“ப்பா டென்ஷனாகாதீங்க. இத்தனை நாள் சரியா தூக்கமில்லை. அதனால கூட இருக்கலாம். காரியம் முடியற வரை நான் எப்படி தள்ளி இருக்கறதுன்னு தான் பொறுத்துட்டு இருந்தேன்…” என அவன் சொல்ல,
“என்ன தனா? நீ அழ கூட இல்லை. உன் மனசுல எதையும் போட்டு புழுங்காத. பார்க்கவே கஷ்டமா இருக்கு. சாதாரணமா இந்த இறப்பு நடந்திருந்தாலே உன்னால தாங்கிக்க முடியாது. நீ உன்னால இந்த ஆக்ஸிடன்ட் நடந்ததுன்னு நினைச்சு ரொம்ப கில்ட்டியா இருக்கன்னு நினைக்கறேன்…” என்றார் கவலையாக.
உண்மைக்கும் இப்படியான வார்த்தைகள் தான் அவனை குத்தி கிழிப்பதை போலிருந்தது தனாவிற்கு.
தான் இதை வேண்டுமென்றே செய்தது தான். கொஞ்சம் குற்றவுணர்ச்சி இருந்தாலும் அதற்கு இடம் கொடுத்திருந்தால் இந்த பாதைக்கே சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
தனக்கு மிகவும் பிடித்த ஒருவரின் மரணம் தன்னால் என்னும் வருத்தம் லேசாய் இருந்தாலும் அதையும் அவன் விரட்டவே முனைந்தான்.
தனாவின் அமைதியை கண்ட சுரேந்திரன் மகனை ஆறுதலாய் அணைத்து விடுவித்து,
“சரிப்பா நீ ரெஸ்ட் எடு. மத்ததை நான் பார்த்துக்கறேன். ரூம் லாக் பண்ணிக்கோ. யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க…” என்று சொல்லி வெளியேறினார்.
அவர் அறையிலிருந்து வெளியே சென்றதும் கதவுகளை அடைத்துவிட்டு உடனே கதிருக்கு அழைத்தான்.
“காரியம் முடிஞ்சதா ஜெய்? எல்லாமே அந்த நிகிதா தான் பண்ணியிருப்பா போல?…” என்ற கதிரின் ஏளனமான பேச்சில் வெகுண்டுவிட்டான் தனா.
“என்னை கண்காணிச்சு நீ புடுங்குனதெல்லாம் போதும். அந்த இன்னொரு பொண்ணை பத்தி விசாரிச்சியா?…” என்றன கடுமையுடன்.
“முடிஞ்சது. அதை சொல்ல தான் நானும் வெய்ட் பண்ணேன். பொண்ணு ஊர் காரைக்கால். இங்க சென்னையில தான் ஐடில வொர்க் பண்ணுது. அன்னைக்கு ரெஸார்ட்ல நம்ம கஸ்டமர் செலெக்ட் பண்ணுங்க மூணு பொண்ணுங்கள்ல இவளும் ஒருத்தி…” என்றான் கதிர் சுபஷ்வினியின் விபரங்களை சொல்லி.
“அங்கருந்து தப்பிச்சும் புத்தி வரலையா இவளுக்கு? பயமில்லாம கம்ப்ளைண்ட் குடுத்தது மட்டுமில்லாம கோர்ட் வரைக்கும் வந்திருக்கா? என்ன ஒரு துணிச்சல்? இவ வீட்டுல எல்லாம் இது தேவையில்லாததுன்னு சொல்லி தட்டி வைக்க மாட்டாங்களா?…” என்றான் தனா கொந்தளித்து.
“தைரியம் இருக்காம இருக்குமா? போலீஸ்காரன் பொண்டாட்டியாக போறா. அந்த துணிச்சல் தான்….” என்றவன்,
“வாட்?…” என்ற தனாவிற்கு சுபஷ்வினியை கொன்றுபோட நினைக்க இந்த ஒரு விஷயமே போதுமாக இருந்தது.
“தூக்குடா கதிர் அவளை. சும்மாவே என் விஷயத்துல கம்ப்ளைன்ட் பண்ணினதுக்கு அவளை விட்டிருக்கமாட்டேன். இப்ப அவனுக்கு பொண்டாட்டியா வேறையா? நெடுஞ்செழியன் குடும்பம் குழந்தைன்னு வாழ விட்டுடுவேனா? என்கிட்டையே சவால் விடறான்…” என்றான் தனா.
