சர்வேஷ்வரன் பேச பேச தன் அண்ணனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை பார்த்த வெங்கட பூபதி..
“ சர்வா என்ன பேச்சு இது..” என்று தன் மகனை அதட்டினார்..
தப்பு செய்து இருந்தால் அந்த அதட்டலுக்கு சர்வேஷ்வரன் கட்டுப்பட்டு இருந்து இருப்பான்.. ஆனால் இப்போது தன் தந்தையின் கண்டிப்புக்கு பதிலாக தன் அவரை நேராக பார்த்து..
“ நான் பேசல டாட் ..வனி தான் பேச வைக்கிறா.. அதுவும் இல்லாது எப்போ பார் மானுவை சீண்டி விடுவது போலான இந்த பேச்சு நல்லதுக்கு இல்ல.. அதையும் அவ கிட்ட சொல்லுங்க..” என்று சொன்னவன் தன் மனைவியின் கை பிடித்து மாடி படியில் கால் வைத்தவன் பின் என நினைத்தானோ..
திரும்பி தன் பெரியப்பாவை பார்த்து… “ இப்போ எல்லாம் என் காதுக்கு வரும் விசயம் எதுவும் நல்லதா இல்ல பெரியப்பா… “ என்று வனிதாவை ஒரு பார்வை பார்த்த வாறு சங்கர பூபதியிடம் சொன்னவன் பற்றிய தன் மனைவீன் கையை விடாது அழைத்து சென்றான்..
இங்கோ சர்வேஷ்வரனின் பேச்சில் சங்க்ர பூபதி குழம்பி போனவராய் தன் தம்பியிடம் ஏதோ பேச ஆரம்பிப்பதற்க்குள் வனிதா அவசர அவசரமாக..
“ மாமா அம்மா அப்போவே என்னை ஹாஸ்பிட்டலில் இங்கு என் கூட யாரும் இல்ல.. உன் தங்கை கூடவும் யாரும் இல்ல .. நீ வா என்று என்னை கூப்பிட்டாங்க.. “ என்ற பேச்சில் அண்ணன் தம்பி இருவரும் மற்றதை எல்லாம் மறந்து..
“ போம்மா சீக்கிரம் போ.. பத்து பாவம் தனியா இருப்பா..” என்று தங்கை பாசத்தில் கூறினார்கள்.. எனக்கு இது தானே வேண்டும் என்று நினைத்து கொண்டு, அவசர அவசரமாக தன் கை பேசிக்கு வந்த மெசஞ்சருக்கு பதில் அளித்த வாறு, தன் காரில் ஏறிக் கொண்டு விரைந்து சென்று விட்டாள்..
அப்போது மட்டும் சர்வேஷ்வரனின் பேச்சில், அவன் ஏன் அப்படி சொன்னான்..? என்ன ஏது என்று சங்கர பூபதி யோசித்து இருந்தால், குறைந்த பட்சம் தன் தம்பி மகனை அழைத்து என்ன என்று அவனிடமாவது கேட்டு இருந்தால், பிற்காலத்தில் அனிதாவால் போக பார்த்த அவர்கள் குடும்ப மானம் மான்சியால் ஏதோ தப்பி பிழைத்ததை, வனிதா ஒரே அடியாக குழியில் போட்டு புதைக்க போவதை தடுத்து இருந்து இருக்கலாமோ என்னவோ..?
ஆனால் விதி எனும் நூல் கொண்டு நம்மை எல்லாம் ஆட்டி வைக்கும் ஆட்டத்தை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனும் போது.. எப்படி சங்கர பூபதியால், சர்வேஷ்வரனின் பேச்சை சரியாக யோசித்து இருந்து இருக்க முடியும்..
தங்கள் அறைக்கு கை பிடித்து அழைத்து வந்தவனின் கையை அறைக்கு வந்ததும், கோபத்துடன் அவன் கையில் இருந்து தன் கையை இழுத்துக் கொண்டவளை தடுக்க பார்த்தனுக்கு, மீண்டும் தன் கையை அவனிடம் சிக்கி கொள்ளாத வாறு கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டு இருந்தவளின் செய்கை சர்வேஷ்வரனுக்கு சிரிப்பை வர வழைத்தது தான் ..இருந்தும் அதை முகத்தில் காட்டாது சாதரணமாக..
தான் எதுவும் பேசாத வாறும்.. கீழே எதுவும் நடவாதது போலவும்… “ உனக்கு இந்த கார் வாங்க வேண்டும் என்று ஏதாவது ஆசை இருக்கா..? கலர் என்ன கலர் பிடிக்கும்..?” என்று கேட்டதில், இவளுக்கு தான் என்ன இது என்பது போல் ஆகி விட்டது..
சிறிது நேரம் முன் இதே அறையில் இவன் தன்னிடம் பேசியது என்ன..? இவன் பேசிய அதே போலான வார்த்தைகளை தான் வனிதாவும் பேசினாள்.
அப்போது மட்டும் இவன் கோபமாக பேசியது.. இது என்ன.? ஒரு சமயம் இது தான் குடும்ப அமைப்பா…? அது தான் பாட்டே இருக்கே.. அடிக்கிற கை தான் அணைக்கும் என்று..
ஆனாலும் இது வரை அடி எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவளுக்கு தெரிந்தது இல்லை.. சிறு வயதில் தன் அம்மா வேலை செய்த வீட்டில், அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு சில முறை அடி வாங்கி இருந்து இருக்கிறாள்..
அந்த அடி எல்லாம், அவளுக்கு இப்போது நியாபகத்தில் இல்லை.. அதனால் தானோ என்னவோ, சர்வேஷ்வரனின் பேச்சு அவளாள் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. தன் அன்னையின் வாழ்க்கை முறை தெரியும் தானே..
