“இது சொந்த வீடா அத்த…?”என்று கேட்டாள் சாந்தி மீனாட்சியிடம், அறைக்குள் தனியாக இருந்ததால்..
“இல்ல, வாடகை வீடு தான், மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கு, அவங்க அப்பா, சித்தி குடும்பம் அங்க தான் இருக்காங்க..”
“அப்ப, அந்த வீட்டிலே பொண்ணு, மாப்பிள்ளை அழைப்பை வச்சு இருக்க வேண்டியது தானே, ஏன் வாடகை வீட்டில் நல்லக் காரியத்தை செய்யனும்..?”
அம்லுவும் அங்கு தான் அமர்ந்திருந்தாள்..
“எங்க வச்சா என்ன அண்ணி…?”
“அது இல்லடி அம்லு, சொந்த வீடு இருக்கும் போது அங்க தானே மருமகளை அழைப்பாங்க, அதான் கேட்டேன்.”
“அது அவங்க விருப்பம் சாந்தி, நம்ம சொல்ல முடியுமா இங்க வையுங்க, அங்க வைங்கனு”என்றார் மீனாட்சி..
“அத சொல்லுங்க”என அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சாந்தி..
“இங்க தான் நான் தங்கி இருந்தேன் அண்ணி, சார் ரூம் அந்த பக்கம், இது இல்லாம இன்னொரு ரூம் இருக்கு. வாடகை வீடுனாலும் நல்ல பெருசா இருக்கும்.”என்று விவரித்தாள் அம்லு..
சாந்தி”ம்ம்ம்! அது என்ன அம்லு இன்னும் சார் மோருனு கூப்புடுற..? அத்தானு சொல்லு இல்ல மாமானு சொல்லு..”
“அதானே! இன்னையில் இருந்து சர்வா சார் உன்னோட அவரு ஆகிட்டாரு, இன்னும் சார், மோருனு, சரியா சொன்னீங்க அண்ணி”என்று கிண்டல் செய்தப்படி ஹேமாவும், சந்தியும் வந்தனர் அறைக்குள்..
அம்லு”திடீருனு மாத்தி கூப்புட வரல அண்ணி, இவளுக கிண்டல் பண்றாங்க” என்று அவர்களை முறைத்தாள்.
“அது எல்லாம் செல்லாது மேடம், நீங்க உங்களின் அழைப்பு முறையை மாற்றியே ஆகனும்..”என்றாள் சந்தி..
“சும்மா இருடி நீ வேற..”என்ற அம்லுவிடம், “அம்லு! அவங்க கிண்டல் பண்ணினாலும் உன் வீட்டுக்காரரை சாருனு தான் கூப்புடப் போறீயா, பாக்கறவங்க என்ன நினைப்பாங்க…?” என்று கேட்டார் மீனாட்சி..
“அம்மா! அப்புறம் எப்பிடி கூப்புட..?”
“அத்தானு சொல்லு அம்லு..”
“வேணாம்!”என்றாள் அம்லு, ஏற்கனவே ஜெகனை அப்பிடி அழைத்ததால் அதே மாதிரி அழைக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு.
“அய்யோ அம்லு அப்பிடி எல்லாம் கூப்புடக் கூடாது. சும்மா வாங்க, போங்கனு சொல்லு, எங்க கிட்ட சொல்லும் போது அவரு, இவருனே சொல்லு”என்றார் மீனாட்சி.
சந்தி சிரித்தாள்”அம்மா! நீங்க எதுக்கு சொல்லி தந்து டைம் வேஸ்ட் பண்றீங்க, அது எல்லாம் அவங்க செல்லமா எப்பிடியோ கூப்புட்டுபாங்க”என்றாள்..
“ஆமா! மேடம் இப்ப பெரிய ஆளாகிட்டாங்க”என்றாள் ஹேமா..
“ஏய்! நான் எங்க பெரிய ஆள் ஆனேன்.”
சந்தி”பின்ன, சர்வா சார் தான் காலேஜ் ஓனர், அவரோட வைய்ப் நீ, நீயும் காலேஜுக்கு சொந்தக்காரி தானே, ஓகேங்களா மேடம்”
மீனாட்சி, சாந்தி சிரித்தனர், அம்லு “போங்கடி லூசுங்களா..”என அவர்களை அடித்தாள்..
இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு வாயிலில் நின்ற பிரபாக்கு மனமே ஆறவில்லை.