“என்ன சொல்றான் அவன்?…” கதிர் கேட்கவும் தன்னிடம் நெடுஞ்செழியன் பேசியதை சொல்ல,
“நீ ஏன்டா ஜெய் அவனை பார்த்த? கண்டுக்காம இயல்பா இருக்க வேண்டியது தானே? நீ பயந்தே அவனுக்கு காட்டி குடுத்துடுவ…” கதிர் அவனை கடிந்துகொண்டான்.
“பயமா? எனக்கா? என்னை வெறியேத்தாத நீ…” என்ற தனாவின் மனதிற்குள் கதிர் சொல்லியதும் புரிந்தது.
இதுவரை தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்ற இறுமாப்பில் இருக்கையில் இருந்த துணிச்சல், தன்னை ஒருவன் கண்டுகொண்டதும் மட்டுமில்லாமல், அது பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்க பயம் பெரிதாகி கொண்டே தான் இருந்தது.
தான் பயந்ததாக காட்டிக்கொண்டால் நாளை கதிரே தனக்கு எதிராக திரும்ப கூடும் என பயத்தை வெளிக்காட்டாமல் சமாளிக்க முயன்றான்.
“இப்ப நீ அந்த பொண்ணை தூக்கற வழியை பாரு. நிகிதாவை எப்ப வேணா முடிக்கலாம்….” என்று தனா சொல்ல,
“விளையாடுறியா ஜெய்? இன்னும் ரெண்டுவாரத்துல அடுத்த ஹியரிங்….” என்றான் கதிர்.
“அதுதான் நமக்கான மிகப்பெரிய சான்ஸ். நிகிதாவும் அந்த பொண்ணும் இருந்தா தானே இந்த கேஸ் நடக்கும்? சாட்சி சொல்ல யாருமில்லைன்னு தள்ளுபடியாகாது தான். எங்கம்மா விடமாட்டாங்க அதுக்கு. ஆனா நம்ம தலை தெரியாம இருக்கும். மாட்டினா மணிகண்டன், சரத் தான் மாட்டுவாங்க…”
அத்தனை அலட்சியத்துடன் தனா சொல்ல கதிருக்கு என்ன இவன் இத்தனை இலகுவாய் சொல்கிறான் என்று தோன்றியது.
“மணிகண்டன் சரத் மாட்டினா நம்மளை சொல்லமாட்டாங்களா? நாம வெளில கொண்டுவர பார்ப்போம்ன்னு தான் அவங்க உள்ள இருக்காங்க…” என்றான் கதிர் சற்றே கோபத்துடன்.
“வெளிலயா? அதுவும் மணிகண்டனையா? இனி உள்ளயுமே அவன் இருக்க போறதில்லை….” என்ற தனா பல்லை கடித்தவிதத்தில்,
“ஜெய்…” என்று அதிர்ந்தான் கதிர்.
“மணிகண்டனை முடிக்கனும். அதுக்கு எல்லாம் ஏற்பாடும் செய் கதிர்…” கட்டளையாக சொல்ல,
“என்னடா அன்னைக்கு என்னமோ பாசமும் இல்லை. ஒன்னுமில்லைன்ன? இப்ப இது என்னவாம்?…” கதிருக்கு கோபமான கோபம்.
“இதையும் பாசத்தையும் நீ ஏன் குழப்பிக்கற? மணிகண்டனை முடி. சரத்தை என்ன பண்ணனும்ன்னு ரெண்டாவது சொல்றேன். மணிகண்டனோட டெத் சரத்துக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட். அவன் நம்மை பத்தி வாயை திறக்காம இருக்க…” என்று சொல்ல,
“இது என்னவோ எனக்கு விபரீதமா தோணுது ஜெய்…” கதிர் பின்வாங்குவதை போலிருந்தது மணிகண்டன் விஷயத்தில்.
“இங்க பார் என்னைக்கா இருந்தாலும் நிகிதா சாவு என் கையில தான். ஆனா, ப்ச். ஓகே, இதை நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லி தனா போனை வைத்துவிட மீண்டும் அழைத்தான் கதிர்.
“நிஜமா இது சரிவருமா ஜெய். திரும்ப திரும்ப தப்பு பன்றோமோன்னு தோணுது….” என்றான் தனாவிடம்.
“நம்ம ரெண்டுபேரை பத்தி தெரிஞ்ச ரெண்டுபேர் அவங்க மட்டும் தான். மணிகண்டனை மர்டர் பண்ணவேண்டாம். சூஸைட் மாதிரி செட் பண்ணிடு. மானத்துக்கு அஞ்சி தற்கொலை பண்ணிக்கிட்டார்ன்னு நியூஸ் வரும். நமக்கு ஒண்ணுமில்லை…” என்றான் அசால்ட்டாக தனா.
