நேரம் சென்றதே தெரியாத வகையில் அனைவரின் மனமும் முகமும் மகிழ்ச்சியில் பூரித்திருக்க தளிரின் மருதாணி குறித்து குழந்தைகள், இளையவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நிறைவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
“நம்ம உதய் குணத்துக்கு ஏத்த மாதிரி அருமையான பெண்ணை தேர்ந்தெடுத்து இருக்கீங்க சம்பந்தி..” என்று ராகவனின் தந்தை அம்பலவாணனிடம் சொல்ல அவரோ புன்னகையுடன் மகனை பார்த்தார். ஆனால் உதய்யின் பார்வை உணவை எடுத்து வைத்துகொண்டிருந்த தளிரின் மீதிருந்த அகலமறுக்க கைபேசி அழைப்பு அவனை மீட்டிருந்தது.
“சொல்லு செல்வம்” என்றவாறு உதய் வெளியில் செல்ல “மாமா சாப்பாடு ரெடி எல்லாரும் வாங்க, வாங்கப்பா” என்ற சுஜி “உதய் சாப்பிடாம எங்கப்பா கிளம்பிட்டான்..?”
“முக்கியமான கால் வந்ததும்மா பேசிட்டு வந்துடுவான் நீ வா” என்று மகளுடன் செல்ல தளிர், நிவி அனைவருக்கும் பரிமாற தொடங்கினர்.. சுஜி வைஷு கௌஷிக்கை ஒன்றாக அமரவைத்து ஊட்டியவள் இறுதியாக இருவருக்கும் பாயசத்தை கொடுத்து, “ஒழுங்கா சண்டை போடாம குடிச்சுட்டு டம்பளரை கழுவி என்கிட்டே கொடுக்கணும் புரிஞ்சதா..?” என்று மிரட்டிவிட்டு டைனிங் டேபிளுக்கு சென்றாள்.
“நிவி நீ உட்கார்” என்று தங்கையை அமர்த்தி பரிமாறியவள், “தளிர் உதய் கால் பேசி முடிச்சுட்டானான்னு பார்த்து கூட்டிட்டு வா நீங்களும் உட்காந்துப்பீங்க” என்று சொல்லவும் அம்பலவானனுக்கு அப்பளத்தை எடுத்து வைத்து கிளம்பிய அதேநேரம் மீண்டும் கௌஷிக்கும் வைஷுவும் ஒருவரை ஒருவர் துரத்தி கொண்டு வந்தவர்கள் இறுதியில் டைனிங் டேபிளை சுற்றி வந்ததில் “காப்பாத்துங்க மாமி” என்று தளிரை பிடிக்க முற்பட்ட வைஷுவின் கைபட்டு தளிரின் புடவை முழுக்க ரசம் கொட்டிவிட்டது.. அதோடு அவள் பின்னே வந்த கௌஷிக் டம்பளரில் இருந்த நீரையும் வைஷு மீது ஊற்றுவதற்கு பதில் தளிர் மீது ஊற்றிவிட்டான்.
“ப்ச் வர வர உங்க சேட்டை அதிகமாகிடுச்சு.. என்ன பண்ணியிருக்கீங்க..? ஒரு இடத்துல ஒழுங்கா உட்கார மாட்டீங்களா..?”
“இல்லம்மா இந்தக்கா பொய் சொல்றா..? நான் டாப் ஓபன் பண்ணி வாஷ் பண்றப்போ என் மேலயும் தண்ணி பட்டுச்சு அக்கா ஏன் என் பக்கத்துல நிக்கணும் வாஷ் பண்ணிட்டு போக வேண்டியது தானே..?”
“அவன் செய்தா நீயும் செய்வியா..? உனக்கும் அவனுக்கும் வித்யாசமில்லை..” என்றவர் மகனை இழுத்து அவன் முதுகில் ஒன்று வைத்து, “அவ உன்னை வாட்ச் பண்ண தானே நின்னிருக்கா..? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லணும் சொல்லியும் அதென்ன அக்கா மேல தண்ணீ ஊத்துறது..? உங்களால மாமி சாரீ நனைஞ்சுடுச்சு இப்படி செய்தா எந்த கெஸ்ட் நம்ம வீட்டுக்கு வருவாங்க..? இனி மாமி இங்க வரவே மாட்டாங்க பார்த்துக்கோ” என்று சுஜி கண்களை உருட்ட கௌஷிக் அவரிடம் இருந்து நழுவி வெளியில் ஓடிவிட்டான்.
