“காட்டுப்பூச்சி என்ட்ரி டைம்…” என சொல்லிக்கொண்டே உள்ளே அடாவடியாக கண்களில் கூலருடன் பூச்சியப்பன் உள்ளே நுழைய,
“ஹாய் பூச்சிண்ணா…” என்றாள் நிகிதா.
“ஹலோ, நான் உங்க கிட்ட பேச விருப்பமில்லை. நோ கமெண்ட்ஸ்….” என அவன் முகத்தை திருப்ப,
“நீ காட்டுப்பூச்சியை மிஸ் பண்ணிட்டியாம். அதான் ஸாருக்கு உன்னோட பேச வேண்டாமாம். அதோட நீ இங்க ரீச்சாகிட்டேன்னு மெசேஜ் கூட போடலையாம்…” என அவனுடன் வந்த பூபாலன் பூச்சியின் முதுகில் பொளீரென போட அவ்விடமே சிரிப்பில் நிரம்பியது.
“மிஸ்டர் பூபாளம், எப்ப பார்த்தாலும் எங்கண்ணன் மேல கை வைக்கிறதுலையே நீங்க கண்ணா இருக்கீங்க. அவங்க வெறும் பூச்சி இல்லை. தி கிரேட் காட்டுப்பூச்சி…” என நிகிதா பூச்சியப்பனை பாராட்டி சிரிக்க,
“அப்படி சொல்லுடா என் செல்லக்குட்டி…” என அவளுடன் ஹைபை அடித்துக்கொண்டான் பூச்சி.
“ஆமா, உங்கண்ணன் பெரிய பட்டரு? எங்க கை வைக்காதீங்கன்னு சொல்ல சொல்லு பார்ப்போம்….” என அவளுடன் மல்லுக்கு நின்றான் பூபாலன்.
இப்படியே பூபாலனுடன், நிகிதா வாயாடிக்கொண்டிருக்க சில நிமிடங்களில் சந்தைக்கடை போலிருந்தது இருவரின் சண்டையும்.
எப்போதும் அவளிடம் வம்பு வளர்த்துக்கொண்டே இருப்பான் பூபாலன். இன்றும் பேசிக்கொண்டிருக்க ‘ஆரம்பிச்சிட்டாங்கப்பா’ என்று தான் சிறு புன்னகையுடன் ரசித்து பார்த்து சென்றனர் வீட்டினர்.
“ஸ்டாப் இட், பூச்சி செத்துருச்சு. சோறு எங்கடா? காலையில எந்திச்சு அண்டா தண்ணில குதிச்சு எந்திச்சு வந்தா ஒரு மனுஷனை மத்தியில நிக்கவச்சு வச்சு மத்தியஸ்த்தம் பண்ணாம என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா ராஸ்கல்ஸ்?…” என்ற பூச்சியின் பேச்சில் பக்கென்று சிரித்துவிட்டனர்.
“நான்சென்ஸ்…” என்றபடி தலையை ஒரு நீட்டு நீட்டிவிட்டு,
“கை வைக்காதன்னு சொல்லமாட்டேன். ஆனா உனக்கும் எனக்கும் பகை பகை தான். வச்சிக்கறேன் உன்னைய…” என பூபாலனின் மூக்கோடு மூக்கை உரசவிட்டு பூச்சி வீர வசனம் பேச,
“குளிச்சியே, பல்லு தேச்சியாடா பாடி சோடா?…” என பூபாலன் கேலியாய்.
“அது வந்து…” என யோசிப்பதை போல பூச்சி பாவனை செய்ய,
“வாட் எ ப்ரப்போசல்….” என சுபஷ்வினி பூச்சியை லேசாய் தள்ளிவிட்டாள்.
“எப்பே…” என்று பூபாலனின் மேல் விழுந்து நின்றான் பூச்சி.
“பூச்சி பறக்கலை?…” என கிண்டலாய் சுபஷ்வினி கேட்க,
“நோ நோ, அஷ். சாதா பூச்சி இல்லை. காட்டு பூச்சி…” என ஸ்ருதி கிண்டல் பேச,
“என்னை விட்டுட்டு இங்க என்ன பன்றீங்க? வாங்க ரூம்ல உக்கார்ந்து பேசுவோம்…” என நடக்கமாட்டாமல் வயிற்றை தூக்கிக்கொண்டு நடந்துவந்தாள் சோபியா.
ஒன்பதாம் மாதம். இன்னும் இருபது நாளில் தேதி தந்திருந்தார்கள் சோபியாவின் பிரசவத்திற்கு.
