சூரிய வெளிச்சம் மெலிதாக தெரிந்தது அறைக்குள் திரைசீலையைத் தாண்டி..
கண்விழித்த சர்வா, அவனின் அறை என்றாலும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான், மல்லிகைப் பூ நறுமணம் அறை எங்கும் வீசியது..
ஏசி அறையில் பூவின் நறுமணத்தின் வீரியம் குறையாமல் நாசியில் மோதியது..
திரும்பி பார்த்தான் யுவி இன்னும் உறக்கத்தில் இருந்தான்..
அடுத்து உறங்கியவள் மீது பார்வை சென்றது, நேற்று கட்டியப் புது மஞ்சள் தாலி மார்பின் மேல் கிடக்க, தூக்கத்தில் புடவை எல்லாம் விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அம்லு பூசினாற்போல் உடல்வாகு கொண்டவள் என்பது சர்வா அறிந்ததே, ஆனால் புடவையில் வசீகரத்துடன் தெரிந்தாள், அம்லுவா இது என்ற கேள்வி சர்வாக்கு தோன்றியது..
புடவை வயிற்றை மறைக்காமல், கால்களையும் முட்டிவரை காட்டியவாறு, போர்வை எங்கோ கிடக்க, கையை நெற்றிக்கு மேல் வைத்து உறங்கியவளை நிமிடத்திற்குள் பார்த்தவன், திரும்பினான் மறுப்பக்கம்..
எழுந்து போர்வையை எடுத்து யுவி மற்றும் அம்லுக்கு சேர்த்துப் போர்த்தி விட்டான்..
யுவியின் முகத்தில் சிரிப்பு தெரிய, அதை ரசித்தவன் மெதுவாக சென்று மகனின் நெற்றியில் முத்தம் வைத்தான்.
அப்பிடியே அம்லுவை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது, தூங்கும் போது தன் ஆடைகள் விலகி இருப்பது கூடத் தெரியாமல் தூங்குறாளே என அவளின் நெற்றியில் கைவைத்தவன், தட்டிக் கொடுத்தான் மெதுவாக..
அவனுக்கு சட்டென்று தோன்றியது ஒரு விஷயம், ‘இப்ப யுவி எழுந்து இந்த ரூம் டெக்ரேசனை பாத்தா, கேள்வியாய் கேப்பானே. முதலில் இதை எல்லாம் எடுத்து சுத்தம் செய்யனும்’என மாலையாய் தொங்கிய பூவைக் கழட்ட ஆரம்பித்தான்..
சர்வாக்கு மனம் வேணாம்! வேணாம்! என தடுத்தும் முதல் கல்யாணத்தின் முதல் இரவிற்கு சென்றது..
சந்திரா..? என முகத்தை சுளித்தான். பிரபாவின் பிளானில் அலங்காரம் நிறைவேறியது அறைக்கு, சர்வா சித்தியை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினாலும், முதல் இரவை சந்திராவோடு அந்த அலங்காரக் கட்டிலில் கொண்டாடினான் தான்.
அவனுக்கு இயற்கையான உணர்வுகள் மேலோங்க, சந்திரா மனைவி, அவனுக்கு முதல் இரவு அந்த உரிமையில் அந்த இரவை அனுபவித்தான் முழுமையாக, அவனுக்கு இணையாக சந்திராவும் ஒத்துழைத்தாள், ஆனால் பின்னாளில் சந்திரா அந்த உறவை கொச்சைப்படுத்தினாள் கேவலமாக, அதாவது அவளின் காதலன் கோகுலை நினைத்து தான் உங்களோடு உறவுக் கொண்டேன் என்று கூறிய அவளை சர்வா அன்றே முற்றிலும் வெறுத்து ஒதுக்கினான்.
அவனின் ஆண்மைக்கே அது இழப்பாக இருந்தது, பல நாட்கள் அதை நினைத்து வருந்தி இருக்கான், பெரிதாக ஒன்னும் சர்வாவும், சந்திராவும் உறவில் ஈடுப்படவில்லை, முதல் திருமண நாளில் ஏற்பட்ட முதல் உறவு தான், அடுத்து வந்த நாட்களில் ஓரிரு முறை சர்வா தான் முயற்சித்தான், அப்போது அவனுக்கு தெரியாது சந்திரா தன்னை நினைக்காமல் கோகுலை நினைத்து உறவாடுகிறாள் என்று…
அந்த மாதத்திலே சந்திரா கருவுற்றாள், அதன் பிறகு அவர்கள் கூடல் என்பது நடக்கவே இல்லை, யுவியே பெரிய தொடர்பானான் சர்வாக்கு..
