அங்கு இன்னும் மிச்சம் வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள், மான்சியின் சத்தத்தால் இவர்களை திரும்பி திரும்ப பார்ப்பதை கவனித்த துளசிக்கு உடல் கூசுவது போல் ஆனதால் தான், தன் மகளை கண்டித்தது
அந்த அதட்டலில் மான்சியின் முகம் சுருங்கி போக, அதை கவனித்த சூர்ய நாரயணன்..
“ குழந்தையை ஏன் திட்டுற துளசி.. இது அவள் வீடு… அவள் இஷ்டப்படி இருக்கட்டும்.” என்று சொன்னவரின் பேச்சு மான்சிக்கு அப்போது மிக பிடித்து விட்டதால், அவரை கீழே குனியும் படி சொன்னவள் அவர் கன்னத்தில் முத்தமிட்டு..
“ நீங்களும் எங்க கூடவே இருக்கிறிங்கலா..?” என்று மான்சி அப்போது அவரை பாசத்தோடு தான் கேட்டாள்.
தன் தந்தை இறந்த இந்த இரண்டு வருடத்தில் இருக்க வீடு இல்லாது, ஏதோ ஒரு இடுக்கில் தான் வாழ்ந்து வந்தனர்.
அங்கும் என்ன ஆனதோ யாரோ வந்து அம்மாவின் கை பிடித்து சண்டை இழுத்தார்கள். அவர்கள் பேசுவது மான்சிக்கு புரியவில்லை.
ஆனால் அவர்கள் அம்மாவை.. “இங்கு காலி செய்துட்டு ஒழுங்கு மரியாதையா எங்க இடத்துக்கு வா..” என்று சொன்னது மட்டும் மான்சிக்கு புரிந்தது.
“ அம்மா இந்த வீடு நல்லாவே இல்ல அம்மா.. அந்த அங்கிள் தான் கூப்பிடுறாங்கலே.. அந்த வீடு நல்லா இருந்தா நாம அங்கேயே போய் விடலாம் அம்மா..” என்று அந்த ஆறு வயது சிறுமி தனக்கு புரிந்ததை பேசினாள்.
அப்போது துளசி சொன்னது… “ அதற்க்கு நாம மூன்று பேரும் செத்து விடலாம் .” என்று..
சாவு என்றதும் தன் தந்தையின் பூத உடல் கிடத்தியது. அதில் மாலை போட்டது. அனைவரும் அழுதது.. எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்தில் வந்து போனதில் பயந்தவளாக..
“ அம்மா வேண்டாம்மா.. வேண்டாம். நாம சாக வேண்டாம் அம்மா.. தம்பி பாவம் அம்மா..” என்று சொல்லி மான்சி அழுக.. ஒரு வயது கை குழந்தையான நவீன், தன் அக்கா அழுவதை பார்த்து அவனும் அழுதான்..,
இதை பார்த்த துளசிக்கு அப்போது இருப்பதிலேயே வறுமை தான் கொடியது.. அதிலும் இளமையில் வறுமை.. அழகில் வறுமை..என்று எதேதோ நினைத்துக் கொண்டு தன் இரு குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டவள்..
அன்றே அந்த இடத்தை விட்டு இரவோடு இரவாக தன் குழந்தைகளோடு துளசி ஓடியவளுக்கு, ஒரு இடம் கூட நிரந்தம் இல்லாது போனது.
அதுவும் கடைசியாக ஒரு வீட்டில் துளசி வீட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தாள். மான்சிக்கு இயற்கை அழைப்பு சிறுநீர் கழிக்க வேண்டி இருந்ததால், அந்த வீட்டின் கழிப்பறையை பயன் படுத்தி விட்டாள்.
அதற்க்கு அந்த வீட்டின் பெரியவர்கள் அவளை அடித்த அடியில் பயந்து போய் அன்னையின் மடியில் ஒன்றியவள்..
“ அம்மா பாத்ரூம் போனது தப்பாம்மா..?” என்று தான் என்ன தவறு செய்தோம்…? ஏன் இவர்கள் தன்னை அடிக்கிறார்கள் என்று கூட தெரியாது உதடு பிதிக்கி அழுதுக் கொண்டே கேட்கும் குழந்தைக்கு துளசி என்ன பதில் சொல்வாள்..?
