“அம்லு! என்னோட பேனாவை எடுக்காதனு சொல்லி இருக்கேன்ல, எங்க வச்ச..?”என கத்தினான் சர்வா.
“எல்லாரும் அவளையே கூப்புட்டா என்ன தான் செய்வா”என பேப்பர் படித்துக் கொண்டு இருந்த கஜி அதட்டினார்.
“அதானே! நல்லா கேளுங்க, காலையில் எழுந்ததில் இருந்து சுத்திக் கிட்டே இருக்காங்க, எனக்கும் கால் வலி நிக்க முடியல, சிமிம்மா வேலையை விட்டுப் போயிட்டாங்க”என புலம்பினார் திலகா.
“அம்லு!”
“ம்மா!”
“ம்மா!”என மறுபடியும் ஆரம்பித்தனர்.
“யுகதி இந்தா ஐடி கார்டு, யுவதி டைனிங் டேபிள் போ டிபன் வரும்”என சர்வா அறைக்குள் நுழைந்த யுவி, “அப்பா! உங்க பென்னை நான் தான் எடுத்தேன், டேக் இட்”என கூறிவிட்டு அடுப்படியை நோக்கி சென்றான்.
“என்ன சத்தத்தையே காணும் யுவி, ஆப் பண்ணிட்டீயா..?”என்றாள் கூலாக அம்லு.
“ம்ம்ம்! எஸ், எஸ், சரி எத்தனை மணிக்கு கிளம்பலாம்மா..?”
“இதோ நான் ரெடிடா, சாப்புட்டு போக வேண்டியது தான்”என டிபனை டேபிளில் வைத்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தாள் புடவையை மாற்றுவதற்கு.
அவள் நுழைந்தது தெரிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு திரும்பிய சர்வா, புடவை மாற்றிய அம்லுவை நோக்கினான்.
“என் பேனாவை எடுத்தது யாருனு எனக்கு தெரியாதா, அவன் என்ன உனக்கு எஸ் கார்டா மேடம்”என்றான் கார் சாவியை எடுத்தவாறு.
“போங்க யுவிப்பா, சும்மா கத்திக்கிட்டே இருந்தா அதான் அவனே வந்து இதோ இங்க இருந்த பேனாவை எடுத்து கொடுத்து இருக்கான்”
“ம்ம்ம்! உன்னைய கூப்புட்டா அவன் வரானே, அப்ப இதை அவனுக்கே கொடுக்குறேன் இனி”என அம்லு கன்னத்தில் முத்தம் வைத்து முறைத்தான்.
திரும்பியவள்”நம்ம யுவி தானே முத்தம் கொடுத்தா தப்பு இல்லை யுவிப்பா”
“அம்லு! அது சின்னப் புள்ளைல இப்ப முத்தம் கொடுத்தா என்னைய பைத்தியமானு பாப்பான்”
“அப்ப எனக்கு மட்டும் தரீங்க தினமும்”
“ஏய்! நீ என் பொண்டாட்டி, சாவுற வரை கொடுக்கலாம், எப்ப தான் உனக்கு தெளியுமோ, சரி வா போகலாம்”
“நான் இன்னைக்கு யுவி கூட வரேன் காலேஜிக்கு”
“ஏன்..?”
“அவனுக்கு ஏதோ டிரஸ் எடுக்கனுமாம்”
“இப்ப என்ன அதுவும் காலையில் காலேஜ் போகும் போது”
“அவனுக்கு இது ஃபைனல் இயர் யுவிப்பா, காலேஜ் ஃபேர்வெல் டே வருதாம்”
“சரி அம்லு, ஈவ்னிங் போனா என்ன..?”
“ஈவ்னிங் தான் பூஜை இருக்கே சர்வா”
“ம்ம்ம்! ஓகே நாளைக்கு போறது”
“யுவிப்பா! அவனுக்கு இன்னைக்கு எடுத்து ஸ்டிச் பண்ண கொடுக்கனுமாம், உங்களுக்கு ஏன் இத்தனை கேள்விகள் தோணுது.”