சில நேரங்களில் சர்வா பழைய நிகழ்வுகளில் மூழ்கும் போது, அந்த ஒரு மாத உறவில் நான் மலட்டுத் தன்மையோடு இருந்திருக்க கூடாத..? என்று எல்லாம் வெறுத்திருக்கான்..
அடுத்த கணமே யுவி கிடைத்திருக்க மாட்டானே என ஆறுதல் அடைவான்.
இப்பிடிப் பட்ட மனநிலையில் இருப்பவனை மீனாட்சி அம்லுவோடு உடனே சேர்க்க நினைத்தால் அது முடியுமா…?
ப்ரஷர் குக்கரில் பொருளின் அளவு, தண்ணீர் அதிகமாக இருக்கும் போது அனல் கூடுதலாக பொங்கி கவிழும்.
அதுவே அனல் மெல்ல இருந்தால் நின்னு கொதித்து விசில் வரும்..
குக்கரே அவசரத்துக்கு தான், அதுல குறைந்த அனலில் சமைப்பதா…?
ஆமாங்க! இருக்குறதே ஒரு குக்கர்னா அதில் நிறைய போட்டு வேக வைக்க வேண்டிய கட்டாயத்தில் அனல் குறைத்து தான் ஆகனும்..
சர்வாக்கும் இருப்பது ஒரு மனசு தானே, அதில் ஏற்கனவே கொள்ளளவு அனுபவம் வேதனையாக இருக்கும் போது, அத பண்ணு, இத பண்ணு முறை மண்ணாங்கட்டினு பேசினால், அவனுக்கு அம்லு மீது வெறுப்பு வராமல் இருப்பதே ஆச்சிரியமே!
அப்பிடியும் அவளின் முகம் அவனை மெல்ல மெல்ல அமைதிப்படுத்துகிறது..
மனதை பலவற்றில் இருந்து மீட்ட சர்வா, இந்த நிமிடம் மனைவியாக இருப்பவளை திரும்பி பார்த்தான்..
இரவு அம்லு சொன்னது நினைவு வந்தது அவனுக்கு, இப்ப தான் என்னோட சர்வா சார் மாதிரி தெரியுறீங்க, இப்பிடியே இருங்கனு..
சர்வாவின் மனம் ஏதோ ஒன்றை உணர்த்தியது..
‘அன்று அவள் யாரையோ நினைத்து உன் கூட உறவில் இருந்தா, இவ நீ நீயா இருக்கனு சொல்லி சந்தோஷப்படுறா, இவளோட உன் வாழ்க்கை உனக்கு மட்டும் தான்டா’ என்றது.
சர்வா அதை பொருட்படுத்தாமல், மனம் யோசிப்பதை தூக்கிப் போட்டு அறையை சுத்தம் செய்ய தொடங்கினான்..
ஏதோ தோன்ற கண் முழித்த நிரஞ்சி, அறையை சுத்தம் செய்யும் சர்வாவைப் பார்த்தாள்..
உடனே எழுந்தமர்ந்தாள், “சார்! என்ன பண்றீங்க…?”
திரும்பியவன்”குட் மார்னிங் மேடம், இதை எல்லாம் யுவி பாத்தா என்னனு கேப்பானுல அதான் சுத்தம் செய்றேன்”
“ஓ! இருங்க நான் சுத்தம் பண்றேன்..” என எழுந்தாள்..
“ஹேய் இரு! இரு! கால் வலி ஓகேவா…?”
“ம்ம்ம்! ஓகே சார், அதை மறந்தே போயிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லை”என மெதுவாக இறங்கி கால் வைத்தாள், நேற்று இருந்த வலி இல்லை, வீக்கம் குறைந்து காணப்பட்டது நன்கு..
“சார்! நீங்க நல்ல கைராசி டாக்டர் தான். உங்க கை பட்டதும் வீக்கம் குறைஞ்சு, வலிக்கூட லேசா தான் இருக்கு”என நிரஞ்சி புகழ்ந்தாள் அவனை..
“ம்ம்ம்! ஒரு புரோப்சரை டாக்டர் ஆக்கின பெருமை உன்னையே சேரட்டும்”என சிரித்தான்.. கையில் இருந்த மல்லிகைப் பூவை குப்பைக் கூடையில் போக சென்றவனை குரல் கொடுத்து தடுத்தாள்..
“சார்! ஒரு நிமிஷம்..”
“என்ன..?”
