“வேணா, நீங்க மட்டும் வாங்க, உன் சித்தி, நாங்க எல்லாம் முன்னாடிப் போய் வீட்டைத் திறந்து ஆழாத்தி ரெடிப் பண்றோம், திரவி, ரேவதி, பிருந்தா, பரத் அவங்க காரில் வராங்க உங்க பின்னாடி, நீங்க வழியில் இருக்கும் அம்மன் கோயிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க, இது உன் பாட்டியின் ஆர்டர்..”
அனைவரும் வெளியில் வர, ராகுவே பொதுவாக சொல்லிட்டு, இரண்டு கார்களில் மற்றவர்களை ஏற சொன்னார் வீட்டிற்கு செல்ல..
அம்லு கிட்ட பாட்டி கோயிலுக்குப் போறதைப் பற்றி சொல்லி இருந்ததால் அவளுக்கு புரிந்தது..
பாட்டி”சரி நாங்க முன்னாடி போறோம், யுவி நீ வா என் கூட, நம்ம வீட்டுக்குப் போகலாம்”என்றார்..
“இல்ல பாட்டி! நான் அம்லு கூடவே வரேன்..”
“அப்பா, அம்லுவும் கோயிலுக்குப் போயிட்டு லேட்டா தான் வருவாங்க, நீ வா நம்ம போய் ரெஸ்ட் எடுப்போம்” என்றார் பாட்டி..
“நோ பாட்டி!”
அம்லு”பாட்டி! யுவி எங்க கூட வரட்டும், கோயிலுக்கு போக எவ்வளவு நேரம் ஆகப்போது.. விடுங்க, யுவி நம்ம போகலாம்”என அவன் கைகளைப் பிடித்தாள்..
சர்வாக்கு இதே நிகழ்வு முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது..
ராகு, பிரபா கல்யாணத்தின் போதும் இப்பிடி தான் சர்வா அவர்களோடு கோயிலுக்குப் போக அடம் பிடித்தான், பாட்டி அவரோடு கூட்டிட்டுப் போயிட்டார்.
அந்த நிகழ்வு ஞாபகம் வர உடனே சர்வா “பாட்டி! யுவி எங்க கூடவே வரட்டும், நீங்க இப்பிடி செய்வதை முதலில் நிறுத்துங்க, அவன் என் கூட தான் இருப்பான் எப்போதும், புரியுதா..?”என சற்றுக் கோபமாக சொல்லிட்டு காரை நோக்கி நடந்தான்..
திரவிக்கு ஓரளவு புரிய, அம்லு கிட்ட கண்களை காட்டினான்”போ!”என்று.. அவளும் யுவியோடு காரை நோக்கி நடந்தாள்..
அங்கிருந்தவர்கள் மனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யோசனையில் போனது.. அம்லு சொந்தங்கள் எல்லாம் தள்ளி நின்றதால் அவர்களுக்கு காதில் விழவில்லை.. மீனாட்சியோடு சாந்தி மட்டுமே நின்றாள்..
மீனாட்சிக்கு முகம் சுருங்கியது, அதை கவனித்த திரவி”அம்மா! நீங்க போங்க வீட்டிற்கு நேரமாகுது..”என டைவர்ட் செய்தான்.
பாட்டிக்கும் அதே நிலை தான், யுவி சின்னப் பையன் எதுக்கு அலைய விடனும் என நினைத்து தான் அவனை அவர் அழைத்தது, அதை தவறாக நினைத்த சர்வா மீது கோபம் வந்தது அவருக்கு, அனைவர் முன்னும் அவன் பேசியதை எண்ணி, முக்கியமாக பிரபா முன்..
பிரபாவோ”ம்ம்உக்கும்! கைக்கு எட்டிட்டா போதுமா, அததுக்கு ஒரு கொடுப்பினை வேணும், ரெண்டாவதா வந்தா இவ்ளோ தான் கொடுப்பினை, நான் அனுபவத்தில் சொன்னேன்”என கூறிவிட்டு முக்கிக் கொண்டு சென்றார்..
