அத்தியாயம் 9 :
அதிர்ச்சியாக நின்று கொண்டிருந்த மதுவையும், சத்யனையும் பார்த்து “என்ன ஃபிரீஸ் ஆயிட்டீங்க. டேட்டிங் பத்தி என்ன நினைக்கிறன்னு தான கேட்டேன். டேட்டிங் வா னா கூப்பிட்டேன்” என்று கேட்டான்.
சத்யன் தான் அவசர அவசரமாக ” ஜான் டேட்டிங் பத்தியெல்லாம் மதுமிதாக்கு தெரியாது. பாவம் அவ அப்பாவியான கிராமத்து பொண்ணு. ரொம்ப அமைதியும் கூட . அதான் நீங்க டேட்டிங் பத்தி கேட்டோன்ன பயந்துட்டா” என்றான்.
ஜானால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாய்விட்டு சிரித்துக்கொண்டே “அப்படியா கோலா” என்றான்.
மதுவால் ஒன்றுமே பேச முடியவில்லை. முழித்து கொண்டு நின்றிருந்தாள்.
ஜான் தொடர்ந்து சத்யனிடம், “நீங்கதான் சத்யன் பாவம், அப்பாவி” என்று சொல்லிவிட்டு அவர்களை வெளியே அனுப்பி விட்டான்.
வெளியே வந்த சத்யன் மதுவை அழைத்து கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தான். அவர்கள் வெளியே செல்வதை பார்த்த ஊர்வசியும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அங்கு பக்கத்தில் இருந்த செவன் லெவனில் ஆளுக்கொரு கேப்புசினோ கலந்து கொண்டு, ரோட் சைடில் இருந்த பென்ச்சில் அமர்ந்தார்கள்.
சத்யன் தான் ஆரம்பித்தான். “என்ன மது பண்ணி வச்ச. அவரை எங்கயும் முன்னாடியே பார்த்தியா” என்றான்.
“ஆமாண்ணா மதியம் லஞ்ச் சாப்பிட போயிருந்தப்ப அவரை பார்த்தேன். பேர் கேட்டான். இவன் எதுக்கு நம்ம பேர கேக்கணும்னு சும்மா கலாய்ச்சி விட்டுட்டேன்”
“அவ்ளதான வேற ஒண்ணுமில்லையே”
“எங்க வேல பாக்கறனு கேட்டார். அதுக்கு…”
“அதுக்கு …”
“அது ஒரு வீணா போனா கம்பெனின்னு சொல்லிட்டேன்”
சிறிது நேரம் அமைதியாக இருந்த சத்யன் ” சனியனே பிட் பிட்டா சொல்லாம முழுசா சொல்லி தொலையேன்” என்றான்.
அவனை உர்ரென்று பார்த்த மது, பிறகு நடந்ததை முழுதாக சொல்லி முடித்தாள்.
சத்யன் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான்.
ஊர்வசி உள்ளே ஜான் கடைசியாக என்ன சொன்னார் உங்களிடம் என்று கேட்டாள்.
மது அதையும் ஊர்வசிக்கு கூறினாள். கேட்டு விட்டு ஊர்வசியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
இங்கு விடியோ காலில் ஜானும், ஹேரியும் அவ்வாறுதான் சிரித்து கொண்டிருந்தார்கள்.
