“வாட் எ வாய்ஸ்? செமையா பாடறீங்க….” என்று இளைஞர்கள் பட்டாளமும்,
“அருமையா பாடறமா…” என அங்கிருந்த பெரியவர்கள், நடுத்தர வயதினர் சிலரும் என சுபஷ்வினியை பாராட்ட அவை அனைத்தும் ஒருவனின் அலைபேசியில் பதிவாகி யாரோ ஒருவருக்கு அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது.
ஒருசிலர் குளிரின் தாக்கம் அதிகமிருக்க உறங்க எழுந்து சென்றுவிட்டனர். மீண்டும் சிறிது நேரம் விளையாட்டுக்கள் தொடங்க சுபஷ்வினியின் அலைபேசி இசைத்தது.
“விஷாலி பேசிட்டு வரேன்…” என சொல்லியவள் நகர்ந்து அங்கிருந்த கல் பெஞ்சில் சென்று அமர்ந்தாள் சுபஷ்வினி.
“மோளே…” என அழைப்பை ஏற்றதுமே,
“அஷ்….” என்ற ஆர்ப்பாட்டமான ஸ்ருதியின் குரலில் சுபஷ்வினி மனநிலை இன்னுமே அழகானது.
“என்ன மோளே, இன்னைக்கு ரெக்கார்டிங் இருக்குன்னு சொன்ன? இந்த நேரம் உன்னை பேச அலோவ் பண்ணிட்டாரா பார்த்திவ் ஸார்?….” என்று கேலியாய் சிரித்தாள் சுபஷ்வினி.
ஸ்ருதி. ஸ்ருதகீர்த்தி. தென்னிந்திய திரைத்துறையின் பின்னணி பாடகி. இசையமைப்பாளன் பார்த்திவ் கிருஷ்ணாவின் மனைவி. எல்லாவற்றிற்கும் மேல் சுபஷ்வினியின் உயிர் ஸ்நேகிதி.
அவளின் அழைப்பு வந்ததுமே சுபஷ்வினியின் சந்தோஷம் பலமடங்காகி போனது.
“கம்போஸிங் டைம்ல ப்ரடியூசரும், டைரக்டரும் வந்துட்டாங்க. எதோ முக்கியமான டிஸ்கஷன். அதான் ஒருமணி நேரம் ரெக்கார்டிங்கை தள்ளி வச்சிருக்காங்க அஷ்….” என்றாள் ஸ்ருதி.
“அந்த கேப்ல நீ என்கிட்ட கெடா வெட்ட வந்துட்ட…” சுபஷ்வினி சிரிக்க,
“பேசு பேசு. ஏன் பேசமாட்ட. அப்பறம் மோளே, லத்தி சார்ஜாமே ரெஸார்ட்ல?….” என்று ஸ்ருதி சிரிக்கவும்,
“ஆமாமா, ரொம்பத்தான் போலீஸா இருக்கார். என்னை தெரிஞ்ச மாதிரி கூட காமிச்சுக்கலை உன் கிரிமினல் பாட்னர்….” என்றவள் ஸ்ருதியிடம் நெடுஞ்செழியன் வந்தது எப்படி தெரியும் என்று கேட்கவில்லை.
“அதான் கெத்து அஷ். நீ தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டியே. அப்பறம் ஏன் காமிக்கனுமாம்? முடியாது, முடியாது. அவராச்சும் நிம்மதியா இருக்கட்டும். என்ஜாய் பண்ணட்டும்…”
“அவருக்கு அநியாயத்துக்கு நீ இப்படி சப்போட்டா பழம் விக்க கூடாது மோளே…” என சிரித்தபடி நேரம் செல்ல பேசிக்கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
“ஓகே அஷ் என்னோட லைஃப் பாட்னர் வந்தாச்சு. பை…” என ஸ்ருதி பரபரப்பாக,
“பெஸ்ட் ஆஃப் லக் மோளே. இந்த பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகனும்…” என சொல்லி போனை வைத்ததும் விசாலி வந்துவிட்டாள்.