அவரின் வார்த்தைகள் தெளிவாக மீனாட்சி காதில் விழுந்தது..
ராகு”நீ கொஞ்சம் அமைதியா வா”என முறைத்துக் கொண்டே முன்னாடி நடந்தார்..
பாட்டியும், மீனாட்சியும் அமைதியாக நடந்து சென்றனர்..
மீனாட்சி மனதில் அம்லுவை மறுபடியும் தப்பான இடத்தில் கொடுத்துட்டமோ என்ற பதற்றம் வந்தது..
அவருக்கு துணையாக வந்த பத்துப் பேர்கொண்ட ஊர் பங்காளி மக்கள் அப்பிடியே கிளம்பினர் ஊருக்கு..
பாட்டி, வீட்டுக்கு வந்துட்டுப் போக சொன்னார், அவர்களோ இப்ப போனா தான் ராத்திரிக்கு ஊர் போய் சேர முடியுமுனு கிளம்பினர்..
சாந்தியை மட்டும் மீனாட்சிக்கு துணையாக இருக்க சொல்லிட்டு நாளைக்கு அவரோடு வருமாறு அவளின் கணவன் கூறினான்..
சர்வா கார் அருகே நிற்க அவனிடமும், அம்லு கிட்டையும் சொல்லிட்டு கிளம்ப அவர்கள் அருகில் சென்றார்கள்..
அம்லுக்கு பெரியப்பா முறை, “சரிங்க மாப்பிள்ளை, நாங்க கிளம்புறோம், நல்ல நாளா பாத்து மீனாட்சியை கூப்புட சொல்றோம் அம்லுவை அழைச்சுட்டு வாங்க விருந்துக்கு”என்றார்..
சர்வா தலையை ஆட்டினான்..
பெரியம்மா முறையில் இருந்தவரோ “போன தடவையும் இப்பிடி தான் அழைச்சுட்டு வரேனு அவன் அம்லுவை ஏமாத்திட்டான்.. நீங்க எங்க அம்லுவை பத்திரமா பாத்துக்கோங்க தம்பி” என்றார்..
சர்வாக்கு ஜெகனை தன்னோடு கம்பேர் பண்ணியதால் கொஞ்சம் கடுப்பு தான் ஆனது, ஆனாலும் வெளியில் காட்டாமல், “தங்கச்சி கல்யாணம் இருக்கு முடியட்டும்”என்றான்..
சிறிது நேரத்தில் யுவி அம்லுவின் மடியில் தூங்கி விட்டான்..
அம்லு”சார்! எதுக்கு யுவியை அதட்டுனீங்க..? அவன் பயந்துட்டான் போல, பாவம்”
“இதுக்கு தான் கல்யாணமே வேணாமுனு இருந்தேன் நிரஞ்சி, என்னைய மீறி யுவிக் கிட்ட உனக்காக எதும் கோபப்பட்டுட்டா, இவனுக்காக நான் வாழுறேனு பெருமையா நினைச்சது எல்லாம் வீணாப்போகிடும்..” என்றான் வெறுப்பாக.
“சார்!”என்றாள் புரியாமல்..
“ஆமா! என் சித்தி வந்தப்ப, என் அப்பா கொஞ்சம் கொஞ்சமா மாறிப் போனாரு, அப்புறம் நான் அப்பானு ஒரு தேவையின் பொருட்டே நெருங்கினேன் அவரை, இப்ப அப்பானு பக்கத்தில் நின்னாலும் அவருக்கு என் கிட்ட முழு உரிமையா பழக முடியாம தவிப்பாரு..”என்றான் வார்த்தைகளில் வலி தெரிய..
“நீங்க பாசமா தான் இருக்கீங்க, ஆனா பாட்டி, உன் அம்மா எல்லாம் ஏதோ நம்ம சந்தோஷமா இருக்கனுமுனு யுவியை தூரமா நிக்க வைக்க யோசிக்குற மாதிரி எனக்கு தோணுது, அது மட்டும் என்னால முடியாது நிரஞ்சி, அதை நீ புரிஞ்சுக்கனும்”என மிரர் வழியே அவளைப் பார்த்தான்..
