மலரின் பேச்சிலும் நடிக்கிறேன் என்ற பெயரில் அவள் செய்து கொண்டிருக்கும் அலப்பறையிலும்… அவள் மேல் இருந்த சிறிதான கோபமும் இப்பொழுது மாபெரும் தாபமாக விஸ்வரூபம் எடுக்க,
அவனோ, தன் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு தன் கையில் கிடந்தவளிடம் “இப்ப இது சொர்க்கமானு தெரியல, ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம் சொர்க்கமா மாறப் போகுது மொசக்குட்டி” என்றவனின் மீசை அவள் செவிமடல் வருடியதில் சிலிர்த்த மலர்விழியோ இப்பொழுது நன்றாகவே விழி மலர்த்தி கணவனைப் பார்த்தவள்…
அப்பொழுதும் “மாமா என்ன மாமா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல மாமா.?” என்று கேட்டவளை…
அவனோ, “இன்னும் நீ எவ்ளோ நேரந்தே நடிப்பன்னு கேக்கிறீன்” என்றான் யுவா
விழியில் விசமமும், குரலில் குழைவுமாய்.
கணவன் கூற்றில் சட்டென்று அவன் கைகளில் இருந்து கீழே குதித்த மலர்விழியோ…
அவனது முறைப்பைப் பார்த்து பயந்தவளாய்… “கண்டு புடிச்சுட்டிங்களா மாமா, நீங்க கண்டு பிடிச்சுருவீங்கன்னு நா வேணாம்ணுதே சொன்னேன் மாமா,
ஆனா அப்பத்தாதே அந்த கஞ்சி போட்ட காளக்கி இப்டி ஒரு அதிர்ச்சிய குடுத்தாத்தே அது வழிக்கு வரும்னு சொல்லி என்னய நடிக்க வச்சுது” என்று படபடவெனப் பொரிந்து உதடு கடித்தவளோ, அவனைப் பார்த்து…
“எப்டி கண்டுபிடிச்சிங்க மாமா.?” என்றும் விழி விரித்துக் கேட்க….
அவனோ, “அடிங்க… தாய்க் கெழவியோட சேந்துகிட்டு என்னய ஏமாத்துனது பத்தாதுன்னு எனக்கு கஞ்சி போட்ட காளைன்னு பட்டப் பேர் வேற வச்சுருக்கியாடி. சோப்பு சாம்புனு அத்தனையும் தயாரிக்கிற எனக்கு சிய்யாக்காய்ல சேக்குற பூந்திக் கொட்டையோட வாசன தெரியாதுன்னு நெனச்சிகளா.? அந்தக் கெழவியோட பேச்சக்கேட்டு என்னயே சுத்தல்ல விட்டீல.? இப்ப உன்னய என்ன பண்ணுறேன் பாருடி.?” என்று மிரட்டியவாறு அவளை நெருங்கியவனைப் பார்த்து மேலும் பயந்தவளாய்….
“வேணாம் மாமா, என்னய விட்ருங்க மாமா” என்றவாறு பின்னடைந்தவள் அங்கிருந்த சுவற்றில் மோதி நிற்க… ஆனால் காற்றுக் கூடப் புகாதவாறு மனைவியை நெருங்கியும் கூட இன்னும் கால்களை நிறுத்தாமல் தொடர்ந்தவனோ மலரின் மலர்களில் மோதி நின்றவன்…
“விடனுமா… இனி அந்தப் பேச்சுக்கே இடமில்ல… சும்மா விடுறதுக்கா இவ்ளோ தூரம் உன்ன தூக்கிட்டு வந்தேன்” என்று மீண்டும் அவளைக் கரங்களிரண்டில் அள்ளிக் கொண்டவன் அங்கிருந்த படுக்கையறை நோக்கி நடந்தான்.
