“ஓகே, இதுவரை இருந்த பரபர, கடகடவெல்லாம் இல்லாம லைபை ஸ்மூத்தா என்ஜாய் பண்ணு அஷ். சென்னை வரவும் பார்க்கலாம்…” என சொல்லி கிளம்பினாள் ஸ்ருதகீர்த்தி.
அவளை வழியனுப்ப சுபஷ்வினியும் உடன் வந்தாள். வெளியே பார்த்திவ்வுடன் பேசிக்கொண்டிருந்தான் நெடுஞ்செழியன்.
அவனின் மடியில் பார்த்திவ்வின் மகள் குட்டி ஸ்ருதகீர்த்தி அமர்ந்திருக்க மழலையாக என்னவோ பேசி அவனின் கன்னத்தை பிடித்து இழுத்து, மீசையை இழுக்க என சேட்டை செய்ய அதற்கு வாகாய் தலையை குனிந்து கொடுத்தபடி சிரித்தான் நெடுஞ்செழியன்.
“கீர்த்திம்மா…” என பார்த்திவ் மகளின் கையை எடுத்துவிட,
“கிள்ளட்டும், நல்லா கிள்ளட்டும்…” என வந்த ஸ்ருதி பார்த்து முறைத்தான் பார்த்திவ்.
“சரி லைட்டா கிள்ளட்டும். அன்னைக்கு என்னை ஹாஸ்பிடல் வரக்கூடாது, அஷ்ஷை பார்க்க கூடாதுன்னு சொன்னாங்கள்ல. அங்க அவங்க போலீஸ். இங்க என் பொண்ணு தான் போலீஸ்…” என்று ஸ்ருதி சொல்ல,
“இங்கயும் நான் தான் போலீஸ். என்ன குட்டி?…” என குழந்தை கீர்த்தியிடம் நெடுஞ்செழியன் கேட்க,
“மொட்டை மாடிக்கு வா அஷ்வினி…” என சொல்லி அவன் வைத்துவிட நேரத்தை பார்த்தாள் அவள்.
“இந்த நேரம் மாடில என்ன?…” என மாடிப்படிக்கு செல்ல போக,
“அங்க எங்கடி போற?…” என பிடித்துக்கொண்டார் ராதிகா.
“எல்லாரும் உறங்கிட்டாக. நீ என்ன இந்த நேரத்துக்கு மாடிக்கு?…” என சத்தம் போட,
“அவங்க அங்க தான் இருக்காங்கம்மா. பேசனும்ன்னு கூப்பிட்டாங்க…”
“இந்த நேரத்துல ரூம்ல பேசவேண்டியது தான? என்னவோ போ. சட்டுபுட்டுன்னு பேசிட்டு நேரமா கீழ வந்திருங்க. பனி பெய்யுது…” என்று சொல்லிவிட்டு செல்லவும் மாடிக்கு வந்தாள்.
வந்தவள் விழிகள் பெரிதாய் விரிந்துகொள்ள முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. தலையசைப்புடன் கதவை அடைத்து தாழிட்டு வந்தாள்.
“வர நேரத்தை பாரு? இதை எல்லாம் ஒத்தையா அரேஞ்ச் பண்ணேன் நான்…” என்றான் நெடுஞ்செழியன் கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் படுத்து காலாட்டியபடி.
“ஏன் என்கிட்ட சொல்லவேண்டியது தானே? நான் பண்ணியிருப்பேனே?…” என அவனருகே அமர, இழுத்து தன் மேல் போர்த்திக்கொண்டவன் சுபஷ்வினியின் முகத்தை விரல்களால் வருடினான்.
“என்னவாம்? செம்ம ஹேப்பி போல?…” என சிரித்தாள் அவள்.
“ஹ்ம்ம், பின்ன இல்லையா? யாரும் இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி இப்படி டென்ஷன்லையே குடும்பம் நடத்திருக்கமாட்டானுங்க. ஹப்பா எல்லாம் ஓவர் ஓவர்…” என சொல்ல நெடுஞ்செழியன் போன் சப்தமிட்டது.
“இந்த நேரம் யாருடா?…” என பார்க்க பூச்சியப்பன்.
“என்ன பூச்சி?…” என நெடுஞ்செழியன் எடுத்ததும் கடுப்புடன் கேட்க சுபஷ்வினி வாய் பொத்தி சிரிப்பை அடக்கினாள்.
“ஒரு முக்கியமான விஷயம். அதான் இந்த நேரமானாலும் கால் பண்ணிட்டேன்….”
“சரி என்னன்னு சொல்லு பூச்சி…”
“நீங்க லீவ்ல இருக்கீங்கன்னு தெரியும். இருந்தாலும்…” என அவன் இழுக்க,
“வந்தேன் வாயிலையே சுடுவேன். அப்பறம் பூச்சி பறக்க றெக்கை இருக்காது. என்னன்னு சொல்லுடா…” என எழுந்தமர்ந்துவிட்டான் நெடுஞ்செழியன்.
