இவன் எப்போது வந்தான்..? எவ்வளவு நேரம் தான் பேசுவதை கவனித்துக் கொண்டு இருக்கிறான்.. இனி இதையும் பார்த்து தான் பேச வேண்டும்.. என்று நினைத்தாளே தவிர.. அவனிடம் எதுவும் பேசாது இருந்தாள்..
“ காலையிலேயே குளிச்சிட்டு தான் கீழே போனேன்…” என்ற அவளின் பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று யோசித்த சர்வேஷ்வரன்..
“ இல்ல வெளியில் போறோம் வேற ட்ரஸ்…” என்று சொன்னவன் முகத்தை சுழட்டி காட்டி..
“ இதில் ஏதாவது செய்யலையா…? என்று தான் கேட்டேன்..” என்று சர்வேஷ்வரன் கொடுத்த விளக்கத்திற்க்கு மான்சி ஒரே பதிலாக..
“ எனக்கு அது பழக்கம் இல்ல,.. ட்ரஸ் இது புதியது தான்..” என்று பதில் கொடுத்தாள்.. அதன் பின் அவனும் வேறு எதுவும் பேசாது… அன்னையின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவளை கோயிலுக்கு அழைத்து சென்றவன்.. திரும்பவும் வீட்டில் விட்டு விட்டு அவன் அலுவலகம் பார்க்க சென்று விட்டான்..
முன் படி அவன் அனிதாவை திருமணம் செய்து இருந்தாலும், அவன் ப்ளான் இது தான்… ஒரு வாரம் டைட் ஷெடில் தான் அவனுக்கு, அதற்க்கு அடுத்த வாரம் தான் ஹனிமூன் செல்ல ப்ளைட் டிக்கட் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து இருந்தான்..
அங்கு ஒரு பிஸ்னஸ் மீட்டிங்… இரண்டு நாள் தான்.. ஆனால் அங்கு பதினைந்து நாள் தங்கும் படி தான் அனைத்தும் புக் செய்து இருந்தான்..
அந்த பிஸ்னஸ் மீட்டிங் இவன் செல்வதில் அதில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் கூட மான்சி,,, இவளுக்கு பாஸ் போர்ட் இருக்கா…?
ஈவினிங் தான் விசாரிக்க வேண்டும்.. இதை அனைத்தும் அலுவலகத்துக்கு செல்ல காரில் பயணம் செய்யும் போது திட்டம் இட்டது…
மான்சியும் வீட்டுக்கு வந்த பின் தன் அறையை விட்டு எங்கும் போகாது இருந்தாள்.. இங்கு இருந்து படித்தால் தன் படிப்பில் தன்னால் கவனம் செலுத்த முடியுமா..? என்று யோசித்தவள்…
முடியனும்… கண்டிப்பா முடியனும்… எந்த பிரச்சனை வந்தாலும், தன் படிப்பை பாதிக்காத வாறு பார்த்து கொள்ள வேண்டும்.. அங்கு அவர் வந்து விட்டால், எப்படி இருப்போம்.. தங்கள் அறையை விட்டு வெளியில் செல்லாது தானே..
அதே போல் இங்கு எப்போதும் இருந்து விடலாம்.. அது மட்டும் தன் வீடா..? அதுவும் நமக்கு சொந்தம் இல்லாத வீடு தானே.. என்று தன் மனதில் உறுதி எடுத்த பின் தான் அவளால் அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடிந்தது…
இங்கு இருந்து அண்ணா நூலகத்திற்கு செல்லும் வழி தடத்தை கூகுல் மேப்பில் போட்டு பார்த்து, பின் தன் பேசியில் டவுன் லோட் செய்து வைத்திருந்த தன் பாட சம்மந்தம் ஆனதை படித்துக் கொண்டு என்று நேரம் மதியம் ஆகி விட்டது.
ரேவதி வைதேகியிடம்.. “ மான்சி இன்னும் சாப்பிட வரலையா…?” என்று கேட்டுக் கொண்டே பணியாளர் பரிமாறுவதை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்..
அவ்வீட்டில் காலையிலும் இரவிலும் மட்டுமே வீட்டு பெண்களுக்கு பரி மாறும் வேலை.. அந்த சமயம் வீட்டு ஆண்கள் தொழில் சம்மந்தமாகவும், தனிப்பட்டு குடும்ப விசயமாகவும் அவர்களுக்கு நேரம் இல்லாத்தால் அந்த நேரம் பேச கூடும்..
அப்போ வேலையாட்கள் முன் பேச கூடாது என்று தான் வீட்டு பெண்கள் பரிமாறுவது.. மதியம் அனைத்தும் வேலையாட்கள் தான் பரிமாறுவது.. தன் தொட்டு வேலையாள் உபசரிப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ரேவதி தன் ஓரவத்தியிடம் கேட்டார்..