“ரெண்டுப் பேரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றீங்கனு தோணுது”
“ம்ம்ம்! இப்ப ஒன்னும் மோசம் போகல, நீ போய் நீட் எக்சாம் எழுதி மெடிக்கல் ஜாயின்ட் பண்ணு டெய்லி சைட் அடிக்கலாம்”
“ஆமாடி! அவரு இப்ப ஃபைனல் இயர் நான் அங்க போறதுக்குள்ள வெளியில் போயிடுவார் அதுக்கு நிரஞ்சி மேடமை இப்பிடி ட்ராப் பண்ண வரும் போது பாத்து சைட் அடிச்சுகலாம்.”
இப்படி பேசி சிரித்தனர்.
“ஓகே! பை அம்லு” என வேகமாக பைக்கை சுற்றி திருப்பிக் கொண்டு பறந்தான் யுவி.
சர்வா காரில் இருந்து இறங்கி அறையை நோக்கி நடந்தான்.
அம்லுவும் சர்வா அறைக்குள் நுழைந்து தன் கைப்பையை வைத்தாள்.
“அது என்ன அப்பப்ப அம்லுனு கூப்புடுறான்”
“அதுவா யுவிப்பா, இங்க உள்ள பொண்ணுங்க எல்லாம் அவன் என்னைய அம்மானு சொன்னா அவனுக்கு வயசு கூட மாதிரி பாக்குறாங்களாம், ஏனா நான் யங்கா இருக்கேன்ல, சோ யாராவது பொண்ணுங்க கிராஸ் பண்ணா அம்லுனு சொல்வான்”என்றாள் பந்தவாக.
“அப்ப எனக்கு வயசு ஆகிட்டுனு சொல்றீயா..?”
“இல்லையா பின்ன, பாருங்க தலையில் அங்கங்க சால்ட் கலர் தெரியுது”என சிரித்தாள்.
“ஆனாலும் அம்லு அவனும் நீயும் செய்றது முடியல, சாப்புட கூட்டணி, ப்ராடு வேலை பண்ண கூட்டணி, இதுல சார் டாக்டர் வேற படிக்குறாரு, இவன் எப்பிடி பேஷண்டுக்கு ட்ரீட்மென்ட் பண்ணப் போறான்”
“ஹலோ! என்ன.? என் புள்ளை பெரிய டாக்டரா வரும் போது தெரியும், நீங்க போய் உங்க வேலையை பாருங்க, வந்துட்டாரு, மொதல உங்களுக்கு தான் அவன் செக் அப் பண்ண ஆரம்பிக்கனும், அப்பப்ப பிபி ஏறி இறங்குது”என்றாள் முறைத்து.
அம்லு பேச பேச பதில் இல்லாமல் அமர்ந்து லேப்டாப்பை பார்த்தவன், அதை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பின்னாலே சென்றவளுக்கு அவன் இன்னும் கோபத்தோடு இருப்பது புரிந்தது.
இருவரும் காரில் அமர, சர்வா காரை வேகமாக ஓட்டினான்.
“சர்வா!”
“ம்ம்ம்!”
“கோபமா..?”
“இல்லைனு பொய் சொல்லட்டுமா..”
“யுவி ஒரு பொண்ணை லவ் பண்றான்” என்றாள் சட்டென்று.
“வாட்..?”என காரை சடர்ன் பிரேக் போட்டான் சர்வா.
“ஆமா! அந்த பொண்ணை பார்க்க தான் போனோம்”
“என்ன அம்லு விளையாடுறீயா..? நீயும், அவனும் இது என்ன சாக்லேட், ஐஸ்க்ரீம் சாப்புடுறது மாதிரி நினைச்சீங்களா..?”
“இல்ல யுவிப்பா”
“அப்புறம், யுக்தா இருக்காளே தெரியாதா உனக்கு..?”
“அவனுக்கு யுக்தா மேல் காதல் இல்லைனு சொல்றான், அவனை கட்டாயப்படுத்த முடியுமா..?”
“அதுக்காக, சின்ன வயசில் இருந்து பேசி வச்சது தானே அம்லு”
“சர்வா! யுவி மனசுக்கு புடிச்சதை தான் நான் செய்வேன்”என்றாள் ஜிமிக்கி டான்ஸ் ஆட.
“அப்ப யோகா அக்கா, மாமா, யுக்தாக்கு என்ன பதில்..?”
