ஜீவி ஃப்ரீயா இருக்கியா? ராகவண்ணா பக்கத்துல இருக்காரா? என குறுஞ்செய்தி அனுப்பினாள் சிவப்ரியா.
அரைமணி நேரம் கழித்து ஜீவிதா அழைக்க, ஆவலோடு அழைப்பை ஏற்றவள், “ஜீவி எப்படி இருக்க? உடம்பு பரவால்லையா?” என விசாரித்தாள்.
“பராவால்ல சிவா, நீ எப்படியிருக்க?”
“ம் இருக்கேன் ஜீவி” என சோர்வாய் சொன்னவள், “தனியா இருக்கியா?”
“தனியாத்தான் இருக்கேன், இப்போதான் அவர் கிளம்பினார்.”
“ஜீவி, உங்க வீட்டுக்கும் என் அத்தை வீட்டுக்கும் எவ்வளோ தூரம்? அவங்களும் உங்க குடும்பமும் சொந்தமா? உன் கல்யாணத்துக்கு என் அத்தை வந்திருந்தாங்கள்ல, அதான் கேட்குறேன்.” என்றாள் ஆவலாக.
“உன் அத்தை வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஆனா எங்க மாமனாரும், உங்க சங்கர் மாமாவும் சின்ன வயசுலயிருந்தே ரொம்ப க்ளோசாம்.
இரண்டு நாள் பார்க்க முடியாம போய்டுச்சுனா என் மாமனார் நேரா உன் மாமா உரக்கடைக்கே போய்டுவார். என் மாமியாருக்கு என் மாமனார் மேல எதாவது குறைன்னா உன் மாமாக்கு போன் செய்து உரிமையா கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க, உன் மாமாவும் உடனே என் மாமனாருக்கு போன் செய்து பொண்ணுங்களை எதுக்குடா புலம்ப வைக்கிறனு திட்டுவார்.
உண்மையா சொல்றேன் சிவா, உன் அப்பாம்மா நினைக்கிற அளவுக்கு உன் அத்தையும் மாமாவும் மோசம் கிடையாதுனு எனக்கு தோணுது. என் கல்யாணம் முடிஞ்ச நாளாவது நாள் உன் அத்தை வீட்டுக்குத்தான் விருந்துக்கு போனோம்.
நாங்க மட்டும் இல்ல, மொத்த குடும்பமும் வரணும்னு சங்கர் அப்பா பிடிவாதமா அழைச்சிட்டு போனார். பயங்கரமா கவனிச்சாங்க. அப்போ அவங்கதான் உன் அத்தை மாமானு எனக்கு தெரியாது.
விருந்துக்கு போகும்போது, என் ஃப்ரண்டு வீட்டுக்கு போறோம்னுதான் சொன்னார். அங்க போன பின்னதான் உன் மாமாவும் என் மாமனாரும் சாதாரண ஃப்ரண்டில்ல, உயிர் தோழர்கள்னு புரிஞ்சது.
காலைல போய்ட்டு சாயங்காலம்தான் எங்க வீட்டுக்கு வந்தோம். ரொம்ப நல்லா கவனிச்சாங்க சிவா. விருந்து முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த பின்ன, இவதான் என் ஃப்ரண்ட்னு உன்னையும் பார்த்திண்ணாவையும் போன்ல காட்டி, சிவாவோட அத்தை இந்த ஊர்தான்னு சொன்னேன். தனம் அம்மாதான் உன் அத்தைனு என் ஹஸ் சொன்னார்.
உன் மாமாக்கு கல்யாணம் ஆகும முன்னவே உரக்கடை வைக்க யோசிக்கும்போது என் மாமனார் ஹெல்ப் பண்ணியிருக்கார்.
அதுக்கு ப்ராயச்சித்தமா உன் மாமா எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்துருக்கார். என் நாத்தனார் கல்யாணத்துக்கும், என் ஹஸ் இன்ஜினியர் படிக்கவும் ஹெல்ப் பண்ணியிருக்கார்.
என் நாத்தனார் கல்யாணத்துக்கு கொடுத்த பணத்தையாவது கம்ப்பல் செய்து கொடுக்கவும் திரும்ப வாங்கிகிட்டாராம். என் ஹஸ் படிப்புக்கு கொடுத்த பணத்தை என் மாமனார் எவ்வளோ சொல்லியும் உன் மாமா வாங்கிக்கவே இல்லையாம்.
