“ப்ளீஸ் சுபா. இப்ப கூட எங்களுக்கு பயமா இருக்கு. நீ ஏன் இப்படி இருக்க? நீ ஆபீஸ்ல பேசறப்போ எல்லாம் கேட்க நல்லா இருக்கும். ஆனா இந்த விஷயம் பதட்டமா இருக்கு. உனக்கு ஏதாவதுன்னா?…” என அதிலேயே விசாலி நிற்க,
“எதுவும் ஆகாது. நான் போய்ட்டு வரேன். நேரமாச்சுன்னா நீங்க கிளம்புங்க. நான் வந்துப்பேன்…” என சுபஷ்வினி சொல்ல,
“ஆனாலும் உனக்கு அசட்டு துணிச்சல் அதிகம் தான். கேட்கமாட்டேன்ற…” என மனத்தாங்கலுடன் ஒரு பெண் சொல்ல,
“அதெல்லாம் இல்லை. நாங்க வெய்ட் பன்றோம். நீ வந்ததும் சேர்ந்தே கிளம்புவோம். என் பேரண்ட்ஸ் என்னை கூட்டிட்டு போவாங்க. அட்லீஸ்ட் அதுவரையாச்சும் நான் இருக்கேன். நீங்க எல்லாம் கிளம்பற வரை இருந்து தான் நான் வீட்டுக்கு போவேன்…” என்றாள் விசாலி.
“ஓகே…” என சொல்லி சுபஷ்வினி வெளியே வர நெடுஞ்செழியன் விமலிடமிருந்து பார்வையை திருப்பினான்.
“ஸார் நீங்க எங்க சுபாவோட வர வரைக்கும் இங்க தான் இருப்போம் நாங்க…” என்று விசாலி சொல்ல,
“தாராளமா…” என சொல்லிவிட்டு சுபஷ்வினியுடன் வெளியே சென்றான்.
அவன் சாதாரணமாக நடந்து செல்வதை போலிருந்தாலும் அவ்விடத்தை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்துகொண்டே தான் அவன் விழிகள் பயணித்தது.
மருத்துவமனையின் முன்பகுதியில் காருடன் ஓட்டுனர் நிற்க அவரிடம் சாவியை தூக்கி போடும்படி கையை தூக்கி காண்பிக்க அவர் வீசியதும் சரியாய் பிடித்துவிட்டான் நெடுஞ்செழியன்.
“உட்கார்…” என அவளுக்கு கதவை திறந்துவிட்டவன் மறுபுறம் ஏறிக்கொள்ள இருவருக்குமான தனிமை.
மருத்துவமனைவிட்டு வெளியேறிய வாகனம் ஆளில்லா சாலையில் பயணிக்க பத்து நிமிடங்கள் வரை இருவருக்குமிடையில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.
அவன் பேசுவான் என யோசித்து சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அதற்கு மேல் பொறுமையின்றி,
“எதுக்காக என்னை தனியா கூட்டிட்டு வந்தீங்க?…” என்றாள்.
நெடுஞ்செழியன் முகத்தில் எவ்வித பாவனைகளும் இன்றி நிர்மலமாக இருக்க உடலில் அந்த இறுக்கம் இல்லை.
ஒருவித நெகிழ்வின் நிலையில் தான் அவன் இருந்தான். அதன் மென்மையை அவளை அவன் கண்ட பார்வை வெளிப்படுத்தியது.
“இப்படி பார்த்தா? ப்ச், எதுக்கு என்னை கூப்பிட்டிருக்கீங்க? பதில் சொல்லுங்க செழியன்…” என கேட்க,
“சொல்றேன். அதுக்கா தானே வந்திருக்கோம்…” என்றவன் காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அவளிடம் தனது கை பேசியை நீட்டினான்.
“இது என் போன் இல்லை…” சுபஷ்வினி அதனை வாங்காமல் கேட்க,
“ஹாஸ்பிட்டல்ல உன் போனை நீ கிளம்பும் போது தான் குடுப்பாங்க. இப்ப இல்லை. ஸ்ருதி நேத்து நைட்ல இருந்து விடாம கால். நான் முடிஞ்சளவு ஸ்டாப் பண்ணி வச்சிருக்கேன்…” என்றவன் ஸ்ருதியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்துவிட்டு,
“வேற எந்த விஷயமும் போன்ல சொல்ல வேண்டாம். ஜஸ்ட் என்கொயரி. அதுக்கு இருக்கோம்ன்னு மட்டும் சொல்லு….” என சுருக்கமாய் ஸ்ருதியிடம் தான் சொல்லியதை சொல்ல போனை வாங்கிக்கொண்டாள்.
“அஷ் நீ எப்படி இருக்க? நீ ஓகே தானே? அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என்ற ஸ்ருதியின் பதட்டத்துடனான கேள்வியில்,
“நான் நல்லா இருக்கேன் மோளே. ஒரு பிரச்சனையும் இல்லை…” என்று சொல்லிக்கொண்டிருக்க சுபஷ்வினியின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
ஒரு கையால் பிடிக்க முடியாமல் இரு கைகளாலும் போனை அவள் இறுக்கி பிடித்து ஸ்பீக்கரில் போட அதை பார்த்தவன் தானே வாங்கி அவளின் காதில் வைத்தான்.
ஸ்ருதி தான் பார்த்தவற்றை எல்லாம் சொல்லி பயந்து, பின் கொதித்து போய் பேச பேச தானும் எங்கே எல்லாம் இப்போதே சொல்லிவிடுவோமோ என நினைத்தவள்,
“ஸ்ருதி இப்ப நாங்க கிளம்பிருவோம். நான் அங்க வந்து பேசறேன்…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.