“பேசுவோம் சர்வா, அவங்க மனசுல என்ன இருக்குனு, யுவி, யுக்தா கல்யாணம் என்பது பாட்டி சொன்னது தானே, நம்ம யாரும் பேசலையே”
“என்ன உளரிட்டு இருக்க அம்லு, சரி! பொண்ணு யாரு..?”
“அவன் காலேஜில் படிக்குற பொண்ணு தான், ஜூனியர் அவனுக்கு”
“அவங்க அப்பா, அம்மா..? எந்த ஊரு.?”
“அது வந்து, அந்த பொண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை சர்வா, உறவுக்கார பாட்டி தான் வளர்க்குறாங்க, இப்ப ஹாஸ்டலில் தங்கி படிக்குறா, காலையில ஹாஸ்டலில் தான் போய் பார்த்தோம்”
“சரி! இன்னைக்கே பார்க்க வேண்டிய அவசியம் என்ன அம்லு”
“யுவிக்கு அந்த பொண்ணை இன்னைக்கு நம்ம வீட்டுப் பூஜைக்கு இன்வெயிட் பண்ண ஆசை, அந்த பொண்ணும் அப்பா, அம்மா இறந்த பின் எந்த ஃபங்சனுக்கும் போனது இல்லையாம், அதான் ஈவ்னிங் நம்ம மொத்த பேமிலியும் வருவாங்கள, எல்லாருக்குமே அறிமுகப் படுத்தலாமுனு..”
“உனக்கு எப்ப தெரியும்..?”
“எனக்குமே விடியற்காலையில் தான் தெரியும் சர்வா, முதலில் என்னைய பார்க்க சொன்னான், பிறகு”என நிறுத்தினாள்.
“ம்ம்ம்! உன் காதில் போட்டால் எனக்கு வந்துடுமுனு கரெக்டா ப்ரோஸீட் பண்றான் பய”
“பாவம் சர்வா, அந்த பொண்ணும் நல்ல குணமா தான் தெரியுறா”
“என்னனு விசாரிக்காம எல்லாம் முடிவுப் பண்ண முடியாது அம்லு, ஈவ்னிங் வரட்டும் பாப்போம்”
“அப்ப ஈவ்னிங் வரச்சொல்லவா..?”
“ஏன்..? என் பர்மிசனுக்காக வெயிட் பண்றீங்களா அம்மாவும், பையனும்”
“ம்ம்ம்!”என சிரித்தாள்.
“புரியல அம்லு!”
“அந்த பொண்ணை சும்மா தான் பாத்துட்டு வந்தேன், பூஜைக்கு இன்வெயிட் பண்ணல, உங்க கிட்ட சொல்லாம எப்பிடி கூப்புடுவேன் யுவிப்பா, எனக்குமே யுவி லவ் பண்ற பொண்ணை பார்க்க ஆர்வம் அதான் போனேன், பாத்து பேசிட்டு ஃபோன் பண்றேன்மானு வந்தாச்சு, யுவியிடம் அப்பா கிட்ட பர்மிசன் வாங்கி அழைக்கலாமுனு சொல்லிட்டேன் யுவிப்பா”
“அவன் என்ன சொன்னான்”
“சரினு சொன்னான்”
“அந்த பொண்ணை வேணானு சொன்னால்”
“நீங்க சொல்ல மாட்டீங்க ஒரு தடவை பாருங்க, எனக்கு புடிச்சு இருக்கு சர்வா”
“அம்லு! நீயுமே காலையில் தானே பாத்து இருக்க, அதுக்குள்ள எப்பிடி புடிக்கும்.?”
“யுவி விரும்புற பொண்ணு அது எப்பிடி புடிக்காம போகும், என் பையன் சரியா தான் தேர்ந்தெடுப்பான், படிப்பைக் கூட அவனுக்கு புடிச்ச மாதிரி தான் செலக்ட் பண்ணான், அதுல அவன் தோற்கவும் இல்லை, நீட் எழுதி மெரிட்டில் சீட் வாங்கினான், சோ அவனோட சாய்ஸ் சரியா இருக்கும், நமக்கும் சந்தோஷத்தை தரும் யுவிப்பா”
சர்வா நிதானமாக காரை ஸ்டார்ட் செய்தான்.