‘லேகா இருக்க வேண்டிய இடத்தில் இவ இருக்காளே, காலேஜ் ஓனரம்மானு பெருமையா இருக்கா உனக்கு’என பொருமினார்.
வாயிலில் நின்ற பிரபாவைக் கண்ட மீனாட்சி”வாங்க!”என்றழைத்தார்..
“அம்லு! அத்தையை கூப்புடு..”என மகளுக்கு சொல்லிக் கொடுத்தார்.
“உள்ள வாங்க அத்தை!”
அறையினுள் நுழைந்த பிரபா, “ம்ம்ம்! பரவாயில்லை அத்தைனு சொல்றீயே. உன் புருசன் என்னைய சித்தினு கூட கூப்புட மாட்டான், ஏதோ ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறைனு கடமைக்கு கூப்புடுவான். உனக்காச்சும் உடனே கூப்புட வந்துச்சே”என சிலுப்பிட்டு அங்கு அமர்ந்தார்..
“அது எப்பிடி சம்பந்தி, முறைனு ஒன்னு இருக்குல, அதை மாத்தாம தானே கூப்புடனும்.”என்றார் மீனாட்சி..
“ம்ம்ம்! உன் புருசனுக்கு தான் என்னைய பாத்தா ஏதோ விசித்திரப் பிறவியா பாப்பான், நீயும் அப்பிடி இருந்துடலாமுனு பாக்காத, என்ன இருந்தாலும் நான் தான் சில விஷயங்கள் செய்யனும் உன் மாமியார் இடத்தில் இருந்து, அவன் ஆம்பளை திமிரா போவான் நீயும் அவனே மாதிரியே போகலாமுனு நினைச்சுடாத, என்ன புரியுதா..?”என்றார் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து.
“நீங்க பெரியவங்க, நல்லது கெட்டதுக்கு நீங்க தானே வரனும் சம்பந்தி, அம்லுக்கு அது எல்லாம் புரிஞ்சு நடந்துப்பா” என்றார் மீனாட்சி..
“ஆ! புரிஞ்சா சரி, என் அண்ணன் மக மூத்தவ தான் அப்பிடி போயிட்டானு சின்னவளை பாத்தேன் அவனுக்கு கட்டி வைக்க, யுவியையும் நல்லா பாத்துப்பானு, ஆனா இவன் கல்யாணமே வேணாமுனு சொல்லிட்டு ஏற்கனவே விலைக்குப் போன இரண்டாம் தாரத்தையே கட்டிக்கிட்டான், அதுக்கு என் அண்ணன் மக இவனுக்காகவே காத்துக் கிடக்கா கல்யாணமே வேணாமுனு அவ பாவம் சும்மா விடுமா என்ன..? சரி இந்தா இந்த புடவையை மாத்திக்கோ.. உலக அதிசயம் தான் நடக்குது புடவை பொண்ணு வீட்டில் தான் எடுப்பாங்க முதல் ராத்திரிக்கு, இங்க தலைகீழா நடக்குது என் புருசன் நம்மளே எடுக்கனுமுனு குதிச்சார், அதான் எடுத்துட்டு வந்தேன் இதை கட்டிக்கிட்டு ரெடி ஆகு”என மனதில் உள்ள வன்மத்தை கொட்டிட்டு கிளம்பினார் வெளியில்..
“ஷ்பப்பா! அம்லுக்கு மட்டும் இந்த மாமியார் வெர்சன் எல்லாம் எங்கிருந்து தான் மேனுபேக்சர் ஆகுறாங்களோ தெரியல ஹேமா, எனக்கு மாமியார் இல்லாத வீடா போயிடலாமுனு தோணுது”என்றாள் சந்தி..
மீனாட்சிக்கு மனமே சரியில்லை, “என் பொண்ணு என்ன பாவம் செஞ்சா சாந்தி, இந்த அம்மா அவங்க அண்ணன் பொண்ணு வர வேண்டிய இடத்துக்கு இவ போட்டியா வந்ததா நினைச்சு, சாபம் விட்டு போறாங்க அந்த பொண்ணு பாவம் இவளை சும்மா விடாதுனு”என கூறிக் கண் கலங்கினார்..
