சுபஷ்வினிக்கு நெடுஞ்செழியன் சொல்லியதும் ஒருநொடி ஒன்றும் புரியவில்லை.
“ராஜாங்கமா?…” என கேள்வியாய் அவள் இழுக்க கீழிருந்து பெரிதாய் ஒரு சிரிப்பு சத்தம்.
“உன் மோளே என்ட்ரி குடுத்தாச்சு போல. நீ கீழ போ. அப்பறமா சொல்றேன்…” என சொல்லிவிட்டு சுபஷ்வினி கீழே இறங்கவும் தன்னறைக்குள் நுழைந்தான் நெடுஞ்செழியன்.
மாற்றுடை எடுத்து குளியலறைக்குள் நுழைய அவனின் கைபேசி விடாமல் அடித்தது.
வேகமாய் குளித்துவிட்டு வந்தவன் நீர் சொட்ட வந்து நின்று அழைப்பை ஏற்றான்.
“என்ன பூச்சி? ஏதாவது புது தகவல்?…” என பரபரப்பாய் நெடுஞ்செழியன் கேட்க,
“ஆமா ஸார், அந்த டிவைஸ் திரும்ப ஆன் பண்ணியிருக்காங்க. ஆனா இந்ததடவை வேற லொகேஷன் காமிக்குது. ஆனா லாகினானது சி.எம் ஆபீஸ் இருக்கற லொகேஷன் தான்…” என்றான் பூச்சி.
“டேட்டா ஏதாவது ரெக்கவர் பண்ண முடிஞ்சதா? பசங்க என்ன சொல்றாங்க?….” என்றவன்,
“வேதா மேம் வீட்டு லொகேஷன்ல இருந்து எந்த டிவைஸும் ஆன் ஆகலையா?…” என்று கேட்டான்.
“நாம ரெசார்ட்ல டேக்கோவர் பண்ணினதுல இருந்து எதுவும் பண்ணாம நேத்து நைட் தான் ஓபன் பண்ணியிருக்காங்க. உடனே வேற வேற கன்ட்ரிக்கு லொகேஷன் மாறிட்டே இருந்துச்சு. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி திரும்ப ஆன் பண்ணி ஆஃப் பண்ணியிருக்காங்க. அதனால எதையும் எடுக்க முடியலை…” என்றவன்,
“கொஞ்ச நேரமாவது டிவைஸ் ஆன்ல இருக்கனும். நமக்கு கிடைச்சிருக்கற ஒரே க்ளூ லொகேஷன் சி.எம் ஆபீஸ்ல இருந்தப்போ ஆன் பண்ணினது மட்டும் தான். இது அவங்க வேணும்னே விட்ட லூப் ஹோலா, இல்லை அவங்களுக்கே தெரியாம பண்ணின தப்பான்னு தெரியலை…” என்றான் பூச்சியப்பன்.
“விமல் எங்க?…” என்று கேட்ட நெடுஞ்செழியன்,
“இது எதுவா இருந்தாலும் நீங்க டீப்பா வாட்ச் பண்ணிட்டே இருங்க. அன்ட் ஒன் திங்க், நாம யார் பர்மிஷனும் இல்லாம இந்த விஷயத்தை பன்றோம். ஹேக் பன்றவங்களை ரொம்ப ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க…” என்றான் கட்டளையாக.
“இதுல சி.எம் இன்வால்வாகி இருப்பாருன்னு சந்தேகப்படறீங்களா ஸார்?…” என பூச்சி கேட்க,
“கண்டிப்பா, அவர் சம்பந்தப்படலைன்னாலும் அவர் சம்பந்தப்பட்டவங்க யாரோ இதுல இருக்காங்க. அதை அன்னைக்கு அவர் பேசினதை வச்சே நான் கவனிச்சிட்டேன். வாய குடுக்காதீங்கன்னா கேட்டா தான? பேசியே வந்து சிக்கிட்டாங்க…” என்றான் நெடுஞ்செழியன் எள்ளல் சிரிப்புடன்.
“ஸார்?…” பூச்சி வாயை பிளக்க,
“பின்ன என்ன மேன்? ஒரு முதலமைச்சருக்கு ஏசிபியை வரவழைச்சு இதுல ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லைன்னு அழுத்தி சொல்லி நம்ப வைக்கவேண்டிய அவசியம் என்ன? அவர் கேள்வி கேட்கிறதுன்னா மினிஸ்டர், டிஜிபி, அதுக்கும் மேலன்னா கமிஷனர்கிட்ட சொல்லியிருக்கலாம். நான் எதுக்காம்?…” என்றான்.
“ஆமா தான். கரெக்ட் ஸார்…” என்றான் பூச்சி.
“ஓகே, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். வேற முக்கியமான விஷயம் இருந்தா உடனே கூப்பிடு பூச்சி. விமல் வரவும் கால் பண்ண சொல்லு…” என்று சொல்லி வைத்துவிட்டு உடை மாற்றி வெளியே வந்தான் நெடுஞ்செழியன்.
