“அன்னைக்குத்தானே எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லனு சொன்னேன்? எதுக்கு வர வச்சிங்க? நான் ரூமைவிட்டு வெளில வரவேமாட்டேன்.” என்றாள் பிடிவாதமாக.
“மோகனா, எல்லாரும் உள்ளயிருந்தா எப்படி? யாராவது வெளில வந்து வந்தவங்களுக்கு தண்ணி கொடுங்க.” என குரல்கொடுத்தார் அண்ணாமலை.
“பொண்ணுனு இருந்தா நாலுபேர் கேட்கத்தான் செய்வாங்க. உடனேவா கல்யாணம் செய்துடப்போறோம்? பிடிக்கலனு சொல்லி அனுப்பிக்கலாம். வந்த மரியாதைக்கு வெளில வந்து காபி மட்டும் கொடுத்துட்டு உள்ள வந்திடு. இல்லனா பெரியவங்களை மதிக்கலனு உனக்கும் அசிங்கம். இப்படி வளர்த்து வச்சிருக்காங்கனு எங்களுக்கும் அசிங்கம்.” என்று கல்யாணியை அழைத்துக்கொண்டு வெளியேறினார் மோகனா.
உள்ளே வந்த ஷிவாங்கி, “க்கா, நேத்து அவங்கிட்டயிருந்து போன் வந்தது, அம்மா இப்போதைக்கு கல்யாணம் செய்யிறதாயில்லனுதான் சொன்னாங்க. பெரியம்மாதான் அவங்ளை வரவச்சிருக்காங்க.” என்றதும் அதிர்ந்த பார்த்திபன், “நிஜமாவா ஷிவாங்கி?” என்றான்.
“ஆமாம் பார்த்திண்ணா, நான் பெரியம்மாகிட்டஅப்போவே கேட்டேன், உங்கக்கா இல்லாத ஊருக்கு வழிதேடிட்டு இருக்கா. உன் அத்தையை பத்தி அவளுக்கு தெரியல, அவ அத்தையை புரிஞ்சிக்கும் வரை கல்யாணம் செய்யாம இருந்தா அறுபதாம் கல்யாணம் கூட நடக்காது. எல்லாம் அவ நல்லதுக்குத்தான் செய்யிறோம். இப்போ அவளுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். கல்யாணம் ஆனா சரியாகிடுவானு.” சொன்னாங்க.”
“ஏன்டி நேத்தே என்கிட்ட சொல்லல?” என முறைத்தாள் சிவப்ரியா.
“இல்ல சிவாக்கா, பெரியம்மா நல்லதுக்குத்தானே சொல்றாங்கனு நினைச்சேன். இப்போவும் அப்படித்தான் தோணுது. நீ ஏன் இப்படி பண்ற? அத்தை நம்மளை உறவாவே நினைக்கல. அப்புறம் எப்படி சொத்து வாங்கிப்பாங்க?” என்றாள் சன்னக்குரலில்.
“பார்த்திண்ணா நீ போ, நான் பத்து நிமிஷத்துல வரேன்.” என சிவப்ரியா சொல்ல, பார்த்திபன் வெளியேற, அருகிலிருந்த ஷாலை எடுத்து தனது கழுத்தில் மாலைபோல் போட்டுக்கொண்டு தங்கையோடு வெளியே வந்தாள் சிவப்ரியா.
ஷிவாங்கி சிவப்ரியா போல் அல்ல, மாதம் ஒருமுறை பார்லர் சென்றிடுவாள். அரைமுதுகிற்கு கீழே முடி வளர அனுமதிக்கமாட்டாள். பின்னலிடுவதெல்லாம் பள்ளி நாட்களோடு விட்டுவிட்டாள்.
