திரவி சர்வாவை கட்டிப்பிடித்தாலும் மனதில் ஒரு கேள்வி தோன்ற, உடனே அவனிடம் இருந்து விலகியவன்..
“அம்லு கிட்ட என்ன பேசப் போறடா…?”
“நான் நிரஞ்சியை கல்யாணம் பண்ணாலும், யுவி மட்டும் தான் பிள்ளை இடத்தில் இருப்பானு சொல்லப் போறேன்..”என்றவனை முறைத்தான் திரவி..
“இந்த மாதிரி கண்டிசன்ஸை உன் அப்பா உன்னோட சித்தியை கல்யாணம் பண்ணும் போது போட்டு இருக்கனும், அவங்களும் உனக்கு சித்தியா வந்து இருக்க மாட்டாங்க, அந்த சந்திராவும் உன் வாழ்க்கையில் வந்து இருக்க மாட்டா…”என்றான் கடுப்பாக..
“டேய்! நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசிட்டு இருக்கடா..?”
“எல்லாம் சரியா தான் பேசுறேன்.. இப்ப என்ன உனக்கு பிரச்சனை..? அம்லுக்கு குழந்தைப் பிறந்தா யுவியை பாத்துக்க மாட்டானு நினைக்குறீயா…?”
“அந்த லெவலுக்கே நான் போக விரும்பலடா, நிரஞ்சியை மனைவியா நல்லா பாத்துப்பேன், ஆனா கணவனா ஃபுல்ஃபில் பண்ண முடியாது, யுவிக்கு அம்மா, அவளுக்கு நான் சப்போர்டா இருப்பேன். அவ்ளோ தான்டா.. நிரஞ்சியை படிக்க வச்சு சுயமா இயர்ன்பண்ண ட்ரைன் பண்ணிடுறேன்”
“இது என்ன மாதிரி உறவு சர்வா, யுவிக்கு அம்மா அம்லு, அம்லுக்கு நீ செக்யூரிட்டி, இப்பிடியே காலம் முழுசும் வாழப்போறீங்க அதானே..?”
“ம்ம்ம்!”
“எதுக்குடா இந்த வாழ்க்கை அம்லுக்கு, அவளுக்குனு ஒருத்தன் வருவான், வரலைனாலும் அவ இப்பிடியே இருந்துட்டுப் போகட்டும்”என திரவி முகத்தை சுளித்தான்..
“அது சரி, அவங்க அம்மா கிட்ட என்ன பேசப் போற..?”
“இதே தான், அம்லுக்கு நல்ல புருசனா இருப்பேன், ஆனா யுவி மட்டும் தான் எங்களுக்கு மகனா இருப்பானு”
“அடேய்! அந்த அம்மா ஒன்னும் உனக்கு அம்லுவை கட்டித் தரேனு சொல்லவே இல்லை, அவங்க கிட்ட போய் இதை சொன்னா, கடுப்பாக மாட்டாங்க, டீசன்டா போ வெளியிலுனு சொல்வாங்க..”
“டேய்!”
“பின்ன என்னடா, நீ ஒரு பிள்ளைக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கேனு தான் அவங்க அம்லுவை தர மாட்டேனு பாட்டிக்கு பதில் சொன்னாங்க, அவங்க கிட்ட போய் இதை சொன்னா, ஆழாத்தி எடுத்து வாங்க மாப்பிள்ளைனா சொல்வாங்க, போடா டேய். நான் கூட நீ கல்யாணம் பண்ணிக்குறேனு சொன்னதும், சந்தோஷப்பட்டேன் கொஞ்ச நேரத்தில்..”என தலையை குலுக்கினான்..
“திரவி அண்ணே! எனக்கு சம்மதம் தான்.. சார் சொன்னதுக்கு எல்லாம் சம்மதம் தான்”என்ற குரல் வர, இருவருக்குமே அது அம்லுவின் குரல் எனப் புரிந்தது..
திரும்பிய திரவி”அம்லு! நீ இங்க எப்பிடி வந்த…?”
“என் ஊரு அண்ணே இது”என சிரித்தப்படி வந்தாள்..
“அம்மா சமையல் ரெடி ஆகிட்டுனு கூப்புட்டுச்சு.. உங்க ஃபோனுக்கு பண்ணா போகலை, இந்த ஏரியாவில் சிக்னல் அவ்ளவா கிடைக்காது. அப்பிடியே வந்தேன் அந்த டீக்கடைக்காரர் தான் சொன்னார் நீங்க இந்த பக்கம் வந்ததா.”
“இவ்வளவு தூரம் நடந்து வந்தீயா…?” என்றான் திரவி ஆச்சிரியமாக..
