அருணாச்சலமும் கல்யாணியும் விருந்திற்கு அழைக்க வந்தனர். சோலையம்மாள் முகம் திருப்பி அமர்ந்து கொள்ள, “வாம்மா, வாப்பா” என புன்னகையோடு வரவேற்றாள் சிவப்ரியா.
“என்ன பொல்லாத பள்ளிகூடம்? சின்ன பையன்தானே? இன்னைக்கொருநாள் இருக்க வச்சிருக்கலாமில்ல?” என மகளை கடிந்தார் அருணாச்சலம்.
“அங்க பெரியவங்க இருக்காங்க அருணா, பார்வதி இத்தனை நாள் இருந்ததே பெரிய விசயம்” என்றார் தனலஷ்மி.
“சரி எல்லாரும் கிளம்புங்க” என்றார் அருணாச்சலம்.
“எல்லாருமா?” என சங்கர் கேட்க, “ஆமாம் எல்லாரும்தான். அஞ்சு பேர்தானே இருக்கிங்க?” என்றார் உரிமையாக.
“பவ்யாக்கு கொஞ்சம் முடியலங்கண்ணா, எனக்குமே ரொம்ப அசதியா இருக்கு” என்றார் பவானி.
“கோழிப்பண்ணை பக்கம் போய் மூனு நாள் ஆகிடுச்சு” என்றார் நாகராஜ்.
அருணாச்சலம் முகம் வாடிட, “இவ்வளோ நாள் மாதிரி இனி இருக்க முடியுமா? பொண்ணெடுத்துட்டோம்ல? என் மகன் மருமகளுக்காக எந்த விஷேசத்தையும் தள்ளி வைக்கமாட்டோம். இன்னைக்கொருநாள் மட்டும் புதுப்பொண்ணும் மாப்பிள்ளையையும் அழைச்சிட்டு போங்க, உண்மையா அசதியாத்தான் இருக்கு” என்றார் சங்கர்.
“பவ்யா எங்க?” என கல்யாணி விசாரிக்க, “நானும் இன்னும் பார்க்கலம்மா, வா போய் பார்க்கலாம்” என அழைத்துப்போனாள் சிவப்ரியா.
இரவெல்லாம் பார்த்திபனை நினைத்து உறங்காமல் இருந்தவள் தற்போதுதான் விழித்து பாத்ரூம் சென்றிருந்தாள். பவானியை தவிர அனைவரும் கோவிலுக்கு சென்று வந்தது கூட தெரியாது.
பவ்யா இதுவரை அருட்செல்வனிடம் எதையும் மறைத்ததில்லை. அன்று வளைகாப்பில் பார்த்திபன் பேசியதை கூட அருட்செல்வனிடம் சொல்லத்தான் நினைத்தாள். இரு குடும்பமும் இப்பொழுதுதான் சேர்ந்திருக்கிறார்கள் என்று பவானி சொல்லவே அமைதியானாள்.
ஆனால் தற்போது பார்த்திபன் தன்னை உண்மையாய் காதலிப்பது புரிய, சொல்லாமல் இருப்பதும் பெரும் தவறென குற்றவுணர்விற்குள்ளானாள்.
அதே நேரம் பார்த்திபன் பேசியதை அருட்செல்வனிடம் சொன்னால் பெரும் பிரச்சனை வந்திடுமோ என்ற தவிப்பும், பயமும், குற்றவுணர்வும் சேர்ந்து காய்ச்சலே வந்துவிட்டது பவ்யாவிற்கு.
என்ன முயன்றும் முடியாமல் போகவே அன்னையிடம் சொல்லி அழுதுவிட்டாள். அன்று சொல்லனும் என்றவள், இன்று அருட்செல்வனிடம் சொல்ல வேண்டாம் என்றதில், மகள் மனதில் பார்த்திபன் இடம் பிடித்திட்டானோ என பவானிக்கு பதட்டம் ஆனது.
“பவ்யா” என அழைத்தபடி சிவப்ரியாவும் கல்யாணியும் அறையினுள் நுழைய அதிர்வோடு எழுந்து நின்றாள்.