“ம்ம்ம்! அந்த பொண்ணு பேரு என்ன..?”
“நிரஞ்சனி”
“வாட்..?”
“ம்ம்ம்!”என சிரித்தாள்.
“ஓ! யுவி அட்மியர் ஆனது இந்த பெயரிலா..?”
“அவன், பேரை மட்டும் தான் முதலில், முதல் வருசம் பிள்ளைகள் வரும் போது கேள்விப்பட்டனாம், பெயருக்காக அந்த பொண்ணை யாருனு பாக்க போனப்ப புடிச்ச ஃபீல் வந்ததாம், அப்புறம் பாக்கவே இல்லையாம், காலேஜில் அந்த பொண்ணு அப்பா, அம்மா ஆக்ஸிடென்டில் இறந்தப்போ எல்லாருமே துக்கம் விசாரிக்கப் போன போது மறுபடியும் பாத்தானாம், முதலில் துரு துருனு இருந்த பொண்ணு அப்புறம் டோட்டலா மாறிட்டாளாம், அவனுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு வந்து பழக ஆரம்பித்து இருக்கான், அந்த பொண்ணுக்கும் யுவியை புடிச்சு போச்சு போல, நம்ம கிட்ட சொல்ல நினைச்சு நேரம் பார்க்க, இந்த பூஜை வரவே எல்லாரு முன்னாடியும் அறிமுகப் படுத்த ஆசைப்படுறான் யுவிப்பா”
“ஆனா அம்லு, என் கிட்ட எதுவுமே சொல்லலையே யுவி, நான் யாரோ மாதிரி உன் கிட்ட மட்டும் சொல்லி இருக்கான்”
“நீங்க யுக்தாவை மனசுல நினைச்சு பேசுவீங்கனு அவனுக்கு பயம் யுவிப்பா, திட்டுவீங்கனு என் கிட்ட சொன்னான், அதுல தப்பில்லையே”
“ம்ம்ம்!”
“ப்ளீஸ் யுவிப்பா, நீங்க நிரஞ்சனியை ஒரு தடவைப் பாருங்க”
“ம்ம்ம்! ஆனா யோகா அக்கா என்ன நினைப்பாங்கனு தெரியல”
“பேசுவோம், அவங்க மனசுக்கு புடிச்சா தானே கல்யாணம், நம்ம எல்லாம் அனுபவிச்சது போதும் சர்வா”
“ம்ம்ம்!”
****
மாலை வரலெட்சுமிப் பூஜைக்கு தேவையான அனைத்தையும் அம்லு ஏற்பாடு செய்தாள் ஹேமா துணையோடு.
அனைவரையும் அழைத்திருந்தார்கள். பிருந்தா, பரத், அஸ்வின், யோகா, திரவி, ரேவதி குடும்பங்கள் பிள்ளைகளோடு.
ஸ்ரீ, ஹாசன், சந்தி அவர்கள் குடும்பமும் பிள்ளைகளோடு வந்திருந்தனர்.
மீனாட்சி, திலகா, கஜி, பிரபா, ராகு எல்லாம் வயது அதிகமாக பார்வையாளராக அமர்ந்து தேவையானதை சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்தனர்.
சர்வா- அம்லு பெரிய வீடு ஒன்றை கட்டி அதில் தான் தனியாக குடியிருந்தனர்.
அன்புவும் தனியாக ஒரு வீடுக் கட்டிக் கொண்டான். அன்பு- ஹேமாவிற்கு ஒரு மகன், மகள்…
ராகு, பிரபா பழைய வீட்டில் இருந்தனர், தீபாவளி, பொங்கலுக்கு பழைய வீட்டில் தான் சர்வா, அன்பு குடும்பம் சங்கமமாகும்.
கஜி, திலகா, பாட்டி சர்வாவுடன் தங்கினர்.
அவர்களுக்கு எல்லார் வீடும் ஒன்று தான், எந்த வீட்டிற்குப் போனாலும் தாய் வீடாக சர்வா வீட்டிற்கு இரவுப் பொழுது வந்துவிடுவர் கஜி, திலகா.
யோகா- அஸ்வினும் தனியாக வீடு அமைத்து, பிள்ளைகளோடு வசித்தனர்.