ஏதோ தெரியாது மறைத்து கல்யாணம் செய்தது போல் என்ன இது…? எப்போதும் இது போலான பேச்சு..? அதுவும் நேற்று தான் திருமணம் முடிந்தது.. வந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது இது போலான பேச்சுக்கள்… இது போலான வார்த்தைகளை எத்தனை நாள் கேட்டுக் கொண்டு இருப்பது..
இதோ இவனிடமும் தன்னால் வாயை திறக்க முடியவில்லை. அதே போல் கீழே வனிதாவின் பேச்சுக்கும் தன்னால் பதில் கொடுக்கும் மனநிலையில் அவள் இல்லை..
பேசி இருந்தாலுமே.. பெரியவர்கள் தன்னை தான் ஏதாவது சொல்லி இருப்பார்கள்.. காலையில் நன்றாக பேசியவர்கள் பின் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்ற காரணம் பத்மாவதியை பற்றிய நான் பேசிய அந்த பேச்சு என்று அவளுக்கு தெரிந்து தான் இருந்தது…
அவர்கள் இந்த வீட்டு பெண்… கண்டிப்பாக இங்கு இருப்பவர்களுக்கு அவர்கள் மீது அன்பும் .. அக்கறையும் இருக்க தான் செய்யும்.. அதுவும் தான் துளசியின் மகள் எனும் போது.. தான் அவர்களை தவறாக பேசுவது தவறு தான்.. இவர்கள் என்னை தான் குறை சொல்வார்கள்..
ஆனால் அனைத்தும் இவர்களுக்கு தெரியும் தானே.. இவர்கள் தானே தன்னை தேடி வந்தார்கள்.. ..? இன்னும் கேட்டால் இதனால் எனக்கு தானே பிரச்சனைகள் அதிகமாகும்… ‘
இவர்களின் குடும்ப மானம் காக்க நான் தேவைப்படும் போது தன்னை உபயோகித்து விட்டு, இப்போது என்ன..? என்று பல விசயங்கள் அவளின் மூளை யோசனை செய்ததில் அவள் உடல் மனம் மிக பலவீனம் ஆனது தான் மிச்சம்..
காலையில் இருந்து யோசித்து யோசித்து மூளை கொடுத்த சோர்வில் தலை மீது கை வைத்துக் கொண்டு அங்கு இருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
தான் கேட்ட கேள்விக்கு பதிலாக மான்சியின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த சர்வா அவள் முகத்தில் வந்து போன பாவனையிலும், அவள் முகத்தில் தெரிந்த கலைப்பிலும் வேறு எதுவும் கேட்காது அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தான்..
மான்சியும் மறுக்காது அதை வாங்கி பருகியபின் அடுத்து என்ன என்பது போல் தன் கணவனை ஆயசத்துடன் பார்த்தாள்..
மான்சியின் அந்த பார்வையில் சர்வா என்ன உணர்ந்தானோ.. “ ஈவினிங் ஏதாவது சாப்பிட்டியா…?” என்ற அவனின் கேள்விக்கு மான்சி உடனடியாக பதில் கொடிக்காது யோசிப்பதில் இருந்தே அவள் எதையும் பருகவில்லை என்று புரிந்து கொண்டவன்..
மேற்பார்வையிடும் சரோஜாவை அழைத்து..” குடிக்க ஏதாவது கொடுத்து அனுப்பும் மாறு பணித்தான்..
அவன் பேச்சையும், அவன் செயல்களையும் அமைதியாக மான்சி பார்த்து கொண்டு இருந்தாளே ஒழிய .. சர்வாவிடம் வாய் திறந்து எதுவும் பேசவும் இல்லை.. கேட்கவும் இல்லௌ..
ஆனால் மான்சியின் மனதில் ஆயிரெத்தெட்டு கேள்விகள் உதயமாகிய வண்ணம் தான் இருந்தது… அதில் முதலாவனது இந்த வாழ்க்கை தனக்கு நீடிக்குமா என்பதே…? இது போலான பேச்சுக்களை எத்தனை நாள் கேட்க வேண்டி இருக்கும்…
அதுவும் தன் அன்னையை பற்றிய பேச்சு.. அனைவரின் வாயில் இருந்தும்.. ஆனால் பேசும் முறை மட்டுமே கொஞ்சம் மாறுபாடு காணப்படுகிறது… தான் வாய் திறந்தால், கண்டிப்பாக எதிர்ப்பு அத்தனை பக்கத்தில் இருந்தும் வரும் என்பது நிச்சயம்..
அடுத்து பத்மாவதி அவர்கள் இங்கு வரும் போது, அதை நாம் எப்படி எதிர் கொள்வது..? அவர்கள் தன்னை எப்படி நடத்தினாலும் வாய் திறக்க கூடாது தான்.. ஏன் என்றால் அவர்களை எதிர்த்து பேச தனக்கு எந்த அருகதையும் இல்லை தான்.
இது வரை இது போல் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை அதாவது சூர்ய நாரயணனின் குடும்பத்தவரை பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு ஏற்ப்பட்டது கிடையாது..
நேற்றில் இருந்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் தள்ளப்பட்ட பின் அடுத்து என்ன..? என்று மான்சி யோசிக்கும் போதே, அவளின் பார்வை மொத்தமும் சர்வாவிடம் தான்.
இதோ இவனே தன்னை குத்தி கிளறுகிறான்.. இதோ இவனே தனக்காக பேசுகிறான்.. இவனை எந்த வகையில் சேர்ப்பது… இவனை எந்த அளவுக்கு நம்புவது என்று அவள் யோசிக்கும் போதே, தன் யோசனையின் அபத்தமும் அவளுக்கு புரிந்தது தான்..