தமிழ்நாடு முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்தது. முதலமைச்சர் களஞ்சியம் கைது செய்யப்பட்ட வழக்கை கண்டு மக்கள் கொதித்தெழுந்தனர்.
இதில் களஞ்சியத்திற்கு ஆதரவு என நின்ற மூடர்களின் கொந்தளிப்பில் அனைத்து ஊர்களிலும் கலவரம் வெடித்தது.
தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், கலவரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒருபுறம் கடத்தப்பட்டவர்களை தேடும் பணி துவங்கி இருக்க குற்றவாளிகளின் பிடியில் இருப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை.
சுபஷ்வினி கையில் அணிந்திருந்த கடிகாரம் எல்லாம் அவர்களை கடத்தி செல்லும் வழியிலேயே பறிமுதல் செய்யப்பட்டது.
“உன் புருஷனுக்கு முன்னாடியே போலீஸானவன் நான். என்கிட்டயேவா? தப்பு செய்யறவனுக்கு அதை எப்படி செய்யனும்ன்னு தெரியாதா என்ன?…” என்று அவர்கள் வந்த வாகனத்திலேயே அவற்றை பறித்து போட்டுவிட்டு வேறு வாகனம் மாறி இருந்தனர்.
சுபஷ்வினி, நிகிதாவும் அவர்களின் கட்டுப்பாட்டில் சோபியாவின் அருகில் கட்டப்பட்டிருக்க அடுத்ததாய் வந்தவரை கண்டு தனா ஆடிப்போனான் ஒருகணம்.
கதிருடன் அவ்விடத்தின் உள்ளே வந்துகொண்டிருந்த வேதாவை பார்த்த தனா முகத்தில் பலவகை உணர்வுகள்.
ஏன் என்றும் கேட்க முடியாது. கேட்கும் நிலையில் அவனுமில்லை. ஒருநிமிடம் மனது குலுங்கியது.
தன்னை நேர்பார்வை பார்த்துக்கொண்டு வந்த வேதசௌந்தரியின் விழிகளில் தீபந்தமொன்று எரிந்துகொண்டிருப்பதை கண்டு தலையை தாழ்த்திக்கொண்டான்.
“என்ன ஜெய் முகத்துல இவ்வளோ ஷாக்? அதுவும் நான் செஞ்சதுல உனக்கு விருப்பமில்லை போல?…” என கேட்ட கதிர்,
“ஏய் இப்ப எதுக்கு அழுது ஸீன் போடற? அதான் போய் சேர்ந்துட்டான்ல உன் அப்பன். உன்னையும் இப்ப அனுப்பி வச்சிடறேன். வாயை மூடு…” என்று டிஜிபி நிகிதாவை அடிக்க பாய,
“அவ பாவமில்லையா? சின்ன பிள்ளையை இப்படி அடிக்கிறியே, நீயெல்லாம் என்ன ஆளு? உன் பொண்ணு வயசிருக்குமா? மனசாட்சியே இல்லையா உங்களுக்கு?…” என சோபியா டிஜிபியை கோபமாய் பேச,
“பார்ரா டெல்லி கிளிக்கு கோவத்தை. இவ்வளோ நேரம் பாவமா இருந்துட்டு இப்ப பேசறதை பாரேன்…” என்றான் கதிர் இளக்காரமாக.
“அவளுக்கு காலு வேற அடிபட்டிருக்கு. இப்படி சித்தரவதை பன்றீங்களே?…” என கண்ணீருடன் சோபியா சொல்ல,
“கோழி முடமா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும்ன்னு சொல்லுவாங்களே. நீ கேட்டதில்லையோ?…” என்றவனின் பேச்சில் அருவருத்து போனார்கள் பெண்கள் அனைவரும்.
“இனி கேட்டா மட்டும் என்ன? இவளுக்கு கால் சரியா இருந்தா என்ன இல்லைன்னா எனக்கென்ன?…” என்றவன்,
“அன்னைக்கு எடுத்த உன் வீடியோ பார்க்கறியா பாப்பா?…” என்றான் நிகிதாவின் அருகில் வந்து நின்று கதிர்.
அவனின் கால்களின் நடுப்பகுதியில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க முயன்றாள் சுபஷ்வினி.