கணவனின் பேச்சும் பார்வையும் புரியாத மலரோ கணவன் தன்னை தூக்கி வந்து அறைக்குள் இறக்கி விட்டதைக் கூட உணராது நின்றவள், “மாமா இனிமே இப்டி பண்ணமாட்டேன் மாமா என்னய ஒன்னும் பண்ணாதீக மாமா” என்று சொல்லிக் கொண்டே இருக்க…
அவனோ, “ஆஹான் இனி பண்ண மாட்ட சரி, ஆனா இப்போ பண்ணதுக்கு உனக்கு ஏதாவது குடுத்தே ஆகணுமே” என்றவன் தன் சட்டையின் கை பகுதியை ஏற்றி விட…
கணவனின் வார்த்தைகளை தவறாக எண்ணிய மலரோ, வேஷ்டியை மடித்துக் கட்டிய வண்ணம் அழுத்தமான காலடிகளோடு தனை நெருங்கிய கணவனைப் பார்த்து “என்னய அடிச்சி கிடுச்சி போடாதீக மாமா, வலிக்கும் மாமா, வேணாம் மாமா” எனக் கூறி சற்றே மிரண்டவளாய் காலையில் கணவன் அடித்த கண்ணத்தை பற்றிக் கொண்டவளின் செயலில் திடுகிட்டு நடையை நிறுத்தியவன் அப்பொழுது தான் அவளின் சிவந்த கண்ணத்தில் பார்வையை பதித்தான் யுவா.
சிறு வயதிலிருந்து ‘எத்துணை மென்மை’ என்று கிள்ளி கிள்ளிப் பார்த்து வியந்த பெண்ணவளின் ஆப்பிள் கண்ணத்தில் அந்த ஆப்பிள் நிறத்திலேயே பதிந்திருந்த தன்னுடைய விரல்களின் தடம் கண்டு தன்னைத் தானே வெறுத்தவனோ…
அவளை விட்டு விலகி “முட்டாள் முட்டாள்” என்று தன்னையே கடிந்தவாறு அங்கிருந்த சுவரை ஓங்கி ஓங்கி குத்தி அவளை அடித்த கரங்களுக்கு அவனே தண்டனை கொடுக்கத் தொடங்க, அதைப் பார்த்த பெண்ணவளுக்கும் அவன் செயலின் காரணம் இப்பொழுது சரியாகப் புரிபட…
அவளோ வேகமாக ஓடிச் சென்று “யுவித்தான் வேணாம்த்தான்” என்று கணவன் கரத்தைப் பற்றிக் கொண்டவளை…
“விழிமா டேய்…” என்று வாரி அணைத்துக் கொண்டவன் இப்பொழுது அவளின் கண்ணத்தை இன்னும் அருகில் பார்த்து மாபெரும் குற்ற உணர்ச்சியில் தத்தளித்தான்…
“விழிமா உன்ன நா எப்டி அடிச்சிருக்கேன், ரொம்ப வலிக்குதாடா.? இப்டி செவப்பா இருக்கே டாக்டர்ட்ட போலாமாடா.?, இந்த மாமாவ மன்னிச்சுருடா” என்று அவள் கன்னத்தை வருடிக் கொண்டே பலவாறு உருகியவனின் மார்புக்குள் புகுந்திருந்தவளுக்கும்… கணவன் வருத்தம் தாளாது கண்களில் நீர் கோர்க்க…
“யுவித்தான்” என்று அவளும் அவனோடு மேலும் ஒன்றிக் கொண்டாள்.