“அத்த! அவங்களுக்கு நம்ம அம்லு பாத்து பொறாமை அதான் அப்பிடி பேசிட்டு போறாங்க, மாப்பிள்ளை தம்பி எதுக்கு இந்த வீட்டில் அழைப்பு வச்சு இருக்காருனு புரியுது, இவங்க எல்லாம் இந்த மனசோட அங்க அழைச்சுட்டாலும் வெளங்கிடும், அதோட மாப்பிள்ளை இவங்களை பெருசா மதிப்பதில்லை போல அதுவும் கோபம், எல்லாத்தையும் அம்லு மேவ காட்டிட்டுப் போறாங்க, நீங்க ஏன் அத்த கவலைப்படுறீங்க, அம்லு, மாப்பிள்ளை இந்த வீட்டில் தானே தனியா வாழப்போறாங்க..”என ஆறுதல் செய்தாள் சாந்தி.
“ஆமாம்மா! அம்லுக்கு இங்க நாங்க எல்லாம் இருக்கோம், சர்வா சார் இருக்காரு அப்புறம் என்னம்மா” என்றாள் ஹேமா..
அம்லு அவளின் அம்மா கண்களின் நீரை துடைத்து விட்டு”அம்மா! நீ எதுக்கு இப்ப அழுவுற..? எனக்கு ஒரு பிரச்சனையும் வராது, அதான் சார்…. (என கூறி மெதுவாக மாற்றினாள்) இல்ல இல்ல அவரு இருக்காருல, நீ கவலையை விடு” என்றாள்..
“ஓ, ஓஹோ! அவராமே..”என கிண்டல் செய்தனர் தோழிகள்..
சாந்தி அம்லுக்கு புடவையை மாற்றி விட்டாள்..
அதுவரை அமர்ந்திருந்த அம்லுக்கு வலி தெரியவில்லை, எழுந்ததும் வலி ஆரம்பித்தது. அதோடு புடவையை மாற்றினாள்..
****
ஹாலில் அமர்ந்திருந்த பாட்டி திரவியை அழைத்தார்..
சர்வாவும் அங்கு தான் இருந்தான், காலையில் சர்வா பாட்டியை கடுப்படித்ததில் இருந்து அவர் பேசவே இல்லை, சர்வாக்கும் அது தெரியாது. அவன் அங்கிருந்தவர்களோடு பேசுவதில் இருந்தான்.. ஜெகன் அப்பா வேலு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குப் போயிட்டார், அம்லுவை ஆசிர்வாதம் செய்துவிட்டு.
“புத்திக் கெட்டவனே, நீ அவனுக்கு வாத்தியார் தானே,ம்ம்ம்!” என சுற்றிப் பார்த்தவர், சர்வா கூட பேசிக் கொண்டிருந்த பரத்தை பார்த்தார்..
“அதோ அவனை கூப்புட்டுக்கோ துணைக்கு, போ”
“பரத்தையா பாட்டி..?”
“ஆமா! ஆமா! போ சீக்கிரம்..”
திரவி அவர்கள் அருகில் சென்று, “பரத்! என் கூட வாங்க, ஒரு வேளை இருக்கு..”
“ஆ! ஓகே திரவி”என பரத் எழுந்தான்.
“என்ன வேலைடா..?”
“பாட்டி கொடுத்திருக்க வேலை, நீங்க வாங்க பரத்”என வேகமாக வெளியில் சென்றான் திரவி..
சர்வா எழுந்து வந்து”பாட்டி! எங்க போக சொல்லி இருக்கீங்க திரவியை..?”
அவரோ பதில் சொல்லவில்லை..
“உங்களை தான் பாட்டி”
“ஏன் நான் செய்றது எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டு தான் செய்யனுமா..? எனக்கு உரிமை இல்லையா..?”என்றார் கோபமாக..
“என்ன பாட்டி பேசுறீங்க..? என்ன வேலை சொல்லி இருக்கீங்கனு தானே கேட்டேன்..”
“காலையில் எல்லார் முன்னாடியும் என்னைய அவமானப்படுத்தின, என்னமோ உன் பிள்ளையை நான் பிரிச்சு கூப்புடுறது போல, கடைசியில் அவன் தூங்கிட்டு வந்தது தானே மிச்சம்..”
“ஓ! அதுவா, சரி விடுங்க அந்த நேரத்தில் ஏதோ ஒரு ஞாபகத்தில் பேசிட்டேன். இப்ப என்ன வேலையா அனுப்புறீங்க..?”
“சொல்ல முடியாது போடா, போய் உன் வேலையைப் பாரு”என்றார்.
“பாட்டி!”