“இருங்க சார்!”என அவன் அருகில் சென்றவள், “அய்யோ சார்! இந்த பூ எல்லாம் வாடவே இல்லை, அப்பிடியே இருக்கு அதை போய் குப்பையில் போடப் போறீங்க, இங்க கொடுங்க சார் நான் தலையில் வச்சுக்குறேன், குளிச்சுட்டு” என கையை நீட்டினாள்..
“ஏசி ரூமில் இருந்ததால் சீக்கிரம் வாடல போல, இருந்தாலும் நேத்து மாட்டி விட்டதுல, உனக்கு வேணா புதுசா வாங்கி வச்சுக்கோ”என்றான் அவன்..
“அடப்பரவாயில்லை சார், இது என்ன கட்டிலில் தொங்கவிட்டது தானே, யாரு தலையில் வச்சதை தான் அம்மா வைக்க கூடாதுனு சொல்லும். இதை வைக்கலாம் எனக்கு மல்லிகைப் பூவுனா ரொம்ப இஷ்டம், கொடுங்க இங்க”என வாங்கியவள், டேபிள் மீது வைத்துவிட்டு,
“சரி சார்! நான் போய் அந்த ரூமில் குளிச்சுட்டு வரேன், அங்க தான் என் டிரஸ் எல்லாம் இருக்கு”என விலகி சென்றாள்.
எதையுமே வேஸ்ட் பண்ண மனசே இல்ல போல இவளுக்கு, நைட் பாலையும் அப்பிடி தான் குடிச்சா என நினைத்து சர்வா சிரித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றான்..
அம்லு அந்த அறைக்குள் நுழைய, அம்மாவும் சாந்தியும் அமர்ந்திருந்தனர்..
“அம்லு! எழுந்திரிச்சுட்டியா…?”என்றாள் சாந்தி..
“ம்ம்ம்! அண்ணி, இருங்க குளிச்சுட்டு வரேன்..”என கப்போர்ட்டில் இருந்த துணியை எடுத்தாள்..
“என்ன அத்த, முதல் ராத்திரி முடிஞ்சு வரவ கிட்ட கேக்குற கேள்வியா இது, சந்தோஷமா இருந்தீயானு கேக்காம, நல்லா தூங்குனீயானு கேக்குறீங்க”
“ஆமா! அவ வந்த கோலத்தை பாத்தாலே தெரியலையா..?”
“ம்ம்ம்! பாத்தேன் தான்”
“மாப்பிள்ளை அவரு புள்ளையை தூக்கிட்டுப் போகும் போதே தெரியும் எனக்கு, இப்பிடி தானு.. நேத்து ரெண்டுப் பேருக்கும் முதல் ராத்திரி, நேத்து மட்டுமாவது அந்த பையனை பாட்டியோடு தூங்க வச்சு இருக்கலாம், யாரு சொல்றது அவருக்கு, அப்புறம் எப்பிடி அவங்களுக்கு அன்னியோனியம் வரும் அந்த புள்ளையை நடுவில் போட்டு தூங்கினா..”என வருத்தமாக கூறினார்..
“விடு அத்த, நம்ம அம்லுக்கு எடுத்து சொல்லிட்டுப் போவோம், இப்பிடி அப்பிடி நடந்துக்கோனு, அடுத்த வருசத்தில் ஒரு பிள்ளையை பெத்து கொடுக்கனுமுனு சொல்லிட்டா போது..”என்று சிரித்தாள் சாந்தி..
மீனாட்சியும் முகத்தில் தெளிவுப் பெற, “ம்ம்ம்! உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டுமுடி..”என்றார்..
அறையின் வெளியில், பாத்ரூம் சென்ற சர்வா பூவை அம்லுகிட்ட கொடுக்க நினைத்து அவள் பின்னாலே வந்தவன் அப்பிடியே நின்றான்..
மீனாட்சி, சாந்தி பேசியதில் அவனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, யுவியை அவங்க பொண்ணு வாழ்க்கையில் இடைஞ்சலாக நினைப்பதாக யோசித்தான், அதுவும் அடுத்த வருசத்தில் குழந்தையா..? இவங்களுக்கு எப்பிடி இப்பிடி எல்லாம் தோணுது.. என கடுப்பாகி தன் அறைக்கே சென்றான்..
சர்வா கண்டுக்கொள்ளாமல் இருக்க. அம்லு மனதில்’அய்யோ சாருக்கு கோபம் வந்துடப் போதே..’என யோசித்தாள்..
