“வேதசௌந்தரி என்ன இதெல்லாம்? இவன் போலீஸ்காரன் மாதிரியா பேசறான்? ஒரு பொறுப்பு இல்லாம…” என களஞ்சியம் நெடுஞ்செழியனிடம் பேச முடியாமல் வேதசௌந்தரி பக்கம் திரும்ப,
“அவர் சொல்றதுல தப்பில்லையே ஸார். எத்தனை பொண்ணுங்களை சீரழிச்சு இருக்காங்க. இதை தொடர விட்டிருந்தா நாளைக்கு நம்ம வீட்டுல இருக்கற பொண்ணுங்களும் பாதிக்கப்படலாம்…” என்றார் வேதசௌந்தரி.
“என்னம்மா இது? அவனுக்கு பரிஞ்சு பேசிட்டு? அவன் சொல்றது சரின்ற மாதிரி. சட்டத்தை காப்பாத்த வேண்டிய பதவில இருந்துட்டு…” என களஞ்சியம் எரிச்சலாக சொல்ல,
“இப்பவும் சட்டத்தை தான் காப்பாத்தறோம் ஸார். சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்யறவங்களுக்கான தண்டனையை வாங்கி தர்றதுக்கு அர்த்தம் அதுதானே? என்ன இப்ப யாரோ சட்டத்தில் கையில் எடுத்திருக்காங்க. ஆனா தண்டனை சரி தான்…” என்றவன் பேச்சில் இன்னுமே களஞ்சியத்திற்கு கோபம் கூடியது.
“பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா செயல்ல ஒன்னுமில்லையே? பார்ப்போம், நீ முதல்ல குற்றவாளி யாருன்னு கண்டுபிடி. அப்பறம் பேசு. கேட்போம்…” என்று சொல்லியவர் நெடுஞ்செழியனை கிளம்பும்படி கையசைத்தார்.
வெளியே வந்த வேதா முகத்தில் அத்தனை ஆதங்கமும், வேதனையும். கூடவே நெடுஞ்செழியனை கண்டு வருத்தமும்.
“அரசியல்ல இதெல்லாம் சகஜம் மேம்…” என்றான் அவன் சாதாரணமாக.
“அவரும் உங்களை ரொம்ப பேசிட்டார் செழியன்…” என வேதா சொல்ல,
“யார் என்ன பேசறாங்கன்றதை பொருத்து தான் அதை எடுத்துக்கனுமா, அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு குடுக்கனுமான்னு நாம முடிவு பண்ணனும். உள்ள அவர் பேசினதை நான் மதிக்கவே இல்லை. அவர் பதவிக்கு என் பதவி குடுக்கும் மரியாதை மட்டும் தான்…” என்றவன்,
“மத்தபடி இந்தமாதிரி பேசறவங்களோட பேச்சுக்கள் என்னை பாதிக்காது. என் வேலையை நான் சரியா செஞ்சிட்டிருக்கேன். அதை மதிப்பீடு செய்யற ஆளுங்களை பொருத்து தான் அவங்க பேச்சுக்கு நான் குடுக்கற ரியாக்ஷனும். பார்த்துக்கலாம்…” என்றான் அவரிடம்.
நெடுஞ்செழியனுடன் பேசிக்கொண்டே தலைமை செயலகத்தில் இருந்து வெளியே வந்தவர் அங்கே சுரேந்திரன் நிற்பதை கவனித்தார்.
“கோர்ட்க்கு போகாம இங்க வந்திருக்காரே?…” என வேதா கணவரை பார்க்க அதற்குள் அவருமே கவனித்துவிட்டார் மனைவியை.
“நீங்க பேசிட்டு வாங்க மேம். நான் வெய்ட் பன்றேன்…” என நெடுஞ்செழியன் சொல்ல,
“போகலாம் செழியன். வாங்க…” என சொல்லி தன்னுடன் அழைத்து சுரேந்திரனை நோக்கி செல்ல நெடுஞ்செழியனும் செல்லவேண்டிய சூழ்நிலை.
அவன் அவர்களை நெருங்கும் பொழுது தான் சுரேந்திரனுடன் நின்றவரை கவனித்தான்.
யாரின் வரவில் அவனுக்கு உள்ளுக்குள் வண்டு குடைந்துகொண்டு இருந்ததோ அதே லாயர் கனுஷாந்த் கிஷான்.
அதுவும் சுரேந்திரனுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க அவருக்கு பின்னால் அவரின் பாதுகாவலர்கள்.
வேதா சென்றதும் அவரை அறிமுகப்படுத்திய சுரேந்தர் கூடவே நெடுஞ்செழியனையும் அறிமுகம் செய்துவைத்தார்.
கனுஷாந்த் கிஷானின் பார்வை ஒருகணம் நெடுஞ்செழியனை துளைப்பதை போன்ற ஒரு தோற்றம் அவனிடம்.
“ஹலோ…” என்றதோடு நெடுஞ்செழியன் நின்றுவிட,
“நெடுஞ்செழியன்…” என்று சொல்லிய கிஷானின் இதழ்கள் கேலியாக வளைய,
“எஸ், நெடுஞ்செழியன்…” என்றான் அவனுமே தன் பெயரை நிமிர்வாய் மிடுக்குடன் கூறி.