ஜான்” சான்சலஸ் மேட் . உன் பேபிய நீ பக்கத்துல வச்சிருந்தின்னா சிரிச்சிட்டே இருக்கலாம்”
“ம். என்னால நம்பவே முடியல ஜே. நீ மெசேஜ் பண்ணி சைலண்டா , ஆபீஸ் கேமெரா ஓபன் பண்ணி கான்பிரென்ஸ் ஹால் பாருன்னு சொன்னப்ப நா இப்படி ஒண்ண எதிர் பாக்கவே இல்ல. பட் ஐயம் சோ ஹாப்பி நவ் “
“ஓகே . உன் ஏஞ்சல் நம்ம ஆஃபீஸ்லயே இருக்கதுல உனக்கு நல்ல அட்வான்டேஜ் தான் இல்ல”
“இல்ல ஜே. நா அப்படி ஆபீஸ் பாஸா அவள பாக்க விருப்ப படல . தெரிஞ்சா என்னட்ட பழக மாட்டா. நா வேற பிளான் வச்சிருக்கேன். ஊருக்கு வந்து உனக்கு விளக்கமா சொல்றேன்”
“அப்ப நீ அவள விட்றதாயில்லை”
“விட்றதா.நெவெர்”
இங்கு தலையில் கை வைத்து உட்காந்திருந்த சத்யன் அருகில் மது போய் “இப்ப என்ன நடந்ததுன்னு இவ்ளோ பீல் பண்றிங்கண்ணா, அவன்தான் பெருசா கோவப்படலையே”
“அவன் கோவப்பட்ருந்தா கூட பரவால்லையே, வேற மாதிரில்ல பாக்குறான்”
“எப்படி பாக்றான் , அதெல்லாம் ஒன்னுமில்ல , சும்மா நா கிண்டல் பண்ணதால, அவனும் கிண்டல் பண்றான், அவ்ளோதான் “
“அவ்ளோதானா. இன்னைக்கு டேட்டிங் பத்தி கேட்டவன், நாளைக்கு என்கூட டேட்டிங் வர்றியான்னு கேட்டா என்ன பண்ணுவ மது”
ஊர்வசியும் மதுவிடம்” ஆமா மது. சத்யன் பயப்டறதிலையும் நியாயம் இருக்கு” என்றாள்.
அதற்கு மது “சரி விடுங்கப்பா. நடந்து முடிஞ்சிடுச்சு. இன்னுமே என்ன. மத்தது நடக்கும்போது பாத்துக்கலாம்” என்று கேஸூவலாக சொன்னாள் .
அவளை பார்த்த சத்யன் தான் “ஊர்ல 7,8 தங்கச்சி வச்சிருக்கவன்லாம் நிம்மதியா இருக்கான். நா ஒரே ஒரு தத்து தங்கச்சிய வச்சிக்கிட்டு படர பாடு இருக்கே” என்று புலம்பி கொண்டிருந்தான்.
தொடர்ந்து ” இனிமேயாவது அவரை பாத்தா ஒழுங்கா பேசிட்டு இடத்தை காலி பண்ணனும். அனாவசியமா எதாவது வம்பு பண்ணுனனு தெரிஞ்சது, பார்த்திபன்ட்ட கூப்பிட்டு சொல்லிடுவேன் பாத்துக்கோ” என்றான்.
அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மது ” தெய்வமே…. வேண்டாம், நா இனிமே சமத்து பிள்ளையா இருந்துப்பேன். பிராமிஸ்” என்று ஊர்வசியின் தலையில் சத்தியம் வைக்க போனாள்.
அவ்வளவுதான் ஊர்வசி, ஏன் அந்த இடத்தில நிற்க போகிறாள். ஓடியே விட்டாள். அவளை பார்த்து சிரித்து கொண்டே இருவரும் பின்னால் சென்றனர்.
தொடர்ந்து வந்த நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது மதுவிற்கு. அவ்வப்போது ஹேரியின் நியாபகம் மட்டும் எட்டி பார்க்கும். சரி வேறு கேர்ள் பிரண்ட பாக்க போய்ட்டான் போல என்று நினைத்து கொள்வாள்.
ஒரு வாரம் சென்று ஆபீஸ் முடித்து விட்டு வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டாம் என்று முடிவெடுத்த மது பார்த்தியின் உணவகத்திற்கு சென்றாள்.
உள்ளே சென்று உட்கார போகும்போது ஹாய் என்ற குரல் கேட்டது.
அவசரமாக திரும்பி பார்த்த மதுவை ஏமாற்றாமல் ஹேரிதான் நின்று கொண்டிருந்தான். ஹால்ப் ஒயிட்டில் டெனிம் ஜீன்ஸ், பிளாக் கலரில் புல் ஸ்லீவ் ரவுண்டு நெக் டீ ஷர்ட் , கண்களில் கூலர்ஸ் அணிந்து நின்றிருந்தவனை பார்த்த மதுவின் இதயம் ஒரு நொடி படபடத்து விட்டது. அவனை பார்த்து மலர்ந்து சிரித்து கொண்டே ஹாய் சொன்னாள். சொன்ன பிறகுதான் சுற்றுப்புறம் நினைவு வந்தது. பார்த்தி அண்ணா இருக்கிறாரா என்று கிட்சன் பக்கம் திரும்பி பார்த்தாள்.
