வனிதாவின் பேச்சை திசை திருப்பி விட்டதில் ரேவதியும், வைதேகியும், நிம்மதி அடைந்து.. “ சரி காலையில் அவங்க அவங்க வேலையை பார்க்காம இங்கு என்ன வேடிக்கை..” என்று குடும்ப உறுப்பினர்களை அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் காலை உணவை பரி மாற சென்று விட்டனர்..
அவர்களுக்கு வனிதா பிரச்சனை செய்ய கூடாது.. இதில் தான் அவர்கள் கவனம் இருந்ததே தவிர.. மான்சியின் கண்ணீரும், இந்த கலங்கிய தோற்றமும் அவர்கள் கவனித்தாக கூட தெரியவில்லை..
என் என்றால் வனிதா கத்திய பின், அனைவரும் அவளை தான் கவனித்தனரே தவிர.. மான்சியை யாரும் கவனிக்கவில்லை.. அதனால் அவள் தலை குனிந்து அமர்ந்திருந்த தோற்றத்தில் , அவள் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் யாருக்கும் தெரியாது போய் விட்டது.. .
அனைவரும் சென்ற பின் அந்த இடத்தில் சர்வேஷ்வரன் , சூர்ய நாரயணன் மட்டும் தான் மிச்சம் இருந்தனர்.. சர்வேஷ்வரன் மான்சி அப்படி அமர்ந்திருப்பதை பார்த்து, அவள் அருகில் ஆறுதலாக பேசும் முன், மான்சியில் அருகில் சூர்ய நாரயணன் சென்றதோடு..
அவள் கை பிடித்து… “ சாரி.. மான்சி.. சாரி.. நான் இன்னும் இன்னும் உனக்கு வேதனையையும், அவமானத்தையும் தான் தர்றேன்… உனக்கு நல்லது என்று நினைத்து தான் சர்வாவுக்கு உன்னை கல்யாணம் செய்து வைக்க சொன்னேன்..
துளசி சர்வா நல்லவன் என்று நான் சொன்ன பேச்சுக்கு மதிப்பு கொடுத்தா… சர்வா நல்லவன் தான் மான்சி.. நான் பேசுறேன்.. இங்கு இருந்தா தானே உனக்கு இங்கு அவமானம் நடக்கும்…
நான் சர்வா கிட்ட சொல்றேன்.. உன்னோடு தனி குடித்தனம் நடத்த…” என்ற அந்த வார்த்தையை சர்வாவையும், தன் அண்ணாவையும் , அதோடு மான்சியையும் சாப்பிட அழைக்க வந்த வைதேகி கேட்டதில், அதிர்ந்து போய் தன் மகன் சர்வாவை பார்த்தாள்..
சர்வாவுக்கு சூர்யநாரயணன் பேச்சு அதிர்ச்சி என்பதை விட… கோபத்தையும்,, ஆத்திரத்தையும் தான் கொடுத்தது…
ஓ இவர் இந்த குடும்பத்தை விட்டு விலகியதோடு என்னையும் இழுக்க பார்க்கிறாரோ… ஏதோ மான்சியின் கை பிடித்து சொன்னாரே சர்வா நல்லவன் என்று, இவளோடு நான் தனிக்குடுத்தனம் செய்வேன் என்று தான் அந்த பொம்பளையிடம் சொல்லி இருப்பார் போல… என்று சூர்ய நாரயணன் மான்சியிடம் பேசியதை தவறாக அர்த்தம் கொண்டு, மேலும் மேலும் துளசியை பற்றி தவறான பிம்பத்தை தன் மனதில் பதித்துக் கொண்டான் சர்வேஷ்வரன்..
மேலும் சூர்ய நாரயணனின், பிடித்திருந்த கையை விடுக்கென்று பிடிங்கி கொண்ட மான்சி சூர்ய நாரயணனை துச்சமாக ஒரு பார்வை பார்த்து விட்டு சென்ற மான்சியின் செயலில்..
