“அவ தூங்கிட்டா…” என்றான் சிரிப்புடன் ஜீவன்.
“தாலாட்டு பாடுனீங்களாக்கும்? இதுவா நீங்க சொன்ன பஞ்சாயத்து?…” என்று ஷிவா கிண்டல் பேச அவனின் பேச்சில் சிரித்தவன்,
“ஸார் டைவர்ட் பன்றீங்களோ? இந்த டகால்ட்டி வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்…” என்றவன்,
“ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற ஷிவா?…” என்றான் இப்போது விளையாட்டை கைவிட்டு நட்புடன் கேட்டான் ஜீவன்.
“தெரியலை மாமா, இப்போ வேண்டாம்னு தோணுது…”
“முன்னாடி வேண்டாம்னதுக்கு என்ன வேணும்னாலும் இருக்கட்டும். இப்போ?…”
“அதான் சொன்னேனே, முதல்ல மாடி எடுக்கனும்…”
“மாடி எடுத்தாச்சு. பினிஷிங் கூட முடிஞ்சது தான்….”
“கார்…”
“அது விஷயமே இல்லை. நீ இங்க வரும் போது கார் இருக்கும்…”
“வாங்கி குடுக்கற மாதிரி பேசாதீங்க மாமா. என்னதான் நான் யு.எஸ்ல வேலை பார்த்தாலும் இன்னும் எங்களுக்கு அதெல்லாம் பெரியவிஷயம் இப்பவும்…”
“ஏன்டா உனக்காக வாங்கி தரமாட்டேனா?…”
“மாமா, நான் அப்படி சொல்லலை…”
“சரி இப்ப இன்னும் கொஞ்சம் ப்ராங்கா பேசுவோம். பேசுவோமா?…” என,
“எனக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லை. நான் பர்பெக்டா இருக்கேன். கல்யாணம் பண்ணிக்க கூடிய எலிஜிபிள் பேச்சிலர் தான்….” என்றான் வெளிப்படையாகவே.
“அப்போ பொண்ணை பிக்ஸ் பண்ணிடவேண்டியது தானே? இதுல என்ன கஷ்டம்?…”
“அதுக்கில்லை, இப்ப இங்க திரும்பி வந்து நாலு மாசம் ஆகுது. திரும்ப கல்யாணம், லீவ். அதான் யோசிச்சேன்…”
ஷிவா பேச பேச அவனின் முகத்தையே உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தான் ஜீவன்.
“ஊஃப், இவ்வளோ தானா? நான் கூட என்னவோன்னு நினைச்சுட்டேன்…”
“இல்லை, நான் சொல்லி முடிக்கலை. கல்யாணம் முடிஞ்சதும் அங்கயே வொய்பை விட்டுட்டு வர முடியாதுல. அந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்குது. எப்படியும் இங்க தான் கூட்டிட்டு வரனும். இங்க வீடு பார்க்கனும். நான் இருக்கற அப்பார்ட்மென்ட் வசதிப்படுமான்னு பார்க்கனும்…” என்றான் ஷிவா.
அவன் பேச பேச ஜீவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஷிவாவிற்கு கல்யாணத்தில் பிரச்சனை இல்லை. கல்யாணப்பெண் தான் பிரச்சனை என்று. இதழ்கள் லேசாய் புன்னகையில் நெளிந்தது.
“நிறையவே திங்க் பண்ணிருக்க. வெல்…” என்ற ஜீவன் அமைதியாக இருக்க,
“என்னவோ சொல்ல வரீங்க நீங்க. ஆனா என்னன்னு தெரியலை…” என்றவன் குரல் லேசா திணறியே வந்தது.
ஷிவாவின் மனது அவனுக்கே விளங்கவில்லை. முதலில் தேன்மொழிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று தள்ளி போட்டிருந்தான். அதன் பின் மறுக்க எதுவும் இல்லை.
தேன்மொழி, ஜீவன் திருமணத்தன்றே கார்மேகம் அவனிடம் தனியாக அழைத்து கேட்டிருந்தார். அப்போதே அவரிடமும் சொல்லிவிட்டான்.
“நீங்க பார்த்துட்டே இருங்கப்பா, அதுக்குள்ளே வீட்டை எடுத்து கட்டி, ஒரு கார். இதுதான் நினைச்சுட்டு இருக்கேன். பண்ணிடலாம்…” என ஒப்புதல் கொடுத்திருந்தான்.
இப்போது அதை நினைத்தவன் மனது எதைஎதையோ நினைத்து எங்கெங்கோ முடிச்சிட்டு பார்த்துக்கொண்டு இருந்தது.
அவனின் எண்ணங்களே அவனுக்கு எதிராகவும், சாதகமாகவும் இருந்தது. ஒத்துவருமா வராதா என்ற நினைப்பு கூட இல்லாமல் தனக்குள் தோன்றுவது உண்மையா, இல்லை பிரம்மையா என்று குழம்பிக்கொண்டு இருந்தான்.