“இல்லத்தான், நீங்கதேத்தான் என்னய மன்னிக்கணும்… நீங்க அடிச்ச வலி கொஞ்ச நேரத்துல எனக்குப் போய்ருச்சு ஆனா நா உங்கள அன்னிக்கும் இன்னிக்கும் மனசு நோகுற மாறி பேசுனது உங்களுக்கு ரொம்ப வலிச்சுருக்கும்ல யுவித்தான்” என்று அவன் வலியைத் தான் உணர்ந்தவளாய் கூறியவள்…
“என்மேல நீங்க எவ்ளோ ஆச வச்சுருக்கீக, நா சின்ன புள்ளைல போட்ட உடுப்பெல்லாம் கூட பாதுகாத்து வச்சு, என்னோட போட்டோவெல்லாம் டைரில ஒட்டி வச்சு, என்னய எவ்ளோ தூரம் நேசிக்கிறீக, ஆனா நா உங்களுக்காக ஒண்ணுமே செஞ்சதில்லையேத்தான் அவ்ளோ ஏன் நீங்க எவ்ளோ சொல்லியும் உங்கள நம்பாம தப்பாவே நெனச்சு இன்னிக்குக் காலைல கூட உங்கள என்னென்னமோ பேசிட்டேன், அப்றம் கைகுழந்தைய வேற போட்டு உடச்சிட்டேன், நீங்க என்னய அடிச்சது தப்பே இல்லத்தான்” என்று கதறியவளை…
“மொசக்குட்டி… வேணாண்டா… அழாதடா” என்று இன்னும் இன்னும் இழுத்து இறுக்கிக் கொண்டவனுக்கு, அவள் கண்ணீரைப் பார்க்க பார்க்க தான் செய்த தவறுகளின் அளவு விஷ்வரூபம் எடுத்ததோ.
தன் மார்புக்குள் புதைந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் கலங்கிய விழிகளை துடைத்து விட்டுக் கொண்டே, “மொசக்குட்டி நீ எந்த தப்பும் பண்ணலடா, கல்யாணமான அன்னிக்கே நா உன்கிட்ட அப்டி ஒரு கண்டிஷன் போட்டதுதாண்டா எல்லா பிரச்சனைக்கும் காரணம், அதனால தான நீ என்ன நம்பள, உன் மேல எந்தத் தப்பும் இல்லைடா” என்று கூறியவனின் குரலும் கரகரத்துப் போய் வெளியேற…
அவனின் குரலில் மேலும் கலங்கிய மலரோ “இல்ல யுவித்தான்… நீங்க அப்டி ஒரு கண்டிஷன் போடக்கூட நான்தானத்தான் காரணம்… இப்ப மட்டுமில்ல, அன்னிக்கு வருங்கால பொஞ்சாதிங்கற உரிமைலதான ஏதோ பண்ணிட்டிங்க… ஆனா அதுக்குப் போய் நா உங்கள பொறுக்கினு திட்டுனதும் என்னோட தப்புதானத்தான்” என்று
மீண்டும் மீண்டும் கணவன் மேல் உள்ள தவறை எல்லாம் தன் மேல் தூக்கிப் போட்டுக் கொண்ட மனைவியின் பேச்சில்…
அவனோ, “இல்ல கண்ணம்மா” என்று அவள் முகம் தாங்கி அவளின் கண்ணம் வருடியவனின் குற்ற உணர்ச்சியோ மேலும் மேலும் அதிகரித்தது போலும்.
யுவாவோ, “நீ எவ்ளோ சொன்னாலும் ஆரம்பத்துலயிருந்து நா செஞ்சதேண்டா ரொம்பப் பெரிய தப்பு, அதுவும் நம்பள நம்பி கழுத்த நீட்டினவள கைய நீட்டி அடிச்சது ஒரு நல்ல ஆம்பள செய்ற காரியமில்ல விழிமா…” என்று ஒருவருக்காக ஒருவர் உருகிவழிந்து தங்கள் மனத் தழைகளை எல்லாம் களைந்து எறிந்த தருணமதில்…
“தப்பு பண்ணிடண்டா… தப்பு பண்ணிடண்டா… இந்தக் கைதான உன்னைய அடிச்சிச்சு” என்று கேட்டு மீண்டும் மீண்டும் தன் கையை சுவற்றில் குற்றி தன்னைத் தானே தண்டித்துக் கொண்ட கணவனின் கலக்கம் தாளாத பெண்ணோ…
“வேணாம்த்தான் இப்டிலாம் செய்யாதீகத்தான், என்னால தாங்க முடியாது” என்று அழுதவாறே சுவரில் மோதி சிவந்திருந்த கணவனின் கரத்தைப்பற்றி இழுத்து அவன் நீள விரல்களில் தன் செவ்வதரங்களைப் பதித்தாள்.