“என்னாச்சு பவ்யா? ஏன் இப்படி பயப்படற?” என சிவப்ரியா தவிக்க, “ஒன்னுமில்ல அண்ணி, அஸைன்மன்ட் கொடுத்தாங்க, இன்னும் முடிக்கல, அதான் காலேஜ்க்கு போக பயமா இருக்கு” என சமாளித்தாள்.
“இவ்வளோதான? நான் ஈவ்னிங் வந்து எழுதித்தரேன்” என தேற்றி, “ஒரு காலேஜ் போற பொண்ணு, இதுக்கெல்லாமா பயப்படுறது?” என அதட்டினாள் செல்லமாக.
பவ்யா தலைகுனிய, “இப்போ காய்ச்சல் பரவால்லையா?” என்றார் கல்யாணி.
“இல்ல வேணாம். நான் வரல, எனக்கு டையர்டா இருக்கு” என படபடத்தாள் வேகமாக.
“ஹேய் பவி. ரிலாக்ஸ்” என அமைதிப்படுத்தி, “ப்ரஸ்ஸாகிட்டு வா, எதாவது சாப்பிட்டா பெட்டரா ஃபீலாகும்” என்று அன்னையை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.
அடுத்து அண்ணன் பார்க்க வருவாங்க என அவசரமாய் குளிக்கச் சென்றாள்.
“பவ்யா எழுந்துடுச்சா?” என்றான் மனைவியிடம்.
“ம்” என்றும் அவளை காண எழவே, “ப்ரஸ்ஸாகிட்டு சாப்பிட வர சொல்லியிருக்கேன், ரொம்ப டையர்டா தெரியுறா” என்றாள்.
எத்தனை காய்ச்சல் என்றாலும் எழுந்ததும் தன்னை காண வந்திடுவாள். நேற்றிலிருந்து கண்முன்னே வரவில்லை என யோசித்தவன், “சரி, நீ போய் ரெடியாகு, பவ்யா வந்த பின்ன பார்த்துட்டு கிளம்பலாம்” என அமர்ந்துகொண்டான்.
பத்து நிமிடம் கழித்த அறைக்குள் சென்ற பவானி, “உன்னை பார்க்காம அருள் கிளம்பமாட்டான். தண்ணியில ரொம்ப நேரம் நிக்காத. சீக்கிரம் வா” என்றார் குளியலறை கதவோரம் நின்றபடி.
வெளியே வந்தவள் தவிப்பாய் பார்த்தாள் அன்னையை. “சிவா அம்மாப்பா முன்ன எதுவும் சொல்லாத. அவங்க கிளம்பவும் பெரியப்பா, பெரியம்மாகிட்ட சொல்லிடலாம்” என தேற்றினார் மகளை.
“சித்தி முகமும் சரியில்ல, உன் முகமும் சரியில்ல. அங்க போய்ட்டு வந்து கேட்கறேன். எதுனாலும் மறைக்காம சொல்லனும் சரியா?” என்றான் பொறுமையாக.
“அப்படிலாம் ஏதும் இல்ல அருளு” என பவானி சொல்ல, பவ்யாவிற்கு கண்ணீர் வெளிவந்திட, மூக்கை உறிஞ்சியபடி சரியென தலையசைத்தாள்.
“சரி சாப்பிட்டு ரெஸ்ட் எடு” என்று தங்கையை விலக்கி அறைக்கு சென்று உடைமாற்றி மனைவியோடு கிளம்பினான் விருந்திற்கு.
** ** ** ** ** **
வாசலில் ஆவலோடு காத்திருந்தான் பார்த்திபன். “பார்த்திண்ணா” என காரினுள் இருந்தபடியே அழைத்து, அவசரமாய் இறங்கி அருகே சென்றவளை பேரன்போடு கட்டிக்கொண்டான் பார்த்திபன்.