அவளுக்கு தாய் வீட்டிலிருந்து எல்லாம் செய்வது சுபஷ்வினியின் பெற்றோரும், வேதாவின் வீட்டினரும்.
இப்போதும் கூட வளைகாப்பை இரு வீட்டாரும் சேர்ந்து தான் செய்கின்றனர். அதில் சோபியாவுக்கு அத்தனை ஆனந்தம்.
இந்த உறவுகள் சூழ் உலகில், அவர்களின் அன்பில் திக்குமுக்காடி தான் போனாள் சோபியா.
அவளின் உணர்வுகள் ஸ்ருதிக்கு புரிந்தது. புன்னகையுடன் தன் பங்கிற்கு அவளுக்காய் வேண்டியதை உரிமையாய் செய்வித்து உடன் நின்றாள் ஸ்ருதியும்.
“சோபி…” என மனுரஞ்சன் அந்த மிஷினை கொண்டுவந்து அவளின் காதில் பொருத்திவிட்டு தலையில் லேசாய் தட்டினான்.
“பூக்குள்ள இருந்திருக்கு. பார்க்காம காணும் காணும்ன்னு சுத்தல்ல விடற. இப்ப இங்க என்ன? அங்க போய் எல்லாரும் உட்காருங்க. வேதாம்மா பக்கத்துல வந்துட்டாங்க…” என்றான் மனுரஞ்சன்.
மொத்த கும்பலும் ஓரிடத்திற்கு நகர அந்த பட்டாளத்தின் ஆரவாரத்தில் அங்கிருந்த அத்தனைபேரின் முகத்திலும் புன்னகை நிரம்பி வழிந்தது.
சில நொடிகளில் வாசலில் பரபரப்பு தெரிய நிகிதா வேகமாய் எழுந்து ஓடினாள்.
“உன்னதி குட்டி…” என உள்ளே வந்துகொண்டிருந்த சங்கீதாவின் பிள்ளையை வாங்கியவள் அவளின் கன்னத்தில் முத்தமிட,
“ஹ்ம்ம் அதுசரி. அவ எங்கயும் போகமாட்டா. கொஞ்சம் என்னையும் பார்க்கலாம்…” என்றாள் சங்கீதா.
“கீதாக்கா உங்களை எப்படி மிஸ் பண்ணுவேன்?…” என அவளை அணைத்துக்கொண்ட நிகிதா வேதாவின் கையை பிடித்துக்கொண்டாள்.
“சரி உள்ள போகலாம். நேரமாகிடுச்சு…” என வேதா சொல்ல,
“அங்கிள் எங்க ஆன்ட்டி?…” என்றாள் நிகிதா.
“இன்னைக்கு கவுன்ஸிலில் மீட்டிங். முடிச்சிட்டு அப்பறமா வருவாங்க நிகி….” என்றார்.
காஞ்சனாவும், நெடுஞ்செழியனும் வந்து வரவேற்க சற்று நேரத்தில் வளைகாப்பு வைபவம் இனிதே துவங்கியது.
விசேஷம் முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க சுரேந்திரனும் அங்கே வந்துவிட்டார்.
“மேம் உள்ள போய் பேசலாம்…” என்றான் நெடுஞ்செழியன் வேதாவிடம்.
மற்றவர்கள் அனைவரும் வெளியே இருக்க மற்றவர்கள் நிகிதாவின் அறைக்குள் சென்றனர்.
நிகிதா வந்தபொழுது தங்க வைக்கப்பட்டிருந்த அறை இப்போதும் அந்த வீட்டில் நிகிதாவின் அறையாகவே இருந்தது.
ஓரளவு அவள் இதனை எதிர்பார்த்திருந்தாள் தான். விமலின் பார்வையின் அர்த்தம் தெரியாமலில்லை.
ஆனால் அதனை பற்றி எதையும் பேச தோன்றவில்லை. அப்படியே விட்டுவிட இன்று அவன் தாயுடன் வந்ததை பார்த்ததும் ஓரளவு கண்டுகொண்டாள்.
“நிகிதாவை எனக்கு பிடிச்சிருக்கு. கல்யாணம் செஞ்சுக்க விரும்பறேன். நிகிதாவுக்கு சம்மதமா இருந்தா…” என பளிச்சென்று விமல் சொல்லிவிட சுரேந்திரன் சந்தோஷமும், தயக்கமுமாய் பார்த்தார்.