ஹேரியும் அவளைத்தான் முழுவதுமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். ப்ளூ கலர் ஸ்கின்னி ஃபிட் ஆங்கில் லென்த் ஜீனும், மெரூன் கலரில் ஷார்ட் டாப்ஸ்ம் அணிந்திருந்தாள்.பிரெஞ்சு பிரைட் ஸ்டைலில் உச்சியில் பின்னி,கீழேயும் நீண்ட பின்னலிட்டிருந்தாள்.
பார்த்தி கண்ணில் படாததால் அவசரமாக ஹேரியின் பக்கம் திரும்பிய மது “ஹேரி, நான்தான் அன்னைக்கே அவ்வளவு விளக்கமா சொல்லிட்டேன் இல்ல, திரும்ப எதுக்கு இங்க வந்த ” என்று பட படவென்று பொரிந்தாள்.
“ஹே வெயிட், வெயிட் மடு. முதல்ல உக்காரு. தண்ணிய குடி. ரிலாக்ஸான பிறகு என்னட்ட பேசு”
“ரிலாக்சாலாம் உன்னட்ட பேசிட்டுருக்க முடியாது. பார்த்தி அண்ணா பாத்தா திட்டுவாங்க”
“உனக்கு என்கிட்டே பேச பிடிக்கலைன்னா சொல்லு. போறேன். ஆனா அடுத்தவங்க திட்டுவாங்கனு என்ன போக சொல்லாத”
“அவங்க ஒன்னும் அடுத்தவங்க கிடையாது. என் அண்ணா தான்”
“ஒரே வயித்துல பிறந்த அண்ணாவாவே இருந்தாலும் அடுத்தவங்க பர்சனல்ல தலையிட கூடாது”
“அது உங்க ஊர்ல ஹேரி. எங்களுக்கு அப்படி கிடையாது. உறவுகள் தான் முதல்ல”
“ஓகே ஓகே கூல். இப்ப என்ன ஒரு பிரண்டா கூட உன்னட்ட பேச கூடாதா. உங்க சாப்பாடு நல்லாருந்தது, சாப்டுட்டு அப்படியே முடிஞ்சா உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன். இப்ப என்ன உனக்கு பிடிக்கலைன்னா நா கிளம்பறேன் ” என்று வருத்தமாக கிளம்ப போனான்.
மதுவுக்கு சங்கடமாகிவிட்டது. அவன் கோபமாக பேசியிருந்தால் போடா என்று விட்டிருப்பாள். வருத்தமாக பேசியவனை பார்த்தவளுக்கு பாவமாகி விட்டது.
“சரி சரி இரு. என் கூடவே சாப்பிடலாம். கோச்சிட்டு போகாத ” என்று அவனை நிறுத்தினாள்.
சரியென்று இருக்கையில் அமர்ந்தவாறே ” ஓகே சாபிட்றேன். ஆனா பில் நான்தான் பெ பண்ணுவேன். அன்னைக்கு நா சாப்பிட்டதுக்கு நீதான பெ பண்ணின” என்றான்.
மதுவும் உட்கார்ந்துகொண்டு “ஓ என் கடனை அடைக்கத்தான் கிளம்பி வந்தாயா” என்றாள்.
ஹேரி பதில் சொல்வதற்குள் வெய்ட்டரஸ் பெண் வந்தாள் . அவளும் அறிமுகமானவளே மதுவிற்கு. அவள் பெயர் ப்ரீத் . மிகவும் அழகான பஞ்சாபி பெண். அவளிடம் “பார்த்தி அண்ணா இருக்காங்களா” என்று கேட்டாள்.
“கிச்சன்ல இருக்காங்க சிஸ் ” என்றாள் அவள்.
மதுவிற்கு யோசனையானது. பார்த்தி அண்ணாவிடம் என்ன சொல்வது என்று. அமைதியாகி விட்டவளிடம் ஆர்டர் கேட்டாள் ப்ரீத் .
ஹேரியை பார்த்து “என்ன சாப்பிடறே ஹேரி ” என்று கேட்டாள்.
