புன்னகை – 25
அன்று ஷிவா ஷக்தியின் திருமணம். ஷிவா முதலிலேயே சொல்லிவிட்டான் ஜீவன், மொழிக்கு நடந்த அதே கோவிலில் வைத்து நடத்திக்கொள்ளலாம் என்று. அவனின் பேச்சை ஒருவரும் மறுக்கவில்லை.
ஒருமாத விடுமுறையில் வந்திருக்கிறான். திருமணம் முடிந்து இருபது நாளில் ஷக்தியை அழைத்துக்கொண்டு கிளம்புவதாக முடிவு.
அன்று அதிகாலை முகூர்த்தம் முடிந்திருக்க காலை உணவு கோவிலின் மண்டபத்தில் வைத்து நடந்துகொண்டு இருந்தது.
அன்று நல்ல முகூர்த்தம் என்பதால் இன்னும் இரண்டு திருமணங்கள் அடுத்தடுத்த முகூர்த்த நேரத்தில் நடக்கவிருந்தது.
கூட்டமும் அதிகமாக இருக்க உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரத்தில் கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாம் என்னும் யோசனையுடன் தான் இருந்தார்கள்.
உணவுக்கூடத்தில் ஜீவனும் தியாகுவும் திருமூர்த்தியுடன் சேர்ந்து பரிமாறிக்கொண்டு இருக்க ஷிவா, ஷக்தியுடன் தேன்மொழியை அமரவைத்து பரிமாறிக்கொண்டு இருந்தான் ஜீவன்.
“பீட்ரூட் ஹல்வா உனக்கு பிடிக்கும்ல. சாப்பிடு…” என அவளுக்கு வைக்க,
“எப்பவும் அல்வாவே சாப்புட்டுட்டு இருந்தா மத்ததை எப்ப சாப்பிட? இனிப்பு ரொம்ப சேர்க்க கூடாது…” என போகிற போக்கில் தியாகு சொல்லி செல்ல,
“அவர் இருக்காரு. நீ எடுத்துக்கடா மொழியம்மா…” என பார்த்து கவனித்தான்,
“என்னத்த சொல்லி என்ன செய்ய? டாக்டருக்கு தானா தெரிஞ்சிருக்கனும்…” என்று தேன்மொழிக்கு இட்லியும், வெண்பொங்கலும் கொண்டு வந்து வைத்த தியாகு,
“சாம்பார் தொட்டுக்க…” என சொல்லி செல்ல அங்கே அவனின் அதிகாரத்தில் சிரிப்பு வெடிதான்.
“ஓவர் சலம்பலா இருக்கே? ஒரு மச்சான் சாங் போட்டாதான் வழிக்கு வராம இருப்பாரு…” என ஜீவன் நொந்துகொண்டான்.
இன்னும் தியாகு நேரடியாக சகஜமாக ஜீவனிடம் பேசவில்லை என்றாலும் சொல்வதை எல்லாம் முறைப்புடனே சொல்லி செல்வான்.
“நல்லா இருக்குது ஒங்க கவனிப்பு? பொண்டாட்டிக்கே பரிமாறிட்டு இருந்தா வந்தவகளுக்கு ஆரு வப்பாங்கலாம்?…” என அகல்யா ஜீவனின் கையில் இருந்த அல்வாவின் வாளியை வாங்கிக்கொண்டு செல்ல,
“இவ ஒருத்தி…” என சலித்தவன்,
“என்ன என்னையே பார்த்துட்டு இருக்க. எடுத்து சாப்பிடு…” என தேன்மொழியை பார்க்க,
“மாப்பிள்ளை, பொண்ணு உட்கார்ந்திருக்கோம்னு ஒரு மரியாதைக்கேனும் அந்த அல்வாவை எங்களுக்கு கண்ணுல காமிச்சிருக்கலாம். இதெல்லாம் அநியாயம் மாமா…” என ஷிவா குமுற,
“ஊருக்கு போறவனுக்கு இன்னைக்கே எதுக்குடா ஸ்வீட்? இருக்கறதை சாப்பிடு போதும்…” என்ற ஜீவன்,
“சுத்த பொறாமை புடிச்சவன்ம்மா இவன். மாப்பிள்ளை பார்க்கிற அன்னைக்கே என்னை குறுகுறுன்னு பார்த்தான். அப்பவே நினைச்சேன் இவன் இப்படித்தான்னு. பார்த்துக்க…” என ஷக்திக்கு எடுத்து கொடுக்க,
“உண்மையை சொல்லுங்க மாமா, இதுக்காக தான் பிரட் ஹல்வா, பிஸ்கட் ஹல்வான்னு இருந்த மெனுல பீட்ரூட் அல்வாவை மாத்தினீங்களா நீங்க?…” என ஷிவா பிடித்துக்கொள்ள,
“ஆமா உன் கல்யாணத்துல என் பொண்டாட்டிக்கு பிடிச்சது கூட இல்லைன்னா எப்படி? இதுக்குத்தான் மாப்பிள்ளை முறுக்கை காமிச்சுட்டு ஒய்யாரமா உட்காரனும்ன்றது. இறங்கி செஞ்சா மதிப்பே இல்லை…”
மீசையை முறுக்கிவிட்டு வேஷ்டியை மடித்தபடி சொல்லிய ஜீவனை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க,
“என்னை விட இவர் ஓவர் அலம்பல் பன்றாரே…” என ஷக்தியிடம் புலம்பினான் ஷிவா.
