நிரஞ்சி பால் கிளாஸோடு நுழைவதைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் சர்வா..
அவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்ததை அவளால் காண முடியவில்லை, காரணம் அறையின் விளக்கை அணைத்திருந்தான், இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டப்படி, யுவி தூங்க வசதியாக..
அந்த வெளிச்சத்தில் மெதுவாக நடந்து வந்தவள், சர்வா முன் வந்து நின்று, பால் கிளாஸை நீட்டினாள்..
சர்வா வாங்காமல் அவளையே பார்த்தான், அது என்ன காதல் பார்வையா இங்கு விளக்குவதற்கு, கோபத்தின் தீப்பொறிகள் பறந்தது கண்களில்..
“இந்தாங்க!”என நீட்டினாள் அம்லு அவனை பார்க்காமலே..
“என்னது…?”என்றான்.. அவள் நிமிர்ந்து பார்த்தால் தானே புரியும் அவன் முகத்தின் நிலவரம்..
“பால் தான், இந்தாங்க குடிங்க..”
“எதுக்கு இதை கொண்டு வந்த, நான் உன் கிட்ட கேக்கவே இல்லையே.”
“இல்லங்க, அண்ணியும், அம்மாவும் தான் கொண்டுப் போக சொன்னாங்க” என்றாள் வெட்கப்பட்டு..
இப்போது தான் சர்வா அவளின்”ங்க” என்ற அழைப்பைக் கவனித்தான்..
“நிரஞ்சி!”என்றான் அழுத்தமாக..
“ம்ம்ம்!”
“நிமிர்ந்து பாரு முதலில்”என்றான் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து..
அவன் கொடுத்த அழுத்தமான வார்த்தைகளில் நிமிர்ந்தாள் சட்டென்று..
அவனின் முகம் எண்ணெய் சட்டியில் போட்ட கடுகுப் போல் வெடித்து சிதறியது..
முகத்தில் சற்று மிரட்சியோடுப் பார்த்தாள்..
“இது என்ன புதுசா ங்கனு..?”
“அம்மா தான் சொன்னுச்சு, சார்னு கூப்புட வேணாம், அத்தான், மாமானு கூப்புட சொல்லி, அதான் நான் வாங்க, போங்கனு மாத்திட்டேன், சா….ர்…..”என பயத்தில் தந்தியடித்தாள்..
அவனே மீனாட்சி மீது கோபமாக இருக்கான், அது தெரியாம அம்மா சொன்னுச்சுனு ஏழரையை கிளப்பி விட்டாள்..
“உன் அம்மா யுவியை என் கிட்ட இருந்து பிரிக்க சொன்னா அதையும் செய்வீயா..?”என்றான் கோபமான வார்த்தைகளை சிந்தியவாறு..
“சா…ர்….”என்றாள் அதிர்ச்சியாக..
“என்ன சார், இப்ப எப்பிடி சார் வந்துச்சு கூப்புட, ம்ம்ம்! சொல்லு, உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிட்டு அது சரி, ஆனா உன் அம்மா பண்றது எதுவுமே எனக்கு புடிக்கலை நிரஞ்சி..”
“அம்மா என்ன பண்ணுச்சு…?”
“என்ன பண்ணல, ம்ம்ம்! இது என்ன அலங்காரம்…? இது ஃபர்ஸ்ட் நைட்டுக்கா, உனக்கும் எனக்கும் இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டா நிரஞ்சி…? உன் அம்மா மூலம் பாட்டி இதை செய்ய சொல்லி இருக்காங்க, அப்புறம் நம்மளை உட்கார வச்சு அது என்ன முறை, ஐ கான்ட் டாலரேட், என்னைய ஆர்டர் போடுறாங்களா..? இந்த ரூமுக்கு போக சொல்லி உன் அம்மா..?”என்றான் வேகமாக..
“இல்ல சார், இந்த முறை எல்லாம் எங்க ஊருப்பக்கம் செய்வது தான், அதான் அம்மா செய்ய சொன்னுச்சு, இந்த அலங்காரத்துக்கும் அம்மாக்கும் சம்பந்தம் இல்லை, பாட்டி தான் சொல்லி இருப்பாங்க சார்..”என்றாள் தாயை தப்பா நினைச்சுடக் கூடாதுனு..