விடுதியில் தங்கித்தான் படித்தாள். அப்பொழுதெல்லாம் அறியாத பிரிவு, இன்னொரு குடும்பத்தின் மருமகளாகி வெளியேறிடவே பார்த்திபன் மனதை கணக்க செய்தது.
இப்படி நினைப்பு மாபெரும் அபத்தம். நாளை நாமும் அப்படித்தான் இன்னொரு பெண்ணை அழைத்து வரப்போகிறோம் என புத்திக்கு எட்டினாலும், தங்கையின் விருப்பத்திற்காகத்தான் திருமணத்திற்கு அருள் சம்மதித்தார்.
அருளுக்கு சிவப்ரியாவை பிடித்ததா? அவனின் நிபந்தனைகளை நிராகரித்து திருமணம் நடந்ததே, தங்கையோடு அருள் சமாதானம் ஆனாரா? சுடு சொற்களை தாளமாட்டாளே… என்ற தவிப்பு ஒரு நாள் பிரிவையே தாளமுடியாததாக்கியது.
நேற்று சுலபமாக கணவனோடு கிளம்பியிருந்தவளிற்கு இன்று பிறந்த வீட்டின் தாக்கம் கலங்கச்செய்ய, “ஸ்கூல் போகல” என்றாள் கலங்கிய கண்களோடும் சிரிப்போடும்.
“உள்ள போகாத சிவா, ஆரத்தி எடுக்கனும்” என்றபடி கல்யாணி உள்ளே சென்று ஆரத்தி எடுத்து வந்து, “மாப்பிள்ளையோட நில்லு” என்றார்.
பார்த்திபனிடமிருந்து விலகி அருளோடு சேர்ந்து நிற்க, திருஷ்டி கழித்த பின்னே உள்ளே சென்றனர்.
“ஹாஹா.. இவ்வளோதானா?” என ஆசுவாசமானவன், “சிவாக்கு சின்ன வயசுலயிருந்தே விவசாயம் பிடிக்கும். பி.ஜிக்கு அப்ளை பண்ணவே மாட்டேனுட்டா, படிக்கலனா கல்யாணத்துக்கு பார்ப்போம்னு சொல்லவும்தான் ஜாயின் பண்ணினா” என தங்கையின் விவசாய அனுபவத்தை பகிர்ந்தான் உற்சாகத்தோடு.
சற்று நேரம் கேட்டிருந்தவன், “போதும்டா உன் தங்கை பெருமை, நீல்லாம் ஒரு வாத்தியாரா? படிக்கமாட்டேங்கிறானு சொல்றேன். அவளுக்கு புத்தி சொல்றதை விட்டுட்டு என்கரேஜ் பண்ணிட்டிருக்க” என முறைத்தான்.
பார்த்திபன் சிவப்ரியாவை பார்க்க, “விவசாயத்துக்கு எதிரா பேசுறது தேசக்குற்றம் பார்த்திண்ணா. வாத்தியாரா இருந்துட்டு நீங்க அதை செய்துடாதிங்க” என எச்சரித்தாள் தீவிரமாக.
பார்த்திபன் சிரிக்க, இருவரையும் முறைத்தான் அருட்செல்வன். “ஏங்க விருமாண்டி கமல் மாதிரி மீசை வச்சிக்கிட்டு, ஆளவந்தான் குண்டு கமல் லுக்கு கொடுக்காதிங்க. எனக்கே பயமாயிருக்கு. என் தங்கை என்ன பண்ணும்?” என்றான் பாவம்போல்.
கோபம்போல் என்றாலும் அருட்செல்வன் பேசியதே மனதை இதமாக்க, இனி தங்கையை புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையும் சேர்ந்துகொள்ள “சமையல் ரெடியாகிடுச்சா சித்தி? பார்கவிக்கா உப்பு கம்மியா போடும். ஒருமுறை பார்த்துடுங்க” என்று சமையலறைக்கு சென்றான்.
