“எங்க தம்பி போனீங்க…? சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு, போய் கை, கால் கழுவிட்டு வாங்க, சாப்புடலாம்” என்றார் இருவரையும்..
“கொஞ்சம் நேரமாகட்டுமா, இப்ப தான் டீ குடிச்சோம், பாட்டியும் எழுந்திரிக்கட்டும்..” என்றான் சர்வா..
“ஆமாம்மா!”என்றான் திரவியும்..
“அப்பிடியா! சரி, அம்லு நீ இந்த புள்ளைக்கு ஊட்டிவிடு, அவங்க எல்லாம் லேட்டா சாப்பிடட்டும்..”என்றார், ஆனால் மனதில்’அம்லுக்கும் பசிக்குமே, அவளை மட்டும் எப்பிடி தனியா சாப்புட சொல்வது’என யோசித்தார்..
“நிரஞ்சி! நீயும் போய் சாப்பிடு உனக்கு தான் டைம் வந்துட்டே சாப்பிட, யுவியும் நீயும் சேர்ந்து சாப்பிடுங்க, எங்க ரேவதியை காணும்..?”என கேட்டான் சர்வா..
“ஆமால! எங்க என் பொண்டாட்டி..?” என்றான் திரவி..
“அண்ணே! அண்ணி பாட்டிக் கூட இப்ப தான் சும்மா படுத்துட்டு வரேனு போனாங்க, காலையில் உட்காந்துட்டே வந்தது முதுகு வலிக்குதாம்”என்றாள் அம்லு..
“ஆப்ரேசன் பண்ண உடம்புல, நான் தான் போய் படுனு சொன்னேன்”என்றார் மீனாட்சி.
“சரி நிரஞ்சி, நீ யுவிக்கு ஊட்டி எல்லாம் விட வேண்டாம், அவன் கூட சேர்ந்து சாப்பிடு அவனே சாப்பிடுவான்” என்றான் சர்வா..
அம்லுவும் சரி என தலையை ஆட்டிவிட்டு அடுப்படிக்கு சென்றாள்..
மீனாட்சி இலை அறுத்துட்டு வரேனு பின்பக்கம் சென்றார்.
ஒரு அருவாளை எடுத்துட்டு பின்னால் நடந்தார்..
மனதில்’அம்லுக்கு பசிக்குமுனு அந்த தம்பிக்கு எவ்வளவு சரியா தெரிஞ்சிக்கு, இப்பிடிப்பட்டவரை எதுக்கு அந்த கடவுள் முன்னாடியே என் கண்ணில் காட்டவில்லை, எதுக்கு என் பொண்ணை இப்பிடி படுகுழியில் தள்ளிவிட்டார்’என கடவுளைத் திட்டிட்டே நடந்தார்..
மீனாட்சியுடன் தனியாக பேச இதான் நேரம் என சர்வாவிடம் சொல்லிட்டு, அவர் பின்னால் ஓடிவந்தான்..
அம்லு வீட்டிற்கு பின்னால் தான் தோட்டம் இருக்கு, அதில் வாழைகள், தென்னை மரங்கள், இதர தேவையான செடிகள் இருக்கிறது, அங்கு தான் சென்றுக் கொண்டிருந்தார் மீனாட்சி.
“என்ன தம்பி! இவ்வளவு நேரம் அங்க தானே நின்ன”என திரும்பி நின்றார்.
“தனியா பேச தான் வந்தேன், வாங்கம்மா நடந்துட்டே பேசுவோம்.. இங்க நல்ல மண்ணுல எல்லா செடி, மரங்களும் பொழைச்சுக்குது..”
“ஆமாப்பா! அம்லுக்காக மாங்காய் கன்னு வச்சேன, அது தான் பூச்சி அறிச்சுடுது, பாப்போம் ஒன்னு வச்சு இருக்கேன் வருதானு.”