இங்கு சொந்த பெண்ணை கவனிக்காது, அந்த பொம்பளை மீது இருக்கும் மோகத்தில், அந்த பெண் மீது தான் அக்கறை எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கார் போல.. இதோ மான்சி ஒவ்வொரு முறையும் சூர்ய நாரயணனை மதிக்காத பார்வை தான் பார்க்கிறாள் …
.இருந்தும் இந்த பெண் மீது காட்டும் அக்கறையை தன் சொந்த பெண் மீது காட்டி இருக்கலாம்.. இப்படியாக எண்ணிக் கொண்டு இருந்த சர்வாவின் கை பிடித்த அன்னையின் மீது கை வைத்த சர்வேஷ்வரன்…
“ நீங்க ஏம்மா கவலை படுறிங்க..? என்னை பற்றி தெரியாதா..?” என்று கேட்டதற்க்கு.
“ தெரியும் சர்வா… ஆனால் அண்ணன் இப்படி பேசுவார் என்று நானே எதிர் பார்க்கவில்லை சர்வா.. அதுவும் இல்லாம அவசரத்தில் கல்யாணம் செய்து விட்டோம்.. இப்போ அவதிப்பட போகிறோம் என்ற பயம் தான்.
அதோட இப்போ வனி, பேச்சு மாமா பேச்சு இதை எல்லாம் கேட்ட பின் காலையில் கிடைத்த நிம்மதி இப்போ துணி கொண்டு துடைத்தது போல் ஆகி விட்டது சர்வா..” என்ற அன்னையின் பேச்சுக்கு,
“ கவலை படாதிங்க மாம்.. . என்னை மீறி எதுவும் ஆக விட மாட்டேன்… அதோடு என் வாழ்க்கையும் பாழாகவும் நான் விட மாட்டேன்..” என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றவன்..
மான்சி அங்கு இருக்கும் ஷோபாவில் எப்போதும் போல் தலை குனிந்து அமர்ந்தவளிடம்..
“ சாப்பிட வா மான்சி… அம்மா கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க..” என்று எதுவும் நடவாதது போல் பேசிய கணவனை நிமிர்ந்தும் அவள் பார்க்கவில்லை..
திரும்பவும் “ மான்சி எனக்கு நேரம் ஆகுது.. கோயில் போயிட்டு உன்னை வீட்டில் விட்டு விட்டு நான் ஒரு மீட்டிங்கை வேற நான் அட்டன் செய்யனும்…” என்று திரும்பவும் சாப்பிட அழைத்தவனிடம்..
“ எனக்கு சாப்பாடு வேண்டாம்..” என்று தான் அவள் சொல்ல நினைத்தாள்.. ஆனால் அது எத்தனை நாளைக்கு..? என்று அவள் அறிவு எடுத்து உரைத்ததில் எதுவும் பேசாது அந்த அறையை விட்டு செல்ல பார்த்தவளின் கை பிடித்து இழுத்ததில், அவனின் மார்பில் தன் முகம் புதைய நெருக்கத்தில் வந்தவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்…
“ எழுந்ததும் நீ ஏன் என்னை எழுப்பாது வெளியில் போன.. அட்லீஸ்ட் நான் எழும் வரையாவது, நம்ம ரூமில் இருந்து இருக்கலாம் தானே.. பார் என்னை நீ கவனிக்காது போனதால் தான் , காலையிலேயே வீட்டில் பிரச்சனை ஆகி விட்டது…
இனி காலையில் என்னை கவனிக்காது இந்த ரூமை விட்டு போக கூடாது..என்ன…? ” என்று பேசிக் கொண்டே ஆசையோடு மனைவியின் முகம் நோக்கி குனிந்தவனின் கண்ணுக்கு தன்னையே பார்த்திருந்த மான்சியின் கண்ணில் என்ன கண்டானோ சட்டென்று அவளை தன்னில் இருந்து பிரித்து நிறுத்தியவன்..