யுக்தா சர்வாவின் காலேஜில் படித்து முடித்து, ஹையர் ஸ்டெடிஸ் யூ எஸ் சென்று விட்டாள்.
அழகாக பயணித்தது அனைவரின் வாழ்க்கையும்..
பூஜை நேரம் நெருங்கியது.
அம்லு, சந்தன நிற சாப்ட் சில்க் புடவையில் மின்னினாள். அதே கலரில் சர்வா, யுவிக்கு பட்டுக் கரைப் போட்ட வேஷ்டி, சட்டை எடுத்திருந்தாள் அணிவதற்கு.
யுவதி, யுகதியும் அதே நிறத்தில் பட்டுப் பாவாடை, சட்டை அணிந்திருந்தனர்.
வரலெட்சுமிப் பூஜையை வருசா வருசம் அம்லு சிறப்பாக கொண்டாடுவாள்.
சில வருடங்கள் முன்பு சர்வாவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகி உயிருக்கு போராட திலகா சொல்லி, அம்லு வரலெட்சுமி பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்தாள், சர்வாவிற்கு சுயநினைவு வந்தது, அந்த நம்பிக்கை வலுப்பெற வருசா வருசம் மிகச்சிறப்பாக கடைப்பிடிக்க தொடங்கினாள்.
லெட்சுமி அலங்காரத்தை முடித்து, எதிரில் பொங்கல், வடை, இனிப்பை வைத்து அனைத்தையும் தயார் செய்தாள் அம்லு.
“அம்லு! ஆரம்பிக்கலாமா..?”எனக் கேட்டாள் ஹேமா.
“ம்ம்ம்! ஒரு நிமிஷம் ஹேமா, ஒருத்தர் மட்டும் வரட்டும் வெயிட் பண்ணலாம்”
சர்வா, யுவி மட்டுமே புரிந்து காத்திருக்க, மற்றவர்கள் புரியாமல் காத்திருந்தனர்.
சர்வா பொறுமையை இழந்து மெல்ல”யுவி! நேரமாகுது, என்ன ஆச்சு..? எப்ப வருவாங்க.?”
இருவருமே புதிதாக வரப்போற நிரஞ்சனியை பற்றி பேசிக்கொள்ளவில்லை, அம்லு மூலம் நடந்த பரிமாற்றம் மட்டுமே.
அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது, சில வயதிற்கு பிறகு யுவி அம்லுவிடம் தான் அனைத்தையும் கூற ஆரம்பித்தான், அவள் மூலம் சர்வாவை அடையும். அது ஏனோ மாறியது மட்டுமல்லாமல் பழகியது.
ஆனால் காதல், கல்யாணம் கூடவா என்றால், ஆம்! சர்வாவிற்கும் சந்தோஷமே யுவி, அம்லு உறவை காணும் போது, அதனால் வேண்டுமென்றே அம்லுவை சீண்டுவான் ஆனால் அம்லுக்கு தெரிந்தாலே போதுமென உள்மனது சொல்லிவிடும்.
அதற்கு மேல் காத்திருக்க வைக்காமல் ஆட்டோவில் வந்து இறங்கினாள் ஜூனியர் நிரஞ்சனி.
புடவை புதிதாக கட்டியிருப்பாள் போல, மெல்ல இழுத்துப் பிடித்து நடந்து வந்தாள்.
அவளை யார்…? என அனைவருமே திரும்பிப் பார்த்தனர்.
அவள் பெயர் நிரஞ்சனி என சொல்லும் முன்பே அம்லுவை பிரதிபலித்தாள்.
சர்வா சற்று ஆச்சரியமாகப் பார்த்தான்.
அம்லு முகம் இல்லை என்றாலும் அவளை காணும் போது அம்லுவை நினைவுப் படுத்தும், அம்லுவை அறிந்தவர்களுக்கு.
அதே கொழு கொழுவென கன்னங்கள், வெகுளியான முகம், சிரிப்பு என காட்சியளித்தாள்.
“யுவி! யார் இந்த பொண்ணு..?”எனக் கேட்டான் அஸ்வின்.
