“உனக்காக தான் சோபி கண்ணு…” என சங்கீதாவும் கண் சிமிட்ட,
“நிகமாவா? அப்போ நான் டபுள் ஹேப்பி…” என்று இன்னும் சந்தோஷத்தில் அவளை குதூகலத்துடன் அணைத்தாள்.
“அதுசரி, இப்படியே இருந்தா அடுத்து ஆகவேண்டியதை பார்க்க வேண்டாமா?…” என்ற சங்கீதா,
“சுபா நீ போய் ரெடியாகு. நல்ல நேரம் போயிடும்…” என்று சோழ,
“ஆமாமா, சுபாக்கா நான் உங்களுக்கு சீனியர். நான் தான் எல்லாம் சொல்லுவேன். என்ன கீதாக்கா?…” என்று சோபியா கண்ணடித்து சுபஷ்வினியிடம் ஆரம்பித்து கீதாவிடம் முடித்தாள்.
“வாவ் சீனியர். கண்டிப்பா உங்ககிட்ட தான் கேட்பேன். எங்க சொல்லுங்க பார்ப்போம்…” என சுபஷ்வினியும் அவளிடம் குறும்பாய் கேட்க,
“சமத்தா இருக்கனும். அண்ணா சொல்றதை கேட்கனும். அப்பறம்…” என்ற சோபியாவிற்கு முகம் குங்குமமாய் சிவந்துவிட்டது.
“அடி அழகி, என்ன ஒரு வெட்கம்டா…” என சோபியாவின் குண்டு கன்னங்களை பிடித்து கிள்ளிய சுபஷ்வினி,
“ஏன் உங்கண்ணா நான் சொல்றதை கேட்கமாட்டாங்களா? இதென்ன அநியாயமா இருக்கு? அப்பறம் நான் சமத்தா ஏன் இருக்கனுமாம்?…” என்றும் கண் சிமிட்ட,
“அச்சோ சுபாக்கா…” என்று அவளின் தோளில் சாய்ந்துகொண்டாள் சோபியா.
“நான் சொல்லலை. சோபி கண்ணு இன்னும் பேபின்னு…” என்று சங்கீதாவும் கிண்டல் பேச சூழ்நிலையே மாறியது அங்கே.
“அப்ப நானும் நல்லது சொல்லுவேன். என்ன சோபி கண்ணு?…” என சுபஷ்வினியும் கேலி பேச,
“ஹலோ நான் உங்களுக்கெல்லாம் சீனியர். கொஞ்சம் பயமிருக்கட்டும்…” என்றாள் சோபியா மிரட்டலாக.
“ஆமாமா, கண்டிப்பா…” என மனுரஞ்சனும் சொல்ல,
“அது சரி, திரும்ப அரட்டையா? காலையில பேசுங்க. ஓடுங்க முதல்ல…” என காஞ்சனா விரட்டவும் அவரவர் அறைக்கு சென்றார்கள் அனைவரும்.
மாடிக்கு வந்த சுபஷ்வினிக்கு எவ்வித பதட்டமும் இல்லை. இலகுவாய் அறைக்குள் வந்தவள் அங்கிருந்த டேபிளில் பாலை வைத்துவிட்டு அவனின் அறையை சுற்றி பார்க்க கதவை அடைக்கும் சத்தம்.