“பாட்டி சொல்லி இருப்பாங்களா…? என்ன உன் அம்மாக்கு சப்போர்ட் வாங்குறீயா…? பாட்டிக்கு இது எல்லாம் தோணாது, உன் அம்மாவோட சந்தோஷத்துக்காக செஞ்சு இருக்காங்க, உனக்கும், எனக்கும் இது செகண்ட் மேரெஜ் அப்பிடியிருக்க இந்த முறை எல்லாம் தேவையா…? எல்லாத்துக்கும் மேல இப்பிடி உன்னை அலங்காரப் பண்ணி பால் கிளாஸோடு அனுப்பி வச்சது யாரு..? உன் அம்மா தானே..? உன் அம்மாக்கு தான் அறிவு இல்லை, உனக்கும் அறிவு இல்லையா..?” என்றான் அவளை கோபமான வேக சொற்களால்..
அம்லுக்கு கையில் கிளாஸ் இருக்க, அவன் அதட்டலில் நடுங்கி நின்றாள் அமைதியாக, கண்களில் நீர் குளமாக திரள..
“எல்லாத்துக்கும் மேல, உன் அம்மா, அண்ணி என்னைய இந்த ரூமுக்கு போக சொல்றாங்க, நீயும் அமைதியா வேடிக்கைப் பாக்குற, காலையில் நான் சொன்னது புரியலையா..? யுவி இல்லாம நான் எப்பிடி போவேன், நீயே சொல்லி இருக்கனுமுல யுவியை தூக்கிட்டுப் போங்கனு, அப்பிடியே கல்லு மாதிரி நிக்குற..?”என்றான் அடுத்த குற்ற அம்பை எரிந்தவாறு..
இதுவரை அவன் கேட்டதுக்கு எல்லாம் அமைதியாக நின்ற அம்லு, யுவி பற்றி கூறியதும் கண்களில் தேங்கி இருந்த கண்ணீரை வேகமாக துடைத்தவள், வேகமாக அவனை நேராக பார்த்து, “சார்! அம்மா பண்ணது எல்லாம் அதுக்கு தெரிஞ்சது, உங்களுக்கு புடிக்கலை சரி.. ஆனா யுவி விஷயம் அப்பிடியில்லை, ஒரு வேலை நீங்க யுவியை தூக்கிட்டு வராமல் வந்திருந்தால், நான் இப்ப வரும் போது கண்டிப்பா தூக்கிட்டு வந்திருப்பேன், அந்த சந்தேகம் மட்டும் உங்களுக்கு வேணாம், நாளைக்கு என் அம்மா போயிடும் சார், அதுவரைக்கும் கொஞ்சம் தயவுப் பண்ணி பொறுத்துக்கோங்க, அது ஏதோ எனக்காக செய்றதா நினைச்சி பண்ணுது, தப்பு தான் இந்த கல்யாணம் நமக்கு ரெண்டாம் கல்யாணம் தானே.. எனக்கு புரியுது சார், நீங்க கவலைப் படாதீங்க”என பாலை நீட்டினாள் மீண்டும் அவனிடம்..
சர்வா அவளின் பதிலில் சற்று மிரண்டு தான் போனான், ஆனாலும்”எனக்கு வேணாம்”என்றான்..
“இவ்ளோ பால் என்னால குடிக்க முடியாது சார், நீங்க குடிங்க நான் அப்புறம் குடிக்குறேன்.”என்றாள் பொறுமையாக.. அவளின் கண்கள் எல்லாம் நீர் வெளிவந்துக் கொண்டிருந்தது ஏற்கனவே நிரம்பிய குளத்தில் இருந்து..
அதை இப்போது தான் கவனித்தான் சர்வா..
அவனுக்கும் கொஞ்சம் நிதானம் வந்தது..
“இப்ப எதுக்கு அழுதுட்டு நிக்குற..?”
“ஒன்னுமில்ல சார், நீங்க இதை குடிங்க” என நீட்டினாள்..
எல்லாத்துக்கும் மேல அம்லுக்கு கால் வலி வேறு படுத்தியது.
படுத்தால் போதும் என்றிருந்தது..
“உனக்கு நான் இந்த பாலை குடிக்கனும் அதானே, உன் அம்மா சொல்லிட்டாங்க நான் குடிச்சிட்டு தர மிச்சப் பாலை வாங்கி குடிக்க சொல்லி, கொண்டா இங்க..” என அவளிடம் இருந்து கிளாஸை வேகமாக வாங்கியவன், மடமடனு குடித்துவிட்டு பாதியை அவளின் கையில் திணித்தான்..
திணித்த வேகத்தில் பால் லேசாக சிந்தியது..
அம்லு அதை எடுத்துட்டுப் போய் டேபிளில் வைத்தாள், மனம் கேட்காமல் பாலை திரும்பி பார்த்தாள்.
அவளுக்கு வீணாக்குறமோ என தோன்ற, அந்த கிளாஸை எடுத்து கடகடவென்று குடித்தாள், குடித்துக் கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் வழிந்தது.