“என்ன..?”
“கோச்சுக்கிட்டிங்களா, சாரி! காலையில் பேசினது தப்பு தான்.. மன்னிச்சுடுங்க”
“ஏன் உன் சித்தி காலையில் என்னைய நக்கலா பாக்க தானே அப்பிடி பேசின.. போடா டேய் நீயும் உன் மன்னிப்பும்.” என முகத்தை திருப்பினார்.
“அய்யோ பாட்டி! தெரியாம பேசிட்டேன் ப்ளீஸ்..”
“சரி! என்னோட ரூமுக்கு போய் இரு, நான் கூப்புடும் போது வா, யுவியும் அங்க தான் இருக்கான், அவனை தூங்க வை”
“எதுக்கு இவ்வளவு சீக்கிரம் தூங்க வைக்கனும். மணி ஆறு தானே ஆகுது.. இன்னும் சரியா இருட்டக் கூட இல்லையே”
“எல்லாம் காரணமா தான், இப்ப அவன் கூட பேச ஆரம்பிச்சா தான் ஏழு மணிக்கு தூங்குவான், போ”
“என் ரூமுக்கு போய் தூங்க வைக்குறேன் பாட்டி..”
“உன் ரூமில் வேலை இருக்கு..”
“என்ன வேலை..?”
“உனக்கு விவரமா சொல்லனுமா, இன்னைக்கு முதல் ராத்திரில அதான் திரவி கிட்ட பூ, மாலை எல்லாம் வாங்க சொன்னேன்..”
“பாட்டி!”என்றான் கோபமாக..
“இங்க பாரு, நீ கோபமா கத்தினா நான் பயந்துடுவேனா.. இது ஒரு முறை அதை செய்றோம், உள்ள போய் நீ முழிச்சு இருக்குறதும், படுத்துத் தூங்குறதும் உன் விருப்பம், இப்ப போய் யுவியை தூங்க வை”என்றார் தெளிவாக..
“ஏன் பாட்டி! இது என்ன ஃபர்ஸ்ட் மேரெஜா.. அல்ரெடி எல்லாம் பண்ணது தானே.. அதுவே உருப்புடாம போயிட்டு. இப்ப மறுபடியுமா..?”
“டேய்! அது எனக்கு புடிக்காம நடந்தது, ஆனா இந்த கல்யாணம் எனக்கு மனசு விருப்பப்பட்டு அம்லுவை உனக்கு பொண்டாட்டியா கொண்டு வந்து இருக்கேன், அதனால என் ஆசைப்படி தான் நான் நடந்துப்பேன். நீ போ முதலில்..”
“பாட்டி! என்னமோ பண்ணுங்க, ஆனா யுவியை நான் என் கூட தூக்கிட்டுப் போயிடுவேன் என் ரூமுக்கு..”
“டேய்! அறிவிருக்கா..?”
“நீங்க சொல்றது எல்லாம் யுவி விஷயத்தில் முடியாது”என பாட்டி அறைப்பக்கம் போனான்..
பாட்டி அலட்டிக்காமல் அமர்ந்திருந்தார்..
***
சர்வா அறை…
“பாட்டி என்னைய கூட கூட்டிட்டுப் போக சொன்னாங்கனு கேட்கவே சந்தோஷமா இருக்கு திரவி”என கட்டிலை அலங்காரம் செய்தப்படி கூறினான் பரத்..
“ம்ம்ம்! நான் ஸ்ரீயை கூப்புட போனேன் அவங்க தான் உங்களை கை காட்டினாங்க..”என்றான் திரவி, மல்லிகைப் பூவை கட்டிலின் மேற்பகுதியில் தொங்கவிட்டவாறு..
“அவங்களுக்கு என்னைய இன்னும் ஏத்துக்க மனசே வரலை..”
“பின்ன நீங்க சந்திரா தம்பினு ஒரு அடையாளம் போததா அவங்க ஒதுக்க..”
“நான் என்ன செய்றது திரவி, மாமா மாதிரி டைவர்ஸ் கொடுப்பது எங்க உறவுக்கும் இருந்திருந்தா கொடுத்துட்டு ஒதுங்கிருப்பேன். இப்ப நடுவில் நின்னு முழிக்குறேன்..”என நொந்தான்..
“அது எப்பிடி பரத் உங்க வீட்டில் நீங்க மட்டும் நல்லவரா இருக்கீங்க…?”