“ம்.. சாப்பிட கூப்பிடனும் அக்கா ..” என்று சுரத்தே இல்லாது வைதேதி பதில் அளிக்கவும்..
ரேவதி தான்.. “ என்ன வைதேகி ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்டதற்க்கு..
“ இல்ல காலையில் நம்ம பத்துவ பத்தி மான்சி பேசுனது எனக்கு சுத்தமா பிடிக்கல அக்கா.. அம்மா பத்தி பேசினா அப்படி கோபப்படுறா..? வனி என்ன இல்லாததையா சொன்னா..?” என்று தன் மன ஆதங்கத்தை தன் ஓரவத்தியிடம் சொன்னார்..
“ எனக்கும் மான்சி பத்துவை பத்தி அப்படி சொன்னதும், ஒரு மாதிரியாக தான் ஆயிடுச்சி.. இருந்தாலும், அந்த பெண் காலையில் கூட சரியா சாப்பிடல.. அதற்க்கு பின் நாம் ஜூஸ் குடித்தோம்.. அந்த பெண் கீழேவே இறங்கி வரல..” என்ற ரேவதியின் பேச்சை வைதேகி..
“ நாம எடுத்துட்டு போய் சேவகம் செய்ய முடியாது அக்கா.. அவளுக்கு வேண்டும் என்றால் அவள் தான் கீழே இறங்கி வர வேண்டும்..” என்று சொன்ன இதே வைதேகி தான் காலையில் மான்சியின் ஈர கூந்தலை அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க துவட்டி விட்டது..
என்ன தான் இருந்தாலும், தன் நாத்தனார்…தான் தன் அண்ணனுக்கு தான் பார்த்து மணம் முடித்த பெண் என்று பத்மாவதியை பேசியதில் தன்னால் மான்சியின் மீது ஆதங்கம் வந்து விட்டது என்பது தான் உண்மை…
“ சரி விடு வைதேகி அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதே..” என்று ரேவதி சொல்லவும்..
“ நானும் காலையில் இருந்து அது தான் நினச்சிட்டு இருக்கேன் அக்கா… இருந்தாலும், “ என்று மேலும் ஏதோ சொல்ல ஆரம்பித்த வைதேகி சூர்ய நாரயணன் தனிக்குடுத்தனத்தை பற்றி பேசாது..
தன் அண்ணனை விட்டு கொடுக்க மனம் இல்லாது.. . “ வனி சாப்பிட வரல அக்கா..” என்று கேட்டுக் கொண்டே வைதேகியும் சாப்பிட ரேவதியின் அருகில் அமர்ந்தார்..
ரேவதி தயங்கிய வாறே.. “ வெளியில் போய் இருக்கா..” என்று அதற்க்கு அடுத்த என்ன பேசுவது என்று தயங்கினார்..
வனிதா எப்போதும் மதியம் வீட்டில் இருக்க மாட்டாள்.. அதே போல் இரவும் நேரம் கழித்து தான் வருவாள். சொந்தத்தில் பெண் எடுத்து விட்டு, தன் கணவனிடம் கூட இதை பற்றி பேச முடியாது..
ஒரு முறை பேசியதற்க்கு தன்னிடம் இரண்டு மாதம் தன் கணவன் பேசாது இருந்ததில், அதன் பின் அதை பற்றி பேசுவது இல்லை.. இருந்தாலும் ஒரு ஆதங்கம். இங்கு இவள் குடும்பம் நடத்தா தான் வந்தாளா..? என்று.. ஆனால் அதை பற்றி வெளியில் சொல்ல முடியாது.. இதோ இது போல் வனிதா பேச்சு வரும் போது எல்லாம் அந்த பேச்சை தவிர்த்து விடுவார்..
அதே போல் இப்போதும் ரேவதி வேறு பேச்சுக்கு தாவும் போது தான், மான்சி உணவு உண்ண அங்கு வந்து சேர்ந்தது…
இருவரும் ஒரு சேர.. “ வா மான்சி வா சாப்பிட்டு..” என்று தன் உபசரித்ததில் காலையில் இருந்த மனநிலை மான்சிக்கு இப்போது சுத்தமாக இல்லை..
ஏன் என்றால், அவளுமே அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டே தான் மான்சி வந்தது… அவர்கள் பேசுவதில் மான்சி புரிந்துக் கொண்டது இது தான்..
வெளியாட்களே பரவாயில்லை.. அதாவது இது வரை தன்னை வெளியாட்கள் பார்த்த அந்த அப்பட்டமான கேவலமான பார்வையை விட.. இவர்கள் தனக்கும் முன்னும் பின்னும் மாறுப்பட்டு பேசுவது தான் மோசமானது.. என்று நினைத்தவள் அவளும் இருவரையும் பார்த்து பொதுவாக ஒரு புன்னகை சிந்தியவள் பின் தன் உணவை முடித்து கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள்..