“நீயே சொல்லிடு ஹனி, ஆனா ஆயில் அண்ட் காரம் கம்மியா “
மதுவும் சிரித்து கொண்டே அவனுக்கு சப்பாத்தியும், அவளுக்கு பூரியும் சொல்லி அனுப்பினாள்.
அவள் சென்றவுடன் ஹேரியிடம் ” அன்னைக்கு கார சட்னி சாப்பிட்டுட்டு போனியே, ஒன்னும் பண்ணலையே உனக்கு. அன்னைக்கு நைட் எனக்குதான் கவலையாவே இருந்துச்சி” என்றாள்.
“ஓ அப்ப நா உன் நியாபகத்துல இருந்தனா ஹனி” என்று ஆர்வமாக கேட்டான்.
தலையை சரித்து அவனை பார்த்து கொண்டே ” இதுக்கு நா உண்மையா சொல்லனுமா, பொய் சொல்லனுமா ” என்று கண்களை சுருக்கி கேட்டாள் மது.
அவள் கேட்ட அழகில் மெய் மறந்து அவளை பார்த்திருந்தான் ஹேரி .
மதுதான் அவன் முன் கைகளை சொடக்கு போட்டு சுய நினைவுக்கு கொண்டு வந்தாள் .
“ஒய் என்ன என்னை சைட் அடிக்கிறியா. அந்த நீல கண்ணு ரெண்டையும் நோண்டிடுவேன் பாத்துக்க. ஒழுங்கா சப்பாத்தி வந்தவுடனே சாப்டுட்டு கிளம்பு”
“ஹா ஹா . பயந்துட்டேன் பேபி . நா கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு. என்ன நினைச்சியா இல்லியா நீ”
“நா ஏன் உன்ன நினைக்க போறேன். எனக்கு என்ன வேற வேலை வெட்டி இல்லியா என்ன”
“ஆனா நா அப்படில்ல ஹனி. எந்த வேல செஞ்சாலும் உன் நியாபகம் தான். என் கனவுல கூட உன் இந்த மச்சம்தான் டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சு” என்று சொல்லிவிட்டு அவள் மச்சத்தையே ஆசையாக பார்த்தான்
மதுவிற்கு இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்துவிட்டது. முகத்தில் வேறு சூடு ஏறியது. ஐயையோ வெட்கமா வருதே. இவன்கிட்டேந்து யாராவது என்ன காப்பாத்துங்களேன் என்று உள்ளுக்குள் அலறிக்கொண்டே கண்களை அவனை பார்க்காமல் அங்குமிங்கும் சுழற்றினாள்.
“ஒன்டர்ஃபுல்”
“என்ன”
“உன் முகம் சிவக்கிறதுதான் “
“அது ஒண்ணுமில்ல . குளிருக்கு சிவந்துடுச்சு”
நல்ல வேலையாக ப்ரீத் உணவை கொண்டு வந்து வைத்தாள்.அவளை பார்த்து கொண்டிருந்த மது , அவள் சென்றவுடன் “ஏன் ஹேரி , ப்ரீத் செம அழகா இருக்காள்ல . நீ ஏன் அவளை டேட்டிங் கேக்க கூடாது” என்றாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் சப்பாத்தி எடுத்து சாப்பிட போனான் ஹேரி .
அவனை தடுத்த மது, சப்பாத்திக்கு வைத்த குருமாவை எடுத்து , அவள் பிளேட்டில் ஒரு ஸ்பூன் வைத்து சாப்பிட்டு பார்த்தாள். காரம் குறைவாகத்தான் இருந்தது. அதற்கு பிறகுதான் அவனை சாப்பிட சொன்னாள்.
இப்பொழுது ஹேரி மதுவை ஆழ்ந்து பார்த்து “இதுதான் வித்தியாசம் ஹனி. எல்லா அழகான பொண்ணும் மடு பேபி ஆகிட முடியாது” என்றான்.
