ஹிரித்திக் அந்தப் பெண்ணின் அருகே செல்ல, அவன் அரவத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் ஜோஸ்லின். அவனைப் பார்த்ததும் அவள் நெற்றியைச் சுருக்க, “ஏங்க, நீங்களா?” என கேட்டுக்கொண்டே, அவளுக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான் ஹிரித்திக்.
அவள் அவனைப் பார்த்து யோசிக்க, “ம்ப்ச்… என்னங்க, மறந்துட்டீங்களா? நேத்து ஃப்ளைட்ல, ஸ்டெஃபிக்கு மேஜிக் கூட சொல்லி கொடுத்தேனே!” என அவன் கூற, நினைவு வந்தது போல தலையை ஆட்டினாள் பெண்.
“ஓ… அப்ப நீங்க இங்க உங்க ஹஸ்பண்ட் கூட வந்தீங்களா?” என அவன் கேட்டதும் அவளது முகம் மாற, அதற்குள் அவள் அருகில் வந்து, தோளில் கையைப் போட்ட விக்ரம், “இது யாரு ஜோஸ்?” என்று வினவினான்.
அவனிடம் இருந்து மது வாடை குப்பென்று ஹிரித்திக்கை தாக்கியது. அந்த கேள்வியை இருவருமே மறந்து விட, “இவரை ஃப்ளைட்ல பார்த்தேன் விக்ரம்.” ஜோஸ் பதிலளித்துக் கொண்டே, விக்ரமின் கையை விலக்கினாள்.
“ஓ… இவர்தான் உங்க ஹஸ்பண்டா? சூப்பர்ங்க!” என ஹிரித்திக் கூற,
“இல்லை, அது…” என ஜோஸ்லின் விளக்க முற்படும்போது, செல்வாவின் அலறல் சத்தம் கேட்டது.
“சரிங்க, பாய். என் நேம் ஹிரித்திக், சான்ஸ் கிடைச்சா நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்.” என ஹிரித்திக் விடைபெற்றான்.
“மச்சான், டேய்! நான் ஒன்னும் பண்ணலைடா! தெரியாம கை பட்டுடுச்சு. அதுக்கு சண்டைக்கு வர்றான் டா!” என்று குழறியபடி கூறிய செல்வா, ஹிரித்திக்கின் மீது கவிழ்ந்தான்.
செல்வாவை முறைத்தவாறு இரண்டு பெண்களும், ஆண்களும் நிற்க, “ஹே! சாரி கைய்ஸ். இட்ஸ் அவர் மிஸ்டேக்.” என்று ஆங்கிலத்தில் மன்னிப்பை வேண்டிவிட்டு, செல்வாவை இழுத்துக் கொண்டு, பாபுவை தேடி அவனையும் அழைத்து, ஒரு மகிழுந்தில் ஏற்றுவதற்குள், ஹிரித்திக் தலைகீழாக நின்று தண்ணீர் பருக வேண்டி இருந்தது.
அவர்கள் குடியிருப்பு வர, “பையா, ஏக் மினிட்.” என்று ஓட்டுநரிடம் கூறியவன், வீட்டைத் திறந்து, செல்வாவை உள்ளே படுக்க வைத்துவிட்டு, அடுத்ததாக பாபுவையும் அழைத்துக் கொண்டு, அந்த ஓட்டுநரிடம் நன்றி உரைத்து விட்டு வந்தான்.
இருவரும் நடுக்கூடத்திலே படுத்து விட, “டேய் செல்வா… பாபு… இரண்டு பேரும் ரூம்ல வந்து படுங்கடா. உங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு?” என அவர்களுக்கு அருகில் அமர்ந்து ஹிரித்திக் புலம்ப, பாபுவின் அலைபேசி அழைத்தது. ஹிரித்திக், ‘எடுக்கலாமா? வேண்டாமா?’ என யோசிக்கும் போதே, அழைப்பு துண்டாகி மீண்டும் அழைத்தது.