தொண்டையில் நீர் வற்றும் போலிருந்தது கதிருக்கு. தனாவின் இந்த பேச்சில் உள்ளுக்குள் உதறல் தான்.
“ஹ்ம்ம், ஏற்பாடு பன்றேன்…” என்று கதிர் சொல்லவும் தனாவும் சென்று படுத்துக்கொண்டான்.
ஆனால் உறங்கவில்லை. இனி உறங்கவும் முடியாதே. தனது போனில் கதிர் அனுப்பியிருந்த சுபஷ்வினியின் புகைப்படத்தை எடுத்து பார்த்தான்.
பார்க்க பார்க்க எரிமலை குழம்பு பெரிதாய் வெடித்து சிதறியது. ‘ஒரு பொண்ணு நீ என்னை அசைக்க பார்க்கறியா?’ என அவன் விழிகளில் வன்மம்.
அந்த அலட்சியம் அவனை நிறுத்த போகும் இடத்தை தனா அறியவில்லை.
பெண் என்பவள் ஆக்கும் ஷக்தி என்றால் அழிக்கும் ஷக்தியும் அவள். அகிலத்தின் ஷக்தி அவள்.
உருவாக்குபவளுக்கு உருகுலைக்கவும் தெரியும் என்பதை அறியாத மூடர்களை வதம் செய்யத்தானே வேண்டும்.
————————————–
மாலை பொழுது இருள் கவிழ காத்திருப்பதை போல வானத்தில் மஞ்சளையும், செஞ்சாந்தையும் கலந்தபடி மேகத்தில் வண்ணங்களாய் ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது.
சூரியனின் உக்கிரம் தணிந்து மெல்லிய வெப்பத்துடன் காற்று வீசும் மொட்டைமாடியில் நின்றிருந்தனர் சுபஷ்வினியும், நெடுஞ்செழியனும்.
“அப்போ ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு வந்து தான் இந்த டைரக்ஷன், டயலாக் டெலிவரி எல்லாம், இல்லையா?…” என்றாள் சுபஷ்வினி அவனிடம்.
“முக்கிய குற்றவாளி யாருன்னு தெரிஞ்சிருச்சு போல. என் கெஸ் கரெக்ட்டா?…” என சுபஷ்வினி கேட்டதும் ‘ஆமாம்’ என தலையசைத்தான்.
“பரவாயில்லை, கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கு….” என்று வேறு நெடுஞ்செழியன் அவளை கிண்டல் பேச,
“ஹலோ, என்ன?…” என மிரட்டல் குரலில் சுபஷ்வினி முறைத்து பார்த்தாள்.
“பின்ன என்னவாம்? ரெண்டுவருஷமா மண்டை காயவிட்டதை பார்க்கும் போது புத்தியுள்ளவ செய்யறதான்னு தோணாதா? அந்த டவுட் இன்னைக்கு க்ளியராகிடுச்சு…” என்றான் உடல் குலுங்க சிரிப்புடன்.
“அப்படி ஒன்னும் புத்தி இல்லாதவளை கல்யாணம் செய்ய வேண்டாம். நீங்க நடையை கட்டுங்க சாமி…” என சொல்லி சென்றவளின் கை பிடித்து இழுத்து தன் மேல் சாய்த்தவனின் திடீர் அணைப்பில் திகைத்து பார்த்தாள்.
“என்னவாம்? இவ்வளோ ஷாக்?…” என தலையசைத்தவன் புன்னகையில் திகைப்பை தவிர்த்து முறைக்க,
“ஆமா, அன்னைக்கு நைட் பாத்ரூம்க்குள்ள டோர் லாக் பண்ணிட்டு என்னவோ பேசினியே…” என நெடுஞ்செழியன் முழுதாய் முடிக்காமல் இழுக்க,
“ஏன் மாமா இப்படி பன்றீங்க? என்னை கூப்பிட்டிருக்கலாமே?…” என்றபடி வாங்கிக்கொண்டவளின் கன்னத்தில் தட்டியவர்,
“யாருக்குத்தா செய்யறேன்? எம்புள்ளைக்கு தான. சாப்பிடுங்க. பேசிட்டிருந்துட்டு மெல்ல வாங்க. நாங்க மத்தத பேசிக்குவோம்…” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி சென்றார்.
“நல்லவங்களுக்கு தான் சோதனை அதிகம். இப்படி இருக்கற மனுஷனுக்கு ஒரு குழந்தையை குடுக்கலை அந்த கடவுள். என்னை தான் அவர் வாரிசுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுவார்…” என வேதனை கலந்த புன்னகையோடு அவள் சொல்ல நெடுஞ்செழியனிடம் மௌனம்.