தன் அறைக்கு போக படியில் ஏறும் போது மான்சி இதை தான் நினைத்தாள்.. கண்டிப்பாக தன்னை பற்றி தான் இப்போது பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று..
அதே போல் தான் ரேவதி.. “ என்ன இது வந்தா சாப்பிட்டா போயிட்டே இருக்கா…” என்ற பேச்சுக்கு..
வைதேகி எப்போதும் அனைவரும் பேசும் பேச்சான .. “ வளர்ப்பு சரியில்லை அக்கா…” என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்..
இந்த வீட்டு பெண்.. இந்த வீட்டு பெண் என்று கொண்டாடும் வளர்ப்பான வனிதா… வீட்டிலேயே இல்லை என்பதும்.. அடுத்த அனிதாவின் இப்போதைய நிலையையுமே…
தங்கள் அறைக்கு வந்த மான்சி தன் படிப்பை தொடர்ந்தவள்.. தன் தம்பி வீட்டுக்கு வரும் நேரத்தையும் கணக்கிட்டு இடையே அவனை அழைத்து பேசவும் அவள் மறக்கவில்லை…
ஒரளவுக்கு இன்றைய படிப்புக்கான கோட்டா முடிந்த பின் தன் மனதை ரிலேக்ஸ் செய்ய எப்போதும் போல் மெலடி இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தவளின் மனதில் நாளையில் இருந்து நூலகம் சென்று விட வேண்டும்..
இதே போல் ஒரே அறையில் படித்துக் கொண்டு இருந்தால், கூடிய சீக்கிரம் மனது கண்டிப்பாக சோர்வாகி விடும் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அறைக்குள் நுழைந்த சர்வேஷ்வரனை இப்போது தான் எழுந்து வர வேற்க வேண்டுமா..
இல்லை அவன் கையில் இருக்கு கனிணியை வாங்க வேண்டுமா என்று அவள் யோசித்து முடிக்கும் போதே அவள் நினைத்ததையும் மீறி அவன் குளியல் அறையில் இருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன்..
மான்சியின் பக்கத்தில் சாவுகாசமாக அமர்ந்தவன். “ மான்சி தலை வலியா இருக்கு கொஞ்சம் பிடித்து விடு…” என்று கண் மூடி சொன்னவனின் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாது முழிந்த்திருந்தாள் மான்சி..’
தான் தலை பிடித்து விட சொல்லியும் தன் நெற்றி மீது நேற்று இரவு கண்ட மென்மையின் பரிசம் உணராது போகவும் கண் திறந்து தன் மனைவியின் முகத்தை பார்த்தான் சர்வேஷ்வரன்..
அங்கு அவன் கண்டது குழப்பமான போன முகத்தோடு, தன்னையே பார்த்து கொண்டு இருந்த மனைவியின் முகத்தில் அவன் என்ன கண்டானோ … அவனே தன் மனையின் கை பற்றி தன் நெற்றி மீது வைத்து கொண்டான்…
அவன் தொடு உணர்சியில் தன் நிலைக்கு மீண்ட மான்சியின் கை தன்னால் அவள் நெற்றியை பிடித்து விட ஆரம்பித்த்தில் சர்வேஷ்வரனின் கண் மீண்டும் மூடிக் கொண்டது என்றால், மான்சியின் மனது விழித்து கொண்டது…
விழித்துக் கொன்ட அவள் மனது சொன்னது இது தான்.. நேற்றி இரவு சர்வேஷ்வரனின் செயல்கள்.. அதாவது இந்த அறையில் தன்னிடம் காட்டிய நெருக்கம்… காலை அதாவது இந்த அறைக்கு வெளியில் அவன் காட்டிய முகம் .. பின் மீண்டும் இந்த அறைக்கு வந்ததும் தன்னிடம் நெருங்க முயன்றது… பின் இதோ இப்போது இவனின் செயல்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக அவள் மனது அசைப்போட்டு பார்த்ததில் அவளுக்கு கிடைத்த விடை..
இவனுக்கு தேவை என் உடல்… இந்த உலகிற்க்கு அவன் வாழும் குடும்ப வாழ்வு.. தன் குடும்ப மானம்.. இது தான். இதில் தன் மனதோ.. தன் மனமோ இவனுக்கு பெரியது என்ன கண்ணுக்கே தெரியவில்லை என்பது தான்..
மான்சி நினைத்தில் ஒரு சிலது சரி தான்.. அதாவது அவன் குடும்ப மானம்..அதன் ஒற்றுமை என்று பார்த்ததில், தன் மனைவியின் மனதை பாராது விட்டு விட்டான் என்பது உண்மை தான்..
ஆனால் அது மட்டும் தான் உண்மை.. மான்சி நினைத்த அவனுக்கு தேவை தன் உடல் தான் என்று நினைத்த மான்சியின் நினைப்பு முற்றிலும் தவறானதே…