“ம்ம்ம்!”என வாழைமரத்தின் அருகில் வந்தவனிடம், “தம்பி! தள்ளியே நின்னுங்க, கரைப் பட்டுடப் போகுது..” என இலைகளை அறுக்க ஆரம்பித்தார்..
“என்ன தம்பி பேசனும் சொல்லிட்டு, அப்பிடியே நிக்குறீங்க..?”
“நானும், சர்வாவும் டீ குடிக்கப் போனோம் அந்த வயல், தோப்புப் பக்கத்தில் இருக்க கடைக்கு, அங்க இந்த நூறுநாள் திட்ட வேலை செய்றவங்க உட்காந்திருந்தாங்கம்மா”
“ஆமா தம்பி! நிழலுக்காக உட்காந்திருப்பாங்க, ஏதாவது ஊருக்கதை பேசிட்டு, நானும் தான் போவேன் மாச வருமானம் தானே.. இந்த மாசம் போக முடியாது போல, அடுத்த மாசத்தில் இருந்துப் போகனும்..”
“ம்ம்ம்! இன்னைக்கு நீங்க அங்கிருந்தா மனசு கஷ்டப்பட்டு தான் வந்திருப்பீங்க..”
“ஏன்பா…?”
“இன்னைக்கு அவங்க ஊருக்கதையில் நம்ம அம்லு கதை தான் ஓடிட்டு இருந்துச்சும்மா”என்றவனை திரும்பி பார்த்தார் மீனாட்சி..
“ஆமாம்மா!”
“ம்ம்ம்! நேத்து பால் கடையில் பேசினாங்க என் பொண்ணுக் கதையை இன்னைக்கு டீக்கடையில் பேசுறாங்க, இதை எல்லாம் கேக்கனுமுனு எங்களுக்கு விதிச்சு இருக்கும் போது என்ன செய்றதுப்பா, பேசுறவங்க பேசட்டும்..”என கண்களில் நீர் வழிய அதை முந்தானையால் துடைத்துக் கொண்டே, இலைகளை ஒரே மாதிரியாக நறுக்கி அடுக்கினார்..
“அம்மா! நான் இப்பிடி சொல்றேனு என்னைய தப்பா நினைக்காதீங்க, நீங்க அம்லுவை சர்வாக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவ வாழ்க்கை கண்டிப்பா சிறப்பா இருக்கும், நம்புங்கம்மா”என்றான்..
“ஏன் தம்பி, நீங்களும் ஒரு பொண்ணு வச்சு இருக்கீங்க, உங்க பிள்ளைக்கு இப்பிடி நடக்க வேண்டாம் ஆனா என் இடத்தில் நீங்க இருந்து பாருங்க..”
“புரியாம இல்லாம, ஆனா சர்வா பத்தி நல்லா தெரியும் எனக்கு, ரொம்ப நல்லவன்.. அது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், ஆறு வயசு பையன் யுவிக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கும் ஒரே காரணத்துக்காக நீங்க வேணானு சொல்றீங்க, ஒரு வேளை நாளைக்கு அம்லுவை இப்பிடி இரண்டாம் தாரமாய் மட்டுமே கேட்டு வந்தா கல்யாணமே பண்ணாம வச்சுடுவீங்களா..?”
“என் பொண்ணு கல்யாண சந்தையில் இரண்டாம் தாரமாய் தான் விலைப் போவானு சொல்றீங்களா தம்பி”என சிறிதுப் பொங்க கேட்டார்.
“ஏ அத்த! அவர் கேட்பதில் என்ன தப்பு இருக்கு..? உனக்கும், எனக்கும் வேணா நம்ம அம்லு தங்கமா, வைரமா இருக்கலாம், ஆனா ஊராருக்கு அவ ஒரு தடவை கட்டிக் கொடுத்தவ, அவன் தொட்டானா இல்ல தொடலையா அப்பிடினு எல்லாம் யோசிக்க மாட்டாங்க..”என கூறிக்கொண்டு அவர்கள் அருகில் வந்தாள் சாந்தி..