ஆனால் வைஷுவிற்கு சாமார்த்தியம் போதாமல், “ஸாரிம்மா.. ஸாரி மாமி இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.. நீங்க வீட்டுக்கு வராம இருக்காதீங்க..” என்று விட்டால் அழுதுவிடுபவள் போல இருந்தவள் “டென் தவுசன்ட் டைம்ஸ் ஸாரி மாமி” என்று மீண்டும் மன்னிப்பை யாசித்தாள்.
“ச்சோ விடுங்க அண்ணி குழந்தைங்க தானே.. சாரீ மாத்தினா ஆச்சு, அதுக்கு ஏன் அவளை அழவிடறீங்க..” என்ற தளிர் வைஷுவை அணைத்து தேற்றினாள்.
“அவளை விடு இப்படிதான் கொஞ்ச நேரம் மூஞ்சியை தூக்கி வச்சிருப்பா அப்புறம் சரியாகிடுவா.. சரி நீ வா” என்ற சுஜி மாடிக்கு அழைத்து செல்ல, “அண்ணி இந்த புடவையை கட்டுங்க” என்று தான் எடுத்து வந்த சீர்வரிசை தட்டை கையோடு கொடுத்தனுப்பினாள்.
சென்னைக்கு சென்ற போதே சீர் செய்வதற்கு சுஜி தளிரை அவளுக்கு பிடித்த புடவையை தேர்ந்தெடுக்க சொல்ல தென்றலும் நிவியும் அங்கிருந்த மயில்வர்ண புடவையை காண்பித்து அது தளிர்க்கு அட்டகாசமாக பொருந்தும் என்றதில் அதையே எடுத்துக்கொண்டாள்.
அதேசமயம் நிவியும் அண்ணிக்கு பரிசளிக்க விரும்பி அவளுக்கு பிடித்த பட்டை தேர்ந்தெடுக்க சொல்ல அடுத்த பத்தாவது நிமிடம் தளிர் கையில் இருந்த புடவையை கண்டு “என்ன காம்பினேஷன் தளிர் இது..?” என்று சுஜி வியந்தாள். பின்னே பட்டுபுடவையாக இருந்தாலும் இதுபோன்ற அடர் நிறங்களை பெரும்பாலும் அவளே தவிர்த்துவிடுவாள்… லேட்டஸ்ட் ட்ரென்ட்க்கு ஏற்ப புடவை எடுப்பவளுக்கு அவள் தேர்வு ஆச்சர்யம் கொடுக்காமல் வேறென்ன செய்யும்..?
‘அண்ணி உதயாதித்தன்’னா சூரியன் தானே..?’ என்று தளிர் கேட்க தென்றலும் நிவியும் ஆச்சர்யத்தில் விரிந்த விழிகளோடு, “அக்கா, அண்ணி அண்ணாவையும் அண்ணியையும் டினோட் பண்ற காம்பினேஷன்ல புடவை எடுத்திருக்காங்க’ என்று பார்டரின் நிறத்தை சுட்டி காட்ட சுஜியால் அவள் ரசனையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. தளிர் இதை உதய்க்கு சர்ப்ரைஸாக வைக்க நினைத்திருக்க நிவியோ சந்தோஷத்தில் அண்ணனுக்கு அழைத்து சொல்லிவிட்டாள்.
அறைக்கதவை திறந்து தளிரிடம் துண்டை கொடுத்த சுஜியிடம், “எதுக்கு அண்ணி குளிச்சுட்டு டைம் ஆகிடாதா..? நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு சாரீ மாத்திக்கிறேனே”
“அதெல்லாம் ஒன்னும் நேரமாகிடலை தளிர்.. ராகுகாலம் முடிஞ்சு தான் கிளம்ப முடியும் எப்படியும் இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கு ஏற்கனவே நான் சொல்லியும் கேட்காம உதய்க்கு பிடிச்ச ஸ்வீட்டாவது செய்யறேன்னு கிட்சன்ல நின்னுட்ட.. வீட்டுக்கு போய் நீ குளிச்சு ரெடியாக நேரமாகிடும் அதனால இங்கயே தலைக்கு ஊத்திக்கோ நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் அதுக்கப்புறம் கிளம்பினோம்னா பியூட்டிஷியன் ரெடி பண்ண நேரம் சரியா இருக்கும்” என்றதும் “சரிங்கண்ணி” என்றவள் குளிக்க சென்றாள்.