வீட்டில் இருந்தால் போனி போடுவாள். வெளியில் சென்றாலும், விஷேச நாட்கள் என்றாலும் சிறு கிளிப்போட்டு கூந்தலை விரிய விடுவதுதான் அவளின் வழக்கம். கல்யாணி எத்தனை சொன்னாலும் எனக்கு இதான்ம்மா பிடிச்சிருக்கு என்றிடுவாள்.
எப்பொழுதும் தோற்றத்தில் அதிக கவனம் கொள்ளும் ஷிவாங்கி முகம் தற்போதும் பளிச்சென இருக்க, வழக்கம்போல் காலையில் குளித்த சிவப்ரியா நேற்று பின்னிய கலைந்த கூந்தலை ஒதுக்கிக்கூட விடாமல் நின்றிருந்தளைப் பார்த்ததும் மகள்களருகே வந்த கல்யாணி, “என்னடி இப்படி வந்து நிற்கிற?” என்றார்.
“அச்சோ அவ இல்லைங்க பொண்ணு, இவதான் பெரியவ.” என்று கல்யாணி அவசரமாய் சொல்ல, “ஏன்ம்மா பதறுற?” என நிதானமாய் கேட்டு, “எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லனு இரண்டு நாள் முன்னவே எங்கம்மாகிட்ட சொல்லிட்டேன்ங்க.
வரன்றவங்களை எப்படி வரவேணாம்னு சொல்றதுனுதான் உங்களை வர சொல்லியிருக்காங்க. நடக்காத விசயத்துக்கு மேக்கப்போட வந்து நிற்க எனக்கு பிடிக்கல. நீங்க வருவிங்கன்றதுக்காக என் தங்கை எதையும் பண்ணிக்கல, எப்போவுமே பளிச்சுனுதான் இருப்பா.” என்றாள்.
அருணாச்சலம், அண்ணாமலையின் முகங்கள் வாடிட, வருத்தமாகத்தான் இருந்தது சிவப்ரியாவிற்கு. ஆகினும் அத்தனை முறை சொல்லியும் இப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றால், என் உணர்வுக்கு மதிப்பே இல்லையா? என்ற ஆதங்கம் வர படபடவென பேசினாள்.
எல்லாம் நான் பார்த்துக்கிறேன், உங்க மகனைப் பார்த்ததும் பொண்ணுக்கு பிடிச்சிடும், பத்து பதினைஞ்சு பேரோட முறைப்படி பார்க்க வாங்க, அவளை சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு என தைரியம் கொடுத்து வரவைத்த மோகனாவை மாப்பிள்ளையின் அன்னை பார்க்க, செய்வதறியாது நின்றிருந்தார் மோகனா.
இப்படி பேசுவாள் என எதிர்பார்க்காத மோகனா சிவப்ரியாவை முறைக்க, மோகனாவை கண்டுகொள்ளாமல், “எங்க குடும்பத்துக்கும் என் அத்தை குடும்பத்துக்கு கொஞ்சம் சொத்துப்பிரச்சனைங்க, அது ஊருக்கே தெரியும்.” என இன்னும் என்ன சொல்ல வந்தாளோ?
“சிவா.” என அதட்டினார் அண்ணாமலை.
“சரி பெரியப்பா, நீங்க பேசுங்க.” என தங்கையை அழைத்துக்கொண்டு உள்ளே போனாள் சிவப்ரியா.
மாப்பிள்ளையின் அன்னை “என்னங்க இப்படி சொல்லிட்டு போகுது? முதல்ல நாங்க நாலு பேர் மட்டும்தான் வரதா இருந்தோம். பதினைஞ்சு பேரோட வாங்க, என் பொண்ணை சம்மதிக்க வைக்கிறேனு சொல்லிட்டு, இப்போ அமைதியா இருந்தா என அர்த்தம்?” என வினவினார் மோகனாவிடம்.
“ஏய், அப்படியேது செய்திடாத, இந்த சினிமா பாணிலாம் நமக்கு செட் ஆகாது, அக்காவைத்தான் பார்க்க வந்தாங்க, தங்கையை கட்டிக்கிட்டாங்கனு லைஃப்லாங் பேசுவாங்க.” என மறுத்தான்.