திரவி அவளை ஏற்கனவே பார்த்திருப்பதால், “வாங்க சாந்தி”என அழைத்தான்.
“வரேனுங்க, யாரோ விருந்தாளி வந்திருப்பதா செவல சொன்னான் அதான் யாருனு பாத்துட்டு போக வந்தேன், நீங்க தானா..? இப்பிடி கொண்டுப் போய் அம்லு வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே..?”என்றாள் ஆதங்கமாக..
“எனக்குமே அவனை பத்தி தெரியாதுங்க, தெரிஞ்சா நான் அம்லுவை கல்யாணம் செய்ய கேட்டு வந்திருப்பனா அவனுக்கு”என திரவி தன் நிலையை விளக்கினான்..
“ம்ம்ம்! அத்த சொன்னுச்சு தான், நீங்க பேசிட்டு இருக்க மாப்பிள்ளை அங்க உட்காந்தி இருக்காரே அவரா..?”
“ஆமா உங்களுக்கு எப்பிடி தெரியும்..?”
“இப்ப பேசிட்டு தான் வரேன், அம்லு தான் அறிமுகப்படுத்தினா, அந்த குட்டிப் பையனையும் பாத்துட்டு தான் வரேன். இவள கேட்டு எல்லாரையும் அழைச்சுட்டு வந்துட்டானே! அம்லு கூட அவன் கிட்ட பேச தான் சார்ஜர் கேட்டா அத்த தான் நாளைக்குப் பேசலாமுனு அதட்டி விட்டுச்சு..”என குறையாக பார்த்தாள் சாந்தி மீனாட்சியை..
“ஆமாங்க! அவன் தான் சர்வா, என் உயிர் நண்பன் அவனுக்கு ஒரு பையன் ஆறு வயசு, அம்லுக்கு பொருத்தமானவன், அவனோட முதல் மனைவி டைவர்ஸ் ஆகிட்டு, அது ஒரு கதைங்க அவ கல்யாணத்திற்கு முன்னாடி லவ் பண்ணவனோடு இந்த பையன் பிறந்ததும் ஓடிப்போயிட்டா, அது தெரிஞ்ச சர்வா விவகாரத்து கொடுத்து அவனோடு போய் வாழுனு அனுப்பிட்டான், பையனை தன்னோடு வச்சுகிட்டு, சர்வாக்கும் அம்லுவை கல்யாணம் செய்வதில் முழு விருப்பம் இல்லை, நானும், பாட்டியும் தான் கட்டாயப்படுத்துறோம். இப்ப டீக்கடையில் அம்லுவை பத்தி பேசியதை கேட்ட சர்வா அம்லுவை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டான், அதான் அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்.. நீங்களே கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க சாந்தி” என அவளையும் துணைக்கு அழைத்தான் திரவி..
“ஏ அத்த! நல்ல பையன், வெளிநாட்டுப் பையனு நினைச்சி தானே முதல் தடவைக் கொடுத்த அது என்ன ஆச்சு..? இந்த மனுசனைப் பத்தி நீயே பெருமையா சொல்லி இருக்க என் கிட்ட, நம்ம அம்லு அவர் வீட்டுல தான் தங்கி இருக்கா, நல்ல மனுசனு. அவரு தானே அம்லுவை காப்பாத்தியும் கூட்டியாந்தார் அப்புறம் எதுக்கு யோசிக்குற..? அம்லுவும் அந்த பையன் கிட்ட அன்பா இருக்கா, இங்க பாரு பால் கடை, டீக்கடைனு பேசிட்டு இருக்காங்க, அப்புறம் நாளைக்கு நீ போற இடத்தில் எல்லாம் கேப்பானுங்க கண்ணு வச்சு காது வச்சு பேசுவானுங்க, அம்லுக்கு அந்த ஆகாத மொத வாழ்க்கையை அறுத்துவிட்டு, இந்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வை அத்த, நல்லா இருப்பா எப்பையும்..”