“சுபா வாயேன் எல்லாரும் ஒரு வாக் போகலாம்ன்னு கூப்பிடறாங்க….” என்றதும்,
“வொய் நாட்?…” என உடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்க பாதிபேர் சென்றுவிட்டனர்.
நெடுஞ்செழியனுக்கு அடுத்து என்னவென்ற யோசனை. நாற்புறமுமாய் பிரிந்து சென்ற தோழிகளின் மீதான கவனத்தை மற்றவர்களுக்கு செலுத்திவிட்டு தானும் வேறொரு திக்கில் நடந்தான்.
“ஸார்…” என்ற மேனேஜரின் அழைப்பில் திரும்பிய நெடுஞ்செழியன்,
“சொல்லுங்க…” என நின்றான்.
“பேச்சிலர் பார்ட்டின்னு சொன்னீங்க. அதான் ஏதாவது நைட்க்கு ஏற்பாடு பண்ணட்டுமான்னு கேட்க வந்தேன் ஸார். உங்க ப்ரெண்ட்ஸ் யாரும் இன்னும் எதுவும் சொல்லலை. அதான் நானே கேட்கலாமேன்னு…” என அவர் சற்றே படபடப்புடன் கேட்க,
“ஏதாவதுன்னா?…” என்றவன் எதிர் கேள்வியில் அவருக்குமே உதறல் தான்.
‘போலீஸ்காரன், பார்த்து பதமாய் பேசு’ என தனக்கு மேலிருந்து உத்தரவு வந்திருந்தது.
எத்தனை இருந்தாலும் இன்று அவன் இரவில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவேண்டும் என்று கூறியிருக்க வந்தவர்களும் அதை பற்றி கேளாதிருக்க தானாகவே வந்துவிட்டார்.
“அதான் ஸார், ட்ரிங்க்ஸ்…” என்று மேனேஜர் கேட்கவும்,
“ஓஹ் அதெல்லாம் தேடி வந்து கேட்டே ப்ரோவைட் பண்ணுவீங்களா?…” என்றான் நெடுஞ்செழியன் ஆச்சர்யமான பாவனையுடன்.
“எங்க கெஸ்ட்டை கவனிக்க வேண்டியது எங்க கடமை தானே ஸார். ஆமா இங்க கல்யாண மாப்பிள்ளை யார்?…” என மேனேஜர் அடுத்து வினவ,
“என்னவாம் மாப்பிள்ளைக்கு? ஸ்பெஷல் கவனிப்பா?…” சற்றே நக்கல் தலைதூக்க நெடுஞ்செழியன் சிரித்தான்.
“நல்ல கடமை. ஆனா இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு இன்னொரு ப்ரென்ட் வரான். வரவும் சேர்ந்து என்ஜாய் பன்றோம்…” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்க கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காமல் மேனேஜர் திகைத்து நின்றார்.
இப்படியாக மேலும் அரைமணி நேரம் செல்ல ஓரிருவர் தவிர்த்து அனைவருமே அவரவர் அறைக்குள் சென்றுவிட்ட அறிகுறி.
சுபஷ்வினியும் அவளுடன் வந்திருந்தவர்களும் கூட அப்போது தான் சென்று மறைந்தனர்.
அவர்கள் நால்வரும் அறைக்குள் வந்ததும் ஐந்து நிமிடத்தில் அறை கதவு தட்டப்பட்டது.
அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் அதனை சோதனையிட அறைக்குள் தங்களை கண்காணிக்கும் எந்தவித உபகரணங்களும் இல்லை.
“விமல் நீ போய் பார். பூச்சி நீ வாஷ் ரூம் போ…” என சொல்லியவன் சோபாவில் படுத்துக்கொள்ள பூபாலன் உடை மாற்றுவதற்கு வேறு உடை எடுப்பதை போல பெட்டியை பிரித்து வைத்திருந்தான்.
கதவை திறந்த விமல் வெளியில் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து என்னவென தலையசைக்க,
“ஸார் வாட்டர் பாட்டில் வைக்க வந்தேன்….” என்று சொல்லவும் வழிவிட்டு நின்றான் விமல்.