“ஷிவா…” என்ற ஜீவனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவன்,
“சொல்லுங்க மாமா…”
“பொண்ணு யாருன்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?…” என கேட்க அவனிதயம் படபடவென அடித்துக்கொண்டது.
“ஆங், சொல்லுங்க. சொல்லுங்க…” என்றான் படபடப்புடன்.
“உனக்கும் தெரிஞ்சிருக்கும் தான்…” என்ற ஜீவனின் பேச்சில் ஒருவேளை அவனின் சொந்தமோ என்று வேறு யோசித்தவன் எதையும் நினையாதே மனமே என சொல்லிக்கொண்டு எதுவாக இருந்தாலும் அவர்களிஷ்டம் என சொல்ல தயாராய் இருந்தான்.
“பொண்ணு நம்ம அப்பார்ட்மென்ட் தான். செகேன்ட் ஃப்ளோர். பேரு ஷக்தி. ஆதிஷக்தி. இனி ஷிவாஷக்தி ஆகறது உன் கையில. ஐ மீன் உன்னோட சம்மதத்தில தான் இருக்குது…” என்று சிரிப்போடு ஜீவன் சொல்ல ஷிவா எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் அப்படியே இருக்க,
“என்ன ஷிவா? உனக்கு ஓகே தானே?…” என்றான் ஜீவன் மீண்டும் அவனிடத்தில்.
“பட்டுன்னு பலூன் வெடிச்ச சத்தம் உங்களுக்கு கேட்கலையா மாமா? ஹய்யோன்னும், ஹய்யான்னும் அட் எ டைம்ல ஒண்ணுபோல கேட்குது. என்ன சொல்ல?…” என்றான் ஷிவா.
அவனின் பேச்சில் அடக்கமாட்டாமல் ஜீவன் சிரித்துவிட ஷிவாவும் இறுக்கம் தளர்ந்து அங்கிருந்தே ஹைபை போல கையை காண்பிக்க இங்கிருந்து ஜீவன் அடித்துக்கொண்டான்.
“பிடிச்சிருக்கா?…” என ஜீவன் கேட்க,
“உங்களை எனக்கு எப்பவுமே பிடிக்குமே. உங்களை பார்த்த அன்னைக்கே கப்புன்னு புடிச்சிருச்சு…” என்று கண்ணடித்து ஷிவா சொல்ல,
“நல்லவேளை நீ பொண்ணா பிறக்கலைடா….” என ஜீவாவும் கேலி பேச,
“நான் குடும்பம், கட்டுப்பாடுன்னு வாழறவன். சோ என் வீட்டு மனுஷங்க சொல்றது தான் எனக்கும். உங்க எல்லாரோட இஷ்டம் தான் என்னோட இஷ்டமும்…” என்று லேசாய் தலைசாய்த்து நாணம் போல ஷிவா நடித்து சொல்ல,
“இது உலகமகா நடிப்புடா சாமி. இன்னொரு பொண்ணு கூட இருக்கே…”
“என்னால ஒரு பொண்ணுக்கு தான் வாழ்க்கை குடுக்க முடியும் மாமா. நீங்க சட்டத்தை மீறி செயல்படறீங்க…”
“நினைப்புத்தான். ஷக்தியை கேன்சல் பண்ணிட்டு நான் சொல்ற பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணனும்ன்னு நான் சொன்னா?…”
“புலிய புடிச்சு கூண்டில் அடைச்சு அமுக்க சொல்லுகிற குடும்பம். அது எப்படி ஒத்துக்கும்ப்பா. அது எப்படி அமுக்கும்ப்பா. ஓஓஓ….” என ஷிவா பாட வயிற்றை பிடித்துக்கொண்டு எழுந்து நின்று சிரித்தான் ஜீவன்.
“அடேய் போதும்டா. போ போ போய் கனவு காணாம பொழப்பை பாரு. அப்பத்தான் கல்யாணம்…” என சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தவன் லேப்டாப்பை அணைத்து போட்டுவிட்டு அந்த அறையை பூட்டியவன் வீட்டின் விளக்குகளையும் அமர்த்திவிட்டு கிட்சனிற்குள் நுழைந்தான்.
மொழிக்கும் அவனுக்குமாக பாலை காய்ச்சியவன் பனங்கற்கண்டை கலந்து குடிக்கும் பதத்தில் ஆற்றியவன் எடுத்துக்கொண்டு வர ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேன்மொழி.
ஒரு தம்ளரில் இருந்த பாலை தான் குடித்துவிட்டு அவளுக்கானதை மூடி வைத்தவன் பாத்ரூம் போய்விட்டு வந்து உறங்க போக அவனின் மொபைல் சப்தம் எழுப்பியது.
எடுத்து பார்க்க புது எண்ணாக இருந்தது. அதுவும் இது அவனின் பிரத்யோகமான எண் வேறு. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ஜீவ்…” என்ற குரலில் உடல் விரைத்தது.
