வனிதாவின் பேச்சை கேட்ட சூர்ய நாரயணன் அதை பற்றி அவளிடம் எதுவும் கேட்காது தன் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தவர் வனிதா அங்கு இருந்து செல்லவும்..
அங்கு போய் இவள் என்ன செய்வாளோ என்ற பயத்திலேயே மனைவியிடம்..
“ எனக்கு வேலை இருக்கு..” என்று சொல்லி மருத்துவமனையில் இருந்து கிளம்பியவரை பத்மாவதி குற்றம் சாட்டப்பட்ட பார்வை பார்த்தாலுமே, அதை கருத்தில் கொள்ளாது நேராக சர்வேஷ்வரன் வீட்டுக்கு வந்தார்..
சூர்ய நாரயணன் பயந்தது போலவே அங்கு பிரச்சனையாகி விட்டது என்று உணர்ந்தவர்.. இதை எப்படி சமாளிப்பது என்று மான்சியை பார்த்து ஏதோ பேச வரும் முன்னவே வனிதா
“ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், என் அம்மாவை பத்தி அப்படி பேசுவ…?” என்று கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டே தன் கையை மான்சியின் பிடியில் இருந்து விடுவிக்க முயன்ற வாறு கத்தினாள்..
சூர்ய நாரயணன் இருவரின் அருகிலும் விரைந்து வந்து.. “ மான்சி வனி கையை விடு.. அவளுக்கு வலிக்கிறது பார் விடு.. விடு..” என்று இரண்டு மூன்று முறை சொல்லிய பின் தான் மான்சி வனிதாவின் கையை விட்டது..
மீண்டும் அடிக்க ஓங்கிய கையை இப்போது சூர்ய நாரயணன் பிடித்தவர்…
“ இது என்ன பழக்கம் வனி…” என்று அதட்டிய தன் தந்தையை முறைத்து பார்த்த வனிதா..
“ இவள் என்ன சொன்னா தெரியுமா டாட்…?” என்று இன்னும் ஆவேசத்துடன் அவள் குரல் உயரவும்.. அவர் அவர் அறையில் இருந்த அனைவரும் இவர்கள் இருந்த இடத்துக்கு வந்து விட்டனர்.. இதில் இன்னொரு ஜோடியான கீதாஞ்சலி விக்ரமும் அடக்கமே…
அனைவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாத போதும், மான்சி,, வனிதா இடையில் தான் பிரச்சனை என்பதை வனிதாவின் முகமே காட்டி கொடுத்தது..
மான்சி எப்போதும் போல் தலையை குனிந்த வாறு தான் இருந்தாள்.. அதனால் அவள் கோபமாக இருக்கிறாளா..? என்பது அங்கு யாருக்கும் தெரியவில்லை..
சர்வேஷ்வரன் தான்.. “ என்ன பிரச்சனை ..? “ என்று அங்கு கையை பிசைந்த வாறு நின்றுக் கொண்டு இருந்த தன் அன்னையை பார்த்து கேட்டான்..
அவர் என்ன சொல்லுவார்.. முதல் தவறு வனிதாவுடையது தான்.. ஆனால் அதற்க்கு என்று மான்சி பேசிய பேச்சு.. ஏனோ வைதேகிக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை..
அவர் மனதிலும் இது தான்.. என்னவோ நல்ல பொம்பளையை பேசியது போல் இப்படி கோபப்டுகிறாள் என்று… அதோடு பத்மாவதி தான் இந்த வீட்டுக்கு மருமகளாக ஆன பின் தான்.. தன் அண்ணனுக்கு மணம் முடித்து வைத்த பெண்… அவளை அது போல் மான்சி பேசியதும் வைதேகிக்கு பிடிக்கவில்லை..
அதனால் வைதேகி தன் மகன் கேள்விக்கு பதில் அளிக்காது ஒரு வித முக சுழிப்போடு மான்சியை பார்த்தார்…
சர்வேஷ்வரன் இதை கண்டு கொண்டதும் சூர்ய நாரயணனிடம்.. “ என்ன மாமா..?” என்ற சர்வாவின் கேள்விக்கு அவருக்கும் ஒன்றும் தெரியாத போது அவர் என்ன சொல்வார்..