“அய்யே! இந்த வெயிலில் நடக்க முடியுமா..? சைக்கிளில் வந்தேன் அண்ணே, அதோ பாருங்க நிக்குது” என்று அவளின் சைக்கிளை காட்டினாள்..
“அம்லு! உனக்கு புரியுதா..? யுவிக்கு மட்டும் அம்மா, இவனுக்கு வைய்ப்னு பெயருக்கு தான், வைய்பாக்கான எந்த வித உணர்வும், உரிமையும் இல்லை உனக்கு..”
“வேற என்ன வேணும் அண்ணே, எனக்கு இதுவே போதும்..”
சர்வா அம்லுவை திரும்பி பார்த்தான்..
“அம்லு! என்ன பேசுற நீ..? நீ என்ன வேலைக்காரியா யுவிக்கு பணிவுடை செஞ்சுட்டு, இவன் கட்டுற தாலியை சுமக்க, உனக்குனு கணவனின் காதல், பிரைவேசி லைஃப், ஏன் இவன் மூலமா குழந்தைப் பெத்துக்க வேண்டாம…? இது எல்லாம் பொதுவான ஆசை தானே..?”
அம்லு புருவத்தை சுருக்கி யோசித்தாள்..
“சாருக்கு புடிக்கலைனா எதுக்கு எனக்கு குழந்தை, யுவி இருக்கானே”
திரவி நொந்துப் போனான்.. சர்வாவை பார்த்து முறைத்தான்..
“அவனுக்கு புடிக்கலை, புடிக்குது உனக்கு ஆசை இல்லையா…? யுவிக்கு ஒரு தம்பி, தங்கச்சியோ பிறந்தா நல்லது தானே. நீயும், சர்வாவும் அன்னியயோனியமாக வாழ்ந்தா தானே அந்த கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.. இப்பிடி தான் வாழப்போறோமுனு தெரிஞ்சு கிட்டே போய் எதுக்கு இந்த உப்பு சப்பு இல்லாத வாழ்க்கை வாழனும். அவன் தனியா இருக்கட்டும். நீ உன் அம்மா சொல்றப் படி கேட்டு இரு, உன் விதி எப்பிடி போகுதோ போகட்டும்..”என்றான் பொறுமை இழந்து..
சர்வாவும் எதுவும் பேசவில்லை.. சென்று கார் கதவில் சாய்ந்து நின்றான்..
“இல்லண்ணே! எனக்கு யுவிக்கூட இருக்கனும், சார் கூட இருந்தா நிம்மதியா இருக்கு எந்த கவலையும் இல்லாம, இதுக்கு மேல நான் யோசிக்கலை, முன்னாடி மாதிரி நான் சார் வீட்டிலே இருக்கேன், காலேஜ் போறேன். அதுக்காக சாரை கல்யாணம் பண்ணா தான் உரிமையா தங்கலாமுனா கல்யாணம் பண்ணிக்குறேன். எனக்கு யுவியே போதும், நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் எனக்கு ஆசை எல்லாம் இல்லை..”என்றாள் மறுபடியும்..
சர்வாக்கே ஆச்சிரியமாக இருந்தது, இப்பிடியும் சுயமா யோசிக்காத பொண்ணானு..
“அம்லு! உனக்கு வேணாம் ஆனா உன் அம்மாக்கு வேணும், உன்னைய காதலா பாத்துக்குற மாப்பிள்ளை, உனக்குனு ஒரு பிள்ளைப் பொறக்க அதை அவங்க கொஞ்சனும் இது எல்லாம் அவங்க விருப்பம்.. இந்த வாழ்க்கைக்கு, நீ ஜெகனுக்கு ஒரு பிள்ளை பெத்துக் கொடுத்துட்டு, அட்லீஸ்ட் உன் ரத்தமுனு வளர்த்து இருக்கலாம் உன் அம்மாக்கு அவங்க பொண்ணோட பிள்ளைனு பாசம் இருந்திருக்கும்..”என்றான் சட்டென்று..
“அம்லு! கிட்டதட்ட அவனும் உன்னைய தொட மாட்டான், இவனும் அதே தான் சொல்றான்.. பொண்டாட்டியா உனக்கு சாப்பாடு, டிரஸ், படிக்க வச்சா போதுமா..? உனக்கு ஏன் அது புரியல…”
அம்லுக்கு சர்வா கூட இருந்தா போதும், அவனோட அன்பான அரவணைப்பில் அவ சந்தோஷமா இருப்பதா உணருரா.. கூடுதலா யுவியும் கூடவே இருப்பான்.. அதற்கு மேல் யோசிக்க மூளை வேலை செய்யலை..