“ஜீவ், கேட்கறியா? ஜீவ் தானே?…” என்ற குரலில் கண்கள் சிவக்க வாயை திறந்து நன்றாக திட்ட போனவன் பின் அதை விடுத்தவனாக லேசாய் குரலை மாற்றி,
“ராங் நம்பர்ங்க…” என சொல்லி கட் செய்துவிட்டான்.
மீண்டும் அந்த அழைப்பு வர அதை துண்டித்து ப்ளாக்கில் போட்டுவிட்டு எரிச்சலுடன் கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.
அவனின் வேகத்தில் உறக்கத்தில் இருந்தவள் புரண்டு படுத்து உறங்காமல் இருக்கும் அவனை பார்த்து,
“இன்னும் தூங்கலையா? இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தீங்க?…” என உறக்க கலக்கத்தில் தேன்மொழி கேட்க அவளை பார்வையால் வருடியவன் முகம் மென்மையுற்றது.
“உனக்கு பால் எடுத்துட்டு வர போனேன். எழுந்துக்கோ. குடிச்சுட்டு படுப்ப…” என்று எழுப்ப,
“என்கிட்டே சொல்லிருக்கலாம்ல…” என்றவளின் சிணுங்கலில் அவளை போலவே,
“என்னன்னு?…” என்றான் ஜீவனும்.
“அண்ணா என்ன சொன்னான்?…” என்றாள் பேச்சை மாற்றியபடி.
அவளுக்கு பாலை எடுத்து தந்தவன் வாகாய் அவளோடு அமர்ந்து கொண்டு பேசியதை சொல்ல சொல்ல தலையை ஆட்டிக்கொண்டே கேட்டுகொண்டாள் தேன்மொழி.
“நான் என்ன கதையா சொல்றேன். இந்த ஆட்டு ஆட்டற?…” என அவளின் தலையை பிடித்து தானும் ஆட்டிவிட அவனின் மேல் சாய்ந்துகொண்டாள்.
“எனக்கு எப்பவுமே நீங்க பேசறதுனா கேட்க பிடிக்குமே. கேட்டுட்டே இருப்பேன் தானே?…” என சலுகையுடன் சொல்லியவள் அவனின் கழுத்தை கட்டிக்கொள்ள,
“ஹ்ம்ம், இனியும் கேட்டுட்டே இருக்கலாம் தான். கேட்டுட்டே தான் இருப்ப…” என்றவனின் கரங்களும் அவளின் மேனியில் அழுத்தம் கொடுக்க,
“என்னாச்சு?…” என்றாள் அவனின் பேச்சில், இந்த செயலில்.
“என்ன என்னாச்சு?…”
“இல்லை டென்ஷனா இருக்கற மாதிரி இருக்கே. அதான்…”
“அப்படியா தெரியுது?…” என கேட்டவன்,
“டென்ஷன் தான். இந்த ரூம்ல உன்னை தனியா விட்டுட்டு மச்சானோட கடலை வறுக்க போய்ட்டேனேன்னு டென்ஷன்…” என கேலிக்குரலில் சொல்லியவன் அவளின் தலையில் செல்லமாய் முட்ட,
“விடிய விடிய வறுத்துட்டே இருங்க. யார் வேண்டாம்ன்னா?…” என்றவள் பார்வை அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் பதிய,
“போச்சு, நாளைக்கு எழுந்த மாதிரி தான். வேலைக்கு போகனும். தூங்குங்க…” என்று சொல்ல,
“நான் ஒழுங்கா அப்பவே பேசி முடிச்சுட்டு நல்லபையனா வந்து தூங்கிருப்பேன். எல்லாம் உன்னால தான்…” என கள்ளப்புன்னகை புரிய,
“என்னால எல்லாமா? இதெல்லாம் அடுக்கவே அடுக்காது…”
“எது? சொல்லேன். நானும் அடுக்குமா, இல்லையான்னு பார்க்கறேன்…” என்று அவளோடு வம்புக்கு பேச,
“இப்படி பேசியே…”
“பேசியே…” என்றவனின் சிரிப்பில் முகத்தை மூடிக்கொண்டவள் அப்படியே படுத்துக்கொள்ள,
“இப்படி இருந்தா தூக்கம் வராது மொழி…” என்ற ஜீவனின் கிசுகிசுப்பான குரலில் அவனை விட்டு நகர்ந்து படுக்க,
“ஒரு பேச்சுக்கு சொல்லிட கூடாதே…” என மீண்டும் அவளை நெருங்கி அணைத்துகொண்டு உறங்கினான் ஜீவன்.
இருவரின் வாழ்க்கையும் வண்ணமயமாய் மாறியிருந்தது. ஒருவரை விட்டு ஒருவர் ஒருநாள் கூட பிரிந்து இருக்கமுடியாதென்னும் பித்துநிலைக்கு என்றோ வந்துவிட்டிருந்தனர்.
வர்ஷாவும் சென்னை வந்து சேர்ந்தாள்.