“ஹலோ . உனக்கு காரம் ஒத்துக்காதுனு எனக்கு தெரியும். அப்புறம் நீ என்னோட கெஸ்ட். சோ நா அக்கறையா உன்ன பாத்துக்கிறேன். நார்மலாவே இந்திய பொண்ணுங்க இப்படித்தான். இதுக்கெல்லாம் நீ ரொம்ப பீல் பண்ணாத”
“ஓகே. நா தெரியாம சொல்லிட்டேன் என்ன விட்று . இங்க தவிர வேற எங்க உன்ன நா பாக்க முடியும்”
“நீ எதுக்கு என்ன பாக்கணும். இன்னும் ஆறு மாசம் தான் நா இங்க இருப்பேன். அப்புறம் எங்க ஊருக்கு போய்டுவேன். நீ என்கிட்டே டைம் வேஸ்ட் பண்ணாம வேற கேர்ள் பிரண்ட் தேடு. ஆமா கேக்கணும்னு நினைச்சேன். இதுவரை எத்தன கேர்ள் பிரண்ட் உனக்கு. லாஸ்ட் பிரேக்கப் எப்ப பண்ண”
“சொன்னா நம்புவியா”
“ஏன். உண்மைய சொன்னா நா ஏன் நம்பாம போறேன்”
“எனக்கு கேர்ள் பிரண்ட்னு யாரும் இருந்ததில்ல . யாரையும் எனக்கு இதுவரை பிடிச்சதில்ல. டீனேஜ்ல அழகான பொண்ணுங்க டேட்டிங் கேட்டப்ப போயிருக்கேன். பட் அத தாண்டி எந்த ரிலேஷன் ஷீப்பும் என் லைஃப்ல, யார்கூடயும் இருந்ததில்ல . நானா ஆசைப்பட்டு டேட்டிங் கேட்ட முத பொண்ணு நீதான்”
வியப்பாக அவனை பார்த்து கொண்டிருந்தாள் மது.
“என்ன நா சொன்னத நம்பலயா”
“நம்பாம இல்ல. ஆனா ஏன்”
“ஏன்னா.எனக்கே தெரியல. ஒரு 15,16 வயசுல என் அம்மா வீட்டை விட்டு வெளியில் வந்ததிலிருந்து 20 வயசு வரை டேட்டிங் ட்ரை பண்ணேன். அப்புறம் வெறுத்து போய் விட்டுட்டேன். எந்த பொண்ணையும் பாத்து அட்மைர் ஆனதில்லை லாஸ்ட் வீக் வரை”
“அப்பவே வீட்டை விட்டு வெளிய வந்தா படிக்க ,சாப்பிட என்ன பண்ண”
“இங்க மேக்ஸிமம் எல்லோரும் அப்படித்தான். நா பார்ட் டைம் ஜாப் பாத்தேன். மணி ப்ராப்ளம் இருந்ததில்ல “
“ஓ இப்ப என்ன வேல பாக்கிற”
“IT “
“ஹே. நீயும் IT யா. சூப்பர் “
இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டதால் மது கிளம்பலாம் என்று முடிவு செய்தாள். டைம் பார்த்தால் 7 மணி. வெயில் காலமாதலால் பகல் பொழுது அதிகம் இங்கு. இன்னும் சூரியன் மறையவில்லை. சரி பார்த்தி அண்ணாட்ட மாட்டிக்காம கிளம்பிடுவோம் என்று நினைத்து ஹேரியிடம் “ஓகே.எனக்கு லேட்டாச்சு. நா கிளம்புறேன்” என்று எழுந்து கொண்டாள்.
அவனும் பில் பெ பண்ணிவிட்டு அவளோடே வெளியில் வந்தான்.
” திரும்பவும் எப்ப பாக்கலாம் ஹனி”
“ஹேரி . உனக்கு திரும்பவும் சொல்றேன். என்னோட உன் டைம வேஸ்ட் பண்ணாத”
“அத நீ சொல்லாத ஹனி. வேஸ்ட்டா இல்லையானு நா முடிவு பண்ணிக்கிறேன். உன்ன எங்க சந்திக்கலாம்னு மட்டும் சொல்லு”
“ஒ அப்படியா. நா ஃபிரீ டைம்ல டெம்பிள்தான் போவேன். நீயும் வேணுன்னா பஜனை பாட வந்து சேந்துரு” என்று கிண்டலடித்து விட்டு கிளம்பி விட்டாள்.
ஒரு மயக்கும் சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டே நின்று கொண்டிருந்தான் ஹேரி.
(வருவாள்…)