“பெத்த மனசு ரெண்டாந்தாரமா இந்த பச்ச மண்ணைக் கொடுக்க யோசிக்குதுடி.. நான் இந்த ஊருல வாழுறவ பெருசா யோசிக்க முடியல, என் பொண்ணை இன்னொரு பிள்ளைக்கு அம்மாவாக்க நினைக்க முடியலடி..”
“அதுக்காக, இப்ப அம்லுக்கு வேற இடத்தில் கல்யாணம் பண்ணாலும் அதும் ரெண்டாந்தாரம் தானே அத்த..”
“இவ தனி ஆளா இருக்கா சாந்தி”
“அதை எல்லாம் யோசிக்க மாட்டாங்க அத்த, இப்பவும் நீ அம்லு பத்தி மட்டும் யோசிக்குற, வரவன் எப்பிடி வருவானு யோசிக்கலை, மொத கல்யாணம் பண்ற மாதிரி எவனாச்சும் வந்தா அதிசயம் தான், அப்பிடியே வந்தாலும் அவ கேடுகெட்டவனா எங்கையும் பொண்ணுக் கிடைக்காம வந்து சேருவானுங்க, இல்ல பொண்டாட்டி செத்தவன், விவகாரத்து ஆனவன் தான் வருவான், நீ என்ன டவுனில் இருக்கனு நினைக்குறீயா..? அப்பிடியே ஒருத்தன் நீ ஆசைப்பட்டவன் வந்தாலும் அவன் நாளைக்கு அம்லுவை கஷ்டப்படுத்த மாட்டானு என்ன நிச்சயம்.. அதுக்கு நல்லா தெரிஞ்ச, அம்லுக்கும் பழகின ஒரு ஆளை கல்யாணம் பண்ணி வச்சா அது அவளுக்கும் நல்லது தானே.. அம்லு அந்த வீட்டில் இத்தனை நாள் இருந்திருக்கா, அமெரிக்கா வரை அவரோடு போயிட்டு வந்திருக்கா ஏதாவது தப்பா உன் மனசுக்கு அவர் மேல எண்ணம் வந்துச்சா..? அப்பிடினா சொல்லு வேணாமுனு சொல்லலாம்..”
“அப்பிடி எல்லாம் அந்த பிள்ளையை குறை சொல்ல முடியுமா.? உறவே இல்லாம அம்லுக்கு அவ்வளவு உதவி பண்ணி இருக்காப்ல.. இப்ப கூட நான் எல்லாருக்கு முன்னாடி எப்பிடி அம்லுவை சாப்புட சொல்றதுனு நினைச்சுட்டு இருந்தேன் அந்த தம்பி அவ பசி நேரம் புரிஞ்சு சாப்பிட சொன்னுச்சு. சொக்க தங்கமான தம்பி தான் சாந்தி”
“ஆமாம்மா! சிம்பிளா பண்ணிடலாம், முக்கியமான தேவை கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்யனும், உங்க பக்கம் பத்து பேரு, சர்வா பக்கம் பத்துப் பேருவச்சு தாலியைக் கட்டி ரெஜிஸ்டர் பண்ணிடலாம், கவலைப் படாதீங்க” என கூறினான் திரவி..
“இல்ல தம்பி, என் மனசு ஏதோ உறுத்திட்டே இருக்கு, அந்த தம்பி கிட்ட பேசனும், விவரமா கேட்டுக்கனும் எல்லா விஷயத்தையும்.”
திரவிக்கு சர்வா கிட்ட இவங்க பேசினா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காதுனு புரிய, “என்னம்மா பேசனும், என் மேல நம்பிக்கை இல்லையா..?”
