“டேப்லெட் எல்லாம் ஒழுங்கா போட்டுட்டு இருக்கிறயா? வேற எதாச்சும் பண்ணுதா?…” வம்பிற்கென்றே அவளிடம் தான் அவனின் மொத்த கவனமும் குவிந்தது.
சுபஷ்வினிக்கு அத்தனை சங்கடம். அதுவும் மூச்சுவாங்க சிங்கமுத்து எழுந்து நின்றிருக்க அவரை கண்டுகொள்ளாமல் நெடுஞ்செழியன் செய்யும் அலும்பில் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
“பார்த்துக்கோங்க, எவ்வளவு அக்கறைன்னு. வந்ததும் நம்மளை எல்லாம் பார்க்காம சுபாவை தான் தேடி விசாரிக்கறார். இது உங்களுக்கு குறையாக்கும்?…” என ராதிகா கணவரிடம் நொடிக்க,
“அந்த போலீஸ் நம்மளை மதிக்காம மகக்கிட்ட மட்டும் போய் பேசறாருன்னு உனக்கு தெரியலையா?…” என்றார் சிங்கமுத்து மொத்த கோபத்தையும் மனைவி மேல் கொட்டியபடி.
“ஏன்? நான் என்ன கேட்டுட்டேன்?…” நெடுஞ்செழியன் யோசிக்க,
“நீங்க பேசறதெல்லாம் எனக்கு வேற மீனிங் குடுக்குது. அங்க அப்பாவை பாருங்க…” என சொல்லவும் தான் நெடுஞ்செழியன் விஷமமாய் புன்னகைத்தான்.
“அந்த பயம் இருக்கட்டும்….” என்று சொல்லிவிட்டு,
“பேசலை, நினைக்கலைன்னு ஸீன். நினைப்பெல்லாம் எக்குத்தப்பா இருக்கு. நான் தான் நல்ல பையனா இருந்துட்டேன் போல?…” என விளையாட்டு போல அவளின் பிபியை எகிற வைத்தவன்,
“மாமான்னு கூப்பிடலாமா உங்களை?…” என்றான் இப்போது சிங்கமுத்துவை பார்த்து.
“என்ன மாமா? ஆரம்பமே இப்படி இருக்கு?…” சுபஷ்வினி வேந்தரின் காதில் முனுமுனுக்க,
“இந்தாங்க தம்பி காபி…” என்று ராதிகா அவனுக்கு காபி, பலகாரத்துடன் உபசரித்தார்.
“ஊர்ல அம்மா, தம்பி, தம்பி சம்சாரம் எல்லாம் சௌக்கியங்களா?…” என்றும் கேட்க,
“எல்லாரும் நல்லா இருக்காங்க த்தை. நீங்க எப்படி இருக்கீங்க?…” என்று காபியை குடித்தான்.
“நல்லா இருக்கேன் தம்பி. வேலை எல்லாம் எப்படி போகுது?…” என அவரே பேச சிங்கமுத்துவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“எல்லாத்தையும் நீயே பேசினா இங்க நான் எதுக்கு இருக்கேன். நகரு…” என்று இரைந்தவர்,
“வணக்கம்…” என்று சொல்லிவிட்டு நெடுஞ்செழியன் எதிரே அமர்ந்தார்.
“என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்…” என்று அடுத்ததாய் பட்டென்று பேச,
“விஷயத்தை ஓரளவு தெரிஞ்சிருப்பீங்க. இருந்தாலும் சொல்லனுமே நானும்…” என்றவன் வழக்கு பற்றி பேசினான்.
முதலில் திருமணம் பற்றி பேசினால் வழக்கை காரணம் காட்டிவிடலாம் என நினைத்தவருக்கு அந்த வாய்ப்பும் இல்லாது போனது.
“நான் உடைச்சே சொல்லிடறேன் தம்பி. உங்க சம்பந்தம் வந்தப்போ ஒரு ஆசையில, ஏதோ நினைப்புல தான் நான் சரின்னேன். எப்ப உங்களுக்கு விபத்துன்னு தெரிஞ்சதோ தெரிஞ்சே என் மக வாழ்க்கையை பாழாக்க முடியாதுன்னு ஒதுங்கிட்டேன். ஆனா அது இன்னும் தொடர்ந்துட்டு வருது…” என்றவர்,
“என் பொண்ணு மனசு எனக்கு புரியாம இல்லை. அதுக்காக அவ வாழ்க்கையை நான் பாழாக்கிட முடியாது இல்லையா? அதுவும் இப்ப இருக்கற சூழ்நிலைக்கு. அவ செஞ்சிட்டு வந்திருக்கற காரியத்துக்கு…” என கலக்கத்துடன் பேசினார்.