சர்வாவும் அவளை பார்த்தப்படி தான் இருந்தான்..
சர்வா ஒன்னும் கொடுமைக்காரன் இல்லை, ஆனால் அவனுக்கு ஏனோ மீனாட்சி அம்மா செய்தது பிடிக்கவில்லை, அதோடு உள்ளே வந்தவனுக்கு இந்த ஃபர்ஸ்ட் நைட் அலங்காரம் அதிக கோபத்தை கொடுத்திருந்தது..
அதை எல்லாம் அம்லுவிடம் மொத்தமாக கொட்டினான்..
அம்லு மெதுவாக நடந்து வந்து, கட்டிலின் மறு ஓரம் படுக்க சென்றாள், ஆனால் கால்களை தூக்கி வைக்க முடியாமல் நின்றவள், அங்கு கிடந்த தலையணையை எடுத்து கீழேப் போட்டு, அப்பிடியே அமர்ந்துப் படுத்தாள்..
ஆனால் படுத்து காலை நீட்டும் போது வலி விண்ணென்று தெரித்தது..
அந்த நேரத்தில் பல்லை உதட்டில் கடித்துக் கொண்டாள், சத்தம் வெளியில் வராமல்..
சர்வா”நிரஞ்சி! இப்ப எதுக்கு வெறும் தரையில் படுத்திருக்க, எனக்கு உன் அம்மா பண்ணது தான் புடிக்கலனு சொன்னேன், அதுக்காக நீ இப்பிடி போய் தரையில் படுனு சொல்லல, வேணுனா நீ பெட்டில் யுவியோடு படு, நான் போய் வெளியில் ஷொபாவில் தூங்குறேன்” என்றான்..
நிரஞ்சிக்கு பக்கென்று இருந்தது, அவ்ளோ தான் அம்மா நாளைக்கு ஊருக்குப் போகும் போது ஒப்பாரி வச்சுட்டு தான் போகும் என எண்ணியவள், “இல்ல சார்! எனக்கு இது பழக்கம் தான், பிரச்சனையில்லை.. நீங்க தூங்குங்க”என்றாள்..
“சரி, யுவி தான் படுத்து இருக்கான்ல, இது பெரிய கட்டில் தானே, வந்து அந்தப் பக்கம் படு”
மனதில் அங்க ஏற தான் கால் வலிக்குது என நினைத்து, “ஒன்னும் கஷ்டம் இல்லை சார், நீங்க படுங்க”என கண்களை மூடினாள்..
சர்வாக்கு கோபம் வந்தது, ஆனால் அதற்கு மேல் அவளை கண்டுக்காமல் எழுந்து பாத் ரூம் போயிட்டு திரும்பும் போது அவளின் காலில் இடித்து விட்டான்..
அம்லு”ஆ!”என வலியில் கத்தி விட்டாள்..
“ஹேய் சாரி, தெரியாம பட்டுச்சு..”
அம்லுக்கு வலியில் கண்களில் தண்ணீர் வர, அதனை மறைத்து”ம்ம்ம்! பரவாயில்லை சார்”என்றாள்..
சர்வா சென்று படுக்கையில் விழுந்தான்..
கண்களை மூடியவனுக்கு மனதில் உள்ள கோபங்கள் குறைந்திருந்தது..
கண்களை திறந்தான், மல்லிகைப் பூவின் வாசம் இப்போது தான் மூக்கில் சுவாசித்தது, இவ்வளவு நேரம் கோபத்தின் உச்சம் மூக்கின் ஓட்டையை எல்லாம் அடைத்து வைத்திருந்தது..
இப்போது மூளை அமைதியடைய, திரும்பி யுவியைப் பார்த்தான்..
அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான், அவனின் தலையை கோதி நெற்றியில் முத்தம் வைத்தவனுக்கு, அம்லுவின் கால் கொலுசொலி கேட்டது.
முதலில் உணர்வில் புலப்படாத ஒன்று, இப்போது உணர்வில் தலைக் காட்ட, சட்டென்று எழுந்தமர்ந்தான் சர்வா.
தான் இடித்த காலை எட்டிப் பார்த்தான், அம்லுவின் வலது கால் தான் போல என யோசித்தவனுக்கு, அவளின் ஆ! என்ற குரலின் வீரியம் இப்போது புரிந்தது..
“நிரஞ்சி!”என்றழைத்தான்..
மெதுவாக கண்களை திறந்தாள், அவனை நோக்கி தான் படுத்திருந்தாள்..
“என்ன சார், எதும் வேணுமா..?”
