நெடுஞ்செழியன் அறையை விட்டு வெளியேறவும் தோழிகள் அத்தனைபேரும் சூழ்ந்துகொண்டனர்.
“என்ன காரியம் பண்ணியிருக்க சுபா? அறிவிருக்கா உனக்கு?…” என விசாலி கேட்க,
“அறிவு இருக்க போய் தான் சைன் பண்ணேன்….” என சுபஷ்வினியும் திடமாய் நிமிர்ந்து பதிலளித்தாள்.
“பேசறதுக்கு நல்லா இருக்கும். இவ்வளோ தூரம் தப்பு பன்றவங்க எதுக்கும் அஞ்சமாட்டாங்க. நாம தப்பி பிழைச்சதே பெருசு. அதோட இதை மறந்துட்டு நம்ம வேலையை பார்ப்போம்ன்னு நினைக்காம என்ன இது?…” என்றாள் விசாலி.
“இதனால உங்க யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லைன்னு நினைக்கரீங்களா?…” சுபஷ்வினி கேட்க மற்றவர்கள் இதனை கேட்டு முணுமுணுத்தனர்.
“பாதிக்கப்படாம வெளில வந்துட்டோம்ன்னு சந்தோஷப்படறோம். இதுக்கு மேல என்ன பாதிப்பு இருக்கு?…” விசாலியே மற்றவர்களுக்கும் சேர்ந்து சுபஷ்வினியிடம் பேசினாள்.
“ஏன் இல்லாம? தப்பு செய்யறவங்க இன்னும் தொடர்ந்து செய்யறதுக்கான தைரியத்தை நாம இப்படி ஒதுங்கி நின்னு தந்திட்டிருக்கோம். அது புரியலையா? அதனால நம்மை சுத்தி இருக்கறவங்க தான் பாதிக்கப்படுவாங்க, அது நமக்கு தெரிஞ்சவங்களோ, சொந்தமாவோ இருக்கனும்ன்னு அவசியமில்லை. நீ செய்யறது தப்புன்னு சொல்றதுக்கு ஆள் இல்லாதவரைக்கும் அவங்க துணிஞ்சு இதை செஞ்சுட்டே தான் இருப்பாங்க…” என்றவள்,
“நம்மை கேட்க யாருமில்லைன்னு இதைவிட இன்னும் அதிகமா செஞ்சாங்கன்னா? நாம வந்த இடத்துல மாட்டிக்க இருந்தோம். இதுவே தொடர்ந்தா பொது இடத்துல இருந்து கடத்தப்படலாம். நம்ம வீட்டுக்குள்ள இருந்தே வரவழைக்கப்படலாம். எவ்வளவோ இருக்கே…” என்றாள்.
“சுபா நீ ரொம்ப யோசிக்கிற. அதான் ஏற்கனவே ஒரு பொண்ணு கேஸ் குடுத்துச்சு, அதனால இங்க ஆக்ஷன் எடுத்தோம்ன்னு அந்த ஸார் சொன்னாரே? அந்த கம்ப்ளைண்ட் போதாதா? ஏன் நீயும் குடுத்த?…” விசாலி இன்னும் அதனை ஏற்க மறுத்தாள்.
“அந்த சின்ன பொண்ணுக்கு இருக்கற தைரியம் கூட, ப்ச் ப்ச். அப்படின்னும் சொல்ல கூடாது. அந்த பொண்ணு மாதிரி யார்க்கும் எதுவும் ஆகக்கூடாதுன்ற சமூக பொறுப்புல துளியளவாவது எனக்கு வேணும்ன்னு நினைக்கறேன்…” என சுபஷ்வினி சொல்ல,
“எங்களுக்கு எல்லாம் சமூக பொறுப்பு இல்லைன்னு சொல்றியா நீ?…” விசாலி முகம் கன்ற கேட்க,
“நான் உங்க யாரையுமே குறை சொல்லலை. சொல்ல போறதும் இல்லை. இது என்னோட தனிப்பட்ட முடிவு…” என்று ஸ்திரமாய் அவள் சொல்ல யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“லாஸ்ட்டா சொல்றேன் சுபா, இதை இந்த குற்றத்தை செய்யறது கண்ணுக்கு தெரிஞ்சவங்க இல்லை. யாருன்னே தெரியாதவங்க. அதனால உனக்கு ஆபத்து வருமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு…” என்ற விசாலி,
“முக்கியமா எனக்கு கில்ட்டியா இருக்கு. உங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து சிக்கல்ல மாட்டிவிட்டுட்டேனோன்னு. நீ இந்த கம்ப்ளைண்ட்டை வாபஸ் வாங்கிடு சுபா…” என்று கிட்டத்தட்ட கெஞ்சவே செய்துவிட்டாள்.