“பார்த்துக்க மொழி, உனக்கு பிடிச்ச அல்வா இருக்கேன்னு கூட சந்தோஷப்படாம தனக்கு வைக்கலையேன்னு பார்க்கறான்…” என்ற ஜீவன்,
“உன் கல்யாணத்துக்கு வரவங்களை இப்படித்தான் கவனிப்பியா? எங்க உன் மாமனார், மாமியார். கூப்பிடு நான் கேட்கறேன்…” என அலப்பரையை கூட்ட,
“போதும். இன்னைக்கு வேணும்னா நான் விரதம். ஆளை விடுங்க…” என ஷிவா அடக்கி வாசிக்கவும் மீண்டும் மனைவியை கவனிக்க ஆரம்பித்தான் ஜீவன்.
“இந்த அழிச்சாட்டியம் தேவையா? இப்படியே பண்ணினா என்னை கூடவே கூட்டிட்டு போய்டுவான் பார்த்துக்கோங்க…” என தேன்மொழி மறைமுகமாய் மிரட்ட,
“அப்படியே நீயும் கிளம்பிடுவ. நானும் உன்னை விட்டுடுவேன்…” என்றவன் சத்தமில்லாமல் வாயசைத்து ‘போடி’ என்றான் செல்லமாய் மெல்லமாய்.
“போதும். போதும். ரொம்ப நீளமா போய்ட்டே இருக்குது…” என்ற ஷிவாவின் நக்கலில் அவனை திரும்பி ஜீவன் முறைக்க,
“நான் டிஷஸ் சொன்னேன். இலையை தாண்டி போய்ட்டே இருக்குதுன்னு சொன்னேன். சும்மா எல்லாத்துக்கும் அட்டேன்ஷன்ல நிக்கறது. வெரி பேட்…” என்று ஷிவா சொல்ல,
“ஐயோ அடங்கறீங்களா ரெண்டு பேரும். சாப்பிடுங்க…” என்ற மொழி,
“நீங்க எப்போ சாப்பிட போறீங்க? எவ்வளவு நேரம் இங்கனையே நிப்பீங்க?…” என வெண்பொங்கலை சாம்பாரில் தோய்த்து அவள் முழுங்க,
“பசிக்கலை. இங்கையே நின்னது ஒரு மாதிரி இருக்குது. கொஞ்சம் லேட் ஆகட்டும்…” என்றான் ஜீவன்.
“ஆமா இவர் தான் கரண்டியை பிடிச்சு சமைச்சாராம்…” ஷிவா மீண்டும் தொடங்க,
“ஷக்தி, உன் பாஸ்போர்ட் என்கிட்டே தானே இருக்குது?…” என ஜீவன் கேட்க,
“தெய்வமே, தெய்வமே. நன்றி சொல்வேன் தெய்வமே…” என எழுந்தே நின்றுவிட்டான்.
“அது…” என்ற ஜீவன் தேன்மொழியின் தலையில் லேசாய் தட்டிவிட்டு மற்றவர்களை கவனிக்க சென்றுவிட்டான்.
உணவு முடிந்து ஷக்தி தேன்மொழியின் கையை பிடித்தபடி மெதுவாய் எழுந்து அவளை அழைத்துக்கொண்டு கையை கழுவ வந்தாள்.
“முடிஞ்சதா? இந்தா மசாலா பால்…” என்று வந்து நின்றான் ஜீவன். மொழிக்கும், ஷக்திக்கும் மட்டும் எடுத்து வந்திருக்க,
“வா ஷக்தி ஷேர் பண்ணிப்போம்…” என்று ஷிவா அவளிடம் இருந்த கப்பை வாங்க போக,
“நீ வா மொழி, நாம அந்த சேருக்கு போவோம்…” என்றான் ஜீவனும் வம்படியாக.
“இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு? ஏன் முட்டிக்கறீங்க?…” என்று கேட்டேவிட்டாள் தேன்மொழி.
“அதொண்ணுமில்லை, அம்மா உனக்கு ஏழாம் மாசமே வளைகாப்பு போடனும்னு சொல்றாங்க. மாமாவுக்கு ஒன்பதுல போட்டா போதுமாம். போதாததுக்கு தெய்வாத்தை வேற சரின்னு சொல்லிட்டாங்களாம். அதான் என்கிட்டே சொன்னார். நான் வீட்டுல எப்படி பேசன்னு சொன்னேன்…”
“இது எப்போ நடந்தது?….”
“நேத்து நைட் தான். அதான் முறுக்கிட்டு சுத்தறார் என்னை வெறுப்பேத்திட்டு…” என ஷிவா சொல்ல,
“ஏண்ணா நீ சொன்னாலும் சொல்லாட்டிலும் அவர் என்னை விட போறதில்லை. இதுக்கு ரெண்டுபேரும் முறைச்சுட்டு சுத்தறீங்களாக்கும்?…” என மொழி சொல்லி சிரிக்க,
“இவனுக்கு ஓவர் வாயாகிடுச்சு மொழி. இவன் மட்டுமா மச்சான்? இன்னொரு பெரியமச்சான் இருக்காரு. என்னால அவரை கரெக்ட் பண்ண முடியாதா என்ன?…” என்றவன்,
“மச்சான்ன்ன்ன்…” என ராகம் போட்டபடி தியாகு இருக்கும் பக்கம் செல்ல அங்கே தியாகு,
“தேங்காய் சட்னி தீர்ந்து போச்சு. மாத்தி குடுப்பா…” என கர்ச்சீப்பில் வியர்வையை துடைத்தபடி சொல்ல,
“என்னைய்யா?…” என்றான் ஜீவன் படக்கென கர்ச்சீப்பை எடுத்துவிட்டு பார்க்க அங்கே சிரித்தபடி ஜீவன் நிற்க,
“சட்னி எடுத்து தர சொல்லி கேட்டீங்களே, அதான் என்னய்யா சொன்னீங்கன்னு கேட்டேன்…” என வழக்கம் போலவே சொல்ல தியாகுவின் உஷ்ணப்பார்வையில்,
“ஓகே, சும்மா என்ன பன்றீங்கன்னு வந்தேன். கேரியான்…” என்றவன் மீண்டும் திரும்ப தியாகு ஜீவனை பார்த்துக்கொண்டே சட்னியை பாத்திரத்தில் எடுக்க கரண்டியை தொட,
“மச்சான் அது தக்காளி சட்னி…” என்றதும் தியாகுவும் கவனியாமல் கரண்டியை போட கரண்டி பாத்திரத்தில் மூழ்கிப்போனது அவன் போட்ட வேகத்தில்.
ஆனால் அது உண்மையில் தேங்காய் சட்னி தான். ஜீவன் தான் வேண்டுமென்றே சொல்லியிருக்க போட்ட வேகத்தில் சட்னி தியாகுவின் சட்டையில் வேறு தெறித்துவிட,
“ரொம்ப சீண்டிட்டோமோ?…” என முனங்கியவன்,
“மொழி, வா வா, போய் சாமியை பார்த்துட்டு வந்திருவோம்…” என அப்படி ஒரு சம்பவமே நடக்காததை போல தேன்மொழியை அழைக்க மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் நடந்த சம்பவத்தில்.
“தேவையா? சும்மா இருந்தவர்ட்ட போய் வம்பிழுத்து இப்ப அண்ணா டென்ஷன் ஆகிட்டாரு…” என தேன்மொழி சொல்ல ஷிவாவும், ஷக்தியும் கூட சேர்ந்து கலாய்த்தனர்.
“சரி, சரி. வா நாம இடத்தை காலி பண்ணுவோம்…” என்றவன் மீண்டும் உணவுகள் இருந்த இடத்தை தாண்டி செல்லும் பொழுது,
“இந்தாப்பா தம்பி, பீட்ரூட் ஹல்வா ஒரு டப்பா எடுத்து தனியா வச்சிடு…” என அங்கே ஒரு டவலை போர்த்தியபடி குனிந்திருந்தவரிடம் சொல்ல,
“அதையும் நான் தான் செய்யனுமா?…” என வேகமாய் நிமிர்ந்தான் தியாகு.