‘அமுல் பேபி’ என்று பெயர் வர, அழைப்பை ஏற்றவன். “ஹலோ, சொல்லுங்க.” என்றான்.
“பாபு இல்லையா?” ஒரு பெண் குரல் கேட்க,
“பாபு மட்டையாகிட்டு, தூங்குறான் ம்மா!”
“என்னது மட்டையாகிட்டானா? காலைல அவன்கிட்ட பேசிக்கிறேன்.” கோபமாகக் கூறியபடியே அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்தாள்.
“அனுபவிடா பாபு… எருமை மாட்டு கனம். என்னை பாடாபடுத்துனல்ல. காலைல உனக்கு கச்சேரி இருக்கு.” என்று நகைத்தவன், அவர்களைக் கூடத்திலேயே விட்டுவிட்டு, அறைக்குச் சென்று படுத்தான்.
நேற்று பயணக் களைப்பில் உறக்கம் வந்துவிட, இன்று உறக்கம் வராமல் புரண்டான்.
வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்று தோன்றினாலும், அழைக்க மனம் வரவில்லை அவனுக்கு. ‘வேணும்னா, அவங்களே கால் பண்ணட்டும்.’ என்று நினைத்தவன், அன்று முழுவதும் சுற்றிய இடங்களை அசை போட, இறுதியில் வந்து நின்றது ஜோஸ்லினுடனான உரையாடல் தான்.
‘அவங்க பேர் என்னன்னு கேட்க மறந்துட்டேன். சரி விடு… இந்த ஒரு வருஷத்துல ஒரு தடவையாவது மீட் பண்ணாமலா போய்டுவோம்?’ என தனக்குத்தானே கேட்டுக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தான், வாழ்க்கை முழுவதும் அவளிடம் மண்டியிட போவதை அறியாமல்!
மறுநாள் மதிய பொழுதை கடந்து கண்விழித்த பாபு, “என்ன இது? நான் எங்க இருக்கேன்?” என்று வினவினான்.
“ஹிஹி…” என அசடு வழிந்த பாபு, தலை வலிப்பது போல தலையில் கையை வைக்க, அவனுக்கு ஒரு குவளையில் எலுமிச்சை பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தான் ஹிரித்திக்.
“தாங்க்ஸ் மச்சான்.” என்ற பாபு, அதை எடுத்து அருந்த, அவனது அலைபேசி அழைத்துக் கொண்டே இருந்தது.
அழைப்பை ஏற்றவன், “சொல்லு செல்லம்.” எனக் கேட்க, அந்தப் பக்கம் என்ன கூறினார்களோ, “ஏய்! யாரோ சொல்றதை எல்லா நம்புவியா டி? சத்தியமா நான் குடிக்கலை டி… நீயா கற்பனை பண்ணாத.” என்று அவன் கூற,
“யாரோ இல்லைடா, உன் ஃப்ரண்ட் தான் சொன்னாரு. பொய் சொல்ல, அவர என்ன உன்னை மாதிரி நினைச்சியா?” என அவள் கேட்க, பாபு கோபமாக ஹிரித்திக்கைப் பார்க்க, அவன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
படுக்கையில் இருந்து எழுந்தவன், “இருடா, உன்னை வந்து வச்சுக்குறேன்.” என பாபு வெளியேற, ஹிரித்திக் வாய் விட்டு சிரித்தான்.
அவன் சிரித்ததில், தூக்கம் கலைந்து எழுந்த செல்வா, “குட் மார்னிங் டா மச்சான்.” என இளித்தான்.
“குட்நைட் டா மச்சான்.” என்று ஹிரித்திக் பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
அடித்து பிடித்து எழுந்த செல்வா, “ஒன் டே ஃபுல்லாவா மட்டையாகி இருக்கேன்!” என ஆச்சரியப்பட்டு, ஐன்னலை திறந்தவன் முகத்தில் ஆதவன் தனது வெம்மையை படரச் செய்ய, திரும்பி ஹிரித்திக்கை முறைத்தான்.