“நான் சொல்றது புரியுதா..?”
அவனையே பார்த்தவளிடம், “இதோட முடியாது நிரஞ்சி, அடுத்து இருக்கு அதான் இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் டே ஆப் மேரிட் லைஃப். நைட்டு யுவியை தனியா தூங்க வைக்க தான் சொல்வாங்க, நீயும் மண்டையை ஆட்டிட்டு இருக்காம, முடியாதுனு சொல்லு, நான் சொல்றது புரியுதா..?”
நிரஞ்சிக்கு இவ்வளவு சொல்லி புரியாமல் இருக்குமா…?
“சார்! உங்களுக்கு என் மேல நம்பிக்கையே இல்லையா…? அவங்க என்ன நினைக்குறாங்களோ எனக்கு தெரியாது, ஆனா நான் யுவியை எப்பவும் தனியா பிரிச்சுப் பாக்கல..”
“புரியுது நிரஞ்சி! ஆனா சூழ்நிலைகள் வரும் போது, நீ புரியாம நிக்க கூடாதுனு முன்னாடியே சொல்றேன்.”என கோயில் முன் காரை நிறுத்தினான்..
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் சார், எனக்கு தெரியும், நாளைக்கு வரை நீங்க எதும் சொல்லாதீங்க இப்ப பாட்டி கிட்ட கோபப்பட்ட மாதிரி, அம்மா போயிடும் நாளைக்கு, அப்புறம் நீங்க நினைச்ச மாதிரியே இருக்கலாம், ஓகே வா சார்” என்றாள் தலையை ஆட்டிய வேகத்தில் ஜிமிக்கி ஆடியவாறு..
அவளை திரும்பிப் பார்த்தவன், அவளின் ஜிமிக்கி அசைவையும், அவளின் தலை அசைவையும் பார்த்து சிரித்தான்..
“நீ இரு, நான் தூக்கிக்குறேன்”என சர்வா இறங்கி வந்தான் பின்னாடி..
அதற்குள் பிருந்தா, பரத், திரவி, ரேவதி வந்தனர்..
“என்னடா ஆச்சு..?”
“யுவி தூங்கிட்டான், அதான் தூக்கப் போறேன்..”
“அண்ணா! நீங்க போங்க நான் இருக்கேன் இங்க, எதுக்கு அவன் தூக்கத்தை கெடுக்கனும். இதுக்கு தான் பாட்டி சொன்னாங்க, அவனை கூட்டிப் போறதா”என பிருந்தா நக்கலாக சர்வாவை குட்டினாள்..
சர்வா”பிருந்தா! பாட்டி எதுக்கு சொன்னாங்கனு தெரியும். நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம், பரத் நீங்களும் இங்கயே இருங்க.. திரவி வா போகலாம்”என கோயிலுக்குள் நடந்தான்..
ஆனால் விழுந்த வேகத்தில் காலில் சுளுக்குப் போல் விழுந்தது, அதை காட்டிக்காமல் நடந்தாள்.
“ஓகே தானே!”
“ம்ம்ம்!”என்று சிறிது உதறிவிட்டு, வலியோடு நடந்தாள்..
சில நேரத்தில் சிறிய கால் தடுக்கல் கூட அதிக வலியை உண்டுப் பண்ணும். அது காலில் படும் இடத்தைப் பொறுத்தது, அம்லுக்கு சரியாக கால் நரம்பில் பிசிறியது..
அவளுக்கு அந்த மாதிரி நிறைய எக்ஸ்ப்ரியன்ஸ் இருக்க விளையாடும் போது, வலியை தாங்கிக் கொண்டே நடந்தாள்..
காருக்கு வர, சர்வா, நிரஞ்சி முன்னாலே ஏறினர்..
திரவி அவன் காரில் ரேவதியோடு கிளம்பினான்..
அம்லுவின் முகத்தில் வலியின் வீரியம் தெரிந்தது..
அவள் அமைதியாக வருவதைப் பார்த்த சர்வா”நிரஞ்சி! என்ன ஆச்சு..?”