சுபஷ்வினியின் அசாத்திய மௌனமும், தீர்மானமான முடிவு அவளில் விழிகளில் வெளிப்பட,
“சொன்னா புரியாதா உனக்கு? இது என்ன கூட ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க மேல குடுக்கற கம்ப்ளைண்ட்டா? விளையாட்டுத்தனம் பண்ணாத சுபா. அந்த ஏசிபி ஏதோ மண்டையை கழுவிட்டு அது இதுன்னு வீரவசனம் பேசிட்டு போய்ட்டார். அவருக்கு இது ஒரு கேஸ். ஆனா நமக்கு?…” என விசாலி கத்த,
“நீ உன் எனர்ஜியை வேஸ்ட் பன்ற விசாலி. நான் குடுத்த புகார் குடுத்தது தான். என்னாலான சின்ன முயற்சி. இதை செஞ்ச யாரையும் சும்மா விட கூடாது. இனி யாருக்கும் இப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்க கூடாது…” என சுபஷ்வினி தெளிவாய் சொல்ல,
“பைத்தியமா உனக்கு? உன் வீட்டுக்கு என்ன பதில் சொல்லுவ? அங்க வந்து இந்த ஏசிபி பேசுவாரா? இல்லை உனக்கு ஆபத்துன்னா முன்னாடி நிப்பாரா? நமக்கு இனிமே தான் நல்ல லைஃப் இருக்கு. உன் ப்யூச்சரை நீயே கெடுத்துக்காத. நீ ரொம்ப போல்ட் தான். ஆனா இங்க அது செல்லுபடி ஆகாது சுபா…” என்று சொல்லிக்கொண்டிருக்க மருத்துவர் வந்துவிட்டார்.
“நீங்க எல்லாம் உங்க ரூம்ல இருங்க. கொஞ்ச நேரத்துல பெரிய டாக்டர் வருவார். ஒரே ஒரு செக்கப். அதை முடிச்சிட்டு ரிப்போர்ட்ஸ் பார்த்துட்டு கிளம்பலாம்…” என்று சொல்லவும் அனைவரும் அவர்களுக்கு தரப்பட்டிருந்த அறைக்கு சென்றுவிட்டனர்.
உடன் அவர்களின் தோழியும் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். விசாலியின் பெற்றோர் அவளை காண வேண்டும் என்று கேட்க இறுதி பரிசோதனை முடித்த பின்னரே அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் இரண்டுமணி நேரம் செல்ல மதிய உணவிற்கு பின் நெடுஞ்செழியன் மீண்டும் அங்கே வந்துவிட்டான்.
“எத்தனை மணிக்கு கிளம்பறாங்க?…” என விமலிடம் கேட்க,
“நாலு மணி போலன்னு சொல்லியிருக்காங்க. இவங்க ரிப்போர்ட்ஸ் எல்லாம் வரனும்…” என விமல் சொல்ல அவனுடன் மருத்துவரின் அறைக்குள் கதவை தட்டிவிட்டு நுழைந்தான் நெடுஞ்செழியன்.
“ஹலோ டாக்டர்…” என்றவனின் வணக்கத்தில் எழுந்து நின்று கை குலுக்கிய மருத்துவர்,
“வாங்க ஸார். உட்காருங்க…” என்று அவனை அமரும்படி சொல்லியவர் தானும் அமர்ந்தார்.
“இப்ப பேஷண்ட்ஸ் எப்படி இருக்காங்க?…” என்றவனின் கேள்வியில் லேசாய் புருவங்கள் சுருங்கியது அவருக்கு.
“இப்போ எதுவும் ப்ராப்ளம் இல்லை. அவங்க குடிச்ச அந்த தண்ணியில கலந்திருந்த மருந்தோட தாக்கம் அவங்க ரத்தத்துல கலந்திருக்கு…” என்றார் யோசனையுடன்.
“இதனால அவங்க இயல்பு வாழ்க்கை, உடல்நிலையில ஏதாவது பாதிப்பு இருக்குமா?…” என தவிப்பும், கவலையுமாய் கேட்டான் நெடுஞ்செழியன்.