அவனது அருகில் சென்ற ஹிரித்திக், செல்வாவை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்து, “ஏன் டா டேய்! குடிச்சா கண்ணு மண்ணு தெரியாதா டா உனக்கு? வேற ஒருத்தன் கேர்ள் ஃப்ரண்ட் கிட்ட வம்பிழுத்து வச்சுட்ட… அவனை சமாளிச்சு, உங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சுடா” என்றவன், அவனை அடி வெளுத்தான்.
“சரி, விடு மச்சான். அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் டா! நீ இன்னைக்கு பண்ணா, இன்னொரு நாள் உன்னை இதே மாதிரி ஒரு சிட்சுவேஷன்ல நான் காப்பாத்துவேன்.” சமாளிப்பாக செல்வா கூற,
“மண்ணாங்கட்டி… இந்த மாதிரி ஒரு சூழ்நிலை எல்லாம் கண்டிப்பா எனக்கு வராது.” என்று கோபமாக கூறினான் ஹிரித்திக்.
“போதும் டா மச்சான்… வலிக்குது.” என்று செல்வா அலற, ஹிரித்திக் அவன் மீது இருந்து எழுந்தான். செல்வாவின் அலைபேசி அழைக்க, ஹிரித்திக் அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தான்.
ஹிரித்திக்கை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்த செல்வாவுக்கு, சுப்பம்மாவின் சூப்பரான சுப்ரபாதம் காதை நிறைக்க, அவருக்கு விளக்கம் கொடுப்பதற்குள் நொந்து விட்டான் செல்வா. மறுபடியும் அவர்களுக்கு இடையில் ஒரு அடிதடி நிகழ, அப்படியே அந்த நாள் கழிந்தது.
தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அடுக்கி, அந்த வீட்டை அவர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைத்துக் கொண்டனர் நண்பர்கள். மாலை நேரத்தில் வந்த பாபு, “மச்சான் செல்வா, ஹிரித்திக்… நேத்து போன மாதிரி ஒரு செம்ம இடம் இருக்குடா! போவோமா?” என வினவினான்.
“டேய்! உன் ஆளு உனக்கு கொடுத்த டோஸ் பத்தலையா?” பி.டி.உஷா போல அறையில் இருந்து ஓடி வந்த ஹிரித்திக், மூச்சு வாங்க வினவினான்.
“மச்சான், செத்துட போற டா, பார்த்து.” என அவனுக்கு தண்ணீரைக் கொடுத்த பாபு, “இதுக்கெல்லாம் பயந்தா, வாழ முடியுமாடா?” என நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு வினவ, “அதானே, அப்படி சொல்லு மச்சான்.” என்று செல்வா அவன் அருகில் வந்தான்.
“உங்களை எல்லாம் திருத்த முடியாது டா. நான் எங்கேயும் வரலை. நீங்க போறதுன்னா, போய்க்கோங்க.” என்று ஹிரித்திக் நழுவ, இருவரும் அந்த திட்டத்தை மாலையில் குடித்த குளம்பி குவளையோடு சேர்த்து கழுவி, கீழே ஊற்றி விட்டனர்.
தனது கசங்கிய சட்டையைக் கையை வைத்து நீவி விட்டுக் கொண்டே வந்த செல்வா, ஹிரித்திக்கை பார்த்து அதிர்ச்சியாகி, “டேய்! என்ன டா இது? இப்டி செம்மையா கிளம்பி இருக்க. புடிக்கலை புடிக்கலைன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னியேடா?” என வாயில் விரலை வைத்தான்.
“ம்ப்ச்… வந்தாச்சு, எப்படியும் ஒரு வருஷம் இங்க தானேடா இருக்க போறோம். இங்க வர்றது தான் புடிக்கலைன்னு சொன்னேன். பட், என்னோட ஜாப், நான் ரொம்ப ரசிச்சு பண்றதுடா. இங்கயும் என்னோட வொர்க்கை நான் கரெக்டா பார்ப்பேன்.” என்று ஹிரித்திக் விளக்கம் தர, புருவம் உயர்த்தி அவனை மெச்சினான் செல்வா.