*********************************
பிரச்சனை என்று செல்வம் அழைத்திருக்க அதை தொட்டு மேலும் சில அழைப்புகளை பேசி முடித்து உள்ளே வந்த உதய்யின் கண்கள் தளிரை தேட அதை கண்டுகொண்ட ராகவன், “என்ன மச்சான் யாரையோ தீவிரமா தேடுற மாதிரி தெரியுது…” என்று தோளில் கை போட்டு சிரிப்போடு கேட்கவும்,
“ஏன் உனக்கு தெரியாதா..? எல்லாம் என் நேரம்டா, சரி சொல்லு தளிர் எங்க..?” என்று கேட்டதும் நடந்ததை சொன்னவன் “சரி நீ சாப்பிட வா” என்றான்.
“சாப்பாடா..?” என்ற உதய்யின் கண்கள் தூரத்தில் இருந்தே டைனிங் ஹாலை ஒருமுறை வலம்வர பெரியவர்கள் அனைவரும் உணவில் கவனமாக இருந்தனர். “மச்சான் நல்லா கேட்டுக்கோ இன்னும் அரை மணி நேரத்துக்கு யாரும் மாடிக்கு வரக்கூடாது அது உன் பொறுப்பு! முக்கியமா வைஷுவும் கௌஷிக்கும்” என்ற உதய் சீட்டி அடித்துக்கொண்டே மாடியேற அவன் கையை பிடித்து நிறுத்திய ராகவன் நண்பனின் மனம் அறிந்து,
“டேய் நில்லுடா இவ்ளோ பேர் இருக்காங்க உன் இஷ்டத்துக்கு கிளம்பிட்ட..? யாராவது பார்த்துட்டா என்னாகிறது..” என்ற ராகவ் அவனை கட்டுபடுத்த பார்க்க ‘பெயரை பார்த்ததுமே அத்தனை பேர் முன்னிலையில் அவளை அள்ளி எடுத்து முத்தாட துடித்த உதய் தன் கட்டுக்குள்ளேயே இல்லாதிருக்கும் நிலையில் இப்போது நண்பனுக்கு மட்டும் கட்டுப்பட்டு விடுவானா என்ன..?’ ராகவின் கையை உதறிவிட்டு மாடியேறிவிட்டான்.
“என் பொண்டாட்டியை பார்க்கதானேடா போறேன் யார் பார்த்தா என்ன..? எங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கோ..”
“மச்சான் யாராவது உன்னை எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்ல..?” என்று மாடியை பார்த்தவண்ணம் ராகவ் புலம்பி கொண்டிருக்க அவன் விழிவட்டத்தில் மாடியேறிய வைஷுவும் கௌஷிக்கும் விழ பதறி சென்று அவர்களை பிடித்துகொண்டான்.
“எங்கடா போறீங்க..?”
“விடுங்க சித்தா இந்த வைஷுக்கா ஓவரா பண்றா நான் மாமிகிட்ட அவளுக்கு இம்போசிஷன் கொடுக்க சொல்லணும் அப்போதான் என் வழிக்கு வரமாட்டா..” என்று கௌஷிக்கும் “விடுங்க சித்தா அவன் என்னை டூ டைம்ஸ் அடிச்சான் நான் மேம் கிட்ட சொல்லி அவனை ஃபோர் டைம்ஸ் அடிக்க வைக்கணும்” என்று இருவரும் திமிர,
“டேய் கொஞ்சம் அமைதியா இருங்கடா”
“முடியாது சித்தா இவனாலதான் மேம் எங்க வீட்டுக்கு வராம போயிருப்பாங்க.. அவனுக்கு அடி வாங்கி கொடுக்கல என் பேர் வைஷ்ணவி சரவணன் இல்லை” என்று வைஷு பல்லை கடித்தாள்.
“அய்யோ நீங்க இப்போ அங்க போககூடாது… தயவுசெய்து என்கூட வாங்க உங்க பஞ்சாயத்தை நான் தீர்த்து வைக்கிறேன் .. “
“ஏன் சித்தா..?” என்றனர் இருவரும் கோரசாக..
“சொல்றேன்டா ஆனா எந்த கேள்வியும் கேட்காம அமைதியா என்கூட வாங்க.. அப்போதான் ஐஸ்க்ரீம் வாங்கி தருவேன்” என்று இருவரையும் வெளியில் அழைத்து சென்றவன் மறக்காமல் நிவியை அழைத்து உதய் மாடிக்கு சென்றிருப்பதை சொல்ல பதறிபோனவளின் பார்வை ஹாலில் வந்தமர்ந்த ஜெகா, ராஜியை சென்றடைந்தது.