“மாமா! என் காலேஜ் ஜூனியர்” என்றதும் அனைவரையும் பார்த்து தலை ஆட்டினாள் புது நிரஞ்சனி.
“ஓ! உன் ப்ரண்டா..? ஆனா இந்த அஞ்சு வருசத்துல நீ இந்த பொண்ணை ப்ரண்டுனு கூட்டிட்டு வந்ததே இல்லையே..?”எனக் கேட்டான் பரத்.
“அதான் ஜுனியருனு சொல்றான்ல, இப்ப வந்து ஜாயின்ட் பண்ணி இருப்பாள்”என்றான் திரவி.
“அது சரி உன் மத்த ப்ரண்ட்ஸை கூப்புடலையாட..?”எனக் கேட்டாள் யோகா.
ஆளாளுக்கு பேச, அம்லு”வாம்மா!”என அவளின் கையைப் பற்றி அழைத்து சென்றாள் பூஜை நடைப்பெறும் இடத்திற்கு.
“அம்லு! உன்ன மாதிரியே இருக்கா இந்த பொண்ணு, அம்சமா”என்றார் திலகா.
“ஆமா பெரியம்மா! உன் பெரு என்னம்மா..?”எனக் கேட்டாள் பிருந்தா.
“நிரஞ்சனி!”என்றாள் முதன் முறையாக வாய் திறந்து.
அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர்.
“வாவ்! எங்க அம்மா பேரு”என யுவதி, யுகதி சுற்றிக் கொள்ள, பிருந்தா மகள் “அது சரி, எப்பிடி அத்தை புடவை மாதிரியே கட்டி இருக்கீங்க..?”எனக் கேட்டாள்.
அப்போது தான் கவனம் புடவையில் விழுந்தது.
அவளோ யுவியைப் பார்த்தாள், பின்ன அம்லு புடவை மாதிரி தேடிப் பிடித்து எடுத்துக் கொடுத்து கட்டிட்டு வரச்சொன்ன காதலன் அல்லவா!
சர்வா குழப்பத்தோடு நின்றான், மகனின் தேர்வில் சந்தோஷம் தான், ஆனால் வீட்டில் எப்பிடி சொல்வது என்ற தயக்கம் இருந்தது.
பூஜை இனிதாக முடிந்தது..
அங்கிருந்த சுமங்கலிகளான திலகா, யோகா, பிருந்தா, ஹேமா, சந்தி(இப்போது ஹாசனின் மனைவி, இருவருமே விரும்பியது தெரியவில்லை காலேஜ் முடித்து பிரிந்த போது தான் உணர்ந்தார்கள், ஒரு கட்டத்தில் புரிந்து கல்யாணம் முடிந்தது இருவருக்கும்) ஸ்ரீயின் மனைவியான சிந்தியா(சந்தியின் ரெட்டை சகோதரி)என அனைவருக்கும் புதுப் புடவை வைத்து தாம்பூலம் கொடுத்தாள் அம்லு.
யார் சொல்வது, எப்பிடி சொல்வது என யோசனையில் இருந்தனர் சர்வா, யுவி.
யுவி கண்களால் அருகில் நின்ற சர்வாவை கெஞ்சினான்.
சர்வா மெதுவாக”என் கிட்டயா சொன்ன லவ் பண்றேனு, உன் அம்மா கிட்ட தானே சொன்ன, அவளே பாத்துப்பா வெயிட் பண்ணு”என்றான்.
“அப்பா! யார் கிட்ட சொன்னா என்ன…? யூ போத் நாட் செப்ரேட், அம்மா எனக்கு கன்வினியன்ட் சோ ஒன்லி டோல்டு, ப்ளீஸ்பா”என்றான் மெல்ல.
“டேய்! அம்மாவும், பையனும் இந்த ப்ளீஸை மட்டும் விடவே மாட்டீங்க”என முறைத்தாலும், உள்ளுக்குள் அம்லு, தானும் ஒரே இடம் என்பதை மகன் கூறியதால் சந்தோஷம் வந்தது.
“சர்வா! நாங்களும் உன் கிட்ட, அம்லுவிடம் ஒரு விஷயம் பேச நினைச்சுட்டு இருந்தோம், பெட்டர் திஸ் இஸ் ரைட் டைம் ஃபார் டெல்.”
