ஒன்பது மணிபோல் அருள் வர, “என்ன அருளு இவ்வளோ நேரம்? போனும் எடுக்கல?” என குறைபட்டார் தனலஷ்மி.
“வர வழியில் இன்னொரு கேஸாகிடுச்சும்மா, அங்க கரண்ட் வேற இல்லன்றதால டென்ஷன்ல இருந்தேன், அதான் கால் அட்டன் பண்ணல” என்றவன், “பவ்யா எங்க? வர சொல்லு” என உள்ளே சென்று முகம் கை கழுவி வர, “பவ்யா தூங்கிட்டா அருளு, நீ சாப்பிட்டு படு, காலைல பேசிக்கலாம்” என்றார்.
பவ்யாவும் நாகராஜும் வழக்கமாக சீக்கிரம் உறங்குபவர்கள் என்பதால் உண்மையென நினைத்தவன், “ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கும்மா, காலேஜ்ல ஏதும் பிரச்சனையானு தெரியல, என்கிட்ட சொல்ல பயந்திட்டிருக்கானு தெரியல” என புலம்பி “சரி காலைல கேட்டுக்கலாம்” என்று உணவுண்ண அமர்ந்தான்.
உண்டு முடித்த பின்னே வழக்கம்போல் வாசலுக்கு வந்தவன், பார்வதிக்கு அழைத்து பேசிவிட்டு, “ஆயா என்ன சொன்னுச்சு?” என்றான் அன்னையிடம்.
“போய் தூங்குடா, சும்மா கேள்வி கேட்டுகிட்டு” என தனம் அதட்ட, சிரித்தவன், “உனக்கு படுக்கனும்னா போ, நான் வரேன்” என்றான் சிவப்ரியாவிடம்.
எதோ பேசுவார்கள் என்று சிவப்ரியா உள்ளே சென்றிட, “பவ்யாக்கு எதோ பிரச்சனைம்மா, இல்லனா என்னை பார்க்காம இருக்காது. உனக்கு ஏதும் சேன்ஜ் தெரியல?” என்றான் விசாரணையாக.
“பவ்யா மேல எங்களுக்கெல்லாம் அக்கறை இல்லையா? உள்ள பொண்டாட்டி காத்திட்டிருக்கா. காலைல பேசிக்கலாம் போடா” என்றார் மிரட்டலாக.
தூங்குகிறாள் என்றபோதும் பவ்யா அறைக்கு சென்று பார்த்து யோசனையோடுதான் உள்ளே வந்தான். அருட்செல்வனைக் கண்டதும் சிவப்ரியா தன் பின்னலை சுருட்ட, பவ்யா நினைப்பை தள்ளி வைத்து “இன்னைக்கு தூங்கல போல” என கதவை தாழிட்டான்.
சிவப்ரியா முகம் சிவந்திட, “அன்னைக்கு எதுக்கு உடனே பார்க்கனும்னு கேட்ட?” என்றபடி நெருங்கினான் மனைவியை.
“அது” என தடுமாற, “சரி இப்போ சொல்லு” என்று விலகி கட்டிலில் அமர்ந்தான்.
“அன்னைக்கு சொல்ல நினைச்சதை இன்னைக்கு கேக்குறிங்க” என குறைபட்டாள்.
“அன்னைக்கு வேற டென்ஷன்ல இருந்தேன், பெரிய மனசு பண்ணி என்ன விசயம்னு சொல்லேன்” என்றான் கனிவாக.
“மாமா போன் செய்தாரானு ஷிவாங்கி கேட்டுட்டே இருந்தா, நீங்க வேற என்மேல கோபத்தில இருந்திங்களா? அதனால நேர்ல பார்த்து என்னை பிடிச்சிருக்கானு கேட்க தோணுச்சு, அதான்”
எதோ காதலாக பதிலளிப்பாள் என அருள் எதிர்பார்த்திருக்க, இவளின் சந்தேகம் கோபமுறச் செய்தது. “இப்படி எதாவது லூசு மாதிரி கேட்பனுதான் அவாய்ட் பண்ணினேன். இரண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிகிட்டு இப்படி கேக்குறது முட்டாள்தனம்னு உனக்கே தெரிய வேணாமா? மத்ததெல்லாம் நல்லா வக்கனையா பேசுறதான?” என்றான் முறைப்பாக.