“ப்ச், இந்த காலத்துல மணமேடை வரை வந்து நிற்குற கல்யாணம் எத்தனையோ இருக்கு? இங்க பொண்ணுதானே பார்க்க வந்தோம்? பொண்ணே தைரியமா பேசும்போது நாம ஏன் தயங்கனும்? நம்மளை வரவச்சு இவங்க செய்தது மட்டும் நியாயமா? கேட்டு பார்ப்போம், பொண்ணுக்கு ஓகேன்னா உனக்கு ஒகேவா மட்டும் சொல்லு.” என்றாள்.
இவர்கள் பேசியதை கேட்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, அதானே இப்படியொரு வழியிருக்கே என, “பெரிய பொண்ணுதானே கல்யாணம் வேணாம்னு சொல்றா? சின்ன பொண்ணுகிட்ட கேட்டுப்பாருங்க.” என்று அண்ணாமலையிடம் சொல்லி, “உனக்கு ஒகேதானே நித்திஷ்?” என்றார் மகனிடம்.
“சின்னவளுக்கு இப்போதான் பதினெட்டுங்க, அது கல்யாணத்துக்கு நாள் இருக்கு.” என அண்ணாமலை அருணாச்சலமும் சின்னவளை கொடுக்க மறுத்தனர்.
“ம்மா போலாம்.” என எழுந்தான் நித்திஷ்.
“கோபப்படாத நித்திஷ், இவங்க ரொம்ப நல்ல குடும்பம். கொஞ்சம் பொறுமையா இரு.” என மகனிடம் சொல்லி, “உங்க குடும்பத்தை பத்தி எங்க சொந்தத்துல நம்பிக்கையானவங்க சொல்லவும்தான் பொண்ணு கேட்டோம். நீங்க தர மறுக்கவும் ரொம்ப வருத்தமாகிடுச்சு. சரி நமக்கு கொடுத்து வைக்கிலனு நினைச்சேன்.
விசயத்தை என்மகன்கிட்ட சொல்லும் முன்ன, மோகனாம்மா உறுதியா சொல்லவும் நம்பி வந்தோம். வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு, பொண்ணைப் பத்தி சரியா தெரியாம எங்களை வர சொன்னது உங்க தப்புதான். ஆனாலும் எனக்கு கோபம்லாம் இல்ல, எனக்கு உங்க குடும்பத்துல பொண்ணெடுக்கனும். ஒத்த பையனை பெத்து வச்சிருக்கேன். வரவ கையிலதான் என் நிம்மதியிருக்கு. நல்ல இடமா பார்க்கனும்னு ஒரு வருசமா பொண்ணு தேடிட்டிருந்தேன்.
விசாரிச்ச வரைக்கும் உங்க குடும்பம்தான் எனக்கு பிடிச்சது. இந்த காலத்துலயும் அண்ணன் தம்பி ஒற்றுமையா இருக்கிங்கனும், ஒரடி, இரண்டடி சொத்துக்கெல்லாம் கோர்ட்டுக்கு போகுற அண்ணன் தம்பிகளுக்கு மத்தியில பல வருசமா தங்கைக்கு சொத்து கொடுக்க தவிச்சிட்டிருக்க உங்க பாசம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
உங்க குடும்பத்தை பத்தி நல்லா தெரியவும்தான் உங்க பொண்ணை கேட்டோம். பெரியவ இருக்க சின்னவளுக்கு எப்படி பண்ணனு யோசிக்காதிங்க, இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.
படிப்பு வீணாகிடும்னும் யோசிக்கவேணாம். என் மகன் காலைல போனானா நைட்தான் வீட்டுக்கு வருவான். அதுவரை வீட்டுல தனியா இருக்கிறதுக்கு காலேஜ் போகட்டும். பெங்களூர்லயே சேர்த்துவிட்டுடறோம். யோசிச்சு சொல்லுங்க.” என உறவினரோடு வெளியேறினர் பெண்கேட்டு வந்தவர்கள்.
