இரவு முழுவடைந்து பகலவன் கண் சிமிட்டும் வேளயில் தான் மான்சி கண் அயர்ந்தாள்… சிறுது நேரம் கூட அவள் உறங்கி இருக்க மாட்டாள்… அதற்க்குள் சர்வேஷ்வரனின் பேசி அலாரம் “சர்வா..சர்வா..சர்வா..” என்று மூன்று முறை அழைத்ததில், அவனை தான்டி அதை எடுத்து உடனே அணைத்தவள்… அவன் அணைப்பில் இருந்து உடனே எல்லாம் வெளி வர முடியாது போக.. மெல்ல மெல்ல அவன் கையை தன் இடையை விட்டு விலக்கியள்.. நேரத்தை பார்த்த போது.
“அய்யோ..” என்றானது. என்ன இது. நேரம் எட்டு புது இடம்.. இவ்வளவு நேரம் தூங்கினால் என்ன நினைப்பார்கள் .. ஏற்கனவே என்று அந்த எண்ணம் வந்த போது தான்.. நேற்று அவனிடம் தான் நெகிழ்ந்து, கரைந்து உருகியது எல்லாம் அவளின் நியாபகத்தில் வந்து போனது. எப்படி? எப்படி.. தன்னை பற்றி நல்ல எண்ணம் இல்லாதவனிடம் நான் எப்படி அப்படி இருக்க முடிந்தது.. என் உடல் அவ்வளவு பலவீனமானதா..? இல்லை அவன் தொடுகை அவ்வளவு பலமானதா…? என்று எதேதோ மனது அது பாட்டுக்கு எண்ணம் போனாலும். தன்னால் தன் உடை இருக்கும் இடத்தை தேடி உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்ற வேகத்தோடு குளித்து முடித்து விட்டு.. அது பக்கத்தில் இருந்த உடை மாற்றும் இடத்தில் உடையணிந்து வெளியில் வந்த போது சர்வேஷ்வரன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தவளின் மனதில் ஒரு நிம்மதி.
இப்போது நேற்று நடந்த நிகழ்வை நினைக்கவோ.. அதை பற்றி யோசிக்கவோ… அவளுக்கு நேரம் கிடையாது.. ஆனால் யோசிக்க வேண்டும்… அது இப்போது முடியாது என்பதால், இவனை இப்போதைக்கு தனிமையில் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது என்று நினைத்து அனைத்தையும் அவசர கதியில் முடித்து விட்டு படியில் இறங்கியவளை ஹாலில் அமர்ந்து தன் ஓரவத்தி ரேவதியிடம் பேசிக் கொண்டு இருந்தவள்..
இவள் வரவும் பேசுவதை விட்டு விட்டு, ஒரு விதமான எதிர் பார்ப்போடு, அவள் முகத்தை பார்த்தவரின் மனதில் நம்மதி..
தன்னையே பார்த்து கொண்டு இருந்தவரின் பார்வையில் சங்கடத்துடன் தலை குனிந்து வருவளின் அந்த செய்கை கூட வைதேகிக்கு ஒரு திருப்தியை கொடுத்தது வெட்கம் என்று நினைத்து…
வந்தவளை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட வைதேகி..
“ காலையில் காபி குடிப்பியா… டீயாம்மா..?” என்று கேட்ட்தற்க்கு மான்சி…
“ எது என்றாலும் பரவாயில்ல அத்தை..” என்று சொல்லவும்.. வைதேகி ..
“ காபி குடி இப்போது தான் டிக்காஷன் இறக்கிட்டு வந்தேன் ..” என்று சொன்னவர் சமையல் அறையை பக்கம் பார்த்து..
“ சாரதா ஒரு காபி கொண்டா…” என்று சொன்னவர், மான்சியின் ஈரமான தலையை தொட்டு பார்த்தவர்..
“ என்னம்மா இது ஈரத்திலேயே பின்னி இருக்க.. தலையில் தண்ணீர் கோக்காது…” என்று சொல்லி விட்டு, சும்மா நாளுகால் பின்னி இருந்த மான்சியின் நீண்ட கூந்தலை அவிழ்க்கும் போதே, வைதேகியின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன..
“ முடி உனக்கு நீளமாவும், அடர்த்தியாவும் பார்க்க அவ்வளவு அழகா இருக்கு..” என்று பாராட்டிக் கொண்டே காபி கொண்டு வந்த சாரதாவிடமே, தலை முடியை துவட்டி விட துணி கொண்டு வர சொல்லி, தானே துவட்டிக் கொண்டு இருந்தார்…
“ பரவாயில்லை அத்தை நானே துவட்டிக்கிறேன்..” என்று மான்சி சொல்லியும் கேட்காது, அவரே துவட்டி விடுவதில் மான்சிக்கு ஒரு வித சங்கடம் உருவானது..