கீழே வரவேற்பறையில் அத்தனை சிரிப்பு. ஸ்ருதகீர்த்தி வந்ததும் அவ்விடமே கலகலப்பாகிவிட்டது.
நிகிதாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள் சோபியாவிடம் வம்பிழுத்தபடி இருந்தாள்.
“எப்ப வந்த மோளே?…” என சுபஷ்வினி கேட்க,
“அஷ்…” என வந்து அணைத்துக்கொண்ட ஸ்ருதி,
“மார்னிங் தான் சென்னை வந்தேன். சரி கல்யாணப்பொண்ணு எப்படி இருக்கன்னு பார்க்கலாமேன்னு வந்துட்டேன்…” என்றாள்.
சங்கீதாவும், நிகிதாவும் ஸ்ருதியை முதன்முதலில் அன்றுதான் நேரில் பார்க்கின்றனர். இருவருக்குமே அவளின் இலகுவான பேச்சு அத்தனை பிடித்தது.
பாடகி என்ற எவ்வித வெளிபூச்சும் இன்றி சுபஷ்வினியை போன்றே தோழமையான பேச்சில் கவரப்பட்டனர்.
மூன்று நாட்களாக வெளிமாநிலத்தில் கச்சேரி என சென்றுவிட்டு அன்றுதான் ஊர் திரும்பியிருந்தாள் ஸ்ருதி.
“கல்யாணத்துக்கு புடவை எல்லாம் எடுத்தாச்சு போல? என் சேரி எங்க?…” என கறாராக சுபஷ்வினியிடம் ஸ்ருதி கேட்க,
“உனக்கு எடுக்காமையா? அதெல்லாம் எடுத்தாச்சு…” என்றவள் சோபியாவை பார்க்க அவள் எடுத்து வந்தாள்.
“அஷ் செலேக்ஷன்னா சும்மாவா? நைஸ்…” என்று சொல்லி அதனை தடவி பார்த்தபடி சுபஷ்வினியின் கையை பிடித்துக்கொள்ள,
“ஹ்ம்ம், கல்யாணப்பொண்ணு அவங்களுக்கு கூட இப்படி எடுத்தாங்களான்னு தெரியலை. உங்களுக்கு தேடி தேடி செலெக்ட் பண்ணினாங்க…” என சோபியா சொல்ல,
“எங்க கலெக்டர் ஸார்? இன்னும் என்ட்ரி குடுக்கலையா? ஏன் வாண்டு நீ வரப்பவே கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? என்னன்னு உன்னை விட்டுட்டு அங்க இருக்கார்? ஆச்சர்யம், அதிசயம்….” என சோபியாவை இழுத்து தனக்கருகில் அமர வைத்துக்கொண்டாள் ஸ்ருதி.
அவளின் கேள்வியில் சோபியாவின் முகம் கணவன் மீதான காதலில் குங்குமமாய் சிவந்து போனது.
“போங்கக்கா, எப்ப பேசினாலும் அவரை வம்பிழுத்துட்டே இருக்கீங்க?…” என்று ஸ்ருதியிடம் சொல்ல,
“வம்பிழுக்காம வேற என்ன பண்ண? அதையும் நீயே சொல்லேன்?…” என்றாள் ஸ்ருதி கிண்டலாக.
“சோபியாக்கா உங்க லவ் ஸ்டோரி சொல்றேன்னு சொன்னீங்க. இன்னும் சொல்லவே இல்லையே…” என்றாள் நிகிதாவும்.
“ஆமா, நானும் கேட்கனும்ன்னு நினைச்சேன். உன் ஆல்பம் கூட நான் பார்க்கலை. நிகிதா சொன்னா போட்டோல நீ ரொம்ப க்யூட்டா இருந்தியாமே?…” என சங்கீதாவும் கேட்டாள்.
“ஆமாவா?…” என முகம் கொள்ளா புன்னகையுடன் சோபியா அப்பாவியாய் கேட்க,
“உனக்கென்னடா குட்டி, அழகு பொண்ணு நீ…” என ஸ்ருதியும் அவளின் முகத்தை வழித்து சொடுக்கிட அனைவருமே கைதட்டி ஆர்ப்பரிக்க நெடுஞ்செழியனும் கீழே வந்துவிட்டான்.
“ண்ணா இவங்க என்னை கலாய்க்கலையே?…” என கேட்டவள் எழுந்து சென்று அவனருகில் சென்று அமர,
“இதை கூட கண்டுபிடிக்க முடியாத அப்பாவியாடா நீ?…” என்றவனும் கேலி செய்து அட்டகாசமாய் சிரிக்க,
“ம்மா…” என்றாள் சோபியா காஞ்சனாவை பார்த்து.
“அதெல்லாம் இல்லைடாம்மா…” என மருமகளை அவர் பரிவாய் பார்த்தார்.
இளையவர்கள் பேசட்டுமென காஞ்சனாவும், சாலாட்சியும் கேர்டேக்கரை அழைத்துகொண்டு உள்ளே சென்றுவிட்டனர்.
