பு சோப்பெல்லாம் இல்ல. இது ஃபுல்லா ஹெர்பல். எங்க அம்மா தயார் பண்ணி கொடுத்தனுப்புனது. சிகைக்காய் தலைக்கு. கல்லமாவு , பயறு, பூலாங்கிழங்கு இன்னும் என்னென்னமோ போட்டு அரைச்ச மாவதான் நா பாடி வாஷுக்கு யூஸ் பண்ணுவேன்”
“ஓ ஒன்னும் புரியல. பட் ஸ்மெல் சூப்பர்” என்றவன் அவள் முகத்தை ஆராய்ந்தான். உதடு வீக்கம் இல்லை. கன்னம் மட்டும் இன்னும் சிவந்திருந்தது”
“தோள்ல உள்ள காயம் எப்படி இருக்கு ஹனி. மருந்து போட்டியா”
“குளிச்சுட்டு மருந்து போட்டுட்டேன்” என்றவள் அவன் எதுவும் கேட்பதற்கு முன்பு “உனக்கு பசிக்கலையா. நைட்டும் ஒன்னும் சாப்பிடல நீ” என்றாள்.
“என் பிரண்ட எனக்கு டிரஸ் எடுத்து வர சொல்லிருக்கேன். குளிச்சிட்டு சாப்பிட்டுக்கறேன். உனக்கு குக்கிங் தெரியமா மடு . இவ்வளவு காலைலயே எழுந்து சமைச்சிட்ட”
“ம் இங்க வந்துதான் சமைக்க பழகினேன். நல்லாத்தான் சமைக்கிறேன்னு இதுவரை சாப்பிட்டு பாத்தவங்க சொல்றாங்க. இன்னைக்கு நீயும் சாப்பிட்டு பாத்து சொல்லு”
“ஓகே டன் பேபி’ என்று கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.
அதற்குள் அவன் பிரண்ட் கீழிருந்து அழைத்து விட்டதால், போய் உடையை வாங்கி வந்தான். ஜான் தான் அவனுக்கு பேகை கொண்டுவந்து கொடுத்துவிட்டு மது எப்படி இருக்கிறாள் என்று ஹேரியிடம் கேட்டு தெரிந்து கொண்டு சென்றான்.
குளித்து நேவி ப்ளூ ஜீன்ஸ், லைட் ப்ளூ டீ சர்ட்டில் வந்தான். அவன் வீட்டிற்குள் இருப்பதால் தன் வீடு சிறியதாக தெரிந்தது மதுவிற்கு. அவன் ட்ரெஸ்ஸை பார்த்தவள் “நீ இன்னைக்கு உன் ஆபீஸ் போகலையா ஹேரி ‘ என்று கேட்டாள் மது.
“ஒர்க் ஃபிரம் ஹோம் மடு “என்று லேப்டாப் பேகை காட்டினான் ஹேரி.
ஆம் அவனுக்கு தேவையான பிரஷ்,பேஸ்ட்,பாடிவாஷ்,ஹேர் வாஷ் , லேப்டாப் என்று சகலமும் கொண்டு வந்து கொடுத்து விட்டு போயிருந்தான் ஜான்.
“உன் பிளான் என்ன மடு”
“நா இன்னைக்கு லீவ் சொல்லிட்டேன் ஹேரி . கோயிலுக்கு போகலாம்னு பாக்கறேன். மனசு கொஞ்சம் நிம்மதியாகும்”
“கோயில்ன்னா எப்படி இருக்கும் ஹனி. நானும் வரலாமா”
“தாராளமா வரலாம். உங்க சர்ச் மாதிரிதான் கோயில். ஆனா உனக்கு வேல இருக்குமே. முதல்ல நீ உன் வீட்டுக்கு கிளம்பலையா. இப்ப நா ஓகே தான். நீ போய் உன் வேலைய பாக்கலாம் ஹேரி “
“வீட்டை விட்டு கிளம்புடான்னு இண்டிரெக்டா சொல்றியா ஹனி”
“அப்படியும் சொல்லலாம். நீ ஒரு நைட் என் வீட்ல ஸ்டே பன்னதுக்கே பார்த்தி அண்ணா என்ன சொல்வாங்களோனு பயமா இருக்கு. இதுல இந்த மொத்த விஷயத்தையும் நா எங்க அம்மா, அப்பாட்ட இருந்து வேற மறைக்கணும்”
“உன் அண்ணாக்கு வேணா என்ன பத்தி தெரியாம இருக்கலாம். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ஹனி”
“நம்பிக்கை இல்லாமையா உன்ன வீட்ல அலோவ் பண்ணேன். இன்னும் சொல்லப்போனா நைட் என் பெட்ரூம் டோர கூட நா லாக் பண்ணல”
“பின்ன ஏன் ஹனி என்ன போக சொல்ற”
“எங்க ஊர்ல ஒரு கல்யாணம் ஆகாத ஆணும் , பெண்ணும் தனியா ஒரே வீட்ல தங்கக்கூடாது “
“ஏன்”
“அட என்னப்பா நீ. சும்மா ஏன் ஏன்னு கேட்டுகிட்டு. இதெல்லாம் எங்க ஊர்ல எழுதப்படாத ரூல்ஸ்”
“ஓகே மடு. உங்க ஊர்க்காகலாம் இல்ல. உன் பார்த்தி அண்ணாக்காகவும் இல்ல. உனக்காக நா போறேன். ஆனா உன்ன கோயிலுக்கு அழைச்சிட்டு போயிட்டு , வீட்ல கொண்டு வந்து விட்டுட்டுதான் போவேன்”
ஓகே என்று ஒத்து கொண்டாள் மது.
(வருவாள்…)