அவள் இது போல் எல்லாம் மற்றவர்கள் செய்ய விட்டது கிடையாது.. தன் அன்னையின் வாழ்க்கை தெரியாததிற்க்கு முன்.. துளசி செய்து விட்டு இருக்கிறாள்..
தெரிந்த பின் அவள் வேலையை அவள் தான் பார்த்துக் கொள்வாள்.. அதுவும் இது போல் அவ்வளவாக தெரியாதவர்களிடம் பேசியும் அவளுக்கு பழக்கம் கிடையாது…
அதில் ஒரு வித கூச்சத்துடன்… “ நேரம் ஆகி விட்டதே என்று தான் அவசர அவசரமா தலை பின்னிட்டு வந்தேன் அத்தை… இல்லேனா நான் எப்போவும் இது போல் முடி காயாது தலை பின்னிக் கொள்ள மாட்டேன்..” என்று சொன்ன மான்சியின் பேச்சில் வைதேகிக்கு மட்டும் அல்லாது, இவ்வளவு நேரமும் மான்சி வைதேகியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த ரேவதிக்கும் சந்தோஷம் என்றாலும், மனது தன்னால் தன் மருமகளையும், மான்சியையும், எடை போட தொடங்கியது..
“ லேட் என்ன லேட்.. பார் நீ அழகா குளிச்சிட்டு புடவை கட்டி வந்து இருக்க.. என் பெண் எந்த கோலத்தில் வராளோ.. அவளுக்கு உன் போல் அழகா புடவை எல்லாம் கூட கட்ட வராது… “ என்று இவ்வளவு நேரமும் மகிழ்ச்சியுடன் சென்றுக் கொண்டு நேரத்தை கெடுக்க என்று சிறிது நேரம் முன் அங்கு வந்த வனிதா..
மாமியார் மருமகளுக்கு இடைய நடந்த அந்த நாடகத்தை, அவளை பொறுத்த வரை அது நாடகம் தான்.. அதை பார்த்து கொண்டு இருந்தவள், இடை இடையே தன் மாமியாரும் அந்த காட்சியை ஒரு வித பாசத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த, வனிதாவுக்கு அவ்வளவு கோபம்..
என்னை இது போல் பாசமா பேசி இருக்காங்களா.. .? இது போல் எழுந்து வந்தா காபி தான் கையில் கொடுத்து இருக்காங்களா.. .? அதுவும் நான் இந்த வீட்டு பெண்ணின் பெண்.. இவள் வந்த முறைக்கு அவளை தலையில் தூக்கி வைத்து பேசுவதா…? என்ற பொறாமையில்..
“ நீங்க கீதாவுக்கு எதுவும் சொல்லி கொடுக்கல.. அதனால் அவளுக்கு தெரியல.. ஆனா உங்க மருமகளுக்கு அவள் அம்மா எல்லாம்ம்ம்ம் சொல்லி கொடுத்து தான் வளர்த்து இருப்பாங்க..” என்று வனிதா சொன்ன எல்லாம் என்ற அந்த அழுத்தமே ஒரு மாதிரியாக தான் இருந்தது…
அதோடு விடாது.. தான் இப்படி பேசியும் எந்த ஒரு ரியாக்க்ஷனையும் காட்டாததோடு தன்னை நிமிர்ந்தும் பார்க்காத, மான்சியின் நடவடிக்கையை பார்த்து தன்னை மதிக்கவில்லை என்ற கோபம் இன்னும் எழுந்தது…
அந்த கோபத்தில் இன்னும் வார்த்தைகளை அதிகம் விட்டாள்…
“ இது மட்டும் இல்ல அத்தை. சர்வா கிட்ட எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூட நீங்க சொல்லி தர அவசியம் இருக்காது..
அது எல்லாம் அந்த பொம்பள விவரமா… இவள் வயதுக்கு வந்த அப்போவே சொல்லி கொடுத்து தான் இருப்பா… தெரியாதவனை கட்டிகிட்டாலும் இந்நேரம் அவங்களுக்குள் எல்லாமே முடிந்து இருக்கும்..” என்று வனிதா இன்னும் வார்த்தைகளை அதிகம் சிதற விட்டாள்…
அவள் பேச்சில் வைதேகி பதறி போய் வனிதாவை அதட்டும் முன் மான்சி.