“இல்ல! உன்னோட கால் எப்பிடி இருக்கு..?”
அவளுக்கு புரியவில்லை, இவரு ஏன் காலை பத்தி விசாரிக்குறாருனு..
“நல்லா தான் இருக்கு”என்றாள் மெதுவாக..
“உண்மையை சொல்லு நிரஞ்சி”
“நீங்க தூங்குங்க சார், என் கால் தானே அது காலையில் சரியாகிடும்..”
சர்வா எழுந்து அவள் அருகில் சென்றான, “எங்க காட்டு..?”
“வேணாம் சார்!”
“நிரஞ்சி! சொன்னதை செய்”என்றான் வேகமாக..
உடனே லேசாக புடவையை விலக்கி வலது காலை காட்டினாள் மெதுவாக எழுந்தமர்ந்து..
அது நல்ல வீக்கமாக இருந்தது, “ஹேய்! இது என்ன இவ்வளவு வீக்கமா இருக்கு, ஏன் உன் அம்மா, அண்ணி கிட்ட சொல்லலையா..?”
“ம்ம்ம்! இல்ல சார், அம்மா அப்புறம் என் காலையே பாத்துட்டு இருக்கும் என்ன ஆச்சு எப்பிடி ஆச்சுனு.. அதான் காலையில் சரியாகிடும்.”
“லூசா நீ, ஏதாவது பண்ணா தானே இந்த ஸ்வெல்லிங் குறையும். தானா எப்பிடி சரியாகும்.. முதலில் எழுந்திரிச்சு வா கட்டிலில் படு..”
“இல்ல இருக்கட்டும் சார்..”
“இங்க பாரு, ரொம்ப பண்ணாத, அப்புறம் எனக்கு இன்னொரு முகம் இருக்கு அதை காட்ட வேண்டி வரும்..” என அதட்டினான் வேகமாக..
அவ்ளோதான் அம்லு அழுதே விட்டாள் கண்களில் நீர் கொட்ட..
“இப்ப எதுக்கு அழுவுற…..? ஸ்டாப் இட் நிரஞ்சி..”
“சார்! எனக்கு அந்த பெட் கொஞ்சம் உயரமா இருந்துச்சு, ஏற முடியலை அதான் கீழே படுத்தேன். மத்தப்படி வேறெதுவும் இல்லை..”என அழுகையின் நடுவே கூறினாள்..
சர்வா திரும்பி கட்டிலைப் பார்த்தான்..
ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, “சொன்னா தானே புரியும் அம்லு!” என்றவன், எழுந்து அம்லுவை அப்பிடியே தூக்கினான் இரு கைகளிலும்..
“சார்! என்ன பண்றீங்க, விடுங்க நானே எழ முயற்சிப் பண்றேன்..”என நெளிந்தாள்..
“ஷ்ஷ்ஷ்! பேசாம இரு நீ”என அவளை மெதுவாக தூக்கிட்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தான், கைகள் அவளின் இடையை உரசி வெளிவந்தது..
சர்வாக்கு ஒரு நொடி அந்த வெற்றிடை தொடுதல் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வைக் கொடுத்தது.
அதை பொருட்படுத்தாது, பாத் ரூம் சென்று ஒரு கப்பில் சுடுநீர் பிடித்து வந்தான், ஒரு துணியை எடுத்து அதில் நனைத்து அவளின் காலில் மெதுவாக அழுத்தி தேய்த்து ஒத்தடம் கொடுத்து விட்டான்..
அம்லுக்கு வலி உயிர் வரை சென்றது, எங்கே அவள் கத்தினாள், யுவிக்கு டிஸ்டர்ப் ஆகுமோனு, பற்களை மட்டுமே அழுத்தி வலியைப் பொறுத்துக் கொண்டாள்..
“வேணாம் சார்! நீங்க போய் காலை புடிச்சுட்டு, பரவாயில்லை விடுங்க”என மறுத்தாள்..
“காலையிலே மருந்து போட்டு இருந்தா இப்ப ப்ரீயா இருந்திருக்கும் அம்லு” என்று மேலும் ஒத்தடம் கொடுத்தான்..
“ம்ம்ம்! அம்மா கிட்ட சொல்ல பயம், கோயிலில் விழுந்தேனு சொன்னா இன்னைக்கு போய் விழுந்தியானு கஷ்டப்படும், அதான் எதுக்குனு சொல்லல”
“அட்லீஸ்ட் என் கிட்டையாவது இங்க வந்ததும் சொல்லி இருக்கலாமுல அம்லு”என்றான்.