“என்ன மாமா..?”
அஸ்வின் யோகாவைப் பார்த்து விட்டு, “யுக்தாக்கு யூ எஸ்ஸில் ஒரு பையனை புடிச்சு இருக்குனு பிடிவாதமா சொல்றா, அதான்..”என இழுத்தான்.
சர்வா, அம்லு இருவருக்குமே மனம் தெளிந்தது.
“அண்ணா! நாங்களும் உங்களை மாதிரி ஒரு நிலையில் தான் நிக்குறோம், யுவியும் இந்த பொண்ணை விரும்புவதாக சொல்றான்”என்றாள் அம்லு சிறிதும் தாமதப்படுத்தாமல்.
அப்போது தான் புரிந்தது நிரஞ்சனி வந்ததன் காரணம்.
திரவி”ஆல்ரைட்! அவங்க மனசு யாரை விரும்புதோ அவங்களை கல்யாணம் பண்ணிக்கட்டும், இதுல நீங்க எல்லாம் ஏன் யோசிச்சு வருத்தப்படுறீங்க, என் பொண்ணு வெண்பா வந்து சொன்னா இவனை தான் கல்யாணம் பண்ணுவேனு, நல்லதோ கெட்டதோ உன் பொறுப்புனு கல்யாணத்தை முடிச்சுட்டேன், மாப்பிள்ளையும் நல்லவர் தான் ஏதோ நல்லதா போச்சு. சோ! இந்த காலத்தில் பசங்க நம்மளை விட பெஸ்டா செலக்ட் பண்ணுவாங்கனு நம்புவோம்” என்றான்.
“ம்ம்ம்! முதலில் நானும் யோசித்தேன் தான், ஆனா யுவிக்கு அட்ராக்ஸன் இந்த பொண்ணு பெயரில் ஆரம்பித்திருக்கு, ஆமா தானேடா..?”எனக் கேட்டான் சர்வா.
“ம்ம்ம்!”என தலையை ஆட்டிச் சிரித்தான்.
நிரஞ்சனிக்கு புரியல, அவளுக்கு யுவி அம்மா அம்லு என்றே தெரியும்.
“யுவி! என் பேருல என்ன இருக்கு..?”
“என் பேரும் நிரஞ்சனி தான் மை ஜூனியர் நிரஞ்சனி பொண்ணு” என்றாள் அம்லு.
“ம்ம்ம்! இன்னைக்கு அம்முவை பார்த்தப் போது நீ என் வாழ்கையில் வந்த நாள் தான் நினைவு வருது அம்லு”என்று அம்லுவை தன் அணைப்பில் கொண்டு வந்தான்.
“எனக்குமே சர்வா!”என அவன் மார்பில் ஒன்றினாள்.
இருவருமே இரவின் அமைதியான தனிமையை அனுபவித்தனர்.
“யுவதி, யுகதிக்கும் இதே மாதிரி வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தா நம்ம கடமை முடிஞ்சுடும்”
“ம்ம்ம்! அவங்களுக்கு இன்னும் டைம் இருக்கு யுவிப்பா, நமக்கும் இன்னும் வயசாகலை”என முறைத்தாள் நிமிர்ந்து.
சிரித்தவன்”ஆமா! அது என்ன அம்மு உன்னைய அம்லும்மானு கூப்புடுவது காரணம்”
“அதுவா, ஃபர்ஸ்ட் டைம் பாத்த போது ஆன்டினு சொன்னா, எனக்கு என்னது ஆன்டியானு..? கோபம் வந்துட்டு. நீங்களே சொல்லுங்க நான் பாக்க அப்பிடியா இருக்கேன்.”
“மயிலாஞ்சி பொண்டாட்டி! ஆன்டினா என்ன கெட்ட வார்த்தை மாதிரி பேசுற.”என நக்கலடித்தான்.
“ஆமா! ஆமா! அது எனக்கு செட் ஆகலை அதான் அம்லும்மானு சொல்ல சொன்னேன்”
அவளை அணைத்தவன்”அம்லு! நீ அதே அம்லுவா தான் இன்னும் இருக்க, என் அழகு மயிலாஞ்சிடி உனக்கு வயசே ஆகாது”என நெற்றியில் முத்தம் வைத்தான்.
