எப்போதும் போல் ஒன்பது மணிக்கு தயாராகிய மான்சி, தன் அறையில் இருந்து வெளி வந்தவள், தன் அறையின் கதவை அடைக்கும் வேளயில் , தன் எதிர் அறையான அவளின் தம்பி நவீன் அறையில் அவன் இருப்பதற்க்கான அரவத்தில், இவன் ஏன் இன்னும் பள்ளிக்கு போகாது இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே தம்பியின் அறையை நோக்கி சென்றாள்.
அங்கு பள்ளி செல்லும் உடை அணிந்து, நகத்தை கடித்துக் கொண்டு தன் எதிரில் மாட்டி இருந்த நேரக்காட்டியை பார்த்து கொண்டு இருந்தவனின் அருகில் சென்ற மான்சி.
“ என்னடா இன்னும் ஸ்கூல் போகல. நேத்து தான் நாளையில் இருந்து சீக்கிரம் போகனும். மாடல் எக்ஸாம் ஸ்டாட் செய்துட்டாங்க என்று சொன்ன.. ஆனால் இன்னும் போகாது வீட்டில் இருக்க.” என்ற அக்காவின் கேள்விக்கு, நவீன் சங்கடத்துடன் தலை குனிந்து வாறே.
“ அவர் வந்து இருக்கார் அக்கா.” என்ற அவனின் பதிலில் மான்சி ஒரு நிமிடம் எதுவும் பேசாது அமைதி காத்தாள்.
பின் யோசித்தவள் சமையல் அறையில் இருக்கும் பேசிக்கு தொடர்பு கொண்டு, வீட்டை மேற்பார்வை இடும் சரோஜாவிடம் ..
“ எனக்கும் தம்பிக்கும் ப்ரேக் பாஸ்ட்டை நவீன் ரூமுக்கே கொடுத்து விடுங்க.” என்று சொல்லி விட்டு, தன் தம்பியின் பக்கம் பார்வையை திருப்பிய மான்சி.
“ எதற்க்கும் ஒரு செலுஷன் இருக்கு நவீன். இந்த வருடம் உனக்கு பொது தேர்வு. பள்ளியில் என்ன சொல்றாங்கலோ, அது படி கேட்டு நடந்தால், நீ கண்டிப்பா நீ எதிர் பார்க்கும் மதிப்பெண் வாங்கி விடலாம்.
டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு மட்டும் இருந்தால் போதாது. அதற்க்கு உண்டான வேலையையும் பார்க்கனும். என்ன புரியுதா..?” என்று பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும், அதுவும் எப்போதுமே முதல் மதிப்பெண் எடுக்கும் தம்பி.
இது போல் வரும் ஒரு சில இடஞ்சல்களால் , டாக்டர் ஆக வேண்டும் என்ற அவனின் கனவு கனவாகவே போய் விடுமோ என்ற பயத்தில் தான் மான்சி தன் தம்பியை கண்டித்தது. அவளுக்கும் தெரியுமே, அவன் ஏன் பள்ளி செல்லாது அறையிலேயே அடைந்து இருக்கிறான் என்று.
அக்கா பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது நவீன் தலையாட்டினான். “ சரி அக்கா.” என்று.
ஆனால் அவன் மனதில் இருக்கும் பிரச்சனை. அதை அவன் யாரிடம் சொல்வான். ..? அதுவும் அதே பிரச்சனையை அவனின் அக்காவும் எதிர் கொள்ளும் போது.
அக்காவும் சரி. தம்பியும் சரி. அழகு படிப்பு, இதோ உணவு என்ன…? எது என்றாலும், ஒரு போன் செய்தால் போதும், அது அவர்கள் அறைக்கே வந்து விடும். அந்த அளவுக்கு வசதி என்று அனைத்தும் இருந்தும், சமூகத்தில் அவர்களுக்கு மரியாதை இல்லை என்றால், அதை விட கொடுமை இருக்கிறதா..? என்று அவர்களுக்கு தெரியவில்லை.
ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்கும் அந்த மரியாதையற்ற பார்வையை எதிர் நோக்கும் போது எல்லாம், இது போல் வேறு கொடுமை இல்லை என்று தான் அவர்களுக்கு நினைக்க தோன்றியது.
இது போல் ஒரு வாழ்க்கையை ஏன் தன் அன்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று தான், அனுதினமும் நினைத்தார்கள்.