அப்படி இருக்க இடம் இல்லாது இந்த இரண்டு வருடமாக அல்லல் பட்ட மான்சிக்கு, ஒரு பெரிய மாளிகை கொடுத்து, இனி இது உன் வீடு என்று சொன்ன அந்த சூரிய நாரயணனை மான்சிக்கு அப்போது மிக பிடித்து விட்டதால், அவரை தங்களோடு தங்க சொன்னாள்.
“இங்கு தங்குவேன் குட்டிம்மா… ஆனா எப்போதும் தங்க முடியாதுடா..” என்று சொன்ன சூர்ய நாரயணன் பேச்சில்,
“ஏன் இங்கே இருக்க முடியாது..?” என்ற மான்சியின் கேள்விக்கு,
அவர் சொன்ன பதிலான.. “ எனக்கு இன்னொரு வீடு இருக்குடா குட்டிம்மா.. “ என்றதில்..
“ஐய் அப்போ உங்களுக்கு ஜாலி.. இரண்டு வீடு இருக்கு.” என்று தன் இரு விரல் நீட்டி சொன்னவளின் விரலை பற்றிக் கொண்டவர்..
“ஆமாம் டா..” என்று சொல்லிக் கொண்டே தயங்கிய வாறு சூர்ய நாரயணன் துளசியை பார்த்தார்.
தனக்கே என்று ஒரு வீடு கொடுத்த சூர்ய நாரயணனை அப்போது மான்சிக்கு பிடித்து தான் இருந்தது.அவர் வரும் போது எல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பவள், அவர் போகும் போது உதடு பிதிங்கி அழுத்துக் கொண்டே..
“ திரும்ப எப்போ வருவீங்க..?” என்று ஏக்கத்துடன் கேட்கும் அளவுக்கு, தன் மீது பாசத்தை வைத்திருந்த மான்சியை நினைக்கும் போது சூர்ய நாரயணனுக்கு தனக்கு திரும்ப எப்போது அந்த அன்பு மீண்டும் கிடைக்கும் என்று ஏங்கிய அவர் மனது.. கிடைக்குமா..? என்ற சந்தேகமும் அவர் மனதில் வந்து தான் போனது.
அண்ணா நூலகத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக வேண்டிய புத்தகத்தை எடுத்து ஒரு இடத்தை பார்த்து அமர்ந்துக் கொண்ட மான்சியின் நினைவும், சூர்ய நாரயணன் வீட்டுக்கு தாங்கள் சென்ற அந்த நாள் தான் நினைவுக்கு வந்தது.
தெரியாது.. பதினைந்து வயது வரை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம்.. மற்றவர்களின் பார்வையின் பேதம் புரியாது… சிரித்தால் சிரித்து.. ஒன்று எதுவும் தெரியாது இருந்து விட்டு இருந்தால், இந்த வேதனை இருந்து இருக்காதோ… என்று யோசித்தவளுக்கு ஒரு கவனமுடன் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது போக.. தன் கனவு தன் லட்சியம்.. என்று மனதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவள், பின் அவள் சுற்றம் மறந்து அந்த புத்தகத்திலேயே மூழ்கி விட்டாள்..
படியில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்த தன் மருமகன் சர்வேஷ்வரனின் அழகை, கண் கொட்டாது பார்த்து கொண்டு இருந்த பத்மாவதி…
தன் சின்ன அண்ணி வைதேகியிடம்.. “ சர்வாவுக்கு சுத்தி போடனும் அண்ணி…?” என்று தன் மருமகனின் அழகை பார்த்து கொண்டே சொன்னார்.
அதை கேட்ட பத்மாவதியின் பெரிய அண்ணி ரேவதி.. “ பத்து சர்வாவுக்கு இனி தான் உன் சின்ன பெண்ணை கொடுக்க போற.. மூன்று வருடம் முன் என் மகனுக்கு, உன் பெரிய பெண்ணை கொடுத்த உன் மூத்த மருமகன் மகேஷ், சர்வாவுக்கு பின் தான் வர்றான்.. உன் பார்வை அவன் பக்கமும் போகலாம் தப்பு இல்ல..” என்று கிண்டல் பேசிய தன் பெரிய அண்ணியின் மீது சாய்ந்து கொண்ட பத்மாவதி..
