“இல்லை, இனிமே தான் சாப்பிட போறோம். சாப்பிட்டு அம்மாப்பாவை போய் பார்த்துட்டு வரனும் மோளே. நாளைக்கு எப்போ வரேன்னு நானே உனக்கு சொல்றேன்டா ஸ்ருதி…” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
“இந்த மைக் இன்னும் ஓயாலையா? அதை தா…” என போனை வாங்கிய நெடுஞ்செழியன் பேசும் முன்,
“ஓகே, பை அஷ். நாளைக்கு பேசலாம்…” என்றபடி அழைப்பை துண்டித்திருந்தாள் ஸ்ருதி.
“எஸ்கேப். சேட்டையை பார்த்தியா?…” என்று சொல்லியவனின் கடுப்பில் சிரித்தபடி சுபஷ்வினி அவன் பக்கம் திரும்ப,
“ஹ்ம்ம், மார்னிங் எங்க போன? நான் எழும்பும் போது உன்னை காணும்? ஒரு குட்மார்னிங் கூட இல்லை…” என்றவன் கையிலிருந்த மொபைலை தூக்கி படுக்கையில் வீசினான்.
“தூக்கம் வரலை. அதான் எழுந்து வெளில போய்ட்டேன். எல்லாரும் எழுந்துட்டாங்க. அப்படியே பேசிட்டு இருந்தேன்…” என்றவள்,
“இப்ப நீங்க என்னை விட்டா தலையை பின்னிட்டு கீழே போவேன். சோபியும், மனுவும் வந்திருவாங்க. நானும் கூட போய் டிபனுக்கு எதாச்சும் ஹெல்ப் பண்ணுவேன்…” என்று சொல்ல,
“ஏன் அஷ்வினி, விபரீத முடிவெல்லாம் எப்ப இருந்து எடுக்கற நீ?…” என்றான் நக்கலுடன்.
“உங்களை கட்டினதுல இருந்துன்னு வச்சுக்கலாம். பதில் கிடைச்சதா? நான் போலாமா?…” என பதிலுக்கு பதில் அவனுடன் மல்லுக்கு நிற்க,
“நமக்கு நேத்து தான் கல்யாணமாகி இருக்கு. நீ சேரி கட்டலை. என்னை பார்த்ததும் வெட்கப்படலை. இப்படி கைக்குள்ள நிக்க வச்சிருக்கேன், கொஞ்சமும் கூச்சப்பட்டு சிணுங்கலை. இதுதான் புதுப்பொண்ணாங்க கல்யாண பொண்ணே?…” என்று அவன் கண் சிமிட்ட,
“அதானே, மேடம் யாரு?…” என்றவன் மனைவியின் முகத்திற்கு இன்னும் நெருக்கமானான்.
“என்னோட மார்னிங் இன்னைக்கு ரொம்ப கூலா இருக்கு அஷ்வினி. காரணம் நீ தான்றதை நான் மறுக்கமுடியாது. தேங்க்ஸ் எ லாட்…” என அவளின் கன்னத்தோடு கன்னம் இழைந்தவன்,
“நான் இன்னைக்கே திரும்ப ட்யூட்டிக்கு போவேன். உனக்கு ஓகே தானே?…” என்று கேட்டு மெல்ல மெல்ல அவள் முகமெங்கும் முத்தத்தினால் ஊர்கோலம் செல்ல,
“ஓகே இல்லைன்னா?…”
“இல்லைன்னாலும் ஓகே சொல்லு. வேற வழியில்லை. சூழ்நிலை அப்படி…” என்றவன் வெளியே பேச்சுக்குரல்கள் கேட்க மெல்ல அவளிடமிருந்து விலகினான்.
“மனு வந்தாச்சு போல? சோபி கூட பேசிட்டு போறாங்க…” என்றாள் சுபஷ்வினி.
“ஹ்ம்ம், நாளைக்கு நைட் ப்ளைட்ல கிளம்பனும்ன்னு சொன்னான்…” என்றவன்,
“சரி, நான் ட்ரெஸ் பண்ணிட்டு வரேன் அஷ்வினி. அப்பறம் அங்க உங்க வீட்டுல…” என்றவன் முடிக்கும் முன்,
“என்னை வீட்டுல விட்டுட்டு சாப்பிட்டு நீங்க கிளம்பிருவீங்க. ஈவ்னிங் கூப்பிட வருவீங்க. அதானே?…” என அவள் முடித்து வைத்தாள்.