போனை வைத்துவிட்டவள் கண்கள் அவளின் கைகளை திருப்பி திருப்பி பார்த்தது.
“என் கை, என்ன இது?…” என அவனிடம் கேட்க,
“என்ன உன் கை? உன் கைக்கு ஒன்னும் இல்லை. ஒரு ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துக்கோ. அவ்வளோ தான். சரியாகிடும்…” என சொல்லியவன் அவளின் நடுங்கும் விரல்களை லேசாய் தொட தன் கைகளை இழுத்துக்கொண்டாள் சுபஷ்வினி.
“நிஜமாவே எதுவும் இல்லையா?…” என ஒருவித பரிதவிப்பு அவள் விழிகளில் கொந்தளித்தது.
“அந்த தண்ணியாலையா?…” சுபஷ்வினி கேட்க தொண்டையை செருமிக்கொண்டவன் உணர்வுகளும் இங்கே கொதிக்க ஆரம்பித்தது.
“ஹ்ம்ம்…” என மெல்ல தலையசைக்க தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டாள் சுபஷ்வினி.
“மருந்தோட தாக்கம் ரத்தத்துல கலந்திருக்கறதால ரெக்கவராக கொஞ்சம் டைம் எடுக்கும் அஷ்வினி. மத்தபடி எதுவும் இல்லை. சரியாகிடும்…” என்று அவளிடம் சொல்ல சுபஷ்வினியால் அதனை சட்டென ஜீரணிக்க முடியவில்லை.
“நான் கேஸை வாபஸ் வாங்கவே மாட்டேன்…” என்றாள் இப்போது இன்னும் உறுதியாக.
“குட்…” நெடுஞ்செழியன் ஆமோதிக்க,
“என்ன குட்? என்ன வேலை பார்க்கறாங்க உங்க டிபார்ட்மென்ட்ல? கொஞ்சம் கூடவா சந்தேகம் வரலை யாருக்கும்? எத்தனை பேர்? யாரெல்லாம் பாதிக்கப்பட்டு என்ன கஷ்டத்துல என்ன நினைச்சிட்டிருக்காங்களோ?…” என்று அரற்ற,
“ப்ச் அஷ்வினி காம் டவுன்…” என்றவனுக்கு அவளின் ஆவேசத்தை எப்படி தனிப்பதென்றே தெரியவில்லை.
“நீ ரெஸ்ட்ல இருக்கனும். என்ன ஐடியா உனக்கு? ஊருக்கு போறதா?…” என்று கேட்க,
“தெரியலை. யோசிக்கலை….” என்றாள் அவள்.
“என்ன யோசிக்கலை? ஹாஸ்டல்ல தனியா நீ இருக்கறது அட்வைஸபிள் இல்லை. உன்னோட ஹெல்த்வைஸ் நீ அப்படி இருக்கவும் முடியாது…” என்றவன்,
“விஷயத்தை வீட்டுக்கு சொல்லிடு. ஊருக்கு போ. நான் வரேன்…” என்றான் நெடுஞ்செழியன்.
“என்ன? எங்க?…” என அவள் அதிர்ந்து கேட்க அதில் சற்றே விஷமம் தலைதூக்கியது அவனுக்கு.
“என்ன என்ன? என்ன எங்க? மாமனார் வீட்டுக்கு மருமகன் வரேன்னு சொல்றது அவ்வளோ அதிர்ச்சியான விஷயமா?…” என்று விளையாட்டு போல அவன் சொல்லிவிட,
“விளையாடாதீங்க…” என்றாள் சுபஷ்வினி.
“இன்னும் எவ்வளோ நாள் இப்படியே? ஹ்ம்ம், என்ன பண்ண சொல்ற? நானும் வெய்ட் பண்ணிட்டே இருக்கேன். இனி முடியும்ன்னு தோணலை. முடியாது…” என தன் மனதை வார்த்தையாகவே போட்டுடைத்துவிட்டான்.
“இதை எனக்கு பயம் காட்டனும்ன்னு ஒன்னு பண்ணி வச்சீங்களே? அப்பவே யோசிச்சிருக்கனும்…” என சுபஷ்வினி பல்லை கடிக்க,
தனக்கு கொஞ்சமும் சளைத்தவனில்லையே அவன். அவனிடம் பேசுவதற்கு தற்போது உடலில் பலமும் இல்லை.
“லுக் அஷ்வினி, இனி சும்மா தள்ளி நின்னு பார்த்துக்க கூடிய சூழ்நிலையும் நமக்கு இல்லை….” என தீவிரம் பொதிந்த பார்வையுடன் அவன் கூற,
“அதான் இந்த கல்யாண விஷயத்துல நான் தான் அடுத்த ஸ்டெப் எடுக்கனும், நீங்க இறங்கி வரமாட்டேன்னு சொன்னீங்களே? இப்ப மட்டும் என்ன? (Zolpidem) …” கொஞ்சம் குரலில் காட்டம் கூடியது.
“ஓகே, இப்ப வாபஸ் வாங்கிக்கறேன். நீ ஸ்டெப் எடுக்க வேண்டாம். நானே எடுத்துக்கறேன். இறங்கி வரேன். போதுமா?…” என்று சொல்ல சுபஷ்வினிக்கு வீட்டின் நினைவு.
“இப்ப எதையும் பேச வேண்டாம். முதல்ல நான் வீட்டுக்கு போய்க்கறேன். இதை பத்தி பேசிக்கறேன்…” என்றவள் முகத்தையே விழியகற்றாமல் அவன் பார்க்க அந்த பார்வையில் இளகும் மனதை பிடித்துகொண்டவள்,