“ச்சே! ச்சே! அப்பிடியில்லை தம்பி, அந்த தம்பிக்கு ஒரு மகன் இருக்கான், அம்லுவை கல்யாணம் பண்ணிட்டு அந்த பையனே போதுமுனு இருப்பார, இல்லை அம்லுக்கு ஒரு குழந்தை பிறக்க ஒத்துப்பார. என்ன இருந்தாலும் அம்லு வயிற்றில் ஒரு பிள்ளை பிறக்கனும் இல்லைனா அவளை சொந்த பந்தத்தில் நாலு விதமா சொல்வாங்க, அவளுக்கு இப்ப தெரியாது பிற்காலத்தில் நம்ம வயிற்றில் பிள்ளை பொறக்கலைனு ஏங்கிடக் கூடாதுல.. இதை எல்லாம் பேசி தான் முடிவெடுக்கனும் தம்பி, ஏனா! அந்த சர்வா தம்பி வேற கல்யாணமே வேணாமுனு சொல்லிட்டு இருந்தது, அம்லு கதையை பார்த்து பாட்டி சொன்னாங்க, நீங்க சொன்னதுக்காக ஒத்துக்கிட்டார் தான் அதுக்காக அம்லு அவர் பையனை பாத்துக்குற வேலைக்காரியா மட்டும் போயிடக்கூடாதுல..”என்றார் தெளிவாக..
திரவிக்கு சுரென்று ஏறியது, எதை பத்தி மறைக்க நினைக்குறானோ அதையே அவர் பேச நினைக்குறாருனு.. ஆனால் இவரை சர்வா கிட்ட விட்டா காரியமே நடக்காதுனு எண்ணி, “அம்மா! நீங்க ரொம்ப யோசிக்குறீங்க, அப்பிடி எல்லாம் எதுவும் இல்லை, அம்லுக்கு குழந்தைகள் பிறக்கும், அதுல சந்தேகமே இல்லை சர்வாவும் சாதரண மனுசன் தான் அது எல்லாம் உணர்வுகள் இருக்கும், அம்லுவை யாரோ மாதிரி பாக்க மாட்டான், பொண்டாட்டி ஆனா அவனும் புருசனா மாறுவான், நீங்களே இதை எல்லாம் யோசிச்சு பெருசாக்காதீங்க” என்று கூறி சமாளித்தான்.
“ஆமா அத்த! நீயே ஐடியா கொடுக்காத, அவர் என்ன முனிவரா பொண்ணுங்களையே பாக்காம இருக்க தவம் செய்ய, அதுவும் நம்ம அம்லுவை பாத்தா புடிக்காம போகுமா..”என சிரித்தாள் சாந்தி.
“புடிக்காம தானே ஒருத்தன் இருந்தான்.. என்னத்த சொல்ல..”என நொந்தார் மீனாட்சி..
“ஏ அத்த! அவனுக்கு பொண்ணுங்களையே புடிக்கல, அது வேற ரகம்.. நீ எதுக்கு அதை கொண்டாந்து இங்க சேக்குற..”
“ம்ம்ம்! தம்பி எதுக்கும் நான் அந்த தம்பி கிட்ட நேரா பேசிடுறேன் அப்ப தான் என் மனசு நிம்மதியாகும்..”
திரவி அதிர்ச்சியாகி”அவன் கிட்ட போய் இத பத்தி எல்லாம் நீங்க பேசனுமா, நானே சொல்லிடுறேன், கவலையை விடுங்க. அம்லுக்கு உங்க ஆசைப்படி புள்ளைங்க பொறக்கும் போதுமா..?”
“சரிப்பா! அந்த யுவி பையனை நான் விட்டுக் கொடுக்க சொல்லல, அவனுக்கு துணையா இருந்துட்டுப் போகட்டும், என் பொண்ணுக்கும் ஒரு பேரு இருக்கும் சனங்க மத்தியில.. அவ்ளோதான்பா”
“சரிம்மா, வாங்க போகலாம் பாட்டி கிட்ட இத பத்தி பேசுவோம், அவங்க தான் அடுத்து என்னனு சொல்வாங்க” என்றான் திரவி..
மூவரும் நடக்க, அங்கு யுவியும், அம்லுவும் சாப்பிட்டு முடித்திருந்தனர்..