“ம்ம்ம்! பிருந்தா காதல் தான் காரணமோ என்னவோ..”என சிரித்தான்..
“இருக்கும், இருக்கும்”
“ஆமா! இதை எல்லாம் பாட்டி செய்ய சொல்லிட்டாங்க, ஆனா மாமா வந்து பாத்தா டென்சன் ஆகிடப் போறார்..”
“திரவி! இது எல்லாம் மெம்ரபுல் டே ல, உங்களுக்கும் இதே செட்அப் இருந்துச்சா..?”
“ம்ம்ம்! எங்கது லவ் மேரெஜ், எனக்காக யாரு இருக்கா இது எல்லாம் செய்ய, சர்வா தான் டெக்ரேட் செய்தான்”
“ம்ம்ம்! இப்ப அவருக்கு நீங்க செய்றீங்க..?”
“ஆமா! ஆமா! உன் அக்கா மேரெஜ்க்கு தான், உன் அத்தை இதை டெக்ரேட் செய்ய தனி ஆளே கூட்டிட்டு வந்தாங்க, எங்களுக்கு எல்லாம் காமெடியா இருந்துச்சு. சர்வாவை கிண்டல் செய்தோம்.”
“அவங்க ஒரு பந்தா கேஸ், ஏதோ சினிமா மாதிரி பண்ணி வச்சு, சர்வா மாமா நல்லா டோஸ் விட்டாங்க. அடுத்த நாள் அதை கூட்டிப் பெருக்கியது என் அத்தை தான், என் அக்கா பத்தி தான் தெரியுமே வேலைக்கு வளைய மாட்டா..”
“ம்ம்ம்! எப்பிடி தான் சர்வா அவ கூட வாழ்ந்தானோ, சாரி! என்ன இருந்தாலும் உன் அக்கா..”
“ச்சே! ச்சே! அவளை என் அக்கானு சொல்லவே புடிக்காது எனக்கு திரவி. யுவியை பெத்துட்டு அவ பண்ணியது ஏத்துக்கவே முடியல.. இன்னும் என் சொந்தத்துல மரியாதையே இல்ல அவளுக்கு, ஒரு பார்வை அவளை கேவலமா பாக்குறாங்க, அவ அதை எல்லாம் கண்டுக்க மாட்டா..”
“ம்ம்ம்! அவளுக்கு அவ பண்ணியது தப்பில்லை பரத். அவ்ளோதான். சரி வா போகலாம், இதுக்கு மேல பண்ணா அவன் கடுப்பாகிடுவான். இது போதும்..” என வெளியில் வந்தனர்.
யுவியை தூங்க வச்சுட்டு ஹாலில் இருந்த சர்வா, அவர்கள் வெளியே வருவதைக் கண்டு முறைத்தான்..
திரவி கண்டுக்காமல் பாட்டியிடம் போய் சொல்லிட்டு ரேவதியை அழைத்தான் வீட்டிற்கு செல்ல, பரத், பிருந்தா, அன்பு, ராகு, பிரபா என கிளம்ப தயராகினர்..
சந்தி, ஹேமா எல்லாம் வீட்டிற்கு சென்று சென்று விட்டனர்..
பாட்டி ராகுவிடம்”போயிட்டு நாளைக்கு வந்து சேருங்க, கடமை முடிஞ்சுட்டுனு கை கழுவிடாம”என்றார்..
“ம்ம்ம்! இன்னைக்கே நான் செத்தலாம் பிறவிப்பலன் கிடைச்சுடுப்பா”
“ஏன்மா இப்பிடி பேசுறீங்க, அவன் நல்லா வாழனும் அதை நீங்க பாக்கனும்..”
பிரபா முகத்தை சுளித்தார், ‘ஆமா! கிழவி உயிர் உடனே போயிட்டலாம்..’என எண்ணி, “ம்ம்ம்! என் பொண்ணுக்கும் கல்யாணம் வச்சு இருக்கோம் அத்த, அதுக்குள்ள ஏன் அவசரப்படுறீங்க…? என்ன இருந்தாலும் சர்வா தான் உங்களுக்கு பெருசு, என் புள்ளைங்களை காலு செருப்பா தான் பாக்குறீங்க” என்றார் வருத்தமாக சொல்வது போல் நடித்துக் கொண்டே..
மீனாட்சி, அம்லுவும் வெளியில் வந்தனர்..