இருவரும் அலுவலகத்தை அடைய, “என்னடா இது, சென்னையில பொட்டி கடை மாதிரி இருக்க நம்ம பிரான்ச் எங்க? மினி தாஜ்மஹால் மாதிரி இருக்க இந்த பிரான்ச் எங்க?” என செல்வா ஆச்சரியப்பட்டான்.
“மச்சான், இதுதான ஹெட். சோ பெருசா தான் இருக்கும்.” என்று ஹிரித்திக் விளக்கம் அளிக்க, இருவரும் உள்ளே நுழைந்து, தாங்கள் வந்ததற்கான நோக்கத்தைக் கூற, அந்த வரவேற்பாளினி, இரண்டாம் தளத்தை கை காட்டினாள்.
“மே ஐ கமின் சார்?” என கேட்டுக்கொண்டே ஹிரித்திக்கும், செல்வாவும் உள்ளே நுழைந்தனர்.
“எஸ், கம் இன். வாட் யூ வாண்ட்?” என நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வினவினார்.
“சார், ஐ யம் ஹிரித்திக்… அண்ட் ஹி இஸ் செல்வா. வீ ஆர் ஃப்ரம் சென்னை பிரான்ச்.” ஹிரித்திக் தங்களை அறிமுகம் செய்தான்.
“ஓ… நீங்கதானா அந்த புது டி.எல்? ஓகே, அஷ் யூஷூவல் அங்க பார்த்த வொர்க் தான் இங்கேயும் உங்களுக்கு. பட், இங்க ப்ரெஷர்ஸ் தான் உங்களுக்கு டீம் மேட். சோ, யூ ஹேவ் டு கைட் தெம்.”
“ஓகே, ஷ்யூர் சார்.”
“ஹம்ம்… நான்தான் இங்க ஹெச்.ஆர். உங்களை ஃபர்ஸ்ட் மேனேஜர்கிட்ட இன்ட்ரோ பண்றேன். தென் எம்.டி வந்ததும் அவங்ககிட்ட இன்ட்ரோ பண்றேன்.” என அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று, மேலாளரிடம் அறிமுகப்படுத்தி விட்டு, அவர்கள் குழுவில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஐந்து பேரை இணைத்து விட்டார். அதற்கே மணி பனிரெண்டைத் தொட்டு விட்டது.
தனது இருக்கையில் அமர்ந்தவன், “ஷப்பா! வந்ததுல இருந்து உக்கார விடமாட்றாங்களே, இந்த மேனேஜர் சரியான சிடுமுஞ்சியா இருப்பார் போல… எம்.டி எப்டி இருக்க போறாரோ?” செல்வா புலம்ப, அந்த ஐந்து பேரையும் விசாரித்துக் கொண்டு இருந்தான் ஹிரித்திக்.
அவர்களுக்கான வேலையையும் மற்ற விதிமுறைகளையும் கூறி, தனது அறைக்குள் அவன் நுழைய, செல்வாவும் நுழைந்தான்.
“அதுக்குள்ளேயுமா? டைம் என்னடா ஆச்சு?” வினவிய ஹிரித்திக், தனது கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு, “லன்ச் டைம் ஆச்சா? டைம் போனதே தெரியலை.” என்று கூற, இருவரும் அங்கிருந்த உணவகத்திற்குள் நுழைந்தனர்.
“மச்சான், இங்க என்ன சாப்பாடு கிடைக்கும்னு தெரியலை, நான் போய் விசாரிச்சு வாங்கிட்டு வர்றேன்.” என செல்வா சென்று உணவு வாங்கி வர, இருவரும் உண்டு கொண்டு இருந்தனர்.
“ஹாய், நீங்கதான் சென்னைல இருந்து வந்த நியூ ஜாய்னியா? ஐ யம் கௌஷிக்.” நன்கு கொழுக் மொழுக் என்று இருந்த ஒருவன் கையை நீட்ட, ஹிரித்திக் அமைதியாக அவனைப் பார்த்தான்.