பாட்டி, ரேவதி எழுந்து வந்தனர்.. சர்வா டிவியை பாத்துட்டு இருந்தான்..
அனைவருக்கும் சாப்பாடு பரிமாறியது அம்லு தான்.. மீனாட்சி அமரவில்லை அனைவர் சொல்லியும் உட்காரவில்லை.
சாப்பிட்டு முடித்தனர்..
திரவி தான் ஆரம்பித்தான்.. யுவி வெளியில் விளையாட, அவனுக்கு துணையாக பக்கத்து வீட்டு சிறுவர்கள் விளையாடினர், சாந்தி தான் அழைத்து விளையாட விட்டாள்..
“பாட்டி! நீங்க ரெஸ்ட் எடுத்த நேரத்தில் என்னால முடிஞ்சதை செஞ்சேன், அம்லு அம்மாக்கும், சர்வாக்கும் அம்லுவை கல்யாணம் செய்வதில் சம்மதம்..”என கூறினான்..
“என்னப்பா சொல்ற…? எப்பிடி, இது சந்தோஷமான செய்தி ஆச்சே.. சர்வா உனக்கு சம்மதமா..?”என்றார் பாட்டி..
“ம்ம்ம்! ஆனா…?”என ஆரம்பித்தவனை, திரவி”ஆமா தான் பாட்டி, நாங்க வெளியில் போனோம்.. அப்ப..”என டீக்கடையில் நடந்ததைக் கூறினான்.
“அதை கேட்டு தான் சர்வா மனசு மாறுனுச்சு. மீனாட்சி அம்மா கிட்டையும் பேசிட்டேன். அவங்களும் சரினு சொல்லிட்டாங்க..”என அம்லு அம்மாவை பார்த்தான்..
“ஆமாங்கம்மா! திரவி தம்பியும், இதோ என் பங்காளி வீட்டு மருமக சாந்தியும் தான் சொன்னாங்க, சர்வா தம்பி மேல நல்ல மரியாதை இருக்கு.. அம்லு கூட சந்தோஷமா புள்ளை குட்டிகளோடு வாழ்ந்தா போதும்.”என்றார் அவர்..
பாட்டிக்கு சர்வாவின் எண்ணங்கள் பற்றி தெரியாததால், “அதுக்கு என்ன மீனாட்சி, அவங்க சந்தோஷமா பெரிய குடும்பமா வாழுவாங்க. நான் இருக்கவரை அம்லுக்கு பாதுகாப்பு கொடுத்துடுவேன். அப்புறம் அவ குடும்பம் அவ புருசன் புள்ளைங்கயாச்சு..”என சிரித்தார்..
அம்லுவும் சிரித்தாள், அவளுக்கு அம்மா சம்மதிச்சது நினைத்து ஒரே சந்தோஷம்..
சர்வாக்கு தான் திரவியை தனியா கூப்புட்டு மொத்த தோன்றியது..
ரேவதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..
“என்ன ரேவதி அமைதியா இருக்க..?” என்றார் பாட்டி..
“ஒன்னுமில்ல பாட்டி”என்றாள் மெதுவாக..
“இங்க பாரு ரேவதி, உன் தம்பி வாழ்க்கையை அவனே தான் கெடுத்துக்கிட்டான், அம்லு கூட சண்டைனா பேசி சேர்த்து வைக்கலாம் ஆனா முடிஞ்சுப்போனது, சேர முடியாத உறவு, அம்லு இடத்தில் உன் பொண்ணு இருந்தா நீ என்ன செய்வனு யோசி, அம்லுக்கு இந்த வாழ்க்கை நல்லப்படியா அமையட்டுமுனு நினைச்சிக்கோ..” என்று அறிவுரை கூறினார் பாட்டி.