சுத்தமாய் அவனை எதிர்பார்க்காதவன் வந்த சிரிப்பை அடக்க உதட்டை கடித்துக்கொள்ள,
“அண்ணா நீங்க…”
“உன் புருஷனால என் சட்டை போச்சு. அதான் கழட்டிட்டு இந்த டவலை போர்த்திருக்கேன். சுலோ வேற ஷர்ட் எடுத்துட்டு வர போயிருக்கா. இங்க ஆள் வேணும்ல அதான் நிக்கறேன்…” என்று வேகமாய் சொல்லியவன்,
“நீ எங்க போற? ஒரு இடத்துல இருக்க மாட்டியா?…” என அதட்ட,
“ என் கூடத்தான் வரா. சாமி பார்க்க போறோம்…” என ஜீவன் சொல்ல,
“ஹ்ம்ம், ம்ம்ம். அல்வா அப்பவே எடுத்து வச்சுட்டேன். அம்மாக்கிட்ட இருக்குது அந்த பாத்திரம். உள்ள போறப்ப கவனமா போங்க. இடிச்சுக்காம…” என உர்ரென்ற முகத்துடன் சொல்லிவிட்டு திரும்பிக்கொள்ள ஜீவன் அப்படியே நின்றான்.
“என்னங்க வாங்க போகலாம்…”
“மொழி மச்சானை ஒரு ஹக்கு ஹக்கிட்டு வரேனே? அப்படியே சிலிர்த்து போச்சு…” என்று சொல்லவும் ‘நீ இன்னும் போகலையா?’ என்பதை போல தியாகு திரும்பி பார்க்க ஜீவன் முகத்தில் நவரசத்தையும் வடித்தான்.
“என்னம்மா? என்னவாம்?…” என தேன்மொழியிடம் கேட்டுக்கொண்டே ஜீவனை விட்டு இரண்டடி பின்னால் தள்ளி நிற்க,
“மச்சான் சும்மா சொல்ல கூடாது. கட்டிங் கட்டிங்கா இருக்குது. எய்ட் பேக் வச்ச மாதிரி. இப்படியே மெய்ண்டெய்ன் பண்ணுங்க…” என சொல்லிவிட்டு தியாகு எதிர்வினையாற்றும் முன் மொழியுடன் ஓடிவிட்டான் ஜீவன்.
‘என்னத்த கட்டிங்குன்றான்?’ என குனிந்து பார்க்க உள்பனியனில் வயிறு தொப்பை போட்டு கழுத்துவரை தனித்தனியாக தெரிய,
“இவரை…” என பல்லை கடித்தான் தியாகு. அதற்குள் சுலோ வந்துவிட சட்டையை வாங்கியபடி,
“ஒரு சட்டைய கொண்டு வர உனக்கு இவ்வளவு நேரமா?…” என மொத்த கோபத்தையும் மனைவியிடம் காண்பிக்க,
“உங்களுக்கு திட்டனும்னா வீட்டுல வந்து தனியா திட்டிக்கோங்க. எல்லார் முன்னாடியும் திட்டினீங்க பார்த்துக்கோங்க…” என சுலோவும் பொங்கிவிட்டு செல்ல,
“எல்லாம் என் நேரம். இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ? நேரமே சரியில்லை…” என வாய்விட்டே புலம்ப அன்று காலை ஜீவனின் முகத்தில் தான் முதலில் அவன் முழித்திருந்தான்.
எழுந்ததும் உள்ளங்கையை தான் முதலில் பார்ப்பது தியாகுவின் வழக்கம். அன்றும் கண்ணை மூடிக்கொண்டு முகத்தை தேய்த்துவிட்டு உள்ளங்கையை பார்க்கும் முன் சப்பென்று சத்தம். தன்னைப்போல சத்தம் கேட்டதும் அங்கே பார்க்க,
“எவ்வளோ பெரிய கொசு…” என ஜீவன் சொல்லி கையில் இருந்ததை ஓரமாக தூக்கி போட்டான்.
முதல்நாள் சில சொந்தங்கள் வந்திருக்க அறைகள் எல்லாம் நிரம்பிவிட மாடியில் தங்கியிருந்தனர் ஆண்கள் எல்லாம். அப்போதுதான் தியாகு ஜீவனை பார்த்தது.
‘இவர் வாய்தான் நம்மளை வச்சு செய்யுதுன்னா முகமும் அப்படித்தான்.’ என எண்ணிக்கொண்டு சட்டையை போட்டுவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
சாமியை பார்த்துவிட்டு பிரகாரத்தில் சற்று காற்றோட்டமான இடத்தில் வந்து அமர்ந்தனர் ஜீவனும், மொழியும்.