“அப்போ நான் நினைச்சது சரிதானா? உங்களைத் தவிர யாரையும் கட்டிக்கமாட்டேனுதான் என்னை கல்யாணம் செய்துக்க நினைச்சிங்களா?” என கலங்கி தலைகுனிய, “ஆமாம்… அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சொல்லும்போது அப்படி நினைச்சிதான் சொன்னேன்” என ஒப்புகொண்டு, மனைவியை நெருங்கியவன்,
“என் அம்மா மனசை ரணமாக்கினவங்க முகத்துல முழிக்கனுமே, திரும்ப அந்த வீட்டாளுங்களோட உறவாடனுமேன்ற விசயத்தை என்னால தாங்கிக்க முடியல, அதே நேரம் உன்னை விட்டுக்கொடுக்கவும் முடியல.
தாய்மாமன் குடும்பமா நினைச்சா உன் குடும்பத்தோட ஒட்டவே முடியாது, நம்ளை உயிரா நினைக்கிற பொண்ணு அந்த குடும்பத்துல இருக்கிற ஒரே காரணத்துக்காக விட்டுக்கொடுத்துடாதடா, அப்புறம் நீயே உன்னை மன்னிக்கமாட்ட, உன் அம்மா நிம்மதியும் போய்டும்னு என்னை நானே சரிப்படுத்திட்டிந்தேன்.
இந்த டைம்ல உன் மெஸேஜ், கால்ஸ் அட்டன் பண்ணினா சரி வரும்னு தோணல. நீ எதாவது பேசி, நான் எதாவது சொல்லி திரும்ப சண்டை வேணாம்னு நினைச்சேன்” என சிவப்ரியாவின் தாடைத் தொட்டு முகத்தை நிமிர்த்த, கலங்கியிருந்தாள்.
“ஆனா, உனக்கு என் மேல உள்ள காதலை நினைச்சு பிரம்மிச்சேன்” என்று கண்ணில் முத்தமிட, “வேணாம் போங்க” என்று அருட்செல்வன் நெஞ்சைத் தொட்டு தள்ளிவிட, “ப்ச் கத்தாதடி, வெளில கேட்கப்போகுது” என கிசுகிசுத்து தனது நெஞ்சைத் தொட்ட அவளின் உள்ளங்கையில் முத்தமிட்டான்.
“அத்தைக்காக கட்டிக்கிட்டவங்கல்லாம் என்னை கிஸ் பண்ணக்கூடாது” என கையை உருவ முயல, கைகளை விடுத்து, இடையை வளைத்து துடிக்கும் இதழ்களில் முத்தமிட்டான். சிவப்ரியா திமிற, இன்னும் உதடாலும் உடலாலும் நெருக்கி, ஆழ்ந்த முத்தமிட்டு பின்னே விலகி, கட்டிலில் சரித்தான் தன்னோடே.
சிவப்ரியா முதுகுகாட்டி படுக்க, பின்னோடு நெருங்கி, “நீ அழகிதான். இல்லயில்ல, அதுக்கும் மேல பேரழகி. ஆனா உன்கிட்ட என்னை கவர்ந்தது உன் அழகில்ல, என் அம்மா மேலுள்ள உன் பாசம். அவங்க சொத்தை நாம அனுபவிக்கக்கூடாதுன்ற குற்றவுணர்வு, பெத்தவங்களே ஆனாலும் தப்பு தப்புதான்னு வலியுறுத்துற நேர்மைனு, இதெல்லாம்தான் உன்கிட்ட என்னை ஈர்த்துச்சு” என்று கன்னத்தில் முத்தமிட, தற்போதைய பேச்சில் சற்று சமாதானம் ஆனாலும் கன்னத்தை துடைத்தாள் ரோசமாக.
சிரித்தவன், “பார்க்கலாம் எங்கெங்க துடைக்கிறனு” என்று தன்புறம் திருப்பி, “சத்தியமா சொல்றேன், கல்யாண கோலத்துல உன்னை பார்த்த பின்ன மொத்தமா ப்ளாட் ஆகிட்டேன்” என்றான் குழைவாக.
சிவப்ரியா நம்பாமல் பார்க்க, “நேத்து நைட் முழிச்சிருந்தினா எனக்கு உன்னை எவ்வளோ பிடிக்கும்னு காட்டியிருப்பேன்.” என்று எழுந்தவன் விளக்கணைத்து, மெல்லிய வெளிச்சத்தை படர விட்டு, மேலுடையை கழற்றி மனைவியருகே படுக்க, பெரும் படபடப்பிற்குள்ளானாள் சிவப்ரியா.
ஆனந்த பாடத்தின் ஆரம்பம் மெல்லிய அணைப்பில் ஆரம்பித்தது. சற்று நேரத்திலேயே அருட்செல்வன் கை மனைமீது பயணிக்க, பேரவஸ்த்தையோடு தடுத்தாள் சிவப்ரியா.
“இதான் உன் காதலா?” என்றான் தாபக்குரலில்.