“ஒரு ஏமாற்றம் தான் பாட்டி, அம்லு மாதிரி ஒருத்தியை விட்டுட்டான், அவன் வாழ்க்கை அப்பிடி தான் போகனுமுனு விதிப்போல.. என்ன செய்ய..? சர்வா அண்ணன் கல்யாணம் செய்வதில் சந்தோஷம் தான்”என்றாள் முகத்தை மாற்றி சிரித்து..
“அப்புறம் என்ன பாட்டி, அடுத்து என்ன செய்யலாம்..”என்றான் திரவி..
“பாட்டி! நான் பேசனும்..”என்றான் சர்வா..
திரவி ‘அய்யயோ என்ன சொல்ல போறானோ…?’என அதிர்ந்து..
“டேய்! நீ என்ன பேசப் போற..? அதான் அம்லு கிட்ட சொல்லிட்டீயே எல்லாத்தையும்.. அவளும் சம்மதம் சொல்லிட்டாளே. மறுபடியும் ஆரம்பிக்காத..”என்று தடைப் போட்டான் திரவி..
“இல்ல எல்லார் முன்னாடியும் சொல்லனும்..”என சர்வா கூற, திரவிக்கு அதற்கு மேல் முடியவில்லை.. எப்பிடியோ இந்த கல்யாணம் நடக்கப் போவதில்லை என விரக்தியோடு அமைதியானான்..
சர்வா ஆரம்பிக்க, அம்லு”சார்! என்ன சொல்லப் போறீங்க….? நான் தானே கல்யாணம் பண்ணப் போறேன். எனக்கு சம்மதம்.. அம்மாக்கும் சம்மதம், நீங்க பயப்புடாதீங்க யுவியை நல்லா பாத்துப்பேன், அத நீங்க சொல்லவே வேணாம்.”என்றாள் அவனை அமைதிப்படுத்தி..
திரவிக்கு போன உயிர் வந்தது, அம்லுவை பார்த்து சந்தோஷமாக சியர் அப் செய்தான், கட்டை விரல் காட்டி மெதுவாக..
சர்வா”நிரஞ்சி! நான் உன் கிட்ட பேசியது அம்மாக்கும் தெரியனும்.”
“அதான் சார், எனக்கு தெரிஞ்சுட்டே அது போதும்..”
“அம்லு! என்ன சொன்னார் அவர்.?”
“அது ஒன்னுமில்ல அம்மா, யுவியை பாத்துக்க நான் அம்மா மாதிரி இருக்கனும் சித்தி மாதிரி இல்லாமனு சொன்னார்.. அவ்ளோதான்”
சர்வா அடுத்துப் பேச வருவதற்குள், பால் கறக்க ஆள் வந்தது..
மீனாட்சி எழுந்து செல்ல, பாட்டியும் கூடவே சென்றார்..
ரேவதியை திரவி போன் பேச அழைக்க, சர்வா தனியா இருந்தான்..
“சார்! அம்மா கிட்ட நீங்க எதும் சொல்ல வேணாம், நான் தான் சொன்னேன்ல ப்ளீஸ்.. என் கிட்ட தான் சொல்லிட்டீங்கள யுவி மட்டும் தான் நமக்கு பையன் போதுமா..?”
“நிரஞ்சி! நாளைக்கு உன் அம்மாக்கு இது தெரிஞ்சா என்னைய தப்பா நினைப்பாங்க..”
“அப்ப நம்ம கல்யாணம் முடிஞ்சுடுமுல, நான் சந்தோஷமா இருந்தாலே அம்மா மனசும் மாறிடும்.. நான் தான் அங்க சந்தோஷமா இருப்பேன்ல. நானும், யுவி, நீங்க அப்புறம் என்ன சார். அம்மா நம்ம சந்தோஷமா இருந்தா அத பாத்து மனசை ஆத்திக்கும். யுவி தான் இருக்கானே அம்மாக்கு புரியும் அப்புறம்.. நீங்க பேசாம இருங்க சார். ப்ளீஸ்! ப்ளீஸ்! என்னையும், யுவியையும் பிரிச்சுடாதீங்க சார்.. அப்புறம் அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்காது”என்று கெஞ்சினாள்.