உள்ளே நுழைந்தவன் தான் கொண்டுவந்திருந்த நான்கு பாட்டில்களையும் வைத்துவிட்டு,
“வேற ஏதாவது வேணுமா ஸார்?…” என்று கேட்டு நின்றான்.
ஆனாலும் அவனின் பார்வை அந்த அறையை ஒரு பார்வை பார்த்து, மற்றவர்களையும் கவனித்துக்கொண்டது.
“ஓகே ஸார். எல்லாம் கொண்டுவரேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல,
“நெக்ஸ்ட்?…” என்றான் விமல் நெடுஞ்செழியனிடம்.
“கர்ட்டன்ஸ் எல்லாம் இழுத்து மூடு விமல்…” அவன் சொல்ல,
“டீ வந்ததும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு நான் தூக்கம் வரலைன்னு முதல்ல வெளில போறேன். பழனியப்பன் ஸாரும் வருவார். சும்மா பார்த்து பேசற மாதிரி நாங்க மேனேஜர் ரூம் பக்கம் போறோம்…” என பூபாலன்.
“நான் கிட்சன் பக்கம் போறேன். வெந்நீர் வேணும்ன்னு கேட்கிற மாதிரி…” என பூச்சி வந்துவிட்டான்.
“முதல்ல லேப்டாப் எடுத்துட்டு பாத்ரூம் போ பூச்சி….” என்ற நெடுஞ்செழியன்,
“எல்லா இடங்கள்லயும் கேமரா பிக்ஸ் பண்ணியாச்சு. போய் வாட்ச் பண்ணு. இப்ப அந்த பையன் வந்துட்டு போகட்டும். அடுத்து யோசிப்போம்…” என்றதும் லேப்டாப்புடன் பூச்சி மீண்டும் குளியலறை நுழைந்துவிட்டான்.
அவர்களுடன் வந்திருப்பவர்கள் அனைவருமே அங்கே நடமாட்டங்களை தங்களின் மடிக்கணினியில் கவனித்துக்கொண்டிருந்தனர்.
மீண்டும் ரூம் பாய் வந்து கதவை தட்டவும் அவனை உள்ளே வரவழைத்த விமல் அவன் கொண்டு வந்து வைத்ததும்,
“ப்ளாஸ்க், டீ கப் எல்லாம் மார்னிங் வந்து எடுத்துக்கோ தம்பி. காலையில நின்ன மாதிரி வெய்ட் பண்ணிட்டு நிக்க வேண்டாம். புரியுதா?…” என பூபாலன் சொல்ல,
“ஓகே ஸார். ஆனா…” என ரூம் பாய் தயங்கி நிற்க,
“என்ன கப்பை கழுவி வைக்கனுமா? ஏம்ப்பா நாங்க இன்னும் வாஷ்ரூம் கூட போகலை. ட்ரெஸ் மாத்தலை. பார்க்கற தானே? ஏற்கனவே உள்ள போனவன் வயிறு சரியில்லன்னு அங்கயே குத்தகை எடுத்துட்டு உக்கார்ந்திருக்கான். எல்லாம் முடிச்சிட்டு தான் குடிப்போம்…” என்றான் விமல்.
“இங்க சாப்பாடு என்னவோ ஒத்துக்கலை. எல்லாம் ப்ரெஷ்ஷா செஞ்சது தானா?…” என்றொரு சந்தேக கேள்வி வேறு நெடுஞ்செழியன் கேட்டு வைத்தான்.
“அதான, இப்ப என்ன டீ கப்லையா இருக்கு? ப்ளாஸ்க்ல தானே? ஆறவும் செய்யாது. போய்ட்டு மார்னிங் வா. அப்பறம் காலையில நாங்களே எழுந்து வருவோம். காலையில ரூம் சர்வீஸ்ன்னு தொந்தரவு செய்யாத…” என பூபாலனும் எகிற,
“ஸாரி ஸார். ஓகே ஸார்…” என்று அவன் கிளம்பிவிட்டான் வேகமாக.
கதவை அடைத்ததுமே அந்த பிளாஸ்க்கை திறந்து பார்த்த நெடுஞ்செழியன் முகர்ந்து பார்த்தான்.