“அண்ணே! எனக்கு சார், யுவிக் கூட இருந்தாவே போதும். சார் ரொம்ப நல்லவர், ஜெகன் மாதிரி என்னைய ஏமாத்தமாட்டார், நாங்க சந்தோஷமா இருப்போம் அந்த வீட்டில். நேத்தில் இருந்து எனக்கு யுவியும், சாரும் இல்லாதது மனசுக்குப் புடிக்கவே இல்லை. இன்னைக்கு காலையில் இவங்களை பாத்ததும் தான் நிம்மதி ஆனது தெரியுமா..?”என்றாள் ஏக்கமாக..
திரவிக்கு அவளின் வார்த்தைகளில் ஏதோ மறைந்திருப்பது இப்போது விளங்க தொடங்கியது..
சர்வா அம்லுவும் யுவி மாதிரியே ஏக்கத்தில் இருந்திருக்காள் என அவளையே பார்த்தான்..
அவளோ சர்வாவை பார்க்கவில்லை.. திரவி”அம்லு! இவங்களை பிரிஞ்சு இருக்க முடியலையா உனக்கு…?”
“ம்ம்ம்! ஆமா அண்ணே, நான் அமெரிக்காவில் இருந்தப்ப, அம்மாவை ரொம்ப தேடினேன் அப்ப சார் என்னைய அம்லுனு கூப்புட்டது அம்மா கூட இருந்த உணர்வு இருந்தது, யுவி பத்தி சொல்லவே வேணாம், அவனுக்கு நான் அம்மானு சொன்னாலே போதும், இவங்க கூட இருக்க வேற என்ன வேணும்..?”
“அம்லு! உன் அம்மா இதுக்கு ஒத்துப்பாங்கனு நினைக்குறீயா…?”
“ஒத்துக்காது தான், ஆனா சார், ஜெகன் மாதிரி பொய் சொல்லாம, உண்மையை சொல்லி தானே கல்யாணம் பண்ணிக்குறனு சொல்றார், அப்ப எனக்கும் சம்மதம் தானே, நீங்க அம்மா கிட்ட பேசுங்க அண்ணே”
சர்வா”நிரஞ்சி! எதுக்கு திரவியை பேச சொல்ற…?”என்று கேட்டான்..
நிரஞ்சி அவனிடம் பதில் பேசவில்லை, சர்வா அவளின் பதிலுக்காக காத்திருந்தான்..
“அம்லு! உன் கிட்ட தான் கேக்குறான், பதில் சொல்லு..”
“முடியாது அண்ணே! அவர் தான் சென்னையில் என்னைய அம்மா கூட அனுப்புவதில் குறியா இருந்தாரே, நான் ஏன் அவருக்கு பதில் சொல்லனும், என்னைய யுவிக் கிட்ட இருந்து பிரிப்பதில் அவ்ளோ சந்தோஷம் இவருக்கு”என கோபத்தில் முகத்தை சிலுப்பினாள்..
சர்வாக்குப் புரிந்தது, ஆனால் நிரஞ்சியின் கோபம் வித்தியாசமாக அழகாக இருந்தது..
திரவி புருவத்தை சுளித்து பிறகு சிரித்து விட்டான்.. “அம்லு! அப்புறம் எதுக்கு அவனை கல்யாணம் செய்ய உன் அம்மா கிட்ட பேச சொல்ற..? அவன் தான் உன்னைய கண்டுக்காம போக சொல்லிட்டானே..”என்றான் வேண்டுமென்றே..
“ம்ம்ம்! சாருக்கு தான் என்னைய புடிக்கலப் போல போக சொல்லிட்டார், ஆனா எனக்கு சாரைப் புடிக்கும், யுவியைப் புடிக்கும், நான் இவரை தான் கல்யாணம் செய்வேன், நீங்க அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்குங்கண்ணே”
சர்வாக்கு மனதில் சிரிப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்தான். அவளை பிடிக்காமல் இருக்குமா சர்வாக்கு ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலை என்பது இருக்கே என எண்ணி பெருமூச்சு விட்டான்..
“நானே பேசுறேன் உன் அம்மா கிட்ட நிரஞ்சி”என்றான் சர்வா அவள் பதில் பேசலைனாலும்..
“டேய்! நீ என்ன பேசப்போற..? என் கிட்ட சொன்னதை போய் சொன்னா, அவ அம்மா ஒத்துக்க மாட்டாங்க, நானே பேசுறேன். நீ கொஞ்சம் அமைதியா இரு.”
“இல்ல, நான் நிஜத்தை சொல்லிடுறேன் அதுக்கு அப்புறம் அவங்க முடிவுப் பண்ணட்டும்..”என்றான் சர்வா..
“அண்ணே! நீங்களே பேசுங்க, சார் பேசினா அம்மா கண்டிப்பா ஒத்துக்காது..”