“இன்ட்ரெஸ்ட்டிங்…” என்று சொல்லிவிட்டு சுரேந்திரன் புறம் திரும்பிக்கொள்ள வேதாவும் சொல்லிவிட்டு கிளம்பினார்.
“என்ன செழியன் அமைதியா வரீங்க?…” என செல்லும் வழியில் வேதா கேட்க,
“காரணத்தோட தான் வந்திருப்பார்ன்னு நான் நினைக்கறேன். அது நிகிதா கேஸா கூட இருக்கலாம்…” என்று வேதா மெல்லிய புன்னகையை சிந்த திரும்பி அவரை பார்த்தான் நெடுஞ்செழியன்.
“யார் நினைச்சாலும் இந்த கேஸை உடைக்க முடியாது செழியன். நான் இருக்கேன்…” என்ற வேதாவின் உறுதியில் நெடுஞ்செழியனும் தலையசைத்தான்.
—————————————————–
கிஷானுக்கு முன்னால் இருந்த தொகுப்புகளை எல்லாம் நகற்றி ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைத்த ராஜாங்கம்,
“ஒருவேளை வேதாவோட பையன் அப்ரூவரானா இதை எல்லாம் அவனுக்கு அகைன்ஸ்ட்டா சப்மிட் பண்ண முடியுமா?…” என்று கேட்க,
“ம்ஹூம், சப்மிட் பண்ணினாலும் நிக்காது. ரொம்ப க்ளவர் போல அந்த ஜெயதனபாலன். ஜட்ஜ் அன்ட் மினிஸ்டர் மகன் இல்லையா? இதை நீங்க ஆதாரம்னு குடுத்தா அவன் என்னென்ன ஆதாரம் எல்லாம் உங்களுக்கு எதிரா குடுப்பான்?…” என்றதும் ராஜாங்கத்திற்கு திகைப்பானது.
“அதெப்படி முடியும்? வாய்ப்பில்லை…” என ராஜாங்கம் உறுதியாக சொல்ல,
“இந்த ஆதாரங்கள் எதுவுமே மேலோட்டமா பார்த்தா அந்த தனாவை சந்தேகப்படும்படியா ஒரு தோற்றத்தை தர வைக்கும். ஆனா உடைச்சிட்டு அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லவைக்கவும் முடியும் அவனால…” என்ற கிஷான்,
“இவ்வளோ தெளிவா மாட்டற அளவுக்கா அவன் உங்ககிட்ட இந்த சின்ன எவிடென்ஸ விட்டுவைக்கிறான். ம்ஹூம் எனக்கு என்னவோ இதை உங்களுக்கு ஒரு இரை மாதிரி போட்டு பெரிய வலையை விரிச்சிருக்கான். உங்களுக்கு எதிரான ஆதாரத்தை வச்சிருப்பான்னு தோணுது…” என்றார் கிஷான்.
“புரியலையே?…” என ராஜாங்கம் கேட்க,
“இது என்னமோ தெரிஞ்சே அவன் விட்டுவச்ச விஷயமா தோணுது. நிச்சயம் அவன்கிட்ட பெருசா இருக்கு. எந்த சூழ்நிலையிலையும் இதுல மாட்டிக்க கூடாதுன்னு நினைக்கிறவன் என்னலாம் பண்ணுவான்? கொஞ்சம் பொறுமையா தான் நாம இதை கையாளனும்….” என்ற கிஷான்,
“இந்த கேஸை நான் எடுத்துக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது என்ன செய்யனும்ன்றதை நான் பின்னால சொல்றேன். அதுக்கு முன்னாடி அவன்கிட்ட வேற என்ன ஆதாரம் உங்க சம்பந்தமா இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுதான்னு பாருங்க. வேட்டையாடனும்ன்னா பதுங்கி தானே ஆகனும்…” என்று சொல்லி கிளம்பினார் கிஷான்.
———————————————
இன்னும் மூன்று நாட்களில் திருமணம். பட்டுப்புடவைகள் எல்லாம் வந்திருந்தது வீட்டிற்கே.
காஞ்சனாவும், சோபியாவும் அதில் நிகிதாவிற்கு எது பொருத்தமாக இருக்கும் என வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
நெடுஞ்செழியன் உள்ளே நுழையும் பொழுது அவர்கள் ஒருபுறம் இருக்க சங்கீதா ஒருபக்கம் சோபாவில் அமர்ந்து தன்னுடைய கருத்தை சொல்லிக்கொண்டிருந்தாள்.
“என்னம்மா பர்ச்சேஸ் முடிஞ்சதா?…” என கேட்டவன் விழிகள் வீட்டை அலசியது.
“சுபாவுக்கு மீட்டிங். அதான் அந்த ரூம்ல இருக்காப்பா…” என்றார் காஞ்சனா.