சிவப்ரியா மீதான பார்த்திபனின் தவிப்பும், பாசமும் அருட்செல்வனை கவர்ந்தது. ஆனாலும், அப்படி நினைப்போட பெண் கேட்பானா? சொத்துக்காக இவன் தங்கையை யாராவது கேட்டால் திருமணத்திற்கு சம்மதிப்பானா? என்ற ஆற்றாமையோடு எழ, “சிவா மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு கேளு” என்றார் அருணாச்சலம்.
“ஒன்னும் வேண்டாம். உங்களோட பேசிட்டிருக்கட்டும். நான் உள்ள இருக்கேன்” என்று தன்மையாகவே சொல்லி சிவப்ரியா அறைக்குள் சென்றான்.
“என் கல்யாண விசயத்தை நேரம் வரும்போது நானே பார்த்துக்கிறேன், அதிகப்ரசங்கித்தனமா நீ ஏதும் பேசக்கூடாதுனு சொன்னாங்க”
அருட்செல்வன் அமைதியாக இருக்க, “ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லட்டுமா?” என்றாள்.
என்ன என்பதாய் பார்க்க, “பார்த்திண்ணா விருப்பத்துக்காகலாம் பவ்யாவை கட்டிக்கொடுக்க வேணாம். ஒருவேளை பவ்யாக்கு பார்த்திண்ணாவை பிடிச்சிருந்தா மட்டும் மறுத்துடாதிங்க” என்றாள் அக்கறையாக.
“பவ்யா அப்படி கிடையாது” என்றான் கோபமாக.
“அப்படி கிடையாதுனா பிரச்சனையில்ல. எங்க வீட்டு பொண்ணு விருப்பத்துக்கு மாறா எதையும் செய்யக் கூடாதுனு நானே பார்த்திண்ணாக்கு சொல்லுவேன்.” என்றாள் உறுதியாக.
பவ்யா விசயத்தில் சிவப்ரியா மீதுள்ள கோபம் மொத்தமாய் விலகிட, “எங்க வீட்டு பொண்ணா?” என்றான் நெகிழ்வோடு.
“ஆமாம், நம்ம வீட்டு பொண்ணில்லாம பவ்யா வேற யாராம்?” என்றாள் மீண்டும்.
நெகிழ்வான பார்வை காதல் பார்வையாக மாறியிருக்க, “அம்மா வேற எல்லாத்துக்கு பட்டு சாரி கட்டனும்னு பிடிவாதம். நான் போய் வேற டிரஸ் மாத்திட்டு வரேன்” என பீரோவிலிருந்து மாற்றுடை எடுத்து வெளியே எத்தனிக்க, அவளின் பின்னலை பிடித்திழுத்தவன், “இங்கையே மாத்து” என்றான்.
“இல்ல நீங்க வெளில போனா அதுக்கும் என்னைத்தான் திட்டுவாங்க, நான் ஷிவாங்கி ரூம்ல மாத்திக்கிறேன்” என்று பின்னலை விடுவிக்க முயற்சித்தாள்.
“நீ டிரஸ் மாத்த நான் எதுக்கு போகனும்? இங்கையே மாத்து” என்றவன், கை, கழுத்து கன்னம் நெற்றி என தட்டுபட்ட இடங்களிலெல்லாம் முத்தம் பதிக்க, “ஏங்க…” என இவள் தடுமாற, கதவை தாழிட்டு, சிவப்ரியா கையிலிருந்த சுடிதாரை பறித்து அவளின் தலையில் மாட்டி, இடுப்புவரை இறக்கிவிட்டு, சுடிதாருக்குள் கையை விட்டு சாரியின் பின்னை அகற்றி, சிவப்ரியாவிற்கு பின்னே வந்தவன், முந்தானையை கீழிறக்கி, “பிளொஸ் ஹுக் கழட்டு” என்றான்.
“ஏங்க” என இவள் திணற, “இங்க வச்சி உன்னை பார்க்குற எண்ணம் எனக்கில்ல, நீயா கழட்டுறியா? இல்ல நானே” என பின்னிருந்த கையை முன்னுக்கு கொண்டுவர, “வேணாம் வேணாம்” என்று ஜாக்கட்டோடே சுடிதாரை மாட்டினாள் அவசரமாக.