“இந்த மூணுபேருக்கு அத்தனை பெரிய பாதிப்புன்னு சொல்ல முடியாது…” என்று சொல்லிய மருத்துவரின் பேச்சில் நிம்மதியை முழுதாய் அனுபவிக்கும் முன்,
“கண்டிப்பா கொஞ்சநாளைக்கு இவங்களுக்கு தாக்கம் இருக்கும். உதாரணத்துக்கு உடல் சோர்வு அதிகமா இருக்கும். கை, கால் நடுக்கம், உதறல், லேசாய் மயக்கம்ன்னு உபாதைகள் இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சரியாகனும்ன்னா உட்கொண்ட மருந்தோட வீரியம் படிப்படியா குறையனும். அதுக்கான சிகிச்சை குடுத்திருக்கோம்…” என்றவர்,
“ஆனா இதை அதிகளவில் எடுத்திருந்தாலோ தொடர்ந்து இரண்டு மூன்று பாட்டில் தண்ணியை குடிச்சிருந்தாலோ நிச்சயம் அவங்க உயிருக்கு ஆபத்து இருக்கு. பக்கவிளைவுகள் மிக மோசமா இருக்கும். இத்தனை வீரியமிக்க வஸ்துவை எப்படி எங்க இருந்து இத்தனை சுலபமா அந்த விடுதில பயன்படுத்தினாங்க? ரொம்ப அதிர்ச்சியா இருக்கு…” என்றார் அவர்.
“இது தொடர்ந்து நடந்திருந்தா, இதையே ரொம்ப இலகுவா கிடைக்கிற மாதிரி பொது புழக்கத்திற்கு கொண்டுவந்திருந்தாங்கன்னா அது உலகத்தோட மிகப்பெரிய அழிவுக்கு ஆரம்பமா இருக்கும். மனுஷங்களை மனுஷங்களே வேட்டையாடறது மாதிரி…” என்றார் வேதனையுடன்.
“இதை தடை செய்ய என்ன செய்யனுமோ பண்ணுங்க நெடுஞ்செழியன். என்னாலான எல்லாவித ஒத்துழைப்பும் நான் தருவேன். என் சந்ததிகள் இதை பார்த்திடவே கூடாது. இப்படியான கொடுமையான உலகத்தை இனி வரக்கூடிய எதிர்கால சந்ததிகள் சந்திக்க கூடாது…” என மருத்துவர் சொல்ல,
“சூர் ஸார்…” என்றவன்,
“ஒரு சின்ன ஹெல்ப். மிஸ்.சுபஷ்வினியை நான் கொஞ்சம் வெளில அழைச்சிட்டு போகனும், வித் யூர் பர்மிஷன்…” என்றதும்,
“வொய் நாட்? அழைச்சிட்டு போகலாம். அவங்களோட பேரன்ட்ஸ்க்கு இந்த விஷயம் தெரியாதோ? அவங்க யாரும் ரீச் பண்ணலையே?…” என்றார் அவனிடம்.
“இன்னும் தெரியாது. ஒரு காரணமா நான் தான் இன்பார்ம் பண்ணலை…” என நெடுஞ்செழியன் கூற,
“ஹ்ம்ம், ட்யூட்டி டாக்டர் சொன்னாங்க. ஓகே, பார்த்துக்கோங்க….” என்று அவர் சொல்லவும் அவரிடமிருந்து விடைபெற்று வெளியே வந்துவிட்டான்.
“விமல் இங்க பார்த்துக்கோ. நான் ஒரு அரைமணி நேரத்துல வந்திருவேன்…”
“சூர் ஸார். பெஸ்ட் ஆஃப் லக்…” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துவிட,
“டேய்…” என்ற நெடுஞ்செழியன் அவனின் வயிற்றில் குற்றிவிட்டு,
“அபிஷியலா தான் போறேன்டா…” என்று சொல்ல,
“எக்ஸ்ப்ளைன் பன்றீங்களே ஸார்…” என இன்னும் சிரித்தான் விமல்.
“அடிங், சிரிக்காதடா. ஒருமாதிரி இருக்கு…” என நெற்றியை தேய்த்துக்கொண்ட நெடுஞ்செழியன்,
“நல்லவேளை இந்த பூச்சி இல்லை. இல்லைன்னா என் காதுக்குள்ள குடைஞ்சிட்டே சுத்துவான்…” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி சுபஷ்வினி இருக்கும் அறைக்குள் சென்றான்.
அனைவரையும் உடை மாற்றி தயாராய் இருக்கும்படி செவிலியப்பெண் வந்து சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அதனால் அனைவருமே தயார் நிலையில் தான் இருந்தனர். கையில் குளுகோஸ் ஏற்றப்பட்டிருந்த ஊசி நீக்கப்பட்டு அவ்விடத்தில் பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்தது.