அப்போ என் வருமானம் மட்டும்தான், இப்போ என் மகன் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டான். உன் வீட்டம்மா எனக்கு தங்கச்சி னா, ராகவன் எனக்கு மருமகன்தானே வேணும்? என் மருமகனுக்கு நான் பண்றேன்னு சொல்லிட்டாராம்.
ரொம்ப நல்ல குடும்பம் சிவா. அப்போவே உனக்கு போன் செய்து சொல்லியிருப்பேன், என் ஹஸ்தான் இவங்க குடும்பம் பத்தி உன் ஃப்ரண்டுக்கு ஏதும் சொல்லக்கூடாதுனு சொன்னார்.
நான் எதாவது சொல்லப்போய் என் மாமனாருக்கும் உன் மாமாக்கும் மனஸ்த்தாபம் ஆகிடக்கூடானு ரொம்ப ஸ்ரிக்ட்டா சொல்லியிருக்கார். எனக்கும் அந்த பயம் இருக்கு. உன் அத்தை மாமா மட்டுமில்ல, மொத்த குடும்பமும் நல்லவங்களாதான் எனக்கும் தோணுது. தயவு செய்து நான் சொன்ன எதையும் பார்த்திண்ணா, உன் அப்பாம்மாகிட்டலாம் சொல்லாத சிவா.” என்றாள் ஜீவிதா.
“சரி ஜீவா, கண்டிப்பா சொல்லமாட்டேன். ராகவண்ணா சொன்னதையும் மீறி என் அத்தை குடும்பத்தை பத்தி என்கிட்ட சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டி.” என இணைப்பை துண்டித்தாள் சிவப்ரியா.
ஜீவிதாவை பார்க்க போவது போல போய், அத்தையை பார்க்க நினைக்கலாம்னு பார்த்தா அதுக்கும் முடியாம ஆகிடுச்சே, நம்மளால ஜீவிதாக்கு பிரச்சனை ஆகிடக்கூடாது.
பார்த்திபன் தனலஷ்மி பற்றி சொன்னதிலிருந்து, பெத்த மகளை எப்படி அலைக்கழித்திருக்கிறார்கள், நம்ம ஆயா இவ்வளோ மோசமா இருந்துருக்காங்க, பெத்த மகள்ன்ற பாசம் கொஞ்சம் கூடவா இருந்திருக்காது? என இறந்து போன சரோஜா பாட்டி மீதும், தேவையான நேரத்தில் உடன் பிறப்பிற்கு துணை நிற்காதவங்கள்லாம் என்ன ஆம்பிளைங்க? என அப்பா பெரியப்பா மீதும் கோபத்தில் இருந்தாள் சிவப்ரியா.
தற்போது அத்தை குடும்பத்தைப் பற்றி ஜீவிதா சொன்னதை நினைத்தவள், நேரடியா அத்தை வீட்டுக்கு போய்ட வேண்டியதுதான். என்னதான் செய்துடுவாங்கனு பார்ப்போம்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பாட்டியின் சாவுக்கு வந்த அருட்செல்வனை நினைத்துப்பார்த்தாள். ம்… அப்போ அமைதியா நல்ல பையனா இருந்தான். இப்போவும் அப்படி இருப்பானு தெரியல, தன் அப்பாவிற்காக நாம் பார்ப்பதுபோல அவன் அப்பாம்மாவிற்காக அவனும் யோசிப்பான்தானே? தவறு முழுக்க தன் குடும்பத்தின் மீது என்பதால் அவன் இல்லாத நேரமா பார்த்து போகனும்.
அத்த வீட்டுல யார் எந்த நேரம் வீட்டுல இருப்பாங்கனு முதல்ல கண்டுபிடிக்கனும். ஷப்பா… கண்ணை கட்டுதே என நினைத்தவள், அப்பா பெரியப்பா வருந்துறாங்களேனு அத்தையைப்பத்தி தெரிஞ்சிக்க நினைச்சா… கடைசியா இவங்கத்தான் அமைதியா இருந்து வில்லத்தனம் செய்திருக்காங்க.
இந்த பிரச்சனைக்கு ஒன்னுமே பண்ணமுடியாதுனு பார்த்திண்ணா நினைக்கிறது சரியா? என யோசித்தாலும், தன் குடும்பம்தான் தவறென புரிந்தபோதும், அப்பா பெரியப்பா நிம்மதிக்காக எதையாவது செய்ய முயற்சிக்கலாமே. முயற்சிப்பதில் தவறேதும் இல்லையே என முடிவெடுத்தாள்.