“நிஜமாவா யுவிப்பா, எனக்கு வயசே ஆகாதா..?”என்றாள் எழுந்தமர்ந்து ஜிமிக்கி டான்ஸ் ஆட.
“ம்ம்ம்! நீ இப்பிடியே ஜிமிக்கி டான்ஸ் போட்டுட்டே இரு, வயசே ஆகாது”
“போங்க யுவிப்பா!”
“உண்மை தான் அம்லு, இப்ப கூட நம்ம யங் கப்புல் தான், என்ன யுவிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டோம், அவ்ளோ தான் நீ ஃபீல் பண்ணாத”
“ஆமா! ஆமா! எனக்கு இன்னும் சால்ட் ஹேர் வரலை, ஆனா இங்க..”என சர்வா தலைமுடியை ஆட்டியவாறு சிரித்தாள்.
“யாரை கிண்டல் பண்ற..?”என அம்லுவை தன் மேல் இழுத்தவன், “அம்லு! நீ என் வாழ்க்கையில் வந்தது ஒரு அதிசயம் தான், நான் கனவில் கூட நினைக்காத ஒருத்தி, ஆனா இப்ப நீ இல்லாத கனவே வரல, ஐ லவ் யூ சோ மச்”என முத்தமிட்டான் நெற்றியில்.
“ம்ம்ம்! எனக்குமே தான், யுவி இல்லனா நம்ம சேர்ந்திருக்க வாய்ப்பே இல்லைல சர்வா, இப்ப அவனுக்குமே கல்யாணம் ஆகிட்டு, எவ்ளோ ஃபாஸ்டா நாட்கள் நகருது பாருங்க”
“ம்ம்ம்! உண்மை தான், அதை எல்லாம் நினைச்சா, ஆச்சிரியமும், வருத்தமும கலந்து வருது அம்லு”
“இனிமே நமக்கு உலகமே வேற யுவிப்பா, யுவி, யுவதி, யுகதி, அடுத்து அம்மு வந்துட்டா, எல்லாரையும் நம்ம தானே பாத்துக்கனும்”
“அவங்க எல்லாரையும் நான் பாத்துக்குறேன், நீ என்னைய பாத்துக்க போதும்”என அவளை தன்னோடு அணைத்தான்.
“போங்க யுவிப்பா!”என சிணுங்கினாள்.
“எத்தனை வயசானாலும் இது மாறாது போல, எங்க போறது நான் அம்லு”
சர்வனாந்தன், நிரஞ்சனி, (மிஸஸ் மயிலாஞ்சி) ❤❤❤❤ காதல் மனங்கள்…
இத்துடன் நிறைவுப்பெறுகிறது…
………………முற்றும்…………………..
(வாசக நண்பர்களே!
என்னோட கதைகளில் அதிகப்பட்ச வாசகர்களையும், விமசர்னங்களையும் தேடி தந்தவள் மிஸஸ் மயிலாஞ்சி, அவளை பிரிவது சுலபமான விசயம் இல்லை, போட்டிக்காக தொடங்கிய கதை இன்று தனித் தடம் பதித்தி நிற்கிறது.
அம்லு என்ற ஒருத்தியால்…
சர்வா மாதிரி கணவன் கிடைத்ததால் அவனின் மயிலாஞ்சிக்கு மனதார மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்தது.
எத்தனையோ ஏற்ற இறக்கங்களை பார்த்த மிஸஸ் மயிலாஞ்சியும், மிஸ்டர் மயிலாஞ்சியும் இத்தோடு விடைப்பெறுகிறார்கள்.
வாசக பெருமக்களுக்கு மிக்க நன்றி இக்கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததற்கு, இன்னும் நகர்த்த மனம் விரும்பவில்லை ஏற்கனவே வெற்றி என்ற மகிழ்ச்சி தடத்தைப் பதித்து விட்டாள் மயிலாஞ்சி, அதே நிலையோடு முடித்துக்கொள்கிறேன்.
உங்கள் விரிவான விமர்சனங்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கேன்.
நன்றி வணக்கம், மீண்டும் புதிய கதை களத்தோடு சந்திப்போம் 😍😍😍😍😍