** ** ** ** ** ** **
“சிவா.” என கோபத்தோடு கல்யாணி உள்ளே வர, “போய்ட்டாங்களா? ஹப்பா.” என்றாள் நிம்மதி பெருமூச்சோடு.
“போனவங்க சும்மா போகல, உன் தங்கையை கேட்டுட்டு போறாங்க. தேவையாடி இதெல்லாம்?” என அங்கலாய்த்தார் கல்யாணி.
சிவப்ரியா முகம் சந்தோசம் கொள்ள, ஷிவாங்கி முகம் அதிர்வுக்குள்ளாக, “ம்மா, நான் சொல்லியும் அவங்களை வர வச்சது பெரியம்மா தப்பு. என்மேல ஏன் கோபப்படுற?” என்றாள் இலகுவாக.
“பொண்ணு கேட்டுட்டு வேணாம்னு போறெதெல்லாம் டவுன் பக்கம் வேண்ணா சாதாரணமா இருக்கலாம். இங்க நம்மூர்ல என்னென இட்டுகட்டி பேசுவாங்க தெரியுமா? அதோட முதல் முறை பொண்ணு பார்க்க வந்துருக்காங்க, என்னாச்சுனு சொந்தபந்தம்லாம் விசாரிப்பாங்க. நான் என்னனு சொல்வேன்.?
உன் அத்தைகிட்ட பேசின பேச்சுக்கு என்னென்ன கொடுமைலாம் கேட்க வேண்டி வருமோனு நானே பயத்துல இருக்கேன், இப்போ அதோட சேர்த்து இதுவும். எல்லாம் என் தலையெழுத்து.” என்றார் வேதனையோடு.
“நடக்கலனாதானே அப்படி பேர் வரும். ஷிவாங்கிக்கும் நித்திஷ்க்கும் கல்யாணம் நடந்தா பிரச்சனை சுபமா முடிஞ்சிடும்தானே?” என்றாள் இலகுவாக.
“சிவாக்கா.” என ஷிவாங்கி அதிர, “என்னடி சொல்ற? பெரியவ நீ இருக்கும்போது இவளுக்கு செய்தா, அப்புறம் உன்னை யாரு கட்டிட்டு போவா?”
கணவனிடம் தனத்திற்கு சொத்து கொடுக்கவேண்டாம் என்று சொன்னால் கொன்னே போட்டுருவார், அருட்செல்வனிற்கு முன் சிவப்ரியாவிற்கு திருமணம் நடந்துவிட்டால் தனம் சொத்து பிரச்சனை முடிவிற்கு வரும் என மோகனா அவசரப்பட்டிருந்தார்.
மோகனாவின் திட்டத்திற்கு மாறாக வந்தவர்கள் ஷிவாங்கியை கேட்கவும், இந்த கல்யாணம் நடந்தால், சொத்து வாங்கிக்கலைனா நான் கல்யாணம் செய்துக்கமாட்டேன் என தனத்திடம் சிவப்ரியா சொன்னதை நடத்திக்காட்டியதை போலாகிடுமே, என்ற பதட்டத்தில் மோகனா இருக்க,
அன்று நித்திஷை மொபைலில் காண்பித்தபோது, மாப்பிள்ளை ஹேண்ட்ஸமா இருக்கார், பண்ணிக்கோயேன் சிவா என்றதை நினைத்தவள், ஷிவாங்கி நித்திஷ் திருமணம் நடந்தால் அத்தை நிச்சயம் சொத்து பத்தி யோசிப்பார்கள் என்ற மகிழ்வோடு, ஷிவாங்கியும் நித்திஷும் இதற்கு சம்மதிக்க வேண்டும் என மனமுருக இறைவனை வேண்டினாள் சிவப்ரியா.