“ண்ணா…” என பாத்ரூமினுள் இருந்து லேப்டாப்புடன் வெளியே வந்த பூச்சி,
“இந்த ரெண்டு பசங்களை பாருங்க. கூட அந்த ரூம் பாயும். மூணு ரூம் முன்னாடி நின்னு என்னவோ பேப்பர் ஒட்டிட்டு போறாங்க…” என்று காண்பித்தான்.
நெடுஞ்செழியன் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது. அந்த அறையின் எண்களை கவனித்துக்கொண்டவன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.
“இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் போகட்டும். பூபா நீ வெளில போயிரு. யாரும் கேட்டா இன்னும் பூச்சி வாஷ்ரூம் விட்டு வெளில வரலைன்னு சொல்லி வெளில உள்ள வேற ரெஸ்ட்ரூம்க்கு போற மாதிரி பாரு…” என்ற நெடுஞ்செழியன்,
“விமல் நீ இங்க டாக்டர் யாரும் இருக்காங்களான்னு கேட்கிற மாதிரி போய் ரிசப்ஷன்ல பேச்சுக்குடு. நம்ம நடமாட்டம் வெளில இருக்கனும்…” என்று சொல்லிவன் சாய்ந்ததில் மேஜையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் உருண்டது.
“ப்ச், இதுவேற…” என விமல் எடுத்து வைக்க அதன் எழுத்துக்களில் புருவம் சுருக்கினான் நெடுஞ்செழியன்.
“விமல் இந்த பாட்டிலா நமக்கு மார்னிங் வச்சாங்க?…” என கேட்க,
“ஆமா, உள்ள ப்ரிட்ஜ்ல கூட இருக்கே…” என்றவன் அதனை எடுத்து வர,
“நோ, நோ வே…” என்றான் நெடுஞ்செழியன்.
அவனுக்கு அந்த பெண்ணிடம் பேசியதன் மொத்த சாராம்சமும் நினைவுக்கு வந்தது. ஆரம்பம் இதுவாகவும் இருக்குமென பொறி தட்டியது.
“மார்னிங் நமக்கு வச்ச பாட்டில்ல இருக்கற கம்பெனி பேர் மாதிரி தான் இப்ப வச்ச பாட்டில் பேர். ஆனா மார்னிங் வச்சது தான் ஒரிஜினல் மினரல் வாட்டர் கம்பெனி. இப்ப வச்சிருக்கற பாட்டில்ல கடைசி எழுத்துக்கு பக்கத்துல இந்த குறியீடு கிடையாது. கடைசி எழுத்து கர்சிவ்ல இருக்கு. அது மூணு எழுத்தோட மாதிரியை குறிக்குது….” என்றான் நெடுஞ்செழியன்.
“ஆனா ஸார் பாட்டில் ஷீல்ட் தானே?…” பூபாலன் சொல்ல,
“இப்ப வீட்டுல வச்சே வாட்டர் பாட்டில், பெரிய கேன் எல்லாம் சப்ளை பன்றாங்களே பூபா. என்ன நீ?…” என்றான் எரிச்சலுடன்.
“எஸ் ஸார்…” என்றவன்,
“ஓகே அஞ்சு நிமிஷமாகிடுச்சு. நான் கிளம்பறேன்…” என சொல்லி கையடக்க பிஸ்டல் ஒன்றை மறைத்து எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
மற்ற மூவரும் மடிக்கணினியில் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்க நெடுஞ்செழியனின் அலைபேசியில் சுபஷ்வினியின் அழைப்பு.
“ஸார் உங்க மொபைல் ரிங்காகுது….” என்றான் விமல் கவனித்து.
விடுதியில் வந்து தங்கியிருந்த அவர்களை சேர்ந்த அனைவருமே ஒரே அழைப்பில் இணைந்திருந்தனர்.
இதில் இரண்டாம் அழைப்பாக சுபஷ்வினி அழைக்க முதலில் கவனியாதவன் விமல் சொல்லவும் திரும்பி பார்க்க அதில் சுபஷ்வினி.
“எக்ஸ்க்யூஸ்மி…” என்று பொதுவாய் சொல்லிவிட்டு அந்த அழைப்பை ஏற்றதும்,