நெடுஞ்செழியன் வந்து நின்றதும் அத்தனைபேரும் பேச்சை நிறுத்திவிட்டு பீதியுடன் அவனை பார்த்தனர்.
அடுத்து என்னவோ என்பதை போல கலவரமான முகபாவனை கண்டு அவனுக்குமே பாவமாய் போனது.
“பயப்பட வேண்டாம். நான் சுபஷ்வினியை பார்க்க வந்தேன்…” என்றவன் சொல்லில்,
“இப்ப தான் இன்னும் பயமா இருக்கு ஸார். அவ ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கையெழுத்து போட்டு குடுத்துட்டா. ப்ளீஸ், அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகுமோன்னு இருக்கு. அவளை விட்டிடுங்க ஸார்…” என ஆளாளுக்கு அவனிடம் பேச அவன் முகம் சட்டென இறுக்கம் பெற்றது.
“ஒரு சின்ன விசாரணை சுபஷ்வினி. என்னோட வாங்க. அரைமணி நேரத்துல வந்திடலாம்…” என்றான் மற்றவர்களை பொருட்படுத்தாமல் சுபஷ்வினியிடம்.
“என்ன?…” என அவள் திகைத்து விழித்தாள்.
‘இவ வேற கூப்பிட்டா சரின்னு வராம’ என்று சற்றே முறைப்புடன் அவளை பார்த்தவன் தலையசைத்து ‘வா’ என்றான்.
“எதுக்கு ஸார்? எதுவானாலும் இங்கயே விசாரிங்க….” என ஒரு பெண் சொல்ல,
“ஆமா எங்க முன்னாடியே விசாரிங்க. அவளை நீங்க எங்கயும் கூட்டிட்டு போக முடியாது…” என்றாள் வேறொரு பெண்.
“அப்போ ஒவ்வொரு விசாரணைக்கும் எல்லாரும் அவங்க கூடவே இருப்பீங்கன்னு சொல்லுங்க…” என்ற நெடுஞ்செழியன் கேள்வியில் அனைவரும் வாயடைத்து பின்வாங்கினார்கள்.
“என்னாச்சு? அமைதியாகிட்டீங்க?…” என்றவன்,
“வெளில வெய்ட் பன்றேன். வாங்க மேடம்….” என சுபஷ்வினியை பார்த்து சொல்லவும் அவள் படுக்கையை விட்டு இறங்கி நிற்க,
“நடந்து வந்திருவீங்களா? இல்லை வீல் சேர் வேணுமா?…” என்றான்.
அவன் நிஜமாய் அக்கறையுடன் கேட்டுவைக்க சுபஷ்வினி பலமாய் முறைத்து பார்த்தாள்.
“என்னால நடக்க முடியும் ஸார். நானே வரேன்…” என பல்லை கடித்துக்கொண்டு சொல்ல,
‘எம்மோவ் பயந்துட்டோம்’ என்னும் பாவனையை கண்களில் காண்பித்துவிட்டு வெளியேறினான் நெடுஞ்செழியன்.
“சொன்னா கேட்டியா? இப்பவே இழுத்தடிக்க ஆரம்பிக்கிறாங்க….” என விசாலி அத்தனை கோபமாய் சொல்ல,
“ப்ச், போய்ட்டு வந்திடறேன். இதுல என்ன இருக்கு?…” என்றவள் நடக்க,
“நாங்க யாராவது வேணும்னா கூட வரவா?…” என்றாள் விசாலி கவலையுடன்.
“ஓஹ் தாராளமா. யார் வரீங்க?…” என சுபஷ்வினி சிரிப்புடன் கேட்க திறந்திருந்த கதவின் வழியாக வெளியில் விமலுடன் பேசிக்கொண்டிருந்த நெடுஞ்செழியன் காதுகளிலும் இந்த பேச்சு விழ,
“அப்போ நிஜமாவே இன்வெஸ்டிகேஷன் தான் போல?…” என்றான் விமல் நமுட்டு சிரிப்புடன்.
“அதனால என்ன? நடத்திட்டா போச்சு…” என அசராமல் நெடுஞ்செழியன் சொல்ல விமல் புன்னகைத்தான்.
சுபஷ்வினி யார் வருவதாய் இருக்கிறீர்கள் என்பதை போல அனைவரிடமும் பார்வையை செலுத்த கேள்வியை கேட்ட விசாலி கூட யோசித்து மிரண்டு பின்வாங்கினாள்.
“என்னாச்சு வரீங்களா? இல்லை நான் போய்ட்டு வரவா?…” என சுபஷ்வினி கேட்கவும்,