“செம்ம கூட்டம் இல்ல. நல்லவேளையா கவனமா போய்ட்டு வந்தாச்சு…” என உள்ளே குடுத்த சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை அவளுக்கு தர வாங்கி ஒரு வாய் சாப்பிட்டவள்,
“முதல்ல நீங்க போய் சாப்பிட்டு வாங்களேன். கிளம்பனும்னு சொல்லிட்டா சாப்பிட நேரமிருக்காது…” என அவனை அனுப்ப முயல,
“தேனு…” என வந்தார் பத்மா.
“சொல்லுங்க பெரிம்மா…” என இறங்கி நிற்க பார்க்க,
“உட்காரு உட்காரு…” என அமர்த்தியவர்,
“கிளம்பறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி சொல்றேன். நீயும் மாப்பிள்ளையும் உங்க கார்ல வீட்டுக்கு போங்க. கூட சுலோவும் வருவா. நீ ஆரத்தி எடுக்கனும்ல. போய் அதுக்கு ரெடி பண்ணு…” என்று சொல்ல,
“அதுக்கென்ன பெரிம்மா, இப்பவே கிளம்பறேன்…”
“அட இருடா, இன்னைக்கு தான் நம்ம சொந்தங்கள் எல்லாம் வந்து போய்ட்டு இருக்காங்க. எல்லாருமே உன்னை தேடுவாங்க. அதனால கிளம்பறதுக்கு முன்னடி சொல்றேன். அப்ப போனா போதும்…” என்று சொல்ல,
“இந்தாங்க பெரிம்மா உள்ள சாமிக்கிட்ட குடுத்தாங்க…” என அவருக்கும் பிரசாதத்தை தர சிறிதளவு எடுத்துக்கொண்டு,
“போதும்டா நீ சாப்பிடு. இப்ப வந்திடறேன்…”என்று திரும்ப அங்கே தெய்வாவின் பின்னால் வந்துகொண்டிருக்கும் பெண்ணை பார்த்ததும் பத்மாவின் முகம் கனலாய் மாறியது.
“ஜீவா ஆருன்னு தெரியுதா? திலோத்தம்மா…” என அப்பெண்ணை அறிமுகப்படுத்த,
“ஹ்ம்ம், தெரியும்த்தா மாமா சொல்லிருக்காரு. பாத்து ரொம்ப நாளு ஆவுது…” என சொல்லிய ஜீவன்,
“நல்லாருக்கீகளா மதினி?…” என கேட்க,
“நல்லா இருக்கேன் தம்பி…” என்ற திலோத்தமா,
“நல்லா இருக்கியா தேனு?…” என கேட்டு,
“எத்தனை மாசம்த்தா?…” என்றாள் வாஞ்சையாக.
“எம்பொண்ணு மனசுக்கு நல்லாதான்ம்மா இருப்பா. அவளுக்கென்ன அவ மனசுக்கு ஏத்த மாதிரி புருஷன் கிடைச்சுட்டாரு. எல்லாரும் உன்னை போல இருப்பாங்களா?…” என வார்த்தையை கொட்டிவிட்டார் பத்மா.
“பெரிம்மா என்ன இது? ரொம்ப நாள் கழிச்சு பார்த்திருக்காங்க. இப்படி பேசறீங்க?…” என கடிந்த தேன்மொழி,
“நான் நல்லா இருக்கேன் திலோக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் சவுக்கியமா?…” என விசாரிக்க,
“தேனு, அவக்கிட்ட என்ன பேச்சு. அவ பக்கத்துல ஏன் போற?…” என பத்மா சொல்ல,
“எதுக்குங்க சம்பந்தியம்மா இம்புட்டு வெசனப்படுதீக? திலோ சொல்லித்தேன் நாங்க தேனுவ கேட்டோம். அது தெரியுங்களா?…” என தெய்வா சொல்ல பத்மாவும், தேன்மொழியும் திகைப்புடன் பார்க்க ஜீவனுக்கு இது தெரிந்திருந்தது திருமணத்தின் பின்.
“என்ன சொல்றீங்க?…” என பத்மா கேட்க,
“பத்மாம்மா நான் செஞ்சது தேனுவோட நல்லதுக்குத்தேன். வாழவேண்டிய புள்ள. என் கொழுந்தன கட்டிட்டு வாழாம அவரையும் பறிகுடுத்து நின்னுச்சு. என் மாமியாரும், மாமனாரும் அவகள அனுசரணையா பார்த்துக்க ஆள் கிடைச்சா போதும்ன்றமேனிக்கி இருந்துட்டாக…”