நல்லவேளை சுஜியின் மாமியாரிடம் பவ்யமாக பேசிக்கொண்டு இருந்தவர்களின் கவனம் இங்கு இல்லை. “இத்தனை பேர் இருக்கப்போ ஏங்க இப்படி.. நீங்களாவது சொல்லலாமே ஏற்கனவே.. ப்ச்” என்று நிவி பரிதவிக்க..,
“ஏன்டி உங்கண்ணன் நான் எதை சொல்லி கேட்டிருக்கான்னு நீ என்னை கேள்வி கேட்கிற..? வாங்கிட்டு போன வளையலை தளிர் போட்டுக்காததுல அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு அதுக்கு முன்னிருந்தே எங்க தளிருக்கு இவனை பிடிக்காம உங்கப்பாக்காக சம்மதிச்சதோ! லைஃப் எப்படி இருக்குமோன்னு புலம்பிட்டு இருந்தவன் தளிர் கை முழுக்க பேரை பார்த்ததுல துள்ளி குதிக்கலையே தவிர அவ்ளோ சந்தோஷம்டி! நிவி அவன் முகத்தை நீ சரியா பார்க்கலை ஆனா நான் பார்த்தேன்..” என்றவனின் முகத்தில் நண்பன் கொண்ட மகிழ்ச்சியை விஞ்சிய மலர்ச்சி.
“நிஜமா தளிர் எழுதியிருந்ததை பார்த்து நமக்கே அவ்ளோ சந்தோஷம் அவனுக்கு இருக்காதா..? இப்போ தளிர் தனியா போயிருக்குன்னு சொல்லவும் நான் சொல்றதை கேட்காம கிளம்பிட்டான்டி…”
“அதெல்லாம் சரிங்க.., அண்ணாவை யாரும் பார்த்துடலையே..”
“இல்ல நிவி.. சரி இவங்களை நான் பார்த்துக்கறேன் நீ யாரையும் அங்க போகவிடாத.. முடிஞ்சா கொஞ்ச நேரம் கழிச்சு தளிருக்கு ஃபோன் பண்ணி கிளம்ப நேரமாகிடுச்சுன்னு சொல்லி கீழ வர சொல்லிடு..” என்றவன் தன்னிடம் இருந்து நழுவிய கௌஷிக்கை பிடித்து தோளில் போட்டுகொண்டு வைஷுவோடு வெளியேறினான்.
***************************
இளந்தளிரின் மருதாணியிட்ட தளிர் விரல்களில் அழுத்தமாக தன் அதரங்களை புதைத்த உதய் “யூ க்நொவ் லிட்ரலி ஐ’ம் ஸஃப்பகேட்டிங்… இங்க பிடிச்சுக்கோ அப்போதான் என்னால மூச்சு விடமுடியும்” என்று அவள் கைகளை தன் கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டவன் மீண்டும் சுகமாக தன் அணைப்பை இறுகிக்கொண்டே செல்ல அதன் விளைவாய் இறுதியில் தளிருக்கு தான் மூச்சு முட்டிபோனது.
இக்காட்சியை கீழே தோட்டத்தில் இருந்து பார்த்திருந்த ராஜி முகச்சுளிப்போடு தங்கைக்கு அழைத்திட, “சொல்லுக்கா..” என்று பேத்தி குறித்த நகைச்சுவையில் எழுந்த சிரிப்போடு கேட்டார் ஜெகா.
“ஏய் ஜெகா இங்க என்ன கூத்து நடக்குதுன்னு தெரியாம நீ சிரிச்சுட்டு இருக்க..? ச்சை நல்ல குடும்பத்து பொண்ணு எவளாவது இப்படி செய்வாளா..? நான்தான் சொன்னேனே இவ சரியான வித்தைக்காரின்னு! முதல்ல இங்க வந்து பாருடி இல்ல உன் குடும்பமானம் சிரிப்பா சிரிச்சு போகும்” என்றவர் ஜெகா வரும்வரை கூட காத்திருக்காமல் இருவரும் கட்டிபிடித்து கொண்டிருக்கும் காட்சியை புகைப்படம் எடுத்தார்.
“ஏன்க்கா என்னாச்சு எங்க இருக்க நீ..?” என்ற ஜெகா அழைப்பை துண்டித்து வெளியில் சென்றார்.
‘ச்சை ஃபோன் பண்ணி வரவச்சதே ஆதியை வளைச்சு போடன்னு இப்பதானே தெரியுது.. நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு அப்படி என்ன அவசரமோ..?’ என்றவரின் விழிகளில் தளிர் உதய்யின் சட்டையை பிடித்திழுத்து முத்தமிடுவது விழவும் அதிர்ந்து போனவர், “ச்சீச்சீய் கருமம்.. இப்படியுமா ஒரு பொம்பளை வெட்கம் கெட்டு அலைவா..?” என்று தலையிலடித்து கொண்டு தங்கையை தேடி சென்றார்.