“சமத்து, இப்படியே இரு…” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவனின் இதழ்கள் அவளிடம் தஞ்சம் புக மேலும் சிலநிமிடங்கள் அதற்குள்ளேயே கரைந்தது.
சுபஷ்வினியின் விழிகள் மெதுவாய் கடிகாரத்தை பார்க்க நேரத்தை கண்டு அடித்துபிடித்து அவனிடமிருந்து விலகினாள்.
“எல்லாரும் வந்திருப்பாங்க. விடுங்க விடுங்க…” என அவனிடமிருந்து விலக,
“ஓகே, நீ முதல்ல போ. நான் வரேன்…” என்று மனைவியை கீழே அனுப்பினான்.
மீண்டும் நெடுஞ்செழியன் குளித்து முடித்து உடை மாற்றி வர அனைவரும் காலை உணவில் இருந்தனர்.
அவர்களை மறுவீடு அழைத்து செல்ல சிங்கமுத்துவும், வீரவேந்தரும், சுபஷ்வினியின் அக்காவும் வந்திருந்தனர்.
“வாங்க மாமா, வாங்க சித்தப்பா…” என அவர்களை வரவேற்றவன் தானும் சாப்பிட அமர்ந்தான்.
வீரவேந்தரிடம் கண்ணை காட்டியபடி சிங்கமுத்து சாப்பிட சோபியாவும், சுபஷ்வினியும் அவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தனர்.
“சொல்லுங்க மாமா, என்னவோ கேட்கனும்ன்னு நினைக்கறீங்க?…” என்றான் நெடுஞ்செழியன் நேரடியாக தன் மாமனாரிடம்.
“அது…வந்து மாப்பிள்ளை…” என்றவர் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“கல்யாணம் முடிஞ்சது. ஆனா இன்னும் முறையா பொண்ணு வீட்டுக்கு நீங்க வரலை. ஊர்ல எல்லாம் எப்ப வருவீங்கன்னு கேட்கறாங்க. அதான் உங்ககிட்ட கேட்டுட்டு உங்களுக்கு எப்ப தோதுப்படும்ன்னு சொன்னா அங்க சின்னதா வரவேற்பு மாதிரி வச்சிடலாம். எங்களுக்கும் நிம்மதியா நிறைவா இருக்கும்…” என்றார் சிங்கமுத்து.
“ஹ்ம்ம், சரிதான் மாமா. கண்டிப்பா அங்க தான் நாங்க வரனும். சூழ்நிலையும் இப்படி இருக்கு…” என நெடுஞ்செழியன் யோசிக்க,
“இதுல யோசிக்க என்னண்ணா இருக்கு? அடுத்த ஹியரிங் வரதுக்குள்ள நீங்க இந்த சம்பிரதாயம் எல்லாம் முடிச்சிட்டு வந்திடலாமே? அதுக்கப்பறம் இன்னும் பிஸியாகிட்டா? அதனால இப்பவே நீங்க லீவ்ல இருக்கும் போதே பண்ணிடலாம்…” என்றான் மனுரஞ்சன்.
“அப்படி சொல்றியா?…” என்ற நெடுஞ்செழியன் தாயையும், மனைவியையும் பார்த்தான்.
“யூர் விஷ்…” என்றாள் சுபஷ்வினி அவனிடம் வாயசைத்து.
அதில் புன்னகை பூக்க திரும்பியவன் காஞ்சனாவை பார்க்க அவரும் தலையசைத்தார்.
“ஆமா, இப்பவே பண்ணிடலாம். அப்ப தான் நானும் ஜாலியா எல்லா விசேஷத்தையும் முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புவேன்…” என்றாள் சோபியாவும்.
“ஊருக்கா? இது எப்போ?…” என நெடுஞ்செழியனும், சுபஷ்வினியும் பார்க்க மனுரஞ்சன் தலையை கோதியபடி சிரித்தவன்,
“ஆமாண்ணா, நாளைக்கு கிளம்பற டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டேன். சோபியாவோட நெக்ஸ்ட் வீக் கிளம்புவோம்ன்னு ப்ளான். அதான் உங்க பங்க்ஷன் எல்லாம் கூட முடிச்சிடுவேன்….” என்றான் தன் அண்ணனிடம்.
“என்ன இந்த கத்தரிக்கா போட்டுக்குடுத்த ப்ளானா? கூட மூணு நாள் நீ இங்க இருந்தா உன்னோட டெல்லி வரேன்னு டீல் போட்டுட்டாளா?…” என்று கேட்டபடி சோபியாவின் காதை பிடித்து திருகினான் நெடுஞ்செழியன்.