“ஐயோ, அப்ப நான் நாளைக்கு கூப்பிடறேன் ஸார்…” என சொல்லி வைத்துவிட,
“டேய், டேய்…” என கத்திவிட்டான் நெடுஞ்செழியன்.
“அச்சோ மெல்ல…” என அவனின் வாயை மூடியவள்,
“அவன் எதுக்கு கூப்பிட்டானோ? உங்க டென்ஷன்ல அவன் பயந்துட்டான். என்னன்னு கேளுங்க…” என சுபஷ்வினி சொல்ல,
“ம்ஹூம். விடு. வேண்டாம்…” என்று போனை வைக்க தானே எடுத்து பூச்சிக்கு அழைத்தாள்.
“என்ன பூச்சி?…” என சுபஷ்வினி கேட்க,
“நொந்த பூச்சி. போங்கண்ணி. இங்க இவனுங்க போதைக்கு நான் ஊறுகாவாகிட்டேன். இந்த பூபாவும், விமலும் தான் தைரியமிருந்தா ஸாருக்கு இப்ப கால் பண்ணி பேசுன்னு பெட் கட்டினானுங்க. கொஞ்ச மிஸ்ஸாகிருந்தா மிஸ்டு கால் மிஸ்டு கை இல்லை. மிஸ்டு வாய், மிஸ்டு வேர்ல்ட் தான்…”
பூச்சியப்பன் நொந்துபோய் சொல்லிக்கொண்டிருக்க சுபஷ்வினி இங்கே சிரிக்க அங்கே விமலும், பூபாலனும் சிரிக்க என நெடுஞ்செழியன் காண்டாகிவிட்டான்.
“இவனுங்க கட்டுக்கோப்பா குடும்பத்தை குடும்பத்துக்குள்ள நடத்த விடமாட்டானுங்க போல? வில்லனாக்காதீங்கடா என்னை….” என்றதும்,
“தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் பீதியில் உறைந்துவிட்டார்…” என சொல்லி அழைப்பை துண்டித்தான் பூச்சியப்பன்.
“இவனோட…” என்ற நெடுஞ்செழியன் தானும் சிரித்துவிட,
“உங்களுக்குன்னு செட்டு சேர்ந்து வராங்க பாருங்க…” என்றவள் இன்னும் அடக்கமாட்டாமல் சிரிக்க சூழ்நிலை சுகமாய், இதமாய் மாறியது.
“ஹ்ம்ம், பிடிச்சிருக்கா அஷ்வினி?…” என்றான் மென்மையான குரலில் நெடுஞ்செழியன்.
“ஆமா, பிடிச்சிருக்கு…” என தாமதிக்காமல் பட்டென்று அவளும் சொல்ல,
“என்னன்னே நான் கேட்கலை. ஆனா பதில் மட்டும் சரியா சொல்ற?…” என்றவனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“அதெல்லாம் தெரியும், தெரியும். அதான் நித்தைக்கும் புலம்பறீங்களே, இப்படி கல்யாணம் செய்ய வச்சிட்டானுங்களேன்னு. சுத்திலும், கத்தி துப்பாக்கி, சேஸிங், ரன்னிங், கோர்ட், ஆர்க்யூமென்ட்ன்னு இப்படியே இருக்கேன்னு. தெரியாதா என்ன?…” என்றவள் அவன் முகம் பார்த்து,
“ஆனாலும் உங்க கூட இருக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இருக்கற இடம் முக்கியமில்லை. யாரோட இருக்கறோம்ன்றது தான் முக்கியம். நம்மளை சுத்தி துப்பாக்கி, குற்றம், தண்டனைன்னு இருந்தாலும் உங்க பக்கத்துல உங்க கூட இப்படி இருக்கறது எனக்கு பிருந்தாவனத்தில் இருக்கறது மாதிரி தான் செழியன்….”
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ரெண்டு வருஷமா தவிச்சதுக்கும், தவிக்க வச்சதுக்கும் சேர்த்து வாழ்நாள் முழுக்க உங்க கை பிடிச்சு சுவாரஸியத்தோட வாழ போறேன்…” என்றாள் உள்ளார்ந்த நேசத்துடன்.
அவள் பேச பேச மனைவியின் முகத்திலேயே மையல் கொண்டிருந்தவன் இதழ்களில் குறுஞ்சிரிப்பும், முகத்தில் நெகிழ்ச்சியும் கூடுதலாய்.