இந்த வலியை தான். அக்கா தம்பி இருவரும் அவர்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களின் சிறிய வயதிலேயே அவர்களின் தந்தை தவறி விட்டார். இப்போது பிரச்சனை அது கிடையாது அவர்களுக்கு, பிரச்சனை அந்த இடத்திற்க்கு வந்த இன்னொருவரால் தான் வந்ததே. அனைத்து பிரச்சனையும்.
நினைக்கலாம். ஏன் விதவை மறுமணம் செய்து கொள்ள கூடாதா..? என்று. செய்யலாம் தாரளமாகவே செய்யலாம் தான். அப்படி சூர்ய நாரயணன் வந்து இருந்தால், கண்டிப்பாக அவரை தந்தையாக ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். ஆனால் தாலி கட்டாது, அவருக்கு என்று ஒரு குடும்பம் இருக்கும் போது, இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது.
அந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் மட்டும் அல்லாது, அவர்களை சூற்றி இருப்பவர்களும் அல்லவா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இந்த வாழ்க்கையை வாழும் தன் அன்னை துளசி காரணம் பல சொல்லலாம். ஆனால் முறையாக வாழ நினைத்தால் எப்படி என்றாலும் வாழ்ந்து இருக்கலாம் தான்.
ஆனால் அதை விடுத்து இது போல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து, அவர்களை கேவலப்படுத்தி கொண்டது மட்டும் அல்லாது, தங்களையும் கேவலப்படுத்தும் படி செய்தது தான் வேதனையான விசயம்.
இதோ இவர் எப்போது வருவார். எப்போது போவார் என்று தெரியாது. ஆனால் அவர் வந்தால் அவர் எதிரில் போக என்னவோ போல் இருப்பதால், கூடிய மட்டும் அக்கா தம்பி இருவரும் தவிர்த்து விடுவர்.
இதோ இன்று வந்து இருக்கிறார். இப்போது தங்கள் அறையிலேயே சாப்பிட்டு, பின் பக்கம் ஒரு படிகட்டு இருக்கிறது. அதன் வழியே சென்று விட வேண்டியது தான்.
முதலில் எல்லாம் அந்த வழியை இதோ இப்போது வந்து இருக்கிறாரே சூர்யநாரயணன் அவர் தான் பயன் படுத்துவார். அதற்க்கு என்றே அது கட்டப்பட்டதா என்று மான்சிக்கு தெரியவில்லை.
ஆனால் இப்போது அந்த வழியை அவர் பயன்படுத்துவது கிடையாது. அது தான் அனைவருக்கும் தெரிந்து விட்டதே, முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்க்கு…? என்று நினைத்து விட்டார் போல். இப்போது வருவது எல்லாம் வாசல் வழி தான்.
துளசிக்கு சூர்ய நாரயணன் தாலி மட்டும் தான் கட்டவில்லை. மற்றது எல்லாம். அதாவது கோயிலுக்கு ஏதாவது விசேஷம் என்று அனைத்திற்க்கும் துளசியோடு சூர்ய நாரயணன் ஜோடி போட்டு கொண்டு தான் சென்று வருகிறார்.
மான்சிக்கு விவரம் தெரிந்த பின். இது போல் அனைவரும் பார்க்க செல்லாது இருந்து இருந்தால், தங்களுக்கு இந்த நிலமை வந்து இருக்காதோ என்று எல்லாம் நினைக்க தூண்டுகிறது மற்றவர்கள் இவர்களை பார்க்கும் அந்த பார்வை.
சூர்ய நாரயணன் சமூகத்தில் ஒரு சாதரணமான மனிதர் என்று இருந்து இருந்தாலும், இவர்களுக்கு இந்த நிலை வந்து இருக்காது. சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தில் இருப்பவரான சூர்ய நாரயணனின், இந்த வாழ்க்கையால் அவரை எது மாதிரி மற்றவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ.
ஆனால் துளசியின் பிள்ளைகளான மான்சியையும், நவீனையும் மற்றவர்கள் நல்ல மாதிரியாக பார்க்கவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
ஆனால் அனைத்தும் பார்வை மட்டுமே, யாருக்கும் இவர்கள் முன் கை காட்டி பேச தைரியம் இல்லை என்பதும் நிச்சயமே.