“நீங்க என்னய அடிச்சது ஒன்னும் பெரிய தப்பில்ல யுவித்தான், நானும் தப்பு பண்ணிருக்கேன், உங்க இடத்துல எங்கப்பாரு இருந்தாலும் இததே செஞ்சிருப்பாக” என்று கணவனின் குற்ற உணர்ச்சியைப் போக்க முயற்சித்தவள் தொடர்ந்து….
“அதுமட்டுமில்ல யுவித்தான் அப்பத்தாகூடச் சொல்லுச்சு, அடிக்கிற கைதே அணைக்குமாம்” என்று அதன் பொருள் உணராமலே கூறியவளின் வார்த்தையில் யுவாவின் மருகல் விழிகளோ விரிந்து இப்பொழுது மயக்கத்தைத் தத்தெடுக்க, அவனோ சட்டென்று அவளை ஏறிட்டு நோக்க, அவன் விரல் தீண்டிக் கொண்டிருக்கும் மலர்விழியின் இதழ் தடங்களோ அவனின் அடங்கிக் கிடந்த மோக நரம்புகள் மொத்தமும் மீட்டி எடுத்தது போலும்.
மனைவியின் வார்த்தையிலும், அவளின் செயலிலும் சற்று முன்னர் இருந்த மனநிலை முற்றிலும் மாற்றப்பட்டவனாய், மோட்சம் அடைந்து கொண்டிருந்த வலது கரத்தில் மலர்விழியின் இதழ்ச் சூட்டை உணர்ந்தவாறே, இடது கரத்தால் பெண்ணவளின் இடை சுற்றி தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன்…
விழிகள் மின்ன, “மொசக்குட்டீ..” என்று குழைந்து “அப்பத்தா என்ன சொல்லுச்சுடி, திரும்ப சொல்லு.?” என்று ஆவலாக வினவினான்
அவனின் குரல் பேதத்தையும், விழி வேட்கையையும் உணராத மலரோ கணவனின் நெருக்கத்தில் நெளிந்தவாறே, “அதுத்தான்… அடிக்கிற கைதே அணைக்கும்னு சொல்லுச்சு” என்று அவள் முடிக்கும் அளவு கூட பொறுமை இல்லாதவன் போல்…
அவளின் புடவைக் குள்ளிருந்த வெற்றிடையை பிசைந்து மேலும் தனை நோக்கி இழுத்தவன், “அப்போ அணைக்கட்டுமா மொசக்குட்டி.?” என்று கேட்டு அவளின் செவிமடல் கடித்தவனின் குரலில் வழிந்த தாபம் மலரின் செவி தீண்டி அகம் நுழையும் முன்… அவள் புறம் அறியத் துடித்த ஆணவனோ…
அவளின் சின்னஞ்சிறு இதழ்களையும் அதே வேகத்தில் சிறை பிடித்துக் கொள்ள, யுவாவின் செயலில் பெண்ணவளின் ஆழி விழிகளோ பட்டாம்பூச்சியாய் படபடக்க, அவளின் வெண்டை பிஞ்சு விரல்களோ அவன் சிகை தேடி அலைய, பல மணிகள் நீண்ட ஆழ்ந்த முத்தமதில் மலரின் பொற்பாதங்களும் தொய்ந்து, தனை துவள வைத்தவனின் நெஞ்சத்தையே மஞ்சமாக்கிச் சரிந்தாள் பெண்.