“நிரஞ்சி! என்ன பேசுற நீ..? இவன் மாத்தி ஏதாவது சொல்லி சம்மதம் வாங்கினா அது பெரிய தப்பாகிடும் நாளைக்கு, அவங்க மறுபடியும் ஏமாந்துடுவாங்க..”
“சர்வா! நீ சொல்றப்படி சொன்னா வாய்ப்பே இல்லை, இல்லைனா அம்லுவை நீ கல்யாணம் செய்ய வேண்டாம் விடு, அவ பாட்டுக்கும் இருந்துட்டுப் போறா. ஒரு வேளை வேற நல்ல இடம் வந்தா அவளுக்குனு தனிக்குடும்பம் அமைய வாய்ப்பிருக்கு” என்றான் தெளிவாக திரவி..
சர்வா அம்லுவைப் பார்த்தான், “நீ சொல்றதும் சரி தான் திரவி, என்னைய கல்யாணம் பண்ணி ஒரு விதமான வாழ்க்கை வாழுறதுக்கு, சொல்ல முடியாது பெஸ்டா யாராவது கிடைப்பாங்கள பை காட் கிரேஸ்..”
“எனக்கு பெஸ்டா எல்லாம் வேண்டாம், நீங்க தான் எனக்கு பெஸ்ட், யுவி தான் எனக்கு முக்கியம், இது நான் வாழப்போற வாழ்க்கை தானே, நானே தேர்வு செய்றேன், எனக்கு நீங்க தான் வேணும் சார், யுவி தான் வேணும், வேற யாரையும் எனக்கு நினைக்க தோணலை. உங்களை மாதிரி நான் பெஸ்ட், வொர்ஸ்ட்னு மாற மாட்டேன், பாட்டி கேட்டப்ப மனசார தான் ஒத்துக்கிட்டேன் இப்ப வரை அதே மனசு தான் இருக்கு”என சர்வா முன் வந்தவள்..
“நீங்க என் அம்மா கிட்ட எதுவும் பேச வேண்டாம், திரவி அண்ணே பேசுவாங்க நீங்க என் கழுத்தில் தாலி மட்டும் கட்டுங்க சார் போதும், அதுக்கு அப்புறம் உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.. நானும் யுவியும் சமத்தா இருப்போம் சரியா சார்.. ப்ளீஸ்! ப்ளீஸ் சார்!”என்றாள் கெஞ்சியவாறு கண்களை சுருக்கிக் கொண்டு..
சர்வா அவளின் கண்களையே பார்த்தான், அதில் எதை கண்டானோ அவனையறியாமலே தலையை ஆட்டினான்..
திரவி நொடிப் பொழுது ஸ்தமித்து நின்றான், சர்வாவ இதுனு..
உடனே திரவி பக்கம் திரும்பி வந்தவள், “அண்ணே! சார் ஓகே சொல்லிட்டார், நீங்க எப்பிடியாச்சும் அம்மா கிட்ட சம்மதம் வாங்குறீங்க, சரியா…?” என்றாள்…
அவனும் தலையை ஆட்ட, “சரி! நான் முன்னாடிப் போறேன், நீங்க ரெண்டுப் பேரும் சீக்கிரம் வாங்க..”என வேகமாக ஓடியவள் சைக்கிளை எடுத்துட்டு இடத்தை விட்டுப் பறந்தாள்..
“எதுக்குடா நீ தலை ஆட்டின…?”என்று கேட்டான் திரவி..
“நீ எதுக்கு ஆட்டின..?”
“அவ சொன்னதுக்கு தான்..”
“அதுக்கு தான் நானும் ஆட்டினேன்..”
இருவருக்குமே சிரிப்பு வந்தது..
திரவி”என்ன பொண்ணுடா இவ, பேசிய கரைச்சுடுறா. நண்பா! எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால மீனாட்சி அம்மா கிட்ட உங்க கல்யாணத்திற்கு பச்சைக் கொடி ஆட்ட வைக்குறேன்..”
“என்ன நம்பிக்கை இருக்கு…?”
“ஆ! அம்லு மேல, உன் மண்டையை எல்லாத்துக்கும் ஆட்ட வச்சுடுவானு.. “
“டேய்! போடா உளராம, என் மனசு அவ்ளோ சீக்கிரம் மாறாது”என காரில் ஏறி அமர்ந்தான் சர்வா..
மனதில்’இவங்க கல்யாணத்தை எப்பிடியாச்சும், அவங்க கையில் காலில் விழுந்தாவது, ஆயிரம் பொய் சொல்லியாச்சும் முடிச்சிடனுமுனு தோன்றியது…’