“ஐ அம்லு! அப்ப அப்பாவை சர்வானு கூப்புடு.. பிருந்தா அத்தை, ரேவதி அத்தை எல்லாம் பேரு சொல்லி தானே கூப்புடுறாங்க”என்றான் யுவி.
“ஐய்யோ! யுவி நீ சின்ன புள்ளை, உனக்கு தெரியாது, அப்பிடி எல்லாம் கூப்புடக் கூடாது, அம்லு அது சின்னப்புள்ள சொல்லுதுனு அப்பிடி கூப்புடுறாத”என்றார் மீனாட்சி..
பாட்டியும் அதே சொல்லி சிரிக்க, “பாட்டி! அப்ப இருந்து பழகிட்டு சாருனு திடீருனு பேரு சொல்லி கூப்புட வரலை.. கொஞ்ச நாள் போகட்டுமே..”என்றாள் கெஞ்சியவாறு..
“அம்லு! அவங்க ஏதோ சொல்றாங்கனு நீ அப்பிடி கூப்புடாதடி, நம்ம பக்கம் யாரும் அப்பிடி கூப்புட மாட்டாங்க”
“அம்மா!”என்றாள் முழித்து..
“இதுல என்ன இருக்கு, உங்க ஊருப் பக்கம் கூப்புட மாட்டாங்கனா, நிரஞ்சி தான் இந்த ஊருக்கு வந்துட்டாளே அது எல்லாம் மாத்திக்கலாம். பிரச்சனையில்லை, நீ காலேஜில் மட்டும் பேரு சொல்லாத”என்றான் மீனாட்சிக்கு எதிராக..
“மாப்பிள்ளை! அம்லுக்கு இனிமே எதுக்கு படிப்பு எல்லாம். அவ வீட்டுலையே இருக்கட்டும், அது முடிக்க இன்னும் மூன்னு வருசம் இருக்கு அதுக்குள்ள ஏதாவது விசேஷமுனா சிரமமா இருக்கும், அவ வீட்டுலையே இருக்கட்டும்”என்றார் மீனாட்சி..
அவ்வளவு தான் சர்வாக்கு மண்டைக்கு ஏறியது கோபம்..
ஆனால் பொது இடம், மரியாதை கருதி “நிரஞ்சி படிப்பது அவளோட நல்லதுக்காக, அதை ஏன் நிறுத்தனும், அவ படிச்சுமுடிக்கட்டும்”என்றான்..
“அவ படிச்சு என்ன செய்ய போறா மாப்பிள்ளை, வீட்டுல புருசன், புள்ளைங்களை பாக்குறதுக்கு எதுக்கு வீணா அலையனும், வீட்டில் இருந்தா தானே நல்லது”
“அவ படிக்கட்டுமுனு அன்னைக்கு நீங்க தானே சொன்னீங்க, அப்புறம் என்ன..?” என்றான் மனதில் கோபத்தை அடக்கி கொண்டு..
“மீனாட்சி! அம்லு வேற எங்கயவா படிக்க போறா, நம்ம காலேஜுக்கு தானே சர்வாவும் அங்க தானே இருக்கான், படிக்க போகட்டும் விடுங்க”என்றார் பாட்டி..
“இல்லம்மா! இவளை காலேஜ் படிக்கவே நான் அனுப்புல, முன்னாடி வந்தவன் அவனோட உபயோகத்திற்கு காலேஜ் அனுப்பிட்டான், இப்ப தான் வாழ்க்கை மாறிட்டே, அவளுக்கு என்ன புரியும் சின்னப்பொண்ணு, நமக்கு தெரியாததா..? கல்யாணம் ஆகி புருசன் கூட இருக்கும் போது காலேஜ் எல்லாம் போனா சரி வருமா..?”என்றார்..
சர்வா இனி அவரிடம் பேசுவது வீண் என உணர, “நிரஞ்சி!”என்றான் சற்று அழுத்தமாக..
அவனின் நிரஞ்சி என்ற அழைப்பிலே அவனின் கோபம் தெரிந்தது..
“உனக்காக தானே இங்க பேச்சு நடக்குது, நீ பாட்டுக்கும் அமைதியா நின்னா என்ன அர்த்தம். உனக்கு படிக்க விருப்பம் இருக்கா…? இல்லையா..?” என்றான் வேகமாக..
“இருக்கு! இருக்கு!”என தலையை வேகமாக ஆட்டினாள் பயத்தில்..
அவளின் தலை ஆடிய வேகத்தில் அவளின் ஜிமிக்கி ஆட, அந்த டான்ஸோ இவ்வளவு ரணக்களத்திலும் சர்வா கண்ணிற்கு அது காட்சியளித்தது..