“ஏன் பாஸ், இப்டி பார்க்குறீங்க? ஹிந்தியை கேட்டு கேட்டு காது எல்லாம் புளிச்சு போச்சு. சரி நம்ம ஊர்காரங்கன்னு தேடி வந்து பேசுனா, ஹேண்ட்ஷேக் கூட கொடுக்க மாட்டேன்றீங்களே! நீங்க உண்மையிலேயே சிங்கார சென்னை தானா?” கௌஷிக் உணர்ச்சி மிகுதியில் பேசினான்.
அவனை மேலிருந்து கீழ் வரை அளவிட்ட ஹிரித்திக், “நாங்க சிங்கார சென்னைல இருந்து இல்ல… சிங்கப்பூர்ல இருந்து வந்தா கூட, சாப்பிட்ட கையோட ஹேண்ட்ஷேக் பண்ற பழக்கம் எங்க பாட்டன், முப்பாட்டன் தலைமுறைல கூட கிடையாதுங்க. சோ ப்ளீஸ்!” என தன் கையை கூப்ப, அதில் கௌஷிக் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய் மச்சான், சரியான ஜோக்குக்கு செத்த பையலா இருப்பான் போல டா. இந்த மொக்கை ஜோக்குக்கு என்னம்மா சிரிக்கிறான்.” என செல்வா ஹிரித்திக் காதில் கிசுகிசுத்தான்.
“ஜோக்குக்கு செத்தவன் இல்லை பாஸ். நம்ம ஊர்க்காரங்க குசும்பை நினைச்சு சிரிச்சேன். தமிழ் ஆளுங்களை பார்க்கறதே கஷ்டமா இருக்கு இங்க. அதான் பாஸ்.” என்றான் கௌஷிக்.
“ஹிஹி… உங்க காது செம்ம ஷார்ப் பாஸ்.” என செல்வா அசடு வழிந்தான்.
இருவரும் உண்டு விட்டு வர, தன் கையை நீட்டிய கௌஷிக், “இப்பவாவது ஃப்ரண்ட்ஸ் ஆகலாமா?” என வினவினான்.
“மச்சான், கையை நீட்டிடு டா. இல்லை கையை பிடிச்சு கடிச்சு வச்சுட போறான்.” என செல்வா, ஹிரித்திக்கிடம் முணுமுணுக்க, ஹிரித்திக் அவனிடம் கையைக் குலுக்கினான்.
“அப்புறம் பாஸ், நம்ம மேனேஜரை பார்த்தீங்களா? செம்மையா பேசி இருப்பாரே.” கௌஷிக் சிரித்துக் கொண்டே கூற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“தெரியும். அந்த ஆள் அப்படித்தான். பட், எம்.டி மேம் சூப்பர்! கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான். பட், வொர்க்கை கரெக்டா செஞ்சுட்டா, மத்த எதையும் கண்டுக்க மாட்டாங்க. அவங்களோட பொண்ணு சோ சோ ஸ்வீட்.” என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும்போதே,
“கௌஷிக்… மேனஜர் காலிங் யூ” என ஒருவன் கூற,
“ச்சே! இந்த ஆளு நிம்மதியா சாப்ட கூட விடமாட்டான்.” என அலுத்துக்கொண்டே கௌஷிக் விடைபெற்றான்.
“மச்சான்… எம்.டி ஆன்ட்டியா இருக்கும் போல டா. பின்ன இவ்ளோ பெரிய ஆபிஸை மெயிண்டெயின் பண்றது அவ்ளோ ஈஸியா என்ன?” செல்வா கூற, இருவரும் தத்தம் இருக்கைக்குச் சென்று வேலை பார்க்கத் துவங்கினர்.
மாலை வேலை முடிந்து அனைவரும் கிளம்ப, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு ஹிரித்திக் கிளம்ப ஆயத்தமாக, அவனது இன்டர்காம் அழைத்தது.
“எஸ் சார்.”
“எம்.டி வந்துட்டாங்க. நியூ ஜாய்னியை பார்க்கணும்னு வர சொன்னாங்க…” என்று ஹெச்.ஆர் கூறினார்.