“ வா சாப்பிட போகலாம்..” என்று சொல்லி விட்டு விறு விறு என்று அவன் அந்த அறையை விட்டு போக,, அவன் பின் மெல்ல தான் தனக்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல், மான்சி அவன் பின் சென்றாள் …
சாப்பிடும் இடத்தில் இவர்களுக்கு முன் அனைவரும் அமர்ந்திருந்தனர்.. சர்வேஷ்வரன் தான் அமர்ந்த பின் தன் பக்கத்து இருக்கையை காட்டி..
“ உட்கார்..” என்பது போல் கண் ஜாடை காட்டவும், மான்சியும் எதுவும் பேசாது அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்…
வனிதா இவர்கள் இருவரும் வந்ததில் இருந்து அவர்கள் செயல்களை கவனித்துக் கொண்டு இருந்தவளுக்கு, என்னவோ காலம் காலமாக நடப்பது போல் இருந்த அவர்களின் செயல்களை பார்த்தவளுக்கு, ஆத்திரத்தில் கோபமாக ஏதோ பேச வரும் முன்..
சர்வேஷ்வரன்… “ உன் பொண்டாட்டிய சும்மா இருக்க சொல் மகி… அப்புறம் நான் ஏதாவது பேசினா நல்லா இருக்காது..” என்று முகத்தில் அடித்தது போல் பேசிய சர்வேஷ்வரனின் பேச்சுக்கு, மகேஷ்வரன் என்ன பதில் சொல்வது என்று முழித்துக் கொண்டு இருந்தான்..
ஆனால் வனிதாவுக்கு அது போல் எந்த தயக்கமும் இல்லை என்பது போல்… அதன் வெளிப்பாடாய்..
“ இப்போ கொஞ்ச நேரம் முன் சண்டையில் எதுவும் பேசாது அமைதியா இருந்த சர்வா.. கொஞ்சம் கொஞ்சமே நேரம் தான் அவர் ரூமில் இருந்தார்… அதுக்குள்ள… நல்ல கைக்காரி தான்…” என்று சர்வேஷ்வரனிடம் பேச்சை ஆரம்பித்து, மான்சியிடம் முடித்து வைத்த வனிதாவின் பேச்சில்..
இப்போது சர்வேஷ்வரன் வாய் திறக்கும் முன், வெங்கட பூபதி தன் அண்ணாவிடம்…
“காலையில் ஒரு சண்டை.. இதோ இப்போ ஒரு சண்டை என்று இது தொடர்ந்தால், வீட்டில் நிம்மதி இருக்காது அண்ணா.. இவங்க சண்டை நாளை பின்ன .. சர்வா மகி சண்டையாக கூட மாறலாம்..
ஏன்..? அது நம்ம வரை கூட தொடரலாம்..அது வரை போக கூடாது என்றால், நாம இப்போவே..” என்ற வெங்கட பூபதி அடுத்து என்ன சொல்ல போகிறார் என்று புரிந்துக் கொண்ட மகேஷ்வரன் அவசரமாக..
“ சித்தா அப்படி எல்லாம் எதுவும் நடக்காது.. என்னை வரை நான் பார்த்து கொள்கிறேன் சித்தா.. இதுக்கு என்று ஒன்றா இருக்கும் குடும்பம் பிரிய கூடாது..
வெளியில் பூபதி குடும்பம் என்றால், சமூகத்தில் அந்தஸ்த்தில் மட்டும் இல்லாம.. ஒற்றுமைக்கும், நம்ம குடும்பம் தான் என்று பேசுவதை நாமே கெடுத்துக்க வேண்டாம் சித்தா..” என்ற அண்ணன் மகனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அதோடு அந்த பேச்சை விட்டு விட்டார் வெங்கட பூபதி…
அதன் பின்னும் வனிதா ஏதோ பேச வர மகேஷ்வரன் அவள் காது அருகில் என்ன பேசினானோ… அவனை முறைத்து விட்டு அமைதியாக சாப்பிடும் தங்கள் வேலையை மட்டும் பார்க்க தொடங்கினாள்..