“என்ன எமோஷனலாகிட்ட மாதிரி இருக்கே?…” சுபஷ்வினி அவனிடம் கேட்க,
“ஹ்ம்ம்…” என தலையை ஆட்டிய நெடுஞ்செழியன்,
“ஆமா அது என்ன பூங்காவனம்? யார் அது? என்கிட்ட சொல்லவே இல்ல…” என கலாய்த்தவன் அடக்கமாட்டாமல் சிரித்துவிட,
“இந்த வாய்க்கொழுப்பு இருக்கே…” என்ற சுபஷ்வினி அவனை கீழே தள்ளி அவன் முகத்தோடு சாய்ந்தவள் அவன் பேச்சுக்களை சிறைபிடித்து முற்றுகையிட சிலமணி துளிகளின் பின்னால் விலகி படுத்தாள்.
“கிஸ் பண்ணுனியா நீ?…” என நெடுஞ்செழியன் வாய் கொள்ளாமல் சிரிப்புடன் கேட்டு,
“ஆமா, ஏன் இந்த ரத்தவெறி?…” என கீழுதட்டை காண்பித்து மீண்டும் கேலி பேச,
“யோவ் போயா…” என கடுப்பாகி எழுந்து செல்ல முயன்றவளை இழுத்து அணைத்தவன் அவனின் பிருந்தாவனத்தில் ரோஜாப்பூவின் வாசத்தோடு கலந்தான்.
இருவரின் சஞ்சலமற்ற கூடல் என்றுமில்லாத தித்திப்பை உண்டாக்க அவ்விரவு உண்மையில் தேனிலவு தான்.
“ஹனிமூன் அப்படின்னு எல்லாம் எங்கயும் வேண்டாம். மாமனார் வீடும், மொட்டை மாடியும் தான் நம்ம ஹனிமூன் ஸ்பாட்…” என்று நெடுஞ்செழியன் முடிவாய் சொல்ல,
“எங்கப்பாவை உங்க பார்வைக்கு சுத்தவிடனும். அந்த மனுஷனும் நீங்க திரும்பினா கூட என்ன மாப்பிள்ளைன்னு உடனே கவனிக்கிறார். அதானே வேணும் உங்களுக்கு. உங்க இன்டேன்ஷன் எனக்கா புரியாது…” என்றவளை உடல் குலுங்க கட்டிக்கொண்டவன்,
“அப்பறம் பிள்ளைங்களையும் ரெண்டுவருஷம் கழிச்சு பெத்துக்கலாம். கொஞ்ச நாள் காதலிச்சு, சண்டை போட்டு, திரும்ப சேர்ந்துக்கிட்டு, ஸாரி சொல்ல ஈகோ பார்த்து, வேற வழியில்லாம சரண்டராகி இதெல்லாம் நான் அனுபவிக்கனும்…”
இப்படி ஒவ்வொன்றாய் சொல்லி சொல்லி அவனின் கனவுகளை அவளிடம் சேர்ப்பித்துக்கொண்டே இருந்தவன் ஒருகட்டத்தில் உறங்கிவிட சுபஷ்வினி விடியும் முன் கீழே அறைக்கு செல்லவேண்டுமே விழித்திருந்தாள்.
உறக்கம் வருவதை போலிருக்க தனது மொபைலை எடுத்து சமூக வலைதளத்தில் வலம் வந்தவள் நெடுஞ்செழியன் பெயரை பார்த்தாள்.
“ரொம்ப நாள் கழிச்சு வாட்ஸாப்ல ஸ்டேட்டஸ் வச்சிருக்காரே? கவனிக்கவே இல்ல….” என அதனை திறக்க பார்த்ததும் சுபஷ்வினியின் முகம் ஜிவுஜிவுத்தது.
நெடுஞ்செழியன் புகைப்படம் பெரிதாகவும் சுபஷ்வினியின் புகைப்படத்தை ஒரு வட்டத்திற்குள் அடைத்து அந்த குரல் கேட்டது.
‘இந்தாருக்காளே இவ, இவளுக்கு போனா போகுதுன்னு பூவும் பொட்டும் குடுத்த புண்ணியவான் நான் தான்’ என்று இரு கை கூப்பி குறும்பாய் சிரிப்போடு ஒற்றை கண்ணடித்து வணக்கம் வைத்தபடி நெடுஞ்செழியன்.
“அடப்பாவி…” என்றவள் போனை கீழே போட்டுவிட்டு அவனை எழுப்பி,
“யோவ் லத்தி, என்னை என்ன போனா போகுதுன்னா…” என கேட்டு அடிக்க ஆரம்பித்தவளை உறக்கம் கலைந்தவன் சட்டென அள்ளி,
“லெட்ஸ் செலிபரேட் தி டே…” என்ற அட்டகாசமான விஷம சிரிப்புடன் அவளின் வன்மைகளை ஏற்று மொத்தமாய் அவளுள் தன்னை புகுத்திக்கொண்டவன் மீளா மயக்கத்தில் கிறங்கி போனான் மனைவியோடு.
வார்த்தைகளில் காதலால் களிக்காதவர்கள் வாழ்க்கையில் நேசமெனும் பிருந்தாவனத்தில் உயிர் சுவாசமாக வாசம் கொண்டிருந்தனர்.