“ அண்ணி என் இரண்டு மருமகனும் அழகுல குறையா…? அந்தஸ்த்தில் குறையா..? எதில் குறை…?” என்று பெருமையாக பேசினார்.
ஆம் பத்மாவதி சொல்வதும் ஒருவகையில் உண்மை தான்…சூர்ய நாரயணனின் இரண்டு மச்சான்களின் மகன்களான மகேஷ்வரனும் சரி… சர்வேஷ்வரனும் சரி.. பத்மாவதி சொன்னது போல் தான்..
அதிலும் சர்வேஷ்வர் தொழிலில் இறங்கிய புதிதில் அவன் அதிரடியான செயல்களில் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்தவர்களே ஆடி போகும் அளவுக்கு தான் அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தன.
அவனின் தந்தையும், பெரியப்பாவும் கூட.. “ பார்த்து சர்வா..” என்று எச்சரிகை செய்தனர்.
அதற்க்கு அவன் சொன்னது… “ நீங்கள் என்னிடம் கொடுத்ததை பெருக்குவேனே தவிர, குறைய விட மாட்டேன். இது போல் இனி அட்வைஸ் எல்லாம் செய்ய வேண்டாம். செய்யிறதா இருந்தா இப்போதே நான் விலகி கொள்கிறேன்.” என்று சொல்லி தன் இரு தோள்களையும் குலுக்கி விட்டு நின்றவனின் தோரணையை பார்த்து..
அந்த வீட்டின் இரு பெரியவர்களும்.. “ சரி சர்வா உன் விருப்ப்ச்ம் போல் செய்..” என்று விட்டு விட்டனர்.
அவன் அன்று சொன்னது போல் தான் அவர்கள் எதிர் பார்க்காத அளவுக்கு தொழிலில் உயர்ந்து நிற்க்கிறான்…
அழகிலும் ஆண்களுக்கு இவ்வளவு நிறம் தேவையா என்பது போல் தான் சிவந்து இருந்தான்.. அதுவும் அவன் உடற்பயிற்ச்சி செய்து விட்டு வழியும் வியற்வையை அவன் துண்டை கொண்டு கொஞ்சம் அழுத்தி துடைத்தாலும், சிவந்த அவன் முகம் மேலும் சிவந்து போகும் அளவுக்கு நிறத்திலும் சரி .. உயரத்திலும் சரி, உடற்கட்டிலும் சரி.. மற்ற ஆண்களை காட்டிலும் கொஞ்சம் அதிகம் தான் அவனுக்கு…
மகேஷ்வரனும் சர்வேஷ்வரனுக்கு அளவு இல்லாத போதும், அவனும் தொழிலில் திறமையிலும் சரி , பார்வைக்கும் என்று லட்சணமாகவே இருப்பான்.
அதனால் தான் சூர்ய நாரயணன் அவர் பெரிய மகளான வனிதாவை தன் பெரிய மச்சான் மகன் மகேஷ்வரனுக்கு மணம் முடித்து கொடுத்தார்.
தன் சின்ன மகள் அனிதாவை, சின்ன மச்சானும் தன் தங்கையின் மகனுமான சர்வேஷ்வருக்கு மணம் முடிக்க பேசி முடித்து இருக்கிறார். சர்வேஷ்வரனின் தங்கை கீதாஞ்சலி படித்து கொண்டு இருக்கிறாள்..
அவள் படிப்பு முடிந்ததும் சர்வேஷ்வரனின் நண்பன் விக்ரமுக்கு மணம் முடிப்பதாக பேசி இருக்கின்றனர்… அதன் படி இதோ இன்னும் மூன்று மாதத்தில் ஒரே நாளில் இருமேடை அமைத்து செய்ய திட்ட மிட்டு இருக்கின்றனர்..
அதனால் பத்மாவதி தன் தாய் வீடோடு.. தன் மகளின் புகுந்த வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து செல்வார் தான். ஆனால் பத்மா அந்த வீட்டுக்கு வரும் போது எல்லாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை வர வேற்றாலும், அனைவரின் மனதிலும் கொஞ்சம் சங்கடமும் இருக்க தான் செய்யும்..
காரணம் பத்மாவதி இங்கு வந்தால், சூர்ய நாரயணன் அங்கு சென்று இருக்கிறார் என்று நினைத்து கொள்ளலாம்..