“இப்பவும் என் மனசு ஒப்புக்கலை. நீங்க இதுக்காக மட்டுமே வரலைன்னு தெரியும். ஆனா சரின்னு ஒப்புக்கு என்னால சொல்லிட்டு எந்த நேரமும் நெஞ்சுல நெருப்பை கட்டிட்டு இருக்க முடியாது. அவ குடுத்த புகாரை வாபஸ் வாங்க சொல்லிடறேன். விட்டுடுங்க…” என்றார் சிங்கமுத்து.
“அப்பா, கேஸ் எல்லாம் வாபஸ் வாங்க மாட்டேன். அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம். உள்ள வாங்க. தனியா பேசனும்…” என்று சுபஷ்வினி சொல்ல,
“இதோ வரேன்…” என எழுந்ததோ நெடுஞ்செழியன்.
“நீங்க எங்க?…” என சுபஷ்வினி அயர்ந்து போய் கேட்க,
“பொண்ணு பார்க்க வந்திருக்கேன். காபி குடிச்சாச்சு. அப்பறம் நெக்ஸ்ட் பொண்ணோட தனியா பேசறது தானே?…” என்று அவளிடம் கேட்டு,
“இதுதானே வழக்கம்? என்ன சித்தப்பா?…” என்றான் வீரவேந்தரை பார்த்து கண் சிமிட்டி.
சிங்கமுத்துவிற்கு சத்தியமாய் எதுவும் விளங்கவில்லை. இத்தனை நேரம் மூச்சை பிடித்துக்கொண்டு பேசியிருக்க இவன் என்ன கிண்டல் செய்கிறானா என கோபமாய் பார்த்தார் அவனை.
“இவ்வளோ டென்ஷனாகாதீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றவன்,
“ஆமா, கல்யாணத்தை பத்தி தான் பேச வந்திருக்கேன். அதோட அஷ்வினியோட பாதுகாப்பும் எனக்கு முக்கியம். இதுக்காகவா கல்யாணம்ன்னு நினைக்காதீங்க. எனக்கு இது ஒரு சாக்குன்னு வச்சுக்கோங்க. அது உண்மையாவும் இருக்கலாம்…” என்றான் வெளிப்படையாக.
“எந்த வேலையில தான் ரிஸ்க் இல்லைன்னு நினைக்கறீங்க? வருஷமெல்லாம் பழகின ஆத்துல கூடுதலா ஒரு இன்ச் தண்ணி வந்து அதுல நீந்த முடியாம ஆளை அடிச்சிட்டு போயிடறது இல்லையா? சாதாரணமா நடந்து போறவங்க கூட விபத்துல சிக்கறது இல்லையா?…” என்றவன்,
“விதி முடியும் போது அவன் எவ்வளவு பாதுகாப்பான இடத்துல இருந்தாலும் போகவேண்டிய நேரம் போகத்தான் செய்வான். இப்படி ஆகிடுமோ, அப்படி நடந்திடுமோன்னு பயந்துட்டே எதுவும் செய்யாம இருந்தா மட்டும் நமக்கு எதுவுமே ஆகாதுன்னு என்ன கேரண்டி?…” என கூற சிங்கமுத்து மௌனமாகிவிட்டார்.
“எனக்கு அஷ்வினியை பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்ணு பார்க்க கிளம்பின எங்களை வரவேண்டாம்ன்னு சொன்ன காரணத்தால கொஞ்சம் ஈகோ. அதனால விட்டுபிடிக்கலாம்ன்னு நாங்களும் இருந்துட்டோம். அது இத்தனை பெரிய இடைவெளியை உருவாக்கிருச்சு….”
“பொண்ணை நம்பி குடுங்க. கண்டிப்பா நல்லபடியா வாழ்வோம். ஏன் உங்க பொண்ணு என்னை பத்திரமா பார்த்துக்க மாட்டாளா என்ன? உங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்லையா?…” என்று புன்னகையுடன் முடிக்க ராதிகாவின் முகத்திலும் மென்னகை.