“தம்பி, விமல் நிகிதாவுக்கு, அவ…” என அவர் தடுமாறி கண் கலங்கி பார்க்க,
“ஏன் நிகிதாவுக்கு என்ன? படிச்சிட்டிருக்கா. அவ்வளோ தானே? உடனே கல்யாணம் இல்லை. அவ படிப்பு முடிக்கட்டும். அப்பாவும் அவளுக்கு என் மேல விருப்பமோ, அபிப்ராயமோ இருந்தா மட்டும் தான் இந்த கல்யாணம். நான் வெய்ட் பண்ணுவேன்…” என்றவன்,
அனைவருக்கும் அவனின் விருப்பமும், அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையும் புரிந்தாலும் நிகிதாவை கொண்டு தயங்கி பார்த்தனர் அவள் என்ன சொல்வாளோ என.
“விமல் நிகிதாவை பத்தி உங்கம்மாவுக்கு…” என சுரேந்திரன் முடிக்கும் முன்,
“ஏன் ஸார் நிகிதாவுக்கு என்ன?…” என்று அவரிடம் கேட்டு,
“நிகி நீ ஓகே தானே? உனக்கு என்ன? எப்பவும் போல தானே இருக்க?…” என்றான் விமல் அவளிடம்.
அந்த பார்வையில் அவன் அவளை அணைத்து நின்ற விதம், அதற்குள் தவிப்பாய் கலந்திருந்த அவன் நேசம் நிகிதாவை மெல்லிய சாரலாய் தீண்டத்தான் செய்தது.
“ஆமா, எனக்கு என்ன? நான் எப்பவும் போல நல்லா இருக்கேன். சந்தோஷமா. வேற என்ன?…” என்றாள் அவளும்.
லேசாய் குரல் உடைவதை போலிருந்தாலும் அதனையும் சமாளித்து நிமிர்வாய் தைரியமாய் பார்த்தாள்.
“ஆனா இப்ப எனக்கு சரின்னு சொல்ல தோணலை. உங்க மேல எப்பவுமா எனக்கு நல்ல ஒபீனியன். நீங்க எனக்கு நல்ல ப்ரென்ட், வெல்விஷர் தான். ஆனா?…” என சில நொடிகள் மௌனமாகி பார்க்க,
“நிகி…” என்று சங்கீதா என்னவோ சொல்ல வர,
“நிகிதாவே பேசட்டும். நாம தடுக்க வேண்டாம்…” என்றான் நெடுஞ்செழியன்.
“அண்ணா கண்டிப்பா நான் இப்படியே இருக்கமாட்டேன். எனக்கு என்ன? நான் எப்பவும் போல நல்லா தான் இருக்கேன். கல்யாணமும் பண்ணிப்பேன். ஆனா இப்ப இதை பத்தி நான் யோசிச்சதே இல்லை. அதான் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…” என்று சொல்ல மற்றவர்களும், விமலின் தாயும் புன்னகையுடன் அவளை வாழ்த்தி அங்கிருந்து வெளியேற,
“இதே தெளிவோடவே எப்பவும் இரு நிகிதா. நான் அம்மாவை வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு திரும்ப வரேன்…” என சொல்லிய விமல் புன்னகையுடன் அவளிடம் தலையசைத்து விடைபெற்றான்.
சற்று நேரத்தில் சொந்தங்களும் மற்றவர்களும் கிளம்ப இரவு நேரம் வீடே அமைதியாக இருந்தது.
காலையில் இருந்து விசேஷம் என அலைந்ததில் அத்தனைபேரும் களைத்து போயிருக்க சோபியாவின் முகத்தில் அயற்சியே இல்லை.
கை நிறைய அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை எல்லாம் அசைத்து குலுக்கி பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா.
“மனும்மா, எவ்வளோ கலர்ஸ்? எல்லாமே எனக்கு புடிச்ச மாதிரி…” என மனுரஞ்சனிடம் காண்பிக்க,
‘நான் சொல்றேன். நான் தான் முதல்ல சொல்லுவேன், இல்லை நான்.’ என மாற்றி மாற்றி இருவரும் போட்டி போட உன்னதி அவர்களுக்கு போட்டியாய் என்னவோ பேச முயல அனைவரின் கவனமும் குழந்தையிடம் சென்றது.
அதன் பின்னர் உறங்க எங்கே நேரம்? அனுபவித்த வேதனைகள் எல்லாம் பூக்களாய் உருமாறி பூமாரி பொழிய அந்த சந்தோஷ கூடாரத்தில் ஆனந்த கொட்டங்களுக்கு அளவில்லை.
வீட்டின் சத்தம் தெருவை அடைய பிள்ளைகளின் மகிழ்ச்சியை பெற்றவர்கள் மனம் கனிந்து பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்தனர்.