அவருமே வனிதாவின் கையை மான்சி பிடித்துக் கொண்டு இருக்கும் போது தானே இந்த அறைக்கு வந்தது…
“ தெரியல சர்வா…” என்று சூர்ய நாரயணன் சொல்லவும்..
வனிதா கோபத்துடன்.. “ தெரிந்தாலும், அவர் சொல்ல மாட்டார் சர்வா… ஏன்னா தப்பு அவர் ஆசை நாயகியின் மகள் மீது இருக்கும் போது, அவர் எப்படி சொல்வார்..?” என்று வனிதா சொன்ன அந்த ஆசை நாயகி என்ற வார்த்தையில், மான்சியின் மனம் துடி துடித்து தான் போனது..
இது வரை அவளை பார்வையால் மட்டும் தான் கிழாக மற்றவர்கள் பார்த்தார்கள்… தன் காது பட இது போல் பேச்சுக்களை கேட்டது கிடையாது.. காரணம் சூர்ய நாரயணன் சமூகத்தில் பெரிய மனிதர் ..அவரை பகைத்து கொள்ள கூடாது என்று..
ஆனால் இப்போது அதே குடும்பத்தில் இருந்து பேசும் போது, சூர்ய நாரயணனாலேயே தடுக்க முடியாது எனும் போது ,மான்சியால் என்ன செய்ய முடியும்..
அதனால் ஒரு வித கைய்யாலாகாத தனத்தோடு சூர்ய நாரயணனை கண்கள் முழுவதும் கண்ணீர் மூடி மறைத்தால், அவரின் முகம் சரியாக தெரியாத போதும், அவரையே பார்த்திருந்தாள் மான்சி…
வனிதா துளசியை பற்றி பேசியதை விட, மான்சியின் கண்ணீர் வடிந்த முகத்தை பார்த்த போது, சூர்ய நாரயணன் மனது பதை பதைத்து போனது..
எப்போதும் மான்சி யாரின் முன்னும் அழுது அவர் பார்த்தது கிடையாது… ஏன் துளசி முன் கூட ஆதங்கம் கோபம்.. ஆத்திரம் தங்களின் இயலாமை.. இது போல் உணர்ச்சிகளை தான் அவள் காட்டி இருக்கிறாள்.. தன்னிடம் அது கூட கிடையாது..
ஆனால் இங்கு இவ்வளவு பேர் முன் அவள் கண்ணீர் வடிந்த முகத்தை பார்த்ததும் கோபத்துடன்..
“ என்ன பேச்சு வனிதா இது..? உன் தங்கை செய்து வைத்த காரியத்துக்கு, மான்சி மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்து இருக்கவில்லை என்றால், இப்போது மீடியா முழுவதும் உன் தங்கையையும், நம்ம குடும்பத்தை பற்றியும் தான் பேசி இருப்பாங்க…
இன்னைக்கு இப்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாது, நம்ம மானம் தப்பி விட்டது என்றால், அதுக்கு காரணம் மான்சி.. நீ அவளிடம் அப்படி பேசுவியா…?” என்று சூர்ய நாரயணன் தன் மகளிடம் சத்தம் போடவும்…
பதில் தன் மருமகன் மகேஷ்வரனிடம் இருந்து வந்தது..
“ இந்த கல்யாணம் அவளுக்கு ஜாக் பாட் மாமா.. என்னவோ அவள் தியாகம் செய்தது போல் பேசுறிங்க..?” என்று மருமகன் பேச்சுக்கு, வனிதாவிடம் பேசியது போல் மகேஷ்வரனிடம் பேச முடியாது… சூர்ய நாரயணனால் இரு தலை கொல்லி போல் இருந்தார்..
ஒன்று தங்கையின் புகுந்த வீடும்.. தன் மகளின் கணவனும். அடுத்து தன் வளர்ப்பு மகளின் வாழ போகும் வீடு.. இந்த வீட்டு ஆட்களை பேசுவது முறை இல்லை என்று அமைதி காத்துக் கொண்டவர்..