“பட் சார், வொர்க் டைமிங் ஓவர்.”
“ஒரு டூ மினிட்ஸ். அவங்களை போய் மீட் பண்ணிட்டு, யூ கேன் லீவ்.” என்று அவர் கூற, முனங்கி கொண்டே அவர் அறைக்குச் சென்றான் ஹிரித்திக்.
அவர்களுடன் மேலும் வேறு இடங்களில் இருந்து வந்த மூன்று பேர் நிற்க, ஹிரித்திக்கும் உள்ளே நுழைந்தான். எம்.டி இருக்கையில் அமர்ந்து இருந்தவளைப் பார்த்ததும் அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிய, மாறாக அவன் இதழ்கள் விரிந்து ஒரு புன்னகையைத் தோற்றுவித்தது.
ஒரு வாரம் கழிந்து இருந்தது. கோவிலில் பார்த்த அந்த பெண்ணின் நினைவு எங்கோ இதயத்தின் ஒரு மூலையில் சென்று அமர்ந்து இருந்தது யுவராஜிற்கு.
தொலைக்காட்சியில் ஒரு கண்ணை வைத்து இருந்த யுவராஜின் மற்றொரு கண், வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்த உஷாராணியின் மீது பதிந்தது.
அவரது செய்கைகளை அவதானித்தவன், ஈஸ்வர் அருகில் சென்று, “ப்பா… அம்மாவை யாரும் குண்டுன்னு சொல்லிட்டாங்களா ப்பா? காலையில இருந்து வாக்கிங் போய்ட்டு இருக்காங்களே?” என வினவினான்.
அவனை முறைத்த ஈஸ்வர், “அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா… என்னன்னு எனக்கும் தெரியலை.” என்று அவரும் உதட்டை பிதுக்கினார்.
சரி என்று விட்டவன், உஷாவை அமைதியாக நோட்டமிட்டான். ஒரு சிறுவன் வர, அவனிடம் தனது பற்கள் அனைத்தையும் காட்டிச் சிரித்து பேசிய உஷா, அவனிடம் இருந்து ஏதோ ஒரு பையை வாங்கி கொண்டு, உள்ளே நுழைந்தார்.
அப்பாவும் மகனும் உஷாவையே பார்க்க, அவனைப் பார்த்து சிரித்தவர், ஈஸ்வரிடம் உள்ளே வருமாறு கண்ணைக் காட்டிவிட்டு அறைக்குச் சென்றார். அரைமணி நேரம் சென்று இருக்கும்.
இருவரும் வெளியே வந்தனர். அவன் அருகில் வந்த உஷா, “அந்த பையன், தரகரோட பையன் தான் ராசா… அவர்தான் பொண்ணு ஃபோட்டோ தந்து விட்டாரு. மொத்தம் பத்து ஃபோட்டோ கொடுத்தாரு. அதுல லட்சணமா இருக்கற ரெண்டு ஃபோட்டோ அம்மா செலக்ட் பண்ணேன் ராசா. உனக்கு பிடிச்சு இருக்கான்னு பார்த்து சொல்லு ப்பா.” என உஷா அந்த இரண்டு பெண்களின் புகைப்படத்தை நீட்ட, அதை வாங்கி பார்க்க போனவனின் அலைபேசி அழைக்க, அறைக்குச் சென்றான்.
காஷ்மீரில் இருந்து வேலை சம்பந்தப்பட்ட அழைப்பாக இருக்க, அவன் ஏற்று பேச ஆரம்பித்தான். அது வரைக்கும் பொறுமை இல்லாத உஷா அறைக்கு வர, ‘ம்மா… ஒரு டென் மினிட்ஸ். ஃபோட்டோவை டேபிள்ல வச்சுட்டு போங்க. நான் பார்த்துட்டு வர்றேன்.’ என்று சைகையால் கூறியவன், அழைப்பில் கவனமானான்.