சுபஷ்வினி தன் அலுவலகத்தில் சூழ்நிலையை ஓரளவு சொல்லி வீட்டிலிருந்து வேலை செய்வதாக சொல்லி வாங்கிக்கொண்டவள் தினமும் காலை நிகிதாவிற்காக அங்கே வந்துவிடுவாள்.
அன்றும் வந்து உள்ளே வேலை பார்த்துக்கொண்டிருக்க மதிய உணவு நேரம் தான் செழியன் வந்திருந்தான்.
“ஹ்ம்ம், ஓகே. நான் போய் குளிச்சிட்டு வரேன்…” என்று செல்ல,
“காலையில சாப்ட்டியா செழியா?…” என கேட்டார் காஞ்சனா.
“அதெல்லாம் ஆச்சு. நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா?…” என்றவன்,
“ஒய், கத்தரிக்கா உன் புருஷன் என்னைக்கு வரேன்னு சொன்னான்?…” என்றான் சோபியாவிடம்.
“என் காது, கேட்காது…” என சோபியா முறுக்கிக்கொள்ள,
“அது நெசந்தான பாப்பா…” என சிரித்துவிட்டார் கேர்டேக்கர்.
வேண்டுமென்று சொல்லவில்லை என்றாலும் சட்டென விளையாட்டாய் அவ்வார்த்தை வந்துவிட காஞ்சனாவும், நெடுஞ்செழியனும் அதிர்ந்தனர்.
“அதானே? சரியா சொன்னீங்கக்கா. எனக்கு தான் காது கேட்காதே…” என சோபியா அதனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அவளை கொண்டாடுபவர்களுக்கு ஒருநிமிடம் அவ்வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை.
“அடடா, இப்ப எதுக்காம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டீங்க?…” என இருவரையும் பார்த்து கண் சிமிட்ட,
“என்னக்கா நீங்க?…” என கேர்டேக்கரை கடிந்தாள் சங்கீதா.
“வேணும்னு சொல்லல பாப்பா…” என்றவருக்கே மனதுக்கு சங்கடமாகி போனது.
“ப்ச், அதை விடுங்க. நான் சேரி செலெக்ட் பண்ணிட்டேன். இந்த கலர் எப்படி இருக்கு?…” என சோபியா நெடுஞ்செழியனை இலகுவாக்க முயன்றாள்.
“என்னவாம் என்கிட்ட கேட்கற? நான் செலெக்ட் பண்ணினாலும் மனு சொல்றது தானே எடுத்துப்ப. அதெல்லாம் சொல்லமுடியாது…” என்றான் நெடுஞ்செழியனும்.
“உங்களை நான் செலெக்ட் பண்ணவா சொன்னேன்? இது என் புருஷன் செலெக்ட் பண்ணினது தான். உங்ககிட்ட எப்படி இருக்குன்னு தான் கேட்டேன்…” என கிண்டல் பேச நிகிதாவின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
அவர்களை காணவே இப்படி குடும்பமாய் இருக்க ஆசையாய் தவித்தது அவளின் மனது.
லேசாய் கலங்கவிருந்த கண்களை சிமிட்டி புன்னகையில் அதனை மறைத்துக்கொண்டாள்.
“உனக்கு எடுத்தது இருக்கட்டும், நிகிக்கு என்ன எடுத்த?…” என நெடுஞ்செழியன் கேட்க,
“நான் சேரி செலெக்ட் பண்ணேன். ஆனா சுபாக்கா இப்ப நிகியால கட்டறது கஷ்டம். மேனேஜ் பண்ண சிரமமா இருக்கு, சுடிதார் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கும் நான் தான் செலெக்ட் பண்ணேன்…” என சோபியா சொல்ல,
“நீ பண்ணின சரி, அது நிகிதாவுக்கு பிடிச்சதா?…” என்று மாடிப்படியின் கைப்பிடியில் சாய்ந்தபடி நெடுஞ்செழியன் அவளிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தான்.
இப்படியே அரைமணி நேரம் கடந்திருக்க உள்ளிருந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள் சுபஷ்வினி.
வந்ததுமே ‘வா’ என்று தலையசைத்தவன் யாரும் காணாமல் அவளுக்கு கண் சிமிட்ட சுபஷ்வினிக்கும் அத்தனை சந்தோஷம்.
“சரி பேசிட்டிருங்க வந்திடறேன்…” என்றவன் அவளை தன்னுடன் வரும்படி சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்.
“நல்லா பன்றாங்கப்பா இந்த கப்பிள்ஸ்…” என சோபியா வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க சங்கீதாவும், நிகிதாவும் அதற்கு பதில் சொல்லியே ஓய்ந்து போனார்கள்.
மாடிக்கு வந்ததுமே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் அப்படி ஒரு இலகுவான மனநிலையில் இருந்தான்.
“யாரோ சிக்கிட்டாங்க போல? முகத்துல எவ்வளோ சந்தோஷம்…” என சுபஷ்வினி கண்டுகொண்டாள்.
“ஹ்ம்ம் ஆமா. சிக்கிட்டான். சிக்கிட்டாங்க…” என சொல்லவும் ‘யார்?’ என்று சுபஷ்வினி கேளாமலே,