நான்கு நாள் கழித்து இரண்டு நாள் விடுமுறை என்பதாலும் வீட்டிற்கு வந்து ஒருமாதம் ஆகியிருப்பதாலும் சிவப்ரியாவும் ஷிவாங்கியும் ஊருக்கு வந்தனர்.
எப்பொழுதும் இண்டூர்வரை வந்திடுவாள். பின்னே பார்திபன் வந்து அழைத்து போவான். இவனின் பைக் பின்னே இருவரும் அமர, அந்த நேரம் மருத்துவமணையிலிருந்து வெளியே வந்த அருட்செல்வன், சற்று தூரத்தில் இருந்தவர்களை பார்த்தான்.
இதற்கு முன் பார்க்கும் போதெல்லாம் காணாதவாறு செல்பவன், இன்று பார்த்தான் மூவரையும். ஷிவாங்கி ஆர்வமாக பார்த்திபனிடம் எதோ தொணதொணக்க, சிவப்ரியா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“நல்லா உக்கார்ந்துட்டிங்களா? போலாமா?” என பார்த்திபன் கேட்க, “ம்… ம்.” என்றாள் ஷிவாங்கி.
பின்னே பைக் கிளம்ப, அருட்செல்வனும் கிளம்பினான். அருட்செல்வனிற்கு சிவப்ரியா மீது கோபமும் இல்லை, உறவுக்காரி என்ற எண்ணமும் இல்லை. தன் அன்னைக்கு மரியாதை தராத குடும்பத்தை பற்றி யோசிக்க கூட அவன் விரும்பவில்லைதான். ஆனால் அறியாமல் வந்து பேசியளை திட்டிவிட்டோமே என்ற வருத்தம் இருந்தது. அதன் காரணமோ என்னவோ சிறிது நேரம் பார்த்து பின்னே கிளம்பினான்.
** ** ** ** ** ** ** ** **
மகள்களின் நலன் விசாரித்த கல்யாணி, “போய் முகம் கை கழுவுங்க, டீ வைக்கிறேன்.” என உள்ளே போனார். (verticalresponse.com)
அப்போ அவங்க இறந்தாங்கனா அத்தை வருவாங்கதானே? என நினைத்தாள் ஆர்வமாக.
“ஒருத்தர் முடியாம இருக்கார்னு சொல்றேன், சொந்த பந்தம்லாம் இந்த வயசுலயே முடியாம கிடக்குறாரேனு கவலைல இருக்காங்க, இந்த நியூசை கேட்ட நீ எதோ வருத்தப்படலைனாலும் பரவால்ல, என்னவோ கதை கேக்குறதை போல ஆர்வமாகுற. ஒரு மனுசனோட உயிர் அவ்வளோ ஈஸியா போய்டுச்சா உனக்கு?” என்றான் கோபமாக.
“அச்சோ அப்படியில்லண்ணா, சாரிண்ணா, நான் அவங்க சாகட்டும்னு நினைக்கல.” என்றாள் பாவமாக.
தங்கையின் வருத்தத்தில் கோபம் குறைந்தவன், “தூரத்து சொந்தம்தான், ஆனா நமக்கு பங்காளி. நாப்பது வயசுதான் ஆகுது. பிள்ளைங்க இப்போதான் ஆறாவதும், எட்டாவதும் படிச்சிட்டிருக்காங்க, கிட்னி ஃபெயிலியர் ஆகிடுச்சாம்.” என கவலையோடு சொன்னவன், “சரி போய் முகம் கழுவிட்டு வாங்க, சித்தி டீ வச்சிட்டு வந்துடுவாங்க. நானும் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்.” என அனுப்பினான்.
மூவரும் முகம் கை கழுவி வந்து டீ குடித்துக்கொண்டிருக்க, “அத்தையைப் பத்தி ரொம்ப யோசிக்காதேனு சொன்னேன்தானே?” என முறைத்தான் தங்கையை.
“தூரத்து பங்காளிக்காக நீங்க இவ்வளோ வருத்தப்படும்போது, நான் அத்தையை யோசிக்கிறது மட்டும் தப்பாண்ணா?” என்றாள் சிவப்ரியா.