“சார்! நீங்க தான் கோபமா இருந்தீங்கள, அதான் எதுவும் சொல்லல, இதுக்கும் திட்டிட்டீங்கனா..?”என்றாள் மெதுவாக..
சர்வாக்கு புரிந்தது, “சாரி அம்லு!” என்றான் அவளை நிமிர்ந்துப் பார்த்து..
“இருக்கட்டும் சார், பரவாயில்லை நீங்க சாரி எல்லாம் சொல்ல வேணாம், நான் தான் உங்க வைய்ப் ஆச்சே, திட்டலாம் திட்டலாம்” என்றாள் அழகாக சிரித்து.
சர்வாக்கு மனசு ஏதோ உறுத்தியது, இத்தனை நாட்களில் அம்லுவை இப்பிடி திட்டியது இல்லை, ஆனால் இன்று இந்தளவு திட்ட பொண்டாட்டி என்ற உரிமையா..? பொண்டாட்டினா திட்டனுமா.? ச்சே! நானும் சராசரி ஆம்பளையா பிகேவ் பண்ணிட்டனோ என வருந்தினான்..
“இல்ல அம்லு! எனக்கு ஏன் இப்பிடி கோபம் வந்துச்சுனு தெரியல, எல்லாமே அடுத்தடுத்து ஒரு மாதிரி புடிக்காம நடந்ததால் ப்ரஷர் ஆகிட்டு, பட் உன்னைய ரொம்ப திட்டிட்டேன், சாரி..” என்றான் மறுபடியும்.
அவளின் கால்களில் அடுத்து வலிக்கான ஸ்பேரையை எடுத்து அடித்து விட்டான், ஒரு தலையணையை எடுத்து அந்த காலுக்கு அடியில் வைத்து, காலை மெதுவாக வருடினான் வலிக்கு இதமாக.
“சார்! நீங்க என்னைய அம்லுனு கூப்புட்டதும் தான் எனக்கு பயமே போனுச்சு, ஸ்ப்பாபா ரொம்ப பயந்துட்டேன்”
“நீ தலை ஆட்டும் போது, உன் ஜிமிக்கியும் செமயா டான்ஸ் ஆடுது அம்லு, அதனால நீ மெதுவா தலையை ஆட்டு”என கிண்டல் செய்தான்..
“போங்க சார்! எனக்கு இந்த ஜிமிக்கி ரொம்ப புடிக்கும், இப்பிடி நான் ஆட்டும் போது எது நல்லா ஆடுதுனு ஒன்னு ஒன்னா போட்டுப் பாத்து தான் இதை வாங்கினேன், எப்பிடி நல்லா ஆடுதா..” என அவனுக்கு இருப்பக்கமும் ஆட்டிக் காட்டினாள்..
அதுவோ முதல் ராத்திரியில் இரண்டும் பேசிக்கொள்வதை பார்த்து நக்கலாக டான்ஸ் ஆடியது..
சர்வாக்கு அவளின் பதில் ஏதோ புது உணர்வை புதுப்பித்தது..
அப்பிடியே தலையில் இருந்து கைகளை இரு நெற்றிப் பொட்டுக்கு கொண்டு வந்தவன், “நீ ரொம்ப இனோசென்ட் அம்லு, இது நல்லதுக்கா, இல்ல கெட்டதுக்கானு தெரியல, ஆனா உனக்கு கெட்டது நடக்காது, நான் இருக்கேன் சரியா..?”என அவளின் நெற்றியில் முட்டி சிரித்தான்..
“ம்ம்ம்! நீங்க இன்னைக்கு காலையில் இருந்து வேற மாதிரி தெரிஞ்சீங்க, இப்ப தான் என்னோட சர்வா சார் மாதிரி பேசுறீங்க, இப்பிடியே இருங்க சார் ப்ளீஸ்.”என்றாள் கன்னங்கள் உப்ப கண்களில் கெஞ்சி சிரித்தப்படி..
“ம்ம்ம்! கண்டிப்பா, நீ இப்ப தூங்கு, ஓகெவா..”என அவளிடம் இருந்து விலகி தன் படுக்கைக்கு சென்றான்..
படுத்ததும் கண்களை மூடி நித்திரைக்கு சென்றான்..
சர்வா நல்லவன் தான் அம்லுக்கு ரொம்ப நல்லவன் தான், ஆனால் அம்லுவின் அப்பாவிதனம், அம்லு அம்மாவின் ஆசை என மாறி மாறி அவனை சுழற்றி அடிக்கப் போகின்றது..
அவளுக்கு சந்திரனும், சூரியனுமாய் காட்சி அளிக்கப் போகின்றான் சர்வானந்தன்.