ஏன் என்றால் சூர்ய நாரயணை சார்ந்தவர்களை அவ்வளவு சீக்கிரம் ஒருவர் தரம் தாழ்த்தி பேசி விட்டு நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது. அதனால் தவறாக எல்லாம் பேச மாட்டார்கள். ஆனால் அந்த பார்வை ஒன்றே போதும் என்பது போல் தான் அக்கா தம்பியின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.
இதோ மான்சியின் பேச்சுக்கு மதிப்பாக சரோஜாவே உணவை கொண்டு வந்து கொடுத்தவர், தாங்கள் சாப்பிடும் வரை அருகில் இருந்து பரிமாறுவது கூட அந்த பெரிய மனிதர் சூர்யநாரயணன் சொல்லி தான் என்பதும் மான்சிக்கு தெரியும்.
இருந்தும் ஏனோ மான்சிக்கு பாசமோ மரியாதையோ அவர் மீது தோன்றுவது இல்லை. காரணம் தன் அன்னைக்கு தாலி கட்டவில்லை என்பது இல்லை.
அது கட்ட முடியாது. மனைவி என்று ஒருவர் வீட்டில் இருக்கும் போது, அது எப்படி…? தன் அன்னயின் கழுத்தில் தாலி அவரால் ஒன்றை கட்டி விட முடியும். கட்டி விட தான் அவரின் மச்சான்கள் விட்டு விடுவார்களா…?
சமூகத்தில் சூர்ய நாரயணன் எப்படி அனைவருக்கும் தெரியுமோ, அதே போல் அவரின் இரண்டு மச்சான்களையுமே அனைவருக்கும் தெரியும். அதுவும் சூர்ய நாரயணனுக்கு மேல் அதிகாரத்திலும் சரி, அந்தஸ்த்திலும் சரி, இவரோடு அதிகம் தான். அதுவும் சூர்ய நாரயணன் தங்கையை தன் சின்ன மச்சான் வெங்கட பூபதிக்கு மணம் முடித்து கொடுத்து இருப்பது.
இருந்தும் சூர்யநாரயணின் தன் தாயோடான இந்த பழக்கத்தை, எப்படி விட்டு வைத்து இருக்கிறார்கள் என்பது இன்று வரை மான்சிக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கின்றது.
ஒரு தாய் வாழும் வாழ்க்கையை பற்றி மகள் இது போல் எல்லாம் நினைக்க கூடாது தான். ஆனால் சூழ்நிலை மான்சியை இது போல் எல்லாம் கூட யோசிக்க வைக்கிறது.
அருகில் இருந்து பரிமாறிய சரோஜா போகும் முன். “ சார் உங்க இரண்டு பேரையும் வந்து பார்க்க சொன்னார்.” என்று சொல்லி விட்டு போகவும்.
“ம்.” என்று பதில் அளித்து விட்டு தன் தம்பியின் முகம் பார்த்தாள் மான்சி. அவன் முகத்தில் தெரிந்த அந்த விருப்பமின்மையில்.
“ சரி நீ ஸ்கூல் போ. நான் அவரை பார்த்துட்டு போகிறேன்.” என்று சொல்லவும், நவீன் கொஞ்சம் தயங்கினான்.
“ ஒன்றும் பிரச்சனை இல்ல.. நீ போ.” என்று சொல்லி அவனை பின் பக்கமாக வழி அனுப்பி விட்டு, மான்சி சூர்ய நாரயணனை பார்க்க கீழ் தளத்திற்க்கு சென்றாள்.
“ நீயே ஏன் இது எல்லாம் செய்யிற…? வேலையாள் எதுக்கு இருக்காங்க…? ” என்று துளசியை கேட்டு கொண்டே அவர் பரிமாறுவதை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தார் சூர்ய நாரயணன்.
அதை பார்த்து கொண்டும், கேட்டு கொண்டும், சாப்பிடும் அறைப்பக்கம் சென்ற மான்சி, அவர் முகம் பார்க்காது கீழே குனிந்து கொண்டே…
“கூப்பிட்டதா சொன்னாங்க…” என்று எந்த உறவு முறையும் வைக்காது அழைத்து பேசியவளை, தான் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அவளை பார்த்தார்.