நொடியில் தன்னை மீட்டவன், “கேட்டா தான் சொல்வீயா…? பேச்சு நடக்கும் போதே ஆமா! நான் படிக்கனுமுனு சொல்ல வேண்டியது தானே, உனக்கு பேச சப்ஸ்டுயுட்டா போட முடியும், உனக்கு வேணுனா நீ தான் பேசனும்.. புரியுதா..?”
“இங்க பாருங்க, நிரஞ்சியை கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு, அது மட்டுமில்லை அவளுக்கு பதினெட்டு வயசு முடிஞ்சு மேஜர் ஆகிட்டா, அவ ஒன்னும் சின்னப்பொண்ணு இல்லை. படிப்பது அவளுக்கு விருப்பமுனா படிக்கட்டும், உங்க விருப்பத்தை திணிக்காதீங்க, எந்த விஷயத்திலும்” என்றான் அழுத்தமாக அதே நேரத்தில் சற்று அதட்டலாக..
அவனுக்கு மீனாட்சி மீது அந்தளவு கோபம், ஆனால் அதை வெளிக்காட்டினால் நிரஞ்சி வருத்தப்படுவானு அடக்கினான்..
மீனாட்சி அமைதியானார்..
சாந்தி”விடு அத்த! அவ புருசனே படிக்க சொல்றார், அவங்க குடும்பமாச்சு இனி..” என ஆறுதல் செய்தாள்..
ராகு குடும்பம் வந்தது, பிருந்தா, அன்பு ராகு, பரத் மட்டுமே வந்தனர்..
“என்ன பிருந்தா உன் அம்மா வரலையா..?”என்று கேட்டார் பாட்டி..
“இல்ல பாட்டி.”
“ஏன்..?”
“அத உங்க பையன் கிட்டயே கேளுங்க..”
“ஏன் நீ சொல்ல மாட்டீயா..?”
“அதப்பத்தி எல்லாம் சொல்ல எனக்கு விருப்பம் இல்ல”என முகத்தை சுளித்தாள்..
அனைவருமே ஹாலில் தான் இருந்தனர்..
“பிருந்தா! என்ன பேச்சு இது..?”என கண்டித்தான் சர்வா..
“அண்ணா!”என அவளும் அமைதியானாள் மெதுவாக..
“ராகு! நீ சொல்லு..”என்றார் தாயார்..
“அம்மா! அது வந்து, அவ அண்ணன் மகளுக்கு காலையிலே வலி வந்துட்டுனு சொன்னாங்க, குழந்தைப் பிறந்துட்டாம், அதான் அங்க பாக்க போய் இருக்கா…” என்றார் ராகு..
சந்திராக்கு தான் குழந்தைப் பிறந்திருக்கு.. அது புரியாமல் இல்லை..
“ஓ!”என பரத்தைப் பார்த்த பாட்டி, “ஏன் தாய்மாமன் போகலையோ..?”
“பாட்டி! எனக்கு எல்லாம் அந்த உறவு இல்லை, என்னோட உறவு இதோ யுவி இருக்கான்”என்றான் பரத் புடிக்காத முகத்தோடு.
“ராகு! உன் பொண்டாட்டிக்கு இங்க வரதை விட அங்க போறது தான் முக்கியமா போச்சா..?”என்றார் குற்றப் பார்வையோடு..
“அம்மா! நான் சொல்லிட்டேன் அதுக்கு மேல அவ விருப்பம்..”
பாட்டி ஆரம்பிக்க, “கொஞ்சம் நிறுத்துறீங்களா பாட்டி, அவங்க விருப்பம் அது போறது போகாதது, இப்ப எதுக்கு உங்களுக்கு நீதிபதி வேலை, நான் மறுத்து வேண்டானு சொன்ன உறவை நீங்க பேசி பேசி ஞாபகப்படுத்திட்டே இருக்கீங்க, எதுக்கு உங்களுக்கு இந்த வேலை. தயவு செய்து விடுங்க..”என கோபமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.
மீனாட்சி, சாந்திக்கு முதலில் புரியவில்லை பிறகு பாட்டி விளக்கிட, ‘ஓ’ என்றனர்..
அம்லுக்கு சர்வா நினைத்துப் பாவமாக இருந்தது, அறைக்குள் சென்று தன் ஃபோனை எடுத்து உடனே மெசேஜ் போட்டாள்..
“சார்! கவலைப்படாதீங்க, பாத்து மெதுவா கார் ஓட்டுங்க”என எழுதி அனுப்பினாள்..