“கவுத்துட்டார் மாப்பிள்ளை…” வேந்தர் சொல்ல சுபஷ்வினி சிங்கமுத்துவை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்.
எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றவர் மகளையும் அழைக்க உள்ளே சென்று சில நொடிகள் மௌனமாய் சென்றது.
சிங்கமுத்துவிற்கு இந்த வழக்கு இல்லை என்றால் கூட சம்மதித்திருக்கலாம் போல என்று தான் தோன்றியது.
அவரும் நெடுஞ்செழியனை பற்றிய செய்திகளை கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
போகும் இடமெல்லாம் ஏதேனும் பிரச்சனை, யாரையாவது பகைத்துக்கொண்டு தான் இருந்தான்.
அவனின் வேலையில் எத்தனை பெயரும், புகழும் உண்டோ, அதற்கு இணையாக விரோதிகளும் எண்ணிலடங்காதவையாக இருந்தது.
அதுவே அவரை இன்னும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அதுவும் இந்த வழக்கு எல்லாவற்றிற்கும் உச்சமாக இருக்க ஒரு தகப்பனாக தன் பயம் யாருக்கும் புரியவில்லையா என்றே தோன்றியது.
“ஏன்ப்பா போலீஸ்காரங்களுக்கு எல்லாம் ஃபேமிலி இல்லையா என்ன?…” என்று கேட்டவள் அவர் தவிப்புடன் நிமிர்ந்து பார்க்க,
“இப்பவும் உங்க விருப்பம் தான். உங்க முழு சம்மதத்தோட நடந்தா நடக்கட்டும். இல்லையா எனக்கு பிரச்சனையே இல்லை. நீங்க, அம்மா, ஸ்ருதி, அக்கா, அக்கா பசங்க, மாமா எல்லாரும் இருக்கீங்களே? வேற என்ன வேணும்?…” என்று விழியில் துளிர்த்த நீரை சுண்டிவிட்டாள்.
மகளின் வைராக்கியம் அறிந்தவராகிற்றே சிங்கமுத்து. இதற்கு மேலும் மறுக்க முடியாதென எழுந்து வெளியே வந்தார்.
“நாளை மறுநாள் கேஸ் கோர்ட்டுக்கு வருது. விசாரணைக்கு அஷ்வினி அங்க இருக்கவேண்டியது அவசியம். நீங்க யாராவது கூட இருக்கறதா இருந்தா சென்னையில வந்து இருங்க. இப்ப நான் கிளம்பறேன்…” என்றான் நெடுஞ்செழியன் சிங்கமுத்து வந்ததும்.
“என் பொண்ணு…” என அவர் நெஞ்சில் கை வைக்க,
“பயப்படாதீங்க. கோர்ட்ல எல்லாரும் அஷ்வினியை பார்க்க முடியாது. லாயர் அன்ட் ஜட்ஜ். இவங்க ரெண்டுபேர் மட்டும் தான் பார்க்க முடியும். நாங்க அப்படித்தான் ஏற்பாடு செஞ்சிருக்கோம். அதனால தைரியமா வரலாம்…” என்றான் நெடுஞ்செழியன்.
“நான் கிளம்பறேன் அஷ்வினி. டேக் கேர்….” என சொல்லிவிட்டு அவள் கையில் மாட்டியிருந்த கடிகாரத்தையும் பார்த்துவிட்டு,
“வரேன்…” என்றான் அனைவரிடமும் பொதுவாக.
“அப்பறம் தம்பி, உங்க வீட்டுல வந்து முறையா பேச சொல்லுங்க…” என்றார் சிங்கமுத்து தயங்கி தடுமாறி. அதில் லேசாய் சிரித்த நெடுஞ்செழியன்,
“என்ன சொல்ற கதிர்? யாருன்னு தெரிஞ்சதா? பேர் ஞாபகமிருக்கா?…” ஜெய் கேட்க,
“ஞாபகமில்லை ஜெய், நாம அதுக்குன்னு யூஸ் பன்ற எந்த மொபைல், லேப்டாப்பையும் இப்ப எடுத்து பாக்க முடியாதே. அந்தந்த நேரம் தான் ஆக்டிவேட் பண்ணிட்டிருந்தோம். இப்ப மொத்தமும் போலீஸ் கஸ்டடிக்கு போயிருச்சு. நாம லாகின் பண்ணினாலே அவங்களுக்கு சிக்னல் போயிரும். நமக்கு ஆபத்து…” என்றான் கதிர்.