“ப்ச் சிவா. நாமெல்லாம் பிறக்கும் முன்னவே யாராலும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு பிரச்சனை பெருசாகிடுச்சு. இனி யோசிச்சு ஒன்னும் பண்ண முடியாது.
எதாவது செய்ய நினைச்சாலும் அது அத்தைக்குத்தான் மனசங்கடத்தை உண்டு பண்ணும். அவங்களுக்கு உபகாரமா இருக்கலைனா பரவால்ல, உபத்திரமா இருக்கவேணாமேனுதான் நானும் விலகியிருக்கேன். எதாவது செய்யலாம்னு நினைச்சு எதையாவது பெருசா இழுத்து வச்சிடாத.” என எச்சரித்தான்.
சரி என தலையாட்டினாள் சிவப்ரியா. பின்னே இருவரிடமும் கல்லூரி அனுபவங்களை கேட்டுக்கொண்டிருந்தவன், “ஜீவிதா போன் செய்துச்சா? நல்லா இருக்காமா?” என்றான்.
ஜீவிதா என்றதும் அவளின் திருமணத்தில் நடந்தவை நினைவு வர, “நல்லா இருக்காளாம் பார்த்திண்ணா, அவளை ரொம்ப நல்லா பார்த்துக்குறாங்களாம்.” என்று,
“பார்த்திண்ணா, நான் ஒன்னு சொல்வேன், என்னை திட்டக்கூடாது.” என்றாள் குரலிரங்கியவளாக.
“என்ன?” என்றான் ஊன்றிப்பார்த்தபடி.
“அன்னைக்கு ஜீவிதா கல்யாணத்துல நான் ஒருத்தனை பார்த்தேன், அச்சு அசல் அப்பா மாதிரியே இருந்தான். எனக்கு ஒரே ஷாக்.” என்றவள், அன்று அருட்செல்வனோடு நடந்தவைகளை சொல்ல, “யார் அவன்? இவ்வளோ நாள் ஏன் என்கிட்ட சொல்ல்ல?” என அதட்டினான் பார்த்திபன்.
“உன்னை யாரு கண்டவன்கிட்ட போய் பேச்சொன்னதுனு என்னை திட்டுவனுதான் சொல்லல. ஜீவிதாகிட்ட கேட்டு அவன் யாருனு கண்டுபிடிக்கலாமாண்ணா?” என்றாள் அத்தையின் ஊருக்கு செல்லும் நோக்கத்தோடு.
அருட்செல்வன் அன்று வரவில்லை என திடமாய் நினைத்திருக்க, பார்த்திபனுக்கு தற்போதும் தங்கையை திட்டியவன் அருட்செல்வனாய் இருக்கும் என்றெல்லாம் எண்ண முடியவில்லை.
“யாரு என்னனு தெரியாம அவனை எப்படி கண்டுபிடிக்க முடியும்? இவ்வளோ நாள் ஏன் சொல்லல?” என்றான் மீண்டும் கோபமாக.
“சொல்லியிருந்தா அன்னைக்கு ஃப்ரண்ட்ஸோட என்ஜாய் பண்ண விட்டுருக்கமாட்ட, அன்னைக்கப்புறம் அத்தை பத்தின நினைப்புல இவன் செய்ததை சொல்ல மறந்துட்டேன்.
அவன் அப்பா மாதிரியே இருக்கவும் அவனை போட்டோ பிடிச்சேண்ணா, இரு காட்டறேன்.” என தனது மொபைலில் உள்ள அருட்செல்வனின் புகைப்படத்தை காண்பிக்க, விதிர்த்துப்போனான் பார்த்திபன்.
அந்த நேரம் அங்கே வந்த அண்ணாமலைக்கும், அருணாச்சலத்திற்கும் பார்த்திபனின் கோப முகத்திலும், மகளின் தவித்த முகத்திலும் எதோ தவறாய் நடந்திருப்பதாய் தோன்ற, “என்ன பார்த்திபா?” என விசாரித்தனர் இருவரும்.
பார்த்திபனிற்கு முந்திய ஷிவாங்கி நடந்ததை விளக்க, மகளின் கையில் உள்ள செல்போனில் அருட்செல்வனின் படத்தை பார்த்து, “உன்னை நம்பி அனுப்பினேன் பாரு, என்னை சொல்லனும்.” என்றார் அதீத கோபத்தோடு.