அவரின் பார்வையை உணர்ந்து மான்சி அவரின் முகம் பார்க்க, அவரின் பார்வை இவளின் பின் நவீன் வருகிறானா… என்று தேடுவதை உணர்ந்து.
“அவனுக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆகி விட்டது. அது தான்.” என்று பேச்சை இழுத்து நிறுத்தினாள்.
சூர்ய நாரயணன் .. “ஓ.. நான் அவன் படிப்பை பத்தி பேச நினைத்தேன்.” என்று சொன்னவர்..ஏதோ யோசித்து விட்டு பின் தன்னை பார்த்து..
“ உன் ஐ.ஏ.எஸ் படிப்புக்கு எந்த புக் வேண்டும் என்றாலும் வாங்கி படிக்கலாம் தானே… அது என்ன தினம் தினம் அண்ணா லைப்ரேரிக்கு போவது…?” என்ற கேள்விக்கு, மான்சி சுருக்கமாக..
“ எனக்கு அங்கு போய் படிக்க தான் பிடித்து இருக்கு.” என்று சொன்னவள் தன் கை கடிகாரத்தில் நேரம் பார்த்து விட்டு..
“எனக்கும் டைம் ஆகுது.” என்று சொன்னவள் வருகிறேன் என்று கூட சொல்லாது, போகும் மான்சியையே பார்த்து கொண்டு இருந்த சூர்ய நாரயணன் ஒரு பெரும் மூச்சை உள் இழுத்து விட்டவர், பின் துளசியை பார்த்து.
“ நான் அவங்க கிட்ட நெருங்க தான் நினைக்கிறேன்மா.. ஆனா அவங்க என் கிட்ட இருந்து விலகி போறதோட, இப்போ எல்லாம் உன் கிட்ட கூட சரியா பேசாததை பார்த்து, மனசுக்கு என்னவோ பண்ணுதும்மா.” என்று குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து கொண்டு கூறினார்.
துளசிக்கும் தன் பிள்ளைகளின் இந்த விலகல் வேதனையை அளிக்கிறது தான். இருந்தும் அவரால் என்ன செய்ய முடியும்..? அவர்கள் விலகலுக்கான காரணம் தான் அவருக்கு தெரியுமே..
அதை அவரார் நேர்ப்படுத்தவும் முடியாது எனும் போது, எதுவும் செய்ய முடியாதை கைய்யாலாகத தனத்தோடு வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு அவரால் இருக்க முடிகிறது.
இருந்தும் தன் வேதனையை உள்ளடக்கிய துளசி.. “ எல்லாம் சரியா ஆகிடும். சின்ன பசங்க தானே..” என்று சொல்லி, சூர்ய நாரயணனை துளசி சமாதானம் படுத்தினார்.
“ சின்ன வயதில் எல்லாம் நல்லா தான் பழகினாங்க. வளர்ந்த பின் தான்.” என்று சொல்லி சூர்ய நாரயணன் தன் பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
ஆம் அவர் சொல்வது உண்மை தான். துளசி இந்த வீட்டுக்கு தன் இரு பிள்ளைகளையும் கை பிடித்து அழைத்து கொண்டு வரும் போது, மான்சிக்கு எட்டு வயது. நவீனுக்கு மூன்று வயது.
மான்சி இந்த வீட்டை முதன் முதலில் பார்த்த போது கண்கள் விரிய.. “ அம்மா இனிமே நாம இந்த வீட்டில் தான் இருக்க போகிறோமா..?” என்று கண்களில் ஆசை மின்ன கேட்டவருக்கு, துளசி என்ன பதில் சொல்வது என்று தயங்கிய போது, பின் வந்த சூர்ய நாரயணன் தான்.
“ஆமாடா குட்டிம்மா.. இனி நீங்க அம்மா தம்பி எல்லாம் இங்கேயே தான் தங்க போறிங்க…?” என்று சொன்னார்.
அதை கேட்ட மான்சி.. “ஹய்..ஹய்..” என்று சந்தோஷ மிகுதியில் சத்தம் போட துளசி ..
“ மான்சி சத்தம் போடாதே…” என்று தன் மகளை அதட்டினார். ஏன் என்றால் வீடு புதிய வீடு. இன்னும் அதில் பொருட்கள் வாங்கி போடாது இருப்பதால், மான்சியின் சத்தம் மிக அதிகமாக கேட்பதோடு, அதன் எதிரொலியும் கேட்டது.