“எப்படி தெரிஞ்சது? அந்த பொண்ணு தான் சென்னை வந்திருக்குன்னு?…” என ஜெய் அந்த அறையில் நெற்றியில் கை வைத்தபடி அமர்ந்திருக்க அவனின் தோளில் கை வைத்த கதிர்,
“சொன்னா கோபப்பட கூடாது…” என்றான்.
“என்னதான்டா பண்ணி வச்சிருக்கீங்க இன்னும்? சொல்லி தொலை மொத்தமா. இப்படி மொத்த பிஸ்னஸும் அடிவாங்கி அதுல இருந்து எதையும் செய்யமுடியாம எவ்வளோ கஷ்டம்…” என்று அரற்றினான் ஜெய்.
“அந்த பொண்ணை திரும்ப ஒருதடவை மணிகண்டன் அங்கிள் கேட்டார்டா….” கதிர் மெதுவாய் சொல்ல,
“வாட்? அறிவிருக்கா? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? நாம யூஸ் பன்ற பொண்ணுங்க யூஸ் அன்ட் த்ரோ தான். திரும்பி ஒருக்கா உள்ள இழுத்துவிட்டு சிக்கலாகிட கூடாதுன்னு தான தெளிவா பண்ணிட்டிருக்கோம். இதை ஏன் என்கிட்ட முதல்லையே சொல்லலை?…” என அந்த நட்சத்திர ஹோட்டலின் அறைக்குள் கூண்டுக்குள் அடைபட்டதை போல உறுமினான்.
“நான் அப்பவே நல்லா சண்டை போட்டுட்டேன். அதோட அந்த வீடியோவை நானும் பார்த்திருக்கேனே? அவளை மிரட்டவும் நம்ம ரெஸார்ட் விட்டு கிளம்பி போனப்போ ஒருமாதிரி பார்த்தா. வீடியோலையே அப்படி இருந்துச்சு. அதனால அந்த முகம் எனக்கு ஞாபகம் தான்….” என்றவன்,
“மத்த பொண்ணுங்க பதறி, கெஞ்சி, அழுது தான் போனாங்க. ஆனா இந்த பொண்ணு ஒரு சொட்டு கண்ணீர் விடலை. அழலை. கெஞ்சலை. எதுவுமே பேசலை. நான் கூட அதிர்ச்சி அப்படி இருக்குன்னு நினைச்சிட்டேன். இன்னைக்கு எல்லாம் சேர்த்து யோசிக்கும் போது…” என இழுத்தான்.
“இருக்கு. ஆனா எல்லாம் சேஃபா அந்த டிவைஸ்ல இருக்கு. இப்ப எடுக்க முடியாது ஜெய். அது நமக்கு தான் ஆபத்து…” என்றான் கதிர்.
“மண்ணாங்கட்டி. உங்களை எல்லாம் வச்சிட்டு. இப்ப அவளை எங்கன்னு தேட?…”
“எனக்கு டவுட் அப்படின்னு தான் சொன்னேன் ஜெய். என்னமோ யாரை பார்த்தாலும் இவங்களா இருக்குமோன்னு தோணுச்சு. அதான். வேற எதுவுமில்லை…” கதிர் அவனை சமன்படுத்த முயன்றான்.
“லீவ் மீ கதிர். நீ கிளம்பு. நாளை மறுநாள் கோர்ட்ல ஆஜராக போற அந்த பொண்ணுங்க யாருன்னு கவனிக்கனும். அதுக்கான ஏற்பாட்டை கவனி. எது நடந்தாலும் நம்ம தலை இதுல வெளில வரவே கூடாது. அவ்வளவு தான். இனி சரத்தை, அவங்கப்பாவை எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது…”
ஜெய் சொல்லவும் கதிர் மிரண்டு பார்த்தான். அது எப்படி முடியும்? சரத் எதுவும் சொல்லிவிட்டால்? என்று தோன்றியதை ஜெய்யிடம் கேட்கமுடியவில்லை.
விசாரணைக்கு வரவிருக்கும் அவ்விரு பெண்கள் யாரென கண்டுபிடிக்கவேண்டிய முனைப்பை முதலில் முன்னிறுத்தினான்.