அவளின் இறுதி வாக்கியம் அவனை அசைத்தது, யுவியை அவளிடம் இருந்து பிரிக்க வேண்டாமுனு சொன்னது, சர்வாவும் சுயநலமா யோசித்து அமைதியானான்..
யுவிக்கு விஷயத்தை பாட்டி தான் சொன்னார், அம்லு இனி அவன் கூடவே இருக்க போறாங்கனு.. அவனுக்கு கல்யாணம், மனைவி அது எல்லாம் புரியவில்லை. ஹேப்பி ஆனான்..
*****
சில நாட்கள் பிறகு…
ஜெகன், நிரஞ்சி கல்யாண வாழ்க்கை முடிவுக்கு வந்தது, விவாகரத்தும் முறையாக பெற்றனர்..
அவனின் ஓரினச்சேர்க்கையாளர் என்ற வாக்குமூலமே எளிதாக திருமணப் பந்தத்தை முறித்தது..
ராகுக்கு ஏற்கனவே கஜி அனைத்தையும் சொல்லி இருந்ததால், அம்லுவை மருமகளாக ஏற்க அவருக்கு முழுவிருப்பம்..
பிருந்தா, அன்பு மகிழ்வோடு வந்தனர். பிரபா விருப்பமே இல்லாமல் வந்தார், அஞ்சல குரூப், மீனாட்சிப் பக்கம் சில உறவினர்கள் என சூழ வந்தனர்..
ரேவதி, திரவி, வேலு வந்தார், விமலா மனம் மகனிடமே இருந்தது.. அவனோ அமெரிக்கவிற்கு பறந்து விட்டான்..
அனைவரும் எங்கு வந்தனர்.. சர்வா- நிரஞ்சி ரெஜிஸ்டர் மேரெஜ்க்கு..
சர்வா லேட்டாக கல்யாணம் செய்யலாமுனு சொன்னான்.. ஆனால் ராகு, பிருந்தா கல்யாணம் முன்னே முடியனும், அங்க நீ தனி ஆளா நிக்க கூடாதுனு அவசரமாக ஏற்பாடு செய்தார்..
மீனாட்சிக்கும் அது சரினு பட்டுச்சு, அம்லு வாழாமல் இருக்கானு ஊர் சொல்வதற்குள் அவ வாழ ஆரம்பிச்சுடனும்..
டைவர்ஸ் கிடைத்த அடுத்த வேலை கல்யாணம் தான்..
இருவருக்குமே காதல் என்ற உணர்வே இல்லாமல், பதிவு திருமணப் பந்தத்தில் கையெழுத்திட்டனர்.. ஆனால் இருவருக்கும் இருவரின் மேல் அதீத அன்பு இருந்தது அது காதலாக, உணர்வாக மாறனும்..
இனிதாக திருமணம் முடிந்தது.. அம்லு யுவியோடு நின்றாள்.. சர்வா அவர்கள் அருகில் நின்று போட்டோக்கு போஸ் கொடுத்தனர் மூவருமாக..
சிவப்பு நிற பட்டுப்புடவையில் அலாட்டாத அலங்காரத்தில் அம்லுவும், அதே நிறத்தில் சட்டை அணிந்து யுவி நின்றான், சர்வா கல்யாணப் பட்டு வேஷ்டிக்கு ஏத்த வேஷ்டி அணிந்தவாறு..
இருவருக்குமே இரண்டாவது கல்யாணம் என்பதால் பெரிதாக எதிர்ப்பார்ப்பு படப்படப்பு இல்லை. கையெழுத்திட்டார்கள், கழுத்தில் தாலிக் கட்டினான் என முடிந்தது..
இத்தனை தடைகளை தாண்டி, சர்வா, நிரஞ்சி கணவன், மனைவி ஆகினர்..
இனி அவர்களின் காதல் அத்தியாயம் தொடர வாழ்த்துவோம்..