“ம்ம்ம்! எல்லாம் என் புள்ளை ரத்தம் தான், அதுக்கூட புரியாதவ இல்லை நான், நீ ரொம்ப நீலிக்கண்ணீர் வடிக்காம கிளம்பு, அதான் அண்ணன் மவனை கட்டி வைக்க அடுத்த திட்டம் போட்டுட்டீயே..”என்றார் கோபமாக..
உடனே சர்வா”அன்பு! அழைச்சுட்டு கிளம்பு அப்பா, அம்மாவை”என்றான்..
“ம்ம்ம்! சரி அண்ணா”என பிரபாவை அழைத்தான்..
மீனாட்சி”சம்பந்தி! இருந்து அம்லுவை ஆசிர்வாதம் பண்ணிட்டுப் போங்க” என்றார்..
“மாப்பிள்ளையும், அம்லுவும் கிழக்குப் பார்க்க உட்காரனும், அவங்களுக்கு பொட்டு வச்சு ஆசிர்வாதம் செய்யனும், அம்லு குங்குமம், வெற்றிலை, கண்ணாடி வளையல் கொடுப்பா வாங்கிகனும்”
“சரி போய் ரெடிப் பண்ணுங்க”
அதே போல் அம்லு, சர்வா அமர்ந்தனர்.
அவனுக்கு இது எல்லாம் என்ன முறைனு கடுப்பாகியது..
இருவருக்கும் ஆசிர்வதித்து மூவரும் குங்குமம், வெற்றிலை வாங்கிக் கொண்டனர்..
உடனே எழுந்த சர்வாவிடம், மீனாட்சி “மாப்பிள்ளை நீங்க உங்க ரூமுக்கு போங்க, அம்லு வருவா”என்றார்..
“இல்ல! நான் லேட்டா தான் தூங்கப் போறேன், வெளியில் போயிட்டு வரேன், நிரஞ்சியை போய் தூங்க சொல்லுங்க.” என்றான் புடிக்காத முகத்தோடு.
“இல்ல தம்பி! இது முறை, நீங்க ரூமுக்கு போங்க ஆசிர்வாதம் வாங்கிட்டு அங்க தான் போகனும், வேற எங்கையும் போக கூடாது..”என்றாள் சாந்தி..
சர்வா கடுப்பாகி பதில் பேசப் போக, பாட்டி உடனே”சர்வா! இந்த நேரத்தில் எங்க போகப் போற, போ உன் ரூமுக்கு.. எல்லாரும் கிளம்ப போறாங்க, நாங்களும் தூங்கனும்”என்றார்..
சர்வாக்கு இப்போது கோபம் பல மடங்காக அதிகமாகியது, அம்லு அம்மா மீது ஏனோ வெறுப்பு வந்தது, அம்லுவை திரும்பி பார்த்தான், அவளோ அமைதியாக இருந்தாள்..
அவளை முறைத்துவிட்டு, காலையில் சொல்லியும் அமைதியா உட்காந்து இருக்கானு கடுப்பாக, நேராக பாட்டி அறைக்குள் சென்று யுவியைத் தூக்கிட்டு தன் அறைக்குள் புகுந்தான்..
அது அம்லு அறிந்தது ஆனால் மீனாட்சி பாட்டியைப் பார்த்தார்..
அவருக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை..
பிரபா”ஒரே நாளில் வளைச்சுப் போட முடியுமா..? அடுத்த பத்தாவது மாசத்தில் உங்க பொண்ணுக்கு புள்ளை பொறந்து யுவிக்குப் போட்டியாக்க ஆசைப்பட்டா அது சர்வாக்கு புரியாத என்ன…? நாங்க கிளம்புறோம்”என கிளம்பினார்..
பாட்டி ராகுவை முறைக்க, அவர் பதில் இல்லாமல் புறப்பட்டார்..
மற்றவர்களும் கிளம்பினர்..
சாந்தி அம்லுவை சர்வா அறைக்குள் பால் கொடுத்து அனுப்பினாள்..
பாட்டி மீனாட்சிக்கு ஆறுதல் சொன்னார்..
அவர்கள் பேசிக் கொண்டே ஒரே அறையில் தூங்கினர்..
அம்லு அறைக்குள் சென்று, கதவை தாழ் போட்டு உள்ளே பால் கிளாஸோடு நடந்தாள் மெதுவாக..
சர்வா தூங்கும் யுவியின் அருகில் அமர்ந்திருந்தான்..