இதை எல்லாம் ஒரு பார்வையாளராக மட்டும் பார்த்து கொண்டு இருந்த சூர்ய நாரயணனின், கவனம் முழுவதும் மான்சியின் மீது தான்..
மான்சி சர்வேஷ்வரனின் கண் அசைவில் அமர்ந்து தலை குனிந்து சாப்பிட ஆரம்பித்தவள் தான்.. அதன் பின் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.. அங்கு தானும் அமர்ந்து இருப்பதை கவனித்தது போல் கூட தெரியவில்லை.. .
சூர்ய நாரயணனுக்கு இந்த திருமண முடிவு பெரிய தப்போ என்று இப்போது யோசித்தார்… அதுவும் மான்சியிடம் பேசிய பின் தன் தங்கை பேசிய பேச்சான..
“ நான் அவங்க அம்மா அப்படி இருந்தும் அந்த பெண்ணை இங்கு கொண்டு வந்ததுக்கு, என் மகனை என் கிட்ட இருந்து பிரிப்பிங்களோ.. அந்த எண்ணத்தோடு தான் அந்த பெண்ணை இங்கு அனுப்பியதோ..” என்று பேசிய பேச்சில், அவரின் இந்த முடிவு தப்பே என்று உறுதியாக நினைத்தார்…
வைதேகிக்கும் காலையில் மான்சியை பார்த்த அந்த மகிழ்ச்சி சுத்தமாக இப்போது இல்லாது போய் விட்டது…
அதனால் தான் மான்சியை பற்றி பேசும் போது மருமகள் என்று குறிப்பிடாததோடு மட்டும் அல்லாது, பெயரை கூட சொல்லாது… வேறு யாரோ என்பது போல் அந்த பெண் என்று சொல்லி பேச வைத்தது…
இவை அனைத்தையும் கவனித்த சூர்ய நாரயணன் அடுத்து என்ன என்பது போல் தான் இருந்தது..
ஆனால் மான்சியோ சாப்பிட்டு முடித்தும் அப்படியே அமர்ந்திருப்பது பார்த்த சர்வேஷ்வரன்..
“ நீ கோயிலுக்கு கிளம்பி ரெடியா இரு.. நான் வர்றேன்..” என்ற பேச்சுக்கு, ஒரு தலை அசைப்போடு மேல் சென்றவள் பின் சிறிது நேரத்துக்கு எல்லாம் சர்வேஷ்வரனும் சென்றான்..
அங்கு மான்சி தன் கை பேசியில்… “ இன்னும் நீ கிளம்பாது என்ன செய்துட்டு இருக்க நவீன்.. சீக்கிரம் கிளம்பு.. எந்த ஒரு க்ளாசும் மிஸ் செய்யாதே… உன் ஏய்ம் எப்போதும் டாக்டர்.. அது மட்டும் தான் இருக்கனும்.. வேண்டாத குப்பையை மனதில் வைத்துக் கொள்ளாதே புரியுதா..?” என்று பேசிக் கொண்டு இருந்தாள்..
அது மான்சி தன் தம்பிக்கு சொன்னதா.. இல்லை அவளுக்கே சொல்லிக் கொண்டதா என்பது வேறு..
சிறிது நேரம் நவீன் பேச்சை கேட்டவள்.. பின்.. “ சரி சரி.. இனி நான் எழுந்ததும் உனக்கு போன் போட்டுட்டு தான் வேறு வேலையே சரியா..? சரி சாப்பிட்டு கிளம்பு..” என்று சொன்னவள் மீண்டும் நவீன் என்ன சொன்னானோ அதற்க்கு மான்சி..
“ வேண்டாம்.. வேண்டாம்.. இங்கு வேண்டாம்.. ஒரு இரண்டு நாள் பொறு.. வெளியில் பார்த்து கொள்ளலாம்..”
பின்.. “ ம்ம்…” என்று ம் கொட்டலுக்கு பின் தன் பேசியை அணைத்த பின் தான் மான்சி சர்வேஷ்வரனை கவனித்தது…