“உடனே வான்னு சொல்றார் ண்ணா. அதான் எல்லாரும் இங்க இருக்கும் போது நான் மட்டும் எப்படி கிளம்ப? உங்க அடுத்த ஹியரிங் அன்னைக்கு நைட் கிளம்பலாம்ன்னு ப்ளான் பண்ணியாச்சு…” என்றவள்,
“நிகியும் அதுவரை நம்ம கூட இருப்பா தானே? பேசாம வேதா ஆன்ட்டிட்ட பேசி அவளையும் நம்மோட டெல்லிக்கு கூட்டிட்டு போயிருவோமா?…” என படபடவென திட்டங்களை வகுக்க,
“அதெல்லாம் நான் கரைச்சிடமாட்டேனா? ஓகே சொல்லுவா. நம்மோட இருக்க அவளுக்கு ரொம்ப இஷ்டம் தான். எனக்கு தெரியும்….” என்ற சோபியா,
“நிகி நான் சொன்னது சரி தானே? இல்லைன்னு கவுத்திடாத என்னை. இப்ப ஓகே சொல்லு. நாம அப்பறமா வேற டீல் போட்டுப்போம்…” என்று சொல்ல அனைவருக்குமே அவளின் கடைசி கெஞ்சலில் அடக்கமாட்டாத புன்னகை.
“விட்டா அவளுக்கும் சேர்த்து நீயே ஓகே சொல்லிடுவ. சரியான கேடி…” என்ற நெடுஞ்செழியன்,
“என்ன நிகி, உனக்கு ஓகே வா?…” என்றவன்,
“இதுல உன் விருப்பம் தான் முக்கியம். எங்க எல்லாருக்கும் நீ எங்க கூடவே இருக்கறதுல மனப்பூர்வமான சம்மதம். நீ யோசிச்சு சொல்லு. வேதா மேம்கிட்ட கேட்டுட்டும் சொல்லு. உன்னோட ஸ்டடிஸ் கூட நீ டெல்லில கண்டினியூ பண்ணலாம்…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஹ்ம்ம், இங்க சோபிக்காக தான் எல்லாரும் நிகியை அங்க கூப்பிடறீங்க போல? என்ன நிகி?…” என சுபஷ்வினி நிகிதாவை பேச்சில் இழுக்க நெகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவள்,
“அதானே? அப்போ சோபிக்கா சொன்னதால தான் கூப்பிடறீங்க போல?…” என்றாள் நிகிதாவும் கிண்டலாய்.
“அப்படியே வச்சுக்கோ. ஆனா நீ எங்களோட தான் வர. அவ்வளோ தான். டாட்…” என்று சோபியா முடிவாய் சொல்லவும்,
“சோபி…” என்றார் காஞ்சனா மென்மையான கண்டிப்புடன்.
“எனக்கும் ஆசை தான். ஆனா பார்க்கலாம். அடுத்த ஹியரிங் முடியவும் தானே? அப்போ சூழ்நிலை எப்படி இருக்குமோ? வேதா ஆன்ட்டி, கீதாக்கா எல்லார்கிட்டயும் கேட்கனும்…” என்றாள் நிகிதா.
“அப்போ அவங்க ஓகே பண்ணா உனக்கு ஓகே தான். நான் இருக்கேன்ல. விடு, இதை நான் ஹேண்டில் பன்றேன். என்கிட்ட நோ சொல்லமாட்டாங்க…” என அப்போதே நிகிதா தங்களுடன் வர சம்மதித்துவிட்டதை போல மகிழ்ந்து போனாள் சோபியா.
“சரி சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க. அங்க சுபா வீட்டுல எல்லாரும் வெய்ட் பண்ணிட்டிருப்பாங்க…” என்று காஞ்சனா சொல்லவும் அனைவருமே உணவில் கவனத்தை செலுத்தினார்கள்.
சாப்பிட்டு முடித்து சிறிதுநேரத்தில் நெடுஞ்செழியனுடன் சுபஷ்வினியை அழைத்துக்கொண்டு வீரவேந்தரும், சிங்கமுத்தும், சாலாட்சியுடன் கிளம்பிவிட்டார்கள்.
மனுரஞ்சன், சோபியாவும் அவர்களுடன் சென்றிருக்க கால்வலி காரணமாக நிகிதா செல்லவில்லை. அவளுடன் வீட்டில் காஞ்சனா, கேர்டேக்கர் மட்டுமே இருந்தார்கள்.
மதியநேரம் நெருங்கியும் இன்னும் சங்கீதாவிற்கு நிகிதாவால் பேச முடியவில்லை.