“உங்களுக்கு என்னை பிடிக்கலயில்ல?” என காரணம் சொல்ல, “ஆனா உனக்கு என்னை பிடிக்கும்தானே?” என்று அவள் மேல் படர்ந்தவன், எண்ணிலடங்கா முத்தங்களை பதித்தான் முகத்தில்.
வெக்கம் தாள முடியாமல் இதழ் தொடும் முன்னமே சிவப்ரியா கண்மூட, அருட்செல்வன் அவளின் உடை களைய ஆரம்பிக்க, “ஏங்க” என இவள் தவிக்க, “பர்மிஷன் கேட்குற நிலைல நானில்ல, இனி என்னால விலக முடியாது. என்னை மறுக்காத ப்ரியா” என்றவன் கைகள் விருப்பப்படி பயணித்தது மனைவி மீது.
கணவன் காதலால் அணைத்தானோ? மனைவியெனும் உரிமையில் அணைத்தானோ? அருட்செல்வன் அணைப்பில் கரைந்து, தாபப் பார்வையில் கரைந்து, இதழ் செய்த மாயத்தில் உறைந்து, ஆண்மைக்கு கட்டுப்பட்டு, அவனின் வாசத்தில் மெய்மறந்து, மூச்சுக் காற்றில் கலந்து, அவனின் தீண்டலில் மெல்ல மெல்ல தன்னை இழந்து கொண்டிருந்தாள் சிவப்ரியா.
அவளின் நிலையை உணர்ந்தவன், “ஹெல்ப்புக்காவது பிடிச்சிக்கோடி என்னை” என அவளின் கைகளை எடுத்து தனது வெற்றுடம்பில் போட்டுக்கொண்டு தேடலின் உயர்ந்த நிலையை அடைந்தான் அருட்செல்வன்.
ரகசிய முடிச்சுகள் அவிழும் தருணம், “ஏங்க” என முணுமுணுத்து வன்மையாய் அணைத்துக்கொண்டாள் கணவனை.
அழகிய கூடல் முடிந்து விலகியவன், மயங்கியிருப்பளின் தலைகோதினான் ஆதரவாக. எந்த நிலையில் உள்ளோம் என்று புரிந்தவளுக்கு உடை அணிய எழக்கூட வெக்கம் தடுக்க, அவஸ்த்தையோடு அசைவற்று படுத்திருந்தாள்.
மனைவி கொடுத்த போதையிலும் கள்ளுண்ட களிப்பிலும் சற்று நேரம் மீண்டு வராமல் இருந்தவன், பின்னே எழுந்து தன்னை சரிசெய்து, அவளின் நைட்டி எடுத்து நெருங்கி வர, அவனிடமிருந்து வாங்கியவள் “நீங்க போங்க, நான் போட்டுப்பேன்” என்றாள் சன்னக்குரலில்.
“போர்வைக்குள்ளதான இருக்க? நான் எங்கேயும் போகமாட்டேன், நீயே போட்டுகிறியா? இல்ல நான் உள்ள வரவா?” என நைட்டியை பறிக்க, இறுக்கமாய் பிடித்தவள், “வெறும் நைட்டியை எப்படி போடுறது?” என்றாள் தாளமுடியாத சங்கடத்தோடு.
“மத்தது காலைல போட்டுக்கலாம்” என ரசனையாய் நெருங்கியவன், “ஏங்க போங்க மட்டும்தான் சொல்லுவியா? வேற சொல்லி பேச மாட்டியா?” என்று அதட்ட, “வேற சொல்லி உங்களுக்கு பிடிக்கலனா?” என்றாள் தவிப்போடு.
“இன்னும் என்னை புரியலயா உனக்கு?” என நைட்டியை பறித்தவன் பார்வையில், மீண்டுமா? என அதிர்ந்தாள் சிலநொடி.
ரசித்து சுவைத்த மிச்சத்தை மீண்டும் சுவைக்கும் ஆசையில் அருட்செல்வன் கிளர்ந்தெழ, சற்று முன் மீண்டுமா என அதிர்ந்தவளுக்கு கணவனின் பார்வை ஜாலம் செய்ததோ? அசையா ஓவியமானாள் சிவப்ரியா.
தன்னை உணர்த்துவதற்கென முத்தம், தேகம் தித்திக்க முத்தம், காமம் விதைக்க முத்தம், வாலிபம் சுவைக்க முத்தம் என எண்ணிக்கையில் அடங்காத முத்தங்களோடு அங்கங்கள் இணைந்திட, சிவப்ரியாவின் கருவிழி கிறக்கத்தில் மேலேறிட, தாபமனைத்தும் கொட்டி தீர்த்து காதல் கரைபுரண்டோடும் காவியமானான் கணவன்.