“பெருசா ஒண்ணுமில்லை. எனக்கு அம்மாப்பா இல்லை. ஆசிரமத்தில வளர்ந்தேன். அங்கே கெஸ்ட்டா ஒரு விழாவுக்காக அவர் வந்தார். நான் தான் ரிஸீவ் பண்ணி எல்லாம் பார்த்துக்கிட்டேன்…” என வெட்கத்துடன் சோபியா சொல்ல,
“எவர் அவர்?…” என்றாள் ஸ்ருதி கேலியாய்.
“அவர் தான் உங்க கலெக்டர்…” என்று அவளுக்கு பழிப்பு காட்டிய சோபியா,
“அப்படி பிடிச்சு என்கிட்ட அம்மாவையும், அண்ணனையும் கூட்டிட்டு வரேன்னு சொல்லி அப்படியே நடந்தது தான் எங்க கல்யாணம். லவ் பார்ட் அப்டின்னு பார்த்தா ரொம்ப எல்லாம் இல்லை. செழியன் அண்ணா தான் உடனே கல்யாணத்தை வச்சிடனும்ன்னு சொல்லி செஞ்சு வச்சிட்டார்…” என்று நெடுஞ்செழியன் முகம் பார்த்தாள்.
“அந்த அப்பாவி ஜீவனை புடிச்சு கிணத்துக்குள்ள தள்ளிவிட்ட லத்தி மட்டும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், லாக்கப் லைஃப்ன்னு எவ்வளோ சுதந்திரமா அமோகமா இருந்திருக்கார் பாரேன்…” என அதற்கும் ஸ்ருதி கிண்டல் பேச,
“இந்த வாய்க்கொண்ணும் குறைச்சல் இல்லை. அம்மாவோட உங்க வீட்டுக்கு நாங்க இன்வைட் பண்ண வந்தப்போ கூட கீர்த்தியை பார்க்க முடியலை. புருஷனோட குடும்பமா கிளம்பிட்ட. இன்னைக்கு பாப்பாவை தூக்கிட்டு வந்திருக்கலாம்ல…” என்றான் நெடுஞ்செழியன் ஸ்ருதியிடம்.
“நோ நோ. டீல் டீல் தான். கல்யாணத்தன்னைக்கு என் பொண்ணோட வருவேன். ப்ராமிஸ்…” என்றாள் ஸ்ருதி.
“என்ன உன் அண்ணனுக்கு சப்போர்ட்டா? இங்க அவரால என் அஷ் அழுதது கொஞ்சமா?…” என்றவள் நெடுஞ்செழியனை முறைக்க அவன் தோளை குலுக்கிக்கொண்டான் அலட்சியமாக சிறு புன்னகையுடன்.
“யாரு? அண்ணா சுபாக்காவை அழ வச்சாங்களா? நம்பவே மாட்டேன்…” என நிகிதா சொல்ல,
“அழுகையா? அவளை எவ்வளோ துடிக்க வச்சிட்டார்…” என்ற ஸ்ருதி,
“இவங்க மேரேஜ் ரெண்டுவருஷம் முன்னாடியே நடந்திருக்கனும். பொண்ணு பார்க்க வர அன்னைக்கு உங்கண்ணா எங்கையோ விழுந்து வாரிட்டு போன் போட்டு அம்மாவும், தம்பியும் மட்டும் வருவாங்கன்னு அஷ் அப்பாக்கிட்ட உண்மை விளிம்பி சொல்ல சொல்ல அங்க ஆரம்பிச்சது ரணகளம்…”
“அஷ் அப்பாவுக்கு அப்பத்தான் இந்த மனுஷன் போலீஸ்ல வேலை பார்க்கறார்ன்னே ஞாபகம் வந்திருக்கு. அதுவும் போன்ல விஷயத்தை சொல்லி கோட்டைசாமி முழிச்சுக்கோன்னு வேப்பிலை அடிச்சு குலுக்கிவிட்டு தெளிய வச்சிருக்காங்க….”
“அதுக்குள்ள இவங்க ரெண்டுபேருக்கும் பிடிச்சு போக தனி ட்ராக் ஒன்னு ரெடியாகிடுச்சு. அது தெரியாம குறுக்கால புகுந்த கௌசிக் ஆட்டையை கலைச்சுவிட பார்க்க அப்படியே சிலபல மாசம் போச்சு. அஷ் வீட்டுல வேற மாப்பிள்ளை பார்க்கறேன்னு சொல்லி இவ மாட்டேன்னு சொல்லின்னு இங்க பிரச்சனை பிரச்சனை உச்சத்துல போய்ட்டிருக்கு…”
“இந்த லத்திக்கு எவ்வளோ குசும்பு இருந்தா வெடிங் டேன்னு ஸ்டேட்டஸ் வச்சு கோவில்ல பட்டு வேஷ்டி சட்டையோட இருக்கற மாதிரி போட்டோ போட்டு விஷ் மீன்னு வேற கேப்ஷன். எப்படி இருக்கும்? அஷ் இருந்த சூழ்நிலையில அவ நிஜமாவே இவருக்கு கல்யாணமோன்னு நினைச்சுட்டா…”