“அட நீயும் முழிச்சாச்சா? இப்படி அவசரப்பட்டா எப்படி? ஒன்னொன்னா வரேன்….” என இளித்தவனை உறுத்து விழித்த சுபஷ்வினி,
“எப்படி கட்டி போட்டு வச்சா? வா பார்த்துடுவோம். எங்கிட்ட வாடா?…” என ஆவேசமாக கதிரை பார்த்தவள் உமிழ்ந்துவிட,
“ஏய்…” என்றான் கதிர் அவளை.
“கத்திட்டா நீ பெரிய இவனா? ஊர், உலகத்துக்கு பயந்து எங்களை இங்க கொண்டு வந்துட்டா அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா நீ? பயந்தாங்கோலி பயலுங்க தானடா நீங்கலாம். எங்க புடவையை கட்டிக்கங்கன்னு சொல்ல கூட தகுதி வேணும். ஒண்ணுமில்லாம போங்கடா வெளில…” என்றாள் ஆத்திரம் குறையாமல்.
“ஏய் எங்க கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கும் போதே இவ்வளோ பேசறியா நீ?…” டிஜிபி அவளை அடிக்க வர,
“அடிக்க போறியா? கிழட்டு நாயே. எங்க என் கை கட்டை கழட்டி விட்டுட்டு அடி பார்ப்போம். வெக்கமா இல்லையாடா உங்களுக்கெல்லாம்? இதுல நீ பெரிய போலீஸ் வேற?…” என்றவள் பேச்சில் தனாவின் கொஞ்சநஞ்ச தடுமாற்றமும் மறைந்துவிட்டது.
“கட்டை அவுத்துவிடுங்கடா, என்ன செஞ்சிடறான்னு பார்ப்போம்…” என்றான் தனா சுபஷ்வினியை எள்ளலாக பார்த்தபடி.
“வேண்டாம் ஜெய்…” என கதிர் சொல்ல,
“அந்த பயம் இருக்கனும். தொடைநடுங்கிடா நீங்களாம். நீ சோபியாவை கடத்தி எங்களை இங்க வரவழைச்சுட்டோம்ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத. அத்தனை சீக்கிரம் பயந்து நான் இங்க வர அளவுக்கு முட்டாள்ன்னு நினைச்சிட்டீங்களே….” என்றாள் தைரியமாக.
“தப்பான கணிப்பு. உங்களை மாதிரி ஆளுங்க வேற எப்படி யோசிப்பீங்க?…” என்றாள் சுபஷ்வினி ஏளனமாக.
“எங்க கஸ்டடில இருக்கும் போதே இவ்வளோ பேசற. கேவலம் பொண்ணு நீ…” தனா எகிற,
“ஏய் ச்சீ நிறுத்து….” என அவனுக்கு மேல் குரலை உயர்த்தியவள்,
“என்ன சொன்ன? கேவலம் பொண்ணா? அந்த பொம்பளையை வச்சு தான பணம் சம்பாதிச்சீங்க. அதுக்கு கூட கேவலம் ஆம்பளைங்க நீங்க லாயக்கில்லையோ? இன்னைக்கு இந்த பொண்ணால தான் உங்க முடிவு. ஒரு பொண்ணால தான் உங்களுக்கு அழிவு….” என்றாள் சீற்றம் கொண்ட பெண் புலியாக சுபஷ்வினி.
“ஓஹ், எங்க எங்களை அழிச்சிடு பார்ப்போம்…” என்ற கதிர்,
“ஜெய் அவ கட்டை அவுத்து விடுடா. எங்க இப்ப நான் செய்ய போறதை தடுத்து பார்க்கட்டும்…” என்றவன் நிகிதாவின் கட்டையும் அவிழ்த்து அவளை கீழே தள்ளினான்.
“கதிர், என்ன பன்ற நீ?…” என தனா வேகமாய் வர,
“ஏன் உனக்கு தெரியாதா என்ன பண்ண போறேன்னு?…” என சிரித்தவன்,
“எல்லாத்துக்கும் ஆரம்பம் இவ தான? முதல்ல இவளை முடிக்கறேன்…” என கதிர் சொல்ல,