மேஜையின் மீது இருந்த பூங்கொத்துக்கு அடியில் புகைப்படத்தை வைத்துவிட்டு அவர் வெளியே சென்றார். ஏதோ குறிப்பு எழுதுவதற்காக பேனாவை தேடியவன், அவசரத்தில் அந்த புகைப்படத்தின் பின்பு அதை எழுதி அழைப்பை துண்டிக்க, அது பறந்து சென்றது.
எட்டி அதைப் பிடித்தவன் திருப்பி பார்க்க, அவனுக்கு ஆச்சரியம். ‘கோவிலில் பார்த்த அந்த பெண் தான் இவள்.’ என்று மூளை வலியுறுத்த, மனதின் ஓரத்தில் துளிர்விட்ட மகிழ்ச்சி துளித்துளியாய் உடல் முழுக்க பரவி, முகத்தில் வந்து நிலைத்தது.
ஆசையும் ஆர்வமுமாய் அந்த புகைப்படத்தை அவன் அகத்தில் பதித்துக் கொண்டு இருந்த நேரம், உள்ளே நுழைந்த உஷா, “ராசா, இந்த புள்ளையை தான் எனக்கும் பிடிச்சு இருந்துச்சுய்யா! உனக்கும் இவளைத்தான் பிடிச்சு இருக்கா? பார்க்க ரொம்ப அமைதியான புள்ளையா தெரியுறாளே! நல்ல மரியாதை தெரிஞ்சு, குடும்பத்தை அனுசரிச்சு போவா போல!” என அவர் பேசப்பேச, சம்யுக்தா கோவிலில் பேசியதை நினைத்து யுவராஜிற்கு சிரிப்பு பீறிட்டது. அதை தனது இதழுக்குள் கடினப்பட்டு அடக்கினான்.
“உனக்கு இந்த பொண்ணை பிடிச்சு இருக்கா பா?” என ஈஸ்வர் அவனது முகத்தை பார்த்து வினவினார்.
“ஹம்ம் பா… எனக்கு ஓகே. உங்களுக்கு?” யுவராஜ் கேள்வியாக நிறுத்தினாலும், ‘சம்மதம் சொல்லிடுங்க.’ என அவன் மனது குரல் கொடுத்தது.
“ரொம்ப சந்தோஷம்யா. எனக்குத் தெரியும், உனக்கு பிடிக்கும்னு. இப்பவே போய் நான் தரகர் கிட்ட பேசுறேன்.” என உஷா சென்றார்.
அவர் தரகரிடம் பேசி, தரகர் பெண் வீட்டில் பேசி என எல்லாம் ஜெட் வேகத்தில் நடைபெற, அதோ இதோ என்று இரண்டு நாட்களில் பெண் பார்க்க செல்லலாம் என முடிவெடுத்து, இன்று பெண் பார்க்க செல்கின்றனர்.
அவள் கோவிலில் தனக்கு திருமணம் வேண்டாம் என்று வேண்டியது மனதில் நெருடினாலும், ‘முதலில் அவளைச் சந்தித்து, ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாள் என்று தெரிந்து கொள்வோம். அது நியாயமான காரணமாகப் பட்டால், தானே அவளைப் பிடிக்கவில்லை என்று கூறி விடலாம்’ என குழம்பிய மனதிற்கு ஒரு விடையை இரண்டு நாட்களில் கண்டு பிடித்தவன், இப்போது குதூகலத்துடன் பட்டுவேட்டி சட்டையில் கிளம்பினான்.
“டேய்! பொண்ணுதான் பார்க்க போறோம். கல்யாணம் ஒன்னும் இல்லை. அதுக்கே இந்த அலப்பரையா?” என அஜ்மல் அலுக்க, அதையெல்லாம் காதில் வாங்காத
யுவராஜ், சம்யுக்தாவை சந்திக்கும் ஆர்வத்தில் இருந்தான்.
அவன் கிளம்பியதைப் பார்த்த உஷா, “அழகா இருக்கற ராசா.” என்று நெட்டி முறிக்க, நால்வரும் பெண் பார்க்க கிளம்பினர்.