தன் பரந்த மார்பில் சரிந்த பெண்ணவளின் வண்ணத் திரு மேனியை அழுங்காமல் மஞ்சத்தில் சரித்த யுவா, அவளின் அழகு ராஜாங்கம் முழுதிலும் தன் இதழ் முத்திரை மட்டுமல்லாது தன் பற்த்தடத்தையும் சேர்த்தே பதிக்க…
வண்டாடும் ஆணவனின் மோகத்தில் திண்டாடிப் போனது என்னவோ அந்த மலரை ஒத்த மலர்விழிதான்.
தன் உள்ளத்துக் காதலை எல்லாம் அவளிடம் கொட்டி விடும் முயற்சியாய் மலரின் உச்சி தொடங்கி பாதம் வரை ஒவ்வொரு அணுவிலும் இதழ் கோலமிட்டே தன் ஆண்மைச் சின்னம் பதித்தவன்…
உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் இருந்த போதும், பெண்ணவளின் கள்ளத்தேனைப் பருக அவனின் உள்ளமோ கள்வெறி கொண்ட போதும், அத்துணை மென்மையாய் அவளைக் கையாண்டவன் செயல்களில் அந்த மலரைப் போன்ற மலர்விழியும் கிறங்கித்தான் போனாளோ.
யுவாவின் வன் கரங்கள் செய்த ஜாலத்தில் பாவையவளின் பாலாடை மேனி செவ்வரளியாய்ச் சிவந்த போதும்… “யுவித்தான்… யுவித்தான்” என்று உருப்போட்ட பெண்ணவளின் முகம் மட்டும் கணவனுக்கான காதலில் மலர்ந்தே இருக்க, அவளின் நாணச் சிவப்பும், அவள் மலர்ந்த முகத்தின் உதடு கடிப்புமே ஆணவனின் சித்தத்தைக் கலைத்து அவனை இறுதி கட்டம் நோக்கி அழைக்க…
பேச்சிழந்த பெண்ணழகு தன் மார்பில் மூச்சு விடும் வாசனையை உணர்ந்தவனுக்கு அவளை முற்றும் முழுதாகவும் அறிந்து கொள்ள பேராவல் கிளம்பியது போலும்.
அவனோ விழி மூடி கிறங்கி இருந்தவளை,
“விழிமா டேய், மாமாவப் பாருடா” என்று உருக்கி அவள் விழிகளோடு தன் விழிகளை பிணைத்தவனின் விழி எழுப்பிய வினாவுக்கு அவனவளும் தன் விழியசைவாலே சம்மதம் பகர… இனியும் தாளாது பெண்ணவளின் மடல் பிரித்து முன்னேறினான் யுவா…
ஆணவனின் முன்னேற்றப் பாதையில், அவனுடைய அரவணைப்பின் இணக்கத்தில் அவனோடு இணைந்தே பயணித்த பேதைப் பெண்ணும் உச்சத்தின் அச்சத்தில் சற்றே பதறி “அத்தான்.. ன்.. ன்” என்று ஆணவன் உச்சியைப் பிய்த்தாள்.
அதைப் பார்த்த ஆணவனோ மேலும் உருகியவனாய், “யுவி சொல்லுடி மொசக்குட்டி, யுவி சொல்லுடி மொசக்குட்டி” என்று கொஞ்சியே அணைப்பை இறுக்கி, பிணைப்பை இளக்கி, கன்னியவளின் அச்சம் விலக்க… அவ்வறை முழுதும் வளையொலி கொலுசொலியோடு அவர்களின் சிருங்கர நாதமும் இணைந்தே ஒலிக்க…
அந்த கிராமத்துக் கிளிகளின் முதல் முதல் காதல் யுத்தமோ. மலர்விழியின் அச்சத்தை எல்லாம் துச்சமாக்கும் வண்ணம் மென்மையிலும் மென்மையாய் யாழோடு சேர்ந்த இசை போல், மிக மிக இனிமையாய் அரங்கேறத் தொடங்கியது.