தலை மீது கை வைத்து கொண்டு அங்கு இருக்கும் இருக்கையில் அமர்ந்து விட்ட மான்சியை, துக்கத்துடன் அமைதியாக பார்ப்பதை தவிர.. அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது போனது..
ஆம் மான்சி வனிதா பேச்சுக்கு மட்டும் தான் அவளாள் பதில் கொடுக்க முடிந்தது… அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்று சேர்ந்து கொண்டு, தான் மட்டும் தனித்து நிற்கையில், தன் அம்மாவை பற்றிய இது போலான பேச்சுக்களை கேட்ட போது..
ஆடை இல்லாது நிர்வாணமாக நிற்க வைத்து அனைவரும் தன்னையே பார்ப்பது போல், அந்த நேரம் அவள் உணர்ந்தாள்.. வாழ்க்கையில் எவ்வளவோ அவள் பார்த்து இருக்கிறாள்.. ஆனால் இப்போது தன் காது பட கேட்கும் இந்த பேச்சுக்கள் அவளுக்கு கொடுமையிலும், கொடுமையாக இருந்தது..
அந்த நேரம், அந்த பேச்சு கேட்டு அந்த அதிர்ச்சியில் வழிந்த கண்ணீரோடு சூர்ய நாரயணனை பார்த்தது தான்..
அடுத்து யாரையும் தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. அடுத்து எந்த பேச்சுக்கும் அவள் கண்ணீர் சிந்த வில்லை…அமைதியாக இருக்கையில் அமர்ந்து விட்டாள்…
அவள் அமைதியை பார்த்து அங்கு இருந்த அனைவரும் என்ன நினைத்தனரோ, வனிதா எதோ பேச முயலும் போது ரேவதி..
“ கொஞ்சம் அமைதியா தான் இரேன்.. இப்போ தானே ஆஸ்பிட்டலில் இருந்து வந்தே போ.. போய் குளிச்சிட்டு சாப்பிடு.. போ..” என்று சொல்லவும் , அனைவரின் முகத்தையும் பார்த்த வனிதா என்ன நினைத்தாளோ…
“ நான் ஒன்னு மட்டும் சொல்றேன்.. ரொம்ப தலை மீது தூக்கி வைத்து ஆடுனா..? அப்புறம் நம்ம குடும்பது மானம் காத்துல பறப்பது உறுதி… ஏன்னா பிறப்பு அப்படி பார்த்துக்குங்க..” என்று சொல்லி விட்டு சென்ற, வனிதாவின் பேச்சை யாரும் மறுத்து பேசாதிலேயே இவர்கள் எண்ணமும் இது தானா என்று நினைக்க தோன்றியது மான்சிக்கு..
அதுவும் சர்வேஷ்வரன் அங்கு தான் இருக்கிறான்…அவன் கூட எதுவும் பேசாது பேச விட்டு வேடிக்கை பார்க்கிறானே.. அப்போ இரவு நடந்தது வெறும் இளமையின் தேடல் மட்டும் தானா..? என்று உறுதி பட நினைக்க வைத்தது சர்வேஷ்வரனின் தொடர் மவுனம்…
பின் நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு ரேவதி கீதாஞ்சலியை பார்த்து..
“ என்னடீ குளிக்காம வந்து நிற்க்கிற..” என்று ஒரு அதட்டல் போட..
“ இல்ல பெரிம்மா சத்தம் அதிகமா கேட்டது … அது தான் பயந்து போய் ஓடி வந்துட்டேன்..” என்று பல்லை கடித்துக் கொண்டு கீதா சொல்லும் போதே..
அய்யோ இப்போ நான் எந்த கோலத்தில் இருக்கேன் என்று தெரியலையே.. லூசு மாதிரியா இப்படி வந்து நிற்ப்பேன் என்று நினைத்துக் கொண்டே, தன் கணவன் விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்தாள்..
அவனும் ஒரு வித சங்கடத்துடன் தன்னை பார்த்த அந்த பார்வையில் தான் பதறி தன் அறைக்கு ஓடி போய் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவளுக்கு . லூசு என்ன அதற்க்கு மேல் என்ன வார்த்தைகள் இருக்கிறதோ அதை எல்லாம் வைத்து தன்னை தானே திட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அவள் கோலம்