“ஒன்னுமில்ல சார்.”
“அப்புறம் ஏன் ஃபேஸ் டல்லா இருக்கு. கால் வலி இருக்கா..?”
“இல்ல சார், காலையில் சீக்கிரம் எழுந்திரிச்சுட்டேன்ல அதான் டயர்டா இருக்கு..”
“ஓ!”
வீட்டிற்கு வந்ததும், மாலையும் கழுத்துமாக நின்றவர்களை, ஆழாத்தி எடுத்தார்கள் ரேவதியும், பிரபாவும்..
அம்லுவை வலது காலை எடுத்து வைத்து வர சொன்னாள் சாந்தி..
அடிப்பட்டிருந்தது அந்த கால் தான், தரையில் சமமாக நடக்கும் போது வலியை பொருத்துக் கொண்டாள், ஆனால் வீட்டின் முன் டெக்ரேசன் செய்து கோலம் போடப்பட்டிருக்க, அதை தாண்டி கால் வைத்து உள்ளே போக வேண்டும், மனதில் அழுத்தம் கொடுத்து கஷ்டப்பட்டு அந்த காலைத் தூக்கி வைக்கப் போகும் போது, தடுமாறியது அவளுக்கு, சர்வாக்கு ஏதோ உணர்வு தட்ட சட்டென்று அவளின் கையைப் பிடித்தான்..
ஏதோ ஒரு பிடிமானம் கிடைத்த சந்தோஷத்தில் வலியை மீறி வலது காலை வைத்தவளுக்கு, ஹப்பாட! என்றிருந்தது..
அதுவரை புடவையில் மறைந்திருந்த கால் வெளியே வர, அப்போது தான் சர்வா கவனித்தான், கால் நன்றாக வீங்கியிருந்தது, அது வித்தியாசமாக தெரிந்தது..
வேற யாருக்கும் அது தெரிய வாய்ப்பில்லை.. அடிப்பட்டதே தெரியாது பிறருக்கு..
அவளின் கையைப் பிடித்திருந்தவனுக்கு ‘அடிப்பாவி! இப்பிடி வீங்கி இருக்குனா வலி இருக்குமே’என தோன்ற, கையை விடாமல் பிடித்திருந்தான், அடுத்து அவ நடக்க கொஞ்சம் ஈஸியா இருக்கட்டும் என்று..
சாமி அறைக்கு சென்றவர்கள், விளக்கு ஏத்த சொன்னார் பாட்டி..
வெளியில் வர, அம்லு முன்னாடி நடந்தாள், சர்வா அவளின் பின்னால் செல்ல, பாட்டி காலில் விழ சொன்னார் ராகு..
சர்வா எல்லார் காலிலும் தனி தனியாக அம்லு இருக்கும் நிலையில் விழ முடியாதுனு, பெரியவர்கள் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து இருவரும் விழுந்து எழுந்தனர்..
அம்லுவை சாந்தி ஒரு அறைக்குள் கூட்டிச் சென்றாள்.. சர்வா ஹாலில் அமர்ந்தான்..
அவனுக்கு அம்லு கால் நினைவில் வந்தது, மருந்து எதும் போட சொல்லலாம ஆனா இப்ப எப்பிடி சொல்வது என தயங்கிட்டு அமர்ந்திருந்தான்..
யுவி எழுந்து விளையாட ஆரம்பித்தான்.. சர்வாக்கு நிரஞ்சியை பார்க்க வாய்ப்பே இல்லை, அவள் இருந்த அறையில் அவளின் அம்மா, சாந்தி இருந்தனர். கால் வலியை சொல்லி இருந்தா கண்டிப்பா மருந்து கேட்க வந்திருப்பாங்க.. மனதில்’பைத்தியம் இந்த வலியை தாங்கிட்டு என்ன பண்ண போறா..? சொல்ல வேண்டியது தானே.’ என திட்டினான் அவளை..
அவனுக்கும் அதை சொல்ல சங்கடமாக இருந்தது, எல்லார் முன்னாடியும்..