“ ஓ உங்க அம்மா உங்களுக்கு அப்படி சொல்லி கொடுத்ததால் தான். இப்போ உங்க தங்கை இப்போ ஆஸ்பிட்டலில் இருக்காளா…? ” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன்னை அடிக்க வந்த கையை பிடித்து நிறுத்திய மான்சி..
“ நீ அடித்தால் நானும் அடிப்பேன்..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அங்கு சூர்ய நாரயணன் வந்து சேர்ந்தார்…
இரவு மான்சியை இங்கு விட்டு தன் வீட்டுக்கு சென்றவருக்கு இரவும் தூக்கம் பிடிக்கவில்லை.. அதனால் காலையில் தன் மனைவியையும், மகளையும் பார்க்க மருத்துவமனைக்கு சென்று பார்த்தவர்.. மனைவியின் உடல் நிலையில் முன்னேற்றம் என்று சொன்ன மருத்துவர்..
மகளை பற்றி சொன்ன செய்தியான..
“ இப்போ பரவாயில்லையா இருக்காங்க.. ஆனா இதே நிலை நீடித்தா அவங்க உயிருக்கு உத்திரவாதம் கிடையாது..” என்று மருத்துவர் சொன்ன அந்த செய்தி ஒரு தகப்பனாக கேட்க கூடாத வார்த்தை அது..
“ இனி நான் பார்த்துக்குறேன் ரமேஷ்..” என்று அந்த மருத்துவமனை அவர்களுடையது தான் என்பதால், அங்கு இருக்கும் மருத்துவரின் பெரும் பாலோர் பெயர் சூர்ய நாரயணனுக்கு தெரியும்..
அதுவும் இந்த ரமேஷை சூர்ய நாரயணனுக்கு நன்கு தெரியும்.. அந்த தெரியும் என்பதாலேயே, சூர்ய நாரயணனின் சங்கடம் இன்னும் கூடியது…
மருத்துவரிடம் பேசிய பின் தெளிந்து அமர்ந்திருந்த அனிதாவை பார்க்க அவள் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றவரை அனிதா தலை நிமிர்ந்து பார்த்ததில் இவருக்கு தான் என்னவோ போல் ஆனது…
“ நீ செய்தது.. என்ன விளைவு கொடுத்து இருக்கு பார்த்தியா…?” என்ற கேள்வியில், அனிதா இன்னும் தலையை நிமிர்த்தி அவரை பார்த்து..
“ நீங்க செய்ததின் பின் விளைவு தான் இது..” என்று சொன்னவளிடம் இனியும் எதுவும் பேச இயலாது.. நாம் தான் அசிங்கப்பட வேண்டும் என்று நினைத்து, அங்கு இருந்து செல்ல பார்த்தவரை..
“எப்படியோ நேரம் பார்த்து, அந்த பொம்பளை பெண்ணை நம்ம குடும்பத்துக்கு உள்ளே விட்டு விட்டிங்க போல..” என்றவளின் பேச்சில்..
“ நான் உள்ளே விடல.. நீ செய்த செயல் தான் விட வெச்சது….” என்றவரின் பேச்சில்..
அனிதா கோபம் எல்லாம் கொள்ளவில்லை… “ நான்…. சொன்னா வனி எல்லாம் சொன்னா…” என்று அதே தெனவெட்டு பேச்சு பேசும் அனிதாவிடம் மேலும் பேச இயலாது, அங்கு இருந்து தன் மனைவி அனுமதிக்கப்பட்ட அறைக்கு செல்லும் போது தான் வனிதா..
பத்மாவதியிடம்.. “ மாம் நான் வீட்டுக்கு போறேன்.. அங்கு அவ என்ன செய்யிறா…பார்க்கிறேன்… ஆனா ஒன்னு நான் அவளை நிம்மதியா அந்த வீட்டில் இருக்க விட மாட்டேன்.. அது வீடு நமக்கான வீடு..” என்ற வனிதா சொல்லவும்..
“ வனி பார்த்து.. உன் தங்கை இப்படி செய்து அவள் வாழ்கையை அவள் அழித்துக் கொண்டா., நீ ஏதாவது செய்து பிரச்சனைய இழுத்து விட்டுக்காதே வனி..” என்ற தாயின் எச்சரியையை காதில் விழாது..
“ எனக்கு எல்லாம் தெரியும்.. நான் உங்களை மாதிரி ஏமாந்தவளும் கிடையாது.. அனிதா மாதிரி யோசிக்காது எதுவும் செய்பவளும் கிடையாது…” என்று பேசும் மகளிடம் வாதாட தெம்பு இல்லாது அமைதியாக கண் மூடிக் கொண்டார் பத்மாவதி..